Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

வாழ்வோம் வா

வாழ்வோம் வா

உந்தன் மனதில் யாரோ
உண்மை சொல்வாய் நீயோ
என்னை எண்ணி தானோ
எங்கிராய் இன்று நீயோ

அலைகளின் ஆடலில் மோதல்
மரங்களின் உரசலில் காற்று
உந்தன் உரசலில் யாரோ
உண்மை சொல்வாய் நீயோ

உன்னை ஏற்று நானே
உலகில் வாழ்வேன் மானே
இதயம் தாரேன் நானே
ஏற்று வருவாய் தேனே

இரவும் இங்கு பகலாகும்
இந்த பூமி சுகமாகும்
இதயம் நாளும் மகிழ்வேறும்
இது தான் வாழ்வு சுகம் ஆளும்

03-08-2022

https://www.youtube.com/watch?v=73Hc61mg7jE
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

பதில் சொல்

பதில் சொல்

இரவுகளை மட்டும்
இரவல் கேட்கிறாய்
இது தான்
இன்றுந்தன் காதலா

உன் இச்சை தீர்ந்ததும்
உதறி போனாயே
காதல் என்ற போர்வையில்
கண்ணீரை ஏன் தந்தாய்

சுகமான காதலை
சுமையாக்கி போனாயே
என்னை கொன்றிட தான்
எமனாகி வந்தாயா

தேடி வந்த போதெல்லாம்
தேய் பிறையை தேய்ந்தேனே
காலாவதி ஆகினேனோ
கழித்து விட்டு போனாய்

03-09-2022

https://www.youtube.com/watch?v=lczTOQYV9t0
உன்னில் நன் என்னை நம்பு
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னில் நான் என்னை நம்பு

உன்னில் நான் என்னை நம்பு

காயம் கொஞ்சம் நீ தந்தால்
கண்ணீர் நான் தருவேன்
காலம் எல்லாம் நீ வாழும்
கவிதை யான் வடிப்பேன்

புத்தகத்தில் உனை புதைத்து
புது முகம் நான் தருவேன்
புயலாகி வீசி விடும்
புத்துயிர் நான் இடுவேன்

எழுத சொன்னால் நானும் கொஞ்சம்
ஏற்றே எழுதிடுவேன்
என் உயிரில் கலந்து விட்டால்
ஏணி நான் தருவேன்

மூச்சு தந்து உன்னை கொஞ்சம்
முன்னே வாழ வைப்பேன்
முன் பகலில் காயும் புடவை
போல உனை மடிப்பேன்

காட்டு வழியில் நீ நடந்தால்
காவல் நான் வருவேன்
கை தொழும் கடவுளாக – உன்
கண்ணில் நான் இருப்பேன் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-08-2022

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

சிக்கன் கடை நாற்றம்

சிக்கன் கடை நாற்றம்

சிக்கன் கடை சிக்கன் கடை
சிரிப்பு வருகுது
லண்டனில சிக்கன் கடையில்
நாற்றம் எழுகுது

பணத்தை கொடுத்து உணவு வாங்க
பறந்து வருகிறான்
பழசை விற்று பணத்தை வாங்கி
பறந்து திரிகிறான்

வீடு காரு எல்லாம் இங்கே
கடனில் ஓடுறான்
பணக்காரன் என்றே தன்னை
பந்தா காட்டுறான்

காரில் இருந்து கமரா பார்த்து
கடைக்குள் நுழையுறான்
வேலை செய்யும் தொழிலாளியை
வெறித்து முறைக்கிறான்

தொழிலாளி போல வேலை செய்ய முடியல
தொந்தி வைத்த வயிறால ஏதும் முடியல
அரை குறையா ஆங்கிலமும் பேசி அலைகிறான்
அதிலேனும் புலமையில்லா இவனும் கிடக்கிறான்

பண்டியையும் கோழியையும்
ஒண்ணா பொரிக்கிறான்
பள்ளி வாசல் போறவனும்
பாவம் திண்ணுறான்

பாபுக்கி கிரில் சிக்கன்
வாங்கி உண்ணாத
பழைய சிக்கன் இதுதாங்க
மறந்து போகாத

இவர்கள் போல குப்பையர்கள்
இங்கு யாரும் இல்லையே
இவரை இங்கு சிறையில் போட
எவரும் முனையல

சிக்கன் கடை நாற்றம்

உழைத்த பணத்தில் வரியை கட்ட
ஊதி மறைக்கிறான்
ஊருக்குள்ள முதலாளி
ஊனம் போகிறான்

இவரை கண்டால் செருப்பெடுத்து
இன்றே அடியடா
இடுகாடு உள்ளே இழுத்து
இன்றே புதையடா

கலர் படத்தை செய்கிறவன்
கலராய் திரிகிறான்
நாற நாற சிக்கன் விற்கும்
நாயு போகிறான்

கோழிக் கடையில் கொஞ்சம் நீங்க
வேலை செயுங்க
கொள்ளை அடிக்கும் கொள்ளையரை
அங்க பாருங்க

சூடு ஒயிலை வடிக்கிறாங்க
ரப்பர் வாளியில்
சுகாதார பாதுகாப்பு
மறந்து போறாங்க

சட்டம் வாழும் நாட்டில தான்
எல்லாம் நடக்குது
சாட்ச்சி களாய் சொன்னேன் இதை
எடுத்து பேசுங்க

லண்டனில சிக்கன் கடை
கூத்து பாருங்க
நம்ம தமிழர் கடையில் இந்த
நாற்றம் கேளுங்க

பெண்டாட்டி பேரில
கடைகள் பாருங்க
பொறுப்பற்று திரியும்
இந்த ஊழல் வாதிங்க

சொலவதெல்லாம் உண்மை என்றே
சொல்லி போறெங்கே
சொன்னதில பொய் இருந்தா
சொல்லி திருத்துங்க …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 31-07-2022

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

கோபம் தவிர்

கோபம் தவிர்

என்னை அடித்தாயா – நீ
என்னை அடித்தாயா
எரிமலை ஒண்ணை – நீ
ஏறி அணைத்தாயா ..?

உச்சி வெயில் போல – என்
உள்ளம் எரியுதே
கந்தல் உடல் தேயுதே – உன்
கதை கேட்டு விழி உருகுதே

எத்தனை முறை என்னை இழிப்பாய்
எனக்கு பதில் சொல்லாய்
தோற்று போனது நீயே – இந்த
தோல்வி எல்லாம் போலியே

உள்ளம் மாசடைந்தால்
உயிரும் வாழ்ந்திடுமா
கள்ளம் மனம் படுத்தால்
கருணை பிறந்திடுமா

ஏதும் செய்தும் இன்றென்ன
எல்லாம் வீண் தானே
என்னை வீழ்த்த முடியாது
ஏற்று தெளிந்தாயே

கோபம் தவிர்த்தால் வாழ்வாயே
கொடி நாட்டி ஆள்வாயே
கொள்கை நட்டு எழுந்தால்
கோட்டை ஆள்வாயே …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 28-07-2022

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    நீ வந்தால் நான் மகிழ்வேன் …!

    நீ வந்தால் நான் மகிழ்வேன் …!

    விண்ணிலவு வீதியிலே ஏன் நடந்ததோ
    விடலைகள் உருகிடவே ஏன் வைத்ததோ
    சின்ன விழி பார்வையிலே சிறை வைத்ததே – பறவை
    சிறகின்றி ஏன் நடந்ததோ

    முளை விட்ட நாற்றும் உருகிடாதோ -இந்த
    முழு நிலவை கண்டு பதறிடாதோ
    அருகில் வந்து அணைத்திடாதோ – ஏக்கம்
    ஆறாய் நெஞ்சில் பாய்ந்திடாதோ

    இஞ்சி இடையிலே சிக்கி இதயம் தளம்புதே
    இந்த நிலையிலே மனமும் வெம்புதே
    பூவுக்கு அழகை ஏன் படைத்தான் – இந்த
    புவியில் ஆணை ஏன் ஏங்க வைத்தான்

    கண்ணுறங்கி போகுமோ – இல்லை
    காதல் கொண்டு தொடருமோ
    என்ன இது விதியோ
    ஏன் இறைவா இந்த சதியோ

    மின்னல் ஒன்று கண்ணிலே
    மின்னி ஏன் வீழ்ந்தது
    நெஞ்சில் காதல் முளைவிட
    நேரில் ஏன் வந்தது

    தொடை காட்டி கால் நடக்க
    தொலையமால் இருக்குமோ -விழி
    தொடராமல் மறையுமோ – இந்த
    தொடரும் தான் முடியுமோ

    ஆசை நாவூற அதிலேறி சுவை ஏற
    அந்தி மறைந்தது அதிகாலை விடிந்தது
    உடலும் ஒடிந்து நலிந்தது
    உருமாறி அகவை முடிந்தது

    அலை ஆட பட கோடும்
    அதுபோல மனதாடும்
    விண்ணிலவே நீ வந்தால்
    விடுதலை உடன் பிறக்கும் …!

    வன்னி மைந்தன்
    ஆக்கம் 29-11-2021

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      ஈழம் பிறந்ததின்று – அள்ளி கொஞ்சு ..!

      ஈழம் பிறந்ததின்று – அள்ளி கொஞ்சு ..!

      எழுவான் திசையில் வருவான் தலைவன்
      அழுகை நிறுத்தி எழுவான் தமிழன் ….
      அஞ்சி ஓடும் பகையை நொறுக்கு
      ஆழும் பலம் உனதாய் ஆக்கு ….

      வீழ்ந்தோம் என்று கதறாதே
      விதி செய்வோம் பதறாதே …
      விட்ட இடம் தொட்டு
      விடுதலை வா நட்டு ….

      முடியாதென்று ஏதுமில்லை
      முடிந்ததாய் போர்கள் ஏதுமில்லை….
      இடை வீழ்ந்த அமைதி
      இல்லையடா தோல்வி …

      கையில் ஏந்து கருவி
      காலை தொடும் அருவி ….
      விடியல் இன்றி தமிழர் தேசம்
      வீதி உறைவதா

      விழியன் ஓரம் நீரும் விழவே
      வீழ்ந்து அழுவதா ..?
      கரிகாலன் பட்டறைகள்
      கறையாகி உறைவதா ..?

      இன்று பிறந்தான் எங்கள் அண்ணன்
      இன்றே ஈழம் வென்று தருவான்
      நூறாண்டு நீ வாழ்வாய் – எங்கள்
      நூலகமே நீ ஆள்வாய் …..!

      வன்னி மைந்தன்
      ஆக்கம் 26-11-2021

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        நீயே என் உயிர் வந்து விடு …!

        நீயே என் உயிர் வந்து விடு …!

        நீயும் நானும் கூடனும்
        நீளும் காலம் வாழனும்
        உயிரே வா வா
        உள்ளம் தா தா

        அசைந்து வரும் காற்றாய்
        ஆடி விழும் மின்னலாய்
        ஓடி நாளும் வருவாய்
        ஓராயிரம் இன்பம் தருவாய்

        மின்னல் அடி கண்ணில் ஊறுதடி
        யன்னல் வழி காற்று ஓடுதடி
        கொட்டும் மழையில் உடல் நனையுதடி
        ஓட்டும் உடையில் உடல் தெரியுதடி

        வானம் கறுத்ததோ மேனி சிலிர்த்ததோ
        வானம் பாடி மழை பொழிந்ததோ
        அட டா இது தான் விதியோ
        ஆண்டவன் இட்டான் சதியோ

        ஓடும் நதியிலே ஆடும் அலையிலே
        ஓடும் படகாய் ஆடும் மயிலே
        நீதானே நிதம் வேண்டும்
        நீயே என் உயிர் வரணும் …!

        வன்னி மைந்தன்
        ஆக்கம் 22-11-2021

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          காதல் சொல்லிட வா

          காதல் சொல்லிட வா

          ஏழைந்து நாட்களாக
          என்னுயிரை காணலையே
          முன்னே நானழுது
          மூவாறு பெருகிடிச்சே

          ஏழு நாளு வாரத்தில
          ஏங்கி போனேன் பூச்சியமா
          ஏழேழு ஜென்மங்களும்
          ஏய் நீ தா காட்சியம்மா

          ஒன்ப தாண்டு வாழ்விலே
          ஒடிந்து போனேன் மூனாக
          தென்பை தந்து நின்னவளே
          தேடுகிறேன் தானாக

          வந்திடுவாய் என்று தனே
          விழியோரம் காத்திருக்கேன்
          தந்து விட்டேன் இலக்கமதை
          தாகத்தோடு அழைத்து விடு

          பூச்சியத்தில் இருந்து தான்
          பூமி சுத்துதே
          நாளுக்கு நாலு நாலு
          நாட்டை ஆழுதே

          கை பேசி இலக்கத்தை
          கவிதைக்குள்ளே வைத்தேன
          கண்டு பிடித் தழைப்பாய்
          காதல் கூறி நிற்பாய்

          வன்னி மைந்தன் (ஜெகன் )
          ஆக்கம் 05-06-2020
          இதற்குள் பிரிட்டன் 11 இலக்கம் கொண்ட கைபேசி இலக்கம் உள்ளது கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்

          வன்னி மைந்தன் கவிதைகள்

          Home » வன்னிமைந்தன் கவிதைகள்
            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

            ஏன் அழுகிறாள்

            ஏன் அழுகிறாள்

            ஆடி வரும் காற்று போல
            அன்று உடல் தழுவியவள் ..
            இன்று விட்டு போனதென்ன ..?
            இதயம் மறந்து நின்றதென்ன ..?

            கூண்டுடைத்து பறந்திட தான்
            கூண்டு கிளி முனைந்ததென்ன …?
            காடு மேவி வந்ததினால்
            காமம் கணக்க பறந்ததுவோ …?

            கூவி வரும் குயில் பாட்டை
            கூடுடைத்து கேட்டு நிற்பின் …
            வாழ்வு பயிர் வாடிவிடும்
            வாயில் கோலம் புரியலையோ ..?

            ஏது சொல்லி இயம்பிடுவேன்
            என் மனதின் வேதனையை ..?
            காறி உன்னில் உமிழ்ந்திடவோ
            கட்டி தாலி பற்றி வந்தேன் …?

            பறந்த கிளி மகிழ்வுறுமோ ..?- வந்தான்
            பாசமதில் குளித்திடுமோ …?
            நொந்து நொந்து அழுது இன்று
            நோகும் வாழ்வில் ஏன் மிதந்தாய் …?

            வன்னி மைந்தன் – ( ஜெகன் )
            ஆக்கம் -13/08/2019

            Home » வன்னிமைந்தன் கவிதைகள்
              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              நாம் வாழ்வோம் ஓடி வா

              நாம் வாழ்வோம் ஓடி வா

              துளை போடும் பார்வைக்குள்ள
              துடுப்பாட்டம் ஈடுப்பாட …
              மனது மயங்குதடி – விழி
              மத்தாளம் கொட்டுதடி …

              காற்று பட்டு சேலை நுனி
              கன்னம் வருட …
              அடி உள்ளம் துள்ளுதடி
              ஆசை காதல் கொல்லுதடி …

              அச்சப்பட்டு வெக்கப்பட்டு
              அடி மேனி வேர்க்குதடி …
              காத்திருந்த போதுமடி
              கண்ணே நீ வந்திடடி . …

              வயதான வேளையில
              வாலிபம் சாக முன்ன …
              வாழ வேணுமடி
              வாழ்க்கை பட வேணுமடி …

              தினம் தோறும் தேவைகளோ
              தீராது கூடுமடி …
              அயராது உழைத்து கொட்ட – இந்த
              ஆயூள் போதாதடி …

              வன்னி மைந்தன் – ( ஜெகன் )
              ஆக்கம் -10/03/2019

              Home » வன்னிமைந்தன் கவிதைகள்
                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                ஒரு பதில் சொல்லாயா

                ஒரு பதில் சொல்லாயா

                நடையை காட்டி இடையை காட்டும்
                நர்மதா இவள் யாரோ ..?
                தொங்கும் கூந்தல் சூடி நடக்கும்
                தோகை இவள் யாரோ ..?

                அங்கம் காட்டி அசையும் பூவே
                அடைக்கலம் தருவாயா ..?
                பஞ்சு மேனியில் பகலிரவாட
                பாவை விடுவாயா ..?

                தொட்டு தொட்டு தேகம் தடவ
                தென்றல் அழைப்பவளே….
                தொட்டு விழிகள் பார்க்க விட்டு
                தேகம் மறைப்பதென்ன ..?

                அச்சம் உன்னில் குந்திட தானோ
                அழகே மறைகின்றாய் ..?
                அடடா உன்னை செதுக்கிய – உந்தன்
                அப்பன் எங்கயடி …?

                எத்தனை கேள்வி கேட்டும்
                ஏனோ காண மறுக்கின்றாய் ..?
                ஏக்கம் நெஞ்சில் ஏற்றி வைத்து
                எங்கோ மறைகின்றாய் …?

                ஆசை ஊற நினைவு தூற
                அழுகிறேன் எனை பாராய் …
                தரணியை வாங்கி தருகிறேன் -என்
                தங்கமே வாராய் …..!

                -வன்னி மைந்தன் – ( ஜெகன் )
                ஆக்கம் -18/07/2018

                Home » வன்னிமைந்தன் கவிதைகள்
                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  ஏக்கம் ஒன்று தவிக்கிறது

                  ஏக்கம் ஒன்று தவிக்கிறது

                  கவிதை ஒன்று பாடவா – உந்தன்
                  காதில் வந்து கூற வா ..?
                  நீயும் நானும் ஒண்ணு தானே- எந்தன்
                  நினைவில் உந்தன் கண்ணு தானே …

                  ஆடைகளை அவிழ்க்கும் உந்தன்
                  பார்வையாலே நோகிறேன் – என்னை
                  ஆட வைக்கும் உந்தன்
                  ஞானத்தாலே தவிக்கிறேன் ….

                  கேள்விகளை தெளிக்கும் உந்தன்
                  சிரிப்பினிலே துடிக்கிறேன் – என்னை
                  சீண்டி பார்க்கும் உந்தன்
                  சில்மிசத்தால் வாடுறேன் …..

                  வேக வைத்து பார்த்து என்ன
                  தேவைதேயே காண்கிறாய் ..?
                  வேகம் தரும் நினைவு ஊட்டி
                  வேகமாக மறைகிறாய் …..

                  ஏக்கம் ஒன்று தவிக்கிறது
                  ஏக்கம் ஒன்று தவிக்கிறது

                  ஏனோ உன்னை நான் தேட
                  ஏங்க விட்டு செல்கிறாய் …?
                  எரியும் எந்தன் நினைவில் உன்னை
                  ஏற்றி வைத்தென் பார்க்கிறாய் …?

                  ஆவி உயிர் நோக தானோ
                  அழகு மயில் விடுவதோ …?
                  ஆராரோ பாடும் நாளை
                  அருகில் தர கூடாதோ …?

                  • வன்னி மைந்தன் – ( ஜெகன் )
                    ஆக்கம் -30/06/2018
                  • வன்னி மைந்தன் கவிதைகள்
                    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                    தேடி வருவேன் காத்திரு

                    தேடி வருவேன் காத்திரு

                    இருந்தால் வருவேன் இதயம் தருவேன்
                    இன்றே கொஞ்சம் பொறுத்திடு …..
                    நாளை மலரும் வேளை ஒன்று
                    நமக்காய் மலரும் காத்திரு …..

                    வலிகள் வந்து இடையில் வீழ்ந்தால்
                    வாழ்வை விட்டு ஒழிவதா…?
                    கால பிழையால் கசங்கிய வாழ்வை
                    கண்ணீர் தூவி சுமப்பதா …?

                    ஒரு நாள் மலரும் திரு நாள் ஒன்றில்
                    ஓலம் ஓங்கி மறையும் …
                    ஓடியே வீழ்ந்த வலிகள் எல்லாம்
                    ஒரு நொடி அங்கே சிதறும் …

                    நடக்கும் கால நிகழ்வுகள் எல்லாம்
                    நல்லதே என்றே நம்பு …
                    நாளை சிறக்கும் வாழ்விற்கிது
                    நம்பிக்கை தரும் கொம்பு ….!

                    • வன்னி மைந்தன் – ( ஜெகன் )
                      ஆக்கம் -29/03/2018
                    • வன்னி மைந்தன் கவிதைகள்
                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                      அஞ்சா எழுவாய் அகிலம் தொடுவாய்

                      அஞ்சா எழுவாய் அகிலம் தொடுவாய்

                      வருகின்ற தடை கண்டு வாடாதே
                      வரும் வலி என்ன இடர் என்று கேளாதே ..
                      எதிர் என்ன வரிகினும் எழுந்தாடு
                      எதிர் புயல் என நின்றே பந்தாடு ..

                      உடையது இல்லா பழங்காலம்
                      உடையது தரித்தது இக் காலம் …
                      சிந்தனை தட்டி எழுந்தானே – இன்று
                      சீறும் வானம் தந்தானே ….

                      ஆறாம் அறிவை நீ தட்டு
                      ஆடலாம் ஆகாயம் நீ தொட்டு ..
                      நம்பிக்கை மனதில நீ நட்டு
                      நாள் எல்லாம் போடடாநடை நட்டு …

                      தோல்வி ஒவ்வொன்றும் படி நிலை தான்
                      தேறும் வெற்றியின் முதல் அடி தான் …
                      தளர நின்று நடை போடு
                      தரணியே உந்தன் காலடி தான் ….

                      அஞ்சி ஒடுங்குதல் அவமானம்
                      அவை கெஞ்சி வீழ்தல் இழி கேடு …
                      உன்னிலை இழக்கா நீ நடந்தால்
                      உலகில் நீயே முதல் புனிதன் …!

                      • வன்னி மைந்தன் -(ஜெகன் _
                        ஆக்கம் -09-03-2018
                      • வன்னி மைந்தன் கவிதைகள்
                        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                        முள்ளி வாய்க்கால் தமிழா சிரி

                        முள்ளி வாய்க்கால் தமிழா சிரி

                        அண்டி பிழைத்தவராம் – சிங்கள
                        அடி கழுவி நின்றவராம் ….
                        தொண்டுகள் இதுவாகி
                        தொழுதே திரிந்தவராம் …..

                        பண்டிகை அதுவாகி – தமிழன்
                        பலியில் சிரித்தவராம் ….
                        வெடி கொளுத்தி மகிழ்வில்
                        வெற்றி செய்தவராம் …..

                        காலம் முழுவதும்
                        கால் கழுவி நின்றவரை …
                        விட்டது பிழையென்று
                        விடயம் புரிந்தான் …

                        தட்டினான் தீ பற்றினான் ஊர்
                        தாரணி எல்லாம் கதறுதடா ….
                        கொட்டினான் தேளாகி
                        குளறுதடா கீழாகி ……

                        வராலாற்று தவறொன்று
                        வலிகள் புரிகிறது ….
                        வாடட்டும் தமிழா
                        வாய் கொட்டி சிரி….

                        நாடின்றி அவன் மடி
                        நக்கி பிழைத்தவர்கள் ….
                        கூடின்றி போகட்டும்
                        கூட்டடா வெடியதிர்வை….

                        ஆண்டுகள் முப்பது
                        ஆட்டம் போட்டவரை ..
                        கோட்டையில் இருத்தி
                        கொடி கட்டி மகிழ்ந்தவரை ….

                        வீட்டோடு எரிக்கிறான் – சிங்களன்
                        வீழ்ந்து சிரி தமிழா …
                        பாட்டு எழுதி படி – இது
                        பைந்தமிழன் வேலை ….

                        முறுக்கடா உன் மீசை – தமிழா
                        நறுக்கடா உன் பகையை …
                        புரிந்ததா புலி வீரம்
                        புண் பட்டு அழுவாய் ….

                        என்னடா சொன்னாய்
                        ஏதிலி என்றாய் ….
                        வாலாட்டி திரிந்தவரே – உன்
                        வாய் அறுத்தான் என் செய்வாய் ..?

                        நீறாகி எரியுதாடா
                        நீளமான உன் குடில்கள் ….
                        நக்கி பிழைத்தவனே
                        நாயாகி குலை ….

                        முக்கி முக்கி – தமிழன்
                        முன் எழுந்த வளர்ச்சியை- பகை
                        நக்கி நக்கியே நாராய் அறுத்தவா
                        நக்கி குலை …..

                        முதாலாளி உதைக்கிறான்
                        முனகாதே முன்னே வணங்கு …
                        சிலையாகி நிற்பாய் – அவன்
                        சித்திரம் வடிப்பான் ….

                        முள்ளி வாய்க்கால் தமிழா சிரி
                        முள்ளி வாய்க்கால் தமிழா சிரி

                        அல்லாவின் பிள்ளைகளே
                        அழுவதுவோ …?
                        சிரியுங்கள் இப்போது
                        இது உங்கள் சிம்மாசனம் …

                        முள்ளி வாய்காலில் – தமிழன்
                        முண்டமாய் வீழ்ந்த போது
                        பால்சோறு உண்டு பார்த்து சிரித்தவா
                        பறை கொட்டி வெடி ….

                        இது தான் உன் வேலை
                        இது தான் உன்வேலை …
                        இன்றேன் நீ அழுதாய் ..?
                        இடி தரும் வெடி எறிவாய்…!

                        • வன்னி மைந்தன் – ( ஜெகன் )
                          ஆக்கம் -07-03-2018
                        • வன்னி மைந்தன் கவிதைகள்
                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                          பிணங்களால் மிதக்கும் தேசம்

                          பிணங்களால் மிதக்கும் தேசம்

                          கந்தக துகளிருந்து கதறுதடா பிஞ்சு
                          கை இழந்து பாவமடா நோகுதடா குஞ்சு …
                          என் செய்தார் என்றிவரை கொல்லுதடா நஞ்சு …?
                          எவன் உண்ண பிள்ளை கறி தேடுதடா சொல்லு …?

                          வாலாட்ட மறுத்ததாலே வாடுதடா நாடு
                          வல்லராசம் அமெரிக்கா புரிந்த செயல் கேடு …
                          வெள்ளையனாம் மாளிகைக்கு வெடிகுண்டை போடு -போர்
                          வெறியடங்கி நிமிருமடா உலகில் பல நாடு ….

                          தெருவெல்லாம் மிதக்குதடா பிள்ளைகளின் கூடு
                          தேம்பி தேம்பி அழுகுதடா உலகில் பலநாடு …
                          நெஞ்சை வெட்டும் கொடுமைகளை நிறுத்துவது யாரு ..?
                          நேசமுடன் உயிர் பலியை தடுத்திடுமோ போரு ..?

                          மா நிறத்து புழுதிக்குள்ளே மழலைகளை பார்த்தேன்
                          மாண்ட உயிர் மீண்டிடுமா மக ராசர்களே கூறும் ..?
                          பிள்ளைகளை கொல்வது தான் பிரியமுள்ள போரோ…?
                          பிரளையத்தை கிண்டியவர் நெஞ்சமதன் வேரோ…?

                          பிணங்களால் மிதக்கும் தேசம்

                          கை இழந்து ,கால் இழந்து கதறுதடா குஞ்சு
                          கண்ணிரண்டில் நீர் வழிய கதறுதடா நெஞ்சு ….
                          எவன் செயத வேலையடா இந்த இழி போரு..?
                          ஏறி இன்று போடுங்கடா அவன் உடலை துண்டு …

                          மானமுள்ள உலகத்தாரே மன்றில் ஏறி வாங்க
                          மழலைகளை காத்திட தான் ஒன்றாகி போங்க …
                          சிரிப்பிழந்த சிரியாவை சிறை மீட்க வாரீர்
                          சிறகடிச்சு பறக்கும் வெண்புறாவை தாரீர் …!

                          • வன்னி மைந்தன் – ( ஜெகன் )
                            ஆக்கம் – 04-03-2018

                          வன்னி மைந்தன் கவிதைகள்

                            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                            மலட்டு சிந்தை வெளிச்சம் தருமா

                            மலட்டு சிந்தை வெளிச்சம் தருமா

                            ஊரின் பெயரில் சங்கம் வைத்து
                            ஊரார் கொள்ளையடா- தினம்
                            ஊரின் மாந்தர்க் என் செய்தீர்
                            ஊரின் கேள்விக்கு பதில் இல்லையடா …

                            அறத்தை நாட்ட முன் வந்தார்
                            அருவாள் காவுதடா …..
                            அட டா இது தான் அவர்கள்
                            அறத்தின் நிலையோடா …?

                            எதுகை மோனை ஒன்றில் தானே
                            ஏற்றம் உள்ளதடா – சந்தம்
                            ஏற்ற இறக்கம் அறியா சிந்தையில்
                            ஏது கொள்ளுமடா …?

                            உண்டு கழித்து உழல்வது தான்
                            ஊர் சங்க நிலையோடா ..?
                            மறை கழன்றார் நிலை இதுவென்றால்
                            மன்றம் சிறக்குமோடா….?

                            சாதி ,மத ,அரசியல் ,கலப்பின்
                            சங்கம் உருப்படுமோ ..? – தம்பி
                            கூடு கட்டிய மலட்டு சிந்தை
                            கூண்டை உடைத்திடுவீர் …..

                            நக்கி பிழைக்கும் நாய்களுக்கு இங்கு
                            நக்கல் தொழில் தானோ ..?- முரசு
                            நகரம் செழிக்க ரவுடிகள் கூடி
                            நகர் மன்றம் வந்தாரோ …?

                            மண்டையில் ஏதுமில்லா மாந்தர்
                            மன்றில் முதல் நிலையாம் – நகர்
                            மன்றம் செழிக்க இவரது சிந்தை
                            மன்றுக்கு முதல் படியாம் …..

                            தானே மேலென ஆடும் ஆணவம்
                            தர நிலை இழக்கிறதே – பதவி
                            தவறிய விந்தில் முளைத்தார் ஏற்பின்
                            தர நிலை உயர்ந்திடுமோ ….?

                            • வன்னி மைந்தன் ( ஜெகன் )
                              ஆக்கம் -03/03/2018
                              மலட்டு சிந்தை வெளிச்சம் தருமா …?

                            வன்னி மைந்தன் கவிதைகள்

                              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                              நண்பர்கள் வேண்டாம் புத்தகம் தா

                              நண்பர்கள் வேண்டாம் புத்தகம் தா

                              எண்ணம் கசக்கி எண்ணிய தெண்ணு
                              ஏற்றம் வாழ்வில் பிறக்கும் …
                              கண்ணில் கரைந்த கண்ணீர் துளியும்
                              கடுகதி நன்றே மறையும் …

                              கூடி நின்றார் குரல்வளை அறுத்து
                              குருதி குடிக்க துடிப்பார் – நீ
                              வீழ்ந்தாய் என்ற விலாசம் இட்டு
                              விசிலடித்து அலைவார் ….

                              பழகும் போதே பாம்பென அறியா
                              பழகி நீயும் உழல்வாய் ……
                              பார்த்த கணக்கு கை நொடி கூட
                              படு குழியில் வீழ்த்தி போவார் …

                              நண்பர்கள் வேண்டாம் புத்தகம் தா
                              நண்பர்கள் வேண்டாம் புத்தகம் தா

                              ஏறி நடந்தால் ஏறி வந்து
                              ஏசியாகி உரைப்பார் – தாம்
                              பேசி நின்ற வார்த்தை மறந்து
                              பெரியாராய் உன்னை மொழிவார் …..

                              சாவை தழுவ நோதல் வீசும்
                              சக பாடிகள் எனக்கு வேண்டாம் ….
                              ஆறாம் அறிவை தட்டி பேசும்
                              அறிவகம் ஒன்றே போதும் …..!

                              • வன்னி மைந்தன் – ( ஜெகன் )
                                ஆக்கம் -08-02-2018
                              • வன்னி மைந்தன் கவிதைகள்
                                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                தண்டனை கொடு

                                தண்டனை கொடு

                                பாதணி இன்றே பணி செய் என்றான்
                                பாவி அவனொரு மூடன் – கொடும்
                                பாதகர் நிலையை புரிந்திடா எண்ணி
                                பாடியே நின்றான் வேடன்……

                                தன் அருள் ஒன்றே முன் பொருள் என்றே
                                தவறி வைத்தான் நன்றோ ..?- நீதி
                                தழுவல் மறந்து தண்டனை எய்தார்
                                தகுமோ இந்த ஊழி …?

                                எம்மொழி உரைத்தான் என்றே எண்ணா
                                எடுத்தே எறிந்தான் பகைமை ….
                                தன் நெறி கெட்டு தன் மதி விட்டு
                                தழுவுமோ விரல் அவர் பாதம் …?

                                செய் நெறி கெட்ட செயல் நிலையாளர்
                                செந்தணல் ஆகி எரித்திடு – கொடும்
                                வெண் சமர் ஆடியே வேண்டும் நீதி
                                வென்றே உலகை ஆண்டிடு …..

                                தருகிற தண்டம் தர்மம் கூவும்
                                தட்டடா தட்டு கதவை …
                                கொடும் தேளாகியே கொட்டடா கொட்டு
                                கொடும் விலங்குகள் இங்கு சிதற ….!

                                • வன்னி மைந்தன் -( ஜெகன் )
                                  ஆக்கம் -08-02-2018
                                  பணி புரிந்த இடத்தில பாதணி எறிந்த
                                  குற்றவாளியை காப்பாற்றிய முதலாளிக்கு சமர்ப்பணம் …

                                வன்னி மைந்தன் கவிதைகள்