வவுனியாவில் சிறை கைதி சிறையுடைத்து தப்பி ஓட்டம்
வவுனியாவில் சிறை கைதி சிறையுடைத்து தப்பி ஓட்டம்
வவுனியாவில் சிறை கைதி ஒருவர் சிறையுடைத்து தப்பி ஓடியுள்ளார் ,இவ்வாறு ஓடிய சிறை கைதியை மீளவும் கைது செய்திடும் நடடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் .
பலத்த பாதுகாப்பு நிறைந்த சிறை சாலையில் இருந்து கைதி தப்பி ஓடியது எப்படி என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற்றனர் .
மேற்படி சிறை கைதி தப்பி ஓடிய சம்பவம் பொலிஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
Grid
நான்கு மாவட்டங்களில் நிலச்சரிவு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ஹில்மிக்கு பிணை
இலங்கையை மீண்டும் புயல் தாக்கும்
வடகிழக்கு பருவமழை நெருங்கி வந்தாலும் வெள்ளத்திற்கு
கிளிநொச்சியில் இந்தியா இராணுவம் நுழைவு
அக்கராஜன் குளத்தின் அணைக்கட்டில் உடைவு படங்கள் உள்ளே
ஹமாஸ் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கை விட்டு மக்கள் ஓட்டம்
ஹமாஸ் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கை விட்டு மக்கள் ஓட்டம்
ஹமாஸ் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கு பகுதியை விட்டு இஸ்ரேல் மக்கள் தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர் .
பாலஸ்தீனம் காசா எல்லையோரத்தில் குடியேற்ற பட்ட இஸ்ரேல் குடியேற்றவாசிகளே அங்கிருந்து தப்பி ஒடியுள்ளனர்
மீளவும் இதே பகுதிகளில் வந்து குந்தி வாழ மக்கள் அச்சம் கொண்டுள்ளனர் .
தொடர்ந்து எல்லைப்புற பகுதிகள் பாதுகாப்பற்ற அச்சுறுத்தல் காணப்படுவதால் ,தப்பி ஓடிய இஸ்ரேல் மக்கள் மீளவும் வந்து குந்திட முடியா தவித்து வருகின்றனர் .
பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நூற்று கணக்கில் மக்கள் காயம்
பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நூற்று கணக்கில் மக்கள் காயம்
பாலஸ்தீனம் காசா மக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்று கணக்கில் மக்கள் காயமடைந்துள்ளனர் .
காசா பகுதியில் தங்கி இருந்த மக்கள் மீது நடத்திய தாக்குதல் 22 மக்கள் பலியாகியும் 190 மக்கள் காயமடைந்துள்ளனர் .
கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற தாக்குதலில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
சர்வதேச நீதிமன் உத்தரவுகளை மீறி நெதன்யாகு அரசு இனப்படுகொலையை நடத்திய வண்னம் உள்ளமை குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் துறைமுகத்தில் அமெரிக்கா கப்பல் மீது தாக்குதல்
ராஜபக்சர்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள்
ராஜபக்சர்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள்
ராஜபக்சர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை. ஆகவே ஒரு கையால் ராஜபக்சர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம். நாம் இன்று இருக்கும் இடத்தில் செளக்கியமாக இருக்கிறோம்.
கோதாபய ராஜபக்ச போனாலும், அவரது பாவத்தின் நிழல் போகவில்லை. சட்டப்படி கோதாபய ராஜபக்ச 16 ஆம் திகதி நவம்பர் 2019 தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையுடன்தான் இந்த அரசு நடக்கிறது.
அந்த பாவத்தில் எமக்கு பங்கு வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
நாட்டில் உருவாகிவரும் புதிய கூட்டணிகளிடமிருந்து தமது அணியை நோக்கி வரும் அழைப்புகள் பற்றி, தென்கொழும்பு கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் மனோ எம்பி மேலும் தெரிவிக்கையில்,
30 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணி நண்பர்கள் என்னுடன் பேசிய போது தெளிவாக ஒன்றை சொன்னேன்.
ஒரு கையால் ராஜபக்சர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம் என்று சொன்னேன்.
நாம் இன்று இருக்கும், ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற இடத்தில் நாம் செளக்கியமாகவே இருக்கிறோம் எனவும் சொன்னேன்.
தமிழ் முற்போக்கு கூட்டணி நினைத்து இருந்தால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆகிய அடுத்த நாளே அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கலாம். ஆனால், அதை நாம் செய்யவில்லை.
ஏனென்றால் பேரினவாதம், ஊழல் ஆகிய இரண்டு பேரழிவுகளுக்கும் ஏகபோக உரிமையாளர்களான ராஜபக்சர்களுடன் கலப்பு கல்யாணம் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணி தயார் இல்லை.
ராஜபக்சர்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள்
எங்கள் இந்த கொள்கை நிலைப்பாடு காரணமாகத்தான் நாம் இன்று ராஜபக்ச ஆதரவு ரணில் அரசாங்கத்தில் இடம்பெறவில்லை.
இன்று இந்த ராஜபக்ச ஆதரவு ரணில் அரசில் அங்கம் வகிப்பவர்கள், தாம் ஏதோ வெட்டி முறித்து விட்டதாக தப்பு கணக்கு போட்டு விடக்கூடாது. நாம் அங்கே கொள்கை நிலைப்பாடு காரணமாக இல்லை.
ஆகவேதான் நீங்கள் அங்கே இருக்கிறீர்கள். அதுதான் உண்மை. சட்டப்படி கோதாபய ராஜபக்ச 16ம் திகதி நவம்பர் 2019 தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையுடன்தான் இன்றுவரை இந்த அரசு தொடர்கிறது. அந்த பாவத்தின் நிழலில் அங்கமான உங்களுக்கு பாவத்தின் சம்பளம் அடுத்த தேர்தலில் கிடைக்கும்.
16 ஆம் திகதி நவம்பர் 2019 முதல் இன்று வரை, நான்கு வருடங்கள், இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. கடந்த நான்கு வருடங்களாக இந்த அரசாங்கத்தின் பதவிகளில் இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகளிடம், நீங்கள் இதுவரை வெட்டி முறித்த சாதனைகளை முடியுமானால் பட்டியல் இடுங்கள் என பகிரங்க சவால் விடுகிறேன். அபிவிருத்தி செய்ய நிதி இல்லை என்பீர்கள்.
சரி, அபிவிருத்தியை விடுங்கள். அரச நிர்வாகரீதியாக தமிழ் மக்கள் தொடர்பில் நீங்கள் அமைச்சர்களாக, துணை அமைச்சர்களாக, அரசாங்க எம்பிகளாக இதுவரை என்ன செய்து கிழித்துள்ளீர்கள் என பகிரங்கமாக
சொல்லுங்கள்? வேண்டுமானால், நாம் ஆட்சியில் இருந்த நான்கு ஆண்டுகளில் நாம் செய்த சாதனைகளையும், இன்று நீங்கள் இந்த நான்கு ஆண்டுகளில் செய்ய தவறிய சீர்கேடுகளையும் நான் பகிரங்கமாக பட்டியல் இடுகிறேன்.
எனவேதான், இந்த புதிய, பழைய பாவங்களின் கூட்டணியில் நாம் இல்லை. நாங்கள் சோரமும் போகவில்லை. பாவமும் செய்யவில்லை.
ஆகவே இந்த பாவத்தின் சம்பளம் எமக்கு கிடையாது. எனவே தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற முற்போக்கு அரசியல் இயக்கம், அடுத்து வரும் புதிய அரசாங்கத்தில், புதிய பலத்துடன், நேர்மையாக அங்கம் வகிக்கும் என தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மீட்பு
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மீட்பு
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். மாநகர எல்லையில் வைத்து 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிறேமதிலக தலைமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
எரிபொருட்களின் விலைகளும் அதிகரிப்பு
எரிபொருட்களின் விலைகளும் அதிகரிப்பு
சினோபெக் நிறுவனமும் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 368 ரூபாவாகவும், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றரின் புதிய விலை 456 ரூபாவாகவும் விலையை அதிகரித்துள்ளது.
ஒரு லீற்றர் ஆட்டோ டீசல் 360 ரூபாவாகவும், ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 468 ரூபாவாகவும் விலையை அதிகரித்துள்ளது.
நான்கு மாவட்டங்களில் நிலச்சரிவு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ஹில்மிக்கு பிணை
இலங்கையை மீண்டும் புயல் தாக்கும்
வடகிழக்கு பருவமழை நெருங்கி வந்தாலும் வெள்ளத்திற்கு
கிளிநொச்சியில் இந்தியா இராணுவம் நுழைவு
அக்கராஜன் குளத்தின் அணைக்கட்டில் உடைவு படங்கள் உள்ளே
காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம்
காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம்
முறையான காணி உரிமையின்றி நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருந்த இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் “உரித்து” வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு பெப்ரவரி (05)
திங்கட்கிழமை தம்புள்ளையில் நடைபெறவுள்ளதாக சுற்றுலா, காணி மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ரன் பூமி, ஜெய பூமி மற்றும் சுவர்ண பூமி போன்ற காணி அனுமதி பத்திரங்களை கொண்டிருந்த 10,000 இற்கும் மேற்பட்டவர்களுக்கு நிரந்தர காணி உறுதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டிற்குள் ஒரு மில்லியன் இளம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம்
இரு வருடங்களுக்கு முன்பு நாடு இருந்த நிலைமையை நினைத்துப் பார்க்க வேண்டும். கடுமையான நோய்ப் பாதிப்புக்கு உள்ளான நோயாளியை போல் இருந்தது. அந்த நேரத்தில் நோயாளியின் விருப்பத்திற்கு சிகிச்சை அளிக்கவே பலரும் முன்வந்தனர். ஆனால் ஒருவர் மட்டுமே நோய்க்கு பொறுத்தமான
மருந்துகளை வழங்கினார். நோயாளிக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை நோயாளி விரும்பாமல் இருக்கலாம். ஆனால் நோய் குணமாகிவிடும். நோயாளிக்கு தகுந்த சிகிச்சை வழங்கியதாலேயே நாடு சுமூக நிலைமைக்கு வந்துள்ளது.
நாம் யாருக்கும் சவால் விடுப்பதற்காக பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டின் வெற்றிக்காகவே பொறுப்புக்களை ஏற்றோம். அந்த சவாலை முடிந்தளவு வெற்றி கொள்வோம். கடந்த காலத்தில் சுற்றுலா கண்டிருந்த சரிவை சகலரும் அறிவர். அதன் இன்றைய நிலைமை தொடர்பிலும் அனைவரும் அறிவோம். சுற்றுலாத்துறை சடுதியாக அபிவிருத்தி கண்டுள்ளது.
தற்பொழுது கிரிக்கெட் தடையும் நீங்கியுள்ளது. பல வருடங்களுக்கு பின்னர் மேற்கிந்திய அணி அவுஸ்திரேலியாவை தோற்கடித்துள்ளது. அதுபோன்றதொரு எதிர்கால வெற்றியை நோக்கிச் செல்வதே எமது இலக்காகும்.
சந்தர்ப்பவாதிகள் சவால்களை ஏற்காமல் தப்பியோடுவர். ஆனால் நாடு அனைத்து துறைகளிலும் மோசமான வீழ்ச்சியினைக் கண்டிருந்தபோது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை மீளக் கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொண்டார். அன்று அந்தச் சவாலை ஏற்காமல் இருந்திருந்தால் இன்று இந்த நாடு மனிதர்கள் இல்லாத பாலைவனமாக இருந்திருக்கும்.
காணி, காணி உறுதிப்பத்திரம், வீடு உள்ளிட்டவை கனவாக இருக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவதே தற்போது எமக்கு உள்ள சவாலாகும். எனவே, அதற்காக விசேட திட்டமாக “உரித்து”
ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, அதனால் இலங்கையின் இரண்டு மில்லியன் மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்திருக்கிறோம். அதன்படி,
ரன் பூமி, ஜெய பூமி மற்றும் சுவர்ண பூமி போன்ற அனுமதி பத்திரங்களை கொண்டிருக்கும் 20 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நிரந்தர காணி உறுதியை வழங்கவுள்ளோம்.
காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம்
அதற்கான ஆரம்ப நிகழ்வு பெப்ரவரி 05 ஆம் திகதி தம்புள்ளையில் நடைபெறவுள்ளது. அன்றை தினம் 10,000 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது. அதன் பின்னர் நாட்டின் 14,000 கிராம சேவகர் பிரிவுகளை உள்வாங்கி இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அன்று கொவி ஜனபத வேலைத்திட்டம் பல இட்சம் பேருடைய வாழ்க்கையை முன்னேற்றியது. மகாவலி வேலைத்திட்டம் பலரது வாழ்வில் ஔியை ஏற்படுத்தியது. இன்று “உரித்து” வேலைத்திட்டத்தின் ஊடாக இலட்சக் கணக்கிலானவர்களின் வாழ்வு மேம்படும். சுதந்திரத்தின் பின்னர் இவ்வாறானதொரு திட்டம் முதல் முறையாக முன்னெடுக்கப்படுகிறது. அதனால் இதனை வரலாற்று நிகழ்வாக கருத வேண்டும். வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும்.
அது மட்டுமன்றி நாட்டின் இளம் சமூகத்தினரை தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் வேலைத்திட்டம் ஒன்றும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்கீழ் ஒரு மில்லியன் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதனால் இலங்கை மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஹிஸ்புல்லா ஏவுகணைகள் தாக்குதல் இஸ்ரேல் டவர் முகாம் புகைக்கிறது
ஹிஸ்புல்லா ஏவுகணைகள் தாக்குதல் இஸ்ரேல் டவர் முகாம் புகைக்கிறது
ஹிஸ்புல்லா ஏவுகணைகள் தாக்குதல் இஸ்ரேல் டவர் முகாம் புகைக்கிறது ,
ஹிஸ்புல்லா ஏவுகணை மழைக்குள் நனையும் இஸ்ரேல் முகாம்கள்
அமெரிக்கா போர் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்|எரியும் கப்பல்
அமெரிக்கா போர் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்|எரியும் கப்பல்
அமெரிக்கா போர் கப்பல் மீது ஹவுதிகள் செங்கடலில் வைத்து தாக்குதல்
புகைக்கும் அமெரிக்கா போர் கப்பல் ,வெளியாகியுள்ள காணொளிகள் காட்சிகள்
நான்கு மாவட்டங்களில் நிலச்சரிவு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ஹில்மிக்கு பிணை
இலங்கையை மீண்டும் புயல் தாக்கும்
வடகிழக்கு பருவமழை நெருங்கி வந்தாலும் வெள்ளத்திற்கு
கிளிநொச்சியில் இந்தியா இராணுவம் நுழைவு
அக்கராஜன் குளத்தின் அணைக்கட்டில் உடைவு படங்கள் உள்ளே
உக்ரைன் 20 000 இராணுவத்திற்கு பயிற்சி வழங்கும் ஐரோப்பா
உக்ரைன் 20 000 இராணுவத்திற்கு பயிற்சி வழங்கும் ஐரோப்பா
உக்ரைன் 20 000 இராணுவத்திற்கு சிறப்பு போர் பயிற்சி வழங்கும் ஐரோப்பா,உக்ரைன் இராணுவம் கோடைகாலம் முடிவதற்குள் பயிற்சி முடித்து வெளியேறுவார்கள் என அறிவிக்க பட்டுள்ளது .
ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வரும் போரில் பலத்த பாதிப்பை உக்ரைன் இராணுவம் சந்தித்து வருகிறது .
அதனை அடுத்து இந்த சிறப்பு பயிற்சிகளை ஐரோப்பா அவசரமாக வழங்கி உக்ரைன் படைகள் ரஸ்யாவுக்கு எதிராக போரிட தயார் படுத்தி வருகிறது .
ஐரோப்பா வழங்கும் இந்த சிறப்பு பயிற்சி ஊடாக உக்ரைன் நாட்டை ,ரஷ்ய போர் படை எடுப்பின் ஊடாக தடுத்து விட முடியுமா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
Grid
அமெரிக்கா பிரிட்டன் கப்பல்களை ஓட ஓட அடிப்போம் ஹவுதி
அமெரிக்கா பிரிட்டன் கப்பல்களை ஓட ஓட அடிப்போம் ஹவுதி
அமெரிக்கா பிரிட்டன் போர் கப்பல்களை ஓட ஓட அடிப்போம் என ஹவுதி
எச்சரிக்கை விடுப்பு .
அமெரிக்கா பிரிட்டன் நிலையில் ஹவுதிகள் இவ்விதம் தமது நிலையை அறிவித்துள்ளதால் செங்கடல் பர பரப்பில் மூழ்கியுள்ளது
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் தளபதிகள் மூவர் அவுட்|இஸ்ரேல் காசா போர்
யாழில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை
யாழில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தரோடை பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே உயிரிழந்தார்.
இறந்தவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட கோழிகள் சந்தேநபரின் வீட்டுக்குள் நுழைந்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கொலைக்கு வழிவகுத்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையை செய்த 54 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சடலம் தெலிப்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸ் விசேட யுக்திய நடவடிக்கையில் 729 பேர் கைது
பொலிஸ் விசேட யுக்திய நடவடிக்கையில் 729 பேர் கைது
பொலிஸ் விசேட யுக்திய நடவடிக்கையில் 729 பேர் கைது இன்று (31) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய நடவடிக்கையின் கீழ் மேலும் 729 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 499 சந்தேகநபர்களும் குற்றத்தடுப்பு பிரிவிற்கு அனுப்பப்பட்டிருந்த பட்டியலில் இருந்த 230 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட யுக்திய நடவடிக்கையில் 729 பேர் கைது
இந்த நடவடிக்கையின் போது 146 கிராம் ஹெரோயின் மற்றும் 119 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
மூன்று சந்தேக நபர்களிடம் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், போதைக்கு அடிமையான 04 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குற்றத் தடுப்பு பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட 230 சந்தேக நபர்களில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 19 சந்தேக நபர்களும், போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 204 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையின் போது காயமடைந்த அதிகாரி
சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையின் போது காயமடைந்த அதிகாரி
கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற 76 வது சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையின் போது காயமடைந்த அதிகாரி மற்றும் சிப்பாயின் நலம் குறித்து நேரில் விசாரிப்பதற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்.டபிள்யூ.பீ. ஆர்.எஸ்.பீ .என்.டி.யூ நேற்று (30) கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு விஜயம் செய்தார்.
திறந்த வான் பாய்ச்சலின் போது ஏற்பட்ட காயங்கள் குறித்து வருத்தம் தெரிவித்த இராணுவத் தளபதி, அதிகாரி மற்றும் சிப்பாயிடம் தனித்தனியாகப் பேசி, தனது வருத்ததினை வெளிப்படுத்தி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விசாரித்தார்.
சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையின் போது காயமடைந்த அதிகாரி
இராணுவத் தளபதி மருத்துவமனையில் மருத்துவ அதிகாரிகளைச் சந்தித்து காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு மிக உயர்ந்த தரமான சிகிச்சையை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அவர்கள் விரைவாக குணமடைய உறுதி வழங்கினார்.
புறப்படுவதற்கு முன், இராணுவத் தளபதி அவர்கள் மருத்துவ ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டினை அங்கீகரித்ததுடன், காயமடைந்த படையினருக்கு சிறந்த சிகிச்சைகளை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
அரசியலை விட்டு விலக தயார் கொத்து போட்ட புள்ளி
அரசியலை விட்டு விலக தயார் கொத்து போட்ட புள்ளி
65 வயதுக்கு முன்னர் அரசியலை விட்டு விலகி, நாட்டுக்கு புதிய முன்னுதாரணமாக விளங்கத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், அரச சேவையில் ஓய்வு பெறுவதற்கான வயதெல்லை இருப்பது போல், அரசியலுக்கும் அது நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நுகேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அரசியலை விட்டு விலக தயார் கொத்து போட்ட புள்ளி
“என்றாவது ஒரு நாள் என் கண் பார்வை குறையும், ஒரு நாள் என் செவித்திறன் குறையும். ஆனால் அதுதான் நிதர்சனம். அரசுப் பணியில் இருந்து 60 வயதில் ஓய்வு பெறுவது ஏன்? நீதிபதியும் 65 ஆண்டுகள் பணியாற்றலாம். கடந்த கால வரலாற்றில் ஒரு
ஆளுநருக்கு 80 வயது இருக்கும் போது, அவருக்கு பணிபுரியும் மன உறுதி உள்ளதா? எனது அரசியல் வாழ்க்கையில் நாங்கள் முன்னுதாரணமாக இருக்கிறோம். 65
ஆண்டுகளுக்கு முன் அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராக இருக்கிறோம். இங்கே எல்லோரும் அப்படித்தான். அதற்கு முன்னுதாரணமாக இருக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.
ஷசீந்திர ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சராக பதவியேற்ப்பு
ஷசீந்திர ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சராக பதவியேற்ப்பு
நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
புதிய இராஜாங்க அமைச்சரின் பதவிப் பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
பெலியத்தை ஐவர் படுகொலை மேலும் மூவர் கைது
பெலியத்தை ஐவர் படுகொலை மேலும் மூவர் கைது
பெலியத்தையில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹூங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், அன்றைய தினம் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேலும் ஒரு சந்தேக நபரை மாத்தறையில் வைத்து கைது செய்தனர்.
நீர்கொழும்பு, அலவ்வ மற்றும் புஸ்ஸ ஆகிய பகுதிகளை சேர்ந்த 28, 42 மற்றும் 58 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெலியத்தை ஐவர் படுகொலை மேலும் மூவர் கைது
இந்த சந்தேக நபர்கள், படுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கிகளை அப்புறப்படுத்தியதற்காகவும், குற்றச் செயல்களின் போது பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்தை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், கொலைகளுக்காக துப்பாக்கிகளை கொண்டு சென்ற குற்றத்திற்காக முன்னதாக இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கூதி சவூதி கடும் மோதல்
அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்
காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66
யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
ஹொரானாவில் சடலம் மீட்பு
நிதி மோசடி செய்தவர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்கள்
நிதி மோசடி செய்தவர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்கள்
கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் பிரமிட் நிதி நிறுவனமொன்றை நடத்தி 500 கோடி ரூபாவிற்கு மேல் மோசடி செய்த சந்தேகநபர்கள் தொடர்பில் மேலும் பல உண்மைகளை பொலிஸார் அம்பலப்படுத்தியுள்ளனர்.
2021ஆம் ஆண்டு, குறித்த சந்தேகநபருக்கு, தென் மாகாணத்தில் உள்ள பிரதான விகாரை ஒன்றின் விகாராதிபதியுடன் இருந்த தனிப்பிட்ட தொடர்பால் பஸ்நாயக்க நிலமே பதவி வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளதாக, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
நிதி மோசடி செய்தவர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்கள்
2021 ஆம் ஆண்டு, நாரஹேன்பிட்டியில் காணி உறுதிப் பத்திரம் தொடர்பான சர்ச்சையைத் தீர்ப்பதற்காக குறித்த சந்தேக நபர், அந்த விகாராதிபதிக்கு160 இலட்சம் ரூபாவை கொடுத்துள்ளார்.
பலம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவருடன் தொடர்புள்ள அந்த விகாராதிபதி குறித்த காணியை விற்பனை செய்வதாக சந்தேகநபரிடம் கூறி, அவருக்கு 80 இலட்சம் ரூபா மாத்திரமே வழங்கியுள்ளார்.
எஞ்சிய பணத்தினை தீர்க்கும் வகையில் விகாரையின் பஸ்நாயக்க நிலமே பதவியை குறித்த விகாராதிபதி சந்தேகநபருக்கு வழங்க நடவடிக்கை எடுத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.







































