போக்குவரத்து சட்டங்களை மீறிய மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்
Posted in இலங்கை செய்திகள்

போக்குவரத்து சட்டங்களை மீறிய மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

போக்குவரத்து சட்டங்களை மீறிய மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

போக்குவரத்து சட்டங்களை மீறிய மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல் விதிகளை மீறியவர்களின் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்

பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள்

கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் உட்பட புறநகர் பகுதிகளில் நேற்று (29) மாலை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளை செலுத்தியமை சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை

இதன்போது மோட்டார் சைக்கிள் ஆவணம் காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்தியமை சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள்

பயணித்தமை, அதிவேகமாக செலுத்தியமை, மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள், தலைக்கவசம் இன்றியும் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட

முக்கிய ஆவணங்கள் இன்றி பயணித்தமை உள்ளிட்ட பொது போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 25க்கும் மேற்பட்ட

மோட்டார் சைக்கிள்கள் உட்பட அதனை செலுத்தியவர்கள் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இச்சோதனை நடவடிக்கையானது கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர ஆலோசனையில் அம்பாறை

மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி

நெறிப்படுத்தலில் அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் தலைமையில் இடம்பெற்றது.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ்

பரிசோதகருமான பி.ரி நஸீர் உள்ளிட்ட பொலிஸார் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார்

சைக்கிள்கள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

மேலும் நேற்றைய தினம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் சுமார் 05 வீதி விபத்துக்கள் இடம்பெற்றிருந்ததுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் விபத்துக்களை குறைப்பதற்கு நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்கள் உடனடியாக அதனை அகற்றுமாறும், அதற்கான விசேட வேலைத்திட்டம்

முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கல்முனை தலைமையக மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான பி.ரி.நஸீர் தெரிவித்துள்ளார்.

செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதி
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதி

செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதி

செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதி செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன்,

அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதனை சுற்றப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை முற்றாக அகழ்ந்து எடுத்த பின்னர், சட்ட வைத்திய அதிகாரியின்

எலும்பு கூடுகள்

அறிக்கையின் பிரகாரமே குறித்த எலும்பு கூடுகள் தொடர்பில் உறுதியாக கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிறியவர்கள்

மற்றும் சிசுக்களின் எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

அத்துடன் ஒன்றுடன் ஒன்று அருகருகே புதைக்கப்பட்ட கால்கள் மடிந்த நிலையிலும், எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவை அசாதாரணமாகவே புதைக்கப்பட்டுள்ளன என்பது கண்களுக்கு

மீட்கப்படும் எலும்பு கூட்டு தொகுதி

புலனாகின்ற போதிலும், மீட்கப்படும் எலும்பு கூட்டு தொகுதிகளை சட்ட வைத்திய அதிகாரி ஆய்வுகளுக்கு உட்படுத்தி சட்ட வைத்திய அதிகாரியின்

அறிக்கையின் பிரகாரமே மேலதிக தகவல்களை கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் வரையில் கட்டம் கட்டமாக 46 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 174 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள

அதேவேளை இதுவரையில் 187 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது

துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது

துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது மஹரகம, நாவின்ன சந்திக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச்

சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, 39 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள்

மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள், கிடைத்த தகவலின் அடிப்படையில் கொட்டாவை பகுதியில்

மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இந்தச் சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2025 ஓகஸ்ட் 6 ஆம் திகதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என பொலிஸார் உறுதி செய்தனர்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி

விசாரணையின்போது, சந்தேக நபரின் வீட்டில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், போர் 12 ரக தோட்டாக்கள் மூன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிரிவத்துடுவையைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்

யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலில்

ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலில் இருந்து செம்மணி நோக்கி பேரணி ஒன்று ஆரம்பமாகியுள்ளது.

உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம், தமிழின அழிப்புக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப்

புதைகுழிகள் குறித்தும் சர்வதேச சுயாதீன விசாரணை

புதைகுழிகள் குறித்தும் சர்வதேச சுயாதீன விசாரணையைக் கோரி வட கிழக்கில் இன்றைய தினம் ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பொது அமைப்புக்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஒட்டுமொத்த தமிழ்க் கட்சிகளும் இப்போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவை வழங்கி கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராஜித விளக்கமறியிலில்
Posted in இலங்கை செய்திகள்

ராஜித விளக்கமறியிலில்

ராஜித விளக்கமறியிலில்

ராஜித விளக்கமறியிலில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (29) அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிபதியின் உத்தரவின்படி

நீதிபதியின் உத்தரவின்படி, ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார்.

கரடி தாக்கியதில் பெண்ஒருவர் காயம்
Posted in உலக செய்திகள்

கரடி தாக்கியதில் பெண்ஒருவர் காயம்

கரடி தாக்கியதில் பெண்ஒருவர் காயம்

கரடி தாக்கியதில் பெண்ஒருவர் காயம் ,காலை ஜாகிங் சென்றபோது கரடி தாக்கியதில் பெண் ஒருவர் ‘பலத்த காயம்’ அடைந்தார்

அலாஸ்காவில் அதிகாலை ஜாகிங் சென்றிருந்தபோது, ​​தனது வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அருகில் கரடி தாக்கியதில் ஒரு பெண் “பலத்த காயம்” அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கெனாய் காவல் துறை

செவ்வாய்க்கிழமை அதிகாலை அலாஸ்காவில் உள்ள கெனாய் காவல் துறைக்கு காலை 6:58 மணிக்கு ஒரு அழைப்பு வந்தபோது, ​​கெனாய் சினூக்

டிரைவ் சந்திப்பிற்கு அருகில் கரடி தாக்குதல் நடந்ததாக அலாஸ்கா பொது பாதுகாப்புத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

36 வயது பெண் ஒருவர் ஜாகிங் செல்ல

“[ஒரு] விசாரணையில், 36 வயது பெண் ஒருவர் ஜாகிங் செல்ல அதிகாலை 5:45 மணிக்கு தனது வீட்டை விட்டு வெளியேறி, ஆரம்ப தாக்குதல் நடந்தபோது

தனது வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அருகில் இருந்ததாக தெரியவந்தது,” என்று போலீசார் தெரிவித்தனர்.

ஒரு பக்கத்து வீட்டுக்காரர் இறுதியில் வெளியே வந்து, பெயர் குறிப்பிடப்படாத பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடித்து, சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

பாடசாலையை தாக்குவோம் மிரட்டிய மாணவர்கள் கைது
Posted in உலக செய்திகள்

பாடசாலையை தாக்குவோம் மிரட்டிய மாணவர்கள் கைது

பாடசாலையை தாக்குவோம் மிரட்டிய மாணவர்கள் கைது

பாடசாலையை தாக்குவோம் மிரட்டிய மாணவர்கள் கைது ,டெக்சாஸ் உயர்நிலைப் பள்ளியை ‘சுடுவேன்’ என்று மிரட்டியதற்காக 2 மாணவர்கள் கைது: காவல்துறை.

டெக்சாஸ் உயர்நிலைப் பள்ளியை ‘சுடுவேன்’ என்று மிரட்டியதற்காக இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கிளெமென்ஸ் உயர்நிலைப் பள்ளி பள்ளி வள அதிகாரியை வியாழக்கிழமை பள்ளி நிர்வாகிகள் தொடர்பு கொண்டு,

மாணவர்கள் கடந்த வாரம் பயங்கரவாத மிரட்டல்

இரண்டு ஆண் மாணவர்கள் கடந்த வாரம் பயங்கரவாத மிரட்டல் விடுத்ததாக ஷெர்ட்ஸ் காவல் துறை தெரிவித்துள்ளது.

விசாரணையின் போது, ​​ஒரு மாணவர் “பள்ளியைச் சுடுவேன்” என்ற விருப்பத்தை வெளிப்படுத்தியதாக தெரியவந்தது, இருப்பினும் அவரிடம் எந்த துப்பாக்கிகளும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

இரண்டாவது மாணவர் “ஆயுதங்களை வழங்க முடியும்” என்று கூறினார்.

ஆதாரங்கள் பெறப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மூன்றாவது மாணவர் இந்த மிரட்டல்களை பள்ளி நிர்வாகிகளிடம் தெரிவித்தார், மேலும் பயங்கரவாத மிரட்டல் குற்றச்சாட்டை ஆதரிக்க வீடியோ ஆதாரங்கள் பெறப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பயங்கரவாத மிரட்டல் விடுத்ததற்காக இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டனர், இது டெக்சாஸில் மூன்றாம் நிலை குற்றமாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஆயுத கண்காட்சியில் கலந்துகொள்ள இஸ்ரேலுக்கு தடை
Posted in உலக செய்திகள்

ஆயுத கண்காட்சியில் கலந்துகொள்ள இஸ்ரேலுக்கு தடை

ஆயுத கண்காட்சியில் கலந்துகொள்ள இஸ்ரேலுக்கு தடை

ஆயுத கண்காட்சியில் கலந்துகொள்ள இஸ்ரேலுக்கு தடை இஸ்ரேலிய அதிகாரிகள் முக்கிய ஆயுத கண்காட்சியில் கலந்து கொள்ள இங்கிலாந்து தடை விதித்துள்ளது

இஸ்ரேலின் காசா மீதான போர் தொடர்பாக இரு நட்பு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருவதால், அடுத்த மாதம் நடைபெறும் லண்டன் .

ஆயுத கண்காட்சியில் கலந்து கொள்ள பிரிட்டிஷ் அரசாங்கம்

ஆயுத கண்காட்சியில் கலந்து கொள்ள பிரிட்டிஷ் அரசாங்கம் இஸ்ரேலிய அதிகாரிகளைத் தடை செய்துள்ளது.

“DSEI UK 2025 இல் கலந்து கொள்ள எந்த இஸ்ரேலிய பிரதிநிதிகளும் அழைக்கப்பட மாட்டார்கள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்,” என்று

பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை AFP செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 9-12 வரை நடைபெறும் இந்த இருபதாண்டு கண்காட்சி, உலகின் மிகப்பெரிய ஆயுத வர்த்தக கண்காட்சிகளில் ஒன்றாகும்.

இஸ்ரேலின் கடுமையான கட்டுப்பாடு

இஸ்ரேலுக்கான சில ஆயுத ஏற்றுமதி உரிமங்களை லண்டன் நிறுத்தி வைத்தது, சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தைகளை முடக்கியது, மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் இஸ்ரேலின் கடுமையான கட்டுப்பாடு களுக்கு

மத்தியில் பஞ்சம் நிலவிய காசா மீதான தாக்குதல் தொடர்பாக இரண்டு தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மே மாதம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் அரசாங்கம் பகுதியளவு இடைநிறுத்திய போதிலும், ஐக்கிய இராச்சிய

நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு இராணுவப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

“ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதற்கு” இஸ்ரேல் உறுதியளித்தால் தடையை ரத்து செய்யலாம் என்று பிரிட்டன் கூறியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான போர் தொடர்பாக ஐரோப்பிய அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மே மாதம், பாரிஸ் விமான கண்காட்சியில் இஸ்ரேலிய ஆயுத உற்பத்தியாளர்கள் “தாக்குதல் ஆயுதங்களை” காட்சிப்படுத்துவதை பிரான்ஸ் தடை செய்தது.

இஸ்ரேல் தாக்குதலில் 63000பேர் பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் 63000பேர் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 63000பேர் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 63000பேர் பலி ,காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 63,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

24 மணி நேரத்தில் காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 23 உதவி கோருபவர்கள் உட்பட குறைந்தது 59 பாலஸ்தீனியர்கள்

கொல்லப்பட்டுள்ளதாகவும், 224 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

காசா மீதான இஸ்ரேலின் போரில்

அக்டோபர் 7, 2023 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 63,025 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 159,490 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

மே 27 ஆம் தேதி அமெரிக்காவை தளமாகக் கொண்ட GHF மூலம் இஸ்ரேல் புதிய உதவி விநியோக பொறிமுறையை அறிமுகப்படுத்தியதிலிருந்து

கொல்லப்பட்ட உதவி கோருபவர்களின் மொத்த எண்ணிக்கை 2,203 ஐ எட்டியுள்ளது, 16,228க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட “பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக” ஐந்து இறப்புகளையும் அமைச்சகம் பதிவு செய்துள்ளது.

மொத்த இறப்புகளின் எண்ணிக்கை

இதன் மூலம் பட்டினி தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 322 ஆக உயர்ந்துள்ளது, இதில் 121 குழந்தைகள் அடங்கும்.

மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து காசா மீதான இஸ்ரேலின் முழுமையான முற்றுகை, அதன் 2.4 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு பேரழிவு தரும்

நிலைமைகளை உருவாக்கியுள்ளது, இது பஞ்சம், பரவலான நோய் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் சரிவுக்கு வழிவகுத்தது.

இஸ்ரேல் முக்கிய பகுதிகள் அலறின
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் முக்கிய பகுதிகள் அலறின

இஸ்ரேல் முக்கிய பகுதிகள் அலறின

இஸ்ரேல் முக்கிய பகுதிகள் அலறின வியாழக்கிழமை, ஏமனில் இருந்து ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, காசா பகுதிக்கு அடுத்ததாக அமைந்துள்ள பானி நெட்சாரிம் மாவட்டத்தில் இஸ்ரேலிய ஆட்சி சைரன்களை எழுப்பியது.

காசா பகுதியின் புறநகரில்

லெபனான் வலையமைப்பின்படி, காசா பகுதியின் புறநகரில் அமைந்துள்ள பானி நெட்சாரிம் பகுதியில் சைரன்கள்

எச்சரிக்கை செய்யப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்தது.

சைரன்கள் இயக்கப்பட்டதாக இராணுவம் அறிவித்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் ஒரு ட்ரோன் நுழைந்த பிறகு எச்சரிக்கை சைரன்கள் இயக்கப்பட்டதாக இராணுவம் அறிவித்தது.

டெல் அவிவ் ட்ரோனை இடைமறித்ததாகவும் கூறியது.

ஏமனில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் ட்ரோன் நுழைந்ததாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்தது.

ஈரானுக்கு எதிரான ஐரோப்பிய நடவடிக்கை
Posted in உலக செய்திகள்

ஈரானுக்கு எதிரான ஐரோப்பிய நடவடிக்கை

ஈரானுக்கு எதிரான ஐரோப்பிய நடவடிக்கை

ஈரானுக்கு எதிரான ஐரோப்பிய நடவடிக்கைக்கு சட்டப்பூர்வ விளைவு இல்லை: ரஷ்யா

ரஷ்யாவின் முதல் துணை நிரந்தர பிரதிநிதி

வியாழக்கிழமை, ஐ.நா.வுக்கான ரஷ்யாவின் முதல் துணை நிரந்தர பிரதிநிதி டிமிட்ரி பாலியன்ஸ்கி, ஈரான் மீது மீண்டும்

ஸ்னாப்பேக் தடைகளை விதிக்கும் முடிவு “சட்டப்பூர்வ விளைவு இல்லை” என்று கூறினார்.

பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு (UNSC) முறையாக

அறிவித்துள்ளன, அவை தெஹ்ரான் மீதான தடைகளை நிறுத்தி வைப்பதை நீட்டிக்கும் தீர்மானத்தை கவுன்சில்

நிறைவேற்றத் தவறினால், 30 நாட்களுக்குள் ஈரான் மீது ஐ.நா. தடைகளை மீண்டும் விதிக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளன.

மூன்று ஐரோப்பிய நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு

E3 என அழைக்கப்படும் மூன்று ஐரோப்பிய நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு எழுதிய கடிதத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.

E3 நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) என்று அழைக்கப்படும் ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடனான

அதன் ஒத்துழைப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெஹ்ரான் கூறியது.

வியாழக்கிழமை, ஐ.நா.வுக்கான ரஷ்யாவின் முதல் துணை நிரந்தர பிரதிநிதி டிமிட்ரி பாலியன்ஸ்கி, ஈரான் மீது மீண்டும் ஸ்னாப்பேக் தடைகளை விதிக்கும் முடிவு “சட்டப்பூர்வ விளைவு இல்லை” என்று கூறினார். நியூயார்க்கில்

செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “E3-ன் முடிவு எந்த சட்ட அல்லது நடைமுறை விளைவுகளையும் ஏற்படுத்தாது மற்றும் ஏற்படுத்தக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். இது ஒரு தீவிர நடவடிக்கை மட்டுமே.”

குறிப்பாக, முந்தைய நாளில், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2231-ன் செல்லுபடியை ஏப்ரல் 2026 வரை

ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க ரஷ்யாவின் உந்துதலை பாலியன்ஸ்கி அறிவித்திருந்தார்

இஸ்ரேலிய தாக்குதல்களில் தளபதிகள் குறி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலிய தாக்குதல்களில் தளபதிகள் குறி

இஸ்ரேலிய தாக்குதல்களில் தளபதிகள் குறி

இஸ்ரேலிய தாக்குதல்களில் தளபதிகள் குறி வைக்கப்பட்டதை யேமன் அதிகாரி மறுக்கிறார்

வியாழக்கிழமை வான்வழித் தாக்குதல்களில் யேமன் இராணுவத் தளபதிகள் குறிவைக்கப்பட்டதாக இஸ்ரேலிய ஆட்சியின் கூற்றை யேமன் அன்சாருல்லா அதிகாரி மறுத்தார்.

ஏமன் தலைநகர் சனாவில்

ஏமன் தலைநகர் சனாவில் வியாழக்கிழமை இஸ்ரேலிய ஆட்சியின் இராணுவம் தாக்குதல் நடத்தியது. வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து,

அன்சாருல்லா அரசாங்கத் தலைமையிலான இராணுவத்தின் தளபதிகள் குறிவைக்கப்பட்டதாக இஸ்ரேலிய ஆட்சி ஊடகங்கள் கூறின.

வியாழக்கிழமை தனது படைகள் சனா பகுதியில் உள்ள ஒரு இராணுவ இலக்கைத் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

இருப்பினும், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தலைமைத் தளபதி உட்பட யேமன் தளபதிகளை இந்தத் தாக்குதல் குறிவைத்ததாக இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியான செய்திகளை யேமன் அதிகாரி நஸ்ர் அல்-தின் அமர் மறுத்தார்.

“காசாவை ஆதரிக்கும் நிலைப்பாட்டினால் பொதுமக்கள் இலக்குகள் மற்றும் முழு யேமன் மக்களையும் குறிவைப்பதுதான் நடக்கிறது,” என்று அவர் X இல் பதிவிட்டதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

இனப்படுகொலைப் போரில் சியோனிச ஆட்சி

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக காசா பகுதிக்கு எதிரான இனப்படுகொலைப் போரில் சியோனிச ஆட்சியின் நிலைப்பாடுகளை யேமன்கள் குறிவைத்து வருகின்றனர்.

இதற்கிடையில், ஆக்கிரமிப்புக்குப் பிறகு வியாழக்கிழமை ஏமன் அன்சாருல்லா பாப்புலர் இயக்கத்தின் அரசியல் அலுவலகம் ஒரு

அறிக்கையில், இஸ்ரேலிய தாக்குதல்களால் காசாவிற்கான நாட்டின் மக்களின் ஆதரவு பாதிக்கப்படாது என்று அறிவித்தது.

இருந்தால் தலைவன் அவனே
Posted in பாடல்கள்

இருந்தால் தலைவன் அவனே

இருந்தால் தலைவன் அவனே

இருந்தால் தலைவன் அவனே கேசவன் அவர்கள் எழுதிய பாடல் இன்று வெளியீடு செய்ய பட்டுள்ளது .

கேசவன் அவர்கள் எழுதிய இருந்தால்தலைவன் அவனே

பிரிட்டனில் வசிக்கும் பாடல் ஆசிரியர் கேசவன் அவர்கள் எழுதிய இருந்தால் தலைவன் அவனே என்கின்ற பாடலை எழுதியுள்ளார் .

55வது பாடலாகவும் 19வது பாடல் ஆசிரியராக வன்னி மைந்தன் tik tok தளம் மற்றும் எதிரி இணையத்தினால் அறிமுகப்படுத்தப்படுகிறார்.

இசை இளங்கோ செல்லப்பா

இந்தப் பாடலை உயிர் கொடுத்து சிறப்பாக பாடகர் பாவேந்தன் அவர்கள் பாடிட அதற்கான இசையினை, இளங்கோ செல்லப்பா அவர்கள் அழகுற அமைத்துள்ளார்.

இந்த பாடல் வெற்றி பெற உழைத்த அனைவருக்கும் எமது நன்றிகள் பாராட்டை தெரிவித்து கொள்கிறோம் .

இதில் அழுத்தி இருந்தால் தலைவன் அவனே என்ற காணொளியை பாருங்கள்

பொலிஸ் அதிகாரி காயம் தாக்கிய நபர்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரி காயம் தாக்கிய நபர்

பொலிஸ் அதிகாரி காயம் தாக்கிய நபர்

பொலிஸ் அதிகாரி காயம் தாக்கிய நபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​பொலிஸ் அதிகாரி ஒருவரை

காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரி ஒருவரை போத்தலால் தாக்கி காயம்

கடந்த 26 ஆம் திகதி பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை போத்தலால் தாக்கி காயம் ஏற்படுத்தி பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு

இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் களுத்துறையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் நேற்று (27) கைது செய்யப்பட்டு கொம்பனித் தெரு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் நாகொடை

கைது செய்யப்பட்ட நபர் நாகொடை, களுத்துறை பகுதியைச் சேர்ந்த 52 வயதான முன்னாள் நகர சபை உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கொம்பனித் தெரு பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலகக் குழு தலைவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலகக் குழு தலைவர்கள்

இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலகக்குழு தலைவர்கள்

இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலகக் குழு தலைவர்கள் ,இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலகக் குழு தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள்

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில், இலங்கையின் முன்னணி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின்

தலைவர்களாகக் கருதப்படும் கெஹல்பத்தர பத்மே உட்பட ஐந்து பாதாள உலகக் குழு தலைவர்கள்,

இலங்கை பொலிஸார் மற்றும் ஜகார்த்தா பொலிஸாரின் விசேட குழுவால்

இலங்கை பொலிஸார் மற்றும் ஜகார்த்தா பொலிஸாரின் விசேட குழுவால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.

பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பாணந்துரை நிலங்க, பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி ஹிரு ஆகியோர் இதன்போது கைது செய்யப்பட்டனர்.

அவர்களுடன் இருந்த பெக்கோ சமனின் மனைவியும் கைது செய்யப்பட்டதாகவும், மூன்று வயது குழந்தை பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றத்தின் கூண்டில் பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவா

என்ற சஞ்சீவ குமார சமரரத்ன சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கெஹல்பத்தர பத்மே மீது குற்றம் சாட்டப்பட்டது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்

விசாரணையில் குற்ற கும்பலைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் அவிஷ்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கணேமுல்ல சஞ்சீவாவை கொலை செய்ததாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கூறியிருந்தார்.

மேலும், கெஹெல்பத்தர பத்மே உள்ளிட் இந்தக் குழு மீது பல்வேறு குற்றச் செயல்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இதுபோன்ற பின்னணியில், கெஹெல்பத்தர பத்மேவுக்கு நெருக்கமான பாதாள உலகக் குழு கும்பல்களைச் சேர்ந்த பலர் கடந்த காலங்களில் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி, கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் ‘பஸ் தேவா’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் வலையமைப்பு சிக்கியது

அவரிடம் முன்னெடுத்த விசாரணைக்கு அமைய, ​​கெஹெல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் வலையமைப்பை நாட்டில் நடத்தி வரும் வலஸ் கட்டா என்ற

திலின சம்பத்தும் ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு, கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி கஜ்ஜா என்ற அனுர

விதானகமகே மற்றும் அவரது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ததற்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

பிடியாணையை எதிர்த்து ராஜித மனு தாக்கல்
Posted in இலங்கை செய்திகள்

பிடியாணையை எதிர்த்து ராஜித மனு தாக்கல்

பிடியாணையை எதிர்த்து ராஜித மனு தாக்கல்

பிடியாணையை எதிர்த்து ராஜித மனு தாக்கல் தம்மை கைது செய்வதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை இடைநிறுத்த

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன

உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தாக்கல் செய்த திருத்த மனுவை விசாரணைக்கு

எடுப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி

வைக்க இடைக்கால இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அவரது சட்டத்தரணிகள் கோரிய

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைப்பாணை

போதிலும், உத்தரவைப் பிறப்பிக்காத மேல் நீதிமன்றம், பிரதிவாதியான இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைப்பாணை மாத்திரம் விடுப்பதாக தெரிவித்துள்ளது.

சந்தேகநபரான ராஜித சேனாரத்னவிற்கு நாளை (29) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து விடுக்கப்பட்டுள்ள

அழைப்பாணைக்கு அமைய நாளை அவர் கட்டாயம் அந்த நீதிமன்றில் முன்னிலையாவார் என சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்தார்.

பின்னர் மனுவை செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க திகதியிடப்பட்டது.

விமான விபத்து விமானப்படை எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

விமான விபத்து விமானப்படை எச்சரிக்கை

விமான விபத்து விமானப்படை எச்சரிக்கை

விமான விபத்து விமானப்படை எச்சரிக்கை இந்த நாட்களில் பிரபலமாக இருக்கும் பட்டம் விடும் செயற்பாட்டால் ஏற்படக்கூடிய விமான விபத்துகள் குறித்து விமானப்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பும் பட்டம் விடும் இக்காலப்பகுதியில், ஓடுபாதைகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் பட்டம்

ஆபத்தான செயலாகும் என விமானப்படை அறிக்கை

விடுவது மிகவும் ஆபத்தான செயலாகும் என விமானப்படை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

உலகளவில் விமான விபத்துகளுக்கு ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் பறப்பது முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்பதையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

விமானங்கள் பறப்பதற்கு நேரடித் தடை

விமானங்கள் பறப்பதற்கு நேரடித் தடையாக பட்டம் பறப்பது இருப்பதாகவும், கட்டுநாயக்க, இரத்மலானை, ஹிங்குராக்கொட, சீனகுடா, பலாலி, கட்டுகுருந்த, கொக்கல, வவுனியா, வீரவில மற்றும் மத்தள போன்ற பகுதிகளில்

ஓடுபாதைகளுக்கு அருகில் அடிக்கடி பட்டங்கள் பறப்பது மிகவும் ஆபத்தான பிரச்சினை என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர்

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர்

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர் ,இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர்கள் வேலைநிறுத்தம்.

இலங்கை போக்குவரத்து சபை

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நேற்று (27) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில் பேருந்துகளை இயக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு சில கோரிக்கைகளை

முன்வைத்தும் இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் ஐக்கிய சேவை சங்கத்தின் தலைவர் நிரோஷன் சம்பத் பிரேமரத்ன தெரிவித்தார்.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்

அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டு நேர அட்டவணையில் பல சிக்கல்கள் இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அனைத்து தரப்பினரின் கருத்துக்களின் அடிப்படையிலேயே கூட்டு நேர அட்டவணை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பதால், வேலைநிறுத்தம் நியாயமற்றது என்று போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குமார குணசேன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை செயல்படுத்துவதாக அறிவித்த போதிலும், நேற்று

நள்ளிரவு முதல் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்குவதாக “அத தெரண” செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்
Posted in இலங்கை செய்திகள்

அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்

அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானி திருத்தம்

அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம் ரயில் நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்.

ரயில் நிலைய அதிபர்கள் பதவி

ரயில் நிலைய அதிபர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு .

திருத்தத்திற்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மூன்று நீதியர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன் அழைக்கப்பட்ட

போது, ​​சிரேஸ்ட அரச சட்டத்தரணி இதனை அறியப்படுத்தியுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஸ்ட அரச சட்டத்தரணி

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஸ்ட அரச சட்டத்தரணி நயநதாரா பாலபட்டபெந்தி, குறித்த வர்த்தமானி அறிவிப்பு திருத்தத்திற்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த மனுவின் முன்னேற்றம் குறித்து அறிவிக்க மற்றொரு திகதியில் அழைக்கப்பட வேண்டும் என்றும் அரச சட்டத்தரணி கோரினார்.

அதன்படி, குறித்த மனுவை ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ரயில் நிலைய அதிபர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்காக சமீபத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் ஆண்கள் மட்டுமே

பொருத்தமான பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

இதன் ஊடாக தகுதிவாய்ந்த பெண்கள் அந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும் தேர்ந்தெடுக்கப்படவும் உள்ள வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதன் ஊடாக தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், பெண்களும் விண்ணப்பிக்கும் வகையில் குறித்த

வர்த்தமானி அறிவிப்பைத் திருத்துமாறு பிரதிவாதியான ரயில்வே திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம், கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளியாப்பிட்டிய விபத்து சாரதிக்கு விளக்கமறியல்
Posted in இலங்கை செய்திகள்

குளியாப்பிட்டிய விபத்து சாரதிக்கு விளக்கமறியல்

குளியாப்பிட்டிய விபத்து சாரதிக்கு விளக்கமறியல்

குளியாப்பிட்டிய விபத்து சாரதிக்கு விளக்கமறியல் குளியாப்பிட்டிய, விலபொல சந்தியில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேர்

உயிரிழந்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட டிப்பர் வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று (27) காலை விலபொல சந்தியில் உள்ள பல்லேவெல பாலத்தில் டிப்பர் வாகனமும் பாடசாலை

வேனும் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு

வேனும் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் மேலும் 13 பாடசாலை மாணவிகள் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக குளியாப்பிட்டி பொலிஸார் டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்து இன்று குளியாப்பிட்டி நீதவான் ரந்திக லக்மல் ஜயலத் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சந்தேகநபரான டிப்பர் வாகனத்தின் சாரதியை செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

தூக்கமின்றி வாகனம் ஓட்டிய சாரதி

அத்துடன் குறித்த சாரதி 24 மணி நேரத்திற்கும் மேலாக தூக்கமின்றி வாகனம் ஓட்டியதாக தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அதன்படி, எதிர்காலத்தில் குறித்த டிப்பர் வண்டியின் உரிமையாளருக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.