10 வருடமா கழிப்பறை இன்றி தவித்த குடும்பம் மானம் காத்த பிரான்ஸ் அக்கா
Posted in வன்னி மைந்தன் உதவி

10 வருடமா கழிப்பறை இன்றி தவித்த குடும்பம் மானம் காத்த பிரான்ஸ் அக்கா

10 வருடமா கழிப்பறை இன்றி தவித்த குடும்பம் மானம் காத்த பிரான்ஸ் அக்கா

10 வருடமா கழிப்பறை இன்றி தவித்த குடும்பம் மானம் காத்த பிரான்ஸ் அக்கா

full video click here

மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அம்மா |மகிழ்வித்த லண்டன் தயா அண்ணா குடும்பம்
Posted in வன்னி மைந்தன் உதவி

மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அம்மா |மகிழ்வித்த லண்டன் தயா அண்ணா குடும்பம்

மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அம்மா |மகிழ்வித்த லண்டன் தயா அண்ணா குடும்பம்

மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அம்மா |மகிழ்வித்த லண்டன் தயா அண்ணா குடும்பம்

full video click here

வவுனியாவில் 31வது கழிப்பறை |கொண்டாடிய மக்கள்
Posted in வன்னி மைந்தன் உதவி

வவுனியாவில் 31வது கழிப்பறை |கொண்டாடிய மக்கள்

வவுனியாவில் 31வது கழிப்பறை |கொண்டாடிய மக்கள்

வவுனியாவில் 31வது கழிப்பறை |கொண்டாடிய மக்கள்

FULL VIDEO CLICK HERE

ஏமன் மீதான அமெரிக்க-இங்கிலாந்து தாக்குதல்களில் 130 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
Posted in உலக செய்திகள்

ஏமன் மீதான அமெரிக்க-இங்கிலாந்து தாக்குதல்களில் 130 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்

ஏமன் மீதான அமெரிக்க-இங்கிலாந்து தாக்குதல்களில் 130 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்

ஏமன் மீதான அமெரிக்க-இங்கிலாந்து தாக்குதல்களில் 130 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் ,சனிக்கிழமை இரவு ஏமனுக்கு எதிரான அமெரிக்க-இங்கிலாந்து ஆக்கிரமிப்பில் குறைந்தது 130 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர்.

ஏமனின் குடியிருப்புப் பகுதிகளில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் நேற்று இரவு நடத்திய மிருகத்தனமான வான்வழித் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அன்சாருல்லாவுடன் தொடர்புடைய ஊடகங்களை மேற்கோள் காட்டி அல் ஜசீராவின் கூற்றுப்படி, தாக்குதல்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 101 பேர் காயமடைந்தனர்.

இஸ்ரேலிய ஊடகங்களின் முந்தைய அறிக்கைகளும் தாக்குதலில் இஸ்ரேலின் ஈடுபாட்டை ஒப்புக்கொண்டன, இது ஏமனுக்கு எதிரான ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கை குறித்த கவலைகளை மேலும் அதிகரித்தது.

சிரியாவின் லடாகியாவில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்
Posted in உலக செய்திகள்

சிரியாவின் லடாகியாவில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்

சிரியாவின் லடாகியாவில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்

சிரியாவின் லடாகியாவில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் ,ஞாயிற்றுக்கிழமை காலை சிரியாவின் லடாகியாவில் ஏற்பட்ட வெடிப்பில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர்.

லடாகியாவில் உள்ள அல்-ராம்ல் மாவட்டத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து 16 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 18 பேர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

அச்சுறுத்தல்களுக்கு பேரழிவு தரும் பதிலடி கொடுப்பதாக IRGC தலைவர் எச்சரிக்கிறார்
Posted in உலக செய்திகள்

அச்சுறுத்தல்களுக்கு பேரழிவு தரும் பதிலடி கொடுப்பதாக IRGC தலைவர் எச்சரிக்கிறார்

அச்சுறுத்தல்களுக்கு பேரழிவு தரும் பதிலடி கொடுப்பதாக IRGC தலைவர் எச்சரிக்கிறார்

அச்சுறுத்தல்களுக்கு பேரழிவு தரும் பதிலடி கொடுப்பதாக IRGC தலைவர் எச்சரிக்கிறார் ,ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி, எந்தவொரு அச்சுறுத்தலும் நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டால் ஈரான் அழிவுகரமான பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்தார்.

ஈரான் வெளிப்படையாக செயல்படுகிறது என்றும், இராணுவ நடவடிக்கைகளாக இருந்தாலும் சரி அல்லது முயற்சிகளை ஆதரிப்பதாக இருந்தாலும் சரி, அதன் செயல்களுக்கு வெளிப்படையாக பொறுப்பேற்கிறது என்றும் IRGC தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி வலியுறுத்தினார்.

ஏமனின் அன்சாருல்லா உட்பட பிராந்திய எதிர்ப்புக் குழுக்களின் கொள்கைகளை இயக்குவதில் ஈரானுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

“நாங்கள் ரகசியமாக செயல்படும் நாடு அல்ல. நாங்கள் உலகில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நம்பகமான இராணுவ சக்தி. நாங்கள் எங்காவது தாக்கினால் அல்லது யாரையாவது ஆதரித்தால், அதை வெளிப்படையாக அறிவிப்போம்,” என்று அவர் உறுதிப்படுத்தினார்.

இஸ்ரேலிய ஆட்சிக்கு எதிரான “உண்மையான வாக்குறுதி” போன்ற கடந்த கால நடவடிக்கைகளை மேஜர் ஜெனரல் சலாமி குறிப்பிட்டார், ஈரான் எப்போதும் அதன் செயல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளது என்றும், எந்தவொரு நடவடிக்கைக்கும் பொறுப்பை மறுக்கவோ அல்லது பொய்யாக ஏற்கவோ மாட்டேன் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.

ஈரான் ஒரு அமைதியை விரும்பும் நாடு என்று கூறிய அவர், “ஆனால் அச்சுறுத்தப்பட்டால், ஈரான் பொருத்தமான மற்றும் நசுக்கும் பதில்களை வழங்கும்” என்று மேலும் கூறினார்.

ஈரானுக்கு எதிராக நடத்தப்படும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அழிவுகரமான பதில் வழங்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

அமெரிக்காவில் சூறாவளி 20 பேர் பலி
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் சூறாவளி 20 பேர் பலி

அமெரிக்காவில் சூறாவளி 20 பேர் பலி

அமெரிக்காவில் சூறாவளி 20 பேர் பலி ,அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூறாவளி மற்றும் புயல் காரணமாக இதுவரையில் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சூறாவளி மற்றும் புயல் தாக்கி வருகிறது. இதன் காரணமாகப் பெருமளவான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, சீரற்ற வானிலை காரணமாக ஜோர்ஜியாவில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது

மண்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு நிரந்தர வீடுகள்
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு நிரந்தர வீடுகள்

மண்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு நிரந்தர வீடுகள்

மண்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு நிரந்தர வீடுகள் ,பதுளை மாவட்டம் பூனாகலை, கபரகலை தோட்டத்தில் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் மண் சரிவினால் சுமார் 51 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு வருட

காலமாக பூனாகலை மாகந்த தேயிலை தொழிற்சாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தார்கள் .

குறித்த 51 குடும்பங்களுக்கும் சனிக்கிழமை (15) அன்று 10 பேர்ச் காணியில் நிரந்தரமான வீடுகளை அமைத்து கொடுப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் K.V சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில விஜயசேகர, அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்தகீர்த்தி,

நிர்வாகப் பிரிவின் மேலதிக செயலாளர் தீப்தி குணரத்ன, இராணுவ தளபதி லெப்டினல் ஜெனரல் வசந்த ரொட்ரிகோ, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் காமினி மஹகமகே. உட்பட பதுளை மாவட்ட பாராளுமன்ற

உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ், அம்பிகா சாமுவேல் மற்றும் பிரதேச செயலாளர் தோட்ட முகாமையாளர் உட்பட பலரும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

10 பேர்ச் காணியுடன் குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஒரு வீட்டுக்கு சுமார் 28 லட்சம் செலவிடப்படவுள்ளதுடன் .

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பயனாளிகளுக்கு வீடுகளை கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன விபத்தில் மௌலவி ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் மௌலவி ஒருவர் உயிரிழப்பு

வாகன விபத்தில் மௌலவி ஒருவர் உயிரிழப்பு

வாகன விபத்தில் மௌலவி ஒருவர் உயிரிழப்பு ,மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளிவாசல் மௌலவி ஒருவர் உயிரிழந்து, ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி முகைதீன் பள்ளிவாசல் மௌலவியான 43 வயதுடைய சபீஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

மட்டு. நகர் லேடி மெனிங் வீதி ஊடாக கல்லடி பாலத்து சந்தியில் இருந்து காத்தான்குடி நோக்கி பிரயாணித்தபோது காத்தான்குடி பகுதியில் இருந்து நகரை நோக்கி பயணித்த பேருந்து கல்லடிப்பால சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்து சென்ற மௌலவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ரணில் மீது பிமல் குற்றச்சாட்டு
Posted in இலங்கை செய்திகள்

ரணில் மீது பிமல் குற்றச்சாட்டு

ரணில் மீது பிமல் குற்றச்சாட்டு

ரணில் மீது பிமல் குற்றச்சாட்டு ,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டு தனது மனைவியுடன் ஐக்கிய இராச்சியத்திற்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டதற்காக 40,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் (ரூ. 16

மில்லியனுக்கும் அதிகமான) பொது நிதியைப் பயன்படுத்தியதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று தெரிவித்தார்.

தனியார் பயணத்திற்காக பொது நிதியைப் பயன்படுத்துவது குற்றம் என்று பாராளுமன்றத்தில் தெரிவித்த அமைச்சர், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வெளியுறவு அமைச்சகத்தை வலியுறுத்தினார்.

விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவியுடன் பத்து பேர் கொண்ட குழு ஒன்று சென்றதாக அவர் கூறினார்.

இந்தப் பயணம் ஆரம்பத்தில் ஒரு தனிப்பட்ட பயணமாக விவரிக்கப்பட்டதாகவும், பின்னர் நிதியைப் பெறுவதற்காக ஜனாதிபதி செயலகம் அனுப்பிய கடிதத்தில் உத்தியோகபூர்வ பயணமாக காட்டப்பட்டதாகவும் ரத்நாயக்க குற்றம் சாட்டினார்

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு ,தனியார் நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள், தாங்கள் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்கள் குறித்த தகவலுக்கு 1989 என்ற உதவி

எண்ணை அழைக்குமாறு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா தொடர்பான அமைச்சக ஆலோசனைக் குழு கூட்டத்தில்,

வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் விஜத ஹேரத் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பணியகத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தரப்பினரும் அங்கீகரிக்கப்பட்ட தொகையை விட அதிகமாகப் பெற்றுக்கொண்டால் அல்லது அனுமதிப்பத்திரம் இன்றி ஏதேனும்

செயற்பாடுகளில் ஈடுபட்டால் பணியகத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என அதிகாரிகளினால் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் வசிக்கும் இலங்கையர்கள் அந்நாட்டின் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் இந்த கூட்டத்தின் போது குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டலந்த அறிக்கையை நிராகரித்தார் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

பட்டலந்த அறிக்கையை நிராகரித்தார் ரணில்

பட்டலந்த அறிக்கையை நிராகரித்தார் ரணில்

பட்டலந்த அறிக்கையை நிராகரித்தார் ரணில் ,பட்டலந்த வீட்டுத்தொகுதியில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இரண்டு வீடுகளை வழங்கியமை தொடர்பில் நான், அதற்கு மறைமுகப் பொறுப்பாளி என்று பட்டலந்த ஆணைக்குழு

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த அறிக்கையை தான் முழுமையாக நிராகரிப்பதாக கூறினார்.

ஏப்ரல் 10 அன்று பட்டலந்த விவாதம்
Posted in இலங்கை செய்திகள்

ஏப்ரல் 10 அன்று பட்டலந்த விவாதம்

ஏப்ரல் 10 அன்று பட்டலந்த விவாதம்

ஏப்ரல் 10 அன்று பட்டலந்த விவாதம் ,உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை மார்ச் 20ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6 மணி

முதல் 8 மணி வரை நடத்துவதற்கு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் சனிக்கிழமை (15) கூடிய பாராளுமன்ற

அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

அத்துடன், பாராளுமன்றத்தை ஏப்ரல் 8, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் கூட்டுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய ஏப்ரல் 8ஆம் திகதி

செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான காலப்பகுதி குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டுக்கான விவாதத்திற்காக ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

ஏப்ரல் 09ஆம் திகதி புதன்கிழமை 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30

மணிவரையான காலப்பகுதி பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரையான காலப்பகுதி வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2) கீழான

கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரையான காலப்பகுதி பெறுமதி சேர் வரி (திருத்த)

சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டுக்கான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அன்றையதினம் பி.ப 5.00 பி.ப 5.30 மணி வரையில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான

பிரேரணைக்கான விவாதத்திற்கும் நேரத்தை ஒதுக்குவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.

ஏப்ரல் 10ஆம் திகதி வியாழக்கிழமை, நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரையான

நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டறை 27(2) கீழான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரையில், மார்ச் 14ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட “பட்டலந்த வீட்டுத் தொகுதியில் சட்டவிரோத தடுப்பு முகாம் மற்றும் சித்திரவதை முகாம் அமைத்து அவற்றை

நடத்திச் சென்றமை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” குறித்த விவாதத்தை நடத்துவதற்கும், இதற்கான இரண்டு நாள் விவாதத்தில் பிறிதொரு நாளை மே மாதத்தில் ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் மசூதியை குறிவைத்து குண்டுவெடிப்பு அரசியல் தலைவர் காயம்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தானில் மசூதியை குறிவைத்து குண்டுவெடிப்பு அரசியல் தலைவர் காயம்

பாகிஸ்தானில் மசூதியை குறிவைத்து குண்டுவெடிப்பு அரசியல் தலைவர் காயம்

பாகிஸ்தானில் மசூதியை குறிவைத்து குண்டுவெடிப்பு அரசியல் தலைவர் காயம் ,வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து, இஸ்லாமிய கட்சித் தலைவர் அப்துல்லா நதீம் மற்றும் இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர்.

வெள்ளிக்கிழமை வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு மசூதியில் குண்டுவெடிப்பு நடந்ததாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்,

இதில் ஒரு கட்சித் தலைவர் மற்றும் இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர்.

ஜாமியத் உலமா இஸ்லாம்-ஃபாசல் (JUI-F) அரசியல் கட்சியின் உள்ளூர் தலைவரான அப்துல்லா நதீம், குண்டுவெடிப்பின் இலக்காக இருக்கலாம் என்று

நம்பப்படுகிறது, மேலும் அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெற்கு வஜீரிஸ்தானில் உள்ள மாவட்ட காவல்துறைத் தலைவர் ஆசிப் பகதர் தெரிவித்தார்.

புடின் டிரம்பின் தூதரை சந்தித்து செய்தி வழங்குகிறார்
Posted in உலக செய்திகள்

புடின் டிரம்பின் தூதரை சந்தித்து செய்தி வழங்குகிறார்

புடின் டிரம்பின் தூதரை சந்தித்து செய்தி வழங்குகிறார்

புடின் டிரம்பின் தூதரை சந்தித்து செய்தி வழங்குகிறார் ,ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் டொனால்ட் டிரம்பின் தூதரை சந்தித்து இந்த வாரம் சவுதி அரேபியாவில் நடைபெறும் அமெரிக்க-உக்ரைன் பேச்சுவார்த்தைகள்

தொடர்பாக வாஷிங்டனுக்கு ஒரு செய்தியை வழங்கவும் “கூடுதல் விவரங்களை” பெறவும், கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகிறார்.

சவுதி அரேபியாவில் அமெரிக்காவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கையெழுத்தான கூட்டு அறிக்கையை ரஷ்ய ஜனாதிபதிக்கு தெரிவிக்க ஸ்டீவ் விட்காஃப் மாஸ்கோவிற்கு வந்தார்.

இந்த ஒப்பந்தத்தில், உக்ரைன் ரஷ்யாவுடன் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது, அதே நேரத்தில் அமெரிக்கா கியேவுடன் இராணுவ உதவி மற்றும் உளவுத்துறை பகிர்வை மீண்டும் தொடங்குவதாக அறிவித்தது.

இந்த ஆவணத்தில் ரஷ்யா மீதான தடைகள் அல்லது உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை, ஆனால் உக்ரைனின் ஐரோப்பிய நட்பு நாடுகள் “சமாதான செயல்பாட்டில் ஈடுபடும்” என்று அது கூறியது.

வெள்ளிக்கிழமை, ரஷ்ய செய்தித் தொடர்பாளர் பத்திரிகையாளர்களிடம் விளக்கினார், ரஷ்ய அரசுத் தலைவர் விட்காஃப் “ஜனாதிபதி டிரம்பிற்கு தகவல் மற்றும் கூடுதல் சமிக்ஞைகளை” வழங்கியதாகக் கூறினார்.

உக்ரைனுடனான மோதலை அமைதியாகத் தீர்ப்பதற்கான யோசனைக்கு புடின் தனது “முழுமையான ஆதரவை” வெளிப்படுத்தினார், டிரம்பின் போர் நிறுத்த திட்டத்தை விவாதிக்க அவர் விரும்புவதாகக் கூறினார்.

அமெரிக்கத் தலைவருடனான தனிப்பட்ட உரையாடலையும் உரையாடலில் உள்ளடக்கலாம் என்று ரஷ்ய ஜனாதிபதி பரிந்துரைத்தார்.

“நாம் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள் உள்ளன, அவற்றைப் பற்றி நமது அமெரிக்க சகாக்கள் மற்றும் கூட்டாளர்களுடன் பேச வேண்டும் என்று நான்

நினைக்கிறேன், மேலும், அவற்றைப் பற்றி விவாதிக்க ஜனாதிபதி டிரம்புடன் ஒரு அழைப்பு விடுக்கப்படலாம்,” என்று புடின் கூறினார்.

அனைத்து போர்நிறுத்த விவரங்களையும் தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதோடு மட்டுமல்லாமல், மாஸ்கோ ஒரு குறுகிய

கால தீர்வில் ஆர்வம் காட்டவில்லை, மாறாக மோதலுக்கு ஒரு நீடித்த தீர்வை விரும்புகிறது என்று புடின் வலியுறுத்தினார்.

வயோதிப சகோதரிகள் கொலை 15 வயது பேத்தி கைது
Posted in இலங்கை செய்திகள்

வயோதிப சகோதரிகள் கொலை 15 வயது பேத்தி கைது

வயோதிப சகோதரிகள் கொலை 15 வயது பேத்தி கைது

வயோதிப சகோதரிகள் கொலை 15 வயது பேத்தி கைது ,மூதூர் – தாஹாநகர் பகுதியில் இன்று காலை இரண்டு சகோதரிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 15 வயதுச் சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில், 68 மற்றும் 74 வயதுடைய இரண்டு சகோதரிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் எனவும் மற்ற நபர் தாதி எனவும் தெரிவிக்கப்படுகிறது .

இந்நிலையில், கொலையுண்ட இருவரினதும் பேத்தியான 15 வயது சிறுமி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கனடா புதிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

கனடா புதிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு

கனடா புதிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு

கனடா புதிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு ,கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட மார்க் கார்னி கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

கனடாவின் புதிய பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் நிகழ்த்திய உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘மற்றுமொருவர் கொண்டு செல்ல முடியாத வகையில் நம்மை நாமே கட்டியெழுப்ப வேண்டும்” என்று கனடாவின் புதிய பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தமது அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமராக பதவியேற்றதன் பின்னர் தமது முதலாவது சர்வதேச விஜயமாக அடுத்த வாரம், அவர் பிரித்தானியாவுக்கும் பிரான்ஸுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராஜினாமா கடிதம் கையளிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இராஜினாமா கடிதம் கையளிப்பு

இராஜினாமா கடிதம் கையளிப்பு

இராஜினாமா கடிதம் கையளிப்பு ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம் .எஸ் நளீம், நேற்று (14), சபையில் பிரியாவிடை உரை நிகழ்த்திய பின்னர், செயலாளர் நாயகம் குஷானி

ரோஹனதீரவிடம், அவரது அலுவலகத்தில் வைத்து தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்தார்.

அதன் போது, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

ஒருவர் அடித்து கொலை
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் அடித்து கொலை

ஒருவர் அடித்து கொலை

ஒருவர் அடித்து கொலை ,வெல்லாவௌி – சின்னவத்தை பிரதேசத்தில் நேற்று (14) மது அருந்தச் சென்ற நண்பர்களுக்கடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதில், வெல்லாவெளி சின்னவத்தை பக்கியெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய புவனேந்திரராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று பகல் 12 மணியளவில் புவனேந்திரராசா அவருடைய 3 நண்பர்களுடன் சின்னவத்தை பகுதியிலுள்ள வயல்பகுதிக்கு சென்று மதுபானம் அருந்தியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபருக்கும் ஏனைய 3 நண்பர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து அவர் மீது 3 பேரும் பொல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த வயல்பகுதிக்கு மாலை வேளையில் சென்ற கிராம உத்தியோகத்தர் சடலம் ஒன்று இருப்பதைகண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் குறித்த நண்பரை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டின் 3 நண்பர்களையும் பொலிஸர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காட்டுபகுதியில் இருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

காட்டுபகுதியில் இருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு

காட்டுபகுதியில் இருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு

காட்டுபகுதியில் இருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு ,மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனை காட்டை அண்டிய பகுதியில், வீசப்பட்ட நிலையில், ஆண் சிசுவின் சடலம் சனிக்கிழமை (15) காலையில் மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

ஆண் சிசுவை பெற்றெடுத்த பெண் ஒருவர் அந்த சிசுவை உரைப்பையில் கட்டிக் கொண்டு சென்று, அதனை சந்திவெளி பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை 9 மணியளவில் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸார், நீதிமன்ற உத்தரவை பெற்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், சிசுவை சம்பவதினமான இன்று பிறந்துள்ளதாகவும் சிசுவை பெற்றெடுத்து வீசிய பெண்ணை தேடிவருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.