இலங்கையில் 20 தாவது சட்ட மூலம் நிறைவேற்றம் – குடும்ப ஆட்சி நீடிப்பு
இலங்கையில் ஆளும் மகிந்த சகோதர ஆட்சியில் கொண்டு
வரப்பட்ட இருபதாவது சட்ட மூலம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறை வேற்ற பட்டுள்ளது
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 20ஆவது அரசியல் யாப்பு திருத்தச்
சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்ப மீதான வாக்கெடுப்பில்
மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அளிக்கப்பட்டன.
திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பின் போது சட்ட
மூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன் மூலம் நல்லாட்சி அரசு கொண்டு வந்த அதிகாரங்கள் செயல் இழக்க பட்டுள்ளன .