கென்யாவில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலி
கென்யாவில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலி
கென்யாவில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலி ,கென்யாவில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலி.
தெஹ்ரான், செப். 06 (எம்என்ஏ) – கென்யாவில் பள்ளி விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்ததுடன், 13 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நைரி கவுண்டியில் உள்ள ஹில்சைட் எண்டராஷா பிரைமரியில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் ரெசிலா ஒன்யாங்கோ தெரிவித்தார்.
“நாங்கள் காரணத்தை ஆராய்ந்து வருகிறோம், தேவையான நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் கூறினார், AP தெரிவித்துள்ளது.
கென்ய உறைவிடப் பள்ளிகளில் பள்ளி தீ பொதுவானது, அங்கு பல மாணவர்கள் தங்கியுள்ளனர், ஏனெனில் நீண்ட பயணங்கள் இல்லாமல் படிக்க அதிக நேரம் கிடைக்கும் என்று பெற்றோர்கள் நம்புகிறார்கள்.
பணிச்சுமை அல்லது வாழ்க்கை நிலைமைகள் தொடர்பாக போராட்டங்களின் போது மாணவர்களால் சில தீக்குளிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு தலைநகர் நைரோபியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.
கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் சந்தித்தார் எம்பி
கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் சந்தித்தார் எம்பி
கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் சந்தித்தார் எம்பி ,ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் , திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச . குகதாசன் அவர்களை தமிழரசுக் கட்சி மாவட்ட பணிமனையில், வியாழக்கிழமை (05) சந்தித்தனர்.
இச் சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தல் நிலவரங்கள் பற்றியும், திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் பற்றியும் கலந்துரையாடினர்.
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை ,இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை உடனே விடுவிப்பதுடன், மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை தள்ளுபடி செய்யவும் விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று எழுதிய கடிதத்தில், தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களது வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கிறது.
தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்களை அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். இந்தப் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகள் தமிழக மீனவர்களுக்கு பல தலைமுறைகளாக
வாழ்வாதாரமாக திகழும் நிலையில், மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தமிழக மீனவர் சமூகத்தினருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கடந்த ஜூலை 21 ஆம் திகதி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம், 1.5 கோடி ரூபா அபராதம் விதித்துள்ளது.
இது ஏற்கெனவே துயரத்தில் உள்ள மீனவ குடும்பங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குவதுடன், அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தும்.
எனவே, இலங்கை வசம் உள்ள மீன்பிடிப் படகுகளை விடுவிக்கவும், மீனவர்களை தாயகம் அழைத்து வரவும், மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட
அபராதத் தொகை மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்
அதிரடியாக நீக்கப்பட்ட 4 இராஜாங்க அமைச்சர்கள்
அதிரடியாக நீக்கப்பட்ட 4 இராஜாங்க அமைச்சர்கள்
அதிரடியாக நீக்கப்பட்ட 4 இராஜாங்க அமைச்சர்கள் ,நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷன டி சில்வா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47(3) (அ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இனவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் அனுரா
இனவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் அனுரா
இனவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் அனுரா ,ரணிலுடனும், சஜித்துடனும் ஒழிந்து நிற்கும் இனவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும், புதிய அரசியலமைப்பை உருவாக்க உள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (05) பகல் 3 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டில் தேர்தல்கள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது. நீங்களும் பல கட்சிகளுக்கு வாக்களித்து வருகின்றீர்கள். உங்களுடடைய வாக்குகளால் பல அரசுகள் உருவாகியிருக்கின்றன.
ஆனால், அந்த அரசாங்கங்களால் இலங்கையில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. மக்கள் வாறுமைக்குள் தள்ளப்பட்டார்கள். யுத்தம் உருவானது. கல்வி, சுகாதாரம் அழிந்தது.
இத்தனைக்கும் அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் பிரச்சினைகளை சந்திக்கவில்லை. மாறாக அவர்கள் வளர்ச்சி அடைந்தார்கள். பொருளாதாரத்திலும் முன்னேற்றமடைந்தார்கள்.
அதனால்தான் மாற்றம் தொடர்பில் சிந்திக்க வேண்டி உள்ளது. அவ்வாறான மாற்றத்தை உருவாக்க வேண்டும். விசேடமாக வடக்கில் உள்ள மக்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும், அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற சிந்தனை எழுந்துள்ளது.
இன்று ஆட்சி மாற்றம் தொடர்பில் மக்கள் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். இந்த தேர்தலில் மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என மக்கள் சிந்திக்கின்றனர்.
நீங்கள் அறிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவத்தினரிடம் கேட்டுப்பாருங்கள். தபால்மூல வாக்களிப்பில் 80 வீதமானவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளனர்.
இந்த தேர்தலில் தென்னிலங்கையில் எவ்வாறான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். சிங்கள மக்கள் மத்தியில் மாத்திரமல்ல, வடக்கு மக்களும் அந்த வெற்றியில் எம்முடன் இணைய வேண்டும்.
இதுவரை வந்த அரசுகள் வடக்கு மக்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கவில்லை. முன்னொரு தேர்தலில் இங்குள்ள மக்கள் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். பின்னர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவினை முழுமையாக வழங்கிய போதிலும் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
பின்னர் கோட்பாய ராயபக்சவிற்கு எதிராக வாக்களித்தீர்கள் ஆனாலும் அதிலும் அரசாங்கத்தை வெற்றி கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தேசிய மக்கள் சக்திக்கு இம்முறை வாக்களியுங்கள் என்று உங்களிடம் கேட்கின்றோம்.
வடக்கு, கிழக்கு,தெற்கு இன்றி அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் நல்ல அரசாங்கம் ஒன்றை உருவாக்கவுள்ளோம். சீர்கெட்டுள்ள அரசை மீட்க நீங்களும் ஒத்துழைக்க வேண்டம். அதற்காக வேலைத்திட்டங்கள் எம்மிடம் இருக்கின்றது.
நாங்கள் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய வகையில் தீர்வு கிடைக்கும். நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறான எமது அரசாங்கத்தில் குறிப்பிட்ட சில விடயங்களை முன்னெடுக்க உள்ளோம். குழந்தைகளுக்கு கல்வி என்பது எமது பிரதான நோக்கமாகும். கிராமப்புற குழந்தைகளுக்கும், பாடசாலைக் கல்வியையும் மேம்படுத்தவுள்ளோம்.
பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைகள், பாடலை வளங்களை சீர் செய்வதுடன்,பெற்றோருக்கு சுமையான கல்வி முறையில் மாற்றத்தினையும் கொண்டு வருவது எமது பிரதான திட்டமாகும்.
கிளிநொச்சி மக்கள் அதிகமாக விவசாயத்தை தம்பி வாழ்கின்றனர். அவர்களின் விவசாயத்தில் அபிவிருத்தியினை கொண்டுவருவதும் எமது அரசின் திட்டமாகும். சிறந்த விதைகளை பெறுவதில் கடினம் ஏற்படுகின்றது.
விதை ஆராய்ச்சி நிலையங்கள், விதை சந்தைகளை உருவாக்குவோம். விவசாயிகளிற்கு விவசாயத்திற்காக காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்.
அத்துடன் இங்குள்ள பிரதான பிரச்சின நீர் வழங்கள் காணப்படுகின்றது. 126 குளத்துக்கு மேல் அபிவிருத்தி செய்யப்படாமல் இருப்பதாக விவசாயி எனக்கு தெரிவிக்கின்றார். 400 குளங்கள் வரை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றார். ஒரு வருத்திற்குள் அனைத்துக் குளங்களும் சீர் செய்து கொடுக்கப்படும்.
விவசாய உரம், மருந்துகள் உள்ளிட்டவை சலுகை விலையில் பெற்றுக்கொடுக்கப்படும். அத்துடன் விவசாய உற்பத்திகளுக்கு சிறந்த நியாயமான விலை பெற்றுக்கொடுக்கப்படும்.
இன்று எமது நாட்டு மக்கள் பெரும் பிரச்சினையாக எதிர்கொள்வது போதைப் பொருள் பாவனையாகும். போதைப் பொருட்களை அரசியல்வாதிகளே விநியோகிக்கின்றனர். கெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுவதில்லை.
போதைபெ்பொருட்கள் வெளிநாடுகளிருந்து இறக்கப்படுகின்றது. அவ்வாறான போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம். அரசு அமைக்கப்பட்ட பின் விரைவில் போதையிலிருந்து எமது நாடு விடுவிக்கப்படும்.
இதேவேளை எமது நாட்டில் நீதி சமபடுத்தப்படும். மொழி, மதம், இனத்தின் அடிப்படையில் நீதி நடைமுறைப்படுத்தப்படாது. அனைத்து இனம், மதம்,சமயங்களையும் சமமாக மதிக்கும் வகையில் நீதி நிலைநிறுத்தப்படும்.
இன்று எமது நாட்டில் உள்ள மக்கள் வறுமையில் உள்ளமைக்கு அரசியல்வாதிகளின் களவும், திருட்டுக்களுமே காரணம். அவ்வாறு மக்களன் பணங்களையும், பொது சொத்துக்களையும் திருடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம். அவர்களிடமிருந்து திருடப்பட்ட மக்களின் சொத்துக்களை பறிப்போம்.
திருட்டு, மோசடி இல்லாத அரசாக தேசிய மக்கள் சக்தி மட்டுமே இருக்கும். எமது அரசாங்கத்தில் அவ்வாறானவர்கள் மட்டுமே இருப்பார்கள். வறுமையில் உள்ள மக்களுக்கு10,000 ரூபா வழங்குவோம். விரைவில் மின்கட்டணம் குறைக்கப்படும். உணவு, மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கு வரி இல்லாது செய்யபபடும். அதனால் ஏழை மக்களின் வாழ்வில் மறு மலர்ச்சி உருவாகும்.
எமது நாடு, எந்த பக்கமிருந்து பார்த்தாலும் பெறுமதியான நாடாக இருக்கின்றது. அதனை இதுவரை வந்த அரசுகள் அழித்தனர். தெற்கு பகுதியிலிருந்து தேசிய மக்கள் சக்தி தொடர்பில் செய்திகள் வருகின்றதா?
அடுத்த 2 வாரமும் எதிர்காலத்தை தீர்மானிக்கும் காலங்களாகும். பழைய பாதையிலிருந்து விலகி புதிய பாதைக்குள் செல்வோம். இங்குள்ள மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்று இதுவரை தீர்மானிக்கவில்லை. ஆகவே சிந்தித்து செயற்பட வேண்டும்.
இதுவரை காலமும் இவாதம் பேசி இனவாத அரசாங்கமே முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறு இனவாதம் பேசியவர்கள் இன்று எங்கு இருக்கின்றார்கள் தெரியுமா?
மொட்டுக் கட்சியே அதிகம் இனவாதம் பேசியது. அந்த மொட்டுக்கட்சியில் இருந்தவர்கள் இன்று ரணிலுடனும், சஜித்துடனும் நிற்கின்றார்கள். ராயபக்சவின் இனவாதம் இன்று சிறிதாகிவிட்டது
11 வருடங்கள் ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்த பீரிஸ் கோட்டாவின் அரசியல் 2 வருடம் இருந்தார்.இன்று சஜித்துடன் நிற்கின்றார். மொட்டின் மறு அவதாரம் சஜித். மொட்டுடன் இருந்த பலரும் சஜித்துடன் நிற்கின்றார்கள்.
இவ்வாறு இரண்டு அவதாரங்களாக ரணிலுடனும், சஜித்துடனும் ஒழிந்து நிற்கின்றார்கள். அவர்களை நாங்கள் பக்கத்திலும் எடுக்க மாட்டோம். மஞ்சள் நீராடினாலும் அவர்கள் செய்தவை அழிந்துவிடுமா? இங்குள்ள மக்கள் இனவாதிகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
பாராளுமன்றத்தைத் தெளிவுபடுத்திய மத்திய வங்கி ஆளுநர்
பாராளுமன்றத்தைத் தெளிவுபடுத்திய மத்திய வங்கி ஆளுநர்
பாராளுமன்றத்தைத் தெளிவுபடுத்திய மத்திய வங்கி ஆளுநர் ,இலங்கை மத்திய வங்கியின் பணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஆளுகைச் சபை மற்றும் நாணயக் கொள்கைச்சபையின் உறுப்பினர்கள், பிரதி ஆளுநர்கள் உள்ளிட்ட மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பாராளுமன்ற அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கி சட்டத்தின் 80 (2) (அ) பிரிவுக்கு அமைய மத்திய வங்கியின் ஆளுநர், ஆளுகைச் சபை மற்றும் நாணயக் கொள்கைச் சபையின் உறுப்பினர்கள், மத்திய வங்கியின் அனைத்து பிரதி ஆளுநர்கள் ஆகியோர் பாராளுமன்றத்தின் கோரிக்கைக்கு அமைய, பாராளுமன்றத்தினால் அல்லது அதன் ஏதாவது ஒரு குழுவினால் மத்திய வங்கியின் பணிகள் தொடர்பில் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒரு தடவை வங்கியின் விவகாரங்கள் குறித்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற சட்டத் தேவையை நிறைவேற்றும் வகையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
தற்பொழுது காணப்படும் நிலைமைக்கு ஒப்பீட்டளவில் இலங்கையின் பணவீக்கத்தை 5 வீதமாகக் குறைக்க முடிந்திருப்பதாகவும், கொள்கை வட்டி வீதம் குறைக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
கையிருப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் நாணயமாற்று வீதத்தை வலுப்படுத்தி ரூபாவின் பெறுமதியை மேலும் உறுதிப்படச் செய்ய முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் நிதிக் கட்டமைப்பை ஸ்திரப்படுத்துவது தொடர்பான விடயங்களை மத்திய வங்கியின் ஆளுநர் இங்கு தெளிவுபடுத்தினார்.
குறிப்பாக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த நாட்டில் வங்கி முறை வீழ்ச்சியடைவதை தடுக்க முடிந்தமை விசேட விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய மத்திய வங்கிச் சட்டம் மற்றும் வங்கி முறையை ஒழுங்குபடுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டங்களும் உதவியது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், வங்கி முறை, வங்கியல்லாத நிதி அமைப்பு, பங்குச் சந்தை மற்றும் காப்புறுதித் துறை உள்ளிட்ட முழு நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மைக்காக புதிய மத்திய வங்கி சட்டத்தின் மூலம் நிதிக் கட்டமைப்பு மேற்பார்வைக் குழுவை நியமித்தல் உள்ளிட்ட இலங்கையின் நிதி அமைப்பை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவற்றின் தொழில்நுட்ப ரீதியான விடயங்கள் குறித்தும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், தற்போதைய நிதி நிலைமை மற்றும் அதுதொடர்பான விடயங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்சினைகளுக்கும் மத்திய வங்கியின் ஆளுநர் பதில் வழங்கினார்.
மத்திய வங்கியின் வகிபாகம் மற்றும் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புக்கூறலுடனும் பாராளுமன்றத்திற்கு தெரியப்படுத்தி இவ்வாறு கலந்துரையாடுவது மிகவும் முக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
2024 Global Finance’s Central Banker அறிக்கையின் படி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கௌரவத்தைப் பெற்றுக் கொண்டமைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
பெண் குளிப்பதை பார்வையிட்ட பொலிஸ்
பெண் குளிப்பதை பார்வையிட்ட பொலிஸ்
பெண் குளிப்பதை பார்வையிட்ட பொலிஸ் ,3.4.2024 அன்று நான் என் குடும்ப உறுப்பினர் சகிதம் 8 பேர் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு சென்றோம் .
ஒரு தலைக்கு 50 ருபா கொடுக்க வேண்டும் அங்கு குளித்து உடுப்பு மாற்றுவதற்கு இடம் இருக்கவில்லை .
முன்பு உடுப்பு மாற்றுவதற்கு என ஆண்கள் பெண்கள் இருவருக்கும் ஒவ்வொரு பகுதிகள் காணப்பட்டன, அதை நினைத்து நாமும் குளித்து உடுப்பு மாற்றுவதற்கு போனோம் .
குளித்த பின் பார்த்தபோது எல்லா இடங்களும் தகரத்தாலும் பரல்களாலும் அடைக்கப்பட்டு இருந்தது எமக்கு என்ன செய்வதென தெரியவில்லை.
பின்பு பற்றை காடுகள் இருந்தது அதற்குள் மறைந்திருந்து உடுப்பை மாற்றினோம் .
மேலே போலீச இருந்தார்கள் நாம் அவர்களுக்கு தென்படாதபடி உடுப்புகளை மாற்றிவிட்டு எமக்கு டிக்கெட் தந்தவருடன் கதைத்தோம் .
நீங்கள் டிக்கெட் தரும்போது எங்களுக்கு சொல்லி இருக்க வேண்டும் அல்லவா நாம் குளிக்காது திரும்ப வந்திருப்போம்.
அதற்கு அவர் சொன்னார் பார்க்க போவதற்கு தான் 50 ரூபாய் என நான் சொன்னேன் நீங்கள் இதில் விளம்பரப்படுத்தி இருந்தால் நாங்கள் குளிக்க போயிருக்க மாட்டோம் என நீங்கள் இதில் எழுதி போட்டோ இருக்க வேண்டும் உடுப்பு மாற்றுவதற்கு இடம் இல்லை என.
அப்படி எழுதி போட்டிருந்தால் நாங்கள் குளிக்காம வந்து இருப்போம் இது சம்பந்தமாக நீங்கள் நடவடிக்கை எடுத்தீர்களா என்று கேட்டபோது ஓம் என்று சொன்னார்.
இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் இதுவரை ஏன் எடுக்கவில்லை என கேட்டோம் .
இவ்விடயம் தொடர்பாக இது சம்பந்தமாக யாருடன் கதைக்க வேண்டும் என்று தொல்பொருள் திணைக்களத்துடன் கதைக்க வேண்டும் என்று சொன்னார்.
அப்போது நான் சொன்னேன் இதனை ஊடகங்களுக்கு தெரிய ப்படுத்தவா என்று ஓம் என தெரிவித்தார் .
உண்மையில் எங்களுக்கு முன் மூன்று பெண் பிள்ளைகள் உடுப்பு மாற்றினவர்கள் அவர்கள் மேலே இருக்கிற போலீஸ்காரர்களை அவதானித்தார்களோ தெரியவில்லை.
திருகோணமலை வெந்நீர் ஊற்றில் நடக்கின்ற இந்த விடயம் அங்கு செல்லும் மக்களுக்கு பெரும் இடர்களை ஏற்படுத்தியுள்ளது .
இவ்வாறு அங்கு சென்று பாதிக்க பட்டவர்கள் அனுப்பி வைத்துள்ளார்கள் .
- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

- உயரும் மின்சார கட்டணம்

- கோட்டாபய நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறினார்

- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

60 ராக்கெட்டுகளை இஸ்ரேலிய தளத்தை நோக்கி ஹிஸ்புல்லா வீசியது
60 ராக்கெட்டுகளை இஸ்ரேலிய தளத்தை நோக்கி ஹிஸ்புல்லா வீசியது
60 ராக்கெட்டுகளை இஸ்ரேலிய தளத்தை நோக்கி ஹிஸ்புல்லா வீசியது ,ஹெஸ்பொல்லா 60 கத்யுஷா ராக்கெட்டுகளை இஸ்ரேலிய தளத்தை நோக்கி வீசியது
டெஹ்ரான், செப். 04 (எம்என்ஏ) – காசா மீதான இஸ்ரேலிய ஆட்சியின் ஆக்கிரமிப்புக்கு மத்தியில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக லெபனான் ஹிஸ்புல்லாவின் இஸ்லாமிய எதிர்ப்பு புதன்கிழமை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தளங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை நடத்தியது.
இன்று காலை முதல் தெற்கு லெபனானில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் வடக்குப் பகுதிகளை நோக்கி 60 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக ஹீப்ரு மொழி பேசும் ஆதாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
கிரியாத் ஷ்மோனா போன்ற சில இடங்களில் ராக்கெட்டுகள் தீயை மூட்டின.
லெபனான் எதிர்ப்பு இயக்கத்தின் இராணுவ ஊடகம் தாக்குதல்கள் மற்றும் அவற்றின் விளைவுகளை கோடிட்டுக் காட்டும் தொடர் அறிக்கைகளை வெளியிட்டது:
உறுதியான தெற்கு கிராமங்கள் மற்றும் பாதுகாப்பான வீடுகள், குறிப்பாக ஐதா அல்-ஷாப் மற்றும் கியாம் நகரங்களில் “இஸ்ரேலிய” எதிரிகளின் தாக்குதல்களுக்கு பதிலடியாக, 4-9-2024 புதன்கிழமை அன்று இஸ்லாமிய
எதிர்ப்புப் போராளிகள் குண்டுவீசித் தாக்கியதாக முதல் அறிக்கை உறுதிப்படுத்தியது. பீட் ஹில்லெல் பாராக்ஸில் உள்ள அல்-சஹ்ல்
பட்டாலியனின் கட்டளைத் தலைமையகத்தையும் டிஷோனில் உள்ள எதிரியின் பீரங்கி பதுங்கு குழிகளையும் கத்யுஷா ராக்கெட்டுகளால் சரமாரியாகத் தாக்கியது.
4-9-2024 புதன்கிழமை அன்று 14:30 மணிக்கு இஸ்லாமிய எதிர்ப்புப் போராளிகள் நேரடியாகத் தாக்கி, பீரங்கி குண்டுகளுடன் ஜரித் படைமுகாமில் நிலைநிறுத்தப்பட்டதாக இரண்டாவது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவது அறிக்கை, இஸ்லாமிய எதிர்ப்புப் போராளிகள், 4-9-2024 புதன்கிழமை, 15:00 மணிக்கு, ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் கஃபர்ஷௌபா ஹில்ஸில் உள்ள ருவைசத் அல்-ஆலம் தளத்தை ஏவுகணைகளால் குறிவைத்து நேரடியாகத் தாக்கியதாக உறுதிப்படுத்தியது.
நான்காவது அறிக்கையின்படி, 4-9-2024 புதன்கிழமை, 15:00 மணிக்கு, ஏவுகணைகளுடன் ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் கஃபர்ஷௌபா ஹில்ஸில் உள்ள அல்-சம்மாகா தளத்தை நேரடியாகத் தாக்கியது.
ஐந்தாவது அறிக்கையின்படி, இஸ்லாமிய எதிர்ப்புப் போராளிகள், 4-9-2024 புதன்கிழமை, 15:50 மணிக்கு, பீரங்கி குண்டுகளுடன் ஹனிதா தளத்தை நேரடியாகத் தாக்கினர்.
காசா பகுதியில் உள்ள உறுதியான பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் வீரம் மிக்க மற்றும் மரியாதைக்குரிய எதிர்ப்பை
ஆதரிப்பதற்காகவும், இஸ்லாமிய எதிர்ப்பானது 03-09-2024 செவ்வாய் அன்று “இஸ்ரேலிய” எதிரி இராணுவ தளங்கள் மற்றும் லெபனான்-பாலஸ்தீன எல்லையில் நிலைநிறுத்தப்படுவதற்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.
கிரென்ஃபெல் டவர் தீ விசாரணை இங்கிலாந்து அதிகாரிகளை குற்றம் சாட்டியுள்ளது
கிரென்ஃபெல் டவர் தீ விசாரணை இங்கிலாந்து அதிகாரிகளை குற்றம் சாட்டியுள்ளது
கிரென்ஃபெல் டவர் தீ விசாரணை இங்கிலாந்து அதிகாரிகளை குற்றம் சாட்டியுள்ளது.
டெஹ்ரான், செப். 04 (எம்என்ஏ) – 2017 லண்டன் கிரென்ஃபெல் டவரில் புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவு பற்றிய பொது விசாரணை, அரசாங்கம் மற்றும் கட்டுமானத் துறையின் தோல்விகளால் பேரழிவு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டியது.
ஜூன் 14, 2017 அதிகாலையில் மேற்கு லண்டனின் பணக்காரப் பகுதிகளில் ஒன்றான 23 மாடி சமூக வீட்டுத் தொகுதியில் தீப்பிடித்ததில் எழுபத்தி இரண்டு பேர் இறந்தனர். இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு குடியிருப்பு கட்டிடத்தில் பிரிட்டனின் மிக மோசமான தீவிபத்து ஆகும். ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
அதன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இறுதி அறிக்கையில், விசாரணையானது, அபார்ட்மென்ட் டவரின் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், உள்ளூர் மற்றும் தேசிய
அதிகாரிகள் மற்றும் நேர்மையற்ற முறையில் எரியக்கூடிய உறைப்பூச்சு பொருட்களை பாதுகாப்பாக சந்தைப்படுத்திய நிறுவனங்களின் தோல்விக்கு பெரும் பொறுப்பை சுமத்தியது.
அரசாங்கம், கென்சிங்டன் மற்றும் செல்சியாவின் உள்ளூர் அதிகாரம், தொழில்துறை, ஒழுங்குமுறை குழுக்கள், குறிப்பிட்ட தனிநபர்கள் மற்றும் உயர்மட்ட கட்டிடங்களில் தீ பாதுகாப்பு குறித்து பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த ஒரு தவறான தயாரிப்பு தீயணைப்பு படை மீது பரவலான விமர்சனங்களும் பழிகளும் சுமத்தப்பட்டன.
“கிரென்ஃபெல் டவரில் ஏற்பட்ட தீ, கட்டுமானத் துறையில் பொறுப்பான பதவிகளில் உள்ள மத்திய அரசு மற்றும் பிற அமைப்புகளின் பல தசாப்தங்களாக தோல்வியின் உச்சம்” என்று விசாரணை அறிக்கை கூறியது, இது கிட்டத்தட்ட 1,700 பக்கங்களுக்கு ஓடியது.
நரகத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் இதற்கு காரணமானவர்கள் நீதி மற்றும் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று
கோரியுள்ளனர். ஆனால், 58 பேர் மற்றும் 19 நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் விசாரணையில் இருப்பதாக பிரிட்டிஷ் காவல்துறை கூறியுள்ள நிலையில், வழக்குகள் – கார்ப்பரேட் படுகொலை மற்றும் மோசடி உட்பட –
சிக்கலான தன்மை மற்றும் விசாரணையின் அறிக்கையை பரிசீலிக்க வேண்டியதன் காரணமாக பல ஆண்டுகள் உள்ளன.
2019 ஆம் ஆண்டு விசாரணைக் குழுவின் முந்தைய அறிக்கை, இரவில் நடந்த நிகழ்வுகளை மையமாகக் கொண்டு, நான்காவது மாடி குடியிருப்பில் உள்ள குளிர்சாதன பெட்டியில் மின் கோளாறு ஏற்பட்டதைக் கண்டறிந்தது.
தீப்பிழம்புகள் பின்னர் கட்டுப்பாடில்லாமல் பரவியது, முக்கியமாக 2016 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட போது கோபுரம் மூடப்பட்டிருந்தது – வெளிப்புற
பேனல்கள் வெளிப்புற பேனல்கள் தோற்றத்தை மேம்படுத்தவும், எரியக்கூடிய அலுமினிய கலவை பொருட்களால் செய்யப்பட்ட எரியக்கூடிய அலுமினிய கலவை பொருட்களால் ஆனது.
பிரிட்டனில், 36 அடி அல்லது அதற்கும் அதிகமான உயரத்தில் உள்ள 3,280 கட்டிடங்கள் இன்னும் பாதுகாப்பற்ற உறைகளைக் கொண்டிருப்பதாக ஜூலை மாத அரசாங்க புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன, இன்னும் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் சீரமைப்புப் பணிகள் தொடங்கவில்லை.
அர்ச்சுனா எங்கள் அவதாரம்
அர்ச்சுனா எங்கள் அவதாரம்
அர்ச்சுனா எங்கள் அவதாரம்
அவனை நாங்கள் பின் தொடர்வோம்
எதுகை மோனைக்கு ஏன் சீற்றம்
ஏனோ உனக்கு தடு மாற்றம்
கத்தும் கடலே அமைதி கொள்
கரு வானமே இவரை பார்த்து கொள்
எத் துயர் நீ எறிந்தாலும்
எங்கள் வீரனை நாம் தொடர்வோம்
குரைக்கும் நாய்கள் வாசலிலே
கூவியே இன்று என் கண்டார்
அன்பு செலுத்தும் மக்கள் முன்
அகிலத்தில் எவர் முன் வருவார்
கொத்தி எறியும் கோடாரி
கொண்டை கழன்று விழுந்துவிடும்
அடுப்பில் எரியும் அவ்வேளை
அட டா சாம்பலாய் மாறிவிடும்
விட்டு களத்தை ஓடி விடு – நாம்
விடுதலை பெற்றிட விட்டு விடு
பற்றி எரியும் பார் முன்னால்
பகைவா இன்றே ஓடி விடு ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-09-2024
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச நீதிமன்றில் -அலறும் இலங்கை
காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச நீதிமன்றில் -அலறும் இலங்கை
காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச நீதிமன்றில் -அலறும் இலங்கை யை பாரப்படுத்தும் நடவடிக்கையில் புலம் பெயர் தமிழர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .
வன்னி மைந்தன் டிக் டாக் லைவ் ஊடாக இந்த விடயம் அறிவிக்க பட்டுள்ளது .மூத்த மருத்துவர்கள் ,அரசியல் ஆலோசகர்கள் ,சமூக சேவகர்கள்,சட்டத்தரணிகள் என்கின்ற குழுவோடு இந்து ,காணாமல் ஆக்க பட்டோர் தொடர்பாக வாவழக்கு ஒன்றை தாக்கல் செய்யும் நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகி வருகின்றனர் .
இதற்கு காணமல் ஆக்க பட்டோர் உறவுகள் விபரங்கள் தேவை படுகிறது ,குறைந்த நூறு பெயர்து விபரமாவது தேவை படுகிறது .
எனவே காணாமல் ஆக்க பட்டோர் உறவுகள் தயவு செய்து எம்முடன் இணைந்து இலங்கை புரிந்த மனித குலத்திற்கு எதிரான இன அழிப்பு ,போர்க்குற்ற ,அதன் ஊடக காணாமல் ஆக்க பட்டவர் விடயம் தொடர்பாக தமிழ் மக்கள் தரப்பில் விபரம் கேட்க படுகிறது , .
நீங்கள் வழங்கும் தகவலே சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை அழகைவிட பேருதவியாக இருக்கும் .
இது மக்கள் ,விடுதலை விரும்பிகள் என்பனவர்கள் தன்னிச்சையாக இணைந்து செயலாற்ற முனைகின்றனர் .
தயவு செய்து பாதிக்க பட்ட மக்களே விபரங்களை எமக்கு தாருங்கள் ,இதனை உங்கள் நண்பர்க்ளுக்கு பகிர்ந்து ,தமிழர் வென்றிட ,பாதிக்க பட்ட மக்களுக்கு நீதியை பெற்று கொடுத்திட ,எடுத்து பரப்புங்கள் .
தமிழால் தமிழராய் ஒன்றிணைவோம் ,வா தமிழா
தொடர்புகளுக்கு வன்னி மைந்தன் வாட்சப் ,வைபர் , 0044 7536707793
அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்
அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்
அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன் ,நமது அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான எந்த ஒரு மேலதிக கருத்துக்களும் நண்பன் மயூரன் சிவப்பிரகாசம் அவர்களுடன் இணைந்தே வெளியிடப்படும்.
எனது அரசியல் சம்பந்தமான பேச்சாளராக மயூரன் சிவப்பிரகாசம் தொடர்ந்து பயணிப்பான்.
எனது நண்பனுக்கு அவனது அரசியல் பயணத்திற்கு உதவ விரும்பும் சாவகச்சேரியின் அன்பு பெருமக்கள் அவனுடன் நீங்கள் தொடர்பு கொண்டு மேலதிகமான உங்கள் ஆதரவினை தெரிவிக்கலாம்.
நன்றி
இப்படிக்கு வைத்திய கலாநிதி
இராமநாதன் அர்ஜுனா.
என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .
ரணில் அநுரவிற்கு சஜித் பதிலடி
ரணில் அநுரவிற்கு சஜித் பதிலடி
ரணில் அநுரவிற்கு சஜித் பதிலடி ,நாட்டை கட்டியெழுப்புவதற்கான சிறந்த வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டுள்ளதாகவும், அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவரும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
காலி சமனல ரணில், அநுரவிற்கு சஜித் பதிலடிவிளையாட்டரங்கில் நடைபெற்ற ஐக்கிய மக்கள்
சக்தியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“மக்கள் விடுதலை முன்னணியும், ஜனாதிபதியும் இணைந்து, எங்களின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நேரத்தில், பொய்யான வதந்திகளை பரப்பி, ஃபேஸ்புக் மற்றும் பல்வேறு
இணையதளங்களில், பணத்தினை வழங்கி நாங்கள் ஒன்றாக சேர்கிறோம் என போலி பிரசாரம் செய்கின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றியின் பின்னர் எதிர்வரும் 21ஆம் திகதி இந்நாட்டின் 220 இலட்சம் பொது மக்களுடன் இணைவோம் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகின்றேன்.
இந்த நலிந்த மற்றும் மிகவும் ஊழல் நிறைந்த அரசியல் கட்சிகளிடம் நாங்கள் செல்ல மாட்டோம்.
தலைவனும், திசைகாட்டி தலைவனும் ஒன்று சேர பெரும் ஆசை.
அவர்கள் விரும்பினால் சேரலாம். எக்காரணம் கொண்டும் நாட்டை சீரழிக்கும் கும்பலுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது” என்றார்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லொறி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லொறி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி ஒன்று விபத்திற்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, மாத்தறை நோக்கிச் செல்லும் அனைத்து கனரக வாகனங்களையும் பின்னதுவயில் இருந்து வெளியேறுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
பின்னதுவைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வெற்றியின் பின்னர் அதிரடி நடவடிக்கை
வெற்றியின் பின்னர் அதிரடி நடவடிக்கை
வெற்றியின் பின்னர் அதிரடி நடவடிக்கை ,தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தை
பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெற்றி பெற்ற பின்னர் விரைவில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் கூறுகிறார்.
ஜா-எல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“எமக்கு வெற்றி கிடைத்தால் ஆரம்பத்திலேயே பாராளுமன்றம் கலைக்கப்படும்.
அப்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த பாராளுமன்றம் நியமிக்கப்படும் வரை அமைச்சரவைக்கு என்ன நடக்கும் என சிலர் கேட்கின்றனர்.
கவலைப்பட வேண்டாம். நாம் அரசியலமைப்பு ரீதியாக நாட்டை ஆள்வோம். இதற்கிடையில் ஒரு விடயம் என்னவென்றால், நான் ஜனாதிபதியாகும்போது, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி காலியாக இருக்கும், அதற்கு ஒருவர் வரலாம்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருடன் நானும் நான்கு பேர். 4 பேர் அடங்கிய அமைச்சரவை அமைக்கப்படும்.
அது சாத்தியமில்லை என்றால், அனைத்தையும் வர்த்தமானியின் ஊடாக ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரலாம்.
இந்த பாராளுமன்றத்தில் உள்ள மூன்றில் இரண்டு பங்கினர் அடுத்த பாராளுமன்றத்தில் இருக்க மாட்டார்கள் என்பதை இங்கு உறுதிப்பட கூறுகிறேன்” என்றார்.
அர்ச்சுனா காணி பறிப்பு
அர்ச்சுனா காணி பறிப்பு
அர்ச்சுனா காணி பறிப்பு மேற்கொள்ள முனைவதாக என அர்ச்சுனா இராமநாதன் .தெரிவித்துள்ளார்
மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் பெயரில் உள்ள காணியை அபகரிக்கும் நடவடிக்கையில் ,சில விஷமிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
காணொளியில் முழுமையான விடயம் பார்க்க இதில் அழுத்துங்க
- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

- உயரும் மின்சார கட்டணம்

- கோட்டாபய நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறினார்

- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

தம்பிராஜா ஐயா குற்றம் சுமத்தப் பட்டு சிறையில்
தம்பிராஜா ஐயா குற்றம் சுமத்தப் பட்டு சிறையில்
மருத்துவர் அர்ச்சுனாவை முகநூலில் தொடரும் ஆதரவாளர்களாகிய எங்களுக்கும் அந்தக் குற்றத்தில் பங்கு உள்ளதாகவே நான் கருதுகிறேன்.
திங்கள் இரவு சுமார் 9pm, மருத்துவர் அர்ச்சுனாவின் முகநூல் செயல் இழந்து போகிறது.
முகநூல் ஆதரவாளர்கள் பரபரப்பாக தொடங்கிறார்கள்.
தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி நடக்கிறது.
தொலைபேசியும் துண்டிக்கப் பட்டுள்ளது. பரபரப்பு உச்சத்தை தொடுகிறது.
யாரிடம் கேட்பது? யாரை தொடர்பு கொள்வது? எல்லோருக்கும் படபடப்பு.
முகநூல் நண்பர்களாக இருந்தாலும் ஏற்கனவே அறிமுகம் இல்லாதவர்கள் கூட ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார்கள்,
WhatsApp, Tik Tok குழுக்களில் இருப்பவர்கள் தங்களுக்குள் ஒவ்வொரு கருத்துக்களை பரிமாறுகிறார்கள்,
நெருங்கிய தொடர்பில் உள்ள நண்பர்கள் யார்? என்ற தேடல்,
“ஐயோ டொக்டருக்கு ஏதோ ஆகிவிட்டது, யாராவது அவரை போய் பாருங்கள், காப்பாற்றுங்கள் என்ற கதறல்கள்”,
பொலிசால் கைது செய்யப் பட்டாரா?
ஏதாவது குழுக்களால் கடத்தப்பட்டாரா?
உயிரோடு இருக்கிறாரா, இல்லையா?
ஆயிரம் கேள்விகள், குழப்பங்கள்…
வெளிநாடுகளில் உள்ள நண்பர்கள் உள்நாட்டு நண்பர்களுக்கு அழைப்பு எடுக்கிறார்கள்…
இந்த இடத்தில்தான் தம்பி ஐயா மாட்டுப் படுகிறார்…
போனுக்கு மேல் போன்,
“ஐயா டொக்டர் அர்ச்சுனாவை காணவில்லை ஐயா, ஒருக்கால் போய் பாருங்க, எங்க இருக்கிறார், என்ன நடந்தது ஒண்டும் தெரியவில்லை, ஒருக்கா போய் பாருங்க ஐயா”
கதறல்கள்…
சுமார் இரவு 10:00 மணி, வயதான அந்த மனிதர் மருத்துவர் அர்ச்சுனாவை தேடி புறப்படுகிறார்…..
தம்பி ஐயாவின் தொலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது…
எங்களுக்கு இருந்த பரபரப்பை நாம் அவர்மேல் கொட்ட, அவற்றை சுமந்து கொண்டு ஐயா போகிறார்…
ஆனால் சாவகச்சேரி மருத்துவமனையில் நின்ற ஊழியர்களுக்கு அந்த பரபரப்பு இல்லை,
காரணம் அர்ச்சுனாவின் முகநூல் அவர்களால் கவனிக்கப் படவில்லைபோல் உள்ளது,
மேலும் சற்று முன் எப்போதும்போல அவர் காரில் வந்து இறங்கி, விடுதிக்கு போனதை நேரடியாக பார்த்திருக் கிறார்கள்.
அதன் காரணமாக அங்கிருந்த ஊழியர்கள் நிலமையை சாதாரணமாக கையாள முயற்சி செய்கிறார்கள்.
ஆனால் தொலைதூரத்தில் இருந்து கொண்டு நிலமையை நேரடியாக பார்க்க முடியாத Dr.அர்ச்சுனாவின் அன்பு உறவுகளுக்கு பதட்டம் தணியவில்லை,
இறுதியில் ஏதேதோ நடந்து முடிகிறது.
பல நாட்கள் சரியான ஓய்வு உறக்கம் இல்லாத நிலையில் அன்று உள்ளே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த Dr.அர்ச்சுனாவுக்கு வெளியில் நடந்த இந்த கலோபரங்கள் எதுவும் தெரியாது.
ஏதோ சத்தம் கேட்டு திடீரென கண்முழித்த போது கதவை உடைத்துக் கொண்டு காவலர்கள் உள்ளே நின்றதை பார்த்து திகைத்து போகிறார் மருத்துவர்….
இதில் தம்பி ஐயா சிறு சிறு தவறுகள் விட்டுள்ளார் என்பதை நான் முழுமையாக ஏற்கிறேன்.
அதற்கு நாமும் ஒரு காரணம் என்பதையும் முழுமையாக ஏற்கிறேன்.
அந்த தவறுகள் நிச்சயம் மன்னிக்கப்பட வேண்டியவையே!
இந்த நேரத்தில் நாம் தம்பி ஐயாவுக்கு ஆதரவாக நிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அவருடைய கட்சி, கொள்கைகள் சார்ந்த பழைய தவறுகள் எதுவும் இங்கே பொருத்தப் படுவது ஞாயம் இல்லை என்பது என்கருத்து.
அதே வேளை இரவிரவாக நித்திரை கொள்வதற்குகூட விடாமல் நடுச்சாமம் கடந்து டிக் டொக் உரையாடல்களுக்கு Dr.அர்ச்சுனாவை அழைக்கும் வன்னி மைந்தனின் செயல் தவறானது என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.
வெளிநாட்டில் இருப்பவர்களை விடவும் உள்நாட்டில் இருக்கும் மக்களோடு அதிக உறவை வளர்க்க நேரத்தை செலவிடும்படி என் அன்புத் தம்பி Dr. அர்ச்சுனாவை கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு வெளிநாட்டில் வாழும்
அன்பு +அக்கறை உள்ள
Dr. அர்ச்சுனாவின் அக்கா..இவ்வாறு அர்ச்சுனா முக நூலியில் வெளியிட .பட்டுள்ளது
இதற்கு எனது கருத்து கீழ்வருமாறு .அமைகிறது
வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் காணியானது பறிக்க படும் நிலையில் ,வைக்க படும் பொறி ,
ஆரம்பமாகும் சம்பவங்கள் .திரளும் மக்கள் கூட்டம்
அக்கா வன்னி மைந்தன் ஆகிய எம் மீது வைத்த கருத்து தவறு என்பதையும் அதன் உள்ளார்ந்தம் எது என்பதை புரியமுடிகிறது ,மக்கள் சேவைக்கு வந்தவன் நேரத்தை கருத்தில் கொள்வதில்லை ,தனது நோக்கத்தில் குறியாக இருப்பான் .
இந்த சம்பவம் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் மக்கள் பலம் , செயல்பாடுகள் கண்டு ஆதிக்க சமூகம் அலறியுள்ளது நாம் அறிவோம் .
.இது அர்ச்சுனாவுக்கு கிடைத்த மிக பெரும் வெற்றி .அர்ச்சுனா எமக்காக இருக்கும் வரை அவருக்கான ஆதரவு வன்னி மைந்தன் ஆகிய என்னால் ,எம் டிக் டாக் அணியினரால் வழங்க படும் ,எமது எதிரி இணையமும் களத்தில் நிற்கும் ,
களத்தை கண்டவர்கள் நாங்கள் ,சரித்திரம் படைக்க வந்திருக்கும் சாதனையாளன் வீர மகன் மக்கள் நாயகன் அர்ச்சுனவோடு நான் நிற்பேன் .
காலம் பலவிடயங்களை பகிரும் பொழுது நம் உயிரோடு இருக்க மாட்டோம் ,வரலாறு அப்படி தான் காணப்படுகிறது நன்றி –
நட்புடன் -வன்னி மைந்தன்
- மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

- பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

- சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்

- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

ரஷ்ய தாக்குதலில் 50 பேர் பலி
ரஷ்ய தாக்குதலில் 50 பேர் பலி
ரஷ்ய தாக்குதலில் 50 பேர் பலி ,ரஷ்ய வான்வழித் தாக்குதலில் இராணுவ கல்வியில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
ரஷ்ய வான்வழித் தாக்குதலில் இராணுவ கல்வியில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
தெஹ்ரான், செப். 03 (எம்என்ஏ) செவ்வாய்கிழமையன்று ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்ததாக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் கிழக்கு உக்ரேனிய நகரமான பொல்டாவாவில் உள்ள இராணுவ அகாடமி மற்றும் அருகிலுள்ள மருத்துவமனையைத் தாக்கியதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதன்கிழமை நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
51 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உக்ரைன் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஏவுகணைகள் மன்னிக்க முடியாத வேகத்துடன் தாக்கப்பட்டன: எச்சரிக்கை சைரன்கள் ஒலிப்பதற்கும் வேலைநிறுத்தத்திற்கும் இடையிலான
இடைவெளி மிகக் குறைவாக இருந்ததால், தங்குமிடத்திற்கு செல்லும் வழியில் பலர் கொல்லப்பட்டதாக உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
NY டைம்ஸின் கூற்றுப்படி, உக்ரேனிய துருப்புக்கள் இராணுவ நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்காகவோ அல்லது விருதுகளைப் பெறுவதற்காகவோ கூடும் போது ரஷ்யா தாக்கியது இது முதல்
தடவையாக இருக்காது.
கடந்த இலையுதிர்காலத்தில், ஜபோரிஜியா பகுதியில் பீரங்கி படைகளுக்கான பதக்க விழாவை ரஷ்ய ஏவுகணை தாக்கியது, இதில் 19 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
தாக்குதல்கள் குறிப்பாக போரின் தீவிரமான தருணத்தில் வருகின்றன. உக்ரைனின் கிழக்கில் மாஸ்கோவின் படைகள் கடுமையான
தாக்குதல்களுடன் முன்னேறி, போக்ரோவ்ஸ்கின் போக்குவரத்து மையத்தைக் கைப்பற்றும் நோக்கில் உக்ரைன் ரஷ்ய எல்லைக்குள் தாக்குதலை அழுத்துகிறது.
12பேர் படகு கவிழ்ந்ததில் உயிரிழப்பு
12பேர் படகு கவிழ்ந்ததில் உயிரிழப்பு
12பேர் படகு கவிழ்ந்ததில் உயிரிழப்பு ,பிரான்சில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெஹ்ரான், செப். 03 (எம்என்ஏ) கால்வாய் வழியாக பிரிட்டன் செல்லும் வழியில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 12 புலம்பெயர்ந்தோர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்தார்.
மேலும் காணாமல் போன இருவரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
நிலைமையின் தீவிரத்தன்மையின் அடையாளமாக, தர்மானின் பின்னர் பிற்பகலில் Boulogne-sur-Mer நகருக்கு அருகிலுள்ள தளத்திற்குச் செல்வதாகக் கூறினார்.
சட்டவிரோத குடியேற்றத்தைக் கையாள்வது பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்களின் முன்னுரிமையாக உள்ளது. கடந்த ஏழு நாட்களில் 2000க்கும்
அதிகமானோர் சிறிய படகுகளில் பிரித்தானியாவிற்கு வந்துள்ளதாக இங்கிலாந்து அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரிட்டிஷ் உள்துறை மந்திரி Yvette Cooper, புலம்பெயர்ந்தோரின் மரணத்தை “திகிலூட்டும் மற்றும் ஆழமான சோகமான சம்பவம்” என்று அழைத்தார்,
மேலும் “ஆபத்தான மற்றும் குற்றவியல் கடத்தல் கும்பல்களை அகற்றுவதற்கும் எல்லை பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் பணி மிகவும் முக்கியமானது மற்றும் விரைவாக தொடர வேண்டும்” என்றார்.
இந்த சேனல் உலகின் பரபரப்பான கப்பல் பாதைகளில் ஒன்றாகும், மேலும் நீரோட்டங்கள் வலுவாக இருப்பதால் சிறிய படகுகளில் கடப்பது ஆபத்தானது.
ஆகஸ்டில், கால்வாயை கடக்க முயன்ற புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு சிரமத்தில் சிக்கியதில் இரண்டு பேர் இறந்து கிடந்தனர்.
பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர் 13 பேர் காயமடைந்தனர்
பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர்
ஈக்வடாரில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர்.
தெஹ்ரான், செப். 03 (எம்என்ஏ) ஈக்வடார் மாகாணமான பிச்சிஞ்சாவில் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் செவ்வாய்க்கிழமை குறைந்தது 8 பேர் இறந்தனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிச்சிஞ்சா மாகாணத்தின் குய்டோ நகராட்சியின் வடகிழக்கில் உள்ள பிஃபோ-பாபல்லாக்டா சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது.
“இன்று காலை, ஏறத்தாழ 35 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்தது. பூர்வாங்கமாக, எட்டு பேர் இறந்துவிட்டதாகப் பதிவுசெய்ய வருந்துகிறோம்,” என்று Quito தீயணைப்புத் துறை தனது X சமூக ஊடக கணக்கில் தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்தில் காயமடைந்தவர்களுக்கு துணை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் மற்றும் அதன் குழுவினர் சேதமடைந்த வாகனத்திற்குள் மீட்புப் பணிகளைத் தொடர்ந்தனர்.
பொது சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய காவல்துறையின் பணியாளர்களும் உதவி வழங்க சம்பவ இடத்திற்கு வந்தனர். விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று உள்ளூர் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்து விபத்துக்கள் ஈக்வடாரில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும், முக்கியமாக வேகம் மற்றும் ஓட்டுநர் திறமையின்மை காரணமாக, அதிகாரிகளின் கூற்றுப்படி.











































