Tag: விக்னேஷ் சிவன் – நயன்தாரா
திருப்பதியில் காதல் ஜோடி விக்னேஷ் சிவன் – நயன்தாரா
திருப்பதியில் காதல் ஜோடி விக்னேஷ் சிவன் – நயன்தாரா
நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் திருப்பதிக்கு சென்று எடுத்துகொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.
திருப்பதிக்கு திடீர் விசிட் அடித்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா
நயன்தாரா – விக்னேஷ் சிவன்
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6
ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன்
தற்போது விக்னேஷ் சிவன் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, ஆகியோர் நடிப்பில் ‘காத்து வாக்குல இரண்டு காதல்’
என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் இன்று (28.04.2022) அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நயன்தாரா, தனது காதலர்
விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து திருப்பதியிலிருந்து
அதிகாலை 2.22 மணிக்கு ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ இன்றிலிருந்து உங்களுடையது என்று குறிப்பிட்டுள்ளார். காத்துவாக்குல படம் வெற்றிபெற வேண்டி
இருவரும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்
என்று ரசிகர்கள் பதிவிட்டு, இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
நயன்தாரா ரகசிய திருமணம்
நயன்தாரா ரகசிய திருமணம்
நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக ரசிகர்கள் சில புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
நயன்தாரா ரகசிய திருமணம்?.. வைரலாகும் புகைப்படம்
விக்னேஷ் சிவன் – நயன்தாரா
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்
இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6
ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை தம்புச்செட்டி தெருவில் உள்ள காளியம்மாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சென்னை மாநகராட்சியின் புதிய பெண் மேயர்
பிரியா ராஜனை சந்தித்து பேசி எடுத்துக் கொண்ட புகைப்படமும் வைரலானது. இந்நிலையில், அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படத்தில், நடிகை நயன்தாரா நெற்றியில்
குங்குமத்துடன் இருப்பதை போன்று தெரிகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ரகசிய
திருமணம் செய்துக்கொண்டதாக பதிவிட்டு, சமூக வலைத்தளங்கில் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய நயன்தாரா படம்
ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய நயன்தாரா படம்
முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறது.
ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய நயன்தாரா படம்
விக்னேஷ் சிவன் – நயன்தாரா
நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் இந்தியா
சார்பில் ஆஸ்கார் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் ஆஸ்கார் பட்டியலில்
இடம்பெற்றுள்ள படங்கள் பட்டியல் ஆஸ்கார் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெற்று இருந்தது.
ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்த வருடம் மார்ச் மாதம் 27-ந் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்
நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருதுக்கு 15 படங்கள் இறுதி செய்யப்பட்டு அதில் ஒரு படத்துக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருது வழங்கப்படும்.
இந்த நிலையில், ஆஸ்கார் வெளியிட்டுள்ள இறுதி பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெறவில்லை.
இதன் மூலம் ஆஸ்கார் போட்டியிலிருந்து கூழாங்கல் திரைப்படம் வெளியேறி உள்ளது. இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில்,
‘இந்த பட்டியலில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்! இருப்பினும் இவ்வளவு தூய்மையான சினிமாவை கொடுத்ததற்காக பி.எஸ்.வினோத்ராஜ்-க்கு நான் நன்றி கூறுகிறேன்.
பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா
பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் வீடு வாங்கி இருக்கிறார்.
பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா
நயன்தாரா
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தயாரிப்பாளராகி படங்களைச் சிறிய அளவில்
தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் அடுத்தகட்டமாக, விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தெரிகிறது.
இதுவரைக்கும் ஐதராபாத், கொச்சி, சென்னை போன்ற இடங்களில் ஹோட்டல்களில் தங்கி
படங்களில் நடித்து வந்தார் நயன்தாரா. இந்நிலையில், இருவரும் சென்னை போயஸ் கார்டனில் 4
பெட்ரூம் கொண்ட வீட்டில் குடியேற இருக்கிறார்கள். இதற்காகப் பல கோடி ரூபாய் கொடுத்து இந்த வீட்டை வாங்கியிருக்கிறார்கள்.
விக்னேஷ் சிவன் – நயன்தாரா
ஏற்கனவே போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்த், தனுஷ்,
இயக்குனர் பாலா உள்ளிட்டோர் வீடுகள் கட்டியுள்ளனர். இப்போது நயன்தாரா தனது காதலருடன்
அங்கு வசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்குக் குடியேறிய பிறகு தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட இருக்கிறார்கள்
விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்
விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்
காத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்தை இயக்கி இருக்கும் விக்னேஷ் சிவனுக்கு நடிகை நயன்தாரா சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார்.
விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்
விக்னேஷ் சிவன் – நயன்தாரா
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய இவர், அதன் பிறகு விஜய்
சேதுபதியை வைத்து நானும் ரவுடி தான், சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தை தயாரித்து இருந்தார்.
தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். விக்னேஷ் சிவன் இன்று தனது
பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் வாழ்த்துகளை ரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் தனது சமூக வலைத்தள
பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவில் ‘பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாராவுக்கு நன்றி’ என்று பதிவு செய்து இருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.
வைரலாகும் விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்
வைரலாகும் விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்
விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
வைரலாகும் விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்
விக்னேஷ் சிவன், நயன்தாரா
2021 புத்தாண்டு தினத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சினிமா பிரபலங்கள் பலர் தங்களுடைய சமூக வலைதளங்களில்
புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழ்
திரையுலகில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடியும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
விக்னேஷ் சிவன், நயன்தாரா
நயன்தாராவுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன் அதில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள். இப்போது நாம் வாழ்வில் ஒரு மறக்கமுடியாத கட்டத்தை கடந்து விட்டோம். தற்போது 2021ஆம் ஆண்டை நோக்கி முன்னேறுவோம்.
விக்னேஷ் சிவன், நயன்தாரா
இந்தாண்டு சிறந்த தருணங்களுடனும், மகிழ்ச்சியாகவும், நல்ல ஆரோக்கியத்துடனும், அமைதியாகவும், திருப்தியாகவும் அமைய அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்’ என்று அவர்
குறிப்பிட்டுள்ளார். விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன







