Author: நலன் விரும்பி
விஜய் வழக்கு- தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதி
விஜய் வழக்கு- தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதி
சொகுசு கார் இறக்குமதி செய்த விவகாரத்தில் விஜய் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறார்.
விஜய் தொடர்ந்த வழக்கு… தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதி
விஜய்
நடிகர் விஜய் கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். இந்தக் காருக்கான நுழைவு வரியை அவர் செலுத்த தாமதப்படுத்தியதாக கூறி வணிக வரித்துறை அபராதம் விதித்தது.
இந்த நிலையில் விஜய் தரப்பில், ஏற்கனவே நுழைவு வரி செலுத்தப்பட்டுவிட்டது. அதிகப்படியான அபராதம் விதித்ததை எதிர்த்தே வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆகவே
அபராதம் விதிப்பது தொடர்பான நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்தார்.
விஜய்
இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது வணிகவரித்துறை சார்பில் நடிகர் விஜய்யின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று
கூறியது. இது குறித்து மேலும் சில விபரங்களைக் கேட்ட நீதிபதி, நடிகர் விஜய் வழக்கின் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்
கவர்ச்சியில் கலக்கும் நடிகை
கவர்ச்சியில் கலக்கும் நடிகை
இதய திருடன், மச்சக்காரன், ராஜாதி ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்த காம்னா, மீண்டும் தமிழ் படங்களில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
ரீ-என்ட்ரி கொடுக்கும் காம்னா ஜெத்மலானி
காம்னா
கடந்த 2005 ஆம் ஆண்டு, ஜெயம் ரவி நடித்த ‘இதயதிருடன்’ படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் மனதை தன்னுடைய கவர்ச்சியால், அழகாலும் கொள்ளை கொண்டவர்,
நடிகை காம்னா. இப்படத்திற்குப் பிறகு ஜீவனுடன் ‘மச்சக்காரன்’, லாரன்ஸுடன் ’ராஜாதி ராஜா’ ’காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். கவர்ச்சியால் பல ரசிகர்களை தன் வசமாக்கிய காம்னா, தற்போது சிறிய
இடைவெளிக்குப் பிறகு அதே அழகுடன் ரசிகர்களை கவர மீண்டும் களமிறங்க இருக்கிறார்.
சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் காம்னா, சமீபத்தில் வெளியிட்டுள்ள
புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் பலர் இன்னும் அதே அழகுடன் இருப்பதாகவும் பதிவு செய்து வருகிறார்கள்.
காம்னா
இந்நிலையில், நடிகை காம்னா, தமிழில் நடிக்க ஆர்வமாக கதைகளை கேட்டு வருகிறார். கதைக்கு ஏற்றவாறு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க தயாராகி
இருக்கும் காம்னா, விரைவில் தான் நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்களை அறிவிக்க இருக்கிறார்.
மலேசியா விமானம் சுட்டு வீழ்த்தல் – ரசியா மீது வழக்கு தொடுத்துள்ள அவுஸ்ரேலியா
.
மலேசியா விமானம் சுட்டு வீழ்த்தல் – ரசியா மீது வழக்கு தொடுத்துள்ள அவுஸ்ரேலியா
அவுஸ்ரேலியா பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரசியாவின் குற்ற செயலுக்கு அவுஸ்ரேலியா வழக்கு தொடுத்துள்ளது
சர்வதேச நீதிமன்றில் இந்த வழக்கினை தொடரவுள்ள அவுஸ்ரேலியஷ,ரசியாவை தண்டித்து அடக்கியாள துடிக்கிறது
ஆனால் இது அரசியல் ரீதியாக சாதாரண ஒன்றா என்பதும் ,இந்த சட்ட
மிரட்டல்களுக்கு ரசியா அடி பணியுமா என்பதையும் பொருந்திருந்தே பார்க்க வேண்டும்
ரசியாவின் விமானத்தில் மோதிய ஏவுகணை-யுத்தகளத்தில் நடந்த அந்த அதிசயம்
ரசியாவின் விமானத்தில் மோதிய ஏவுகணை-யுத்தகளத்தில் நடந்த அந்த அதிசயம்
உக்கிரேன் மீது ரசியா போர் விமானங்கள் அகோர வான்வெளி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்
இதில் அதி உயர் ரக போர் விமானங்களாக விளங்கும் su 25 சண்டை விமானங்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது
இந்த விமானங்கள் மீது உக்கிரேன் இராணுவம் அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள் மூலம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன ,
இதில் இதே ரக விமானம் ஒன்றை ஏவுகணை தாக்கியது ,ஆயினும் விமானி சாதூரியாமாக விமானத்தை தரை இறக்கி தப்பிய சம்பவம் வைரலாகி வருகிறது
சண்டை களத்தில் நிகழ்ந்த அற்புதங்களில் ஒன்றாக இது பார்க்கக் படுகிறது
இலங்கையில் செல்வந்தர்கள் கடத்தப்படலாம் – வங்கியில் பணம் முடக்கப்படலாம் – பீதி
இலங்கையில் செல்வந்தர்கள் கடத்தப்படலாம் – வங்கியில் பணம் முடக்கப்படலாம் – பீதி
இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது ,இவ்வேளை
வெள்ளை வான் ஊடாக செல்வந்தர்கள் கடத்த படலாம் எனவும் அவர்கள் சொத்துக்கள்
அரசுடைமையாக்க படலாம் என்ற ஐயம் வியாபாரிகள் மத்தியில் நிலவுகிறது
வங்கிகளில் உள்ள பெரும் தொகை பணமும் முடக்கப்படலாம் என்பதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்
வங்கிகளில் வட்டிக்கு பணம் வைப்பு வைத்துள்ள மக்கள் பணமும் அவசர தேவைக்காக
அரசு உடமையாக்க படலம் என எதிர் பார்க்க படுகிறது ,எதிர்வரும் நாட்களில் எதுவும் இலங்கையில் நிகழ கூடும் என்பது களநிலவரமாக உள்ளது
மேலும் பணத்தை மீள பெறுபவர்கள் தொகையும் கட்டு படுத்தப்படலாம் என உள்ளக கசிவுகள் தெரிவிக்கின்றன
சீனாவில் பரவும் புதிய நோய் – 170 லட்சம் மக்கள் வசிக்கும் நகரம் அடித்து பூட்டு
சீனாவில் பரவும் புதிய நோய் – 170 லட்சம் மக்கள் வசிக்கும் நகரம் அடித்து பூட்டு
சீனாவின் மூன்றாவது அலையாக வேகமாக கொரனோ நோயினை ஒத்த புதிய வைரஸ்
பரவி வருவதால் சீனாவின் அதிக மக்கள் தொகை வசிக்கும் நகரான Shenzhen அடித்து பூட்ட பட்டுள்ளது
கடந்த ஒரு வாரத்தில் ஒடித்து பூட்ட பட்ட இரண்டாவது நகர் இதுவாக பதிய பெற்றுள்ளது
இந்த நோயின் தாக்குதல் வேகமாக ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளையும் பாதிக்கும் என எதிர் பார்க்க படுகிறது
உக்கிரேனுக்கு சீனா அனுப்பிய 8 லட்சம் அவசர உணவு பொருட்கள்
உக்கிரேனுக்கு சீனா அனுப்பிய 8 லட்சம் அவசர உணவு பொருட்கள்
உக்கிரேன்ரசியாவுக்கு இடையில் உக்கிர சமர் வெடித்துள்ள இவ்வேளையில் உக்கிரேன்
மக்களின் தேவைக்கு அவசர உதவி தேவைக்கு சுமார் எட்டு லட்சம் அமெரிக்கா டொலர் உணவு பொதிகள்
வழங்கியுள்ளது
ருமேனியா நாட்டின் எல்லை ஊடாக இந்த உணவு லொறிகள் சென்றடைந்துள்ளது
பிரிட்டன் மக்கள் இலங்கைக்கு செல்லவேண்டாம் என பிரிட்டன் அரசு அறிவுறுத்தல்
பிரிட்டன் மக்கள் இலங்கைக்கு செல்லவேண்டாம் என பிரிட்டன் அரசு அறிவுறுத்தல்
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நிலை காரணமாக பிரிட்டன் மக்கள் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது
மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த அபாய அறிவிப்பு வெளியிட
பட்டுள்ளது ,பிரிட்டனை தொடர்ந்து ஏனைய நாடுகளும் இந்த அறிவிப்பை
வெளியிடலாம் என எதிர்பார்க்க படுகிறது
கனடாவில் கோர விபத்தில் சிக்கி 5 இந்தியர்கள் மரணம்
கனடாவில் கோர விபத்தில் சிக்கி 5 இந்தியர்கள் மரணம்
கனடா ஒன்ராறியோ மாகாணத்தின் முக்கிய சாலை ஒன்றில் பயணித்து கொண்டிருந்த
வண்டி முந்தி செல்ல முற்பட்ட பொழுதுகு விபத்தில் சிக்கியது
இதன் பொழுது அதில் பயணித்த ஐந்து இந்தியர்கள் சம்பவ இடத்தில பலியாகினர்
மேலும் இஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் தீவிர சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
றோவின் விளையாட்டு -யாழ்ப்பாண விமான நிலையத்தில் தரை இறங்கும் மோடி
றோவின் விளையாட்டு -யாழ்ப்பாண விமான நிலையத்தில் தரை இறங்கும் மோடி
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று முக்கியதத்துவம் வாய்ந்த இலங்கை பயணம் ஒன்றை மேற்கொள்கிறார்
இவர் எதிர்வரும் முப்பதாம் திகதி யாழ்ப்பாணம் விமான நிலையம் என பெயர் மாற்ற பட்டுள்ள பலாலி விமான நிலையத்தில் தரை இறங்குகிறார்
இந்தியாவில் இருந்து நேரடியாக தமிழர் வான் தளத்தில் தரை இறங்கும் முதலாவது வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை இவர் தட்டி செல்கிறார்
இலங்கையின் பொருளாதார நிலை தொடர்பாக முக்கிய விடயங்கள் இதில் பேச படும் என எதிர் பார்க்க படுகிறது
உணவகத்தை சுற்றிவளைத்த பொலிஸ் – 39 பேர் கைது
உணவகத்தை சுற்றிவளைத்த பொலிஸ் – 39 பேர் கைது
இலங்கை வென்னப்புவ பகுதியில் உள்ள உணவாக விருந்தகம் ஒன்றில் பார்டி ஒன்று இடம்பெற்றுள்ளது
அங்கு முப்பது வயதுக்கு உள்பட்ட வாலிபர்கள் இணைந்து விருந்து ,போதையில் மிதந்துள்ளனர்
உள்ளே நுழைந்த போலீசார் நடத்திய சோதனையில் அவர்கள் போதை பொருள் பாவித்துள்ளதும் ,
அதிக போதையில் இருந்துள்ளதும் கண்டறிய பட்ட நிலையில் 39 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இலங்கையில் பேரூந்து கட்டணங்கள் 20 ரூபாவினால் அதிகரிப்பு
இலங்கையில் பேரூந்து கட்டணங்கள் 20 ரூபாவினால் அதிகரிப்பு
இலக்கையில் மக்கள் அதிகம் பயன் படுத்தும் பேரூந்து கட்டணங்கள் இன்று இரவு முதல் இருபது ரூபாவினால் அதிகரிக்க படுகிறது
எரிபொருள் தட்ட பாடு காரணமாக இந்த திடீர் விலை உயர்வு அதிகரிக்க பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது
நாள்தோறும் ஏற்ற படும் விலைவாசிகளினால் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் ,
ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் பொங்கி எழும்காலம் தற்போது உருவாகியுள்ளது
ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது வேற சன்னி லியோன்
ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது வேற சன்னி லியோன்
நடிகை சன்னி லியோன் சமீபத்தில் அளித்த பேட்டி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது வேற… சன்னி லியோன்
சன்னி லியோன்
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து நடிகையான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம்
ஆடினார். தற்போது தமிழ், இந்தி, கன்னட மொழிகளில் தயாராகும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். மேலும் பேய்ப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
தனியார் பத்திரிக்கைக்கு அவர் கொடுத்த நேர்காணலில், 40 வயதான சன்னி லியோன் தனது திரையுலக பயணம், நல்லது, கெட்டது மற்றும் தனது மோசமான தருணங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இந்நிலையில், சன்னி லியோன் தனது வாழ்க்கை
ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது வேற சன்னி லியோன்
வரலாற்றுப் படமான “கரன்ஜித் கவுர்” – தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோனுக்குப் பிறகு, அனாமிகா என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.
சன்னி லியோன்
சன்னி லியோன்
இதுகுறித்து அவர் தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
“அனாமிகா செட்டில் நான் செலவழித்த ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, ஏனென்றால் சண்டை காட்சிகள் எனக்கு
ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது வேற சன்னி லியோன்
உண்மையிலேயே பிடிக்கும். எனது நிஜ வாழ்க்கையில் நான் ஒருபோதும் சண்டையிட மாட்டேன், எனவே இந்த வித்தியாசமான விஷயங்களை எப்படி செய்வது என்று கற்றுக்கொள்வது மிகவும் சந்தோசமாக இருந்தது.
அனாமிகா என்று படத்திற்கு பெயர் வைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. விக்ரம் சாரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். நடிப்பாக இருந்தாலும் சரி, சண்டை காட்சியாக இருந்தாலும் சரி, என்னையும் என் கதாபாத்திரத்தையும் அவர் எப்படி
உருவாக்கினார் என்பது இதுவரை நான் அனுபவித்திராத ஒன்று. யாரோ ஒருவர் தங்கள் முழு முயற்சியையும் என் மீது நம்பிக்கையையும் வைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
சன்னி லியோன்
சன்னி லியோன்
நான் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் அவ்வாறு நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இது ஒரு நல்ல
சமநிலையான கதாபாத்திரம், காதல் இருக்கிறது, நெருக்கமான காட்சிகள் உள்ளன, ஆனால் இது மக்கள் என்னிடம் வழக்கமாக எதிர்பார்க்கும் கதாபாத்திரம் அல்ல.
நான் என் ரசிகர்களை நேசிக்கிறேன், அவர்கள் என்னை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் என்னை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், காலப்போக்கில் அவர்கள் என்னை ஏற்றுக்கொள்கிறார்கள். ஒவ்வொரு படமும்
வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், நான் செய்வதை மக்கள் விரும்புவார்கள், சில சமயங்களில் அவர்கள் விரும்ப மாட்டார்கள், ஆனால் ஒரு
நடிகராக, நான் தொடர்ந்து வித்தியாசமான விஷயங்களைச் செய்து, என்னிடம் இருப்பதை நிரூபிக்க விரும்புகிறேன்” என்றார்
நயன்தாரா ரகசிய திருமணம்
நயன்தாரா ரகசிய திருமணம்
நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக ரசிகர்கள் சில புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
நயன்தாரா ரகசிய திருமணம்?.. வைரலாகும் புகைப்படம்
விக்னேஷ் சிவன் – நயன்தாரா
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்
இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6
ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை தம்புச்செட்டி தெருவில் உள்ள காளியம்மாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சென்னை மாநகராட்சியின் புதிய பெண் மேயர்
பிரியா ராஜனை சந்தித்து பேசி எடுத்துக் கொண்ட புகைப்படமும் வைரலானது. இந்நிலையில், அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படத்தில், நடிகை நயன்தாரா நெற்றியில்
குங்குமத்துடன் இருப்பதை போன்று தெரிகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ரகசிய
திருமணம் செய்துக்கொண்டதாக பதிவிட்டு, சமூக வலைத்தளங்கில் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தந்தையை குற்றி கொன்ற மகன்
தந்தையை குற்றி கொன்ற மகன்
இலங்கை கொச்சிக்கடை பகுதியில் போதையில் வீடு வந்த தந்தை உணவு
கேட்டுளளார் ,அப்பொழுது அதனை தயாரிக்க மகளுக்கும் தந்தைக்கும் இடையில்
வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது ,இவ்வேளை தந்தைக்கும் சகோதரிக்கும் இடையில்
ஏற்பட்ட வாய்தகராறு முற்றிய நிலையில் சீற்றம் உற்ற மகன் ,சகோதரியை தந்தை தாக்க முற்பட்ட பொழுது கத்தியை எடுத்து குற்றியுள்ளார்
இதில் சம்பவ இடத்தில தந்தை பலியாகியுள்ளார் ,22 வயதுடைய மகன் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்
ஒரு உணவு தயரிப்பால் ஒரு உயிர் பறிபோனது ,இன்னொரு உயிர் சிறையில் வாட போகிறது ,இது யார் குற்றம் ..?
திருட்டில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட நான்கு பேர் கைது
திருட்டில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட நான்கு பேர் கைது
இலங்கை காத்தான் குடி பகுதியில் உள்ள கைபேசி கடை ஒன்றுக்குள் புகுந்து
கொள்ளையில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் விசாரணையின் பின் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
இந்த திருட்டில் முக்கிய நபர் தப்பி ஓடிய வண்ணம் உளளார்
இவர்களிடம் இருந்து எட்டு லட்சம் ரூபா பெறுமதியான கைபேசிகள் மீட்க பட்டுள்ளன
பணத்தை திருடும் ஆளும் ஆட்சியாளர்கள் – பொன்சேகா முழக்கம்
பணத்தை திருடும் ஆளும் ஆட்சியாளர்கள் – பொன்சேகா முழக்கம்
இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்கள் மக்கள் வயிற்றில் அடித்து பணத்தை திருடி
வருவதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்
தமிழர்கள் மீது படையெடுப்பை நடத்தி அந்த மக்களை கொன்று குவித்த மகிந்தவின்
நம்பிகையாளராக விளங்கியவர் பொன்சேகா என்பது குறிப்பிட தக்கது
62 மாணவர்களை விரட்டி குற்றிய குளவிகள்
62 மாணவர்களை விரட்டி குற்றிய குளவிகள்
இலங்கை மொனராகலை, எத்திமலை மகா வித்தியாலயத்தை சேர்ந்த அறுபத்தி
இரண்டு மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
ஒன்று கூடல் ஒன்றிற்காக ஒன்று கூடிய பொழுது அங்கிருந்த
குளவி கூடு வீழ்ந்து சிதறியதால் பரவிய குளவிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஆளுமையுள்ள பெண்களுக்கு பாராட்டும் கௌரவமும்
ஆளுமையுள்ள பெண்களுக்கு பாராட்டும் கௌரவமும்
நாடும் தேசமும் அவளே” எனும் தொனிப் பொருளில் மகளிர் தின நிகழ்வு ஹலோ
எப்.எம். தவிசாளர் எப்.எம்.சரீக் தலைமையில் நேற்று மாலை (13) திருகோணமலை குளக்கோட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபதி பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்
(திருமதி) ஜே.ஜே.முரளிதரன் கௌரவ அதிதியாகவும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர்
மற்றும் உப்புவெளி பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பொஸிஸ்
அதிகாரி ஏ.காயத்திரி ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது, ஆளுமையுள்ள பெண்களின் திறமைகளைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி ஞாபகச் சின்னங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இராணுவத்தின் தேடி அழிப்பு நடவடிக்கையில் – 200 கிளர்ச்சி படைகள் சுட்டு கொலை
இராணுவத்தின் தேடி அழிப்பு நடவடிக்கையில் – 200 கிளர்ச்சி படைகள் சுட்டு கொலை
சோமாலியாவில் தீவிரவாத குழுவை சேந்த இருநூறு பேரை தாம் சுட்டு
கொன்றுள்ளதாகவும் சிலரை உயிரோடு சிறை பிடித்துள்ளதாக சோமாலிய அரச இராணுவம் தெரிவித்துள்ளது
தமது தேடி அழிக்கும் விசேட ஒப்பிரேசன் தாக்குதலின் பொழுதே பெரும் எண்ணிக்கையில் கொலை செய்ய பட்டுள்ளதாகவும்
தொடர்ந்து அரசு மற்றும் கிளர்ச்சி படைகளிற்கு இடையில் கடும் மோதல்கள் வெடித்துள்ளன







