ஹட்டனில் சிறுத்தைப்புலி உயிரிழப்பு

ஹட்டனில் சிறுத்தைப்புலி உயிரிழப்பு
Spread the love

ஹட்டனில் சிறுத்தைப்புலி உயிரிழப்பு

ஹட்டனில் சிறுத்தைப்புலி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளது.

அட்டன், டிக்கோயா – வனராஜா சமர்வில் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய சிறுத்தை புலியை உயிருடன் பிடிக்க எடுத்த நடவடிக்கை

தோல்வியடைந்ததாக.நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று (07.08.2022) காலையில் சமர்வில் தோட்ட பகுதியில் உள்ள மரக்கறி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி காயமடைந்த குறித்த

சிறுத்தை காயத்துடன் கம்பியில் அகப்பட்டவாறே மரத்தில் ஏறியுள்ளது.

நான்கு அடி நீளம் கொண்ட சிறுத்தை, மரத்தில் இருப்பதை அவதானித்த பிரதேசவாசிகள், அட்டன் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சிறுத்தையை பிடிப்பதற்காக நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

ஹட்டனில் சிறுத்தைப்புலி உயிரிழப்பு

சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் நடவடிக்கையில், நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸார் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிறுத்தை ஏறிய மரமும் வெட்டப்பட்டது.

இதன்போது சிறுத்தையின் மீதே மரம் விழுந்ததால் சிறுத்தை உயிரிழந்ததாகவும் தெரிவித்த அதிகாரிகள் ,


இதுதொடர்பில் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply