மாவீரன் பிரபாகரன் கவிதை
தேசிய தலைவர் பாடல்கள்
தேசிய தலைவர் பாடல்கள்
எமது இனத்தின் விடுதலைக்காய் உதிர்த்த எமது தேசிய தலைவன் வீரம் பறை சற்றும் பாடல்கள்
tiktok live இப்பொழுது நேரலை
tiktok live இப்பொழுது நேரலை
வன்னி மைந்தன் நேரலை tiktok live இப்பொழுது நேரலையில் ,vanni forex live ஊடகஇடம்பெற்ற்று கொண்டுள்ளது.
நாள் தோறும் லண்டன் நேரம் மதியம் 4,00 மணி முதல் ய இலங்கை நேரம் இரவு எட்டு மணி தொடக்கம் இந்த நேரலை இடம்பெறுகிறது .
உங்கள் கருத்துக்களை பகிர விரும்பும் உறவுகள் அதில் இணைந்து உங்கள் பகிர்வுகளை வெளியிடுங்கள்
மேலதிக தொடர்புகளுக்கு 0044 7536 707793
மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா
மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா
மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா,இலங்கை எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்த விடயமே இப்பொழுது சர்ச்சையாக வெடித்துள்ளது .
அது தொடர்பான முழுமையான விபரம் காணொளியில் உள்ளது பார்க்க .
உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.
பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் பரீட்சை நிலையங்களுக்குச் செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த பரீட்சை அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை 2,312 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 333,185 பரீட்ச்சார்த்திகள் தோற்றவுள்ளனர்
நேரெதிர் மோதல் இரு பேரூந்து
நேரெதிர் மோதல் இரு பேரூந்து
நேரெதிர் மோதல் இரு பேரூந்து ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, கரோலினா தோட்ட பகுதியில் இன்று காலை 6.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இதன்போது, அதிவேகமாக பயணித்த தனியார் பஸ் ஒன்று, எதிர்திசையில் வந்த இ.போ.ச பஸ்ஸுடன் மோதியதில் தனியார் பஸ்ஸின் பின் பகுதி இரண்டாக உடைந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் இ.போ.ச டிப்போவிற்கு சொந்தமான, கினிகத்தேனையிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற பஸ்ஸும், ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸூம் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், நிலவும் மோசமான வானிலையுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதி மற்றும் ஏனைய சில வீதிகள் வழுக்கும் தன்மையுடன் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் தனியார் பஸ்ஸுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம்
அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம்
அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம் புதிய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
நேற்று (24) பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அர்ச்சுனா இராமநாதன் அமர்ந்து கருத்து வெளியிட்டமையினால் அவர் தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்
EPDPயிலிருந்து திலீபன் வெளியேறினார்
EPDPயிலிருந்து திலீபன் வெளியேறினார்
EPDPயிலிருந்து திலீபன் வெளியேறினார் முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும்
அதன்அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாதவது
ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் (தமிழரசுக் கட்சியில்) ஆரம்பித்த எனது அரசியல் பயணம்,
பின்பு, 2013ம் ஆண்டிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உடன் இணைந்து கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளராக
பொறுப்பேற்று மக்கள் பணியாற்றினேன். மேலும், 2020இல் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகினேன்.
தற்போது நடைபெற்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளே கிடைக்கப் பெற்றன.
இதுவரை காலமும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் பயணித்து மக்கள் சேவையாற்றினேன். சில விடயங்கள் காரணமாக ஈழமக்கள் ஜனநாயகக்
கட்சியில் இருந்து விலகுகிறேன். இது தொடர்பான கடிதத்தினை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பியுள்ளேன்.
இக் கட்சியில் இருந்து நான் வெளியேறுவதற்கு, கட்சியோ அல்லது கட்சியின் தலைமையோ காரணமில்லை, எனது தனிப்பட்ட முடிவு என்பதை தெரிவித்துள்ளேன். என்றுள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை பரவும் வதந்தி
மக்களுக்கு எச்சரிக்கை பரவும் வதந்தி
மக்களுக்கு எச்சரிக்கை பரவும் வதந்தி ,கல்முனையில் அதிகாலை இரண்டு மணிக்கு புயல் பரவும் என் வெளியிடப்பட்ட செய்தியில் உண்மை இல்லை என மக்களுக்கு எரிச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
அதிகாலை இரண்டு மணிக்கு புயல் எச்சரிக்கை என்பது திட்டப்பிடப்பட்டு பரப்ப பட்ட வதந்தி எனவும் ,அவ்வாறு ஒன்று இடம்பெறாது என தெரிவிக்க பட்டுள்ளது .
எம் பிக்களுக்கான செயலமர்வு நாளை
எம் பிக்களுக்கான செயலமர்வு நாளை
எம் பிக்களுக்கான செயலமர்வு நாளை பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு 2024 நவம்பர் மாதம் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பாராளுமன்ற குழு அறை இலக்கம் 01ல் நடத்தப்படவுள்ளது.
அதற்கான முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ளது.
புதிய பாராளுமன்றத்தின் ஆரம்பத்தில் சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாக இந்த திசைமுகப்படுத்தல் செயலமர்வு இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று 25 ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப. 9.30 மணிக்கு ஆரம்பமாகிய இந்த செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் கௌரவ கலாநிதி ஹரிணி
அமரசூரிய, சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல, பிரதி சபாநாயகர் கௌரவ வைத்தியகலாநிதி மொஹமட் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித்
தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர, சபை முதல்வர் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் கௌரவ
வைத்தியகலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, பாராளுமன்ற செயலாளர் நாயகம், பிரதிச் செயலாளர் நாயகம் மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த மூன்று நாள் செயலமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகம், பாராளுமன்ற சிறப்புரிமைகள், பாராளுமன்றத்தின் சட்டவாக்க செயற்பாடுகள், பாராளுமன்ற குழு முறைமை, பாராளுமன்ற நிலையியற்
கட்டளைகள், அரசியலமைப்பின் ஏற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலத்திரனியல் வாக்களிப்பு முறை குறித்த நடைமுறை அமர்வொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன், ஊழலுக்கு எதிரான சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான
ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் பாராளுமன்ற விவகாரப் பிரிவின் பங்கு குறித்தும் இங்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.
மேலும், பாராளுமன்றத்தின் திணைக்களங்கள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், அந்தந்தப் பிரிவுகளின் மூலம் பாராளுமன்றச் செயற்பாடுகளில் உறுப்பினர்களின் பங்களிப்புகள் மற்றும் பணிகள் குறித்து உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
6 இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு
6 இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு
6 இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு -இஸ்ரேல் ஓரணுவத்தின் மிக முக்கிய தாக்குதல் டாங்கிகள் ஆறு அழிக்க பட்டுள்ளதாக லெபனான் போர் புலிகள் ,ஹிஸ்புல்லா போராளிகள் அறிவித்துள்ளனர் .
தமது பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி கொண்டிருந்த மேற்கோவா டாங்கிகள் வகைகள் அழிக்க பட்டுள்ளது என்கிறது அந்த அமைப்பு .
காணொளியில் முழுமையான விபரம்
பங்குசந்தையில் பணம் சம்பாதிக்க இலகு முறை
பங்குசந்தையில் பணம் சம்பாதிக்க இலகு முறை
பங்குசந்தையில் பணம் சம்பாதிக்க இலகு முறை, காணொளியில் முழுமையான உள்ளது அதில் பார்க்க மக்களே .
பங்கு சந்தையில் பயம் இன்றி ,இந்த முறையை பயன் படுத்தி ட்ரேடிங் செய்து மக்களே கொள்ளுங்கள் மக்களே .
அர்ச்சுனா நீதிக்கான குரல் | தடை உடைத்து வெல்வாரா
அர்ச்சுனா நீதிக்கான குரல் | தடை உடைத்து வெல்வாரா
அர்ச்சுனா நீதிக்கான குரல் | தடை உடைத்து வெல்வாரா,காணொளியினுள் முழுமையான விபரம் உள்ளது பார்க்க .
ஆயுத களஞ்சியம் அழிப்பு
ஆயுத களஞ்சியம் அழிப்பு
ஆயுத களஞ்சியம் அழிப்பு ,லெபனான் தலைநகர் பகுதியில் குவிக்க பட்டிருந்த ஏவுகணை ஆயுத களஞ்சியம் அழிக்க பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .
லெபனான் உளவுத்துறைகளிடம் இருந்து தமக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த ஆயுத களஞ்சியம் துடைத்து அழிக்க பட்டுள்ளது என்கிறது இஸ்ரேல் .
ஹிஸ்புல்லா போர் தளபதிகள் ஆறு முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் இந்த மிக முக்கிய ஈரான் ஏவுகணைகள் அழிக்க பட்டுள்ளது எனப்படுகிறது .
இந்த ஏவுகணையை கடல் ஏவுகணைகள் ,வான் ஏவுகணைகள் .,மற்றும் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் என்பன உள்ளடக்க பட்டு இருந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது .
எனினும் முழுமையன சேதங்கள் தொடர்பாக ஹிஸ்புல்லா போராளிகள் எதனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
இஸ்ரேல் முக்கிய உளவாளியை போட்டு தள்ளிய ஈரான்
இஸ்ரேல் முக்கிய உளவாளியை போட்டு தள்ளிய ஈரான்
இஸ்ரேல் முக்கிய உளவாளியை போட்டு தள்ளிய ஈரான் ,அபுதாபியில் தங்கி இருந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேலிய நாட்டின் மிக முக்கிய உளவாளியை ஈரான் போட்டு தள்ளியுள்ளது .
ஈரான் அணு உலைகள் மீதான தாக்குதல் மூளையாக இவர் செயல்பட்டார் என்கின்ற குற்ற சாட்டு காணப்படும் நிலையில் ,இவரை இலக்கு வைத்து ஈரானிய உளவுத்துறை தனது வேட்டையை நடத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இஸ்ரேல் பலஸ்தீன யுத்தம் இடம்பெற்று கொண்டிருக்கும் காலப்பகுதியில் பலநாசகார அழித்தொழிப்பு நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வந்தது .
அதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதலை ஈரான் திருப்பு அடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது குறிப்பிட தக்கது .
தென் சீனக் கடல் தகராறு
தென் சீனக் கடல் தகராறு
தென் சீனக் கடல் தகராறு மற்றும் தென் சீனக் கடலில் “நடத்தை நெறிமுறை” (COC) மீதான இந்தியாவின் நிலைப்பாடு பிலிப்பைன்ஸ், சீனா, தைவான்,
வியட்நாம், மலேசியா மற்றும் புருனே ஆகிய ஆறு நாடுகளில் விவாதிக்கப்படுகிறது. கடல் எல்லை தகராறு
இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் செழுமைக்காக வழிசெலுத்துதல் மற்றும் விமானம் ஓட்டுவதற்கான சுதந்திரம், தடையற்ற சட்டப்பூர்வ வர்த்தகம் மற்றும் சர்வதேச சட்டத்தை பின்பற்றுதல் ஆகியவற்றை இந்தியா மீண்டும்
வலியுறுத்தியுள்ளது. லாவோஸின் வியன்டியானில் நடைபெற்ற 11-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தென் சீனக் கடலில் கடல்சார் நடவடிக்கைகளை
ஒழுங்குபடுத்துவதற்கான வரவிருக்கும் நடத்தை விதிகள் சர்வதேச சட்டத்திற்கு இசைவாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த விவாதங்களில் பங்கு பெறாத நாடுகளின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை இந்த குறியீடு பாதிக்கக் கூடாது என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார். “குறியீடு சர்வதேச சட்டத்துடன் முழுமையாக ஒத்துப்போக வேண்டும், குறிப்பாக UN Convention Law of Sea 1982” என்று அவர் மேலும் கூறினார்.
சிங் கூறுகையில், “நாடுகள் ஆக்கப்பூர்வமாக ஈடுபடும் போது, ஒருவருக்கொருவர் முன்னோக்குகளை மதித்து, ஒத்துழைப்பின் உணர்வில்
பகிரப்பட்ட இலக்குகளை நோக்கி செயல்படும்போது மட்டுமே உலகளாவிய பிரச்சினைகளுக்கு உண்மையான, நீண்டகால தீர்வுகளை அடைய முடியும் என்று இந்தியா நம்புகிறது.”
இந்த ஆண்டின் தொடக்கத்தில், வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், லாவோஸில் நடைபெற்ற 14வது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது, ”கணிசமான மற்றும்
பயனுள்ள” நடத்தை விதிகள் “சர்வதேச சட்டத்திற்கு இணங்க வேண்டும் மற்றும் கூடாது” என்று வலியுறுத்தினார். விவாதங்களில் பங்கெடுக்காத
நாடுகளின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை பாரபட்சம்”. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அமைதி மற்றும் செழுமைக்கு தென் சீனக் கடல்
வழியாகச் செல்லும் கடல் தொடர்புக் கோடுகள் (SLOC) முக்கியமானவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
வெடித்து பறக்கும் மோதல் |எதிரிகளை மிரள வைத்த ரஷ்யா ஏவுகணை
வெடித்து பறக்கும் மோதல் |எதிரிகளை மிரள வைத்த ரஷ்யா ஏவுகணை
வெடித்து பறக்கும் மோதல் |எதிரிகளை மிரள வைத்த ரஷ்யா ஏவுகணை ,கன்னடன் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்துவோம் மிரட்டும் உலகவல்லரசு .
அர்ச்சுனாவை கைது செய்ய நடவடிக்கை |பாயும் வழக்குகள்
அர்ச்சுனாவை கைது செய்ய நடவடிக்கை |பாயும் வழக்குகள்
அர்ச்சுனாவை கைது செய்ய நடவடிக்கை |பாயும் வழக்குகள் ,காணொளியில் முழுமையான விபரம் பார்க்க மக்களே










































