Author: நலன் விரும்பி
பெண்களை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபட வைத்த கும்பல்
பெண்களை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபட வைத்த கும்பல்
இலங்கையில் வெளி நாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்ட ஐந்து பெண்களுக்கு இலங்கையில்
வேலைவாங்கி தருவதாக கூறி அழைக்க பட்டுள்ளனர் ,இலங்கை வந்தடைந்த அவர்களை
விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த கும்பல் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
இவர்களது கடவு சீட்டு பறிக்க பட்டு அடைத்து வைக்க பட்டு இவ்வாறு சித்திர வதைகளிற்கு
உள்ளாக்க பட்டுள்ளதாக பாதிக்க பட்ட ஐந்து பெண்களும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்
விமர்சனங்களை தூக்கி சாப்பிட்ட நயன்தாரா
விமர்சனங்களை தூக்கி சாப்பிட்ட நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தன்னைப்பற்றி வரும் விமர்சனங்களை கண்டுக்கொள்ளாமல் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.
விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாத நயன்தாரா
நயன்தாரா
நடிகை நயன்தாரா தனது அடுத்த படத்தின் வேலையில் தீவிரம் காட்டியுள்ளார். இதற்கிடையில் கூழாங்கல் படம் குறித்து
இணையத்தில் வரும் கருத்துகள் நயன்தாராவை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியுள்ளது. கூழாங்கல் படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிக்கவே இல்லை.
கடைசி நேரத்தில் ஆஸ்கர் தேர்வுக்குழுவிற்கு அனுப்ப போதிய பணம் இல்லாததால் அதற்கு வேண்டிய தொகையை விக்னேஷ் சிவன், நயன்தாரா கொடுத்ததாகவும் இதனால்தான் தயாரிப்பு
என்று அவர்கள் கம்பெனியை போட வேண்டியதாகிவிட்டது என்று இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.
நயன்தாரா
ஆனாலும் அந்த இக்கட்டான சூழலில் பணம் கொடுத்து உதவாவிட்டால் ஆஸ்கர் தேர்வுக்குழு கண்களுக்கே கூழாங்கல் படம் தெரியாமல் போயிருக்கும் என்பது உண்மை. ஆனால் இந்த
விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்த படத்திற்காகத் தனது ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டிருக்கிறார் நயன்தாரா.
நீச்சல் உடையில் ஹன்சிகா.
நீச்சல் உடையில் ஹன்சிகா.
திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகாவின் நீச்சல் உடை புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவித்துள்ளனர்.
நீச்சல் உடையில் ஹன்சிகா…. லைக்குகளை அள்ளிக்குவித்த ரசிகர்கள்
ஹன்சிகா
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர்
தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
ஹன்சிகா
ஹன்சிகாவின் புதிய புகைப்படம்
இந்நிலையில், ஹன்சிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து
இருக்கிறார்கள். இதுவரைக்கும் இந்த புகைப்படத்திற்கு 3 லட்சத்திற்கும் மேலான லைக்குகள் குவிந்துள்ளது.
இறந்த பிறகும் இரண்டு பேருக்கு பார்வை கொடுத்த புனித் ராஜ்குமார்
இறந்த பிறகும் இரண்டு பேருக்கு பார்வை கொடுத்த புனித் ராஜ்குமார்
மறைந்த பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் தனது கண்களை தானம் செய்ததன் மூலம் 2 பேருக்கு பார்வை கொடுத்து இருக்கிறார்.
இறந்த பிறகும் இரண்டு பேருக்கு பார்வை கொடுத்த புனித் ராஜ்குமார்
புனித் ராஜ்குமார்
நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் ஏற்கனவே கண்களை தானம் செய்திருந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர், நாராயணா நேத்ராலயா கண்
மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசி, உடனே வந்து புனித் ராஜ்குமாரின் உடலில் உள்ள கண்களை தானம் செய்வதாக கூறினர்.
புனித் ராஜ்குமார்
இதையடுத்து டாக்டர் புஜரங்கி தலைமையிலான குழுவினர் விக்ரம் மருத்துவமனைக்கு வந்து, புனித் ராஜ்குமாரின் கண்களை எடுத்து சென்றனர். அவரின் 2 கண்கள், 2 பேருக்கு
பொருத்தப்படும் என்றும், 2 நாட்களுக்குள் இந்த பணி மேற்கொள்ளப்படும் என்றும் அவர்
கூறினார். இதன் மூலம் புனித் ராஜ்குமார் இறந்த பிறகும் 2 பேருக்கு பார்வை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக மீனவர்கள் 23 பேர் யாழ் சிறையில் அடைப்பு
தமிழக மீனவர்கள் 23 பேர் யாழ் சிறையில் அடைப்பு
இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் சிங்கள கடல்
படையால் கைது செய்ய பட்ட தமிழக மீனவர்கள் 23 பேர் யாழ்ப்பாண சிறையில் அடைக்க
பட்டுள்ளனர்
நீதி விசாரணைகள் முடிவில் இவர்கள் விடுதலை செய்ய படுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது
பிரிட்டனுக்கு வருகை தந்துள்ள கொலையாளி கோட்டா
பிரிட்டனுக்கு வருகை தந்துள்ள கொலையாளி கோட்டா
இலங்கை தமிழ் இனப் படுகொலையாளி கோட்ட பாய இன்று பிரிட்டன் நாட்டுக்கு
வந்தடைந்துள்ளார் ,ஸ்கொட்லாந்தில்
நடைபெறவுள்ள கூட்ட தொடரில் கலந்து கொள்ள உள்ளார் ,இவ்வேளை தமிழர்கள் பாரிய
ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிட தக்கது
கனடாவில் பிறந்த தினம் – பளையில் போராளி குடும்போதிற்கு உதவிய நல் உள்ளம் – photo
கனடாவில் பிறந்த தினம் – பளையில் போராளி குடும்போதிற்கு உதவிய நல் உள்ளம் – photo
இப்படியும் நாள் உள்ளங்கள் உள்ளதை எண்ணி தமிழர் தேசம் பெரு கொள்கிறது ,
இவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
கனடா நாட்டில் பிறந்த தினத்தை கொண்டாடும்
பெயர்குறிப்பிட விரும்பாத நல் உள்ளம் கொண்டவரின்
நிதிப்பங்களிப்பில் பளை கச்சார்வெளியை சேர்ந்த
தேசப்பற்றாளர்களான வீரவேங்கை போல் மற்றும் வீரவேங்கை நந்தகுமாரி ஆகியோரின் தாயாரான முருகையா
ஞானப்பிரகாசி அவர்களுக்கு உலர் உணவு பொதிகளும் சிறு தொகைப் பணமும் இன்றைய தினம் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களால் கையளிக்கப்பட்டது.




பளையில் சகோதரி வீட்டுக்கு சென்றவர் மரணம்
பளையில் சகோதரி வீட்டுக்கு சென்றவர் மரணம்
இலங்கை பளை இத்தாவில் பகுதியில் உள்ள தனது சகோதரிக்கு வீட்டுக்கு சென்ற உறவினர்
ஒருவர் அங்கு இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்
இவரது மரணம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம்
உள்ளனர் ,இவர் இயற்கையில் மரணித்தாரா அல்லது படுகொலையா என்பது தொடர்பில்
விசாரணைகள் முன்னெடுக்க பட்டுள்ளது
நாடெங்கும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
நாடெங்கும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் இன்று முதல் பாரிய மழை வீழ்ச்சி காணப்படும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது .
இதனால் வெள்ள பெருக்கு மற்றும் இடி மின்னல் ஏற்பட கூடிய அபாயம் உள்ளதல் மக்களை விழிப்பாக இருக்கும் படி வேண்ட பட்டுள்ளது
நீர் தாங்கியில் காவல்துறை அதிகாரி சடலம்
நீர் தாங்கியில் காவல்துறை அதிகாரி சடலம்
இலங்கை காவல்துறையை சேர்ந்த அதிகாரி எஸ். இளங்கோவன், கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு
வழங்க படும் நீர் தாங்கியில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவர் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்ட பொழுது காணாமல் போயிருந்தார்
இந்த நிலையில் அந்த அ மருத்துவமனைக்கு வழங்க படும் நீரில் ஒருவித மணம் வீசுவதாக
தெரிவிக்க பட்ட நிலையில் ,அதனை சோதனை செய்த பொழுது சடலம் இருப்பது கண்டு பிடிக்க பட்டது
யாழ்ப்பாணத்தில் குழாய் நீர் பிரச்சினைக்கு தீர்வு
யாழ்ப்பாணத்தில் குழாய் நீர் பிரச்சினைக்கு தீர்வு
வடக்கு வாழ் மக்கள் கடந்த பல வருடங்களாக முகங்கொடுத்து வருகின்ற குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக கடல் நீரிலிருந்து பரிசுத்த குடிநீரினை பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டத்தினை
ஆரம்பித்தல் மற்றும் நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றதாக கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த அவர்கள் தெரிவித்தார்.
இதுவரை யாழ். மாவட்டத்தில் பொதுமக்களில் 14 சதவீதமானவர்களுக்கும், யாழ்ப்பாண நகரத்தில் 04 சதவீதமானவர்களுக்கும் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நீர் வழங்கல் முறைமைக்கு பதிலாக இவ்வேலைத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணத்தில் வாழும் அனைத்து பொதுமக்களுக்கும்
சுத்தமான குடிநீர் கிடைக்குமெனவும், நயினாதீவு உட்பட 03 தீவுகளில் வாழும் மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை மக்கள் மயப்படுத்தியமையினால் 3000 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ‘வடக்கில் தாகத்திற்கு முற்றுப்புள்ளி’ என்ற தலைப்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்டே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
நயினா தீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கடல் நீரினை சுத்தமான குடிநீராக மாற்றுவதற்காக ஒரு கியுபிக் மீட்டர் நீருக்கு, அதாவது 1000 லீட்டர் நீருக்கு 120 ரூபா நிதி
செலவாகின்றது. எனினும் அச்சுத்தமான நீரானது ஒரு கியுபிக் மீட்டரானது 10 ரூபாவுக்கே பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படுகின்றது.
எனினும் இரணைமடு குளத்திலிருந்து நீரினை பெற்று வடக்கு வாழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடிந்தால் இதனை விடவும் குறைந்த தொகைக்கு சுத்தமான நீரினை பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும். எனினும் அதற்கு பல்வேறு அரசியல் குழுக்கள் தடையாக
இருப்பதனால் கடல் நீரினை சுத்திகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால் அதற்கு அதிக தொகையினை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக ‘2025ல் அனைவருக்கும் குடிநீர்’ பெற்றுக் கொடுக்கும் கொள்கையின் மற்றுமொறு வேலைத்திட்டமொன்றாக வடக்கு வாழ் மக்களுக்காக சுத்தமான நீரினை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தினை
அறிமுகப்படுத்தலாம். இலங்கையில் சுத்தமான குடிநீரின்றி வாழும் 46.6 சதவீதமானவர்களுக்கு அடுத்து வரும் 03 வருடங்களிற்குள் சுத்தமான குடிநீர் பெற்றுக் கொடுக்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்காக நீர்வழங்கல் அமைச்சினால் சுத்தமான குடிநீர் தேவைக்கு தீர்வுகள் பெற்றுக் கொடுக்கும் நேர்த்தியான திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குடிநீர் தேவையினை பூர்த்தி செய்வதற்காக துரித தீர்வுகள், நடுத்தர தீர்வுகள் மற்றும் நீண்ட கால தீர்வுகள் என தீர்வுகளை
இனங்கண்டு தீர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. வட மத்திய மாகாணம் போன்ற நீரினால் பொதுமக்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு நனோ தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி சுத்தமான குடிநீரினை பெற்றுக் கொடுக்கும் திட்டம் துரித தீர்வாக செயற்படுத்தப்படுகின்றது.
நடுத்தர தீர்வாக பிரதேசங்களில் காணப்படுகின்ற நீர் ஊற்றுகள், நீர்தேக்கங்கள், கால்வாய்கள் மற்றும் ஆறுகளின் நீரினை சுத்திகரித்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றது. இவ்வனைத்து திட்டங்களும் வெற்றியடைவதற்காக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை, தேசிய சமூக நீர்
வழங்கல் திணைக்களம் மற்றும் நீர்வழங்கல் சபை ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்பும் நீர் வழங்கல் அமைச்சுக்கு கிடைப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும், பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரினை பெற்றுக்
கொடுக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சில ஊடக நிறுவனங்கள் இச்செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்களை திசைதிருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. எனினும் இனங்காணப்பட்ட 4332 சமூக நீர் சங்கங்களை ஒன்றிணைத்து அவர்களது
பிரதேசங்களில் காணப்படுகின்ற குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும் திட்டமொன்றும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்து வருகின்ற 03 வருடங்களிற்குள்
அனைத்து வகையான குடிநீர் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு 2025ம் ஆண்டில் அனைவருக்கும் குடிநீரினை பெற்றுக் கொடுப்பதற்கு எமது அமைச்சு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷhந்த தெரிவித்தார்.
இச்செய்தியாளர் சந்திப்பிற்குரிய காணொளிகளை கீழ்க்காணும் எiளாஅiவாய ஊடழரன இணைப்பினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.
பிக்கு மரணம் -கும்பிட்ட கோட்டா
பிக்கு மரணம் -கும்பிட்ட கோட்டா
காலஞ்சென்ற களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் கொழும்பு மற்றும் சிலாபம் மாவட்ட நீதிமன்றங்களின் சங்கசபைத் தலைவரும், பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின்
தலைவரும், அக்கமஹா பண்டிதர் கலாநிதி அதி. வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தேரரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவுக்கு இன்று (29) பிற்பகல் சென்ற ஜனாதிபதி அவர்கள், பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன்,
விஹாரையில் கல்வி பயிலும் தேரர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட நிர்வாக சபையினருக்கு, தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.
அதி. வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகளை, பூரண அரச அனுசரணையுடன் நடத்துமாறு, ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கியிருந்தார்.
ஜனாதிபதி அவர்கள், அந்த ஏற்பாடுகள் தொடர்பாகக் கேட்டறிந்ததுடன், இறுதிக் கிரியை ஏற்பாட்டுக்கு குழுத் தேரர்களுடன் கலந்துரையாடினார்.
ரஜினிகாந்த் விரைவில் பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டும் -கமல் ஹாசன்
ரஜினிகாந்த் விரைவில் பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டும் -கமல் ஹாசன்
ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.
இனிய நண்பர் ரஜினிகாந்த் விரைவில் பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டும் -கமல் ஹாசன்
ரஜினிகாந்த், கமல் ஹாசன்
நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக
ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் வேகமாக குணமடைந்து
வருவதாகவும், ஒருசில நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது.
ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் ரஜினிகாந்த்
விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாத்த’ பட வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அண்ணாத்த’ பட வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
‘அண்ணாத்த’ பட வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கியுள்ள
இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனிடையே, அண்ணாத்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை கோரி தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு
இருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாத்த திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சூர்யா கேட்டதும் பட தலைப்பை விட்டுக்கொடுத்த பா.இரஞ்சித்
சூர்யா கேட்டதும் பட தலைப்பை விட்டுக்கொடுத்த பா.இரஞ்சித்
சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகர் சூர்யா, பல்வேறு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டார்.
சூர்யா கேட்டதும் பட தலைப்பை விட்டுக்கொடுத்த பா.இரஞ்சித்
பா.இரஞ்சித், சூர்யா
நடிகர் சூர்யாவின் 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில்
பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், நேற்று சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகர் சூர்யா, ஜெய் பீம் பட தலைப்பு குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.
ஜெய் பீம் படத்தின் போஸ்டர்
அவர் கூறியதாவது: “ஜெய் பீம் படத்தின் தலைப்பின் உரிமையை முதலில் இயக்குனர் பா.இரஞ்சித் வைத்திருந்தார். அவரிடம் சென்று கேட்டபோது, எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல், ‘ஜெய் பீம்’
எல்லோருக்கும் சொந்தமானது, தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் என பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்தார். அவருக்கு நன்றி” என சூர்யா தெரிவித்துள்ளார்.
கவிழ்ந்த பயணிகள் பேரூந்து – பலர் காயம் – சாரதி கைது
கவிழ்ந்த பயணிகள் பேரூந்து – பலர் காயம் – சாரதி கைது
மாத்தளையில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று களுபாலத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பேருந்து வீதியை விட்டு விலக வயல் நிலம் ஒன்றில் குடைசாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பேருந்தில் 35 பேர் இருந்ததாகவும் அவர்களில் 14 பேர் காயங்களுக்கு உள்ளாகி மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு காயமடைந்தவர்களுள் 3 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு
அரசியல் பழிவாங்கல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக
சீனா அதிரடி: மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலுக்குள் சேர்த்தது.
சீனா அதிரடி: மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலுக்குள் சேர்த்தது.
இலங்கை மக்கள் வங்கியை சீனா கறுப்புப் பட்டியலுக்கு சீனா சேர்த்துவிட்டுள்ளது.
கடன் கடிதம் மற்றும் இரு தரப்பிற்கு இடையிலான உடன்படிக்கைகளின் பிரகாரம், பணம்
செலுத்த தவறியதை அடுத்து, இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக
அலுவலகத்தினால் கறுப்பு பட்டியலில் மக்கள் வங்கி, இணைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த தீர்மானம், வர்த்தக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண விவசாய அறுவடைகளை தென்பகுதிக்குக் கொண்டு செல்ல விஷேட ரெயில்
வடமாகாண விவசாய அறுவடைகளை தென்பகுதிக்குக் கொண்டு செல்ல விஷேட ரெயில்
வடமாகாணத்தில் சேதனப் பசளை பயன்பாட்டின் மூலம் உற்பத்தி செய்யப்படும் விவசாய
அறுவடை, மீன் மற்றும் கருவாடு போன்றவற்றை தென்பகுதிக்குக் கொண்டு செல்வதற்காக விஷேட ரெயில் ஒன்றை ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிற்கும் ரெயில்வே பொது முகாமையாளருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
வடமாகாணத்தில் மீனவர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கவனம் செலுத்தியிருப்பதாக மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் சகல துறைகளையும் இலக்காகக் கொண்டு அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்.
மாகாண மக்கள் புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கான பின்புலம் ஏற்படுத்தப்படுமென்றும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
வறிய மக்களுக்கு ஆடுகள் வழங்கிய கனடா தமிழர்கள்
வறிய மக்களுக்கு ஆடுகள் வழங்கிய கனடா தமிழர்கள்
கனடாவில் வாழ்ந்து அமரத்துவம் அடைந்த மரியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்களின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு “கனடா வாழவைப்போம்” அமைப்பினால் வாதரவத்தை
அக்காச்சி குடியிருப்பில் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் ஆடு
வளர்ப்பிற்காக ஆடுகள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சுரேன் கௌரவ உபதவிசாளர் மு.கயன் அதிபர்களான திரு பத்மதாசன் , திரு கோகுலன்
மற்றும் வட்டார கௌரவ உறுப்பினர் இரத்தினசிங்கம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின்
கௌரவ உறுப்பினர் ரமேஷ் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டன











