Author: நலன் விரும்பி
ரசியா சாராயங்கள் கனடாவில் விற்க தடை – வோட்கா போச்சே
ரசியா சாராயங்கள் கனடாவில் விற்க தடை – வோட்கா போச்சே
உக்கிரேன் மீது ரசியா போரை தொடுத்துள்ள நிலையில் கனடாவின் ஒன்ராறியோ உள்ளிட்ட மாநிலங்களில் ரசியாவின் சாராயங்கள் விற்க தடை விதிக்க பட்டுள்ளது
மிக புகழ் பெற்றதும் அதிக மக்கள் பாவனையில் உள்ள வோட்கா இன்றி குடி மகன்கள் அவதியுற்று வருகின்றனர்
ரசியாவின் பொருளாதாரத்தில் பெரும் அடியை வழங்கும் முகமாக இந்த நகர்வுகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன
போர் ஒன்றை ஆரம்பித்த ரசியா இவ்வாறான சம்பவங்களை எதிர் பார்க்காது
தொடுக்குமா என்பதும் ,இவ்விதம் பொருளாதர தடைகள் தொடர்ந்தால் இராணுவ
படையெடுப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக ரசியாவுக்கு மாற்றம் பெறலாம் என்பதே திண்ணம்
இலங்கை ரஷியா தூதரத்திற்கு முன் உக்கிரேனியர்கள் போராட்டம்
இலங்கை ரஷியா தூதரத்திற்கு முன் உக்கிரேனியர்கள் போராட்டம்
இலங்கையில் உள்ள ரசியா தூதரகம் முன்பாக உக்கிரேனியர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்
ரசியா மக்கள் போரை விரும்பவில்லை எனவும் புட்டீன் இந்த போர் வெறியில் உள்ளதாக ஆர்ப்பாட்ட காரர்கள் தெரிவித்தனர்
மேலும் உடனடியாக போரினை நிறுத்தும் படி கண்ணீர் மல்க அவர்கள் முழக்கம் இட்டனர்
ரசியா வான் பறப்பிற்கு மேலாக பிரிட்டன் விமானங்கள் பறக்க தடை
ரசியா வான் பறப்பிற்கு மேலாக பிரிட்டன் விமானங்கள் பறக்க தடை
ரஷியா உக்கிரேன் மீதான இராணுவ நகர்வை ஆரம்பித்த நிலையில் பிரிட்டன் ரசியாவின் முக்கிய வங்கிகள் மற்றும் அதன் சொத்துக்களை முடக்கியது ,அந்த
வங்கியால் செயல் பாடாமை அதன் சொத்துக்களை முடக்கியதன் எதிரொலியாக ரசியா தமது வான் பரப்பின் எல்லை அருகில் பிரிட்டன் விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது
அத்து மீறி பறப்பில் ஈடுபட்டால் அவற்றை சுட்டு வீழ்த்தவோ அல்லது சிறை பிடிக்கவோ
முடியும் ,இரு நாடுகளுக்கு இடையில் மேற்படி சம்பவம் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
இந்த தடையினை அடுத்து பிரிட்டன் விமானங்கள் அதன் பயண பாதையினை மாற்றி
செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது ,இதனால் விமான டிக்கட் விலைகள் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
கவர்ச்சி உடையில் ராய் லட்சுமி
கவர்ச்சி உடையில் ராய் லட்சுமி
நடிகை ராய் லட்சுமி சிவப்பு நிற கவர்ச்சி உடையில் கலக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சிவப்பு நிற கவர்ச்சி உடையில் ராய் லட்சுமி.. இணையத்தை கலக்கும் புகைப்படம்
ராய் லட்சுமி
தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.
அதன்பிறகு ‘கற்க கசடற’, ‘குண்டக்க மண்டக்க’, ‘தர்மபுரி’, ‘வெள்ளித்திரை’, ‘மங்காத்த’, ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார்.
படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவினார். இந்தியில் ராய் லட்சுமி முதன்முதலில் நடித்த ‘ஜூலி 2’ திரைப்படம் தோல்வியை சந்தித்திருந்தது. இவர்
நடிப்பில் கடைசியாக தமிழில் சிண்ட்ரெல்லா திரைப்படம் வெளியானது. அவ்வப்போது பல போட்டோஷூட்டுகளை எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
தற்போது சிவப்பு நிற கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
நீச்சல் உடையில் கலக்கும் பூனம் பாஜ்வா
நீச்சல் உடையில் கலக்கும் பூனம் பாஜ்வா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
நீச்சல் உடையில் கலக்கும் பூனம் பாஜ்வா – குவியும் லைக்குகள்
பூனம் பாஜ்வா
‘சேவல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இதைத்தொடர்ந்து ஜீவாவின் ‘தெனவாட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ படங்களில் நடித்த இவர்
, சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 2’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
பின்னர் சுந்தர்.சி-யுடன் ‘முத்தின கத்திரிக்கா’ படத்தில் நடித்தார். அதுக்கு அடுத்தப்படியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில்
நடித்து வந்தார். படவாய்ப்பு குறைந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பூனம்
பாஜ்வா. வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.
உக்கிரேன் தலைநகர் அருகில் வெடிக்கும் குண்டுகள் – நெருங்கும் ரசியா இராணுவம்
உக்கிரேன் தலைநகர் அருகில் வெடிக்கும் குண்டுகள் – நெருங்கும் ரசியா இராணுவம்
உக்கிரேன் தலைநகரை நோக்கிய ரசிய படைகள் வேகமாக முன்னேறிய வண்ணம் உள்ளன ,ஏவுகணைகளினால் அந்த பகுதி நிறைந்த வண்ணம் உள்ளது
தலைநகரை ஆக்கிரமித்தால் உகிரேனை தமது கடடு பாட்டுக்குள் வீழ்ச்சியுற வைக்க முடியும் என்பது ரசியா இராணுவத்தின் திட்டமிடல்களில் ஒன்று
அதனை மைய படுத்தியே இந்த அதிரடி தாக்குதல்களை ரசிய இராணுவத்தின் விசேட படைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
பெரும் பேரழிவுகளை குறித்த பகுதி சந்தித்துள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
மேலும் ரசிய போர் விமானங்கள் தலைநகர் மேலால் பறந்த வண்ணம் உள்ளது
உக்கிரேனில் தொடரும் மோதல் – 100.ஆயிரம் மக்கள் இடபெயர்வு
உக்கிரேனில் தொடரும் மோதல் – 100.ஆயிரம் மக்கள் இடபெயர்வு
உக்கிரேனில் ரசியா இராணுவத்தினர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ள
நிலையில் சுமார் ஒருலட்சம் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்
அயல் நாடுகளில் இந்த மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர் ,தொடர்ந்து பெரும் பதட்டம்
இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,உக்கிரேன் முழுவதும் ரசியா இராணுவத்தின் வசம் விரைவில் வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்க படுகிறது
உக்கிரேன் அணுஉலை தளத்தை மீட்ட ரஷியா – தொடரும் மோதல்
உக்கிரேன் அணுஉலை தளத்தை மீட்ட ரஷியா – தொடரும் மோதல்
ரசியா இராணுவத்தினர் உக்கிரேனுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்திய வண்ணம்
உள்ளனர் ,.இதில் உக்கிரேனின் முக்கிய அணு உலை கூடத்தை கைப்பற்றியுள்ளனர்
தொடர்ந்து முக்கிய நகரங்களை மீட்கும் பணியில் , ரசிய படைகள் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
மக்களுக்கு பாதிப்பு இல்லாத வண்ணம் தமது இராணுவ நடவடிக்கை தொடர்வதாக ரசியா இராணுவம்
தெரிவித்துள்ளது
எரிபொருள் தட்டுப்பாடு- மரக்கறிகள் அழுகின
எரிபொருள் தட்டுப்பாடு- மரக்கறிகள் அழுகின
எரிபொருள் நெருக்கடி காரணமாக நுவரெலியாவில் மரக்கறி போக்குவரத்து
தடைப்பட்டுள்ளதாக அகில இலங்கை கூட்டு விசேட பொருளாதார மத்திய
நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக வியாபாரிகள் நுவரெலியாவுக்கு
வராத காரணத்தினால் சில மரக்கறிகள் பாவனைக்கு தகுதியற்றதாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்கு
- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது
- லெபனானின் அரப் சலீம் நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி
- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP
- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்
பசிலின் இந்தியா பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
பசிலின் இந்தியா பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்தியாவுக்கான விஜயம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள், மருந்துகளை கொள்முதல் செய்ய, ஒரு பில்லியன்
அமெரிக்க டொலர் கடனை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்காக பசில் ராஜபக்ச இன்று இந்தியாவிற்கு செல்லவிருந்தார்.
எனினும், பசில் ராஜபக்சவின் இந்த பயணம் கடைசி நேரத்தில் பிற்போடப்பட்டுள்ளது
கிளிநொச்சி – பளையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் மரணம்
கிளிநொச்சி – பளையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் மரணம்
.கிளிநொச்சி – பளை A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
முல்லையடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர், வீதியில் மாடு குறுக்கே சென்றதால் மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகினார்.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
ரஷியா விமானம் சுட்டு வீழ்த்தல் – தொடரும் போர்
ரஷியா விமானம் சுட்டு வீழ்த்தல் – தொடரும் போர்
உக்ரேன் தலைநகர் கீவில் உள்ள டார்னிட்ஸ்கி மாவட்டத்தில் ரஷ்ய ஜெட் விமானம்
ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக, உக்ரேன் உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உக்ரேன் தலைநகர் கீவில் இன்று அதிகாலையில் இரு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக
செய்தி வெளியானது. இந்தநிலையில், ரஷ்ய ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, உறுதிபடுத்தப்படாத செய்தி வெளியாகியுள்ளது.
இச்செய்தி தொடர்பாக தீ மற்றும் கரும்புகை வெளியேறும் புகைப்படம் ஒன்றை, என்டிஏ எனும், யுக்ரேனிய தொலைக்காட்சி சேனல் வெளியிட்டுள்ளது
உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகளுக்கான அவசர வேண்டுதல்
உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகளுக்கான அவசர வேண்டுதல்
உக்ரேனில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, உக்ரேனில் எஞ்சியுள்ள இலங்கைப் பிரஜைகளைப் பாதுகாப்பாக ஒருங்கிணைப்பதற்கு உரிய
நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிய்வ்க்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வெளிநாட்டு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகள் இது தொடர்பாக அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நிறுவப்பட்டுள்ள 24×7 அவசர தொலைபேசி இலக்கமான +90
534 456 94 98, நிலையான தொலைபேசி இலக்கமான +90 312 427 10 32 மற்றும் மின்னஞ்சல் முகவரியான slemb.ankara@mfa.gov.lk ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
வெளிநாட்டு அமைச்சு
இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்று
இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்று
காதார சேவைகள் பணிமனையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
மீண்டும் கொவிட் தொற்றுப்பரம்பல் எமது நாட்டில் அதிகமாகி
கொவிட் 19 தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் கிழக்கு மாகாண சுகாதாரத்துறையினர் பாரிய பங்களிப்புக்களை இரவு பகல் பாராது வழங்கி செயற்பட்டு வருகின்றனர். இதனால் ஏனைய மாகாணங்களைவிட எமது மாகாணம் சிறந்து விளங்கியதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதன் தெரிவித்தார்.
மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடல் இன்று (23) திருகோணமலை மாகாணப் பணிமையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் தடுப்பு மருந்துளை பொதுமக்களு க்கு வழங்கும் செயற்பாட்டிலும் எமது மாகாணமே சிறந்து விளங்குவதாகுவும், ஏனை நாடுகளைவிட எமது நாட்டலுள்ள மக்கள் இத்தடுப்பு மருந்துகளை பெற்றுக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மீண்டும் கொவிட் தொற்றுப் பரம்பல் எமது நாட்டில் அதிகமாகி வருவதை நாம் அறிவோம். இதை முற்று முழுதாக ஒழிப்பதற்கான செயற்திட்டங்களையும், அதற்கான வழிவகைகளையும் முன்னெடுத்துச் செல்வதன் மூலம் ஆட்கொள்ளி நோயான கொரோனா நோயை எமது மாகாணத்தில் மாத்திரமல்லாமல் எமது நாட்டிலிருந்து விரட்டியடிக்க ஒருமித்து செயற்படுவோம் என்றார்.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சகாதார சேவைகள் பணிமனையில் நிலவுகின்ற குறைபாடுகள் குறித்தும் அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதன் கேட்டறிந்துகொண்டார். இதில் வைத்தியர்கள், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், சு
நில நடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பு இல்லை
நில நடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பு இல்லை
இந்தோனேசியாவின் கரையோர வலையத்துக்கு அருகாமையில் இன்று (25) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது 6.2 ரிக்டர் அளவை கொண்டதாக பதிவாகியுள்ளது.
இந்த நில நடுக்கத்தின் அதிர்வு சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உணரப்பட்டுள்ளது.
இந்த நில நடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கொழும்பு பங்குச் சந்தை இடை நிறுத்தம்
கொழும்பு பங்குச் இடை நிறுத்தம்
கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த வர்த்தகம் இன்று காலை 11.17 மணியளவில் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.
S&P SL20 சுட்டெண் முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் 5%க்கும் அதிகமாக சரிந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 423.28 புள்ளிகளும், S&P SL20 சுட்டெண் 208.96 புள்ளிகளும் குறைந்தன
யாழில் நகைகள் திருட்டு
யாழில் நகைகள் திருட்டு
கடந்த டிசம்பர் மாதம் முல்லைத்தீவு நகர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இரவு நேரத்தில் 20 பவுண் நகை
கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சாவகச்சேரி, நெல்லியடி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த மூவர் குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 17 பவுண் நகையும் மீட்கப்பட்டுள்ளதாகவும்
கொடுத்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளோர் என
யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்
இரு பஸ்கள் மோதி விபத்து- 23 பேர் காயம்
இரு பஸ்கள் மோதி விபத்து; 23 பேர் காயம்
ஹொரணை – கொழும்பு பிரதான வீதியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸூம், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இதில் 23 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களில் ஆண்கள் மூவர் அடங்குவதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பயணித்த யாருக்கும்
காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த இருவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனையவர்கள் வேதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்,
ஹொரணையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின், பின்புறம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் ஆடைத் தொழிற்சாலை பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன
கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, கட்டுவான் பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார், அங்கிருந்த ஒருவரை கைது செய்ததுடன்,
ஆயிரம் லீட்டர் கோடா மற்றும் 20 லீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் என்பவற்றை மீட்டுள்ளனர்.
தெல்லிப்பளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய
தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தை பொலிஸாருடன் இணைந்து நேற்று (22) முற்றுகையிட்டனர்.
கைது செய்யப்பட்ட நபரை, தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், மீட்கப்பட்ட பொருள்களை சான்று
பொருள்களாக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்
மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அறிவிப்பு
மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அறிவிப்பு
டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக 2,800 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்ததாகவும், நான்கு பேர் டெங்கு நோயினால் மரணமடைந்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டின் மாசி மாதம் வரையான காலப்பகுதியில் 75 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மட்டக்களப்பு நகரப்பகுதியில் அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனை மாவட்டத்தில் இருந்து முற்றாக ஒழிப்பதாயின் உள்ளூராட்சி மன்றங்கள், நிறுவனங்கள் மற்றும் கிராமிய சங்கங்களின் ஒத்துழைப்பு சுகாதார துறைக்கு மிகவும் அவசியமாக இருப்பதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்







