Tag: விசாரணை
மாணவி தற்கொலை துரத்தும் விசாரணை
மாணவி தற்கொலை துரத்தும் விசாரணை
மாணவி தற்கொலை துரத்தும் விசாரணை ஆசிரியர் தப்பு ஓட்டம் மக்கள் கொதிப்பு தொடரும் போராட்டம் திணறு மானூர் அரசின் நடவடிக்கைகள்
பயம்ப தேசிய கல்வியில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருவதாக குற்ற புலானய்வு துறை அறிவித்துள்ளது .
இந்த மாணவி ஏன் பலியானார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்கின்ற விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஆசிரியர் ஒருவரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதிக மன உளைச்சல் காரணமாகவே இவர் தற்கொலை முயற்சியை மேற்கொண்டார் என குற்றம் சுமத்தப்படுகிறது.
ஆனால் தற்கொலை என தெரிவிக்கப்படுகின்ற பொழுது அந்த மாணவி படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது.
இறந்த மாணவி தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் சமூக வளைத் தளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
அவற்றில் எது உண்மை எது பொய் என்பதை கண்டறியும் நோக்கம் மக்கள் சமூக ஆர்வலர்களும் ஈடுபட்டுள்ளார்கள்.
எனினும் ஒரு அப்பாவி இளம் மாணவி பலியான சம்பவம் மக்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டால் அவை உண்மையானதாகவே நீதிமன்ற அழைத்துக் கொள்ளப்படும் ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் ,
அந்த குற்றத்தை ஏற்காத நிலையில் வழக்கில் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்ப்பு படுவதாலேயே இந்த வழக்கு தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
யாழ் இளைஞர்களுடன் முரண்பட்ட பொலிஸாருக்கு எதிராக விசாரணை
யாழ் இளைஞர்களுடன் முரண்பட்ட பொலிஸாருக்கு எதிராக விசாரணை
யாழ் இளைஞர்களுடன் முரண்பட்ட பொலிஸாருக்கு எதிராக விசாரணை ,யாழில். இருந்து வவுனியா நோக்கி சென்ற இளைஞர் குழுவினருடன் முரண்பட்டு, அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட மாங்குளம்
பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞர் குழுவினர் கடந்த 22ஆம் திகதி யாழில். இருந்து வவுனியா நோக்கி காரில் பயணித்த போது, மாங்குளம் பொலிஸார், டோர்ச் லைட் வெளிச்சத்தை கண்ணில் பாய்ச்சி வழி மறித்துள்ளனர்.
இந்நிலையில் இவ்வாறு வழி மறிப்பது தவறு என அந்த இளைஞர் குழு எடுத்து கூறிய போது அவர்களுடன் பொலிஸார் முரண்பாட்டில் ஈடுபட்டு, அச்சுறுத்தியுள்ளனர்.
அத்துடன் தகட்டு இலக்கத்தையும் வழங்க மறுத்து, அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அந்த இளைஞர் குழுவினர் ஊடகங்கள் ஊடாக வெளிக்கொண்டு வந்திருந்த நிலையில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர்.
இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கும் எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நிதி விசாரணை மைத்திரி CID யில் முன்னிலை
ஜனாதிபதி நிதி விசாரணை மைத்திரி CID யில் முன்னிலை
ஜனாதிபதி நிதி விசாரணை மைத்திரி CID யில் முன்னிலை ,ஜனாதிபதி நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (சிஐடி) வரவழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை
துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை
துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை ,கம்பஹா நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள், சிறிய லொரி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் சிறிய லொரியில் பயணித்த 2 பேர் வாகனத்தில் இருந்து இறங்கி அருகிலுள்ள கடைக்குள் ஓடியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை என்றும், லொரிக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய ரணிலுக்கு அழைப்பு
லஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய ரணிலுக்கு அழைப்பு
லஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய ரணிலுக்கு அழைப்பு ,லஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, ஏப்ரல் 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமலின் சட்ட பரீட்சை சிஐடி விசாரணை
நாமலின் சட்ட பரீட்சை சிஐடி விசாரணை
நாமலின் சட்ட பரீட்சை சிஐடி விசாரணை ,பாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டக் கல்லூரிப் பரீட்சைக்கு சட்டவிரோதமாகத் தோன்றியமை குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பாஸ்டன்லங்கா சமூக ஊடக வலையமைப்பில் ஒளிபரப்பான நேர்காணலில் கூறப்பட்ட உண்மைகளின் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டு வழக்கறிஞர்களின் உதவியுடன் சட்டக் கல்லூரியில்
நடைபெற்ற தேர்வுக்கு ஆஜராகி சட்டவிரோதமாக சட்டப் பட்டம் பெற்றதாகக் கூறி, ”லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான சிட்டிசன் பவர்” என்ற அமைப்பு குற்றப் புலனாய்வுத் துறையில் (சிஐடி) புககர் அளித்துள்ளது.
மேற்கண்ட சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின்படி இது தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் துறை பணிப்பாளருக்கு பதில் பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி )அறிவுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது
ஊசி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு உட்பட 09 பேர் மீது விசாரணை
ஊசி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு உட்பட 09 பேர் மீது விசாரணை
ஊசி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு உட்பட 09 பேர் மீது விசாரணை ,தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் யாழ் மாவட்டத்தில் ஊசி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு உட்பட 09 பேர் மீது விசாரணை
தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உட்பட 09 பேர் மீதான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது செலவீன அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதன் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உட்பட யாழ். தேர்தல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ், அ.உமாகரன், சி.மயூரன், த.கிருஸ்ணானந், ந. கௌசல்யா, குருசாமி சுரேன் உட்பட 09 பேர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் சசிகலா ரவிராஜிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஏனையவர்களிடமும் வாக்குமூலங்களை பெற்ற பின்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை யாழ். தேர்தல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டவர்களில் இதுவரை தமது தேர்தல் செலவீன அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு
சமர்ப்பிக்காத 35 பேருக்கு எதிராகவும் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம் ,போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து, செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு வருகைதரும் சந்தர்ப்பத்தில், அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பவம் தொடர்பான விடயங்கள் இன்று (21) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்தானது, இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
மஹிந்த மகன் மீது விசாரணை
மஹிந்த மகன் மீது விசாரணை
மஹிந்த மகன் மீது விசாரணை , மஹிந்த ராஜபக்சின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ மீது குற்ற புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து விசாரணைகளை இன்று ஆரம்பித்தனர்.
கதிர்காம பகுதியில் காணி ஒன்றை அவர் கொள்வரவு செய்த தொடர்பாகவும் அதற்கு உரிமை கொண்ட தொடர்பாகவும் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது .
அரசுக்கு சொந்தமான காணிகளை இவர் அபகரித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி ஆதாரங்கள் திரட்டப்பட்ட நிலையில்,
அது தொடர்பாக இந்த விசாரணை குற்ற புலனாய்வு பிடிவால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைந்தா கோத்தாவினுடைய ஆட்சிக்கால பகுதியில் அரசகாணிகள் பலதை ஆக்கிரமித்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது .அதனை அடுத்து இந்த விசாரணைகள் தற்போது இடம் பெற்று வருகின்றன.
ஊழல் செய்து நாட்டை கொள்ளையடித்தவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையிலே தற்பொழுது இந்த விசாரணைகள் இடம் பெற்று வருவதாக தோற்றப்பாட்டை ஆளுகின்ற ஆட்சி காண்பித்து வருகின்றது .
குறிப்பிடத்தக்கது இது விசாரணை முடிந்து விடாமல் சம்பந்தப்பட்ட ஒரு கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதை இப்பொழுது கேள்வியாக இருக்கிறது .
விமல் வீரவன்சா விசாரணை வலையத்த்தில்
விமல் வீரவன்சா விசாரணை வலையத்த்தில்
விமல் வீரவன்சா விசாரணை வலையத்த்தில் , முன்னாள் ஜேவிபின் உடைய கட்சி உறுப்பினரும் என்னால் எதிர்க்கட்சிகளில் அமைந்திருக்க கூடிய விமல் வீரவன்சா மீது விசாரணை என்று இடம் பெற்றுள்ளது.
குற்றப்பிவு துறைக்கு சமூகம் அளித்திருந்த விமல் வீரவன்சா பல்வேறுபட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் .
மேடைகளில் பேசிய பேச்சில் உள்ள காரணமாக இவர் மீது இந்த விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டதாகவும், தொடராக மீது அவர் மீது பல மணி நேரம் இந்த விசாரணை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுரா குமர திசநாயகன் ஆட்சியில் இடம்பெற்ற முதலாவது விசாரணை இவருக்கு இதுவாக அமைகிறது.
தமது ஆட்சியில் லஞ்ச ஊழல் செய்தவர்கள் தேடி கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என ஆளுகின்ற ஆட்சி தெரிவித்திருந்தது.
அதனை அடுத்து அனுரா குமர திசநாயாக்காவுடைய ஆட்சியில் விமல் வீரவன்சா மீது இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இவரை போன்று ஏனையவர்கள் மீதும் விசாரணை நடத்தி லஞ்ச உடலுக்கு உடந்தையாக இந்த மோசடிகளுக்கு இருந்தவர்கள் கைது செய்ய போடுவார்களா .
நாட்டில் வன்முறைகளை தூண்டி கலவரத்தை ஏற்படுத்தியவர் தொடர்பாக அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்களா என்பதை இப்பொழுது உள்ள கேள்வியாகும்.
மகிந்தா மகனிடம் விசாரணை
மகிந்தா மகனிடம் விசாரணை
மகிந்தா மகனிடம் விசாரணை , மஹிந்தாவின் நிலையமாக யோசித்தால் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர் கதிர்காமத்தில் அரசகாணியை பெறப்பட்டதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதைவிட இவருக்கு மேலதிகாரி இருந்த அரசு அதிகாரி ஒருவர் மீதும் இந்த விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது .
மஹிந்த கோத்தபாய ஆட்சிக்காலப் பகுதியில் அரசகாணிகளை உடமையாக்கி அபகரித்து தொடர்பான விசாரணைகளே தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை நாடளாவிய ரீதியில் மஹிந்த மகளுக்கு ஏராளமான சொத்துக்கள் காணப்படுகின்றன .
தனது தந்தை மற்றும் சித்தப்பா ஆகியோர் ஆட்சிக்காலத்தில் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி அரச மற்றும் மக்களது காணிகளை அடார்த்தாக பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது .
அந்த செய்திகளை அடுத்து தற்பொழுது இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன.
எனினும் மேற்படி விசாரணைகள் திட்டமிட்டபடி அரசியல் கலப்பில்லாமல் தொடர்ந்து மேற்கொள்ளப்படுமா ..?
இவர் கைது செய்து அனுரா ஆராட்சி இவர்களை சிறையில் அடைக்குமா என்பது தான் கேள்வியாகிறது.
விசாரணையில் பிள்ளையான்
விசாரணையில் பிள்ளையான்
விசாரணையில் பிள்ளையான் ,முன்னாள் புலிகள் இயக்கத்தை காட்டி கொடுத்து சிங்க பாதுகாப்பில் வாழ்ந்து வரும் பிள்ளையான் குற்றப்புலானய்வு துறையில் விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளார் .
இன்று நடந்த விசாரணையில் வகைக்கு மூலத்தை பெற்று விட்டு பவர் வெளியேறி சென்றுள்ளார் .
பிள்ளையான் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிவிக்க பட்ட நிலையில் ,தற்போது இந்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது குறிப்பிட தக்கது .
எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ்
எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ்
எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ் ,மட்டக்களப்பு வவுணதீவிலிருந்து விளாவெட்டுவானுக்குச் செல்லும் வீதியில் ஆட்டோ ஒன்று எறிந்த நிலையில் காணப்பட்டுள்ளது .
இந்த ஆட்டோ எப்படி எரிந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இயந்திர கோளாறு காரணமாக தீ பற்றி எரிந்ததா அல்லது விஷமிகளினால் தீயிட்டு கொழுத்த பட்டதா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன
மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன
மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன ,நீதிக்கான கேள்வி .மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன.
விசாரணை குழுவினர் இவவிடயத்தில் மருத்துவ விதிமுறைக்கள் பல்வேறு தரப்பினரால் மீறப்பட்டுள்ளத்தையும் உறுதிப்படுத்தியுள்ளனர் என கூறப்படுகிறது .
இனி இதற்கான தண்டனை அளிக்கும் அதிக்காரம் சுகாதார அமைச்சிடம் மட்டுமே உள்ளது. .
இனி நாங்கள் என்ன செய்யலாம்
1.தகவல் அறியும் சடடத்தின் மூலம் விசாரணை அறிக்கையை வெளிக்கொனரலாம் (இதை வைத்தியாசலை தரப்பால் அமைச்சின் விசாரணைகள் முடியாமல் செய்யமுடியாது )
2.இத்தாயின் இறப்பில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் ஒரு சிவில் வழக்கை கணவரின் உதவியோடு தாக்கல் செய்யலாம். .
ஏன் இவை இன்னும். நடைபெறவில்லை.
இவவிடயத்தை சொந்த அரசியலுக்கு பயன்படுத்தாமல் அந்த தாயில் உண்மையான அக்கறை கொண்டோர் இதனை செய்தால் நீதி நோக்கி பயணிக்கலாம்.
இவ்வாறு மருத்துவர் அர்ச்சுனா முக நூலில் பகிரப்பட்டுள்ளது .
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை
யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றிற்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக பொலிஸ் உயர் அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரவு வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று நான்கு வீடுகளை அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்று இருந்தது.
அந்நிலையில் மறுநாளும் குறித்த வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட முனைந்தவேளை ஊரவர்கள் அவர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை நால்வர் பிடிபட்டனர், ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி சென்று இருந்தனர்.
யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை
பிடிபட்டவர்களிடம் ஊரவர்கள் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் எமக்கு ஆதரவாக செயற்படுபவர் என கூறியுள்ளனர்.
அதேவேளை பிடிபட்டவர்களின் கைபேசிகளை ஊரவர்கள் சோதனை செய்த போது , அவற்றில் வன்முறை கும்பலை சேர்ந்த சிலர் வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ள புகைப்படங்கள் காணப்பட்டன.
தம்மால் பிடிக்கப்பட்ட நால்வரையும் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஊரவர்கள் கையளித்ததை அடுத்து, பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைகளின் பின்னர் மன்றில் முற்படுத்தினர்.
அதேவேளை , தமக்கு பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆதரவு உண்டு என வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் ஊரவர்களுக்கு கூறியமை தொடர்பிலான வீடியோ பதிவு மற்றும் , ஆயுதங்களுடன் காணப்பட்ட புகைப்படங்கள் என்பன சட்டத்தரணி ஊடாக நீதவானின் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனை அடுத்து புகைப்படத்தில் உள்ள ஆயுதங்கள் அனைத்தும் , வன்முறை கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டு சான்று பொருட்களாக மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு உதவுவதாக கூறிய பொலிஸ் உத்தியோகஸ்தர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து மன்றில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மன்று உத்தரவிட்டுள்ளது
Featured
யாழ் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு தொடர்பில் விசாரணை
யாழ் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு தொடர்பில் விசாரணை
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போதான இல்ல அலங்கரிப்பு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
அதன் போது, கார்த்திகைப் பூ வடிவிலும், போர் டெங்கி வடிவிலும், இல்ல அலங்கரிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அவை தொடர்பிலான புகைப்படங்கள் நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தன.
விடயம் தொடர்பில் நேற்றைய தினம் விளையாட்டு போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையே பொலிஸார் , இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் பாடசாலைக்கு நேரில் சென்று இல்லங்களை பார்வையிட்டு, புகைப்படங்கள், காணொளிகள் என்வற்றை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு தொடர்பில் விசாரணை
அத்துடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு பாடசாலை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் அதிபர் உள்ளிட்டவர்கள் பொலிஸ் நிலையம் சென்று இருந்த நிலையில், பொலிஸார் அவர்களிடம் வாக்கு மூலங்களை பெற்ற பின்னர் அவர்களை விடுவித்துள்ளனர்.
இதேவேளை அண்மையில் கிளிநொச்சி மாவடத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இடம்பெற்ற விளையாட்டு போட்டியில் இல்ல அலங்கரிப்பு மற்றும் விநோத உடை போட்டிகள் தொடர்பிலான படங்கள் சமூக வலைத்தளங்களில்
வெளியாகி சர்ச்சைகள் ஏற்பட்டதை அடுத்து, வடமாகாண கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு , இல்ல அலங்கரிப்பு மற்றும் விநோத உடை போட்டிகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவனை தாக்கிய மொட்டு கட்சி உறுப்பினரை தேடி விசாரணை
பாடசாலை மாணவனை தாக்கிய மொட்டு கட்சி உறுப்பினரை தேடி விசாரணை
பாடசாலை மாணவனை தாக்கிய திவுலபிட்டிய உள்ளுராட்சி சபையின் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான தனது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்களாகியும், சந்தேகத்திற்குரியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என குறித்த மாணவனின் தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த 11ஆம் திகதி, பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவனை, பந்துராகொட நகரில் வைத்து உள்ளுராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் தாக்கியுள்ளார்.
பந்துராகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலின் பின்னர் சந்தேகத்திற்குரியவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில், எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக குறித்த முன்னாள் உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
மத்திய வங்கி சம்பள அதிகரிப்பு விசாரணைக்கு அழைப்பு
மத்திய வங்கி சம்பள அதிகரிப்பு விசாரணைக்கு அழைப்பு
எந்தவொரு தரப்பினருக்கும் தெரியப்படுத்தாமல் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் இன்று (04) அமைச்சரவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய வங்கி ஊழியர்கள் அண்மையில் தமது சம்பளத்தை 70 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் இது சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மத்திய வங்கி அதிகாரிகள் இவ்வாறு சம்பளத்தை உயர்த்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மத்திய வங்கி சம்பள அதிகரிப்பு விசாரணைக்கு அழைப்பு
இந்த விடயம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இன்று பிற்பகல் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு மத்திய வங்கியின் பிரதானிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நாளை (05) நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கும் அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கும் மத்திய வங்கியின் பிரதானிகள் அழைக்கப்பட்டு இவ்விடயம் தொடர்பில் வினவப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கும், அரசாங்க நிதி பற்றிய குழு கூட்டம் நாளை முற்பகல் 11.30 மணிக்கும் நடைபெறவுள்ளது
புலிகளின் ஒத்த ஆடை அறுவரிடம் விசாரணை
புலிகளின் ஒத்த ஆடை அறுவரிடம் விசாரணை
மாவீரர் தின நிகழ்வில் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்தனர் எனும்
குற்றச்சாட்டில், கோப்பாய் பொலிஸார் ஆறு பேரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை (27) நடைபெற மாவீரர் நாள் நிகழ்வின் போது, விடுதலைப்புலிகளின் போராளிகள்
புலிகளின் ஒத்த ஆடை அறுவரிடம் விசாரணை
போன்ற ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து இருந்தனர் என சில புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தன.
அவை தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , படங்களில் இனம் காணப்பட்ட சிறுவர்களின் பெற்றோரை
பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்களின் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.
வாக்கு மூலங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுக்க உள்ளதாகவும் , எவரையும் இது வரையில் தாம் கைது செய்யவில்லை எனவும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி
- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்
- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு
- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை
- குற்றவாளிக்கு மரண தண்டனை
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்
- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு
- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு
- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்
வெல்லம்பிட்டி பாடசாலை அனர்த்தம் தொடர்பில் விசாரணை
வெல்லம்பிட்டி பாடசாலை அனர்த்தம் தொடர்பில் விசாரணை
வெல்லம்பிட்டி பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 மாணவர்கள்
காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சு கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலய கல்வி அலுவலக அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, குறித்த பாடசாலைக்குச் சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஜயவர்தனபுர வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெல்லம்பிட்டி பாடசாலை அனர்த்தம் தொடர்பில் விசாரணை
நேற்று முற்பகல் (15) கைகளை கழுவிக் கொண்டிருந்த முதலாம் தரத்தைச் சேர்ந்த 06 மாணவர்கள் மீது பாடசாலையில் தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த கொங்கிரீட் சுவர் இடிந்து விழுந்தது.
விபத்தில் காயமடைந்த மாணவி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் பிரதேசவாசிகள் குழுவொன்று பாடசாலையின் அதிபரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலையில் நிலவிய அமைதியின்மை காரணமாக பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு
- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை
- குற்றவாளிக்கு மரண தண்டனை
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்
- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு
- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு
- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
- நாய்களை எரிக்க சுடலை














































