Posted in இலங்கை செய்திகள்

இலங்கை உதைபந்தாட்ட வீரர் – மர்ம மரணம்

இலங்கை உதைபந்தாட்ட வீரர் – மர்ம மரணம்

இலங்கையோ உதைபந்தாட்ட வீரரான டக்சன் புஸ்லாஸ் அவரது வீட்டில் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்

இவரது மர்ம மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

இதுவரை இவரது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை

    Posted in Uncategorized

    அடி காயங்களுடன் இறந்த நிலையில் புலி மீட்பு

    அடி காயங்களுடன் இறந்த நிலையில் புலி மீட்பு

    இலங்கை Norton Bridge. தேயிலை தோட்ட பகுதியில் அடிகாயங்களுடன் பாதிக்க பட்டு இறந்த நிலையில் புலியின் சடலம் ஒன்று மீட்க பட்டுளள்து


    குறித்த புலியின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    Posted in இலங்கை செய்திகள்

    எட்டு தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது

    எட்டு தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது

    இலங்கை தலை மன்னார் கடல்பகுதியில் அத்துமீறி மீன்படியில் ஈடுபட்டனர் என்ற

    குற்ற சாட்டில் தமிழகத்தை சேர்ந்த


    எட்டு மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்துள்ளது

    இவர்கள் வைத்திருந்த மீன்களையும் இராணுவம் சுருட்டி சென்றுள்ளது

      Posted in Uncategorized

      காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு -1,084 பேர் கைது

      காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு -1,084 பேர் கைது

      இலங்கை காவல்துறையினர் மேல் மாகாணத்தில் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் பொழுது
      1,084 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

      இவர்களில் நீதிமன்றினால் தேடப்பட்டு வந்து 556 பேரும் குற்ற செயல்களில் ஈடுபட்ட 352 பேரும் உள்ளடங்குவர் என தெரிவிக்க பட்டுள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      மலையக பல்கலைகழக மாணவர்களுக்கான இலவச மடிக்கணணி

      மலையக பல்கலைகழக மாணவர்களுக்கான இலவச மடிக்கணணி

      “கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற தொனிபொருளில் புஸ்ஸல்லாவ குளோபல் நிறுவனத்தினால் 20.02.2022 ஆரம்பிக்கப்பட்ட செயற்திட்டதின் ஊடாக மலையகத்தில் இருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு மடிக்கணணி வழங்குதலில்

      முதல் கணணியினை புஸ்ஸல்லாவ சரஸ்வதி தேசிய கல்லூரியில் 2017 கலை பிரிவில் கல்வி பயின்று கிழக்கு பல்கலைகழகத்தில் “கல்வியியல் சிறப்பு கற்கைநெறிக்கு” தெரிவாகி கல்வி பயிலும் பட்டப்பயில் மாணவி பெருந்தோட்ட தொழிலாழியின்

      பி;ள்ளை விஜயன் கௌசல்யா அவர்களுக்கு அதன் ஏற்பாட்டாளர் ஊடகவியளாளர் பா.திருஞானம் அவர்களினால் இன்று (27) வழங்கி வைக்கபட்டுள்ளது.

      இந்த செயற்திட்டத்திற்கு மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் உப செயலாளர் பி.சிறிகாந் அவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு செட்டியார் தெருவை சேர்ந்த வர்த்தகர்

      எஸ்.சுரேஷ் அவர்கள் ஒரு கணணியையும் பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர் ஒருவர் ஒரு கணணியையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள்.

      இந்த இரு கணணிகளில் ஒரு கணணி மேற்படி மாணவிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் மற்றயது புஸ்ஸல்லாவை இலக்கம் 460/8/1 அமைந்துள்ள குளோபல் நிறுவனத்தில் பல்கலைகழக மாணவர்கள் பாவிக்க கூடிய வகையில் பிரின்டர் உட்பட இன்டர்நெட்

      வசதியடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனை பல்கலைகழக மாணவர்கள் இலவசமாக நேரில் வந்து விடுமுறை காலங்களில் பாவிக்கலாம்.

      மேலும் இந்த செயற்திட்டத்தில் இணைந்து மலையக பல்கலைகழக மாணவர்களுக்கு மடிக்கணணிகளை வழங்கி உதவ கூடியவர்கள் எம்முடன் இணையுமாறு கேட்டுக் கொள்ளபடுவதோடு. மடிக்கணிகள் தேவையான மலையகத்தை சேர்ந்த பல்கலைகழக

      பெருந்தோட்ட பட்டப்பயில் மாணவர்கள் “குளோபல்” இல 460/8/1 நுவரெலியா வீதி புஸ்ஸல்லாவ என்ற விலாசத்திற்கு எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன்

      கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். எமக்கு கணணிகள் கிடைப்பதற்கு ஏற்பவும் மாணவர்களின் பாட அவசியப்பாட்டுக்கு அமைய வழங்கப்படும்.

      குறிப்பாக மலையத்தில் இருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ள பட்டப்பயில் மாணவர்களில் பலர் பொருளாதா சிக்கல்கள் காரணமாக பலர் தங்கள் கல்வியினை இடை நிருத்தி வருகின்றனர். மலையகத்தின் சனத்தொகைக்கு ஏற்ப 1750 மாணவர்கள்

      பல்கலைகழகங்களுக்கு தெரிவு செய்யப்பட வேண்டும். இருந்தும் தற்போது சுமார் 450 மாணவர்களே தெரிவு செய்யப்படுகின்றார்கள். இவர்களிலும் பொருளாதார பிரச்சனை காரணமாக யாரும் இடை விலகள் ஏற்பட கூடாது என்பதற்காக இந்த “கல்விக்கு கரம் கொடுப்போம்” செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

        Posted in Uncategorized

        ரசிய மீது ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளும் வங்கி முடக்க தடை

        ரசிய மீது ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளும் வங்கி முடக்க தடை

        உக்கிரேன் மீது ரசியா போரினை ஆரம்பித்துள்ள நிலையில் ஐரோப்பா மற்றும் உலக

        நாடுகள் இணைந்து அதன் பண பரிவர்த்தகத்தை முடக்கும் நடவடிக்கையா மேற்கொண்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளன

        இதனால் ரசியாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்த பட்டுள்ளதாக லண்டன் ,அமெரிக்கா உள்ளிட்ட கூட்டு நாடுகள் இணைந்து கருது தெரிவித்துள்ளன

        இந்த தடைகளை அடுத்து வெஸ்டன் நாடுகளுக்கு ரசியா எச்சரிக்கை விடுத்துள்ளது

        ,இந்த செயல் பாடானது ரசியாவை வலிந்து போருக்கு இழுக்கும் செயல் பாடுகளின் மூலோபாயம் என கணிக்கலாம்

        அப்டி என்றால் ஐரோப்பா மீது ரசியா போரை தொடுக்கும் நிலை ஏற்பட போகிறது அதற்கான ஆரம்பம் இதுவாக நோக்கலாம்

        அதற்கு உக்கிரேனில் ரசிய தனது இராணுவ நடவடிக்கை மூலம் சொல்ல போகும் செய்தியை அடுத்தே ஐரோப்பா கதி கலங்கும் என அடித்து கூறலாம்

        உக்கிரேன் வீழும் வரை காத்திருக்க வேண்டியது நமது பொறுப்பாகும்

          Posted in Uncategorized

          லண்டனில் Uber Eats and Just Eat சாரதிகள் பணிபுறக்கணிப்பு போராட்டம்

          லண்டனில் Uber Eats and Just Eat சாரதிகள் பணிபுறக்கணிப்பு போராட்டம்

          லண்டனில் மிக பெரும் நிறுவனங்களாக உள்ள Uber Eats and Just Eat சாரதிகளுக்கு

          குறைந்த ஊதியம் வழங்குவதாகவும் அதனை அதிகரிக்க கோரி போராட்டம் இடம்பெற்றுள்ளது

          ஊபர் நிறுவனம் குறைந்த வருமானத்தை வழங்குவதாக கூறி நீதிமன்றில் வழக்கு

          தொடர பட்டது ,அதன் பின்னர் சாரதிகளுக்கு ஊதியம் அதிகரிக்க படுவதாக தெரிவிக்க பட்ட நிலையில் அவை தொடர்ந்து குறைக்க பட்டு வருவதாக சாரதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்

          இதுவே அவர்களுக்கு பெரும் நெருக்கடியை இப்பொழுது தருவித்துள்ளது

          இந்த போராட்டமானது Sainsbury’s car park in Park Farm Road, Folkestone பகுதியில் இடம்பெற்றுள்ளது

            Posted in Uncategorized

            லண்டனில் நிர்வாணமாக மிதிவண்டி ஒட்டிய வெள்ளையர்கள்

            லண்டனில் நிர்வாணமாக மிதிவண்டி ஒட்டிய வெள்ளையர்கள்

            லண்டன் Folkestone பகுதியில் நிர்வாணமாக வெள்ளையர்கள் மிதிவண்டி பயணத்தை மேற்கொண்டனர்

            உலக நிர்வாண ஊர்வலமாக இது தெரிவிக்க பட்டுள்ளது ,


            இப்படியும் வினோதமான முறையில் இவர்கள் போராட்டம் நடாத்தியுள்ளமை வியக்க வைக்கிறது

            Posted in Uncategorized

            சுட்டு வீழ்த்தப்பட்ட உளவு விமானம்

            சுட்டு வீழ்த்தப்பட்ட உளவு விமானம்

            ஏமன் நாட்டு கவுதிய படைகளின் உளவு விமானம் ஒன்று சவுதிக்கு அண்மையில் பறந்து

            கொண்டிருந்த பொழுது அந்த விமானத்தை சவுதிய இராணுவத்தினர் சுட்டு

            வீழ்த்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

            கவுதிய படைகளிற்கும் சவுதிக்கு இடையில் பலத்த மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            உக்கிரேனில் இருந்து ரோமேனியாவுக்குள் தப்பி ஓடிய இந்தியர்கள்

            உக்கிரேனில் இருந்து ரோமேனியாவுக்குள் தப்பி ஓடிய இந்தியர்கள்

            உக்கிரேன் மீது ரசியா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில்
            கீவ் நகரில் தங்கி இருந்த பல்நாட்டு மக்கள் தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர்

            இவ்விதம் பிரிட்டனை சேர்ந்த ஆயிரம் பேர் ரொமேனியாவுக்குள் எட்டு கிலோ மீட்டர் நடந்து சென்று எல்லையை கடந்து நுளைந்துள்ளனர்

            இவர்களில் அதிகமானவர்கள் இந்திய ,இலங்கை மற்றும் ஆசிய நாட்டவர்கள் என்பது இங்கே குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              உக்கிரேன் ரசியாவிடம் விழும் நிலை – அதிபர் சிறை பிடிக்க படலாம்

              உக்கிரேன் ரசியாவிடம் விழும் நிலை – அதிபர் சிறை பிடிக்க படலாம்

              உக்கிரேன் நாட்டின் மீது ரசியா படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

              ,தற்போது ஏவுகணைகள் கீவ் நகர் மீது வீழ்ந்து வெடித்த வண்ணம் உள்ளது ,எங்கும் பெரும் குண்டு சத்தங்களினால் அதிர்ந்த வண்ணம் உள்ளது

              உக்கிரேன் அதிபர் தப்பி ஓடவோ ,அல்லது சிறை பிடிக்கப்படவோ ,தற்கொலை

              செய்துகொள்ளும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,அத்துடன் இராணுவம் ரசியாவிடம் சரண் அடையும் நிலை இடம்பெற போகிறது

              தலைநகர் கட்டு பாட்டை இழந்து வருகிறது ,சில மணி நேரத்தில் ரசியா இராணுவ போர் முற்று பெறும் என நம்பலாம்

              இவ்விதம் நிகழ்வுகள் இடம்பெற்றால் புட்டீன் ஐரோப்பாவுக்கு விடுத்த முலாவது இராணுவ எச்சரிக்கை என்பதும் ,இதன் பின்னால் பல அதிரடி மாற்றங்கள் நிகழ கூடும் என்பது நமது கணிப்பு

                Posted in இலங்கை செய்திகள்

                மனைவி இறந்த துயரில் கணவனும் மரணம்

                மனைவி இறந்த துயரில் கணவனும் மரணம்

                மனைவி இறந்து 18வது நாள் அவரது கணவரும் உயிரிழந்த விடயமானது அந்த குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் மிகுந்த சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

                இச்சம்பவமானது நேற்றிரவு (25) அராலி மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

                இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

                செல்வரத்தினம் பரமேஸ்வரி என்பவர் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ்.

                போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2022.02.07 அன்று உயிரிழந்தார்.

                பின்னர் நேற்றைய தினம் சிறந்த உடல் ஆரோக்கியத்தோடு இருந்த அவரது கணவர், மகளிடம் உணவு வாங்கி சாப்பிட்டு விட்டு கதிரையில் உட்கார்ந்திருந்தவாறு உயிரிழந்துள்ளார்.

                சிற்றம்பலம் செல்வரத்தினம் என்பவரே நேற்றையதினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

                திடீர் திடீரென ஏற்பட்ட இவ் இரண்டு மரணங்களும் அக் குடும்பத்தையும் அப்பகுதி மக்களையும் மீளா துயருக்குள் தள்ளியுள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  பெண் போல் மிமிக்கிரி செய்து பண மோசடி

                  பெண் போல் மிமிக்கிரி செய்து பண மோசடி

                  அக்கரைப்பற்று இளைஞன் ஒருவனிடம் தனது குரலால் பெண்கள் போல மிமிக்கிரி குரலில் பேசி காதலிப்பது போல நடித்து பணமோசடியில் ஈடுபட்ட மட்டக்களப்பு ஆயித்தியமலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

                  நேற்று முன்தினம் (24) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.

                  ஆயித்தியமலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் முகநூல் பக்கத்தில் இருந்த அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனின் மெசேஞ்சர் ஊடாக உரையாடி அவரது தொலைபேசி இலக்கத்தை குறித்த இளைஞன் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பெற்றுக் கொண்டுள்ளான்.

                  இதனை தொடர்ந்து அக்கரைப்பற்றைச் சேர்ந்த இளைஞனுடன் தொடர்ந்து உரையாடிவந்த நிலையில் குறித்த இளைஞன் திருமணம் முடிக்கவில்லை என தெரிந்து கொண்ட நிலையில் தனது பெரியம்மாவின் மகள் இருப்பதாகவும் அவளுக்கு திருமணம் பேசிவருவதாக குறித்த இளைஞனுக்கு தெரிவித்து பின்னர் முகநூல் பக்கங்களில் இருக்கும் ஒரு அழகான பெண் ஒருவரின் படத்தை அனுப்பி இது தான் எனது பெரியம்மாவின் மகள் என தெரிவித்துள்ளான்.

                  குறித்த இளைஞனும் அழகான பெண் படத்தை பார்த்ததும் அவனுக்கு அந்த பெண் மீது ஆசை ஏற்பட்டதை கண்டு கொண்ட ஆயித்தியமலை இளைஞன் வேறு தொபேசி இலக்கத்தில் இருந்து அந்த பெண் கதைப்பது போல மிமிக்கிரி குரலில் குறித்த இளைஞனுடன் கதைத்து வந்ததுடன் பெண்னின் தாயார் எனவும் மிமிக்கிரி குரலில் கதைத்து வந்துள்ளதுடன் தொலைபேசிக்கு ரீலோட் செய்யுமாறு கூறி அடிக்கடி அவனிடம் இருந்து பணத்தையும் வாங்கி வந்துள்ளான்.

                  இந்த நிலையில் கொழும்பில் மேசன் தொழில் ஈடுபட்டுவரும் அக்கரைப்பற்று இளைஞனுக்கு அந்த பெண் மீது காதல் ஏற்பட்டதையடுத்து அவளை திருமணம் முடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் இருவரும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

                  பெரியம்மாவின் மகளுக்கு சீதனமாக வீடு பணம் தருவதாகவும் அவர்கள் பணக்காரர் எனவும் பொய்களை கூறி வந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் மாப்பிளையை பார்ப்பதற்கு அக்கரைப்பற்றுக்கு வருவதற்கான திகதியை தீர்மானித்தனர்.

                  திகதி தீர்மானிக்கப்பட்டதையடுத்து மாப்பிள்ளை வீட்டினர் தமது வீட்டிற்கு வர்ணம் தீட்டி மற்றும் பெண் பகுதியினர் வரும்போது அவர்களுக்கான உணவு வழங்க பல ஆயிரம் ரூபா செலவு செய்து உணவு ஏற்பாடுகள் செய்து தீர்மானிக்கப்பட்ட திகதியில் காத்திருந்தனர்.

                  நேரம் பகல் 12 மணியை தாண்டியும் பெண் வீட்டாரை காணாததால் குறித்த ஆயித்தியமலை இளைஞனுக்கு தோலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது, மாப்பிளை பார்ப்பதற்கு வேன் ஒன்றில் வெளியேறிய போது வீட்டின் வாசலில் பூனை குறுக்கால் போனது சகுணம் சரியில்லை அதனால் வரவில்லை என தெரிவித்து வேறு ஒரு தினத்தில் வருவதாக தெரிவித்துள்ளான்.

                  இதனை தொடர்ந்து மாப்பிளையை பார்ப்பதற்கு வருவதற்கு பல சாக்கு போக்குகளை தெரிவித்து வந்துள்ள நிலையில் பெண்னை பார்ப்பதற்கு பெண் வீட்டிற்கு தாங்கள் வருவதாக அக்கரைப்பற்று இளைஞன் தெரிவித்து அதற்கான திகதியான கடந்த 23ம் திகதி தீர்மானிக்கப்பட்டு அன்று பெண்ணை பார்ப்பதற்கு மாப்பிளை வீட்டினர் வான் ஒன்றை வாடைகைக்கு பெற்றுக் கொண்டு காலையில் மட்டக்களப்பை நோக்கி பிரயாணித்தனர்.

                  கல்முனையில் வைத்து ஆயித்தியமலை இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய போது அந்த தொலைபேசி நிறுத்தப்பட்டிருந்தது.

                  பலமுறை முயற்சித்தும் அவ்வாறு அழைப்பு வந்துள்ளதையடுத்து பெண்ணின் விலாசம் தெரியாது என்ன செய்வது என தெரியாது நீண்ட நேரம் கல்முனையில் காத்துநின்றுவிட்டு அங்கிருந்து அக்கரைப்பற்று மாப்பிளை வீட்டினர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

                  இதன்பின்னர் அன்று மாலை அக்கரைப்பற்று இளைஞனுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி கொண்ட ஆயித்தியமலை இளைஞன் மன்னிக்கவும் தொலைபேசியின் பற்றி சார்ச் இல்லாததால் தொலைபேசி தானகாக நின்றுவிட்டது. நான் உங்கள் வீட்டிற்கு வருகின்றேன் என தெரிவித்து மட்டக்களப்பில் இருந்து பஸ்வண்டியில் அக்கரைப்பற்றுக்கு சென்ற நிலையில் அவனை தனது வீட்டிற்கு கூட்டிச் சென்று இரவு தங்கவைத்து உபசரிப்பு இடம்பெற்றதுடன் பெண் வீட்டிற்கு நாளைக்கு கூட்டிச் செல்வதாக தெரிவித்து கலந்துரையாடியுள்ளனர்.

                  அடுத்த நாள் 24 ம் திகதி வியாழக்கிழமை காலை குறித்த ஆயித்தியமலை இளைஞன் மற்றும் அக்கரைப்பற்று இளைஞன் அவனின் உறவினர்களான இரு பெண்களுடன் மட்டக்களப்பு பஸ்தரிப்பு நிலையத்துக்கு வந்தடைந்த பின்னர் பெண் வீடு கூளாவடியில் இருப்பதாகவும் பல சாக்கு போக்கு தெரிவித்து என்ன செய்வது என தெரியாது முழுசிக் கொண்டிருந்த அவனை அக்கரைப்பற்று இளைஞன் விடாப்பிடியாக பெண்வீட்டிற்கு கூட்டிச் செல்ல வற்புறுத்தியுள்ளான். அவனுக்கு என்ன செய்வது என தெரியாது கொக்குவில் பிரதேசத்திலுள்ள அவனின் தூரத்து உறவினர் வீட்டிற்கு கூட்டிச் சென்ற போது இவனின் நடவடிக்கையில் அக்கரைப்பற்று இளைஞனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

                  அவன் உறவினரிடம் கூட்டிச் சென்ற நிலையில் அவன் தனது தாய் என அனுப்பிய படத்தை காட்டி இவனின் தாயாரா நீங்கள் என கேட்டபோது, அவர்கள் இல்லை என தெரிவித்துள்ளனர்.

                  இதனை தொடர்ந்து அக்கரைப்பற்று இளைஞன் உசாரடைந்து கொண்டு அவனை பிடித்துக்கொண்டு கொக்குவில் பொலிசாரிடம் சென்று தமக்கு நடந்ததை தெரிவித்து, இவனால் சுமார் ஒன்றரை இலச்சத்துக்கு மேலாக கடந்த 2 மாதத்தில் செலவாகியுள்ளதாக அக்கரைப்பற்று இளைஞன் தெரிவித்தான்.

                  இதனை தொடர்ந்து குறித்த இளைஞன் தான் மிமிக்கிரி குரலில் பெண்கள் போல கதைத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதை ஓப்புக் கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

                  இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவரின் சகோதரி பொலிஸ் நிலையத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று இளைஞனின் குடும்பத்தினரிடம் தமது கஷ்ட நிலையை தெரிவித்து சகோதரன் தவறு செய்துவிட்டார் என மன்னிப்பு கேட்டதையடுத்து அந்த இளைஞன் முறைப்பாடு செய்யாது சென்றுள்ளான். அதேவேளை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இளைஞனை ஆயித்தியமலை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

                  இது தொடர்பான மேலதிக விசாரணையை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

                  செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                  Posted in இலங்கை செய்திகள்

                  ரயிலுடன் மோதி வாலிபன் மரணம்

                  ரயிலுடன் மோதி வாலிபன் மரணம்

                  யாழ்ப்பாணம் – மாவிட்டபுரம் புகையிரத நிலைய கடவையில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

                  கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த கடுகதி புகையிரதம் இன்று நண்பகல் 12 மணியளவில் மாவிட்டபுரம் புகையிரத நிலையத்தை கடக்க முற்பட்ட

                  போது, குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் புகையிரத கடலையை கடக்க முற்பட்டுள்ளார்.

                  இதன்போது கடுகதி புகையிரதம் இளைஞரை மோதி தள்ளியுள்ளது.

                  உயிரிழந்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் விறகு கட்டிக்கொண்டு சென்றதாகவும், இளைஞர் யார் என்று அடையாளம் காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்

                    Posted in இலங்கை செய்திகள்

                    லொறி பஸ் நேருக்கு நேர் மோதல்

                    லொறி பஸ் நேருக்கு நேர் மோதல்

                    திருகோணமலை – கொழும்பு பிரதான வீதியில் தனியார் அதிசொகுசு பஸ் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                    இவ்விபத்துச் சம்பவம் இன்று (26) அதிகாலை 2.30 மணியளவில் கலேவெலவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                    காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

                    கொழும்பிலிருந்து திருகோணமலையை நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

                    சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

                      Posted in இலங்கை செய்திகள்

                      ஐ.நா. மனித உரிமைகள் பேரவை திங்கள் ஆரம்பம்

                      ஐ.நா. மனித உரிமைகள் பேரவை திங்கள் ஆரம்பம்

                      ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு திங்கட்கிழமை (28) முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.

                      இதில் இலங்கை தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் (03) உரையாடல் நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

                      இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைக்கவுள்ளார்.

                      இந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான விஷேட பிரதிநிதிகள் குழு நேற்று ஜெனிவாவுக்கு சென்றுள்ளது.

                      மேலும் இலங்கை தொடர்பான அறிக்கை ஏற்கனவே அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அதற்கு பதிலளித்து உரையாற்றவுள்ளார்

                        Posted in இலங்கை செய்திகள்

                        கோடரியால் தலையில் அடித்து கொலை

                        கோடரியால் தலையில் அடித்து கொலை

                        மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிபப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச்

                        சென்றேன் என யாழ்ப்பாணம் மாநகரில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பத்தலைவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

                        கடந்த செவ்வாய்கிழமை (22) அன்று யாழ்ப்பாணம் இராசாவின் ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருந்தார்.

                        மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது – 72) என்ற வயோதிப் பெண்ணே கொலை செய்யப்பட்டிருந்தார்.

                        சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் டில்ரொக் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

                        சம்பவ தினத்தன்று அண்மையிலுள்ள சிசிரிவி கெமரா பதிவில் கொலையாளி துவிச்சக்கர வண்டியில் பயணித்தமை பதிவாகி இருந்ததன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

                        பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் நேற்று காலை இராசாவின் தோட்டம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

                        புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பத்தலைவரே கைது செய்யப்பட்டார்.

                        சந்தேக நபரிடம் வழங்கிய வாக்குமூலத்தில், வயோதிபப் பெண்ணின் வீட்டில் முதல் நாள் பூக்கன்றுகளை வெட்டி வேலை செய்தேன். மறுநாள் மிகுதி வேலையை செய்யுமாறு கேட்டிருந்தார்.

                        மறுநாள் சென்ற போது பட்டமரத்தை வெட்டுமாறு அயலில் உள்ள வீட்டில் கோடாரி மண்வெட்டியை வயோதிப் பெண் வாங்கித்தந்தார்.

                        எனது மனைவிக்கு மோட்டார் சைக்கிள் லீசிங்கில் வாங்கிக் கொடுத்தேன். அதற்கான பணத்தை உறவினரிடம் வாங்கிக் கட்டியிருந்தேன். அவர் தன்னிடம் வாங்கிய 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மீளத் தருமாறு அடிக்கடி கேட்டார்.

                        அதனால் கோடாரியை எடுத்துக்கொண்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த வயோதிப் பெண்ணின் பின்னால் சென்று தலையில் தாக்கினேன். அவர் சுயநினைவற்றிருந்தார். அவரது சங்கிலியை அபகரித்துக் கொண்டு சென்றுவிட்டேன் என்று தெரிவித்தார்.

                        அத்துடன் தனது வீட்டுக்கு பொலிஸாரை அழைத்துச் சென்ற சந்தேக நபர் பை ஒன்றிலிருந்த தங்கச் சங்கிலியை எடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.

                        சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி பொலிஸ் தடுப்பில் வைத்திருக்க பொலிஸார் விண்ணப்பம் செய்யவுள்ளனர்.

                          Posted in சினிமா

                          ரஷ்யா போரை நிறுத்திவிட வேண்டும்.. வைரமுத்து

                          ரஷ்யா போரை நிறுத்திவிட வேண்டும்.. வைரமுத்து

                          இரண்டாவது நாளாக ரஷிய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதை குறித்து வைரமுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

                          ரஷ்யா போரை நிறுத்திவிட வேண்டும்.. வைரமுத்து பதிவு
                          வைரமுத்து


                          இரண்டாவது நாளாக ரஷிய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கிவ்வை குறிவைத்து தாக்கும் ரஷ்ய படைகள் கிவ் மீது 36

                          பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்ய படைகள் ஏவி தாக்கியதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை 4.20 மணிக்கு கிவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டது.

                          உக்ரைனின் கேர்சன் என்ற பகுதியை கைப்பற்றிய ரஷிய ராணுவம் கேர்சன் பகுதியில் உள்ள அரசு கட்டடத்தில் ரஷிய தேசிய கொடியை ஏற்றினர். முதல்நாள் போரில்

                          ரஷியாவின் 800 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய படைகள் என் மீது குறிவைத்து உக்ரைன் தலைநகரில்

                          நுழைந்துள்ளது எனவும், என்னை அழித்தால் உக்ரைனை அழித்து விடலாம் என ரஷ்யா நினைக்கிறது என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

                          இந்தநிலையில் இந்த போர் குறித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நான் போரை வெறுக்கிறேன். அது உலகத்தின் விலா

                          எலும்புகளையும் பாதிக்கும். கீவ் நகரத்தில் விழுந்த குண்டு கீரிப்பட்டியின் கீரைக்காரி கூடை உடைக்கும். ரஷ்யா போரை நிறுத்திவிட வேண்டும். ரஷ்யா மீது ஜி7 நாடுகளின்

                          பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும். நான் போரை வெறுக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு வைரலாகி வருகிறது.

                          நான்
                          போரை வெறுக்கிறேன்

                          அது உலகத்தின்
                          விலா எலும்புகளையும் பாதிக்கும்

                          கீவ் நகரத்தில் விழுந்த குண்டு
                          கீரிப்பட்டியின்
                          கீரைக்காரி கூடை உடைக்கும்

                          ரஷ்யா
                          போரை நிறுத்திவிட
                          வேண்டும்

                          ரஷ்யா மீது
                          ஜி7 நாடுகளின்
                          பொருளாதாரத் தடைகள்
                          நீக்கப்பட வேண்டும்

                          நான்
                          போரை வெறுக்கிறேன்

                            Posted in சினிமா

                            சுருதிஹாசன் திருமணம்- அதிர்ச்சியில் ரசிகர்

                            சுருதிஹாசன் திருமணம்- அதிர்ச்சியில் ரசிகர்

                            நடிகை சுருதிஹாசன் திருமணம் குறித்த கேள்விக்கு சாந்தனு ஹசாரிகா சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார்.

                            சுருதிஹாசன் திருமணம்?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
                            சுருதிஹாசன்


                            நடிகை சுருதிஹாசன் பல வருடங்களாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்ற

                            தகவல் கொஞ்ச நாட்களாகவே உலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருமணம் குறித்த கேள்விக்கு சாந்தனு சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார்.

                            தனது வாழ்க்கையை திறந்த புத்தகமாக வைத்திருப்பவர் சுருதிஹாசன். மதுவுக்கு அடிமையாக இருந்ததையும் வெளிப்படையாக அவர் கூறியிருக்கிறார். தற்போது

                            அதிலிருந்து மீண்டு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் பிரபாஸின் சாலார் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. பாலகிருஷ்ணாவின்

                            புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர இந்தியில் சில படங்களில் நடிக்கிறார்.

                            இந்நிலையில் திருமணம் குறித்து அவரது காதலர் சாந்தனு ஹசாரிகாவிடம் கேட்டதற்கு, நாங்க இப்போ தான் டேட்டிங் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். சுருதி நடிகை என்பதை விட அவர் ஒரு இசைக்கலைஞர். இசைதான் எங்களை ஒன்றிணைத்தது.

                            இசையுடன், ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறோம், இந்த இரண்டும் எங்களது ஆக்கபூர்வமான பயணம். எங்களுடைய படைப்புகள் குறித்து விவாதிக்கிறோம். அது

                            எங்களை ஊக்கப்படுத்துகிறது. இதுதான் தற்போது எங்களுக்கு இடையே இருக்கும் உறவு நிலை. திருமணத்தை விட இதில் தான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.

                            ஆக, திருமணம் குறித்து சுருதியும் சரி அவரது காதலரும் சரி யோசிக்கவே இல்லை என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

                              Posted in Uncategorized

                              லொத்தரியில் 63 மில்லியனை அள்ளி சென்ற வாலிபர்

                              லொத்தரியில் 63 மில்லியனை அள்ளி சென்ற வாலிபர்

                              மேற்கு அவுஸ்ரேலியாவின் New South Wales பகுதியை சேந்த வாலிபர் ஒருவர் நேற்று

                              வியழகிழமை இடம்பெற்ற பவர் பால் லொத்தரி குழுக்களில் 63 மில்லியன் டொலர்களை அள்ளி சென்றுள்ளார்

                              இணையத்தில் பதிவு செய்திடாது அங்காடி ஒன்றில் குறித்த டிக்கட்டை வாங்கிய நபர்

                              திடீரென சோதனை செய்து பார்த்த பொழுது இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது

                              அப்புறம் என்ன மகன் குடி ,கும்மாளம் என கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் ,இது தான்

                              சொல்லுறது அதிஷ்டாம் அடித்தா கூரையை பிச்சிகிட்டு கொட்டும் என்பது