வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற பெண்-தேடும் பொலிஸ்

Spread the love

வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற பெண்-தேடும் பொலிஸ்

கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தப்பிச் சென்ற பெண்ணை தேடும் பணிகள் தொடர்ந்தும்

முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு தனது இரண்டு வயது குழந்தையுடன் குறித்த பெண் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றிருந்தார்.

குறித்த குழந்தை உறவினர் வீடொன்றில் இருந்து நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

குறித்த 25 வயதுடைய பெண் தொடர்ந்தும் தலைமறைவாகவெ இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் குறித்த பெண் பேருந்து ஒன்றில் இருந்து இறங்கி கிரிஎல்ல நகரில் உள்ள காட்டுப்பகுதியில் தலைமறைவாக #

இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *