தேங்காய் அப்பம் |Thengai Appam|Coconut Sweet in Tamil
Posted in சமையல் சமையல் cook

தேங்காய் அப்பம் |Thengai Appam|Coconut Sweet in Tamil

தேங்காய் அப்பம் |Thengai Appam|Coconut Sweet in Tamil

தேங்காய் அப்பம் |Thengai Appam|Coconut Sweet in Tamil ,தேங்காய் அப்பால் செய்வது எப்படி .

இந்த தேங்காய் அப்பம் செய்முறைக்கு போகலாம் வாங்க .

ஒரு கிலோ அளவு பச்சரிசி எடுத்துக்கோங்க ,இப்ப இத தண்ணி சேர்த்துட்டு ரெண்டு மூணு டைம் நல்லா கழுவடி எடுத்திடுங்க .

அப்புறமா 12 மணி நேரத்துக்கு இதை ஊற வச்சுக்கோங்க .இந்த ரெசிபி கிட்டத்தட்ட அதிரசம் செய்வோம் இல்ல அதே மாதிரி தான்.

தேங்காய் பணியாரம் செய்வது எப்படி|how to make Coconut Sweet in Tamil

ஆனா இதுல வந்து தேங்காய் சேர்த்து பண்ணுவாங்க அதனாலதான் இது வந்து நம்ம தேங்காய் பணியாரம்னு சொல்றோம்.

12 மணி நேரம் இது நல்லா ஊறவெச்சு எல்லாம் இப்ப பாருங்க இது நல்லா ஊறிருக்கு .இப்போ தண்ணிய வடிச்சிட்டு இது ஒரு கிளீனான ஒயிட் கிளாத்ல காய வச்சுக்கோங்க.

வெயில் எல்லாம் காய வைக்க தேவையில்லை ஒரு பத்து நிமிஷத்துக்கு கொஞ்சம் போதும்.

10 நிமிஷத்துக்கு அப்புறமா நம்ம கைல அரிசியை தொட்டோம்னா லேசா இதுபோல ஓட்டணும் ஆனா தண்ணி இருக்க கூடாது ,இதுதான் கரெக்டான பக்குவம்.

இந்த அரிசி எடுத்து ஒரு மிக்ஸி ஜார்க்கு சேர்த்துக்கோங்க, சேர்த்து எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு பைன் பவுடரா அரைச்சு எடுத்துக்கோங்க .

அரைக்கும் போதே இது கூட ஒரு ரெண்டு மூணு ஏலக்காய் சேர்த்து அரைச்சிக்கோங்க .

அப்போ கரெக்டா இருக்கும், இப்ப பாருங்க ஃபைன் பவுடரா அரைச்சு எடுத்தாச்சு.

இதை இப்போ அரிச்சு எடுத்துக்கணும் ,கொஞ்சம் கூட கப்பி இருக்க கூடாது. நம்ம பைன் பவுடரா ஜலிச்சு எடுத்துக்கணும், அப்பதான் சாப்பிடும்போது ரொம்ப சாஃப்டா டேஸ்டியா இருக்கும்.

பாகு காய்ச்சுவது எப்படி |how to cook Coconut paaku

இப்ப இந்த அரிசி மாவு ஒரு ஓரமா இருக்கட்டும் .அடுத்த நம்ம பாகு காய்ச்ச ஆரம்பிச்சிடலாம் .

அதுக்கு ஒரு அடி கனமான பாத்திரத்துல முக்கால் கிலோ அளவு வெல்லம் எடுத்துக்கோங்க .

ஒரு கால் கிளாஸ் அளவுக்கு மட்டும் தண்ணி சேர்த்துக்கோங்க போதும், இந்த அளவுக்கு தான் தண்ணி சேர்க்கணும் ,தண்ணி அதிகமா சேத்துரக்கூடாது .

இப்ப வெள்ளம் முழுமையாக கரையறது வரைக்கும் வெயிட் பண்ணுங்க .அதுக்கு அப்புறமா கொதி வந்ததுக்கப்புறமா தான் நம்ம பாகு பதம் செக் பண்ணனும்.

How to cook Thengai Appam |Coconut Sweet in Tamil

வெள்ளம் முழுமையாக கரைஞ்சிருச்சு, வடிகட்டிக்கோங்க அப்பதான் கரெக்டா இருக்கும் பாகுபதம் வந்ததுக்கு அப்புறம் நம்ம வடிகட்ட முடியாது.

இப்ப பாருங்க நல்லா கொதி வர ஆரம்பிச்சிருக்கு, நம்ம பாகு பதம் செக் பண்ணி எல்லாம் அதுக்கு ஒரு சின்ன பவுலில் தண்ணி எடுத்துக்கோங்க. அதுல இந்த பாகை விட்டு பாருங்க .நம்ம கையில எடுத்து உருட்டும் போது சாப்டான பால் பக்குவத்துக்கு வரணும் .

நம்ம கையில் எடுக்கும் போதும் எடுக்குறதுக்கு வருது ,எடுத்துட்டு நம்ம உருட்டுவதற்கும் கரெக்டா வரணும் .

இந்த மாதிரி இது வந்து பர்பெக்ட்டான கன்சிஸ்டெண்சி இந்த ஸ்டேஜ்ல ஸ்டவ் ஆஃப் பண்ணிடுங்க .

இப்ப இந்த பாகு கூட நம்ம தேங்காய் துருவல் சேர்க்க போறோம் .நான் ஒரு முழு தேங்காய் சின்ன சின்ன பீசா கட் பண்ணிட்டு மிக்ஸில போட்டு அரைச்சு வச்சிருக்கேன்.

How to cook Coconut Sweet in Tamil

இது வந்து ஒரு முழு தேங்காய், ஒரு கிலோ அரிசிக்கு ஒரு முழு தேங்காய் கரெக்டா இருக்கும் ,நீங்க துருவீட்டும் சேர்க்கலாம் மிக்ஸி ஜாரில் போட்டு அரைச்சிட்டு சேர்க்கலாம் .

ஆனால் தண்ணீர் சேர்க்கக்கூடாது ,அரைக்கும் போது இப்ப நம்ம செஞ்சு வச்சுருக்க பாகு கூட உடனேவே இந்த தேங்காவை சேர்த்து நல்லா கலந்துருங்க .

இந்த ஸ்டெப் வந்து ரொம்ப பாஸ்டா பண்ணனும் இது போல கலந்துரனும் ,கலந்து நம்ம ஏற்கனவே அரைச்சு வச்சிருக்கோம்ல அரிசி மாவு.

அதையும் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து இதுகூட கலக்க ஆரச்சிடனும், கொஞ்சம் கூட கட்டி படாம பாஸ்டா இந்த வேலைய நம்ம பாக்கணும் .

கொஞ்சம் கொஞ்சமா தான் மாவு சேர்த்து கலந்துக்கணும். அப்பதான் ஈசியா இருக்கும் .

இறுதி நிலைக்கு வந்திட்டோம் ,அடுப்பில கடாய வைத்து இப்போ இதை நன்றாக தட்டையாக தட்டி .பொரித்து எடுத்திடுங்க ,அவ்வளவு தாங்க ,தேங்காய் சுவீட் ரெடியாடிச்சு .

வீடியோ

வெங்காயம் இருந்தா இப்படி செய்து பாருங்க|Onion Thokku in Tamil | Side Dish For Rice| Idli|Dosa
Posted in சமையல் சமையல் cook

வெங்காய தொக்கு இப்படி செய்து பாருங்க|Onion Thokku in Tamil | Side Dish For Rice| Idli|Dosa

வெங்காய தொக்கு இப்படி செய்து பாருங்க|Onion Thokku in Tamil | Side Dish For Rice| Idli|Dosa

வெங்காய தொக்கு இப்படி செய்து பாருங்க|Onion Thokku in Tamil | Side Dish For Rice| Idli|Dosa கூட தொட்டு சாப்பிடுக்கலாம் .

இந்த வெங்காய தொக்கு ரொம்பவே சுவையாக இருக்கும் இட்லி தோசை சப்பாத்தி எல்லாத்தையும் கூட்டா சாப்பிடுக்கலாம் .

வாங்க இப்ப வந்து வெங்காயம் பச்சடி எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம்Onion Thokku in Tamil | Side Dish For Rice| Idli|Dosa

அடுப்பில காடாய வைத்து அதிலே எண்ணெய் ஊற்றிடுங்க . அதுல கால் ஸ்பூனுக்கு வெந்தயம் ,கூடவே அரை ஸ்பூன் சீரகம், சேர்த்துட்டு வெந்தயம் சீரகம் ரெண்டுமே நல்லா நம்ப எண்ணெயில் பொரியவிட்டிடலாம்.

மூன்று மீடியம் சைஸ் வெங்காயம் எடுத்து சின்னதா கட் பண்ணிஎடுத்திடுங்க .பெரிய வெங்காயத்தில் பண்ற இதையே நீங்க சின்ன வெங்காயத்துல கூட பண்ணலாம்.

சின்ன வெங்காயத்தில் பண்ற மாதிரி இருந்துச்சுன்னா ஒரு 200 கிராம் அளவுக்கு கூட உங்க தேவைக்கு நீங்க எடுத்துக்கலாம் .

இப்ப இந்த வெங்காயம் சேர்த்துட்டு அதுகூட பெரிய சைஸ் பூண்டு ஒன்னு தோலை எடுத்துட்டு வச்சிருக்கேன் அதையும் சேர்த்துக்கலாம் .

சுவையான வெங்காயம் பச்சடி இப்படி பண்ணலாம்|Onion Thokku

இந்த அளவுக்கு நல்லா வெங்காயம் வதங்கி வந்த பிறகு சின்ன லெமன் சைஸ் அளவுக்கு புளி எடுத்து இருக்கேன். அந்த புளிய நல்லா பிச்சு போட்டுட்டு வதக்கி விட்டுக்கலாம் .

இப்ப இது கூட இதுக்கு தேவையான அளவுக்கு ஒரு டீஸ்பூன் அளவுக்கு தனி மிளகாய்த்தூள் எடுத்தோத்திடுங்க , நீங்க உங்க காரத்துக்கு தகுந்த மாதிரி எடுத்துக்கோங்க.

Onion Thokku in Tamil | Side Dish For Rice| Idli|Dosa

அது கூடவே கால் ஸ்பூன் மஞ்சள் தூள் ,மிளகாய் தூளோட பச்சை வாசனை போயிட்டு ,கொத்தமல்லி வதங்கி வரணும் ,இப்போ ஒண்ணா சேர்த்து வதக்கி விட்டிடலாம் .

பச்சை வாசனை போயிட்டு நல்லா வதங்கி வந்துருச்சு, இந்த அளவுக்கு வதங்கி வந்தா போதும் இப்ப நம்ம அடுப்பை ஆஃப் பண்ணிட்டு. இதை ஆறவிட்டுடலாம் .

வீட்டில வெங்காய தொக்கு இப்படி செஞ்சு அசத்துங்க

ரொம்ப நைஸா அரைக்க கூடாது தண்ணி சேர்க்க வேண்டியது இல்லை கட்டியாக நமக்கு இருக்கணும் ரொம்ப நைசா மைய வெச்சிடாதீங்க.

டேஸ்ட் நல்லா இருக்காது சட்னி மாதிரி ஆயிடும் . இது மாதிரி இருந்துச்சுன்னா நமக்கு நல்லா டேஸ்ட் கொடுக்கும்.

இந்த அளவுக்கு இருக்கிற மாதிரி அரைச்சுக்கோங்க .இப்ப இது ஒரு பாத்திரத்தில் மாத்திரலாம்.

இப்ப அரைச்ச பச்சடி நான் ஒரு பாத்திரத்தில் மாற்றி இருக்கேன் ,

தாளிக்கிறதுக்கு ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து இருக்கேன்.

நல்லா தாளிச்சுக்கோங்க, கடுகு சேர்த்து பொரிய விட்டுட்டு ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு ,ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, சேர்த்து இருக்கேன்.

இப்ப கடலை பருப்பு ,உளுத்தம் பருப்பு ,நல்லா சிவந்துட்டு வரட்டும் .இப்ப கடலை பருப்பு உளுத்தம் பருப்பு நல்லா பாருங்க ,ஓரளவுக்கு நல்லா செவந்து வந்துருச்சு, இந்த அளவுக்கு நல்லா சிவந்து வந்துட்டு பிறகு நான் ஒரு அஞ்சு ஆறு பல் பூண்டு இருக்கும் தோலோட தட்டிட்டு வச்சிருக்கேன்.

தோளோடு சேர்க்கும்போது நல்லா வாசனை கொடுக்கும் ,அது கூடவே ஒரு கொத்து கருவேப்பிலை, கொஞ்சமா பெருங்காயத்தூள் சேர்த்துட்டு, எல்லாத்தையும் ஒண்ணா கலந்து விட்டுடலாம்.

நம்ம சேர்த்து இருந்து அந்த போனோட பச்சை தன்மை மாறணும் .அதனால வறுத்து விட்டுக்கோங்க.

இப்ப பார்த்தேன் உங்களுக்கு நல்லா கலர் மாறிட்டு வருபட்டு வந்துருச்சு. இப்ப தாலி பண்ணாம இருந்தா பச்சடியில சேர்த்துட்டு கலந்து விட்டு விடலாம்.

இப்போ இது சாத்தன் ,இட்லீ ,தோசை கூட சாப்பிட அருமையா இருக்கும். நீங்களும் உங்க வீட்ல சிம்பிளா செய்யக்கூடிய வெங்காய பச்சடி ட்ரை பண்ணி பாருங்க மக்களே ,ரொம்பவே டேஸ்டா இருக்கும்.

வீடியோ

கறி இல்லாமல் அட்டகாசமான சைவ கறி குழம்பு|saiva Curry Kulambu|kulambu varieties in Tamil
Posted in சமையல் சமையல் cook

கறி இல்லாமல் அட்டகாசமான சைவ கறி குழம்பு|saiva Curry Kulambu|kulambu varieties in Tamil

கறி இல்லாமல் அட்டகாசமான சைவ கறி குழம்பு|saiva Curry Kulambu|kulambu varieties in Tamil

கறி இல்லாமல் அட்டகாசமான சைவ கறி குழம்பு|saiva Curry Kulambu|kulambu varieties in Tamil ,இறைச்சி இல்லாமல் அட்டகாசமான கறி குழம்பு நம்ம வீட்டில் நாள்தோறும் செஞ்சு சாப்பிடலாம் வாங்க .

இறைச்சி கறி இல்லாம சாப்பிடவே மாட்டோம் இல்லையா, ஆனா இந்த மாதிரி வீட்டில் கறி இல்லாம சமைக்கலாம் வாங்க .

கறி குழம்பு வைப்பது எப்படி என்று பார்க்கலாம் இது அசைவம் அல்லாத கறி எப்படி வைப்பது அப்படிங்கறது பார்க்கலாம் அதனை பாருங்கள்.

தேவையான பொருட்கள் சைவ கறி குழம்பு வைக்க |saiva Curry Kulambu

Ingredients:(for gravy)
Oil- 3 tps
Onion – 1 ( big size)
Tomato – 1 ( medium size)
Cumin seeds – 1/2 tsp
Fennel seeds – 1/2 tsp
Clove – 3
Cardamom – 2
Cinnamon -1
Star anise – 1
Green chilli – 1
Ginger garlic paste – 1/2 tsp
Coriander leaves -few
Red chilli powder – 1 tsp
Coriander powder – 1/2 tsp
Turmeric powder – 1/4 tsp
Garam masala – 1/2 tsp
Salt to taste

Veg Mutton:
Gram flour – 250 gm ( 1 cup)
Red chilli – 1/4 tsp
Turmeric powder – 2 pinch
Garam masala – 1/4 tsp
Cumin seeds – 1/4 tsp
Oil- 2 tsp
Ginger garlic paste – 1/4 tsp
Salt to taste

 கறி குழம்பு செய்முறை 2 saiva Curry Kulambu|kulambu varieties in Tamil

கறி குழம்பு செய்முறை இரண்டுக்கு இப்பொழுது தேவையான பொருட்களை எடுத்துருங்க .

பச்சை மிளகாய் வெங்காயம், பூண்டு எல்லாத்தையும் நறுக்கி வச்சிருங்க .பொடி பொடியா நறுக்கி வச்சிருங்க .

அப்புறம் ஒரு கடாய எடுத்து அடுப்பில் வைத்துக்கொள்ளுங்கள் .அதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊத்திக்குங்க.

எண்ணெய் விட்டுட்டு ,அப்புறம் வந்துட்டு அந்த தேவையான பொருட்களை , அதுக்கு அடுத்த போடுங்க.

 அதனுடைய பச்ச வாசகம் போக மட்டும் வறுத்திடுங்க . அப்புறம் வந்துட்டு நல்லா பொடியாப்பட்ட வெங்காயத்தை எடுத்து போட்டுருங்க.

பச்சை மிளகாய் , பூண்டு போட்டுருங்க எல்லாத்தையும் போட்டுட்டு அப்படியே ரொம்ப வதக்கி வாங்க .

கரம் மசாலா ,வறு மிளாகாய் தூள் ,உப்பு எல்லாத்தையும் தேவையான அளவு போட்டுருங்க. போட்டு நல்லா கிண்டிட்டு வாங்க. அப்படியே வந்த உடனே அப்படியே தேவையான மேலதிக பொருட்களை சேர்த்திடுங்க.

 கறி குழம்புக்கு கடலை தயாரிக்கனும் வாங்க,

போகலாம் இந்த கரி குழம்பு சமையல் செய்திட ,கடலைமாவு எடுத்து ,பரோடட குலைப்பது போல குழைத்திடுங்க .

அந்த மாவு உருண்டையா சின்ன சின்ன துண்டாக எடுத்திடுங்க . அப்படி எடுத்துட்டு அடுப்பில கடாய் வைத்து எண்ணெய் ஊட்டிரி பொரித்து எடுத்துடுங்க

 அப்புறம் அந்த கிரேவி தயார் பண்ணி வைத்தோம் வில்லையா அதுக்குள்ள போடுங்க .அதை போட்டு கலக்கிவிடுங்க .

ரொம்ப நேரம் விடக்கூடாது,அவ்வளவு தாங்க .

வீட்டில கறி இல்லாத கறி குழம்பு ரெடியாடிச்சு . ரொம்ப அருமையா இருக்கும் அசைவ கறி சாப்பாடு .கறி குழம்பு சாப்பிட்ட மாதிரி இருக்கும் மக்களே ,சும்மா அடடகசமான் கறி குழம்பு தயார் .

வீடியோ

15 மக்கள் மூதூரில் கைது
Posted in இலங்கை செய்திகள்

15 மக்கள் மூதூரில் கைது

15 மக்கள் மூதூரில் கைது

15 மக்கள் மூதூரில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

அனுமதி பெறாது பொது போக்குவரத்திற்கு தடைகளை ஏற்படுத்தும் நோக்கில் போராடடம் நடத்திய குற்றத்திறகா 15 மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர் .

விளக்கமறியலில் வைக்க பட்ட மக்கள்

இவ்வாறு கைது செய்யப்பட்ட மக்கள் போலீஸ் விசாரணைகளின் பின் நீதிமன்றில் பாரப்படுத்த பட்ட நிலையில் ,விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது .

இலங்கையில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ,அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் மக்கள் தமது போராட்டங்களை முன்னெடுத்து செல்கின்றனர் .

அவ்வாறான காலப்பகுதியில் தற்போது ,இவ்விதமான கைதுகளை இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .

அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராட்டம்

மக்கள் உரிமைகளை பெற அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராட வீதி இறங்கினால் ,காவல்துறை மற்றும் இராணுவ இயந்திரத்தை ஏவி மக்களை கைது செய்து சிறையிலே அடைப்பதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .

ஆண்டு ஆண்டு காலமாக மக்கள் ஏமாற்ற பட்டு, அடக்கியாளும் அதிகார வெறியாட்டம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

அரசியல்வாதிகள் தமது குடும்ப நல அரசியலை முதன்மை படுத்தி செல்வதும் ,அதன் ஊடாக மக்களை எதிரியாக்கி அடக்கியாள நிபைப்பது இதன் ஊடக மீளவும் அம்பல பட்டுளள்து .

பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல்

பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல்

பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல் ,மக்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கோட்டை புகையிரத நிலையம் அருகில் இடம்பெற்றுள்ளது .

மக்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்

மக்கள் ஆசிரியர்கள் இனைந்து நடத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை கலைக்க ,பொலிசார் கண்ணீர்புகை தாக்குதலை நடத்தியுள்ளனர் .

கண்ணீர் புகை தாக்குதல் நாடத்திய அதேவேளை நீரை பீச்சி அடித்து மக்களை துரத்தியுள்ளனர் .

இலங்கை ஜனநாய நாட்டில் தமது உரிமனை மறுப்பை தட்டிக்கேட்டு போராடி வரும் மக்களை,ஆளும் அரணில் அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கி வருவதை மேற்படி விடயம் எடுத்து காட்டுகிறது .

காலிமுக திடலில் கோட்டாவுக்கு எதிராக மக்கள் போராட்டம்

காலிமுக திடலில் கோட்டாவுக்கு எதிராக மக்கள் நடத்திய போராடடத்தின் பொழுது,அந்த மக்களை இராணுவம் காவல்துறையை ஏவி ரணில் விக்கிரமசிங்க தடுத்தார் .

இதன் பொழுது பல மக்கள் பொலிசாரின் தடியடிக்கு இரையாகினர் .

பல மக்கள் சொல்லென்னா துயரை அனுபவித்து சிறையில் தள்ள பட்டனர் .

அவ்வாறன சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர் மீளவும் அதே பாணியிலான தாக்குதலை ,கோட்டை புகையிர நிலையம் அருகில் பொலிசார் நடத்தியுள்ளனர் .

கண்ணீரோடு போராடிய மக்களுக்கு ,கண்ணீர் புகை குண்டு தாக்குதலை நடத்தி விரட்டியுள்ள சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேல் பொருளாதாரத்தில் விழுந்த இடி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் பொருளாதாரத்தில் விழுந்த இடி


இஸ்ரேல் பொருளாதாரத்தில் விழுந்த இடி

இஸ்ரேல் பொருளாதாரத்தில் விழுந்த இடி சற்றும் எதிர்பாராத நகர்வை நேட்டோ நாடுகள் முன்னெடுத்துள்ளது .

பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம், மிக பெரும் இனப்படுகொலை நகர்வை மேற்கொண்ட வண்ணம் உள்ளன .

ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆப்பு

அதனை அடுத்து தற்போது ,ஐரோப்பிய நாடுகளில் அறுபத்தி ஒருவீதமான நாடுகள் ,இஸ்ரேலுடன் பொறுத்தார் வர்த்தகத்தில் ஈடுபட மாட்டோம் என தெரிவித்துள்ளன .

இஸ்ரேலுடன் இவ்வாறான பொருளதார நடவடிக்கையை மேற்கொண்டால் ,மத்திய கிழக்கு மற்றும் சீனா ,ரஷ்யா ,நாடுகளின் எதிர்ப்புகளை தங்கள் எதிர்காலத்தில் சந்திக்க நேரும் என்பதால் ,இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது .

இன அழிப்பை நடத்தும் இஸ்ரேல்

ஐரோப்பிய நாடுகள் விடுத்த மிக பெரும் வேண்டுதலை புறம் தள்ளி இன அழிப்பை இஸ்ரேல் நடத்திய வண்ணம் உள்ளது .

அதனால் தற்போது போர்க்குற்ற சட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிக்க பட்ட நிலையில் தற்பொழுது இந்த நகர்வு மேற்கொள்ள பட்டுள்ளது இஸ்ரேலுக்கு மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல்

இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல்

இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ஏமன் ஹவுதி அன்ஸர் அல்லா போர் படைகள் அறிவித்துள்ளன .

ஏடன் வளைகுடா ஊடக பயணித்து கொண்டிருந்த இஸ்ரலிய ஆதரவு சரக்கு கப்பல் ஒன்றை இலக்கு வைத்து ,ஏமன் ஹவுதி அன்சர் அல்லா அமைப்பின் கடற்படையினர் திடீர் தாக்குதலை நடத்தினர் .

தற்கொலை வெடிகுண்டு விமானங்கள்

கப்பல் ஏவுகணைகள்,தற்கொலை வெடிகுண்டு விமானங்களை கொண்டு தாக்குதலை நடத்தியதில் ,இஸ்ரேல் ஆதரவு சரக்கு கப்பல் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, தாக்குதலை நடத்திய ஹவுதி போர் படைகள் அறிவித்துள்ளன .

சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்

பலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படும் வரை மத்தியகிழக்கு ,ஏடன் வளைகுடா ,செங்கடல் வழியாக பயணிக்கும் ,இஸ்ரேல் ஆதரவு சரக்கு கப்பல்கள் மீது தாக்குதலை நடத்துவோம் என ,ஹவுதிகள் மீளவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

ஆனால் அதனை தட்டி கழித்து இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் ,தனது இனவேட்டை தாக்குதலை ,தொடர்ந்து பலஸ்த்தீனம் காசா மீது நடத்திய வண்ணம் உள்ளது ,இங்கே குறிப்பிட தக்கது .

வீடியோ

தாய்லாந்து சென்றார் விக்கிலீக்ஸ் அதிபர்
Posted in உலக செய்திகள்

தாய்லாந்து சென்றார் விக்கிலீக்ஸ் அதிபர்

தாய்லாந்து சென்றார் விக்கிலீக்ஸ் அதிபர்

தாய்லாந்து சென்றார் விக்கிலீக்ஸ் அதிபர் , தனி ஒருவனாக இருந்து அமெரிக்காவை ஆட்டிப் படைத்த விக்கிலீஷின் அதிபர் சிறப்பு விமான மூலம் தாய்லாந்துக்கு பயணம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது .

தனியார் சிறப்பு விமானத்தை பயன்படுத்தி அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்துக்கு பயணம் செய்த இவர் சீனா அல்லது ரஷ்யாவுடன் சென்று இந்த சரணடைய கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட ஒரு நிகழ்ச்சி நிரல் அடிப்படையிலேயே இவர் தாய்லாந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவினுடைய ஆவணங்கள் 2,50,000

அமெரிக்காவினுடைய ஆவணங்கள் 2,50,000 ஆவணங்கள் மீள வழங்கப்பட்ட நிலையில் அவர் மன்னிக்கப்பட்டு தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தாய்லாந்துக்கு சென்றுள்ள இவரை அமெரிக்காவினுடைய உளவுத்துறைகள் தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கும்.

தற்பொழுது அமெரிக்கா குழுவில் விக்கிலீக்ஸ் தைப்பார் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவர் தாய்லாந்த பகுதியில் வைத்து போட்டு தள்ளக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

தனி ஒருவனாக இருந்து அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் ஆதரவு நாடுகளை ஆட்டிய இவர் மிகப்பெரும் சாதனையாளனாகவே பார்க்கப்படுகின்றது .

அமெரிக்காவினுடைய பாதுகாப்பு கட்டமைப்புகளை ஊடறுத்து உள் நுழைந்து அந்த ஆவணங்களை திருடி நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட ரகசிய விடையன தொடர்பாக அம்பலப்படுத்தி இருந்தார் .

அதில் இலங்கையில் இடம்பெற்ற 2009 ஆம் ஆண்டு படுகொலை தொடர்பான விடயங்களும் அதில் பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்கள் அவர் காத்திருந்தார் புயல் கிளப்பியிருக்கும் என்பதுடன் மஹிந்த ராஜபக்ச ஆட்சி அதிகாரங்களுக்கும் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் .

ஆனால் அதற்குள்ளாக அவர் கைது செய்யப்பட்ட நிலையில் பெரும் ஆவணங்கள் வெர்லியாவது தடுக்கப்பட்டு அவை முறியடிக்கப்பட்டது .

தற்பொழுது இவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் பல்வேறுபட்ட ஆவணங்களை எடுத்து தொகுத்து வழங்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படலாம்.

பதட்டம் நிலவுகிறது

என்பதால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது , ரஷ்யாவிடம் சென்று சேர்வாரா அல்லது அதற்கு முன்னதாக இவர் இடையில் வழி மறுத்து படுகொலை செய்யப்படுவாரா என்கின்ற விடயங்களே ,தற்போது உன்னிப்பாக உலக நாடுகள் கண்காணிக்க பட்டு வருகின்றன .

இஸ்ரேல் இனப்படுகொலை புரிகிறது காங்கிரஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் இனப்படுகொலை புரிகிறது காங்கிரஸ்

இஸ்ரேல் இனப்படுகொலை புரிகிறது காங்கிரஸ்

இஸ்ரேல் இனப்படுகொலை புரிகிறது காங்கிரஸ் குற்றச்சாட்டு .பலஸ்தீன தேசத்தின் மீது பாரிய படையெட்டவடிக்கையை மேற்கொண்டு ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கும்.

அரச பயங்கரவாத ஆக்கிரமிப்பு ராணுவம் இனப்படுகொலை நடத்துகிறது என அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார் .

நெதன்யாகு கைது செய்யப்பட வேண்டும்

இனப்படுகொலைகளை மேற்கொண்டு வரும் இன அழிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற நெதன்யாகு கைது செய்யப்பட வேண்டும் என்கின்ற உத்தரவு சர்வதேச நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனை எடுத்து அவர் கண்ட இடத்தில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றன .

மக்கள் மீது தொடராக தாக்குதலை நடத்தி அந்த மக்களை நாடற்றவர்களாக அனுப்புகின்ற நடவடிக்கையில் தொடர்ந்து இஸ்ரேல் அதிகார வர்க்கங்கள் ஈடுபட்டு வருகின்றன.

அதன் அடிப்படையிலேயே எகிப்து எல்லையோரமாக விளங்கிவரும் ரபா எல்லையில் ஊடான பாரிய அழிப்பு தாக்குதலை ஆக்கிரமிப்பு ராணுவம் தொடராக நடத்திக் கொண்டுள்ளது.

இந்த தாக்குதலின் பின்புலத்தில் அந்த மக்களை அகதிகளாக துரத்துவதே மிக நோக்கமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்ரேல் புரிந்து வருகின்ற தொடர் ஆக்கிரமிப்பு இனப்படுகொலை நடவடிக்கைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கின்ற குரல்கள் தற்போது ஓங்கி ஒலித்து வருகின்றன.

பலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம்

எட்டு மாதங்கள் கடந்து இடம்பெற்று வருகின்ற பலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தத்தில் பிரதமர் நெதன்யாகுவின் இன அழிப்பு நடவடிக்கை தொடர்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா காங்கிரஸ் உறுப்பினர்கள் எந்த கருத்து தற்பொழுது பேசும் பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

இவரது இந்த கருத்து உண்மையானதாக கருத்தாகவே உள்ளதாக பல்வேறுப்பட்ட ஐரோப்பிய ஊடகங்கள் சிலது இவ்வாறு எழுதி தள்ளி இருக்கின்றன .

ஆக மொத்தம் இஸ்ரேலிய அரசு அதிபருக்கு எதிராக சர்வதேசரீதியில் உள்ளுக்குள்ளும் பல எதிர்ப்புகள் கிளம்பி வருவது ,அவரது ஆட்சிக்கு ஆபத்தான அபாயம் அடிப்பதாகவே காணப்படுகின்றது.

90 இராணுவத்தினர் விடுதலை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

90 இராணுவத்தினர் விடுதலை

90 இராணுவத்தினர் விடுதலை

90 இராணுவத்தினர் விடுதலை ,ரஷ்யா படைகளினால் சிறை பிடித்து செல்லப்பட்டினுடைய ராணுவத்தினரில் 90 பேரை தாங்கள் விடுதலை செய்துள்ளதாக ராசிய அரச ராணுவம் அறிவித்துள்ளது .

போர ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் 1200க்கு மேற்பட்ட ராணுவத்தினர் ராசியா படைகளுடன் சரணடைந்தனர் .

ஐந்துக்கு மேற்பட்ட தளபதியின் உள்ளிட்டவர்கள் இங்கு சரணடைந்து காணப்பட்டனர் .

இது திட்டமிடப்பட்ட ஒரு சரணடைதலாக ஆன்றைய காலங்களில் பேசப்பட்டது.

அவ்வாறு சரணடைந்த இராணுவத்தினரின் 90 பேரை தற்பொழுது ரஷ்யா விடுதலை செய்துள்ளது .

இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட 90 ராணுவத்தினரும் தற்பொழுது உக்ரைன் வந்தடைந்தனர் .

சர்வதேச புலனாய்வு விசாரணை

அவ்வாறு வருகை தந்துள்ள இந்த உக்ரைன் படை சிப்பாய்கள் தொடர்ந்து தங்களுடைய படை மற்றும் சர்வதேச புலனாய்வு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.

இவர்களுக்குள் ரஸ்யா உளவுத்துறையை சேர்ந்த ஆட்களும் இருக்கலாம்

விடுதலை செய்யப்பட்ட ராணுவத்தினர் மீளவும் போர்முனைக்கு அனுப்பப்படலாம் என்கின்ற அச்சம் காணப்படுகிறது.

யுக்ரேன் ராணுவத்தினர் இல்லாத நிலையில் தற்பொழுது ரஷ்யாவில் விடுதலை செய்யப்பட்ட இந்த ராணுவத்தினர் ,மீளவும் போர்முனைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது

தப்பி வந்தோம் என்கின்ற நிலையில் அவர்கள் மன நிம்மதியுடன் தமது நாடு திரும்பிய பொழுதும் ,மீளவும் போர்முனைக்கு அனுப்பிட உக்ரைன் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தான ஒன்று என்கின்ற குற்றச்சாட்டை மனித உரிமை அமைப்புகளும் .

கைதிகளாக சிறை பிடித்துச் செல்லப்பட்ட இராணுவம்

போரில் கைதிகளாக சிறை பிடித்துச் செல்லப்பட்டவர்கள் எதிரிகளினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில்.

மீளவும் அவர்கள் போர்முனைக்கு அனுப்பப்படுவதால் அந்த எதிரிகளுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்க .

இந்த இராணுவத்தினரை மன்னித்து விடுதலை செய்து அவரது குடும்பங்களுடன் வாழ்வதற்கு உக்ரைன் அனுமதி அளிக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்

இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்

இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் ,வடக்கு ஸ்டில் ராணுவம் முகாம்களை இலக்கவைத்து ஹிஸ்புல்லா போர்படைகள் என்றும் விசேட தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன .

இஸ்ரேலிய ராணுவத்தின் அதி உச்ச பாதுகாப்பு வளையம்

வடக்கு பகுதிகளை அறிவித்த மிக முக்கியமான இஸ்ரேலிய ராணுவத்தின் அதி உச்ச பாதுகாப்பு வளையமைப்புகளை தொடர்ந்தும் தாக்கி நிலைகுலைய வைத்து வருகின்றது .

இதனால் இஸ்ரேல் ராணுவத்தினர் தெற்கு எல்லையோரமாக உள்ள ராணுவ கட்டமைப்புக்குள் சிதவுகளை ஏற்படுத்துதல் ஊடாக தமது இருப்புக்கு பாதுகாப்பு ஏற்படும் என ஹிஸ்புல்லா கருதுவதால் வடக்கு எல்லையோரமாக உள்ள அனைத்து ராணுவ தளங்களையும் அடித்து நொறுக்கி வருகின்றது .

இடைவிடாது நடத்தப்படுகின்ற தாக்குதல் காரணமாக ராணுவ தளங்கள் பாரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

தொடர்கின்ற இந்த தாக்குதலினால் ஆஸ்திரேலிய ராணுவ பாதுகாப்பு வளையங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக அங்கிருந்து வரும் காணொளிகளை பார்க்கின்ற பொழுது

தாக்குதல் நடத்தப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தின் ராணுவ முகாம்களில் இருந்து பெரும் புக மண்டல எழுகின்ற காட்சிகள் காணப்படுகின்றன.

அது அங்கு இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது அந்த காட்சிகள் பறைசாற்றுகின்றன.

இஸ்ரேலிய அரச ராணுவ தரப்பு

தாக்குதலை நடத்தியதை ஏற்றுக் கொண்டுள்ள இஸ்ரேலிய அரச ராணுவ தரப்பு அங்கு தமக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை .

இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயுத வண்டிகள் ஆயுதக் கூடங்கள் மற்றும் ராணுவங்களுக்கு பாரிய இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவே தாக்குதலை நடத்தியவர்கள் தொடர்ந்துதெரிவித்து வருகின்றன .

தெற்கிலே உள்ள போர் படைகள் வெளியிட்டுள்ள பாரிய காணொளி இங்கு இடம் பெற்றசேதவிபரங்களை தொடர்பாக விரிவாக விளக்கப்படுகிறது .

இவற்றை ஆதாரமாக தெரிவித்து இருந்த பொழுதும் ,இஸ்ரேலிய ராணுவ தரப்பிலிருந்து இதுவரை தமது இராணுவத்தினருக்கும் தமது ராணுவ முகாம்களுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக இது வித தகவலும் வெளியாகவில்லை .

வீடியோ

இலங்கையை உலுப்பும் படுகொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை உலுப்பும் படுகொலைகள்

இலங்கையை உலுப்பும் படுகொலைகள்

இன்றையகால பகுதியில் இலங்கையை உலுப்பும் படுகொலைகள், இலங்கையை உலுப்பி கொண்டிருக்கும் படுகொலைகள் மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ளது.

நாள்தோறும் இலங்கையில் இடம்பெற்று வருகின்ற படுகொலைகள் தொடர்பாக பல்வேறுபட்ட தகவல்கள் மக்கள் மத்தியில் இருந்து வெளியாகி வருகின்றது .

போதைவஸ்து கூலி குழுக்கள்

வாள்வெட்டு குழுக்கள் போதைவஸ்து குழுக்கள் வர்த்தக போட்டிகள் மற்றும் வெளிநாட்டில் உள்ள கூலிக் குழுக்கள் ஊடாக இலங்கையில் கூலிக் குழு தாக்குதல் இடம்பெற்று வருவதற்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த படுகொலையின் பின்புலத்தில் இலங்கை மற்றும் சர்வதேச அளவில் உள்ள இளைஞர்கள் தொடர்புகள் இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியிருக்கின்றன.

அதனை அடுத்து இதனை உரிய முறையில் விசாரணை செய்து சர்வதேச போலீசார் ஒத்துழைப்புடன் சர்வதேச அருவியில் இருந்த இயங்கும் கும்பல்கள் கைது செய்யப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை முன்வைக்கப்பட்துவருகிறது .

தினம் தோறும் இலங்கையில் இடம்பெற்று வருகின்ற வாகன விபத்துக்கள் திட்டமிடப்பட்ட வாகன விபத்து படுகொலைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக போட்டியின் காரணமாக பேருந்துகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவது, மற்றும் லொறிகள் மீது தாக்குதல் நடத்துவது ஆட்டோக்குள் மீது இடிப்பது போன்ற பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுகளும் காணப்படுவதான புதிய தகவலும் வழியாக உள்ளன .

சமூகவலைத்தள தனி நபர் தாக்குதல்

சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி இடம்பெற்று வருகின்ற தனி நபர் பழிவாங்கும் தாக்குதல் ஊடாக எழுகின்ற பகை காரணமாக வன்முறை

காரணமாக இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்த காணப்படுவது அந்த புதிய தகவலும் பலியாக இருக்கின்றது .

இன்றைய இலங்கையில் நாள்தோறும் பற்றைகள் , நீர் நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன.

அடி காயங்கள் வெட்டு காயங்கள் வாள்வெட்டு தாக்குதலும் படுகொலை செய்யப்பட்டதில் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இவ்விதமாக , இலங்கையை உலுப்பி கொண்டிருக்கும் இந்த படுகொலையின் பின்புறத்தில் திட்டமிடப்பட்ட மாபியா குழுக்கள் உள்ளதாக புதிய தகவல் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

ஸ்ரீலங்கா காவல்துறை உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்ற குற்றச்சாட்டு தற்பொழுது ஓங்கி ஒலித்து வருகிறது.

ஒருவர் வெட்டிக்கொலை
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் வெட்டிக்கொலை

ஒருவர் வெட்டிக்கொலை

ஒருவர் வெட்டிக்கொலை ,இலங்கை பாலப்பட்டி பகுதியில் மலர்சாலை உரிமையாளர் ஒருவர் தலையில் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

வாகனத்தில் சாரதி ஒருவர் பலத்த காயங்களுடன் காணப்பட்ட நிலையில் அவரைச் சென்று பார்த்த பொழுது அவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்,.

மலச்சாலை உரிமையாளர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது ஏன் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

மிகப்பெரும் வர்த்தகர் வெட்டி கொலை

மிகப்பெரும் வர்த்தகராக விளங்கிவரும் இவர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்கள் யார் என்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வாகனத்தில் தனியாக பயணித்த பொழுது இவரது தலையில் பலத்த காயங்கள் காணப்பட்டுள்ளது .

இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.

இலங்கையில் இடம் பெற்று வருகின்ற இவ்வாறான கொலையின் பின்புறத்தில் யார் உள்ளார்கள் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் தொடராக இவ்வாறான வன்முறை தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

தாக்குதல் பின்புலத்தில் உள்ளவர்கள் யார்

இந்த தாக்குதல் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை .

மக்களுடன் மிக நல்லுறவோடு பழகி வந்த நல்ல மனிதர் எனவும் ,அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

அவ்வாறான மலர் சாலை உரிமையாளர் மீது தலையில்வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட உபகாரணகள் சில மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது .

இந்த படுகொலைக்கு உடனடியாக இருந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இலங்கை போலீசார் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான படுகொலை சம்பவங்கள் அதிகரித்துச் செல்லப்படுகின்றது .

இலங்கை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது .

போதைவஸ்து கூலி குழுக்களினால் இவ்வாறான கொலைகள் நடத்தப்படுகிறதா என்ற கேள்வியும் இப்பொழுது எழுப்பப்படுகின்றது.

ஒருவர் காயம் துப்பாக்கி சூட்டில்
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் காயம் துப்பாக்கி சூட்டில்

ஒருவர் காயம் துப்பாக்கி சூட்டில்

ஒருவர் காயம் துப்பாக்கி சூட்டில் , இல்லைங்கையின் பிதிகள பகுதியில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு பாதையில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மருமகன் வீட்டுக்கு வந்திருந்த மாமனார் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

திடீரென துப்பாக்கி சூட்டு தாக்குதல்

முகமூத்தை மறைத்துக் கொண்டு வந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார் .

இதன் பொழுது அங்கு வருகை தந்திருந்த மாமனாரின் காலில் அந்த சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .

காயம் அடைந்தவர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

எனினும் தெரிவாதீனமாக அவர் உயிர்தப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

.இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கான காரணம்

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருகின்றனர் .

குடும்பப் பகமை காரணமாக இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றதா என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

அங்கு வந்த துப்பாக்கி தாரி ஒருவரை மட்டும் இலக்கு வைத்து துப்பாக்கி சூட்டு தாக்குதல் காரணம் என்ன என்கின்ற வகையில் தற்பொழுது போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாமாவை போட்டுத்தள்ள மருமகன் முயன்றாரா அல்லது மாமா மீதுள்ள அதீத கோபம் காரணமாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலா என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்த காணப்படுவதும் துப்பாக்கி சூடு சம்பவங்களினால் அதிக மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன .

இலங்கையில் ஆயுத கலாச்சாரம் அழிக்கப்பட்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு ஓய்வு பெற்ற நிலையில் ,மீளவும் இலங்கை ஆட்கொள்ளும் இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மாங்குளத்தில் கோர விபத்து
Posted in இலங்கை செய்திகள்

மாங்குளத்தில் கோர விபத்து

மாங்குளத்தில் கோர விபத்து

மாங்குளத்தில் கோர விபத்து மூவர் மரணம் ,மாங்குளத்தில் கடந்த தினம் இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர்சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் .

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அதிக சொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்த நிலையில் ,மாங்குளம் பனிக்கம் நீராவி பகுதியில் தரித்து நின்றுள்ளது .

அதன் பொழுது பேருந்துக்கு பின்புறத்தில் இருந்து மூன்று பேர் உரையாடி கொண்டு இருந்துள்ளனர் .

லொறி பேரூந்தின் பின்புறத்தில் மோதியது

வேகமாக வந்த லொறி அவ்வேளை பேரூந்தின் பின்புறத்தில் மோதியது .

இதன்போது அதிலிருந்து மூன்று பெரும் தூக்கி எறியப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .

மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர் ,பேருந்து பின்புறம் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

இந்த பேரூந்து விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

பேருந்து சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பாதுகாப்பு விதிமுறைகளை உள்வாங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தினாலேயே இந்த விபத்தை ஏற்பட்டுள்ளதாக ஒரு தர தகவல் தெரிவிக்கின்றது .

எனினும் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் ,அவர்கள் தரும் தகவலை அடிப்படையில் யார் மீது தவறு என்பது தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாங்குளத்தில் கோர விபத்து
மாங்குளத்தில் கோர விபத்து

இலங்கையில் நாள்தோறும் பேருந்து விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

சாரதிகளின் அலட்சியின்மையை காரணம்

இது சாரதிகளின் அலட்சியின்மையை காரணமாகவும் , வீதி விதிமுறைகளை மதிக்க மறந்து நமது தமிழர்கள் வீதிகளை உலாவி வருவதும் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .

இளைஞர்கள் வீதி போக்குவரத்தை மதிக்க மறப்பதே இந்த வீதி விபத்து அதிகமாக இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

நாள்தோறும் இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான வீதி விபத்துக்களை தடுப்பதற்கு இலங்கை போலீசார் தவறான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதன் காரணமாக.

இவ்வாறான தவறான வீதி விபத்துக்கள் தொடராக இடம் பெற காரணம் என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குளவி தாக்குதலில் 30மாணவர்கள் காயம்
Posted in இலங்கை செய்திகள்

குளவி தாக்குதலில் 30மாணவர்கள் காயம்

குளவி தாக்குதலில் 30மாணவர்கள் காயம்

குளவி தாக்குதலில் 30மாணவர்கள் காயம் ,மூதூர் பகுதியில் உள்ள பாடசாலையூரில் குளவி கோட்டுக்கு இலக்காகி மாணவர்களை ஆசிரியர்ககள் 30 பேர் காயப்படுத்திள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பாடசாலை ஒன்றின் குளவி கூடு

மூதூரில் உள்ள பாடசாலை ஒன்றின் குளவி கூடு கட்டி இருந்த நிலையில் அந்த குளவிகள் மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி குத்தி உள்ளது .

இதில் 22 ஆண் மாணவர்கள் 8 பெண் மாணவிகள் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளவியின் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்ட அத்தனை பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இவ்வாறான பாடசாலை குளவி கொட்டுக்கு உள்ளாகி வருகின்ற மாணவ மாணவிகள் அதிகரித்த காணப்படுகின்றனர் .

பாடசாலை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கும் அலட்ஸ்யமற்ற செயலுமே இந்த குளவி கூட்டத் தாக்குதலுக்கு மாணவர்கள் பாதிப்புகள் காரணமாக உள்ளது என்றார் குற்ற சட்டு முன்வைக்க படுகிறது .

குளவிகள் கூடு கட்டி இருந்தால் அதற்கு முன்னதாகவே மாணவர்களை வெளியேற்றிவிட்டு, அந்த குளவி கூட்டத்தை அகற்றுகின்ற நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டு இருக்க வேண்டும் .

பாதுகாப்பு நகர்வுகளை கடைபிடித்து இருந்தால்

அதற்கான பாதுகாப்பு நகர்வுகளை கடைபிடித்து இருந்தால் இந்த மாணவனுக்கு இந்த குளவி கொடுத்து தாக்குதல் இடம்பெற்றுக்காது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது .

பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் சிறந்த முறையில் அவர்களுக்கு தேர்ச்சியான பயிற்சி வகுப்புகள் வழங்கப்படாமை காரணத்தினால், இவ்வாறான பாடசாலையில் குளவி கூட்டுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை

கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை இலங்கையில் கடும் மழை பொழிவு ஏற்படும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்க பட்டுளள்து .

சப்பிரமுகா உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த மழைவீழ்ச்சி காணப்படும் எனவும் ,இவ்வேளை மக்களை மிக விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐம்பது மில்லி மீட்டர் வீழ்ச்சியிலான நீர்கள் சில பகுதிகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன .

தாழ்நில பகுதிகளில் வெள்ளம்

அதனால் தாழ்நில பகுதிகளில் வெள்ளம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மழையின் நீர் வரத்து அதிகமாக காணப்படுவதால், குளங்கள் நிரம்பி கதவுகள் திறக்கப்பட்டால் ,தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்கின்ற அச்சம் காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த காணப்பட்டன .

அவ்வாறு சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் உரிய உதவி திட்டங்கள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா

அதனை எடுத்து இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் உத்தரவின் அடிப்படையில் ,வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி உதவி திட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வீடுகளும் திருத்திக் கொடுக்கப்படும் என்று உத்தரவாதங்களும் அழிக்கப்பட்டன.

தேர்தல் வருகின்ற நிலையில் தற்போது மக்களை குசி படுத்தக்கூடிய நிலையில் ஆளு அரசு காணப்படுகின்றது .

எவ்வாறு எனினும் இந்த தேர்தலில் கட்சியை வெல்ல வைத்து விட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் ரணில் துடிப்பதே மக்களுக்கான உதவித்திட்ட அறிவிப்புகள் ஊடாக காண முடிகின்றது .

எனவே தாழ்நில பகுதியில் உள்ள மக்கள் மிகவும் எச்சரிக்க இருக்கும்படியும் வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது.

அதிக மழை வீழ்ச்சி காரணமாக வெள்ளம் பெருக்கு ஏற்படலாம் என்பதாகவே அந்த தகவல் காணப்படுகின்றது.

ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம்

ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம்

ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம், ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் உக்கிரேன் பகுதி பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த ஏவுகணை தாக்குதலில் ஏழு மக்கள் பலியாகியம் , 49 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பகுதி என்பது கடுமையான முன்னரங்க போர் முனையாக காணப்படுகின்றது.

ரஷ்யா நீண்ட தூர ஏவுகணைகள்

இந்த பகுதிகளை இலக்கவைத்து ரஷ்யா படைகள் நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் மூலம் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர் .

இடைவிடாது இடம்பெற்று வருகின்ற இருதரப்பு தாக்குதலில் உக்ரைன் பகுதிகள் யாவும் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யா படைகள் நடத்திய தாக்குதலில் 7 மக்கள் பலியாகியும் 49 மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ராசியாவுக்கு உள்ளே ஆழ ஊடுருவி விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில் தற்பொழுது அதற்கு பதிலடியாக உக்கிரேனுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்தும் தீவிர நடவடிக்கையில் ரஷ்யாவில் ஈடுபட்டுள்ளது.

ஏவுகணை விமானங்கள் துல்லியமாக தாக்குதல்

அதனால் ஏவுகணை விமானங்கள் துல்லியமாக வந்து உக்ரைன் உள் கட்டமைப்புகளை தாக்குகின்றன.

இதனால் மக்கள் வாழ்விடங்கள் இராணுவ நிலைகள் வர்த்தக நிலையங்கள் பாடசாலைகள் உள்ளிட்டவையும் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

குறிப்பாக உக்ரைன் மின்சார மையங்களை இலக்கு வைத்து தொடராக கடுமையான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருவதால் உக்ரைன் பல்வேறுபட்ட கிராமங்கள் தொடர்ந்து இருளில் மூழ்கி உள்ளன.

அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் வீடுகள் என்பன இடிந்து தீயில் ஏரிகின்ற காட்சிகள் தற்பொழுது காணப்படுகின்றன.

இரண்டரை வருடங்களை எட்டி பிடித்திருக்கும் உக்ரைன் ரஷ்ய போர் மிக பெரும் பொருளாதார நெருக்கடியை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியது .

அதன் தொடர்ச்சியாக உக்ரைன் நாடானது பலமான சேதங்களை உள்ளாகி வருகிறது .

முடிவில்லா தொடரும் இந்த போர் என்று முடிவுக்கு வரும் என உலக மக்கள் அவளுடன் எதிர் பார்த்து கொண்டுள்ள இவ்வேளையில் இந்த பேரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

இஸ்ரேல் கிராமங்கள் இருளில் மூழ்கியது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கிராமங்கள் இருளில் மூழ்கியது

இஸ்ரேல் கிராமங்கள் இருளில் மூழ்கியது

இஸ்ரேல் கிராமங்கள் இருளில் மூழ்கியது ,இஸ்ரேல் மின்சார மையங்கள் மீது கடும் தாக்குதல் நாட்டின் மின்சார மையங்களை இலக்கவைத்து கடும் தாக்குதலில் இஸ்ரேல் கிராமங்கள் இருளில் மூழ்கின .

தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் நடத்தி வருகின்றனர் .

ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்டவரும் இந்த தாக்குதலினால் இஸ்ரேல் படைகளின் உள் கட்டமைப்பு பலமாக சேதமடைந்த காணப்படுகின்றன.

இஸ்ரேலிய ராணுவத்தினர் பாலஸ்தீனம் காசா மக்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர் .

இந்த தாக்குதினால் பலஸ்தீனம் காசா பகுதிகள் பலமான பாதிப்புக்கு உள்ள நிலையில் காணப்படுகின்றது .

பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன.

ஆக்கிரமிப்பு படைகள்

ஆக்கிரமிப்பு படைகள் இராணுவ தளங்கள் உள்ளிட்டவையும் பலமான பாதிப்பு உள்ளாகி வருகின்றன.

அவ்வாறான நிலையில் தற்பொழுது இஸ்ரேலிய ராணுவத்தின் மிக முக்கியமான படைகளும் பலத்த சேதங்களுக்கும் இழப்புக்களுக்கும் உள்ளாகியிருந்தனர்.

அவ்வாறான காலப் பகுதியில் வடக்கு இஸ்ரேல் பகுதியில் நிறுவப்பட்டுள்ள இசுரேலியா தாக்குதலில் அந்தப் பகுதி மின்சார மையங்கள் பலமான சேதங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வடக்கு இஸ்ரேலை இலக்கவைத்து தெற்கு கிஸ் புல்லா போர்படைகள் கடுமையான தாக்குதலை இடைவிடாது நடத்திக் கொண்டுள்ளனர்.

ராணுவ ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள்

இதனால் வடக்கு இஸ்ரேலிய ராணுவ ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் ராணுவ முகாம் என்பன பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது ,இந்த இடைவிடாத தாக்குதினால் இஸ்ரேல் இராணுவத்தின் உளவியல் உறனிலும் பலமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது .

அதனை அடுத்து தற்பொழுது மின்சாரம் மையங்களையும் சிவில் பாதுகாப்பு இலக்குவைத்து போர்படைகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளதால் .

இஸ்ரேலிய மக்கள் மத்தியில் இராணுவத்தினர் மத்தியிலும் ஒருவித சோர்வு நிலையும் அச்ச நிலையில் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வீடியோ

சேரன் குளிர்களி
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

சேரன் குளிர்களி

சேரன் குளிர்களி

பாட்டுச் சத்தம் கேட்டாலே
நெஞ்சில் பட்டாம்பூச்சி பறக்கும்.
பாட்டி, குழந்தைகள் எல்லாம்
பறந்தோடி வாங்கிக் குடிக்கும்.

ராஜா, லிங்கம், றியோ
தராத சுவையை
சேரன் குளிர்களி தந்தது.
ரோஜாப்பூ வாசமாய்
அவர்கள் சேவையிருந்தது.

றோலுக்க கம்பில்லை
பாலுக்க தண்ணியில்லை
பானுக்க மண்ணில்லை
ஆனால்,
வாழ்வுக்க வசந்தமிருந்தது.

கலப்படமில்லாத வியாபாரம்
களிப்புடன் வாழ்ந்தது சமுதாயம்.
நிழல்படமாய் இதன் நினைவுகள்
நிலையாக எங்கள் நெஞ்சோரம்.

சேரன் பாண்டியன் சுவையூற்று
பேரைக்கேட்கவே பெருகுது
நினைவூற்று அந்த
நேரம் எங்களுக்கு இவையும்
ஆனந்தப் பூங்காற்று.❗

-பிறேமா(எழில்)-