Tag: தண்டனை
கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை
கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை
கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை ,கொலைக் குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவினருக்கு, பாலப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி ருசிர வெலிவத்த வெள்ளிக்கிழமை (22) அன்று மரண தண்டனை விதித்தார்.
குடும்பத் தகராறு காரணமாக
குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட கைகலப்பின் போது, 2007 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி, படபொலவில் உள்ள
படடுவவைச் சேர்ந்த குஸ்திங்நவாடு மஞ்சுலா என்பவரை அவர்கள் தடியால் அடித்துக் கொன்றனர். குற்றம்
சாட்டப்பட்ட குலப்புவவாடு வசந்த ஜெயலத், குலப்புவவாடு பேர்ல் பந்துல, குலப்புவவாடு நந்தன பத்மகீரித்தி,
சித்த மரக்கல ஜனக குமார மற்றும் ஹினிடுமகே லஹிரு மதுரங்க ஆகியோர் படபொலவைச் சேர்ந்தவர்கள்,
அவர்களில் இருவர் தந்தை மற்றும் மகன் ஆவர். மரண தண்டனையை வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி, அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளை
சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து
சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து, குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனையை உறுதி செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். அரசுத் தரப்பு
வழக்கறிஞர் ஹிருனி குணதிலக்க அரசுத் தரப்பு வாதத்தை முன்வைத்தார், மீத்தியகொட போலீசார் அரசுத் தரப்புக்காக சாட்சியம் அளித்தனர்.
- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன

- எபோலா அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளது சுகாதார அமைச்சு

- வேல சூடாவின் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

- அந்நியச் செலாவணி வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

இஸ்ரேல் மீதான தாக்குதல் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு
இஸ்ரேல் மீதான தாக்குதல் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு
இஸ்ரேல் மீதான தாக்குதல் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு ,அக்டோபர் 7 தாக்குதல்கள் தொடர்பாக மரண தண்டனை விதிக்க அனுமதிக்கும் மசோதாவை இஸ்ரேலிய நாடாளுமன்றம் நிறைவேற்றியது
தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில்
2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாலஸ்தீனியர்கள் மீது வழக்குத் தொடர,
ஒரு சிறப்பு இராணுவ நீதிமன்றத்தை நிறுவும் சட்டத்தை இஸ்ரேலிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது என ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ செய்தி வெளியிட்டுள்ளது.
அரசு மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவராலும் ஆதரிக்கப்பட்ட இந்த மசோதா,
சில குறிப்பிட்ட வழக்குகளில் மரண தண்டனைக்கு வழிவகுக்கிறது என்றும், சான்றுகள், வாக்குமூலங்கள் மற்றும் சட்ட நடைமுறைகளை நிர்வகிக்கும்
நிலையான விதிகளை நீதிமன்றம் திருத்தி அமைக்க அனுமதிக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறியது.
தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலியப் படை
அந்த அறிக்கையின்படி, தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்ட சுமார் 300 பாலஸ்தீனியர்கள் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த புதிய கட்டமைப்பின் கீழ் “இனப்படுகொலை” செய்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட நபர்கள் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று அந்தச் சட்டம் குறிப்பிடுவதாகத் தெரிகிறது.
- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன

- எபோலா அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளது சுகாதார அமைச்சு

- வேல சூடாவின் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

- அந்நியச் செலாவணி வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

ஒருநாள் சிசுவை கொன்ற தாய்க்கு கடூழிய சிறை
ஒருநாள் சிசுவை கொன்ற தாய்க்கு கடூழிய சிறை
பிறந்து ஒருயொரு நாளான சிசுவை படுகொலை செய்த சிசுவின் தாய்க்கு, ஐந்து வருடகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 03ம் திகதியன்று பிறந்து ஒரு நாள் வயதுடைய குழந்தை ஒன்றினை கொலை செய்த குற்றச்சாட்டில் அச்சிசுவின் தாய், புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஒருநாள் சிசுவை கொன்ற தாய்க்கு கடூழிய சிறை
அந்த தாய்க்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பின்னர் சட்டமா அதிபரினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், குறித்த வழக்கானது கிளிநொச்சி மேல் நீதிமன்றில் மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்புகாக கடந்த வாரம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சிசுவைக் கொலைசெய்த குற்றத்திற்காக ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டதுடன் பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம்
செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது. தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்கவும் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி
- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது
- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை
- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன
- எபோலா அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளது சுகாதார அமைச்சு
மழை நீர் தேங்கிய சாலையில் காண்ட்ராக்டரை உட்கார வைத்து தண்டனை கொடுத்த எம்எல்ஏ video
மழை நீர் தேங்கிய சாலையில் காண்ட்ராக்டரை உட்கார வைத்து தண்டனை கொடுத்த எம்எல்ஏ video
மும்பையின் பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழை நீர் தேங்கிய சாலையில் காண்ட்ராக்டரை உட்கார வைத்து தண்டனை கொடுத்த எம்எல்ஏ
காண்ட்ராக்டர் மீது குப்பையை கொட்டும் காட்சி
மும்பை:
மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி,
பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையின் பல்வேறு இடங்களில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாமல் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், சண்டிவாலி தொகுதியின் சிவ சேனா எம்எல்ஏ திலிப் லண்டே, மழை பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஒரு சாலையில் குப்பைகள் அகற்றப்படாமலும், மழை நீர் வடியாமல் தேங்கி நின்றதையும் கவனித்தார். மழைநீர் வடிகால்களை முறையாக சுத்தம் செய்யாமல் இருந்ததால் அடைப்பு ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து, அப்பகுதியின் துப்புரவு பணிகளுக்கான காண்ட்ராக்டரை வரவழைத்தார் எம்எல்ஏ. முறையாக குப்பைகளை அகற்றாததால் சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதை சுட்டிக் காட்டிய அவர், காண்ட்ராக்டரை கண்டித்ததுடன், தண்ணீர் தேங்கியிருந்த சாலையில் அவரை அமர
வைத்தார். அத்துடன், பணியாளர்களிடம் உடனடியாக குப்பைகளை அள்ளி, காண்ட்ராக்டர் மீது போடும்படி கூறினார். அதன்படி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அள்ளி, காண்ட்ராக்டர் மீது கொட்டினர்.
காண்ட்ராக்டரை சாலையில் அமர வைத்து தண்டனை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காண்ட்ராக்டர் தனது வேலையை ஒழுங்காக செய்யாததால் நான் இவ்வாறு செய்தேன் என எம்எல்ஏ திலிப் லண்டே கூறினார்.
#WATCH | Mumbai: Shiv Sena MLA from Chandivali, Dilip Lande makes a contractor sit on water logged road & asks workers to dump garbage on him after a road was waterlogged due to improper drainage cleaning
— ANI (@ANI) June 13, 2021
He says, "I did this as the contractor didn't do his job properly" (12.6) pic.twitter.com/XjhACTC6PI
தண்டனை கொடு
தண்டனை கொடு
பாதணி இன்றே பணி செய் என்றான்
பாவி அவனொரு மூடன் – கொடும்
பாதகர் நிலையை புரிந்திடா எண்ணி
பாடியே நின்றான் வேடன்……
தன் அருள் ஒன்றே முன் பொருள் என்றே
தவறி வைத்தான் நன்றோ ..?- நீதி
தழுவல் மறந்து தண்டனை எய்தார்
தகுமோ இந்த ஊழி …?
எம்மொழி உரைத்தான் என்றே எண்ணா
எடுத்தே எறிந்தான் பகைமை ….
தன் நெறி கெட்டு தன் மதி விட்டு
தழுவுமோ விரல் அவர் பாதம் …?
செய் நெறி கெட்ட செயல் நிலையாளர்
செந்தணல் ஆகி எரித்திடு – கொடும்
வெண் சமர் ஆடியே வேண்டும் நீதி
வென்றே உலகை ஆண்டிடு …..
தருகிற தண்டம் தர்மம் கூவும்
தட்டடா தட்டு கதவை …
கொடும் தேளாகியே கொட்டடா கொட்டு
கொடும் விலங்குகள் இங்கு சிதற ….!
- வன்னி மைந்தன் -( ஜெகன் )
ஆக்கம் -08-02-2018
பணி புரிந்த இடத்தில பாதணி எறிந்த
குற்றவாளியை காப்பாற்றிய முதலாளிக்கு சமர்ப்பணம் …
வன்னி மைந்தன் கவிதைகள்











