தாஜுதீனின் மரணம்: புதிய விசாரணைக்கு குடும்பத்தினர் வலியுறுத்தல்
Posted in இலங்கை செய்திகள்

தாஜுதீனின் மரணம்: புதிய விசாரணைக்கு குடும்பத்தினர் வலியுறுத்தல்

தாஜுதீனின் மரணம்: புதிய விசாரணைக்கு குடும்பத்தினர் வலியுறுத்தல்

தாஜுதீனின் மரணம்: புதிய விசாரணைக்கு குடும்பத்தினர் வலியுறுத்தல் ,மறைந்த இலங்கை ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் குடும்பத்தினர், அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திடம், அவரது மரணம் குறித்து .

மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்

NPP எம்.பிக்களின் சம்பளம் குறித்து முறைப்பாடு
NPP எம்.பிக்களின் சம்பளம் குறித்து முறைப்பாடுNPP எம்.பிக்களின் சம்பளம் குறித்து முறைப்பாடு

மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 13 ஆண்டுகளுக்கும் மேலாக நீதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறி வருகின்றனர்.

ஊடகங்களுக்குப் பேசிய தாஜுதீனின் மாமா, 2012 மே மாதம் சம்பவம் நடந்தபோது, ​​தாஜுதீன் ஒரு கார் விபத்தில்

இறந்துவிட்டதாக குடும்பத்தினருக்குச் சொல்லப்பட்டதை நினைவு கூர்ந்தார்.

சம்பவ இடத்திற்குச் சென்றபோது

“நான் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, ​​அவர் பயணிகள் இருக்கையில் இருந்தார், மேலும் வாகனம் மிகக் குறைந்த சேதத்தை மட்டுமே

சந்தித்திருந்தது. இதுபோன்ற விபத்தில் யாராவது இறந்திருக்கலாம் என்பது ஆச்சரியமாக இருந்தது,” என்று அவர் கூறினார்.

அந்த நேரத்தில் ஆரம்ப அறிக்கை, தாஜுதீன் வேகமாகவும், குடிபோதையிலும் வாகனம் ஓட்டியதாகவும், விபத்தால் ஏற்பட்ட தீயிலிருந்து ஏற்பட்ட புகையை சுவாசித்ததால் இறந்ததாகவும் முடிவு செய்ததாக அவர் மேலும் கூறினார்

ஊடகவியலாளர் மீது தாக்குதல் விசாரணைக்கு ​அமெரிக்கா வலியுறுத்தல்
Posted in இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர் மீது தாக்குதல் விசாரணைக்கு ​அமெரிக்கா வலியுறுத்தல்

ஊடகவியலாளர் மீது தாக்குதல் விசாரணைக்கு ​அமெரிக்கா வலியுறுத்தல்

ஊடகவியலாளர் மீது தாக்குதல் விசாரணைக்கு ​அமெரிக்கா வலியுறுத்தல் சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டு கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் பாரபட்சமற்ற விரைவான விசாரணை நடத்த வேண்டும் என

அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்குகின்ற பத்திரிகையாளர்களை பாதுகாக்கின்ற குழுவின் (CPJ) திட்ட இயக்குநர் Carlos Martínez de laSerna வியாழக்கிழமை (09) அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் டிசம்பர் 26 ஆம் திகதி கிளிநொச்சி நகரில்
வைத்து தாக்கப்பட்டு கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இவர்
அதிலிருந்து தப்பியிருக்கிறார். பின்னர் அவர் நெஞ்சு, கழுத்து,
முதுகில் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட வலி காரணமாக சிகிச்சை
பெற்றுள்ளார்.

அவர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தின் படி டிசெம்பர் 27ஆம் திகதி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு 30 ஆம் திகதி நீதிமன்றில்சந்தேக நபர்கள் தமிழ்ச்செல்வனால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றம் அவர்கள் பிணையில் விடுவித்துள்ளது.

இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத்
சமரவிக்ரசிங்கவை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் உடனடியாக பதில் கூற முடியாது என தெரிவித்துவிட்டார்.

உள்ளூர் நாளிதழ்களில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்பில் தொடர்ச்சியாக எழுதி வருவதன் காரணமாக தான் தாக்கபட்டிருக்கலாம்.


என எம்மிடம் தமிழ்ச்செல்வன் சந்தேகம் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழ்.


பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு தண்டனைகள் கிடைக்காமை
தொடர்பில் CPJ ஆவணப்படுத்தி இருக்கிறது.1983 தொடக்கம் 2009 வரையான
காலப்பகுதியில் உள்நாட்டு போர் காரணமாக கொல்லப்பட்ட அதிகளவான
பத்திரிகையாளர் தமிழ் பத்திரிகையாளர்கள்.

எனவே, புதிதாக பொறுப்பேற்ற அரசு தமிழ் பத்திரிகையாளர்கள் மீதான
தாக்குதல், துன்புறுத்தல்கள் மற்றும் தண்டனை விலக்களிப்பு என்பவற்றை
முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பத்திரிகையாளர்களை

பாதுகாக்கின்ற குழுவின் (CPJ) திட்ட இயக்குநர் Carlos Martinez de la Serna
கோரியுள்ளார்.