Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு அள்ளி நிதி கொடுக்கும் சீனா – கடுப்பாகும் இந்தியா

இலங்கைக்கு அள்ளி நிதி கொடுக்கும் சீனா – கடுப்பாகும் இந்தியா

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீன அரசாங்கத்தினால் பல முதலீடுகள் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான சீன தூதுவர் திரு. ஷீ ஜன்ஹொங் அவர்கள்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை சந்தித்த போது தெரிவித்தார்.

அதன்படிஇ நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழுப்பு துறைமுக நகரத்தினுள் (Pழசவ ஊவைல) வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான முறைமையொன்றை

உருவாக்குவதற்கு சீன அரசு திட்டமிட்டுள்ளது. அதன்மூலம் துறைமுக நகரத்தினுள் வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்ள முதலீட்டாளர்களை ஊக்குவிக்க எதிர்பார்ப்பதாக சீன தூதுவர்

சபாநாயகரிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (15) இடம்பெற்றது.

அதேபோன்றுஇ 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடாக ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் டயர்

தொழிற்சாலையை ஒத்த டயர் தொழிற்சாலை ஒன்றை மதுகம பகுதியில் நிர்மாணிக்க சீன அரசு எதிர்பார்ப்பதாகவும் சீன தூதுவர் குறிப்பிட்டார்.

சீன அரசினால் இலங்கையில் வாகனங்களை பொருத்தும் தொழிற்சாலை ஒன்றை அடுத்த ஆண்டில் நிர்மாணிக்க

திட்டமிட்டுள்ளதுடன்இ அதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பாரிய தூண்டுதல் ஒன்றை வழங்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு சீன பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யுமாறு

சீன தூதுவர் இதன்போது மஹிந்த யாப்பா அபாயவர்தன அவர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

இதன்போது சீன அரசினால் ருஹுனு பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கான நிதியுதவியினை அதன் உப வேந்தர்

பேராசிரியர் சுஜீவ அமரசேனவிடம் கையளித்ததுடன் இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க அவர்களும் கலந்துகொண்டார்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50,ஆயிரம் வட்டிக்கு வழங்கும் அரசு

இலங்கையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50,ஆயிரம் வட்டிக்கு வழங்கும் அரசு

எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களின் பல்வேறு தேவைகளைப்

பூர்த்தி செய்ய சலுகை வட்டி விகிதத்தில் நிதி வசதிகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த கடன் வழங்கல் 03 பிரிவுகளின் கீழ் இடம்பெறும். மாதத்திற்கு ரூ. 50,000 க்கு மேல் சம்பளம் அல்லது வருமானம் பெருவோருக்கு ரூ. 50,000 கடனாக பெறலாம். மாத சம்பளம் அல்லது வருமானம் ரூ

.25,000 க்கும் ரூ .50,000 க்கும் இடைப்பட்டவர்களுக்கு ரூ.25,000 கடன் வழங்கப்படும். மாத சம்பளம் அல்லது வருமானம் ரூ .25,000 க்கும்

குறைவாக இருந்தால், கடன் தொகை ரூ .10,000 ஆகும். கடன்கள் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் சமுர்தி வங்கிகளின் ஊடாக வழங்கப்படுகின்றன.

துணை நிவாரண நிதி வசதிகள் பெற விரும்பும் அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஊழியர்கள் தங்கள் நிறுவன தலைவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நிறுவனத்தின் தலைவர்

தனது ஊழியர்களின் சான்றளிக்கப்பட்ட பெயர் பட்டியலை சேவை நிலையத்திற்கு அருகிலுள்ள அரச வங்கியில் சமர்ப்பிக்கும் போது, அந்த கிளையினால் ஊழியர்களின் கணக்குகளுக்கு உடனடியாக அந்த தொகை வரவு வைக்கப்படும்.

கடன் தொகை 10 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். அரவிடப்படும் மாத வட்டி 0.625 வீதமாகும். கடன்

தொகை 2021 ஜனவரி முதல் ஒக்டோபர் 31 வரையிலான காலப்பகுதியில் ஊழியரின் சம்பளத்திலிருந்து அரவிடப்படும்.

அரச ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் சமுர்தி பெறுநர்களுக்கான கடன் வழங்கல் ஓய்வூதியத் திணைக்களம் மற்றும் சமுர்தி வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.


முச்சக்கர வண்டிகள், பாடசாலை வேன் மற்றும் பஸ் வண்டி உரிமையாளர்கள் மற்றும் தனியார் பஸ் ஊழியர்கள் தங்கள் வங்கிக் கணக்குகள் பேணப்படும் அரச வங்கிகளில் தங்கள் தேசிய

அடையாள அட்டையை சமர்ப்பிப்பதன் மூலம் சலுகைக் கடனுக்காக விண்ணப்பிக்கலாம். இந்த பிரிவிற்குள் வராத ஆனால்

அரச வங்கிகளில் கணக்குகளை வைத்திருக்கும் நாளாந்த வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும் தங்கள் வங்கிகளின் ஊடாக நிதி வசதிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கோவிட் 19 சவாலுக்கு மத்தியில் பின்னடைந்துள்ள பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக மீட்டு, 2020

ல் இழந்த முன்னேற்றத்துடன், 2021 ஆம் ஆண்டில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

தொற்றுநோய் காலப்பகுதியில் சுமார் இரண்டு மாத பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் ஏற்றுமதி, சுற்றுலா, நிர்மாணத்துறை மற்றும் ஏனைய உற்பத்தி மற்றும் சேவைகளை படிப்படியாக

இயல்பு நிலைக்கு கொண்டுவர உழைக்கும் மக்களும் வர்த்தக சமூகமும் பெரும் தியாகங்களைச் செய்தனர். இதற்கு சுகாதாரம், பாதுகாப்பு, பொலிஸ் மற்றும் அரச சேவைகளிடமிருந்து பெரும்

ஆதரவு கிடைத்தது. எனவே, 2020 ஆம் ஆண்டில் விவசாய உற்பத்தித் துறையில் ஒரு மறுமலர்ச்சிக்குள் பிரவேசிக்க முடிந்தது. நகர்ப்புற மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கான உணவு

விநியோகத்தை இது உறுதி செய்தது. அவ்வாறு பங்களித்த மக்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பாக பண்டிகை காலங்களில் இதுபோன்ற நிதி வசதிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 612 பேர் பலி

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 612 பேர் பலி

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி சுமார் 612 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 25,161 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இவர்களுடன் சுமார் 1632 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,லண்டன்

பகுதி சிவப்பு எச்சரிக்கி விடுக்க பட்ட பகுதியாக அறிவிக்க பட்டுள்ளது

,அதனால் உணவகங்கள் டெக்கவே மட்டும் எடுக்க அனுமதிக்க பட்டு புதிய தடைகள் விதிக்க பட்டுள்ளன

Posted in உலக செய்திகள்

துருக்கி கப்பலை சிறை பிடித்த எதிரி நாடு – மிரட்டும் துருக்கி

துருக்கி கப்பலை சிறை பிடித்த எதிரி நாடு – மிரட்டும் துருக்கி

துருக்கியின் மியாட் பெரும் சரக்கு கப்பல் ஒன்றை Libya’s Haftar இராணுவத்தினர் மடக்கி பிடித்தனர் .

கிழக்கு பெங்காசி பகுதியில் சென்று கொண்டிருந்த மேற்படி கப்பல் தமது

எல்லைகளுக்குள் அத்து மீறி நுழைந்தது என கூறப்பட்ட நிலையில் அதற்கு

பல்லாயிரம் தண்டம் அறவிட பட்டு ,அந்த குற்ற பணம் செலுத்திய பின்னர் விடுவிக்க பட்டுள்ளது

இந்த கப்பல் சிறை பிடிப்புக்கு துருக்கி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

துருக்கி கப்பலை
துருக்கி கப்பலை
Posted in உலக செய்திகள்

ஐந்தாயிரம் வருடம் பழமை வாய்ந்த பிரமிட் கண்டு பிடிப்பு

ஐந்தாயிரம் வருடம் பழமை வாய்ந்த பிரமிட் கண்டு பிடிப்பு

எகிப்தில் சுமார் ஐந்தாயிரம் பழமை வாய்ந்த பிரமிட் கண்டு பிடிக்க பட்டுள்ளது

,இதற்குள் இருந்த சடலம் மற்றும் ,பலகையிலான சைவ பெட்டிகள் என்பனவும் மீட்க பட்டுள்ளது

இவ்வாறு மீட்க பட்ட பல்கலைக்கழக ஆராய்ச்சியில் வைக்க பட்டு ஆய்வுகள்

இடம்பெற்று வருகிறது
இதே போன்று அண்மையில் நூற்றுக்கு மேற்பட்ட மம்மிகள் கண்டு பிடிக்க பட்டமை இங்கே குறிப்பிட தக்கது

பிரமிட்
பிரமிட்
Posted in இலங்கை செய்திகள்

மரண வீட்டுக்கு சென்ற 10 பேருக்கு கொரோனா

மரண வீட்டுக்கு சென்ற 10 பேருக்கு கொரோனா

காலி மாவட்டத்தின் இந்துரவ-துன்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற மரணச்

சடங்கொன்றில் கலந்துகொண்ட 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, காலி மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் 45 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம் 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேற்படி மரணச் சடங்கில் பேருவளை மற்றும் அளுத்கமை ஆகிய

பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் வெட்டிக்கொலை – விசாரணையில் பொலிஸ்

ஒருவர் வெட்டிக்கொலை – விசாரணையில் பொலிஸ்

மத்துக பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் இருவருக்கு

இடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

77 வயதுடைய ஒருவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தையடுத்து, ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மத்துகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாகன இலக்கத் தகடுகளின் விநியோகத்தின் போது

மாகாண குறியீட்டை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

ரிஷாட்டின் முக்கிய புள்ளி கைது

ரிஷாட்டின் முக்கிய புள்ளி கைது

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

அப்துல்லா மஹ்ரூப், இன்று (15) காலை 6.30 மணியளவில் காலை கிண்ணியாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதொச நிறுவனத்தின் வாகனம் ஒன்றினை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள

உள்ளதாகவும் இதனால் இவரை கொழும்புக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படும் வேளையில் தனது வாகனத்தில் கொழும்பிற்கு வருவதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு

தெரியப்படுத்தியும் தங்களுடைய வாகனத்தில் அழைத்துச் செல்வதாக கூறப்பட்டுள்ளது எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை – உசார்

பிரிட்டனில் வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை – உசார்

பிரிட்டனில் வாகன சாரதிகள் மற்றும் உரிமம் பெற்றுக் கொள்ளும் நிறுவனமான

Driver and Vehicle Licensing Agency (DVLA) அவசர எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது

தமது நிறுவனத்தின் பெயரை பயன் படுத்தி இணைய மோசடி நபர்கள்

தாம் கோருவது போன்ற விண்ணப்பத்தை அனுப்பி மக்களின்

விபரங்களை சேகரித்து அதன் மூலம் மோசடியில் ஈடுபடுவதான குற்ற சட்டு முன் வைக்க பட்டுள்ளது

இவ்வாறான விண்ணப்பங்கள் கிடைக்க பெற்றால் தம்முடன் தொடர்பு கொண்டு உறுதி படுத்து மாறு வேண்ட படுகிண்றீர்கள்

உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உடனே விரைந்து அவர்களுக்கு தெரிய படுத்தும் படி வேண்ட படுகிறது ,தமிழர்களே எச்சரிக்கை

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் 50ஆயிரம் கொரனோ கடன் மோசடி – சிக்கிய தமிழர்கள்

பிரிட்டனில் 50ஆயிரம் கொரனோ கடன் மோசடி – சிக்கிய தமிழர்கள்

பிரிட்டனில் பரவி வந்த கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலை அடுத்து சரிந்து போன பொருளாதாரத்தை கட்டி எழுப்ப பிரிட்டன்

ஆளும் அரசு சுமார் £42.2 billion of bounce back loans கடனுதவி வழங்கியது

கிரெடிட் படு மோசமாக இருந்தாலும் இந்த கடனை யாரையும் பெற்று கொள்ள முடியும் ,அதற்கு இவர்கள் வியாபாரம் வைத்திருப்பவர்களாக இருக்க வேண்டும் ,

அவ்விதம் ஐம்பதாயிரம் முதல் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் வரை வழங்க பட்டது

இதில்
நான்கு மடங்கு வீதமானவர்கள் மோசடியான முறையில் இந்த பணத்தை பெற்றுள்ளதாக முக்கிய வங்கிகள் தெரிவித்துள்ளன ,இது தொடர்பான விசாரணைகள் வங்கி உள்கட்டமைப்பு ரீதியாக

இடம்பெற்ற வண்ணம் உள்ளத்துடன் ,குறித்த கடனை பெற்றவர்கள் அணைவரும் விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் சிக்கியுள்ளனர்

எதிர்வரும் சித்திரை மாதம் பல தமிழர்கள் ஓடி திரியும் நிலை ஏற்படும் என கருத படுகிறது ,அன்றே ஆண்டு வரி கணக்கு

சம்பிற்கும் மாதமாக உள்ளது ,அப்பொழுது தான் மேலும் பல விடயங்கள் அம்பலமாகும் என தெரியவருகிறது

தற்போது நிதி அமைச்சருடன் மேற்படி விடயம் தொடர்பில் வங்கிகள் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர் ,இந்த கடன்

பெற்றவர்கள் வங்கியை சுத்த முடியாது ,கரணம் பணத்திற்கு அரசே பொறுப்பு அதனால் எடுத்தவர்கள் அனைவரும் பணத்தை மீள் செலுத்தியே தீர வேண்டும்

அது தவிர வரி அதே தொகை செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படலாம் என எதிர் பார்க்கக் படுகிறது ,ஆசை படுவான் ஏன் அவதி படுவான் ஏன் ..|?

Posted in உலக செய்திகள்

நடிகை சித்ரா தற்கொலை – கணவர் கைது

நடிகை சித்ரா தற்கொலை – கணவர் கைது

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு – கணவர் ஹேம்நாத் கைது

பிரபல டி.வி. நடிகை சித்ரா கடந்த 9-ம் தேதி பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டி வந்தனர்.

சித்ராவை அவரது கணவரான ஹேம்நாத் அடித்து கொலை செய்ததாக தொடர்ந்து கூறி வந்தனர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனையில் நடிகை சித்ரா தற்கொலை செய்து தான் இறந்துள்ளார் என்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நசரத்பேட்டை போலீசார் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி

வந்தனர். இதில் அவர் தொடர்ந்து மாறுபட்ட தகவல்களை கூறி வருவதாக தெரிகிறது.

சித்ரா பயன்படுத்திய செல்போனை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அதில் ஏதாவது முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார்

எதிர்பார்த்துள்ளனர்.
இதனால் இந்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

சித்ரா தற்கொலை விவகாரம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணையும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ நோயினால் 232 பேர் மரணம்

பிரிட்டனில் கொரனோ நோயினால் 232 பேர் மரணம்

பிருத்தானில் இரண்டாம் அலியாக பரவி வரும் கொரனோ நோயின் தகத்தலில்

சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 232 பேர்

பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது ,அதே போல அமெரிக்காவில் 1,130 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

எதிர் வரும் ஆறு மாதங்களில் இந்த நோயானது மிக அதிகமாக பரவும்

என்ற செய்தி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

சீனா அடித்தால் திருப்பி அடிப்போம் – இந்தியா முழக்கம்

சீனா அடித்தால் திருப்பி அடிப்போம் – இந்தியா முழக்கம்

தலைநகர் டெல்லியில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஒவ்வொரு நாடும் தங்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தொடர்ந்து தயாராகி வரும் நிலையில் நாம் எதிர்கொள்ளக் கூடிய

எந்தவொரு நிகழ்விற்கும் நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம் என்பதை நான் உங்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

லடாக் எல்லையில் இந்திய ராணுவம் முழு அளவில் தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் எல்லைகளை காக்க முழு

உரிமை உள்ளது. முப்படைகளும் எந்த சூழலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது என்றார்.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எந்த அச்சுறுத்தலையும்

எதிர்கொள்ள ராணுவம் தயார். வடக்கு எல்லையில் எந்த சவாலையும் ராணுவம் எதிர் கொள்ளும் என தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

சிங்கள கடற்படையால் தமிழக மீனவர்கள் 28 பேர் கடத்தல்

சிங்கள கடற்படையால் தமிழக மீனவர்கள் 28 பேர் கடத்தல்

இலங்கை கடல் பகுதிக்குள் வந்து மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 28 பேரை அந்நாட்டு கடற்படை கைது செய்தது.

ராமேசுவரம் மீனவர்கள் 28 பேர் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலையில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 5 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வந்தனர். இலங்கை கடல் பகுதிக்குள் வந்து

மீன்பிடித்ததாக கூறி 4 விசைப்படகுகளையும், அதில் இருந்த 28 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

பின்னர் 28 பேரையும் கைது செய்து, இலங்கையின் நெடுந்தீவுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 4 படகுகளும் அங்கு கொண்டு செல்லப்பட்டன.

ராமேசுவரம் மீனவர்கள் 28 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Posted in உலக செய்திகள்

6 மாதங்களுக்கு கொரோனா தாக்கம் மிக மோசமாக இருக்கும் – உலக பணக்காரன் பில்கேட்ஸ் எச்சரிக்கை

6 மாதங்களுக்கு கொரோனா தாக்கம் மிக மோசமாக இருக்கும் – உலக பணக்காரன் பில்கேட்ஸ் எச்சரிக்கை

அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு கொரோனா தாக்கம் மிக மோசமாக இருக்கும் என்று பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த 6 மாதங்களுக்கு கொரோனா தாக்கம் மிக மோசமாக இருக்கும் – பில்கேட்ஸ் எச்சரிக்கை

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், உலகின் பெரும் பணக் காரர்களில் ஒருவர் ஆவார். பில் அண்ட் மெலிண்டா

கேட்ஸ் பவுண்டேசன் என்ற அறக்கட்டளையின் இணைத்தலைவராகவும் இருக்கிறார்.

கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கும் பணிக்கு இந்த அறக்கட்டளை நிதிஉதவி அளித்து வருகிறது.

இதுபோன்ற பெருந்தொற்று உலக அளவில் பரவும் என்று கடந்த 2015-ம் ஆண்டிலேயே பில்கேட்ஸ் கணித்திருந்தார். இந்தநிலையில்,

பில்கேட்ஸ் ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு கொரோனா தாக்கம், மிக மோசமாக இருக்கும். ஐ.எச்.எம்.இ. என்ற சுகாதார நிறுவனம், மேலும் 2 லட்சம்பேர் கொரோனாவுக்கு பலியாவார்கள் என்று கணித்துள்ளது.

ஆகவே, முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்தால், பெருமளவு உயிரிழப்புகளை தவிர்க்கலாம்.

கடந்த 2015-ம் ஆண்டு நான் கணித்தபோது, உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தேன். எனவே, இன்னும் அதிக

உயிரிழப்புகளை கொரோனா ஏற்படுத்தக்கூடும். கொரோனா இன்னும் மோசமான காலகட்டத்தை எட்டவில்லை. அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு உஷாராக இருப்பது நல்லது.

ஆனால், அமெரிக்காவிலும், பிற உலக நாடுகளிலும் நான் கணித்ததை விட கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்கு எனது

அறக்கட்டளை ஏராளமான நிதிஉதவி அளித்து வருகிறது. அமெரிக்க அரசுக்கு அடுத்தபடியாக நாங்கள்தான் அதிக நிதிஉதவி அளித்து வருகிறோம்.

கொரோனா தடுப்பூசியை போடுவதில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இருந்தாலும், மனித குலம் முழுமைக்கும் அமெரிக்கா உதவ வேண்டும்.

உலக பொருளாதாரம் மீண்டுவர வேண்டும். கொரோனா பலி எண்ணிக்கையை குறைக்க வேண்டும். சர்வதேச ஒத்துழைப்பை தடுப்பது தவறு. அதனால், எல்லா கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறனையும் அதிகரிப்பது அவசியம்.

இனிவரும் மாதங்களில் மேலும் சில தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கிடைத்து விடும்.

முன்னாள் ஜனாதிபதிகள் கிளிண்டன், புஷ், ஒபாமா ஆகியோர் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர். அதுபோல், என்னுடைய முறை வரும்போது, நான் வெளிப்படையாகவே தடுப்பூசி போட்டுக்கொள்வேன். மருத்துவ தேவை அடிப்படையில்தான் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும். பணபலம் அடிப்படையில் கிடைக்கக்கூடாது.

கொரோனா பாதிப்பு, ஏற்றத்தாழ்வை அதிகரித்துள்ளது. கருப்பினத்தினரும், குறைந்த வருவாய் பிரிவினரும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அனைவருக்கும் சமமாக தடுப்பூசி கிடைக்க வேண்டும். தடுப்பூசி கிடைத்தாலும், இன்னும் 6 மாதங்களுக்கு எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும்.

ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பதால், அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் சிக்கலை சந்தித்துள்ளது.

இருப்பினும், புதிய அரசு, உண்மையான நிபுணர்களை சார்ந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளது. அது எனக்கு திருப்தி அளிக்கிறது. ஆகவே, புதிய நிர்வாகத்தின்கீழ், அமெரிக்காவின் கொரோனா தடுப்பு செயல்பாடுகள் மோசமாக இருக்காது என்று கருதுகிறேன்.

இவ்வாறு பில்கேட்ஸ் கூறினார்

Posted in இலங்கை செய்திகள்

யாழ் உள்ளிட்ட உள்ளூர் விமானநிலையங்களை இயக்க நடவடிக்கை

யாழ் உள்ளிட்ட உள்ளூர் விமானநிலையங்களை இயக்க நடவடிக்கை

எதிர்வரும் 26 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவது நிலையான அட்டவணையின்றி செல்லும்

விமான நடவடிக்கையாகும் Traveling aircraft operations என்று சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச இதுதொடர்பாக தெரிவிக்கையில், இலங்கையில் மீண்டும் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிப்பதற்காக நடவடிக்கைகள்

மேற்கொள்ப்பட்டுள்ளன. வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் 4 விமான நிலையங்களை திறப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்hர்.

இதற்கமைவாக இலங்கையில் யாழ்ப்பாணம், கட்டுநாயக்க, மத்தள மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு வணிக

விமானங்களுக்கும் நிலையான நேர அட்டவணையின்றி செல்லும் விமானங்களும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள

அனுமதிகிடைக்க்கூடும்..இதன்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய சுகாதார

ஆலோசனைகள் பின்னர் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச விமான சேவைகளுக்காக இலங்கை மீண்டும் திறக்கப்படும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட பிரதேசங்கள்!

தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட பிரதேசங்கள்!

கொழும்பு, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள் இன்று காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், கொழும்பு, களுத்துறை மற்றும்

கம்பஹாமாவட்டங்களில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளது.

இது குறித்த அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

கீழ் குறிப்பிட்ட மாவட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களில் தனிமைப்படுத்தலை அமுல்படுத்தல் , நீக்குதல் மற்றும் புதிதாக அமுல்படுத்துதல் கீழ் கண்ட வகையில்

இற்றைப்படுத்தப்பட்டுள்ள (முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாக) தாக கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு

மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டம்

  1. இன்று (14) காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்

• சிரிசந்த செவன குடியிருப்புத் திட்டம் (கிராண்ட்பாஸ் பொலிஸ் வலயம்)
• சிரிமுத்து உயன (கிராண்ட்பாஸ் பொலிஸ் வலயம்)
• லக்ஹிரு செவன தும்மிரிய அடுக்குமாடி குடியிருப்பு ( மாளிகாவத்தை பொலிஸ் வலயம்)
• சிறிசர உயன (பொரள்ளை பொலிஸ் வலயம்)

  1. தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்படும் பிரதேசங்கள்

• மோதர (முகத்துவாரம் பொலிஸ் பிரிவு)
• கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு
• கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு
• ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் பிரிவு
• டேம் வீதி பொலிஸ் பிரிவு
• வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு
• மாளிகாவத்த பொலிஸ் பிரிவு
• தெமட்டகொடை பொலிஸ் பிரிவு
• மருதானை பொலிஸ் பிரிவு
• கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வேகந்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு
• பொரள்ளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு
• வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் சாலமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் லக்சந்த செவன வீடமைப்பு குடியிருப்பு
• மட்டக்குளி பொலிஸ் பிரிவில் பர்கசன் வீதி தெற்கு
• கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் ஹுணுப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
• குருந்துவத்தை (கறுவாத்தோட்டம்) 60ஆவது தோட்டம்
• வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் கோகிலா வீதி

  1. இன்று (14) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தும் பிரதேசங்களாக குறிப்பிடப்படும் பிரதேசங்கள்

• வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் மயுரா பிளேஸ்

கம்பஹா மாவட்டம்

  1. இன்று (14) காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலிருந்து நீக்கப்படும் பிரதேசம்

வத்தளை பொலிஸ் பிரிவு

• கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
• ஹேகித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
• குருந்துஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு
• எவரிவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு
• வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு

பேலியகொட பொலிஸ் பிரிவு

• பட்டிய – வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

  1. தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தும் பிரதேசங்கள்

பேலியகொட பொலிஸ் பிரிவு

• பேலியகொடவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு
• பேலியகொட கஹாபட கிராம உத்தியோகத்தர் பிரிவு
• மீகஹாவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு

கிரிபத்கொட பொலிஸ் பிரிவு

• வெலேகொட வடக்கு

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு

• தலதுவை கிராம உத்தியோகத்தர் பிரிவில் வீடமைப்பு குடியிருப்புத் தொகுதி வெயங்கொட பொலிஸ் பிரிவு • ஹிரிபிட்டிய தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிதாஸ் மாவத்தை

  1. இன்று (14) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தல் பிரதேசமாக பெயரிடும் பிரதேசம்

வத்தளை பொலிஸ் பிரிவு

• கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் நய்துவ பிரதேசம் • வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவில் துவே வத்தை பிரதேசம்

பேலியகொட பொலிஸ் பிரிவில்

• பட்டியமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரோஹண விகாரை மாவத்தை

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவு

• ஹுணுப்பிட்டிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெடிகந்த பிரதேசம்

நிட்டம்புவ பொலிஸ் பிரிவில்

• திஹாரி வடக்கு மற்றும் திஹாரி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வாரண பன்சல வீதி, கத்தொட்ட வீதி மற்றும் ஹிஜ்ரா மாவத்தை உள்ளிட்ட பிரதேசங்கள்

களுத்துறை மாவட்டம்

  1. இன்று (14) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தலாக பெயரிடப்படும் பிரதேசம்.

• புளத்சிங்கள பிரதேச செயலக பிரிவில் வேகன்கல்ல கிழக்கு மற்றும் வேகன்கல்ல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு • குடா ஹீனிட்டியன்கல கிராம உத்தியோகத்தர் பிரிவில் மரிக்கார் வீதி

நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசம் என்ற ரீதியில் இருப்பதாக கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் , இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

இரு குழுக்கள் இடையில் மோதல் – 8 பேர் காயம்

இரு குழுக்கள் இடையில் மோதல் – 8 பேர் காயம்

கேகாலை, கோலிந்த வத்த பகுதியில் இரு குழுக்கள் இடையில் ஏற்பட்ட மோதலில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

பெண் ஒருவர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில்

இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இருகுழுக்களுக்கிடையில் பல நாட்களாக இருந்த பிரச்சினையின் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in இலங்கை செய்திகள்

தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை

உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமையாலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம்

இதுவரையான காலப்பகுதியில் 1,390 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.