நாடு முழுவதும் முடக்க நிலை பிறப்பிக்கப்படும்- பீதியில் மக்கள்

Spread the love

நாடு முழுவதும் முடக்க நிலை பிறப்பிக்கப்படும்- பீதியில் மக்கள்

நாடு முழுவதும் முடக்க நிலை பிறப்பிக்கப்படும் என சிலர் போலிப் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.

அவ்வாறு நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்பவில்லை என்று பொலிஸ் ஊடகப்

பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தற்போது 50 பொலிஸ் பிரிவுகளில் மட்டுமே அமுற்படுத்தப்பட்டிருப்பதாக

தெரிவித்த அவர், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் மக்கள் வீடுகளில் தங்கியிருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படாத பகுதிகளில் உள்ள மக்களும் அவசியமற்ற பிரயாணங்களைத் தவிர்த்து

வீடுகளில் தங்கியிருக்குமாறும் பொலிஸ் ஊடகச் பேச்சாளர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *