வாகன விபத்தில் அருட்தந்தையொருவர் பலி
வாகன விபத்தில் அருட்தந்தையொருவர் பலி
மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்பன் நாற்சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (4) பதிவாகியுள்ளது .
மன்னார் மறை மாவட்டம் , சலேசியன் சபையைச் சேர்ந்த 34 வயதுடைய அருட்தந்தை மரிசால் டிலான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம் மன்னார் மடு தேவாலயத்தில் நடைபெற்றுள்ளதுடன் அதில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வருகையில் எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .
இதன் போது படுகாயமடைந்த அருட்தந்தையை மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிற்றுண்டிகளின் விலை குறைகின்றது
சிற்றுண்டிகளின் விலை குறைகின்றது
மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக, இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, ஒரு கோப்பை தேநீர் ஐந்து ரூபாயினாலும், ஒரு கோப்பை பால் தேநீர் 10 ரூபாயினாலும், சிற்றுண்டிகள் 10 ரூபாயினாலும், குறைக்கப்படவுள்ளன.
அத்துடன், சோற்றுப்பொதி ஒன்று 25 ரூபாயினாலும் கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாயினாலும் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
பாராளுமன்ற உறுப்பினராக எஸ் சி முத்துக்குமாரன பதவிப்பிரமாணம்
பாராளுமன்ற உறுப்பினராக எஸ் சி முத்துக்குமாரன பதவிப்பிரமாணம்
பாராளுமன்ற உறுப்பினராக எஸ். சி. முத்துக்குமாரன, சற்று முன்னர் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
அண்மையில், பாராளுமன்ற உத்திக பிரேமரத்னவின் இராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து, அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியது.
இதனையடுத்து, உத்திக பிரேமரத்னவுக்குப் பிறகு அதிக வாக்குகளைப் பெற்ற எஸ். சி. முத்துக்குமாரன பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
காசா மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு தொடரும் இஸ்ரேல் தாக்குதல்
காசா மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு தொடரும் இஸ்ரேல் தாக்குதல்
காசா மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு தொடரும் இஸ்ரேல் இராணுவ தாக்குதல் .
பட்டினியால் கதறும் மக்கள் ,சமாதானம் மலருமா எங்கும் உலக மக்கள் ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

ரஷ்யா தாக்குதலில் உக்ரைன் மக்கள் பலி அதிகரிப்பு
ரஷ்யா தாக்குதலில் உக்ரைன் மக்கள் பலி அதிகரிப்பு
ரஷ்யா தற்கொலை விமான தாக்குதலில் பலியான மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .
உக்ரைன் ஒடிசா துறைமுக பகுதியை இலக்கு வைத்து ரஷ்ய விமானங்கள் தாக்குதல் நடத்தின .
இதில் ஏழுபேர் பலியானதாக அறிவிக்க பட்டிருந்த நிலையில் ,தற்போது அதன் உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

இஸ்ரேல் இராணுவ முகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் இராணுவ முகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் இராணுவ முகாம் மீது லெபனான் ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது .
ஹிஸ்புல்லா இராணுவம் நடத்திய சரமாரி ஏவுகணை தாக்குதலில் ,இஸ்ரேல் இராணுவ முகாம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அதேவேளை ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இரு தரப்பு இராணுவம் நடத்தும் பதிலடி தாக்குதல்களினால் ,லெபனான் இஸ்ரேல் எல்லைகள் குண்டுகளினால் அதிர்ந்த வண்ணம் உள்ளது .
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

இரண்டாம் உலக போரில் காணமல் போன விமானம் கண்டு பிடிப்பு
இரண்டாம் உலக போரில் காணமல் போன விமானம் கண்டு பிடிப்பு
இரண்டாம் உலக போரில் காணமல் போன போர் விமானம் ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
உலக போர் இரண்டு மிக பெரும் பேரழிவுகளை ஏற்படுத்தி இருந்தது .
அந்த போர் இடம்பெற்று கொண்டிருந்த தை மாதம் 14,1944 இல் காணமால் போன விமானமே தெற்கு பசுபிக் பகுதியில் இருந்து கண்டு பிடிக்க பட்டுள்ளது .
அமெரிக்கா இராணுவம் இதனை கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்
போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி புனித செய்யதினா முஃபத்தல் செய்புதீன் சாஹிப் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் பெஜெட் வீதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
போரா சமூகத்தின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இலங்கை, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் வாழ்கின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட கலாநிதி செய்யதினா முஃபத்தல் செய்புதீன், இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்திட்டத்தைப் பாராட்டினார்.
போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்
அத்துடன், பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசலை அண்டி நடத்தப்படும் போரா மாநாட்டை இவ்வருடம் நடத்துவது தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

டிஜிட்டல் முறையில் மோட்டார் வாகன பதிவு
டிஜிட்டல் முறையில் மோட்டார் வாகன பதிவு
இன்று முதல் டிஜிட்டல் முறைமைக்கமைய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஊடாக வழங்கப்படும் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சகல கிளைகள் ஊடாக வழங்கப்படும் சேவைகளுக்காக டிஜிட்டல் முறைமையின் கீழ் பதிவு செய்து நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

மத்திய வங்கி சம்பள அதிகரிப்பு விசாரணைக்கு அழைப்பு
மத்திய வங்கி சம்பள அதிகரிப்பு விசாரணைக்கு அழைப்பு
எந்தவொரு தரப்பினருக்கும் தெரியப்படுத்தாமல் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் இன்று (04) அமைச்சரவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய வங்கி ஊழியர்கள் அண்மையில் தமது சம்பளத்தை 70 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் இது சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மத்திய வங்கி அதிகாரிகள் இவ்வாறு சம்பளத்தை உயர்த்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மத்திய வங்கி சம்பள அதிகரிப்பு விசாரணைக்கு அழைப்பு
இந்த விடயம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இன்று பிற்பகல் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு மத்திய வங்கியின் பிரதானிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நாளை (05) நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கும் அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கும் மத்திய வங்கியின் பிரதானிகள் அழைக்கப்பட்டு இவ்விடயம் தொடர்பில் வினவப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கும், அரசாங்க நிதி பற்றிய குழு கூட்டம் நாளை முற்பகல் 11.30 மணிக்கும் நடைபெறவுள்ளது
மட்டக்குளியில் கழிவு நீர் கால்வாயில் குதித்த குடு ராணி
மட்டக்குளியில் கழிவு நீர் கால்வாயில் குதித்த குடு ராணி
மட்டக்குளியில் கதிரானவத்தை குடு ராணி என அழைக்கப்படும் 45 வயதுடைய பெண் ஒருவரை பெரும் முயற்சியின் பின்னர் பொலிஸார் நேற்று (03) கைது செய்துள்ளனர்.
யுக்திய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் விசேட பணியக அதிகாரிகள் குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்ட போது, அவர் அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் குதித்துள்ளார்.
பின்னர் மேலதிக பொலிஸ் அதிகாரிகள் குழு, சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த பெண்ணிடம் இருந்து 5 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதை பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்
எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்,எரிபொருட்களின் விலைகள் இன்று (04) இரவு திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தாலும், அது இன்று இடம்பெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இன்று எரிபொருள் விலையில் பெரிய மாற்றம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையை மாதாந்தம் திருத்தியமைக்க கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, கடந்த ஜனவரி 31ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டு, ஒக்டேன் 92 பெற்றோல், ஒக்டேன் 95 பெற்றோல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.
எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்
இதேவேளை, மின்சார விநியோகம், பெற்றோலியப் பொருட்கள், எரிபொருள் விநியோகம் அல்லது விநியோகிப்பதற்கான அனைத்து சேவைகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய நேற்று (03) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிபொருள் விநியோகஸ்தர்களின் மாதாந்த தள்ளுபடி பணத்திலிருந்து 35 வீத பாவனை கட்டணத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று முதல் அறவிடப் போவதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதன் ஊடாக விநியோக நடவடிக்கைகளுக்கு அன்றாட செலவுகளை கூட செய்ய முடியாத நிலை ஏற்படும் என சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இத்தாலி போர் கப்பலை தாக்கிய ஹவுதிகள்
இத்தாலி போர் கப்பலை தாக்கிய ஹவுதிகள்
இத்தாலி போர் கப்பலை ஏவுகணைகள் மூலம் தாக்கிய ஹவுதிகள் .
செங்கடல் வெடித்த புதிய யுத்தம் ,இத்தாலி சரக்கு கப்பல்கள் தாக்க படலம்
என வெளியான புது தகவல் .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

கண்ணீரோடு விடை பெற்ற சாந்தன் காணொளி உள்ளே
கண்ணீரோடு விடை பெற்ற சாந்தன் காணொளி உள்ளே
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்த பட்டு விடுதலையாகி நோயால் வீழ்ந்த சாந்தன் வித்துடல் கண்ணீரால் நனைந்தது .
சாந்தனை நீதிமன்றம் விடுதலை புரிந்த பொழுதும் ,தமிழக ஆளும் திராவிட முன்னேற்ற கழகம் சாந்தனை மீளவும் சிறையில் அடைத்து கொன்ற துயரம் இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வணக்கத்தை செலுத்தினார் .
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

நிலங்களை விடுவிக்க படையினர் இணக்கம்
நிலங்களை விடுவிக்க படையினர் இணக்கம்
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதி 164 ஏக்கர் நிலங்களை விடுவிக்கப் படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடந்த 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்ற காணி தொடர்பான நடமாடும் சேவைக்குக் காணி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், மாவட்ட அரச அதிபர், படைத் தளபதிகளும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே 164 ஏக்கர் நிலங்களை விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பலாலி கிழக்குப் பிரதேசத்தில் இருந்து 59 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படும் அதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர்ப் பகுதியில் 105 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படவுள்ளன.
சாந்தனின் உடலுக்கு பெருந்திரளானோர் அஞ்சலி
சாந்தனின் உடலுக்கு பெருந்திரளானோர் அஞ்சலி
திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த சாந்தன், உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து காலமானார்.
இந்நிலையில் அவரது உடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு அரச
வைத்தியசாலையில் வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவின் பின்னர் அவரது உடல் வவுனியாவிற்கு எடுத்து வரப்பட்டது.
சாந்தனின் உடலுக்கு பெருந்திரளானோர் அஞ்சலி
வவுனியா முன்னாள் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (03) காலை 7.30மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில்
சாந்தனின் உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பின்னர் ஊர்வலமாக வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
அங்கு பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீருக்கு மத்தியில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.அதனைத்தொடர்ந்து தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக மாங்குளம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது
கிளிநொச்சியில் ட்ரோன் கெமராவினை பறக்கவிட்ட இளைஞன் கைது
கிளிநொச்சியில் ட்ரோன் கெமராவினை பறக்கவிட்ட இளைஞன் கைது
கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் இரணைமடு குளம் அருகில் அனுமதியின்றி ட்ரோன் கெமராவினை வானில் பறக்கவிட்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் அச்சுவேலி பிரதேசத்தை சேர்ந்த 24 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மர்மமான முறையில் இருவர் மரணம்
மர்மமான முறையில் இருவர் மரணம்
நொச்சியாகம – பன்வெவ பிரதேசத்தில் வயல் ஒன்றில் உள்ள குழியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், நொச்சியாகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (02) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மரகஹவெவ – நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் நேற்று முன்தினம் மாலை வயலுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார்.
மர்மமான முறையில் இருவர் மரணம்
அவர் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது மனைவி நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மரணத்திற்கான காரணம் இதுவரையில் அறியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நீர்கொழும்பு – காமச்சோதயா சந்தையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் 60 முதல் 70 வயதுக்கு இடைப்பட்ட, சுமார் 05 அடி 06 அங்குல உயரம், ஒல்லியான சாதாரண உடலமைப்பு கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கணவனை வெட்டிக் கொன்ற மனைவி
கணவனை வெட்டிக் கொன்ற மனைவி
கரந்தெனிய – குருபேபில பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இன்று (03) அதிகாலை வீட்டினுள் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.
கொலையை செய்த பெண்ணை கரந்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இருவருக்குமிடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், பல தடவைகள் கரந்தெனிய பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காசாவுக்குள் உணவு பொட்டலங்களை வீசிய அமெரிக்கா
காசாவுக்குள் உணவு பொட்டலங்களை வீசிய அமெரிக்கா
காசா மக்களுக்கு 66 கொண்டெனர்களில் உணவு பொட்டலங்களை விமானத்தின் ஊடக வீசியுள்ளது .
38000 மக்களுக்கு இந்த உணவுகள் வீச பட்டுள்ளன .
பட்டினியால் வாடும் மக்களுக்கு இந்த உணவுகள் வழங்க பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .
வரும் நாட்களில் மேலும் உணவுகள் வீச படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி




























