Author: நலன் விரும்பி
டெல்லியில் ரூ.800-க்கு கொரோனா பரிசோதனை
டெல்லியில் ரூ.800-க்கு கொரோனா பரிசோதனை
டெல்லியில் மக்களின் வசதிக்காக கொரோனா பரிசோதனை கட்டணத்தை அதிரடியாக குறைத்து அம்மாநில முதல்-மந்திரி கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.
டெல்லியில் ரூ.800-க்கு கொரோனா பரிசோதனை
தலைநகர் டெல்லியில் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பதை தடுக்க மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.பரிசோதனைகளும்
அதிகரிக்கப்படுகின்றன.நோய்த்தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் அதிகம் செலவு ஆவதால் பரிசோதனை
செய்துகொள்ள மக்கள் தயங்குகிறார்கள். இந்த நிலையில், நேற்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மக்களின் வசதிக்காக
கொரோனா பரிசோதனை கட்டணத்தை அதிரடியாக குறைத்து உத்தரவிட்டு உள்ளார்.
இதற்கு முன், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் ரூ.2 ஆயிரத்து 400-க்கு பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் முதல்-மந்திரி உத்தரவின்படி
இனிமேல் ரூ.800-க்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். குறைக்கப்பட்ட இந்த கட்டணம் குறித்து தனியார் ஆஸ்பத்திரிகள்
மற்றும் ஆய்வகங்களின் முன் விளம்பர பலகை வைக்கவும் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.
கொரோனா மருத்துவமனை தீ விபத்து – 3 டாக்டர்கள் கைது
கொரோனா மருத்துவமனை தீ விபத்து – 3 டாக்டர்கள் கைது
குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்
மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக 3 டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.
குஜராத் கொரோனா மருத்துவமனை தீ விபத்து – 3 டாக்டர்கள் கைது
கைது செய்யப்பட்ட டாக்டர்கள்
:
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த 27-ம் தேதி இரவு அந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளும்படி முதல் மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டார்.
இந்நிலையில், குஜராத்தின் ராஜ்கோட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட
தீவிபத்து தொடர்பாக 3 டாக்டர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
சிறையில் கைதிகள் மோதல் -இதுவரை 6 பேர் பலி!
சிறையில் கைதிகள் மோதல் -இதுவரை 6 பேர் பலி!
அதேபோல், குறித்த சம்பவத்தில் காயமடைந்த 43 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மஹர சிறைச்சாலையின் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மேலும் சில கைதிகள் சிறைச்சாலையில்
இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவத்தை காரணமாக கொண்டு நேற்று (29) மதியம் இந்த அமைதியின்மை ஏற்பட்டது.
அதன்படி, சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் குறைந்த பட்ச அதிகாரத்தை பயன்படுத்தியுள்ள
நிலையில் இதன்போது சில துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக பின்னர் பொலிஸ் விசேட அதிரடப்படையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.
சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பினை பலப்படுத்திய நிலையில், களனி மற்றும் ராகமை பொலிஸ் நிலையங்களில்
இருந்து 5 பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மஹர சிறைகளில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமையை முழுமையாக
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஆயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிப்பு
ஆயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிப்பு
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கோரவெளி காட்டுப்
பகுதியில் நேற்று (29) ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
தேசிய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் கோரவெளி
காட்டுப்பகுதியில் சம்பவ தினமான நேற்று பொலிசார் குறித்த பகுதியிலுள்ள
நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இலங்கையில் ஆல மரத்தில் அம்மன் – குவியும் மக்கள்
இலங்கையில் ஆல மரத்தில் அம்மன் – குவியும் மக்கள்
இலங்கை வாழைச்சேனை பகுதியில் உள்ள ஐம்பது வருடம் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்றில் அம்மன் சிலை ஒன்று காணப்பட்டுள்ளது
இதனை அடுத்து அங்கு மக்கள் குவிந்து தரிசித்து செல்கின்றனர்
தொடர்ந்து
இந்த செய்தி காட்டு தீ பரவியதால் மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்
மேற்படி சம்பவம் இலங்கையில் ஏதோ பெரும் சம்பவம் இடம்பெற போவதை இது உணர்த்துவதாக தெரிவிக்க படுகிறது


வயாகரா படகை நடுக்கடலில் மடக்கிய சிங்கள கடல் படை
வயாகரா படகை நடுக்கடலில் மடக்கிய சிங்கள கடல் படை
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வயாகரா மாத்திரைகளை
படகில் கடத்தி வந்த பைபர் படகு ஒன்றை சிங்கள கடல் படையினர் மடக்கி பிடித்தனர்
இதன் பொழுது அந்த படகில் இருந்த சுமாரா ஆறு லட்சம் ரூபா பெறுமதியான
மாத்திரைகள் கண்டு பிடிக்க பட்டதாக சிங்கள கடற்ப்படையுடன் இணைந்து போலீசார் தெரிவித்துள்ளனர்
இந்த கடத்தலில் ஈடுபட்ட மன்னாரை சேர்ந்த சிலர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை – பயங்கரவாதிகள் அட்டூழியம்
110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை – பயங்கரவாதிகள் அட்டூழியம்
நைஜீரியாவில் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 110 பேரை போகோ ஹாரம் பயங்கரவாதிகள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
விவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை – பயங்கரவாதிகள் அட்டூழியம்
கொல்லப்பட்ட விவசாய தொழிலாளர்கள்
வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும் சாட், கமரூன் ஆகிய நாடுகள் அமைந்துள்ளது.
இங்கு போகோ ஹாரம், ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவமும், அரசு ஆதரவு பெற்ற குழுக்களும்
ஈடுபட்டு வருகின்றன. இதனால் அரசு படையினருக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
அரசுப்படையினருக்கு ஆதரவாக இருப்பதாவும், ரகசிய தகவல்கள் அனுப்புவதாகவும் கூறி அப்பாவி பொதுமக்கள் மீது போகோ ஹாரம் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் மைடுரூகி மாகாணத்தில் கோஷோபி என்ற கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று 110-க்கும்
அதிகமான தொழிலாளர்கள் விவசாய வேலை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது பயங்கர ஆயுதங்களுடன் அங்குவந்த போகோ ஹாரம் பயங்கரவாதிகள் விவசாய வேலை செய்துகொண்டுருந்த தொழிலாளர்களை சிறைபிடித்தனர்.
மேலும், அவர்களின் 110 பேரின் கைகால்களை கட்டிய பயங்கரவாதிகள் அவர்களை கொடூரமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்தனர். மேலும், சிலரை கடத்தி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து அரசு ஆதரவு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். போகோ ஹாரம் பயங்கரவாதிகளின் இந்த கொடூர
கொலைகளுக்கு நைஜீரிய அதிபர் முகமது புஹாரி கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார்.
தடியடி நடத்திய போலீசாருக்கு உணவளித்த சீக்கியர்கள்
தடியடி நடத்திய போலீசாருக்கு உணவளித்த சீக்கியர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீசாருக்கு, அரியானா மாநில சீக்கியர்கள் உணவளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானாவில் நெகிழ்ச்சி – தடியடி நடத்திய போலீசாருக்கு உணவளித்த சீக்கியர்கள்
போலீசாருக்கு உணவளிக்கும் சீக்கியர்கள்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை 4 நாட்களாகத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும்
விவசாயிகளை போலீசார் களைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீசாருக்கு, அரியானா மாநில சீக்கியர்கள்
உணவளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அரியானா மாநில எல்லைகளில் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டு பெரும் பதற்றம்
நிலவியது. பாதுகாப்புக்காக வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
அங்கு ஏற்பட்ட பதற்றத்தால் உணவு, தண்ணீர் கிடைப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த சீக்கியர்கள்
சிலர் போலீசாருக்கு உணவு வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானாவின் கர்னல் என்ற இடத்தில் ஏராளமான போலீசார் இருபுறமும் வரிசையாக அமர்ந்திருக்க, சீக்கிய குருத்வாரா
தன்னார்வலர்கள் அவர்களுக்கு உணவு வழங்குகிறார்கள். மேலும் ஏராளமான போலீசார் அங்கு லத்தி, தடுப்புகளுடன் வந்து அமர்ந்து
உணவு சாப்பிட்டு செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினாலும், அதை நினைக்காமல் தன்னார்வலர்கள்
போலீசாருக்கு உணவு வழங்கியதை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இலங்கையில் பண்டி வடிவில் புதிய மான் கண்டு பிடிப்பு
இலங்கையில் பண்டி வடிவில் புதிய மான் கண்டு பிடிப்பு
இலங்கையில் உலகில் காணப்படும் அரிய வகை சருகு மான் ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு கண்டு பிடிக்க பட்ட மான் சரணாலயத்தில் விடுவதற்கு எடுத்து
செல்ல பட்டுள்ளது ,குறித்த மானை மக்களே துரத்தி சென்று பிடித்ததாக தெரிவிக்க படுகிறது

மனைவிக்கு கொரோனா பாதிப்பு : தனிமைப்படுத்திக்கொண்டார், குரேஷியா பிரதமர்
மனைவிக்கு கொரோனா பாதிப்பு : தனிமைப்படுத்திக்கொண்டார், குரேஷியா பிரதமர்
மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து குரேஷியா பிரதமர் ஆண்ட்ரெஜ் பிளென்கோவிக் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
மனைவிக்கு கொரோனா பாதிப்பு : தனிமைப்படுத்திக்கொண்டார், குரேஷியா பிரதமர்
ஐரோப்பிய நாடானா குரேஷியாவில் ஆண்ட்ரெஜ் பிளென்கோவிக் (வயது 50) பிரதமராக உள்ளார்.
இவரது மனைவி அனா மஸ்லேக் பிளென்கோவிக்கிற்கு நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பிரதமர் ஆண்ட்ரெஜ் பிளென்கோவிக் பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.
இருந்தபோதும், அவர் தன்னை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்வதாக அரசு செய்தி தொடர்பாளர் மார்கோ மிலிக் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
குரேஷியாவில் 1.23 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,655 பேர் பலியாகி இருக்கின்றனர்.
யாழில் இருவர் மீது வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல்
யாழில் இருவர் மீது வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல்
சங்கானை தேவாலய வீதியில் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபக் குடும்பத்தினர் மீது,
இனந்தெரியாதோரினால் வாள் வெட்டுக்கு தாக்குதலுக்கு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றது. அவர்கள் மீது தாக்குதல் நடத்திய வாளும் மீட்கப்பட்டுள்ளது
சம்பவத்தில் மார்க்கண்டு வேலாயுதம் (வயது -64), தங்கராஜா புவனேஸ்வரி ( வயது -56) ஆகிய இருவருமே தாக்குதலுக்கு
இலக்காகி வெட்டுக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் வசிக்கும் குடும்பத்தினரின் வீட்டை பராமரிக்கும் பணியில் இருவரும் அங்கு தங்கியிருந்தனர் என ஆரம்ப கட்ட
விசாரணைகளில் தெரியவந்ததாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை அவர்கள் தாக்கப்பட்டமைக்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லை. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
கொரோனா வைரஸ் – 81 பேர் கொழும்பில் மட்டும் மரணம்
கொரோனா வைரஸ் – 81 பேர் கொழும்பில் மட்டும் மரணம்
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் உயிரிழந்தோரில்
அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, இதுவரை உயிரிழந்த 109 பேரில் 81 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்தோரில் அதிகமானோர் 71 வயதைக்
கடந்தவர்கள் என்பதுடன், நடுத்தர வயதினர் பலரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் களுத்துறையில் 06 பேரும், குருநாகலில் 04 பேரும், புத்தளத்தில் 03 பேரும், நுவரெலியாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளன
வெளிநாட்டு தமிழர்களுக்கு இலங்கை வைத்த ஆப்பு
வெளிநாட்டு தமிழர்களுக்கு இலங்கை வைத்த ஆப்பு
வெளிநாடுகளில் குற்றங்களில் ஈடுபடும் இலங்கையர்களுக்கு அக்குற்றங்கள் தொடர்பில் இலங்கையில் சட்டநடவடிக்கை எடுக்க
முடியுமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
2006ஆம் ஆண்டு தண்டனைச் சட்ட திருத்தத்துக்கமைய, வெளிநாடுகளில் இலங்கையர்கள் செய்யும் குற்றங்கள்,
இலங்கையின் சட்டத்துக்கமைய தவறெனின், குற்றமிழைத்த இலங்கையர்களுக்கு எதிராக இலங்கையில் சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
ஜப்பான் யுவதியொருவரை இலங்கையர் ஒருவர் கடத்தி வந்துள்ளமை தொடர்பில், இன்று காலை தனியார் தொலைக்காட்சி
நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல் -7 பேர் கைது
யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல் -7 பேர் கைது
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஏழு மாணவர்களுக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழகப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை குழுவினால் முன்மொழியப்பட்டு, பல்கலைக்கழக
மாணவர் ஒழுக்காற்றுச் சபையினால் பரிந்துரைக்கப்பட்ட படி சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கான தண்டனைகளைப் பல்கலைக்கழகப் பேரவை முடிவு செய்துள்ளது.
நேரடியாகக் குற்றங்களில் ஈடுபட்டு பல்கலைக் கழகத்தின் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட மூன்றாம் வருட மாணவர்களுக்கு, அவர்கள் செய்த குற்றங்களின்
தன்மைக்கேற்ப பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்தின் அடிப்படையில் தண்டனைகள் சிபார்சு செய்யப்பட்டிருந்தன.
பேரவைக் கூட்டத் தீர்மானத்தின் படி, முன்றாம் வருட மாணவர்கள் 3 பேருக்கு ஒரு கல்வி ஆண்டு காலம் ( இரண்டு அரையாண்டுகள்) பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கான தடையும் 4 பேருக்கு
நடப்பு அரையாண்டு காலத்துக்குள் (அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை) பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனைக்குரிய இந்த 7 பேருக்கும் கல்வி கற்கும் காலத்தினுள் விடுதிகளில் தங்குவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும், மாணவர் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் பதவிகள் எவையும் வழங்கப்படகூடாது.
கற்கை நெறியின் நிறைவில் வகுப்புச் சித்திகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படக் கூடாது மற்றும் எதிர்காலத்தில் பல்கலைக் கழகத்தினுள் அவர்கள்
வேலைவாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கும் போது, இழைத்துள்ள குற்றங்கள் கணக்கிலெடுக்கப்படும். தண்டனைகள் விசாரணை
அதிகாரியினால் முன்மொழியப்பட்டு, ஒழுக்காற்றுச் சபையினால் பேரவைக்கு சிபார்சு செய்யப்பட்டன.
மேலும், தண்டனைகள் அறிவிக்கப்பட்ட மாணவர்கள் எதிர்காலத்தில் மீண்டும் இதே வகையான குற்றச் செயல்களில்
ஈடுபட்டால், மாணவர் பதிவு இரத்துச் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் -நின்று போன திருமணம்
மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் -நின்று போன திருமணம்
நாகர்கோவிலில் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்று போனது. இதனால் மணமகள் அதிர்ச்சி அடைந்தார்.
மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி
நாகர்கோவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மெக்கானிக் ஒருவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், பெண் என்ஜினீயருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்த
நிகழ்ச்சியில் மணமகனும், மணமகளும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். பின்னர் 26-ந் தேதி (அதாவது நேற்று) இருவருக்கும்
திருமணம் நடத்த இருவீட்டார் சார்பிலும் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்தன. பத்திரிகை அச்சிட்டு தங்களுடைய உறவினர்களுக்கு கொடுத்தனர்.
மணமகளும், வருங்கால வாழ்க்கையை நினைத்து பூரிப்பில் இருந்தார். திருமண தேதியும் நெருங்கியது. நேற்றுமுன்தினம் சம்பிரதாயப்படி திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடந்தன.
மணமகளின் பெற்றோர், திருமணம் நல்லபடியாக நடந்தேற வேண்டும் என்று உற்சாகமாக விருந்தோம்பல் பணியில்
ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் மணமகனும் பங்கேற்றார். இவர் தான், தனக்கு கணவராக வரப்போகிறார் என்ற நினைவலையில்,
மனதுக்குள் பல ஆசைகளை வைத்தபடி மணமகளும், உற்சாகமாக உறவினர்களை வரவேற்றபடி இருந்தார்.
அந்த சமயத்தில் மணமகளுக்கு அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. அதாவது வெளியே சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு சென்ற மாப்பிள்ளையை காணவில்லை என்ற செய்திதான் அது.
வெகுநேரமாகியும் அவர் வராததால், பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். மாப்பிள்ளை வீட்டாரும், என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடினர்.
அதன்பிறகு தான், திருமணம் பிடிக்காமல் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. இதனால் பல கனவுகளில் இருந்த
மணப்பெண், உடைந்து போனார். அதே சமயத்தில் இருவீட்டாரிடையே ஒருவித சலசலப்பும் ஏற்பட்டது.
மாப்பிள்ளையின் இந்த திடீர் முடிவால் நேற்று நடக்க இருந்த திருமணமும் நின்று போனது. பெண் வீட்டார் தரப்பில் முறைப்படி
போலீசிடம் புகார் கொடுக்காததால், போலீசாரும் இந்த பிரச்சினையில் தலையிடவில்லை.
மணமகன் ஒருவரை காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்வதற்காகத்தான், பெற்றோர் பார்த்த பெண்ணை தவிக்க விட்டபடி பாதியிலேயே சென்றதாகவும் கூறப்படுகிறது.
மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்று போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை- இந்தியாவில் புதிய சட்டம்
ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை- இந்தியாவில் புதிய சட்டம்
ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற பதாகைகள் வைக்கும்படி பெட்ரோல் பங்க்குகளுக்கு போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை – பதாகைகள் வைக்க பங்க்குகளுக்கு உத்தரவு
ஹெல்மெட் இல்லை, சீட் பெல்ட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற வாசகத்தை சென்னையில் உள்ள அனைத்து
பெட்ரோல் பங்க்குகளிலும் காட்சிப்படுத்த போக்குவரத்து போலீசாருக்கு ஆணையர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் வாசகங்களை காட்சிப்படுத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட பெட்ரோல் சப்ளை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்து காவல்துறை ஆணையர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் தற்போது சென்னையில் மட்டுமே இந்த உத்தரவை அமல்படுத்தியுள்ளார்
இந்தோனேசியாவில் சிறுமியை கற்பழித்தார் என கூற பட்டவருக்கு 150 சவுக்கடி
இந்தோனேசியாவில் சிறுமியை கற்பழித்தார் என கூற பட்டவருக்கு 150 சவுக்கடி
இந்தோனோசியாவில் அவர்கள் மதம் சார்ந்த சட்ட பிரகாரம் நபர்கள்
சிறுவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினர் என்ற குற்ற
சாட்டில் அவருக்கு மக்கள் வேடிக்கை பார்க்க 150 சவுக்கடிகள் வழங்க பட்டன
இவ்வாறான மூட தன நிகழ்வுகள் நிறைவேற்ற படுகின்ற பொழுதும் பெருகி
வரும் இந்த குற்றங்களை அந்த மண்ணில் தடுக்க முடியவில்லை என மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

பிரான்சில் கார்கள் வங்கிகளை எரித்த கலக காரர்கள்
பிரான்சில் கார்கள் வங்கிகளை எரித்த கலக காரர்கள்
நேற்று சனிக்கிழமை பிரான்சில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கலக
காரர்கள் இணைந்து பெரும் போராட்டத்தை நடத்தினர்
இதன் பொழுது கார்கள் மற்றும் வங்கிகளை தீ வைத்து எரித்தனர்
இதனால பொலிசாருக்கும் கலக காரர்களுக்கும் இடையில் பெரும் மோதல் வெடித்தது
பலர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

அமெரிக்காவில் போலீசார் துப்பாக்கி சூட்டில் இரண்டாம் நபரும் பலி
அமெரிக்காவில் போலீசார் துப்பாக்கி சூட்டில் இரண்டாம் நபரும் பலி
அமெரிக்காவில் black friday தினத்திற்கு நிகழ்ந்த சம்பவத்தில்
மக்கள் மீது போலீசார் திடீர் துப்பாககி சூட்டு தாக்குதல் நடத்தினர்
அந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ
மனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டாம் நபரும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்
டிரம்பின் ஆட்சியில் இடம் பெற்ற பத்தாவது சம்பவம் இது என கூற படுகிறது
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக உயர்வு
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக உயர்வு
அதற்கமைய இன்றைய தினம் 8 பேர் உயிரிழந்துள்ளனரென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பெண்களும் 4 ஆண்களுமே இன்று உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய கொழும்பு 13ஐச் சேர்ந்த 67 வயதுடைய பெண், தெமட்டகொடையைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்,
மருதானையைச் சேர்ந்த 78 வயது பெண், மட்டக்குளியைச் சேர்ந்த 36 வயதுடைய ஆண், கொம்பனித்தெருவைச் சேர்ந்த 83 வயதுடைய
ஆண், மாளிகாவத்தையைச் சேர்ந்த 58 வயதுடைய பெண், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண், 70 வயதான
கொழும்பு மெகசின் சிறைக் கைதியொருவருமே கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது








