Posted in இலங்கை செய்திகள்

யாழில் பாடசாலைகள் அனைத்தும் பூட்டு

யாழில் பாடசாலைகள் அனைத்தும் பூட்டு

கொவிட் 19 அவதான நிலை காரணமாக யாழ்ப்பாணம் உடுவில் மற்றும் தெல்லிப்பளை கல்வி வலயங்களைச் சேர்ந்த சகல

பாடசாலைகளுக்கும் இன்று(14) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

உடுவில் கல்வி வலயத்தில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியை தனிமைப்படுத்த

நடவடிக்கை எடுத்துள்ளமையால் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

7211 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்

7211 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 76 தனிமைப்படுத்தல் நிலையங்களில்

7211 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது வரை 23,793 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 144 பலி

பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 144 பலி

பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 144 பேர்

கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

வழமையை விட இன்று அதிக உயிர்பலிகள் குறைவடைந்து காணப்படுகிறது


இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .இதேபோல அமெரிக்காவில் 892 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள்

பெண்ணை கடத்தி கற்பழித்த நபர் 22 வருடங்களின் பின் சிறை பிடிப்பு

பெண்ணை கடத்தி கற்பழித்த நபர் 22 வருடங்களின் பின் சிறை பிடிப்பு

அமெரிக்காவில் இருபத்தி இரண்டு வயது பெண்மணி ஒருவரை பாலியல்

உறவு புரிந்தார் என்ற குற்ற சாட்டில் நபர் ஒருவர் சுமார் 22 வருடங்கள் கழித்து மடக்கி பிடிக்க பட்டுள்ளார்

இவரது மரபணு சோதனையை வைத்தே இந்த குற்றவியல் நிரூபிக்க பட்டுள்ள நிலையில் தற்போது நீதி விசாரணைங்கள் முன்னெடுக்க பட்டு வருகிறது

Posted in உலக செய்திகள்

400 மாணவர்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள்

400 மாணவர்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள்

நைஜீரியா நாட்டில் உள்ள ஆண்கள் பாடசாலை ஒன்றுக்குள் ஆயுதமுனையில்

புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த பள்ளிக்கூடத்தின் முக்கிய ஆவணங்களை

திருடினர் ,இவர்களை கண்ணுற்ற மாணவர்கள் பீதியடைந்து அருகில் உள்ள கட்டுக்குள் ஓடி மறைந்து கொண்டனர்

மாலை வேளையில் காடுகளுக்குள் பதுங்கிய சுமார் 408 மானவ்ரகள் வீடு திரும்பினார்

எனினும் மேலதிக 400 மாணவர்கள் வீடு திரும்பவில்லை ,இவர்கள் கடத்தி

செல்ல பட்டோ அல்லது கொன்று குவிக்க பட்டோ இருக்கலாம் என அஞ்ச படுகிறது

காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் இராணுவம் காடுகளுக்குள் தேடுதலில் ஈடுபட்டுள்ளது

Posted in உலக செய்திகள்

கைபேசி மூலம் கொரோனா பரிசோதனை

கைபேசி மூலம் கொரோனா பரிசோதனை

கொரோனா வைரஸ் பெருந்தொற்றினை கண்டறிகிற உமிழ் நீர் அடிப்படையிலான ஸ்மார்ட் போன் பரிசோதனையை மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உமிழ்நீர் அடிப்படையில் ஸ்மார்ட்போன் மூலம் கொரோனா பரிசோதனை

கொரோனா வைரஸ் பெருந்தொற்றினை 15 நிமிடங்களில் கண்டறிகிற உமிழ் நீர் அடிப்படையிலான ஸ்மார்ட் போன்

பரிசோதனையை அமெரிக்காவில் உள்ள துலேன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் சயின்ஸ் அட்வான்சஸ் பத்திரிகையில் கூறி இருப்பதாவது:-

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை போன்றே இந்த பரிசோதனை திறம்பட செயல்படுகிறது.இந்த ஸ்மார்ட் போன் இயங்குதளம்

எதிர்கால பயன்பாடாக அமையும் என்று நம்புகிறோம். கொரோனா பரிசோதனையை விரைவாக விரிவுபடுத்துவதற்கான திறனை

வழங்குகிறது. வழக்கமாக கொரோனா பரிசோதனைக்கு தொண்டை அல்லது மூக்கு சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. இதில்

உமிழ்நீர்தான் சேகரிக்கப்படுகிறது. ஆரம்ப நோய்த்தொற்றின்போது, உமிழ்நீரில் கொரோனா வைரஸ் இருக்கும்.

இந்த பரிசோதனைக்காக ஒரு சிப்பை உருவாக்கி உள்ளோம். இது சிஆர்ஐஎஸ்பிஆர்/கேஸ் 12 ஏ மூலக்கூறுகளை பயன்படுத்துகிறது.

இந்த சிப், ஸ்மார்ட் போன் அடிப்படையிலான புளோரசன்ஸ் மைக்ரோஸ்கோப்பில் இணைக்கப்படுகிறது. அதன்மூலம் உமிழ்நீர்

மாதிரியில் உள்ள வைரஸ் மரபணு பொருளை சிறப்பாக கண்டறியலாம், 15 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறிந்து விடலாம்.

Posted in இலங்கை செய்திகள்

இனப்படுகொலைகளுக்கு எதிரான கூட்டணி தேவை :கொசோவோ துணைப்பிரதமர்

இனப்படுகொலைகளுக்கு எதிரான கூட்டணி தேவை : ஈழத்தமிழர்களுக்கு கொசோவோ துணைப்பிரதமர் Haki Abazi தோழமை !

நாடுகளுக்கு இடையே, இனங்களுக்கு இடையேயான சிக்கல்கள் அதிகமாகிக் கொண்டிக்கும் இவ்வேளையில், இனப்படுகொலைகளுக்கு எதிரான கூட்டணியொன்று உலகத்தின்

இன்றைய தேவையாக உள்ளதென கொசோவோ நாட்டு துணைப்பிரதமர் அக்கி அபாசி ( Haki Abazi ) அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசெம்பர் 5.6ம் தேதிகளில் நடந்து முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் சிறப்பு

அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இக்கருத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=z_tN-fCwpSw&feature=youtu.be

குறிப்பாக சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து அகதிகள் பெருமளவில் வெளியேறிவரும் நிலையில்,

ஏதிலிகளின் குரல்களுக்கு நடுவேயே இனச்சிக்கல்குறித்தான் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டியதாகவுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொசோவைவின் துணைப் பிரதமராகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் பணியாற்றிய அக்கி அபாசி அவர்கள், ஐரோப்பாவில் சிவில் சமூகத்தினை

வளர்த்தெடுப்பதில் அக்கறை செலுத்தியவர் மட்டுமல்லாது பல சர்வதேச மனிதாபிமான தொண்டு நிறுவனங்களிலும் உயர்பொறுப்புக்களை வகித்தவர்.

கொசோவா மக்களது அரசியல் தலைவிதியை நிர்ணயிக்க அங்கு நடந்த பொதுவாக்கெடுப்பு பொறிமுறை போன்றே, ஈழத்தமிழ் மக்களது அரசியல் தலைவிதியை தீர்மானிக்கின்ற

பொறிமுறையாக பொதுவாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில், ஈழதமிழர்களுக்கான தனது தேசத்தின் தோழமையினை தெரிவித்து அவர் ஆற்றிய உரையின் பிழிவு :

நாடுகளுக்கு இடையே, இனங்களுக்கு இடையே சிக்கல்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. சிக்கல்களை களைவதும் இன்னல்கள் நிறைந்த பாதையாகவே இருக்கின்றது.21ம்

நூற்றாண்டில் இந்த உலகமயமாதலின் பின்னராக தற்போதைய சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்கு பின்னராக இப்பணி எளிதாகவே

இருக்க வேண்டும். ஆனாலும் இந்த இனச்சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்த காலகட்டத்தில் இனச்சிக்கல்களுக்கு எதிரான ஒரு கூட்டணி ஒன்று தேவையாகவுள்ளது. குறிப்பாக இனப்படுகொலைகளுக்கு எதிரான கூட்டணி தேவையாகவுள்ளது.

அகதிகளின் அலைந்துழ்வு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஜேர்மன் நாடுபோன்று பிற நாடுகளும் அகதிகளை திறந்த

கதவுகளுடன் ஏற்றுக் கொண்டால் சிறப்பாக இருக்கும். ஆனால் நிலைமைகள் அவ்வாறு இல்லை.

இனச்சிக்கல்கள் குறைந்தால்தான் குறிக்கீடுகளும் குறையும். குறிப்பாக சிரியா, லிபியா,ஆப்பாகானிஸ்தான் போன்ற நாடுகளில்

இருந்து அகதிகள் பெருமளவில் வெளியேறிவரும் நிலையில், இந்த குரல்களுக்கு நடுவேயே இனச்சிக்கல்குறித்தான குரல்களை ஓங்கி ஒலிக்க வேண்டியுள்ளது.

கொசோவோ தனிநாடாகவிட்டது என்பதால் அதன் பிரச்சனைகள் முடிந்துவிட்டதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்புவது என்பது பெரும்

பணியாகவுள்ளது.கொசோவோவில் 90 வீதம் அல்பேனியர்களே உள்ளதோடு, அல்பேனிய மக்கள் ஐந்து நாடுகளில் சிதறுண்டு உள்ளனர்.

கொசோ விடுதலைப் போராட்ட தடம்

ஓட்டமான் பேரசு காலத்தில் இடம்பெற்ற ஆக்கிரமிப்பின் போதுதான் அல்பேனிய மக்களை கொண்ட கொசோவோ மற்றவர்களின் கையில் வீழ்ந்தது. ஆக்கிரமிக்கப்பட்டது.

1989ம் ஆண்டு பேர்லின் சுவர் வீழ்ந்தது. அதில் இருந்துதான் பால்கன் பிராந்தியத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழத்தொடங்கின. அவ்வேளையிலே கொசோவோ அல்பேனியவர்கள் செர்பிய

சிறைகளில் காரணங்களன்றி பல்லாயிரணக்கணக்கில் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். 1989ல் இருந்து 1999 வரை கொசோவோ விடுதலைப் போர் உக்கிரமாக நடந்தது. அங்கிருந்து கொசோவோ

அர்பேனியர்கள் தொடர்ந்து அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். குறிப்பாக 1.5 மில்லியன் மக்கள் கொசோவாவில் இருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். அவ்வேளையில் 1999ல்

அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள் தலைமையிலான நோட்டோ அமைப்பு செர்பியா மீது போரைத் தொடுத்தது. 79 நாட்கள் இடம்பெற்ற போருக்கு பின்னராக யுத்த நிறுத்தம் வந்தது.

ஐ.நாவின் தீர்மானம் 1854 சரத்துக்கு அமைய பொதுவாக்கெடுப்பு மூலம் கொசோவோ தனிநாடாகியது. அல்பேனியவர்கள் சுதந்திர

காற்றை சுவாசித்தார்கள் என அவர் தனதுரையில் தெரிவித்திருந்தார்.

கொசோவை மக்களது போராட்டமும், அப்போராட்டம் காரணமாக கொசோவா தனிநாடாக உருவான விதமும் எமது போராட்டத்துக்கும் , எமது அரசியல் குறிக்கோளுக்கும் உற்சாகம்

தருகின்றது என தெரிவித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், கொசோவா மக்களது அரசியல் தலைவிதியை நிர்ணயிக்க அங்கு நடந்த

பொதுவாக்கெடுப்பு பொறிமுறை போன்றே, எங்களுடைய ஈழத்தமிழ் மக்களது அரசியல் தலைவிதியை தீர்மானிக்கின்ற

பொறிமுறையாக பொதுவாக்கெடுப்பு கோரி போராடிவருகின்றோம் எனத் தெரிவித்தார்.

கொசோவாவில் நடந்தது ஒரு இனப்படுகொலை. அங்கு இனப்படுகொலை மீண்டு நடந்து விடக்கூடாதிருக்க சுதந்திரமும்

இறையும் கொண்டதாக ஈடுசெய் நீதியினை விளைவாக அங்கு பொதுவாக்கெடுப்பு நடந்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

Posted in இலங்கை செய்திகள்

விடுதலைப்புலிகளின் போராட்டம் நியாயமானது : பேராசிரியர் Francis A.Boyle video

விடுதலைப்புலிகளின் போராட்டம் நியாயமானது : பேராசிரியர்  Francis A.Boyle  video

!https://youtu.be/ZXCHVLHTqzg
அயர்லாந்து பின்னணியைக் கொண்ட தனது, பாட்டனால் அயர்லாந்து விடுதலை இயக்கத்தில் இருந்தவர் நிலையில், தமிழீழ

விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் நியாயத்தன்மை தனக்கு புரிகின்றது என பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (Prof  Francis A.Boyle ) அவர்கள் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் பொய்ல் அவர்கள், 1995ம் ஆண்டு முதல் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு குரல்

கொடுத்துவருவர் என்பது மட்டுமல்லாது, தமிழ்மக்கள் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ தனியரசுக்கு உரித்துடையவர்கள் உரக்ககூறிவருபவர்.

கடந்த டிசெம்பர் 9ம் நாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளையோர் பிரிவு ‘அலைகள்’ ஒருங்கிணைத்திருந்த ‘அனைத்துலக
இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான ஐ.நா

பிரகடனத்தின் அனைத்துலக நாள் (International Day of Commemoration and Dignity of the Victims of the Crime of

Genocide) இணைவழி கருத்தரங்கில் சிறப்புரையாற்றும் போதே இக்கருத்தினை பேராசிரியர் அவர்கள் முன்வைத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், செர்பனிக்கா இனப்படுகொலையில் 8000 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இதனை உலக நீதிமன்றம்

இனப்படுகொலையென ஏற்றுக் கொண்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் 1 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். .இனப்படுகொலைக்கு

படுகொலை என்பது எண்ணி;கையின் அடிப்படையிலானது அல்ல. அப்படுகொலைக்கான நோக்கம் இனப்படுகொலைக்கானது என்பதே முக்கியமானது. ஈழத்தமிழர்களுக்கு நடந்ததும்

இனப்படுகொலைதான். இதற்கான பரிகார நீதியினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள வேண்டும். இதறக்கு நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம். அவ்வாறு நாடுகளின்

ஒத்துழைப்பினை தேடும் பணியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் செயற்பட்டு வருகின்றார்.

தற்போது தமிழர்கள் புறக்கணிப்பு போராட்டத்தினை நடத்த வேண்டும். எவ்வாறு இஸ்றேலுக்கு எதிரான பலஸ்தீனியவர்கள் The BoycottDivestmentSanctions (BDS)  எனும்

புறக்கணிப்பு இயக்கத்தினை நடத்தினார்களோ (https://bdsmovement.net/ ) அவ்வாறானதொரு இயக்கத்தினை

ஈழத்தமிழர்கள் உருவாக்க வேண்டும் என பேராசிரியர் பொய்ல் அவர்கள் தனதுரையில் இடித்துரைத்திருந்தார்.

பேராசிரியர் அவர்கள் பலஸ்தீன இயக்கங்களுடன் சட்ட ஆலோசகராக நீண்டகாலம் பணியாற்றியிருந்தவர் என்பதோடு,

உலக நீதிமன்றத்தில் பொஸ்னியா-கெர்சிகோவினா இனப்படுகொலைக்கு நீதிவேண்டி அமக்களுக்கு சட்டப்போராட்டம் நடத்தி நீதியை பெற்றவர்.

இணையவழி இடம்பெற்றிருந்த இந்நிகழ்வில் பல வளப்பெருமக்கள் கலந்து கொண்டு இனப்படுகொலை, அதற்கான சான்றுகள்,

அதற்கான பரிகார நீதி என்று பல்வேறு கோணங்களில் உரையாடல்களை நிகழ்த்தியிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு மருத்துவமனை ஊழியர்கள் 50 பேருக்கு கொரனோ

கொழும்பு மருத்துவமனை ஊழியர்கள் 50 பேருக்கு கொரனோ

கொழும்பு தேசிய மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள்

ஐம்பது பேருக்கு பரவி வரும் கொரனோ நோயானது

தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் அனைவரும் உரிய சோதனைக்கு உள்ளாக்க

பட்டுள்ளதுடன் ,ஏனையவர்கள் தனிமை படுத்த பட்டு கண்காணிக்க பட்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரனோ தணடவம் -2,286 பேர் பலி -215,956 பாதிப்பு

அமெரிக்காவில் கொரனோ தணடவம் -2,286 பேர் பலி -215,956 பாதிப்பு

அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தகத்தலில்

சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார்

2,286 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 215,956 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

மேலும் 27,523 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க

பட்டுள்ளது ,வரும் நாட்களில் இறப்பு விகிதம் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி தொடக்கம் 1000 ரூபா

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி தொடக்கம் 1000 ரூபா

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் 1000 ரூபா

சம்பளம் கிடைக்குமென தாம் நம்புவதாக தோட்ட வீடமைப்பு மற்றும்

சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

1000 ரூபா சம்பளத்தை ஜனவரி தொடக்கம் பெற்றுக் கொடுப்பதாக

ஜனாதிபதியும், பிரதமரும் உறுதியளித்துள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ பரவலில் -500 பேர் பலி -21,502 பாதிப்பு

பிரிட்டனில் கொரனோ பரவலில் -500 பேர் பலி -21,502 பாதிப்பு

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தகத்தலில் சிக்கி கடந்த

இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 500 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 21,502 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இவர்களுடன் 2,884 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக சுகாதார

அமையு அறிவித்துள்ளது ,லண்டன் பகுதி சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்ட

பகுதியாக அறிவிக்க பட்டுள்ளது ,நோயின் தாக்குத்தல் அதிகரித்துள்ள

நிலையில் ,பாடசாலைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

அமெரிக்கா விமானங்களை துரத்தி கண்காணிக்கும் ஈரான் – சுட்டு வீழ்த்த படுமா ..?

அமெரிக்கா விமானங்களை துரத்தி கண்காணிக்கும் ஈரான் – சுட்டு வீழ்த்த படுமா ..?

அமெரிக்கா இராணுவத்தின்பி 52 ரக போர் விமானங்கள் ,பாரசீக வளைகுடா

பகுதியில் பறப்பில் ஈடுபட்டுள்ளன ,அவை அங்கிருந்து ஈரானுக்குள் பறந்து

அணுஉலைகள் மீது தாக்குதல் நடடத கூடும் என்பதல் அதனை தொடராக

தாம் கண்காணித்து வருவதாகவும் ,அத்துமீறி நுழைந்தால் உடனடியாக

சுட்டு வீழ்த்த படும் என ஈரான் முக்கிய வான் காப்பு படைப்பிரிவின் தளபதி தெரிவித்துள்ளார்

இந்த அறிவிப்பை அடுத்து அமெரிக்கா விமானங்கள் சுட்டு வீழ்த்த படும் நிலை ஏற்பட கூடும் என எதிர் பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள்

90 தாலிபான்கள் சுட்டு படுகொலை – தொடரும் இராணுவ வேட்டை

90 தாலிபான்கள் சுட்டு படுகொலை – தொடரும் இராணுவ வேட்டை

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரச இராணுவத்திற்கும் தலிபான் போராளிகளுக்கும்

இடையில் கடும் சண்டை இடம்பெற்றுள்ளது ,இந்த தாக்குதலிகள் சிக்கி 90

தாலிபான்கள் படுகொலை செய்ய பட்டும் ஒன்பதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக்கி அரச இராணுவம் தெரிவித்துள்ளது

இராணுவத்தினரின் முகம் மீது நடத்த பட்ட தற்கொலை

தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டன் கடலப்பரப்பில் கடற்படை ரோந்து காவல் அதிகரிப்பு

பிரிட்டன் கடலப்பரப்பில் கடற்படை ரோந்து காவல் அதிகரிப்பு

பிரிட்டன் ஐரோப்பாவுடன் இருந்து விலகும் நிலையில் தமது கடல்பரப்பை

பாதுக்காக்கும் நோக்குடன் தற்பொழுது பிரித்தானிய

கடற்படையினர் எல்லையோரங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

எதிரிகள் நுழைந்து விடாது பாதுகாக்கவும் ,மற்றும் அகதிகள்

வரவை தடுக்கவும் இந்த பாதுகாப்பபு பணி தீவிர படுத்த படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Posted in உலக செய்திகள்

தை மாதம் முதல் பிரிட்டனில் புதிய மாற்றங்கள்

தை மாதம் முதல் பிரிட்டனில் புதிய மாற்றங்கள்

ஐரோப்பிய ஒன்றியத்துடன் எதிர்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரிட்டன் நடத்தும் பேச்சுவார்த்தைகளின் முடிவு எப்படி இருந்தாலும் பெரிய மாற்றங்கள் நடக்கும்.

பிரெக்சிட் காலக்கெடு முடிகிறது… புத்தாண்டு முதல் பிரிட்டன் மக்களுக்கு காத்திருக்கும் பெரிய மாற்றங்கள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எதிர்கால வர்த்தக ஒப்பந்தம் செய்தோ, ஒப்பந்தம் இல்லாமலோ பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எந்தவித ஒப்பந்தமும் இன்றி பிரிட்டன் வெளியேறும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் கனடாவை போன்று வர்த்தக ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் விரைவில் தீர்வு காண இருப்பதாகவும் கூறினார்.

இதன்படி வரும் ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் முற்றிலுமாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இனி ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் சரி, பேச்சுவார்த்தை நடக்காவிட்டாலும் சரி, ஜனவரி 1ம் தேதி முதல் சில மாற்றங்கள் நடக்கும்.

ஐரோப்பிய ஒன்றியம், சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளுக்கான பயண விதிகளில் ஜனவரி 1 முதல் மாற்றம் இருக்கும் என்று அரசு எச்சரித்துள்ளது.

குறிப்பாக, 2021ஆம் ஆண்டில் திட்டமிட்ட பயணங்களுக்கு, பாஸ்போர்ட்களை சரிபார்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவர்களின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்காமல், பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிக்க முடியாமல் போகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செல்லும் பிரிட்டிஷ் பயணிகள் தங்களின் பாஸ்போர்ட்டுகள் தங்குவதற்கான உத்தேச காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.

புத்தாண்டு தினத்திலிருந்து, ஐரோப்பிய ஒன்றிய பகுதிக்கு வரும் பிரிட்டன் மக்களும் நாடு திரும்புவதற்கான டிக்கெட் அல்லது

அடுத்த பயணத்திற்கான டிக்கெட்டைக் காட்ட வேண்டும். அவர்கள் தங்குவதற்கு போதுமான பணம் இருப்பதையும் உறுதி செய்ய

வேண்டும். வரிசையில் நிற்கும்போது ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களிடமிருந்து தனி பாதைகளைப் பயன்படுத்த வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் 90 நாட்களுக்கு மேல் தங்குவதற்கு திட்டமிட்டுள்ளவர்கள், தங்களின் விசா அல்லது அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.

தற்போது, கொரோனா கால கட்டுப்பாடுகள் இருப்பதால், பிரிட்டன் பயணிகள் ஜனவரி 1 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு

வருவதற்கு தடை விதிக்கப்படுமா? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

குறைவான கொரோனா பாதிப்பு உள்ள ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளிலிருந்து மட்டுமே, அத்தியாவசியமற்ற பயணம், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.

பிரெக்சிட் காலக்கெடு முடிந்ததும், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சுதந்திரமாக பயணம் செய்வதற்கு அனுமதிக்கும் விதிகள் பிரிட்டன் மக்களுக்கு பொருந்தாது.

ஜனவரி 1 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பிரிட்டன் குடிமக்கள் இறைச்சி, பால் அல்லது அவற்றைக் கொண்ட

தயாரிப்புகளை எடுத்துச் செல்ல முடியாது. குழந்தைகளுக்கான பால் பவுடர், பால் போன்ற சில பொருட்களுக்கு மட்டும்

விதிவிலக்குகள் அளிக்கப்படும். இன்னும் பல்வேறு விதிமுறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறியதால் பிரிட்டன் சாதகப் பலன்களை அடைய முடியாது என்று ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் ஏற்கெனவே எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

Posted in உலக செய்திகள்

பைடன் வெற்றியை எதிர்த்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி- டிரம்புக்கு பின்னடைவு

பைடன் வெற்றியை எதிர்த்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி- டிரம்புக்கு பின்னடைவு

டெக்சாஸ் உள்பட 17 மாநிலங்களில் ஜோபைடன் வெற்றியை எதிர்த்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதால் டிரம்புக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பைடன் வெற்றியை எதிர்த்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி- டிரம்புக்கு மேலும் பின்னடைவு

அமெரிக்க அதிபர் தேர்த லில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோபைடன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார்.

ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி டிரம்ப் தனது தோல் வியை ஏற்க மறுத்து வருகிறார். மேலும் பல்வேறு

மாநிலங்களில் ஜோபைடன் வெற்றியை எதிர்த்து கோர்ட்டுகளில் டிரம்ப் தரப்பினர் வழக்குகளை தொடர்ந்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு பென்சில்வேனியா மாநில தேர்தல் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி

செய்தது. இந்த நிலையில் டெக்சாஸ் உள்பட 17 மாநிலங்களில் தேர்தல் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்திருக்கிறது.

தேர்தலில் முறைகேடு நடந்ததற்கான போதுமான ஆதரங்கள் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில் டிரம்ப் தரப்பினர் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது டிரம்புக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Posted in உலக செய்திகள்

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்- மத்திய அரசு

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்- மத்திய அரசு

மாவோயிஸ்டுகளில் ஒரு பிரிவினர் விவசாயிகளின் போராட்டத்துக்குள் புகுந்து வன்முறையை நிகழ்த்த திட்டமிட்டு

இருப்பதாகவும், எனவே விவசாயிகள் போராட்டத்தில் எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கலாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்- மத்திய அரசு எச்சரிக்கை
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இன்று (சனிக்கிழமை) 17-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது.

விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இதுவரை நடைபெற்ற 5 பேச்சுவார்த்தைகளில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

இதற்கிடையே 3 சட்டங்களிலும் தேவையான திருத்தங்கள் செய்ய தயார் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் விவசாயிகள் தரப்பில் சட்டங்களை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களில்

இருந்து மேலும் விவசாயிகளை திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி நேற்று சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் டெல்லி எல்லைக்கு புறப்பட்டு சென்றனர்.

டெல்லியை நோக்கி நூற்றுக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் மீண்டும் திரண்டு வந்ததால் நேற்று இரவு முதல்

பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து டெல்லி எல்லை பகுதிகளை போலீசார் சீல் வைத்துள்ளனர். பல பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் டெல்லிக்குள் ஊடுருவாமல் இருப்பதற்காக எல்லையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு வருகிறார்கள். குர்கான் எல்லை பகுதியில் 2,500 போலீசார் கூடுதலாக

நிறுத்தப்பட்டுள்ளனர். அதுபோல பரீதாபாத் எல்லை பகுதியில் சுமார் 4 ஆயிரம் போலீசார் கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

அரியானா மாநிலம் வழியாக வரும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை தடுத்து நிறுத்துவதற்காக போலீசார் இந்த ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

இந்தநிலையில் இன்று விவசாயிகள் டெல்லிக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் விவசாயிகளால்

முற்றுகையிடப்பட்டன. குறிப்பாக டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதுபோல சுங்க சாவடிகளையும் விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் இன்று மேலும்

தீவிரம் அடைந்துள்ளது. விவசாயிகள் தொடர்ந்து போராடுவோம் என்று மத்திய அரசை எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே 3 விவசாய சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பலர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று பாரதீய கிஷான் யூனியன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

தொடரப்பட்டது. விவசாய சட்டங்கள் தொடர்பாக விசாரணை நடைபெறும் போது தங்களது தரப்பு கருத்துக்களை கேட்க வேண்டும் என்று விவசாய அமைப்பு தெரிவித்து உள்ளது.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

எனவே அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் போது பாரதீய கிஷான் அமைப்பு சார்பில் புதிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறாவிட்டால் அடுத்தக்கட்டமாக ரெயில் மறியல் போராட்டத்தை நடத்துவோம் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதனால்

விவசாயிகள் போராட்டம் திசை திரும்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்குள் சமூக விரோத சக்திகள் புகுந்து இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. மாவோயிஸ்டுகளில் ஒரு பிரிவினர் விவசாயிகளின்

போராட்டத்துக்குள் புகுந்து வன்முறையை நிகழ்த்த திட்டமிட்டு இருப்பதாகவும், எனவே விவசாயிகள் போராட்டத்தில் எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கலாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

விவசாயிகள் போராட்டத்தை சமூக விரோத சக்திகள் திசை திருப்பி கொண்டு செல்லும் அபாயம் இருப்பதாக மத்திய உள்துறைக்கு உளவு அமைப்புகளும் தகவல் கொடுத்து எச்சரித்து உள்ளன.

இதையடுத்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று காலை பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை

நடத்தினார். விவசாயிகள் போராட்டம் நடைபெறும் டெல்லி எல்லை பகுதிகளில் எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஆய்வு செய்தார்.

விவசாயிகள் மத்தியில் அரசியல்வாதிகள், மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் நுழைந்திருக்கிறார்களா என்பது பற்றியும் அவர் கேட்டறிந்தார். இதையடுத்து டெல்லியை இணைக்கும் பஞ்சாப்,

அரியானா, உத்தரபிரதேசம் எல்லை பகுதிகளில் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் மேலும் தீவிரப்படுத்த அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அமித் ஷா போன்றே மத்திய உணவு, ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும் விவசாயிகள் போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் ஊடுருவி இருப்பதாக எச்சரித்துள்ளார். அவர் கூறுகையில்,

“விவசாயிகள் தரப்பில் பேசிய சிலர் வேளாண் சட்டம் மட்டுமின்றி வேறு சில விவகாரங்களையும் பேசுகிறார்கள். சர்ஜில் இமாம் என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

விவசாயிகள் எதற்காக இமாமை விடுதலை செய்ய கோரிக்கை விடுக்கிறார்கள். இதை ஏற்க இயலாது. இத்தகைய கோரிக்கை

வைத்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. எனவே விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தி உள்ளார்.

மத்திய அரசு தெரிவித்துள்ள இந்த எச்சரிக்கையை ஏற்க விவசாயிகள் மறுத்து உள்ளனர். போராட்டம் நடைபெறும்

இடங்களில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் உள்பட எந்த சமூக விரோத அமைப்பும் ஊடுருவவில்லை என்று விவசாய சங்க தலைவர்கள் கூறி உள்ளனர்.

டெல்லி புறநகர் பகுதிகளில் தங்கி இருக்கும் விவசாயிகள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேச வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பயணிக்கவேண்டும்-செல்வம் அழைப்பு

அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பயணிக்கவேண்டும்-செல்வம் அழைப்பு

மற்றவர்களை ஒற்றுமைப்படுத்திவிட்டு தங்களது தனித்துவத்தினை பேணவேண்டும் என்று நினைத்தால் அதில்வெற்றிபெறமுடியாது என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பயணிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

தற்போது வடகிழக்கில் தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் எட்டு கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் இணைப்பதா அல்லது வேறு ஒரு குடையின் கீழ் இணைவதா என்பது குறித்து சிந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டத்தில் பிரச்சினை இருப்பதன் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம்.மாநகரசபை வரவு செலவு திட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து வாக்களிப்பார்கள் என்ற முடிவினை எட்டியுள்ளோம்.

இன்றைய அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மிக மோசமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வழிமுறைகளை கையாண்டுவருகின்றது.இந்தநிலையில் தமிழர்களின் ஒற்றுமையென்பது மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது.

இன்று தமிழர்களின் பூர்வீக இடங்கள் பல்வேறு திட்டங்கள் என்ற பெயரில் அபகரிக்கும் சூழ்நிலையேற்பட்டுள்ளது. மகாவலி, தொல்பொருள், வன இலாகா போன்ற திணைக்களங்களை வைத்துக்கொண்டு கபடத்தனமாக தமிழர்களின் காணிகளை அபகரித்துக் கொண்டுவருகின்றது.

தற்போதைய ஜனாதிபதி கோத்தபாயவின் திட்டங்களை பார்க்கும்போது தமிழர்கள் பூர்விக வரலாற்றினைக்கொண்ட வடகிழக்கு பிரதேசம் அந்த மக்களை சிதைக்கின்ற நிலங்களை அபகரிக்க மிக மோசமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையினை இன்று காணமுடிகின்றது.

கொரோனா காலத்தில் இராணுவத்தின் பிரசன்னம், நேர்முகத்தேர்வுகளின் போது இராணுவத்தினது பிரசன்னம், அரச உயர் பதவிகளில் இராணுவ உயர் அதிகாரிகளை நியமிக்கும் நிலைமைகள், முப்படைகளையும் கொண்டு ஆளும் செயற்பாடுகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில் தமிழர்கள் பிரிந்து நின்று கட்சி ரீதியாக செயற்படுகின்றபோது அது இன்னும் இந்த அரசாங்கத்திற்கு பிரித்தாளும் தன்மையினையே ஏற்படுத்திக்கொடுக்கும். இன்று மட்டக்களப்பில் வியாழேந்திரன், பிள்ளையான், கருணா போன்றவர்கள் மட்டக்களப்பில் தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை நிறுத்துவதற்கான அதிகாரம் அவர்களுக்கு இல்லை. அவர்கள் பேசலாமே தவிர செயல்வடிவத்தில் எதனையும் செய்யமுடியாது. கூடுதலான வாக்குகளை தமிழ் மக்களிடம் இருந்து பெற்றவர்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முடியாத நிலையே உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை கால்நடைவளர்ப்பாளர்களின் பிரச்சினைகள் பெரும் பிரச்சினையாகவுள்ளது. அரசாங்கம் மிக மோசமான முறையில் திட்டமிட்ட குடியேற்றங்களை மேய்ச்சல் தரை பகுதிகளில் முன்னெடுத்துவருகின்றது. இதனை தடுப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உhயி தரப்பினருடன் பேசினோம். ஆனால் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அதற்கான சரியான தீர்மானத்தினை எடுக்கவில்லை. அரசாங்கத்துடன் இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது சரியான வேலைகளை செய்யவேண்டும்.

தமிழ் தேசியத்துடன் இருக்கும் கட்சிகள் உளப்பூர்வமாக மக்களின் உரிமைக்காக செயற்படும் கட்சிகளாக இருக்குமானால் ஒற்றுமையாக செயற்படவேண்டும். அரசாங்கத்துடன் இருப்பவர்களை நாங்கள் ஒன்றும் கூறமுடியாது. தமிழ் தேசியத்துடன் செயற்படும் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பாடும் காலம் தற்போது உருவாகியுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டுமாகவிருந்தால் கொள்கையில் ஒன்றுபட்டுள்ள நாங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக ஒன்றுபடமுடியாது. அவ்வாறான ஒரு சூழல் உருவாக்கப்படவேண்டும். இன்று தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் எட்டு கட்சிகள் கூடி முடிவுகளை எடுத்து நடவடிக்கைகளை எடுத்துவரும் சூழலில் வடகிழக்கில் ஒன்றிணைந்து செயற்படும் இந்த காலத்தினை தவறவிடுவோமானால் தமிழர்களின் பூர்வீம் வரலாறு, தமிழர்களின் போராட்டம், இறையாண்மை அத்தனையும் இழந்து எங்களையெல்லாம் வந்தேறு குடிகளாக மாற்றும் சிங்களத்தின் கருத்துகளுக்கு துணைபோனதாக அமையும்.

மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசினால் தமிழ் தேசிய கூட்டமைப்பினை தடைசெய்யவேண்டும் என்று கூறுகின்ற அமைச்சர்களையே இன்று இந்த பாராளுமன்றம் கொண்டுள்ளது. அரசாங்கத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்கள் தொடர்பாக மிக மோசமான சிந்தனைகளை கொண்டுள்ளார்கள் என்பதை கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் உணரமுடிந்தது.

மூன்று நேரம் உணவு கொடுத்தால் தமிழ் மக்களுக்கு போதும் என்று முக்கியமான அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார்.தமது உரிமைக்காக போராடிய இனம்,தமது உரிமைக்காக தமது உயிர்களை அர்ப்பணித்த இனம் தமிழினம். ஆனால் அமைச்சர் பிரசன்னா ரணதுங்க மிக சாதாரணமாக தமிழ் மக்களுக்கு மூன்று நேர உணவு கொடுத்தால்போதும் என்று கூறுகின்றார். மூன்று நேர சாப்பாடு பிச்சையெடுப்பவனும் சாப்பிடுவான்.

இந்த அரசாங்கம் கடந்த காலத்தில் தமிழர்களை படுகொலைசெய்து இன்று ஐநா மனித உரிமைகள் சபை உட்பட சர்வதேச நாடுகளினால் குற்றஞ்சாட்டப்படும் அரசாங்கமாகவுள்ளது. இன்று பலர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். பீல்ட்மார்சலாக இருக்கின்ற சரத்பொன்சேகா உட்பட பலர் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். அவரும் இன்று கூறுகின்றார் இந்த புயல் மாவீரர் தினமன்று வந்திருக்கவேண்டும் என்று. இவருக்கு வாக்களித்ததற்கு இன்று தமிழ் மக்கள் வெட்கப்படுகின்றார்கள். இவ்வாறான சிந்தனையுடன்தான் இன்று பாராளுமன்றம் இருக்கின்றது.

நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக்கொண்டுள்ளோம். நாங்கள் என்ன செய்தாலும் யாருக்கும் அச்சப்படத்தேவையில்லையென கூறுகின்றார்கள். நிச்சயமாக இவர்கள் சர்வதேசத்திடம் பகைத்துக்கொண்டால் தன்னிறைவுகொண்ட நாடாக மாறாது. இவர்களினால் சர்வதேசத்தினை பகைத்துக்கொண்டு ஒருபோதும் செயற்படமுடியாது.

சர்வதேசத்தினைப் பொறுத்தவரையில் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் தமிழர்களின் பிரச்சினைகளில் முனைப்புக்காட்டிவருகின்றது. இந்த நிலையில் இந்த அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மூர்க்கத்தனமாக பல வழிகளிலும் தமிழ் மக்களின் இறையாண்மையினையும் பரவலையும் தடுக்கின்ற வகையில் செயற்படுகின்றது.

நாங்கள் இந்தவேளையில் ஒற்றுமையாக செயற்படமுன்வரவேண்டும். அரசியலமைப்பு புதிதாக எழுதப்படப்போவதாக சொல்கின்றார்கள். நாங்கள் இந்தவேளையில் தனித்தனியாக செயற்படுவதை விட இனப்பிரச்சினை சார்ந்த விடயங்களையும் தமிழ் மக்களின் சகல விடயங்களையும் உள்ளடக்கியதான ஒரு தீர்வு திட்டத்தினை அனைவரும் இணைந்து வழங்கவேண்டும். அதற்கு நாங்களும் தயாராகயிருக்கின்றோம். இந்த நிலையில் தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் தங்களது சுய விறுப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக செயற்படுவதாக இருந்தால் அனைவரும் இணைந்து ஒற்றுமையாக செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழ் மக்களின் உரிமைசார்ந்து செயற்படும் கட்சிகள் எந்த கட்சியாக இருந்தாலும் தமிழ் மக்களுக்காக சிந்திப்பதாக சொல்லிக்கொண்டு கட்சி பதிவு விடயத்திலும் கட்சி சீரமைப்பு விடயத்திலும் தட்டிக்கழிக்கின்ற செயற்பாடுகள் தொடருமானால் அது மக்களின் நலன் என்று பார்க்கமுடியாது. இதனை எல்லாரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக பயணிக்கும் கட்சிகளுடன் தொடர்ந்து பயணிப்பதே தமிழ் மக்களுக்கு சாதகமான விடயமாகஇருக்கும். மற்றவர்களை ஒற்றுமையாக்கிகொண்டுவந்து அதில் தங்களின் தனித்துவத்தினை காட்டமுற்பட்டால் அதில் எந்தவெற்றியும் பெறமுடியாது.

அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் ஒருங்கிணைப்பது கட்டாயமாகும். ஏற்கனவே எட்டு கட்சிகள் ஒன்றாக இணைந்துகொண்டுள்ளும் சூழ்நிலையுள்ளது. அதனை நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள்ளீர்க்கலாமா அல்லது வேறு ஒரு குடையின் கீழ் செயற்படமுடியுமா என்பது தொடர்பில் சிந்தித்துவருகின்றோம். எது எவ்வாறு என்றாலும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.இதனை அனைவரும் உணர்ந்துசெயற்பட வேண்டும்.
.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனாவால் 147 பேர் பலி

இலங்கையில் கொரோனாவால் 147 பேர் பலி

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, கொழும்பு -13ஐச் சேர்ந்த 82 வயதான

பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். இவருடன் சேர்த்து, கொரோனா

தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தோரின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது