Tag: மீனவர்கள்
மியன்மாரில் சிக்கிய 15 இலங்கை மீனவர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை
மியன்மாரில் சிக்கிய 15 இலங்கை மீனவர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை
மியன்மாரில் சிக்கிய 15 இலங்கை மீனவர்கள் மியன்மார் சிறையில் அடைக்க பட்டனர் ,அவ்வாறு சிறை அடைக்க பட்ட இலங்கை மீனவர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய பட்டுள்ளனர் என இலங்கை தெரிவித்துள்ளது .
தமிழ் சிங்கள புத்தாண்டு தினம் மியான்மாரிலும் கொண்டாட பட்டுள்ளது .
அதன் பொழுதே சித்திரை புத்தான்டு தினத்தை ஒட்டி கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க பட்டு இருந்தது .
அதன் பின்னர் இலங்கையை சேர்ந்த 15மீனவர்களும்மியன்மார் அரசினால் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .
Featured
இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது
இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது
ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் 200 கிலோகிராம் போதைப்பொருளுடன் இரண்டு மீன்பிடிப் படகுகள் இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.
இரண்டு படகுகளிலும் இருந்த 10 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படைப் பேச்சாளர் கயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.
போதைப்பொருடன் கைது செய்யப்பட்டவர்கள் காலித் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றும் கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Featured
22 இந்திய மீனவர்கள் கைது
22 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டது.
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போதே நேற்று இரவு (09) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஊடாக, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கறுப்பு கொடிகளை கட்டி மீனவர்கள் போராட்டம்
கறுப்பு கொடிகளை கட்டி மீனவர்கள் போராட்டம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மீன்பிடி விசைப் படகின் ஓட்டுனருக்கு ஆறு மாத சிறை தண்டனை மற்றும் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தமையை கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மீனவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஞாயிற்றுக்கிழமை (18) காலை கறுப்பு கொடிகளை கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கறுப்பு கொடிகளை கட்டி மீனவர்கள் போராட்டம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மூன்று தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்ற தீர்ப்பளித்ததை கண்டித்து நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக் கணிப்பதுடன்
சனிக்கிழமை (17) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆலோசனை கூட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை
இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை
இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் நீதிமன்றினால் இவ்வாறு விடுவிக்க பட்டுள்ளனர் .
இலங்கை கடல்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்கின்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட இந்தியா மீனவர்களே இவ்விதம் விடுவிக்க பட்டுள்ளனர் .
விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் இலங்கை கடற்படையால் இந்தியா மீனவர்கள் தொடராக இவ்விதம் கைது செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து
கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு
அதிக விலையில் கீரி சம்பா அரிசி
அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்
கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை
இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது
இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது
இந்தியா மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் ,நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்ளையே தாம் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது .
இந்தியா மீனவர்கள் இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி நாள்தோறும் மீன்பிடியில் ஈடு படுவதாகவும் ,இதனால் இலங்கை மீனவர்கள் கடல்தொழில் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக இலங்கை மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .
தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் ,இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது .
இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட ஆறு மீனவர்கள் மற்றும் இரண்டு படகுகள் யாவும் நீதிமன்றில் ஒப்படைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மீனவர்கள் பிடித்த மீன்கள் யாவும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது குறிப்பிட தக்கது .
கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து
கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு
அதிக விலையில் கீரி சம்பா அரிசி
அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்
கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை
காரைநகர் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் கைது
காரைநகர் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் கைது
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் நேற்று(14) மாலை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஆறுபேரை, எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது.
தமிழகத்தின் நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நீரியல் வளத் திணைக்களத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது, நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து
- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு
- அதிக விலையில் கீரி சம்பா அரிசி
- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்
- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை
- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்
- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா
- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்
- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்
இலங்கை மீனவர்கள் ஐவர் கைது
இலங்கை மீனவர்கள் ஐவர் கைது
இராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக
தெரிவித்து இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு படகொன்றையும் கைப்பறியுள்ளனர்.
இந்திய கடலோர காவல்படை இன்று (21) கைது செய்து விசாரணைக்காக தமிழக கடலோர காவல் குழுமம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது
எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 37 கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றும் (28) இன்று அதிகாலையும் (29) அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 பேரும் தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் 23 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 5 இழுவைப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வள திணைக்கள
அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்திய மீனவர்கள் 13 பேர் கைது
இந்திய மீனவர்கள் 13 பேர் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று (14) மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 13 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது 3 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் 13 பேர் கைது
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் குறித்த மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

மீனவர்கள் லொறி வலைகளை பறித்த இராணுவம் தொடரும் இராணுவ அடாவடி
மீனவர்கள் லொறி வலைகளை பறித்த இராணுவம் தொடரும் இராணுவ அடாவடி

மீன்பியில் ஈடுபட்ட மீனவர்கள் வலைகள் ,படகுகள்,லொறி
,மற்றும் மீன்பிடி சாதனங்கள் என்பனவற்றை சிங்கள இராணுவம் பறிமுதல் செய்துள்ளது .
திருகோணமலை கடல் பகுதிதியில் மீன் பிடியில் ஈடு பட்டு கொண்டிருந்த ,மீனவர்கள் சட்டவிரோதமாக இதே பகுதியில் மீன்படித்தனர் என கூறியே ,அந்த மீனவர்களை சிங்கள இராணுவம் கைது செய்துள்ளது .
மீனவர்கள் லொறி வலைகளை பறித்த இராணுவம் தொடரும் இராணுவ அடாவடி
கைதானவர்கள் மீன்படி கருவிகள் ,உடைமைகள் பறி முதல் செய்த இராணுவம் ,அவர்களை நீதிமன்றில் முன்னிலை படுத்தியுள்ளது .
தொடரும் சிங்கள இராணுவ கெடுபிடிகளினால் ,
அப்பாவி மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து
- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு
- அதிக விலையில் கீரி சம்பா அரிசி
- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்
- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை
- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்
- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா
- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்
- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்
19 இந்திய மீனவர்கள் கைது
19 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து மீனவர்கள் உட்பட அவர்களது 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்கள் இன்றையதினம்(14) நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது,
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைதுby நிருபர் காவலன்
- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்துby நிருபர் காவலன்
- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வுby நிருபர் காவலன்
- அதிக விலையில் கீரி சம்பா அரிசிby நிருபர் காவலன்
- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்by நிருபர் காவலன்
இந்தியா மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு
இந்தியா மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு
இலங்கை கடல் பரப்புக்குள் அத்து மீறி மீன்பிடியில் இந்திய மீனவர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அனுமதி வழங்கியுள்ளார் .
இவ்வாறு மீன்பிடி துறை அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .
கொலை வழக்கில் இந்தியா அரசால் தேட படும் டக்கிளஸ் இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
Featured
தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை கடலில் வைத்து கைது
தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை கடலில் வைத்து கைது
இலங்கை காரைநகர் கடல் பகுதியில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்கின்ற குற்ற சாட்டில், தமிழக மீனவர்கள் 23 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் .
சிங்கள கடற்படையினரால் கைது செய்ய பட்ட இவர்கள் ,காவல்துறையிடம் ஒப்படைக்க பட்ட நிலையில் ,தற்போது நீதிமன்றில் பாரப் படுத்த பட்டுள்ளனர் .
தமிழீழ விடுதலி புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் ,தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.
Featured
இந்தியா மீனவர்கள் 9 பேர் இலங்கை கடல் படையால் கைது
இந்தியா மீனவர்கள் 9 பேர் இலங்கை கடல் படையால் கைது
இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடியில் ஈடு பட்டனர் என்ற குற்ற சாட்டில் இந்திய மீனவர்கள் ஒன்பது பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப் பட்டுள்ளனர்.
கைதான இந்திய மீனவர்கள் அனைவரும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பரப்படுத்த பட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இந்திய
மீனவர்கள் கைது தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
இலங்கையில் பொதுவில் முதல் காலி வரையிலான கடல் பகுதியில் புயல் வீசுவதால் மீனவர் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.
இந்த புயலானாது மணிக்கு எழுபது கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும், இதனால் கடலில் கொந்தளிப்பு காணப்படலாம் என தெரிவிக்க படுகிறது.
கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்ட பட்டுள்ளது.
முல்லையில் மீனவர்கள் போராட்டம் – இராணுவம் குவிப்பு
மண்ணெண்ணெய் இல்லாமையால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மண்ணெண்ணெய்யை பெற்றுத் தரக் கோரி, முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள், இன்று (26) கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இருந்து காலை 10.30க்கு பேரணியை ஆரம்பித்து, முல்லைத்தீவு மாவட்டக் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள அலுவலகம் உடாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் வரை அவர்கள் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலகத்துக்க்கு முன்னால் கடற்தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது மாவட்டச் செயலாளர் க.விமலநாதன், போராட்டக்காரர்களை உள்ளே அழைத்து, அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஏற்றுக்கொண்டார்.
“சாலை தொடக்கம் கொக்குளாய் முகத்துவாரம் வரையான எமது மீனவர்கள் மற்றும் தென்னிலைங்கையில் இருந்து வருகை தந்து தொழில் புரியும் மீனவர்களுக்கும்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, நாயாறு போன்ற எரிபொருள் நிலையங்கள் ஊடாகவே எரிபொருள் விநியோகம் நடைபெற்று வருகின்றது.
“இருந்த போதிலும் இவ் எரிபொருள் நிலையங்களுக்கு வரும் எரிபொருளானது எமது மாவட்ட மீனவர்களுக்கு போதுமானதாகவில்லை. கடந்த 08.05.2022 தொடக்கம் குறித்த
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மண்ணெண்ணெய் வரவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. “அத்துடன், விலையேற்றம் காரணமாக மக்கள் பட்டிணிச்சாவை எதிர்நோக்கியுள்ளனர்.
“எனவே, தயவுசெய்து எமது மீனவ மக்களின் இந்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் தொழில் புரிவதற்கான எரிபொருளை பெற்றுத்தருமாறு, மீனவர்கள்
சார்பாகவும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்பு சார்பாகவும் கேட்டுக்கொள்கின்றோம்” என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இதன்போது கடற்தொழிலாளர்களிடம் கருத்துத் தொரிவித்த மாவட்டச் செயலாளர் க.விமலநாதன், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற
கூட்டத்தின் போது பொதுவாக எல்லா மாவட்டத்திலும் மண்ணெண்ணெய்த் தட்டுப்பாடு உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது. மீனவர்கள் மாத்திரமல்ல விவசாய உற்பத்தி வீதமும் குறைந்துள்ளது.
“எரிபொருள் விநியோகத்துக்கு பொறுப்பான பிராந்திய முகாமையாளருடன் கதைத்துள்ளோம். இன்று இரண்டு லோட் மண்ணெண்ணெய் அனுப்புவதாக உறுதிமொழி தந்துள்ளார்கள்.
“மாவட்ட மீனவர்களின் கோரிக்கைறை கடற்றொழில் அமைச்சுக்கும் எரி சத்தி அமைச்சுக்கும் நாங்கள் அனுப்பவுள்ளோம்” என்றார்.
குறித்த போராட்டத்தை மீனவர்கள் ஆரம்பித்த போது, சம்பவ இடத்துக்கு வருகைதந்த இராணுவத்தினர் மண்ணெண்ணெய் பெற்றுத்தருவதாக மீனவர்களுடன்
கலந்துரையாடி போராட்டத்தை நிறுத்த முயற்சித்திருந்தனர். இருப்பினும்,
மீனவர்கள் அதற்கு உடன்படாமல் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


காணமல் போன மீனவர்கள் – சடலமாக மீட்பு
காணமல் போன மீனவர்கள் – சடலமாக மீட்பு
இலங்கை வாகரை பகுதி மீனவர்கள் காணாமல் போயினர்
இவ்விதம் காணாமல் போனவர்கள் சடலமாக மீட்க பட்டுள்ளனர்
தொடராக இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை மக்கள் மத்தியில் பீதியை
கிளப்பியுள்ளது
தமிழக மீனவர்கள் 23 பேர் யாழ் சிறையில் அடைப்பு
தமிழக மீனவர்கள் 23 பேர் யாழ் சிறையில் அடைப்பு
இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் சிங்கள கடல்
படையால் கைது செய்ய பட்ட தமிழக மீனவர்கள் 23 பேர் யாழ்ப்பாண சிறையில் அடைக்க
பட்டுள்ளனர்
நீதி விசாரணைகள் முடிவில் இவர்கள் விடுதலை செய்ய படுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது
நெடுந்தீவு கடலில் இரு மீனவர்கள் மாயம் – கண்ணீரில் உறவுகள்
நெடுந்தீவு கடலில் இரு மீனவர்கள் மாயம் – கண்ணீரில் உறவுகள்
இலங்கை நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி சென்ற இரு
மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்
இவ்வாறு காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளது
சமீப நாட்களாக தமிழர் பகுதிகளில் பலர் மர்மமாக படுகொலை செய்யப்பட்டு
வரும் நிலையில் இந்த காணாமல் போதலும் இடம்பெற்றுள்ளது இங்கே சுட்டி காட்ட தக்கது




























