யானை தாக்கி கடற்படை அதிகாரி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

யானை தாக்கி கடற்படை அதிகாரி மரணம்

யானை தாக்கி கடற்படை அதிகாரி மரணம்


யானை தாக்கி கடற்படை அதிகாரி மரணம் வவுனியாவில் கடற்படை லெப்டினன்ட் தர அதிகாரி ஒருவர் காட்டு யானை தாக்குதலால் மரணமடைந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பணி நிமித்தமாக கொழும்புக்கு சென்று விட்டு பேருந்தில் முகாமிற்கு திரும்பிய அதிகாரி வாகனத்தில் இருந்து இறங்கி முகாமிற்கு சென்று

கொண்டிருந்த போது நேற்று இரவு (29) யானை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூனாவ கடற்படை முகாமில் கடமையாற்றிய மத்தலான, நிட்டம்புவவில் வசிக்கும் கடற்படை வீரரான லெப்டினன்ட் தர அதிகாரியே யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

யானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அவரை, கடற்படையினர் மற்றும் உள்ளூர் மக்களும் இணைந்து வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு

சென்றனர். பலத்த காயமடைந்த அதிகாரி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனை வவுனியா பொது

வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளது. பூனாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியைகளால் மோசமாக தாக்கப்பட்ட மாணவி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

ஆசிரியைகளால் மோசமாக தாக்கப்பட்ட மாணவி மரணம்

ஆசிரியைகளால் மோசமாக தாக்கப்பட்ட மாணவி மரணம்

ஆசிரியைகளால் மோசமாக தாக்கப்பட்ட மாணவி மரணம் ,வென்னப்புவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 2 ஆசிரியைகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவி ஒருவர் மூன்று மாதங்களுக்கு மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இதன்படி, சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட 2 ஆசிரியைகளும் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்

முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வென்னப்புவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்றுவந்த குறித்த மாணவி, வகுப்பறையை விட்டு வேறொரு மாணவியுடன் வெளியேறியமை தொடர்பில்,


வகுப்பு ஆசிரியையுடன் இணைந்து மற்றுமொரு ஆசிரியையினால் தாக்கப்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னர், சந்தேக நபர்களான ஆசிரியைகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுக் கடந்த செப்டம்பர் 13 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து, இரண்டு ஆசிரியைகளும் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

விபத்தில் மரணம் மரண சடங்குக்கு வந்தவர்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் மரணம் மரண சடங்குக்கு வந்தவர்

விபத்தில் மரணம் மரண சடங்குக்கு வந்தவர்

விபத்தில் மரணம் மரண சடங்குக்கு வந்தவர் ,யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரண சடங்குக்கு வந்த மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியை சேர்ந்த குகதாஸ் விஜிதா (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உரும்பிராய் பகுதியில் நடைபெற்ற மரண சடங்குக்கு கடந்த 09 ஆம் திகதி வருகை தந்த குறித்த நபர் மறுநாள் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் போது ,

கொக்காவில் பகுதியில் வைத்து பன்றி ஒன்று வீதியின் குறுக்கே ஓடியதில் , அவர் பயணித்த வாகனம் பன்றியுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்தவரை மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் .

போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் புதன்கிழமை (13) அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வாக்களிப்பு நிலையத்தில் பொலிஸ் அதிகாரி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

வாக்களிப்பு நிலையத்தில் பொலிஸ் அதிகாரி மரணம்

வாக்களிப்பு நிலையத்தில் பொலிஸ் அதிகாரி மரணம்

வாக்களிப்பு நிலையத்தில் பொலிஸ் அதிகாரி மரணம் ,வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் திடீர் சுகவீனம் காரணமாக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பிற்பகல் உயிரிழந்ததாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்தனர்.

பொலன்னறுவை புலஸ்திபுர விஜிதா ஆரம்ப பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் சார்ஜன்ட் 53419, எச்.எம். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் புலஸ்திபுர பொலிஸ் அதிகாரி ஒருவர் எமது விசாரணையின் போது ரத்னபால பொலிஸ் உத்தியோகத்தர் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த திடீர் மரணம் தொடர்பில் பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.நிஷான் டி சில்வாவின் ஆலோசனையின் பேரில் புலஸ்திபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

வாகன விபத்தில் இருவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் இருவர் மரணம்

வாகன விபத்தில் இருவர் மரணம்

வாகன விபத்தில் இருவர் மரணம் ,வவுனியா, ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய வீரசிங்கம் ஜனிதரன் மற்றும் ஓமந்தை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சண்முகராஜா யோகராசா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் மற்றும் துவிச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து பிரதேசவாசிகளால் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

சிந்துயா கணவர் மரணம் நடந்தது என்ன
Posted in இலங்கை செய்திகள்

சிந்துயா கணவர் மரணம் நடந்தது என்ன

சிந்துயா கணவர் மரணம் நடந்தது என்ன ,மன்னர் மாவட்டட மருத்துவமனையில் ,மருத்துவ தவறின் காரணமாக படுகொலை செய்யப்பட்ட சிந்துயா கணவர் தற்கொலை செய்துள்ளார் .

இவர் மருத்துவ மாபியாக்களினால் திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் மன்றம் பேசிக்கொள்கிறது .

மாமி ,மற்றும் சிசுவை விட்டு பிரித்து சென்ற மருத்துவ மாபியா கும்பல் ,இவரை மிரட்டி அச்சுறுத்தி அதன் பின்னர் படுகொலை செய்துள்ளதாவே நிகழ்வுகளை வைத்து நோக்க முடிகிறது என சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

காணொளியில் மேலதிக முழுமையா விடயங்கள்

மன்னார் யுவதி மரணம் வைத்தியர் பணியிடை நீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

மன்னார் யுவதி மரணம் வைத்தியர் பணியிடை நீக்கம்

மன்னார் யுவதி மரணம் வைத்தியர் பணியிடை நீக்கம்

மன்னார் யுவதி மரணம் வைத்தியர் பணியிடை நீக்கம் ,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மரியராஜ் சிந்துஜா என்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதம் ஒன்று மத்திய சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரி பெண், அதிக குருதி போக்கு காரணமாக கடந்த மாதம் 28ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

எவ்வாறாயினும் அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியர்கள் அவருக்கு உரிய முறையில் சிகிச்சையளிக்கவில்லை எனவும் வைத்தியர்களின் அசமந்த போக்கின் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய முன்னதாக, இரண்டு தாதியர்களுக்கும் இரண்டு குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களுமாக நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவருக்கும் பணியிடை நீக்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

எனினும் இதுவரையில் குறித்த கடிதம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையைச் சென்றடையவில்லையென வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் இன்றைய தினமும் மத்திய சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

அம்பாறையில் துப்பாக்கிச்சூடு நால்வர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

அம்பாறையில் துப்பாக்கிச்சூடு நால்வர் மரணம்

அம்பாறையில் துப்பாக்கிச்சூடு நால்வர் மரணம்

அம்பாறையில் துப்பாக்கிச்சூடு நால்வர் மரணம் ,அம்பறையில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட நால்வர் பலியாகி உள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றனர் .

அம்பாறை பகுதியில் கடமையாற்றம் காவல்துறை சிப்பாயுடைய துப்பாக்கி ஒன்ரின் ஊடாக சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதன் பொழுதே இரண்டு காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்ட நால்வர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றும் ஒரு காவல்துறை சிப்பாயினுடைய மனைவி மற்றும் மாமியார் ஆகியோர் சுட்ட படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினர் இடையில் ஏற்பட்ட முரண்பாடு மற்றும் வாய் தகராறு காரணமாகவே இந்த சுட்டுத் தாக்குதல் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் போலீஸ் அதிக காவல்துறை சிப்பாய் தன்னைத்தானே தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது போலீசார் ஆரம்பித்து இருக்கின்றனர் .

தேர்தல் நெருங்கி வருகின்ற காலப்பகுதியில் இவ்வாறான துப்பாக்கி சூடு அதிகரித்து காணப்படுவது இவை திட்டமிடப்பட்ட படுகொலையா என்கின்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

கடந்த வருடமும் தேர்தலில் இடம் பெறுவதற்கு முன்னதாக சில நாட்களுக்கு முன்னதாக முன்னாள் போராளிகளை வெட்டி படுகொலை செய்து விட்டு, பின்னர் அதனை நடத்தியது அவர்கள் என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

விபத்தில் ஒரேநாளில் நால்வர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் ஒரேநாளில் நால்வர் மரணம்

விபத்தில் ஒரேநாளில் நால்வர் மரணம்

விபத்தில் ஒரேநாளில் நால்வர் மரணம் ,இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பலியானவர்களில் பல்வேறுவது உள்ளடங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் அதிகரித்துவரும் வீதி விபத்துகளினால் மக்கள் சொல்லென்னா இன்னல்களை சந்தித்து வருகின்றனர் .

மோசமான விபத்துகளினால் நான்கிற்கு மேற்பட்ட மக்கள் நாள்தோறும் பலியாகி வருகின்ற நிலையிலும் ,பல டசினுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி விபத்து

இலங்கையில் தற்பொழுது இந்த வீதி விபத்துக்களை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்கின்ற ,புதிய விழிப்புணர்வு நடவடிக்கையில் இலங்கை காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு இருந்தும் இந்த வீதி விபத்துகளை தடுக்க முடியாது இலங்கை காவல்துறை சிக்கி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றனர்.

கடந்த 24 மணித்தியால இடைவேளையில் பேருந்து ஒன்று கவிழ்ந்து 51 பேர் காயம் அடைந்திருந்த நிலையில், தற்பொழுது இன்று 4 பேர் பலியாகி உள்ளதான செய்திகள் வெளியாகியுள்ளமை பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் தொடரும் இவ்விதமான வீதி விபத்துகளுக்கு காரணம் என்ன யாரால் ஏற்படுகிறது ,ஏன் ஏற்படுவது ,எதனால் இவ்வாறு ஏற்படுகிறது என்பது தொடர்பான விபரங்கள் எதனையும் தெரிவிக்க மறுத்துவரும் இலங்கை ,

காவல்துறையினர் இந்த விபத்து க்களை தடுக்கும் பல நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதற்கான விளக்கத்தை அளித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷில் பிடித்த போராட்டம் 19பேர் மரணம் நூறு பேர் கைது
Posted in உலக செய்திகள்

பங்களாதேஷில் பிடித்த போராட்டம் 19பேர் மரணம் நூறு பேர் கைது

பங்களாதேஷில் பிடித்த போராட்டம் 19பேர் மரணம் நூறு பேர் கைது

பங்களாதேஷில் பிடித்த போராட்டம் 19பேர் மரணம் நூறு பேர் கைது ,பங்களாதேஷில் நாலு மரசுக்கு எதிராக பல்கலைக்கழகம் மாணவர்கள் பாபர் போராட்டம் ஒன்றை நடத்திய இந்த போராட்டத்தில்

16 பேர் பலியாகி நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் அரசு மேற்கொண்ட புதிய சட்டமன்றத்தின் அடிப்படையில் சுதந்திரத்துக்காக போராடிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு 30% நிலையிலே அதனை எதிர்த்து இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

நாட்டின் விடுதலைக்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு 30வித இட ஒதுக்கீட்டை ஒதுக்கியதற்கு எதிராக கருத்து தெரிவித்த இந்த மாணவர்கள் தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது .

சுதந்திரமாக வாழ்வதற்காக

தாங்கள் சுதந்திரமாக வாழ்வதற்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்து தம்மை அர்ப்பணித்து நாட்டுக்காக விடுதலை வாங்கி தந்தவர்களின் குடும்பங்களுக்கு முன்னுதாரணமாக,

வேலைவாய்ப்பில் முதலிடம் வழங்கியதுக்காகவே இந்த போராட்டத்தை இவர்கள் நடத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையற்கும் இடையில் இடம்பெற்ற கடும் போர்க்களமாக காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி நீர்களை பீச்சி அடித்துள்ளனர் .

இதனாலேயே பேர் பலியாகியும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சை வெற்றி பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து போராட்டம் இடம்பெற்று வருவதால் அவர்களது ஆட்சிக்கு கவிழ்க்க பட கூடுமோ என நிலை காணப்படுகின்றது.

பேருந்து கவிழ்ந்து 25பேர் மரணம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பேருந்து கவிழ்ந்து 25பேர் மரணம்

பேருந்து கவிழ்ந்து 25பேர் மரணம்

பேருந்து கவிழ்ந்து 25பேர் மரணம் ,என நேரு நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .பேருவில் இடம் பெற்ற இந்த பேருந்து விபத்தின் பொழுது 22 பயணிகள் பலியாகியும் மேலும் பல காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

42 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த இந்த பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.

இதன் பொழுதே 27 பயணிகள் பலியாகி ஏனையவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் .

மருத்துவமனையில் அது தீவிர சிகிச்சை பிரிவில்

அவ்வாறு மீட்கப்பட்டவர்கள் தற்பொழுது மருத்துவமனையில் அது தீவிர சிகிச்சை பிரிவில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து தலைவராக கவர்ந்ததில் அதில் பயணித்த 29 பேர் பலியாகியும் ஏனையவர்கள் காயமடைந்துள்ள நிலையில், அதில் பலர் அவயவங்கள் இழந்த நிலையில் செயல்படாத நிலையிலும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதியின் அலட்சிய காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பேரூர் நாட்டினுடைய போலீசார் தெரிவித்து வருகின்றனர் .

மிகப் பெரும் கொடிய பேருந்து விபத்தாக இந்த பேருந்து விபத்து காணப்படுவதாக அந்த நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எவ்வாறு இந்த விபத்து இடம்பெற்றது என்பது தொடர்பில்,

பேருந்து எவ்வாறு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது என்பது தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

முறையான விசாரணைகள் இடம் பெற்று பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பாகவும் பேருந்து பயணிகளுக்கு ஆன பாதுகாப்பும் அவர்களுக்குரிய நஷ்ட ஈடுகளை வழங்குவது தொடர்பாக ,அரசு ஆராய்ந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.ethiri.com/?s=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து விபத்தில் ஒருவர் மரணம்

பேரூந்து விபத்தில் ஒருவர் மரணம்

பேரூந்து விபத்தில் ஒருவர் மரணம் , கொழும்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கொண்டன .

இந்த மோதல் சம்பவத்தின் பொழுதுலொறி மற்றும் பேருந்து என்பன பலத்தை சேதமடைந்து காணப்படுவதுடன் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாகவும் 15க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற இந்த பேருந்து விபத்துகளினால் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு அச்ச நிலை காணப்படுகின்றது .

அந்த வகையில் இன்று சிலாபம் கொழும்பு பிராதன வீதியில் பேருந்து லொறி என்பன நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியாகி 15 பேர் காயம் அடைந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெருமது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெறுகின்ற இவ்வாறான பேருந்து லொறி விபத்துக்கள் மற்றும் வாகன விபத்துகளினால் 32க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்தது வருவதான புதிய புள்ளி விவரங்கள் வெளியாகி இருந்தன.

அதன் தொடர்ச்சியாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது சாரதிகளின் அலட்சியின்மையும் போட்டி போட்டு அவர்கள் வாகனங்களை செலுத்தி செல்வதும் இந்த விபத்துக்கான காரணமாக உள்ளது .

அதனால் பேருந்து சாரதிகள் யாவரும் பயிற்றுவிக்கப்பட்ட நன்கு அனுபவம் வாய்ந்த வருவதாக தெரிவு செய்யப்பட்டு பேருந்துகளை செலுத்த அனுமதி

அளிப்பதன் ஊடாகவே நமது நாட்டில் இவ்வாறான பேருந்து விபத்துக்களை குறைத்துக் கொள்ள முடியும் என்கின்ற கவலையும் கரிசனையும் மக்கள் வெளியிட்டு வருகின்றனர் .

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்து செல்வதால் பேருந்துகள் மிகவும் அபாயகரமான ஒன்றாக மாற்றம் பெற்று வருகின்றது .

எனவே சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் அரசியல்வாதிகள் இது சம்பந்தமான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது .

அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கையில் பேருந்துகளில் நாம் சொன்ன படி அபாயகரமான ஒன்றாக மாற்றம் பெறுவது யாராலும் தடுக்க முடியாது.

134 பேர் சமயக்கூட்டத்தில் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

134 பேர் சமயக்கூட்டத்தில் மரணம்

134 பேர் சமயக்கூட்டத்தில் மரணம்

134 பேர் சமயக்கூட்டத்தில் மரணம் , சாமியாரை தேடும் போலீசார் இந்தியா உத்தரப்பிரதேச பகுதியில் இடம்பெற்ற சமய வழிபாட்டு பிரச்சார நிகழ்வு ஒன்று கலந்து கொண்ட மக்களில் 134 பேர் பலியாக இருக்கின்றனர் .

நிகழ்வு பிரச்சாரம் முடிந்து சாமியார் வெளியேறும் பொழுது அவரது காலில் விழுந்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள மக்கள் முண்டியடித்துள்ளனர் .

அப்பொழுது அங்கிருந்த கட்டுக்கடங்காத கூட்டத்தினர் ஒருவரை ஒருவரை தள்ளி அவரைச் சென்று பாதங்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற முற்பட்ட பொழுது அவர்களை ஏரி மிதித்து மக்கள் சென்றனர்.

இதனால் கீழே விழுந்தவர்கள் மூச்சுதிணறி இறந்துள்ளனர் .

இப்படி 134 பேரை அதை அங்கு சென்ற குடியிருந்த மக்கள் படுகொலை செய்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதை அடுத்தும் அவர்களை கட்டுப்படுத்த 48 போலீசார் மட்டுமே கடமையில் ஈடுபட்டதாகவும் .

கட்டுக்கடங்காத கூடிய இந்த பக்த சாமியினுடைய வேண்டுதலை பெற இருந்த மக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பம் கூச்சல் காரணமாகவே இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது 134 வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இறப்பு எண்ணிக்கை மேலும் வரும் மணித்தியாலங்கள் அல்லது நாட்டில் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது .

சாமியார் தற்பொழுது தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

உரிய முறையில் போலீசாருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தால் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டம் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள பொழுதும் 48 போலீசார் அந்த காவல்க்கு ஈடுபட்டிருந்த பொழுதும் மக்கள் கூட்டம் அதிகமாக வந்தது எடுத்து மேலதிக போலீஸ்காரை அவர்கள் அழைத்திருக்க வேண்டும் .

ஆனால் போலீஸ்காரர்களும் அந்த வடிவத்தை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் காணப்படுகிறது .

இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது ,அந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலும் ,48 போலீசார் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொழுதும் அதிகாரிகளான பலரங்கு கடமையில் இருந்த பொழுதும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்ற பொழுது .

ஏன் மேலும் அதிகமான போலீசாரை அந்த காவல்துறை அதிகாரிகள் அங்கு பணியில் இருந்தவர்கள் அழைக்கவில்லை என்கின்ற குற்றச்சாட்டு இங்கு பிரதானமாக வைக்கப்படுகிறது .

மக்கள் கூட்டம் அதிகமாகப்படுவதாக வழங்குவது இயல்பான ஒன்று அதை ஏன் இந்த போலீசார் கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இப்பொழுது முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் விபத்தில் 32 பேர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் நாள்தோறும் விபத்தில் 32 பேர் மரணம்

இலங்கையில் நாள்தோறும் விபத்தில் 32 பேர் மரணம்

இலங்கையில் நாள்தோறும் விபத்தில் 32 பேர் மரணம் ,இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துகளில் 32 பேர் பலியாகி வருவதான புதிய தகவல்கள் திடுக்கிட வைத்துள்ளது .

புதிய சுகாதார அமைச்சினால் ல் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் அடுத்து இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துக்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என்கின்ற சம்பவங்களில் ஊடாக 32 பேர் பலியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பல்வேறுபட்ட காயங்களுக்கு உள்ளாகும் இவர்கள் ,இவ்வாறு பலியாகி வருவதாக, அந்த சுகாதார அமைச்சின் புதிய குறிப்போடு தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் பன்னிரண்டாயிரம் மக்கள் இவ்வாறு இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒரு மில்லியன் மக்கள் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான காயங்களுக்கு உள்ளாகி வருபவர்கள் வீதி விபத்துக்கள் வெட்டு காயங்கள் மற்றும் வீடுகளில் ஏற்படுகின்ற காயங்கள் என பல்வேறுபட்ட காயங்களுக்கு உள்ளான நபர்களை இவ்வாறு சிகிச்சை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வருடம் ஒன்றுக்கு ஒரு மில்லியன் கிட்டத்தட்ட மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்து நிலையில் காணப்படுகிறது.

பல்வேறுபட்ட காயங்களுக்கு உள்ளாகி அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனற்று பலியாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் இடம்பெறுகின்ற வீதி விபத்துக்கள் தொடர்பாக மரணமாகி வருகின்றனர் .

அந்த காயமடைந்தவர்களும் இந்த புள்ளிவிவரத்துக்கு உள்ளடடக்கப்படுகின்றனர் .

ஒரு வருடத்தில் 12 ஆயிரம் மக்கள் பலியாகி வருகின்றார்கள்.

இந்த தகவல் தற்பொழுது இலங்கை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது .

மக்களுடைய அலட்சியின்மை மற்றும் அறியாமை காரணமாகவே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகி வருவதாக தகவலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது .

இலங்கையில் 12 ஆயிரம் மக்கள் பலியாகி வருகிறார்கள், மற்றும் 10 லட்சம் பேர் வருடம் ஒன்றுக்கு காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்கின்ற மேலதிக தகவல் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது இங்கே குறிப்பிட தக்கது .

கடலில் மிதந்த பானம் குடித்த மீனவர்கள் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

கடலில் மிதந்த பானம் குடித்த மீனவர்கள் மரணம்

கடலில் மிதந்த பானம் குடித்த மீனவர்கள் மரணம்

கடலில் மிதந்த பானம் குடித்த மீனவர்கள் மரணம், நடுக்கடலில் மீன்பிடிக்க சென்று கொண்டிருந்த இலங்கை மீனவ படகு ஒன்று கடலில் மிதந்து வந்த பாணத்தை எடுத்து அதனை அருந்தியவர்கள் பலியாகியுள்ளனர் .

குடிபோதையாக நினைத்து அதனை குடித்த அடுத்த நொடியில் அவர்கள் சுருண்டு விழுந்தனர் என்பது தெரிய வந்துள்ளது.

இது நஞ்சு என தெரியாது அதனை அருந்திய , அவர்கள் சம்பவ இடத்தில் பலியாகி ,சிலர் ஆபத்த நிலையில் காணப்பட்ட நிலையில், அவசர உதவி கோரப்பட்டு அருகில் உள்ள சிங்கப்பூர் வணிக கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுக்கடலில் பலியான மீனவர்கள்

அவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவார்கள் மிக பாரதூரமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் .

ஆனால் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை நான்காக அறிவித்துள்ளதாக காணப்படுகின்றது .

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் தொடர்புகள் ஏதுமின்றி எடுத்துச் சென்ற உணவுகளை மட்டுப்படுத்த பட்ட முறையான முறையில் பயன்படுத்தி அதனை உண்டு வருகின்றார்கள்.

ஆனால் இது மதுவாக இருக்கலாம் என அருந்ததியின் விளைவாகவே தற்பொழுது இந்த நால்வரும் பரிதாபகரமாக பலியாகி உள்ளனர் , மேலும் சில உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் .

கண்ணீரில் தவிக்கும் மீனவ குடும்பம்

அந்த நச்சு பொருள் எவ்வாறு கடலில் வந்தது என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விசேஷமிகள் இவ்வாறு நச்சுக்களை கடலில் வீசி சென்று இருக்க கூடும் என்கின்ற தகவல் வெளியாகியிருக்கின்றது .

எதிரிகளிடம் சிக்காாமல் இருப்பதற்காக ,இந்த போத்தல்களில் விஷங்களை அருந்தி தம்மை மாய்த்துக் கொள்வதற்காக இவ்வாறு எடுத்துச் சென்று கூடும் எனபடுகிறது .

கரையை வந்தவுடன் அதனை கடலில் வீசி எறிந்து விட்டு, தப்பி சென்று கூடும் என்கின்ற தகவலும் ,வெளியாகி உள்ளது .

மேற்படி சம்பவம் பெரும் அந்த மீனவர்கள் குடும்பம் மற்றும் ,அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பையம் ,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆசை செய்த ,அறியாமையின் காரணமாக அப்பாவி உயிர்கள் நால்வர் பலியாகியுள்ள சம்பவம் வேதனை அளிக்கிறது .

கடலில் மோதல் ஒருவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

கடலில் மோதல் ஒருவர் மரணம்

கடலில் மோதல் ஒருவர் மரணம்

நடுக் கடலில் மோதல் ஒருவர் மரணம் ,இலங்கை மீனவர்கள் ஆழக்கடல் சென்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது நடுக்கடலில் மீன்பிடி படகு பயணித்துக் கொண்டிருந்த பொழுது அதில் பயணித்த ஏனைய சக ஆறு மீனவர்களுக்கிடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த சண்டை காரணமாக ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீன்பிடிவு படகு

கரைக்கு மீன்பிடிவு படகு எடுத்துவரப்பட்டுள்ள நிலையில் தற்போது போலீசார் தமது விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவர்களுக்கு இடம்பெற்ற சர்ச்சை காரணமாகவும் மோதல் காரணமாகவும் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தனிப்பட்ட முரண்பாடு காரணமாக அல்லது அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆழ்கடலுக்கு செல்கின்ற மீனவர்கள் மிகப்பெரும் துயரங்களையும் இன்னல்களையும் சந்தித்து மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர் .

அவ்வாறன நிலையில் உடல் சோர்வூட்ட காரணமாக அங்கு பணிபுரிந்துள்ளக்கு இடையில் பெரும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் எனவும் அதன் காரணமாகவே இந்த வாக்குவாதங்கள் மூர்த்தி இந்த படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிய வருகின்றது .

இலங்கை காவல்துறையில் தற்பொழுது விசாரணகளை ஆரம்பித்துள்ளதால் இந்த விடயம் தொடர்பான மேலதிக விவரங்கள் தெரியவரும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம்

இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம்

இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம் ,இஸ்ரேல் தளபதிகள் மரணம்.

ரபா எல்லையின் ஊடாக படை எடுப்பை மேற்கொண்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அபகரிப்பு படைகளை இலக்கு வைத்து பலஸ்தீனம் காசா கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போர்படைகள் திடீர் தாக்குதலை நடத்தியது .

இதன் பொழுது 8 தளபதிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் புஅறிவித்துள்ளது.

பலியான எட்டு தளபதிகள்

அதன் அடிப்படையில் பலியான எட்டு தளபதிகள் விபரங்களை அவர்கள் வெளியீடு இருக்கின்றனர்.

அவ்வாறு வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் ஐந்து சார்யன் அதிகாரிகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு அதிகாரிகள் தரத்திலானவர்களும் காயமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு அதிகாரிகள் தரத்திலான அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை எகிப்துக்கள் விரட்டியடிக்கும் நடவடிக்கையின் ஒப்பரேஷன் தாக்குதலாகவே இது காணப்படும் நடவடிக்கை தற்போது பிசுபிசுப்பு காணப்படுவதை காணப்படுகின்றது.

பாரிய படை நடவடிக்கை

கனரக வாகனங்கள் வண்டிகள் ஊடாக பாரிய படை நடவடிக்கை மேற்கொண்டபோது தாங்கிகளை வழி மறுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

இதன் பொழுதே டாங்கிகள் பற்றி எரிந்து வெடித்து சிதறி இருக்கின்றன.

கட்டளை தளபதிகள் பலியாகி இருக்கின்றனர் அதேபோல தளபதிகள் காயமடைந்தும் இருக்கின்ற தொடராக பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர்.

ஆயுத ஆளணி இழப்புகள் தொடராக ஏற்பட்ட வருகின்றது இவ்வாறு இறந்தவர்களில் அனைவரும் பத்தொன்பதில் இருந்து 49 வயதுக்கு உள்ளவர்களாக காணப்படுகின்றனர் .

ஐந்து சார்யன் தரத்திலான அதிகாரிகளில் 19 முதல் 21 வயதானவர்கள் அதிகம் காணப்படுகின்றனர் .

காப்பதன் தர அதிகாரிகள் மட்டும் 49 வயது வரை அவர்கள் காணப்படுகின்றார்கள் .

ஆக இளம் பிஞ்சுகளை இந்த போர்க்களத்தில் பலியாகி வருவதை இஸ்ரேலிய ராணுவம் தொடராக வெளியிட்டு வரும் செய்தி குறிப்பிடல் காண முடிகின்றது .

இந்த போர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இருபக்க இழப்புக்களும் தவிர்க்கப்படும் என, சமாதானத்தை விரும்பும் மக்களுடைய கருத்துக்கள் இவ்வாறு விழுந்து வெடிக்கின்றன .

சுவர் இடிந்து விழுந்து சிசுமரணம்
Posted in இலங்கை செய்திகள்

சுவர் இடிந்து விழுந்து சிசுமரணம்

சுவர் இடிந்து விழுந்து சிசுமரணம்

சுவர் இடிந்து விழுந்து சிசுமரணம் , சுவரொன்று இடிந்து விழுந்ததில் இரண்டு மாத குழந்தை என்று மரணமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமந்தை சின்ன குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வரவேற்பறை, திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு மாத சிசு ஒன்று பலியாகி உள்ளதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிக மழை காரணமாக சுவர்கள் விலகி விரிசல் காணப்பட்ட நிலையில், அந்த சுவர்கள் குழந்தையின் மேல் இடிந்து விழுந்ததில் இந்த குழந்தை பலியாகி உள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .

சின்னகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம்

சின்னகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம், அந்த கிராம மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

தமது சிசுவை பறிகொடுத்து குடும்பத்தினர் கண்ணீரில் மூழ்கி வருகின்றனர் .

மக்களுக்கு பல் வேறு பட்ட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்ற பொழுதும், மக்கள் அதை உரிய முறையில் செவி சாய்க்கவில்லையோ என்கிற ,கேள்வியை இந்த சுவர் இடிந்த விழுந்து சிசு மரணமான சம்பவத்தின் ஊடாக தெரிய வருகின்றது.

பாக்குநீரிணையை கடக்கமுயன்ற முதியவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

பாக்குநீரிணையை கடக்கமுயன்ற முதியவர் மரணம்

பாக்குநீரிணையை கடக்கமுயன்ற முதியவர் மரணம்

இலங்கையில் தலைமன்னார் முதல் இந்தியாவில் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீட்டர் தூரமுடைய பாக்குநீரிணையை கடக்கமுயன்ற முதியவர் மரணம் .

பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடப்பதற்கு இந்திய, இலங்கை இருநாட்டு அரசாங்கத்திடம் உரிய அனுமதி பெற்று நேற்று திங்கட்கிழமை (22) 31 பேர் கொண்ட குழு ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் புறப்பட்டு தலைமன்னார் வந்தடைந்தனர்.

இங்கிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை சுமார் 12.10 மணி அளவில் கடலில் குதித்து நீந்த தொடங்கினர்.

அப்போது 3 மணி அளவில் பெங்களூரைச் சேர்ந்த கோபால் ராவ் (78) என்பவருக்கு திடீரென நடுக்கடலில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

நெஞ்சு வலி

இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவக் குழு நெஞ்சு வலி காரணமாக கோபால் ராவ் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.

இதனையடுத்து, கோபால் ராவ் உடல் தனுஷ்கோடி பாலம் மீன்பிடித் துறைமுகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரத்திலுள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உடன் வந்த நபர் ஒருவர் உயிரிழந்ததால் 30 பேரும் மன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடந்து சாதனை படைக்கும் நிகழ்வை கைவிட்டனர்.

கோபால் ராவ் உயிரிழந்த தொடர்பாக ராமேஸ்வரம் நரைன் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்

துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்

மொரகஹஹேன மிரிஸ்வத்த பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்.ஆட்டோ ஒன்றின் மீது பொலிஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் பலி ஏற்பட்டுள்ளது .

ஆட்டோவை நிறுத்தும் படி பொலிஸ் சமிக்கை காண்பித்த பொழுதும் ,ஆட்டோ நிற்காது சென்றதினால் ,அந்த ஆட்டோ மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டது .

இதன் பொழுது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் பலியாகியுள்ளனர் . அதில் இருந்து ஒருவர் தப்பித்து சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .

போதைவஸ்து கடத்தல்

இந்த ஆட்டோ போதைவஸ்து கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் ,அப்பொழுதே அந்த ஆட்டோ மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

காலுக்கு கீழே மீது துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்கின்ற விதி உள்ள பொழுது ,உடலின் ஏனைய பகுதியில் குண்டு பாய்ந்தது எப்படி என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் சடலம் மீட்க பட்டு மருத்துவமனையின் ,மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .

பொலீஸ் மீது விசாரணை மக்கள் கோரிக்கை

மக்கள் பயன்படுத்தும் ஆட்டோ மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்த பட வேண்டும் என மக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளன .

முன்னரும் சிவில் உடையில் நின்ற காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் இருவர் மக்கள் பலியாகி இருந்தனர் .

அந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ,தற்போது இந்த சூட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .