அநுரவுக்கு ரணில் பாராட்டு.
Posted in இலங்கை செய்திகள்

அநுரவுக்கு ரணில் பாராட்டு.

அநுரவுக்கு ரணில் பாராட்டு.

அநுரவுக்கு ரணில் பாராட்டு. ஜனாதிபதி அநுரவுக்க ரணில் பாராட்டு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும்

இணங்கி வருவதற்கு ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (01) பிற்பகல் அமாரி ஹோட்டல் குழுமத்துக்கு சொந்தமான அமாரி கொழும்பு ஹோட்டலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அமாரி கொழும்பு ஹோட்டல் குழுமமானது கொழும்பில் உள்ள இலங்கை தொழிலதிபர் ஒருவருக்க சொந்தமான முதல் ஐந்து நட்சத்திர சர்வதேச ஹோட்டலாகும்.

வினில் மெனிக் நிறுவனத்தின் உரிமையாளர் டபிள்யூ.வினில் தலைமை தாங்குகிறார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் விஜித ஹேரத், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல அதிதிகள் ஹோட்டல் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

வாகன விபத்துக்களில் மூவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்துக்களில் மூவர் பலி

வாகன விபத்துக்களில் மூவர் பலி

வாகன விபத்துக்களில் மூவர் பலி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு வாகன விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (30) பேலியகொட, சீகிரியா மற்றும் குட்டிகல பொலிஸ் பிரிவுகளில் குறித்த விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

கொழும்பு – கண்டி வீதியில் களனி பாலத்திற்கு அருகில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் பலத்த காயமடைந்து வீதியில் விழுந்துள்ளதாக பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, விரைந்து செயற்பட்ட பொலிஸ் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் காயமடைந்தவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், குறித்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

களனியில் தற்காலிகமாக வசித்து வந்த அம்பாறை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, தம்புள்ளை – ஹபரணை வீதியின் இனாமலுவ பிரதேசத்தில் வீதியைக் கடந்த பாதசாரி ஒருவர் மீது லொறியொன்று மோதியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த நபர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இனாமலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

பெல்மடுல்ல – நோனாகம வீதியின் ஹாகல பிரதேசத்தில் உழவு இயந்திரத்தின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 45 வயதுடைய பெரலனாதர பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்

வானிலையால் லட்சக்கணக்கானோர் இன்னும் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வானிலையால் லட்சக்கணக்கானோர் இன்னும் பாதிப்பு

வானிலையால் லட்சக்கணக்கானோர் இன்னும் பாதிப்பு

வானிலையால் லட்சக்கணக்கானோர் இன்னும் பாதிப்பு ,சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 53,888 குடும்பங்களைச் சேர்ந்த 143,726 பேர் இன்னும் பாதுகாப்பான இடங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

இதன்படி 45,418 குடும்பங்களைச் சேர்ந்த 116,209 பேர் உறவினர் வீடுகளிலும், 8470 குடும்பங்களைச் சேர்ந்த 27,517 பேர் 229 பாதுகாப்பான இடங்களில்

தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 103 வீடுகள் முழுமையாகவும் 2635 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இதுவரை 24 மாவட்டங்களில் 142,624 குடும்பங்களைச் சேர்ந்த 479,871 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டின் பல மாகாணங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டன.

கடும் மழை காரணமாக தெதுரு ஓயா, பேராறு, உல்ஹிட்டிய ரத்கிந்த, பொல்கொல்ல, நாச்சதுவ, ராஜாங்கனை, கலாவெவ மற்றும் வெஹெரகல ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மகாவலி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் சில நாட்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியானது தற்போது இலகு ரக வாகன போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக ஹாலிஎல உடுவர மேல்பகுதியில் விழுந்த மண் மற்றும் கற்கள் அகற்றப்பட்டு வருவதாகவும், பதுளை மற்றும் எல்லயிக்கு இடையே

ரயில் சேவையை இயக்க இன்னும் சில நாட்கள் ஆகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கலா ஓயா, மல்வத்து ஓயா, ஹெட ஓயா, தெதுருஓயா, மஹாவலி கங்கை மற்றும் முந்தேனி ஆற்றுப்படுகை ஆகியவற்றுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய அறிவிப்புகள் தொடர்ந்தும் அமுலில் உள்ளன.

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக, 09 மாவட்டங்களில் உள்ள 72 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது

பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது

பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது பிரித்தானிய நாட்டில் பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த நபர் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் குறித்த சந்தேகநபர், 2009 ஆம் ஆண்டு நாட்டை விட்டுச் சென்று பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் பெற்ற பயணத்தடை உத்தரவிற்கு அமைய சந்தேகநபர் நேற்று (30)

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, ​​குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவினரால் பொறுப்பேற்று விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மிசோரியில் வீடு வெடித்ததில் 6 பேர் காயமடைந்தனர்
Posted in உலக செய்திகள்

மிசோரியில் வீடு வெடித்ததில் 6 பேர் காயமடைந்தனர்

மிசோரியில் வீடு வெடித்ததில் 6 பேர் காயமடைந்தனர்

மிசோரியில் வீடு வெடித்ததில் 6 பேர் காயமடைந்தனர், 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்
வெடிப்புக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி தெரிவிக்கும் வார இறுதியில் மிசோரியில் ஒரு வீட்டில் வெடித்ததில் குடியிருப்பு இடிந்து விழுந்தது மற்றும் உள்ளே இருந்த 6 பேர் காயமடைந்தனர் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெபர்சன் சிட்டியில் உள்ள செயின்ட் லூயிஸ் சாலையில் சனிக்கிழமை அதிகாலை 2:44 மணியளவில் வெடிப்பு ஏற்பட்டது என்று ஜெபர்சன் சிட்டி ஃபயர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிப்புக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குண்டுவெடிப்பில் காயமடைந்த ஆறு நபர்களில், இருவர் ஜெபர்சன் நகர விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மிசோரி, கொலம்பியாவில்

உள்ள பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவசரகால பதிலளிப்பவர்கள் தெரிவித்தனர்.

மீதமுள்ள நான்கு பேர் தரைவழியாக பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் பட்டியலிடப்பட்டுள்ளனர் மற்றும் ஆபத்தான வாழ்க்கை ஆதரவு பெற்றுள்ளனர்,

யானை தாக்கி கடற்படை அதிகாரி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

யானை தாக்கி கடற்படை அதிகாரி மரணம்

யானை தாக்கி கடற்படை அதிகாரி மரணம்


யானை தாக்கி கடற்படை அதிகாரி மரணம் வவுனியாவில் கடற்படை லெப்டினன்ட் தர அதிகாரி ஒருவர் காட்டு யானை தாக்குதலால் மரணமடைந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பணி நிமித்தமாக கொழும்புக்கு சென்று விட்டு பேருந்தில் முகாமிற்கு திரும்பிய அதிகாரி வாகனத்தில் இருந்து இறங்கி முகாமிற்கு சென்று

கொண்டிருந்த போது நேற்று இரவு (29) யானை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூனாவ கடற்படை முகாமில் கடமையாற்றிய மத்தலான, நிட்டம்புவவில் வசிக்கும் கடற்படை வீரரான லெப்டினன்ட் தர அதிகாரியே யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

யானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அவரை, கடற்படையினர் மற்றும் உள்ளூர் மக்களும் இணைந்து வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு

சென்றனர். பலத்த காயமடைந்த அதிகாரி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனை வவுனியா பொது

வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளது. பூனாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் ஒருங்கிணைப்பு தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ் ஒருங்கிணைப்பு தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம்

யாழ் ஒருங்கிணைப்பு தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம்

யாழ் ஒருங்கிணைப்பு தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றோழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் கடந்த 28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக பாராளுமன்ற

உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது நியமனம் தொடர்பாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் போராசிரியர் ஏ. எச்.எம்.எச். அபயரத்ன

அவர்களினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருக்கு முகவரியிடப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் அறியத்தரப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பெண் ரூ. 2 லட்சம் அபராதம்
Posted in உலக செய்திகள்

இங்கிலாந்து பெண் ரூ. 2 லட்சம் அபராதம்

இங்கிலாந்து பெண் ரூ. 2 லட்சம் அபராதம்

இங்கிலாந்து பெண் ரூ. 2 லட்சம் அபராதம் பார்க்கிங் கட்டணம் செலுத்த 5 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்ட இங்கிலாந்து பெண் ரூ. 2 லட்சம் அபராதம் விதித்தார், டெர்பியில் வசிக்கும் ரோஸி ஹட்சன், கார் பார்க்கிங்கில்

இருந்தபோது, ​​மோசமான மொபைல் போன் சிக்னல் சரியான நேரத்தில் பணம் செலுத்துவதைத் தடுத்ததாகக் கூறினார்.

ஐந்து நிமிடங்களுக்கு மேல் வாகனம் நிறுத்தியதற்காக இங்கிலாந்து பெண் ஒருவருக்கு 2 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெர்பியில் வசிக்கும்

ரோஸி ஹட்சன், கார் பார்க்கிங்கில் இருந்தபோது, ​​சரியான நேரத்தில் பணம் செலுத்த முடியாமல் போனது மொபைல் போன் சிக்னல் தடுத்தது என்று கூறினார்.

அவள் நிறுத்தும் ஒவ்வொரு முறையும் முழு கட்டணத்தையும் செலுத்திய போதிலும், எக்செல் பார்க்கிங் லிமிடெட் அவளது 10 பார்க்கிங் கட்டண

அறிவிப்புகளை (பிசிஎன்) வெளியிட்டது, இது குறிப்பிடத்தக்க அபராதத்திற்கு வழிவகுத்தது.

திருமதி ஹட்சன் பிப்ரவரி 2023 முதல் கோப்லேண்ட் ஸ்ட்ரீட் கார் பார்க்கிங்கை அருகிலேயே வேலை செய்து வந்தார்.

பார்க்கிங் இயந்திரம் பழுதடைந்ததால், ஆப் மூலம் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக, பிபிசி

தெரிவித்துள்ளது. ஆனால் அவள் சிக்னல் பிரச்சனைகளால் சிரமப்பட்டாள், இணைக்க வேறு பகுதிக்கு நடக்க வேண்டியிருந்தது. திருமதி ஹட்சன் ஒவ்வொரு முறையும் முழு £3.30 (ரூ 355) தினசரி கட்டணத்தை செலுத்தினார்,

அவர் முதல் PCN பெறும் வரை, £100 (ரூ 10,769) கோரினார், பின்னர் 14 நாட்களுக்குள் செலுத்தினால் £60 ஆக (ரூ. 6,461) குறைக்கப்பட்டது.

“நான் நிறுவனத்தை அழைத்து நிலைமையை விளக்கினேன், அவர்கள் அடிப்படையில் ‘நீங்கள் செலுத்த வேண்டும்’ என்று கூறினார்,” திருமதி ஹட்சன்

கூறினார். “எனவே அவர்களை என் முதுகில் இருந்து விலக்கி வைக்க நான் ஆரம்ப வாகன நிறுத்த அபராதத்தை செலுத்தினேன்.”

இருந்த போதிலும், ஹட்சன் மேலும் ஒன்பது PCNகளைப் பெற்று, மொத்த அபராதத்தை £1,905.76 ஆக (ரூ. 2,05,257) உயர்த்தினார்.

எக்செல் பார்க்கிங் தனது செயல்களை ஆதரித்தது, கார் நிறுத்துமிடம் பணம் செலுத்த ஐந்து நிமிட சாளரத்தை நிர்ணயிக்கும் பலகைகளை தெளிவாகக்

காட்டுகிறது. “விதிகளைப் படித்து புரிந்துகொள்வது ஓட்டுநரின் பொறுப்பு” என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார், திருமதி ஹட்சன் “தனது சொந்த துரதிர்ஷ்டத்தின் ஆசிரியர்” என்று கூறினார்.

விமான தளத்தை தாக்கிய 11 விமானங்கள்
Posted in உலக செய்திகள்

விமான தளத்தை தாக்கிய 11 விமானங்கள்

விமான தளத்தை தாக்கிய 11 விமானங்கள்

விமான தளத்தை தாக்கிய 11 விமானங்கள் ,தாகெஸ்தான் UAV தாக்குதலைப் புகாரளிக்கிறது, விமான நிலையம் செயல்பாடுகளை நிறுத்துகிறது

தாகெஸ்தானின் தலைவரான செர்ஜி மெலிகோவ், நவம்பர் 30 அன்று காஸ்பிஸ்கில் உள்ள வசதிகள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக அறிக்கை செய்துள்ளார். Makhachkala விமான நிலையம் செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளது.

மெலிகோவின் மேற்கோள்: “அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. தற்போது வரை சேதம் அல்லது உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை.”

விவரங்கள்: UAV அச்சுறுத்தல் காரணமாக, Kovyor (Carpet) திட்டம் செயல்படுத்தப்பட்டு, Makhachkala விமான நிலையத்தின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

[கோவியர் திட்டம் என்பது விமான நிலைய சேவைகள் மற்றும் பணியாளர்களுக்கான விமான நிலைய செயல்பாட்டு பாதுகாப்பு

செயல்முறையாகும், இது வானத்தில் அடையாளம் தெரியாத பொருள் தோன்றும்போது

நவம்பர் 29-30 இரவு நடந்த தாக்குதல் 11 உக்ரேனிய ஆளில்லா விமானங்களால் நடத்தப்பட்டதாக ரஷ்யா கூறியது.

வழக்கம் போல், ரஷ்ய அதிகாரிகள் அனைத்து 11 UAV களும் வீழ்த்தப்பட்டதாகக் கூறினர்: எட்டு பெல்கோரோட் பிராந்தியத்தின் மீதும், மூன்று கருங்கடலுக்கு மேல்.

ரஷ்ய ராடார்கள் அழிப்பு
Posted in உலக செய்திகள்

ரஷ்ய ராடார்கள் அழிப்பு

ரஷ்ய ராடார்கள் அழிப்பு


ரஷ்ய ராடார்கள் அழிப்பு ரஷ்ய இராணுவத்தின் மூன்று ராடார்களி தாம் அழித்துள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .


உக்ரைன் இராணுவத்தின் ஏவுகணை தடுப்பு மற்றும் உள்கட்டமைப்புக்கள் மீது துல்லியமான தாக்குதல்களை இந்த பகுதியில் இருந்தே ரட்ஷய படைகள் தாக்கி வந்தன .

அதனை அடுத்தே தற்போது இந்த தேடி அழிப்பு தாக்குதல் இடம்பெற்றதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளது

இந்த அழிப்பு தாக்குதலில் பலமில்லியன் இழப்பை ரஷ்ய படைகள் சந்தித்துள்ளதாக உக்ரைன் தெரிவிக்கிறது

துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார்
Posted in உலக செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார்

துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார்

துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார் ,சிகாகோவின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார் மற்றும் சந்தேக நபர் காயமடைந்தார்#


சிகாகோவின் புறநகர் பகுதியில் துப்பாக்கியுடன் வங்கியில் இருந்து ஒருவர் வெளியேறிய புகாரின் பேரில் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வெள்ளியன்று புறநகர் சிகாகோவில் ஒரு நபர் துப்பாக்கியுடன் வங்கியிலிருந்து வெளியேறிய புகாருக்கு பதிலளித்த போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஓக் பார்க் டிடெக்டிவ் ஆலன் ரெடின்ஸ், 40, காலை 9:30 மணியளவில் ஒருமுறை சுடப்பட்டார், பின்னர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக போலீஸ் துறை தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் காலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சிகாகோவைச் சேர்ந்த ரெடின்ஸ், 2019 முதல் காவல் துறையில் பணியாற்றி வந்தார்.

ஓக் பார்க் சிகாகோவின் மேற்கே உள்ளது.

மால் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

மால் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயம்

மால் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயம்

மால் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயம் ஆர்கன்சாஸில் உள்ள பிளாக் ஃப்ரைடே மால் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயமடைந்தனர்
லிட்டில் ராக்கில் உள்ள பார்க் பிளாசா மாலில் வெள்ளிக்கிழமை மதியம் இந்த சம்பவம் நடந்தது.

கறுப்பு வெள்ளியன்று ஆர்கன்சாஸின் லிட்டில் ராக்கில் உள்ள பார்க் பிளாசா மாலில் ஷாட்கள் ஒலித்தன, இரண்டு பேர் காயமடைந்தனர், வெள்ளிக்கிழமை மாலை புதுப்பித்தலில் போலீசார் தெரிவித்தனர்.

லிட்டில் ராக் பொலிஸ் திணைக்களம் ஆரம்பத்தில் மூன்று காயங்களைப் புகாரளித்தது.

இந்த துப்பாக்கிச் சூடு மதியம் 1.44 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவர் உட்பட உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

“ஆரம்பத்தில் ஒரு சாத்தியமான ஆக்கிரமிப்பு நிலைமை என அறிவிக்கப்பட்டது, அதிகாரிகள் இது வந்தவுடன் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட

சம்பவம் என்று விரைவாக தீர்மானித்தனர்” என்று லிட்டில் ராக் காவல் துறை வெள்ளிக்கிழமை மாலை ஒரு புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.

இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இருந்து துப்பாக்கிச்சூடு வெடித்ததால் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இஸ்ரேலுக்கு எதிரான மாபெரும் வெற்றி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிரான மாபெரும் வெற்றி

இஸ்ரேலுக்கு எதிரான மாபெரும் வெற்றி

இஸ்ரேலுக்கு எதிரான மாபெரும் வெற்றி’: ஹிஸ்புல்லா தலைவர் “ஜூலை 2006 ஐ விட பெரிய வெற்றியை நாங்கள் எதிர்கொள்கிறோம் என்பதை அதிகாரப்பூர்வமாகவும் தெளிவாகவும் அறிவிக்க நான் முடிவு செய்துள்ளேன்,” காசிம் கூறினார்.

லெபனானில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னர், இஸ்ரேலுக்கு எதிரான தனது முதல் உரையில், ஹிஸ்புல்லா தலைவர் நைம் காசிம் வெள்ளிக்கிழமை “பெரும் வெற்றி” என்று அறிவித்தார்.


“ஜூலை 2006-ஐ விட பெரிய வெற்றியை நாங்கள் எதிர்கொள்கிறோம் என்று அதிகாரப்பூர்வமாகவும் தெளிவாகவும் அறிவிக்க முடிவு செய்துள்ளேன்,” என்று காசிம் மேலும் கூறினார்: “எதிரிகளை ஹிஸ்புல்லாவை அழிப்பதில் இருந்து தடுத்ததால் நாங்கள் வெற்றி பெற்றோம். எதிர்ப்பை அழித்தல் அல்லது பலவீனப்படுத்துதல்

அர்ச்சுனாவை தேடும் மக்கள் |ஊசி போட துரத்தும் எதிரிகள்
Posted in உளவு செய்திகள்

அர்ச்சுனாவை தேடும் மக்கள் |ஊசி போட துரத்தும் எதிரிகள்

அர்ச்சுனாவை தேடும் மக்கள் |ஊசி போட துரத்தும் எதிரிகள்

அர்ச்சுனாவை தேடும் மக்கள் |ஊசி போட துரத்தும் எதிரிகள்

video

வெள்ள மக்கள் அவலம் |பணம் கொள்ளையடிக்கும் கும்பல் |
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

வெள்ள மக்கள் அவலம் |பணம் கொள்ளையடிக்கும் கும்பல் |

வெள்ள மக்கள் அவலம் |பணம் கொள்ளையடிக்கும் கும்பல் |

வெள்ள மக்கள் அவலம் |பணம் கொள்ளையடிக்கும் கும்பல் |

full video

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை இலஞ்ச பெற்ற

குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட மோட்டார் வாகனம் தொடர்பான பிரச்சினையை விசாரிப்பதற்கும் நீதிமன்றத்தினால் மோட்டார் வாகனத்தை

மீளப் பெற்றுக் கொள்வதற்கு உதவுவதற்கும் குறித்த பொலிஸ் அதிகாரி 270,000 ரூபா பெறுமதியான குளிரூட்டியை இலஞ்சமாக கேட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முறைப்பாட்டாளரால் குளிரூட்டியை கொள்வனவு செய்த விற்பனை நிலையத்தின் முகாமையாளரின் கணக்கில் குறித்த தொகை வரவு

வைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த கைது செய்யப்பட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சல் தொடர்பான அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பன்றிக் காய்ச்சல் தொடர்பான அறிவிப்பு

பன்றிக் காய்ச்சல் தொடர்பான அறிவிப்பு

பன்றிக் காய்ச்சல் தொடர்பான அறிவிப்பு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நோயினால் பாதிக்கப்படாத பண்ணைகளில் உள்ள இறைச்சியை பாதுகாப்பான முறையில் மனித பாவனைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் மருத்துவர் சிசிர பியசிறி தெரிவித்தார்.

இதேவேளை, ஆபிரிக்க பன்றிக்காய்ச்சலால் பல பண்ணைகள் முற்றாக அழிந்துள்ளதாக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே தமது தொழில்களை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தீயில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

தீயில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

தீயில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

தீயில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு முல்லைத்தீவு-சிலாவத்துறை பகுதியில் தீயில் சிக்கி ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் என்பதுடன், அவர் தனது மகனின் வீட்டிற்கு அருகிலுள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்துள்ளார்.

குளிரான காலநிலை காரணமாக வீட்டுக்குள் பற்றவைக்கப்பட்ட தீ பரவியதில் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புயலின் தற்போதைய நிலை
Posted in இலங்கை செய்திகள்

புயலின் தற்போதைய நிலை

புயலின் தற்போதைய நிலை

புயலின் தற்போதைய நிலை தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் நேற்று (29) இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360 கிலோமீற்றர் தொலைவிலும், காங்கசன்துறையிலிருந்து வடகிழக்கே 280

கிலோமீற்றர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு திசையில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வட தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை இன்று (30) மாலை அடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதன்படி, நாட்டின் வானிலையில் இந்த அமைப்பின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாக திணைக்களம் இன்று காலை தெரிவித்துள்ளது.

எனினும் வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.

குறிப்பாக வட மாகாணத்தில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் அதேவேளை, மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது 50-55 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான

நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்களை அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது அம்பன்பொல-நெகுன்னேவ பிரதேசத்தில் உள்ளாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அம்பன்பொல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான நபர் 63 வயதுடைய அம்பன்பொல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர்.