Tag: ஜனாதிபதி
வினோ நோகராதலிங்கம் ஜனாதிபதிக்கு ஆதரவு
வினோ நோகராதலிங்கம் ஜனாதிபதிக்கு ஆதரவு
வினோ நோகராதலிங்கம் ஜனாதிபதிக்கு ஆதரவு ,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு தனது ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அரசியல் காரியாலயத்தில் இன்று (18) பிற்பகல் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
வன்னி மக்கள் மனப்பாங்கை அறிந்த நிலையிலே இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்த அவர், வன்னி மக்களின் பெரும்பான்மையான மக்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், முழுநாட்டு மக்களினதும் விருப்பத்திற்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற இருக்கிறார். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் விருப்பத்தையும் இங்கு வெளியிட வேண்டும்.
மூன்று பிரதான வேட்பாளர்களில் அதி கூடிய தகைமைகளையும் ஆளுமையையும் அனுபவத்தையும் கொண்டவர் ரணில் விக்ரமசிங்க ஒருவர் தான். அவரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.
நாட்டுக்கு அரசியல் பொருளாதார ஸ்தீரத்தன்மை அவசியம். ரணில் விக்ரமசிங்க தான் நாட்டுக்கு விடிவைப் பெற்றுக் கொடுத்தார்.
இந்த ஸ்தீர நிலைமை தொடர வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கூட அறிவித்துள்ளது. இப்போதுள்ள சமூக நிலை தொடர வேண்டுமாக இருந்தால் தற்போதுள்ள ஜனாதிபதி தொடர்ந்து ஆட்சி செய்யும் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்.
மரதனோட்டப் பந்தயத்தில் பாதியை கடந்து வந்துள்ள நிலையில் ஓட்டத்தை மாற்றினால் புதிதாக வரும் தலைவருக்கு ஆரம்பத்தில் இருந்து ஓட நேரிடும். எனவே, எஞ்சிய தூரத்தை ஜனாதிபதியினால் தான் இலகுவாக ஓடி முடிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்
சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கும் முடிவு தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடல்ல. அது எம்.ஏ. சுமந்திரனின் தனிப்பட்ட நிலைப்பாடு மாத்திரமே. கட்சியிலுள்ள பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் முடிவிலே உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி அண்மையில் மன்னாருக்கு வருகை தந்த போது சார்ள்ஸ் நிர்மலநாதனை சந்தித்தார்.
இதன் போது மன்னார் மக்களின் ஆதரவும் ஜனாதிபதிக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்த அவர், யதார்த்த அரசியலை விளங்கிய அனைவரும் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியில் கைகோர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதியின் கேள்விக்கு அனுர ஏன் பதில் கூறவில்லை
ஜனாதிபதியின் கேள்விக்கு அனுர ஏன் பதில் கூறவில்லை
ஜனாதிபதியின் கேள்விக்கு அனுர ஏன் பதில் கூறவில்லை ,திசைகாட்டியின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதிப் பொருளாதாரமா அல்லது இறக்குமதிப் பொருளாதாரமா என்று கேட்டதற்குப் பதிலளிக்காத அநுர திஸாநாயக்க தன்னை விவாதத்திற்கு அழைக்கிறார்.
தன்னுடன் விவாதத்திற்கு வர முன்னர் அநுர, சுனில் ஹந்துன்நெத்தி, ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் தனியாக விவாதம் நடத்தி நாட்டுக்குத் தமது சரியான பொருளாதாரக் கொள்கையைச் கூற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தான் முன்னர் குறிப்பிட்டதுபோல், அநுரவும், தானும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பங்கேற்கும் காணொளி
உரையாடலுக்கு நேரத்தை ஒதுக்க முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி, யாருக்கும் பேச இடமளிக்காமல் பேசக்கூடிய சஜித்தையும் இதற்கு அழைக்கலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.
குருநாகல் அஸ்லியா கோல்டன் கிரசென்டா ஹோட்டலில் நேற்று (10) பிற்பகல் நடைபெற்ற குருநாகல் மாவட்ட அறிஞர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடான கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், 8,900 பில்லியன் ரூபாய் செலவும், 4,900 பில்லியன் ரூபாய் வருமானமும், 4,000 பில்லியன் ரூபாய் பற்றாக்குறையும் கொண்ட நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கும் கொள்கைப் பிரகடனத்தை அனுரகுமார
திஸாநாயக்க ஏன் தனது விஞ்ஞாபனத்தில் வெளியிட்டுள்ளார் என்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி, மேடைகளில் பொய்யாகக் கூச்சல் எழுப்பாமல் தமது சரியான பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“குருநாகல் மாவட்டத்துடன் எனக்கு நீண்டகாலப் பிணைப்பு இருக்கிறது. 1978 ஆம் ஆண்டு கம்பஹாவில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தியை குருநாகல் வரை கொண்டு வருகின்றோம். அந்தப் விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கு என்ன நடந்தது என இங்கு கேள்வி எழுப்பப்பட்டது. சஜித்துக்கும் அநுரவுக்கும் என்ன நடந்தது என்று நான் கேட்டிருக்க வேண்டும். உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு, உரம் இன்றி மக்கள் தவிக்கும்போது சஜித்துக்கும் அநுரவுக்கும் மக்களுக்காக வருத்தமும்
வேதனையும் ஏற்படவில்லையா? மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லையா? அவர்கள் அப்படிச் செய்திருந்தால் இன்று நான் இங்கு இருந்திருக்க மாட்டேன். அவர்கள் தமது பொறுப்புக்களை சரியாக
நிறைவேற்றாத காரணத்தினால்தான், ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து நாட்டின் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்க நேர்ந்தது.
எனக்குப் பல அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைத்தது. அந்த ஆதரவுடன் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு வந்தேன்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும்போது சபாநாயகரை தற்காலிக ஜனாதிபதியாக நியமித்து தேர்தலுக்குச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும்? அதிகார இடைவெளியை
உருவாக்கியிருந்தால் இன்று வங்கதேசம் இருக்கும் நிலையில் நாமும் இருக்க வேண்டியிருக்கும்.
நாட்டின் பொறுப்பை ஏற்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு வந்தோம்.
அடுத்த ஆண்டு, மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கான முயற்சிகளை எடுப்போம். நாடு முழுவதும் முதலீட்டு வலயங்களை உருவாக்குவதோடு,
விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்திருக்கிறோம். இளையோருக்கான தொழில் வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களின்படி நாம் செயல்பட்டால், கடன் பெறுவதற்கான தேவைகள் குறைவாகவே இருக்கும்.
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின்படி எதிர்காலத்தில் இந்நாட்டின் செலவு 6,800 பில்லியன் ரூபாயாகவும், வருமானம் 5,100 பில்லியன் ரூபாயாகவும் காணப்படுவதோடு, இடைவெளி 1700 பில்லியன் ரூபாயாகக்
காணப்படும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2 சதவீதமாகும். எனவே, இந்த இடைவெளியை நிரப்பும் இயலுமையும் எமக்கு உள்ளது.
ஆனால் ஜேவிபி தருவதாக கூறும் நிவாரணங்களை வழங்கினால் செலவு 8,900 கோடி ரூபாயாகவும், வருமானம் 4,900 பில்லியன் ரூபாயாகவும் காணப்படும். அத்தோடு வரிக் குறைப்பு தொடர்பிலும் பேசுகின்றனர்.
அதன்படி வரவு செலவுத் திட்ட இடைவெளி 4000 பில்லியன் ரூபாயாக அமையும். பின்னர் பட்ஜெட் இடைவெளி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.9 சதவீதமாக காணப்படும்.
இவ்வாறான பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீறி சந்தையில் பணம் வாங்கினால், வட்டி 25% ஆக இருக்கும். இப்படியான மாற்றத்தையா அவர்கள் எதிர்பார்க்கின்றனர்?
அதனால் டொலரின் பெறுமதி 500 ரூபாயாக உயர்வடையும். சர்வதேச நாணய நிதியத்துடனான நிபந்தனைகளை மீறிவிட்டால் அவர்களின் ஆதரவு இரத்தாகும். அதனால் நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கி நகரும்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அண்மையில் அனுரகுமார திஸாநாயக்கவும் களனி பிரதேசத்தில் ஏற்றுமதி பொருளாதாரத்தையும் நடைமுறைப்படுத்துவதாக கூறியிருந்தார்.
ஆனால் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதாகவும் அவரின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் இன்றி எவ்வாறு ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்குச் செல்ல முடியும்? சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களினாலேயே பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப சுதந்திரம் கிடைக்கும்.
நாம் பொருளாதாரப் பரிமாற்ற சட்டத்தைக் கொண்டுவந்தபோது, சுனில் ஹந்துன்நெத்தியும், ஹர்ஷன சூரியப்பெருமவும் ஏற்றுமதி பொருளாதாரம் இந்த நாட்டின் அரசியலமைப்பிற்கு எதிரானது என வழக்குத் தொடுத்தனர்.
ஆனமடுவவில் நடைபெற்ற கூட்டத்தில் அநுர என்னை விவாதத்திற்கு அழைத்திருப்பதாக அறிந்தேன்.
அவர்கள் ஏற்றுமதி பொருளாதாரத்தை முன்னெடுக்கப் போகிறார்களா அல்லது இறக்குமதியிலேயே தங்கியிருப்பார்களா என்பதை முதலில் சொல்ல வேண்டும்.
எனவே, முன்னாள் விவசாய அமைச்சர் அநுரகுமார திஸாநாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி, ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோருக்கு இடையில் விவாதம்
நடத்தி அவர்களின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதிப் பொருளாதாரமா, இறக்குமதிப் பொருளாதாரமா என்பதை முதலில் நாட்டுக்கு அறிவிக்க வேண்டும்.
நான் முன்பே அழைப்பு விடுத்ததுபோல் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளருடன் நானும், அநுரகுமார திசாநாயக்கவும் பங்கேற்கும் பகிரங்க சந்திப்பொன்றை நடத்துவோம். அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
தேவைப்பட்டால் சஜித் பிரேமதாசவையும் அழைக்கலாம். சஜித் பேச ஆரம்பித்தால் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளருக்கு பேச நேரம் எஞ்சாது. இருப்பினும் சஜித்தையும் அழைப்போம்.
எனவே, அவரின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதி பொருளாதாரமா இறக்குமதி பொருளாதாரமா என்பதை அநுரகுமார திசாநாயக்க எமக்கு முதலில் கூற வேண்டும். பொருளாதாரத்தை நாசமாக்கி நாட்டை வங்குரோத்து அடையச் செய்யக்கூடிய வரவு செலவு திட்ட யோசனைகளை
முன்மொழிந்திருப்பது ஏன் என்று அவர்களிடம் கேட்கிறேன். அதனால் மேடைகளில் கோசமிடுவதை நிறுத்திவிட்டு சரியான பொருளாதார திட்டத்தைத் முன்மொழியுமாறு அறிவுறுத்துகிறேன்.”
ஜனாதிபதியிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி வழங்கிய பதில்களும் கீழே தரப்படுகின்றன.
கேள்வி:
இது நாம் சிறுபராயத்தில் பார்த்த இலங்கை அல்ல. அக்காலத்தில் எழுத்தறிவு விகிதம் ஐம்பது சதவீதம் வரைதான் இருந்தது. இன்று 30 வயது வரையிலான கல்வியறிவு 100% என்றும் முழுமையான எழுத்தறிவு 92% என்றும் வானொலி தகவல் ஒன்றில் அறிந்தேன்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட வங்குரோத்து நிலைக்கு அபிவிருத்தி நடவடிக்கையற்ற நிதி முகாமைத்துவம், நிதிக் கட்டுப்பாடு மற்றும் நிதி ஒழுக்கமின்மை ஆகிய நெருக்கடிகளே காரணமாக அமைந்தன. ஆனால் அனைவர் மீதும் ஏன் குற்றம் சாட்டப்படுகிறது?
பதில்:
நாட்டின் ஏனைய முன்னேற்றங்களை மறந்து விடுவோம். தம்புத்தேகமவில் ஒரு சிறிய பாடசாலை இருந்தது. மத்திய வித்தியாலயமாக மாற்ற கட்டங்கள் வழங்கப்பட்டன.
அந்தப் பாடசாலையில் அநுர திஸாநாயக்க என்ற மாணவர் ஒருவர் இருந்தார். பாடசாலைக் கல்வியின் பின்னர் களனிப் பல்கலைக்கழகத்தில் பிரவேசித்தார். அதுவும் ஜனாதிபதி ஜே. ஆர்.ஜெயவர்தனவின் காலத்தில் கட்டப்பட்ட பல்கலைக்கழகம்.
அங்கிருந்து வெளியேறி நாட்டின் தலைநகரான ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் கட்டப்பட்ட பாராளுமன்றத்துக்கு வந்தார். 76 வருடங்களாக இந்த நாட்டில் எதுவும் நடக்கவில்லை என்று அவர் பாராளுமன்றத்தில் கூறுகிறார்.
மேலும், தெற்காசியாவிலேயே நமது நாடு சிறந்த மனித வளர்ச்சிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.
அப்படியானால், 76 ஆண்டுகளில் ஏதோ நடந்துள்ளது. 1947 இல், இந்த நாட்டில் சுமார் 2000 பாடசாலைகள் இருந்தன.
இப்போது நாடு முழுவதும் பாடசாலைகள் உள்ளன. இன்று நாடு முழுவதும் மின்சாரம் உள்ளது. அப்போது வீடுகளில் மின்சாரம் இருக்கவில்லை. குருநாகலுக்கு சிறிய ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கட்டது.
அன்று ஒரே ஒரு பல்கலைக்கழகம் மட்டுமே இருந்தது. இன்று 17 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இன்று எத்தனை கைத்தொழில் வலயங்கள் உள்ளன? அப்படியானால், எதுவும் நடக்கவில்லை என்று சொல்ல முடியுமா? ஆனால் மாற்றம் தேவை என்று கூறி தமக்குத் தேவையானவர்களை அதிகாரத்திற்குக் கொண்டுவர முயல்கிறார்கள்.
இது தான் இவர்கள் எதிர்பார்க்கும் மாற்றமாகும். இருக்கும் அனைவரையும் அனுப்பிவிட்டு இவர்கள் யாரை நியமிக்கப் போகிறார்கள்? பனியனில் ஓட்டைகள் உள்ளவரையா? இவர்கள் மிகப் பெரிய பொய்யை பரப்புகிறார்கள்
. கடன் வாங்கிய பணத்தை வருமானம் ஈட்ட முடியாத விடயங்களுக்கு செலவழித்ததால் தான் எங்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதில் குறிப்பிட்ட தொகையை வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியிருந்தால் பிரச்சினை எழுந்திருக்காது.
கடைசியில் கடனை அடைக்கும் ஆற்றல் எங்களிடம் இல்லை. சமூக மேம்பாட்டுக்காக நாங்கள் கடன் பெற்றாலும், மீதமுள்ள கடன்கள் நிர்வாகத்திற்கும், உள்கட்டமைப்புக்கும் பயன்படுத்தப்பட்டன.
அதில் எங்களுக்கு எந்த வருமானமும் கிடைக்கவில்லை. அதுதான் பிரச்சினையாக மாறியது.
கேள்வி:
நீங்கள் பிரதமராக இருந்தபோது அரசியல் பழிவாங்கலுக்கு ஆளான பலருக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்ட போதும் மாகாண மட்டத்தில் அது நடைமுறைப்படுத்தப்படாத சந்தர்ப்பங்களும் உள்ளது.
இம்முறை ஜனாதிபதியான பின்னர் அதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
பதில்:
அரசியல் பழிவாங்கல் தொடர்பான பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். நான் பிரதமராக இருந்த காலத்தில் சிலருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
மேலும், கடந்த காலத்தில் வீடுகள் எரிக்கப்பட்டவர்களின் பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும்.
ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் உள்ளன.
அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்துத் தரப்பு அரசியல் தீர்வையும் வழங்க எதிர்பார்க்கிறோம்.
கேள்வி:
கிராமங்களில் உள்ள சமூகத் தலைவர்களை அரச நிர்வாகத்தில் இணைத்துக் கொள்ளும் எண்ணம் உங்களுக்கு உள்ளதா?
பதில்:
ஜனசபையை நிறுவும் பணியை மேற்கொள்ளும் பொறுப்பு கரு ஜெயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதற்கான செயலகமும் சட்டமும் தயாராகி வருகின்றன. எதிர்காலத்தில் அவை சட்டமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
திசைகாட்டி காந்தம் மூலம்தான் திசையைக் கண்டறிகிறது. காந்தம் தவறாக இருந்தால், அது தவறான திசையை சுட்டிக்காட்டும். அதுதான் நடந்திருக்கிறது.
கேள்வி:
ஜனாதிபதி அவர்களே, தற்போதைய கல்வி முறையில் ஏதோ சிக்கல் காணப்படுகிறது. இளைஞர்களின் எதிர்காலத்தை வெல்வதற்கான உங்கள் கவனத்தையும் நான் அறிய விரும்புகிறேன்?
பதில்:
கல்வி முறையில் பல சிக்கல்கள் உள்ளன. பாடசாலை சபை போன்றவற்றை நிறுவி நிர்வாகத் தரப்பின் ஊடாகத் தீர்வு காண கல்வி அமைச்சர் செயல்பட்டு வருகிறார். பாடவிதானங்களில் கவனம் செலுத்தி, 2040 ஆம் ஆண்டுக்கு ஏற்ற கல்வி முறையை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளோம்.
இதற்கு சுமார் 5-10 ஆண்டுகள் ஆகும். 2050 உங்கள் எதிர்காலம் என Gen Z சந்ததியினருக்கு சொல்கிறேன். அதற்கான வழியைத் தயார் செய்வதிலேயே எனது கவனம் உள்ளது.
நான் 2050 என்று சொன்னபோது ஏன் 2050 என்று ஐ.ம.ச.யினர் வினவுகின்றனர். திசைகாட்டியும் அதே கேள்வியைக் கேட்கிறது. இது அவர்களுக்குப் புரியவில்லை. எதிர்காலத்தில் எவ்வாறான உலகம் வரப்போகிறது என்று நாம் மட்டும்தான் சிந்திக்கிறோம்.
மேலும், குருநாகல் மாவட்டத்திற்கு நவீன விவசாயத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறேன். அத்துடன், தென்னைச் செய்கை அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குருநாகல் ஒரு அதிர்ஷ்டமான மாவட்டம். அந்த செயற்பாடுகளை முன்னெடுப்போம்.
கேள்வி:
ஜனாதிபதி அவர்களே, ஜே.வி.பி இந்த நாட்டைப் பெரிதும் சேதப்படுத்திய கட்சி. ஆனால் திசைகாட்டி என்ற இந்த கட்சியின் திடீர் அலைக்கு என்ன காரணம்?
பதில்:
பாரம்பரிய எதிர்க்கட்சி சரியாக செயற்படாததால்தான் திசைகாட்டி முன்னிலைக்கு வந்தது. எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் எதிர்க்கட்சியில் உள்ள மற்றொரு கட்சியை முன்னேற அனுமதிக்கக் கூடாது.
டட்லி சேனநாயக்க முதல் ஒவ்வொரு தலைவரும் அதைத்தான் செய்தார்கள். எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் வேறு கட்சி தலைதூக்க இடமளித்தால் எதிர்க்கட்சியின் பணிகளைத் தொடர முடியாது.
அவர்களுக்கு வாக்கு கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரியவில்லை. சிலர் அரசாங்கத்திற்கு எதிராக வாக்குகளைப் பயன்படுத்த விரும்பினால், அவர்கள் திசைகாட்டியை நோக்கிச் செல்கிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் மணிக்கணக்கில் உரை நிகழ்த்தி நேரத்தை வீணடித்து வருகிறார். அனுரவும் சஜித்தும் இரண்டாம் இடத்துக்காகப் போராடி வருகின்றனர்.
தபால் மூல வாக்களிப்பில் சஜித் பிரேமதாச 3 ஆவது இடத்திற்கு வீழ்ந்திருந்தார். சஜித்தால் தனது எதிர்க்கட்சித் தலைமையை பாதுகாக்க முடியாதிருக்கும்போது நாட்டை எப்படிப் பாதுகாக்க போகிறார்?
கேள்வி:
நமது நாட்டில் அணுசக்தி பயன்பாட்டுக்கான சாத்தியங்கள் உள்ளன. அதற்கான ஆயத்தங்கள் உள்ளனவா?
பதில்:
ஆம். இயற்கை வலுசக்தியை பயன்படுத்தும்போது அணுசக்தியும் தேவைப்படலாம். இது பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அணு உலை அமைந்துள்ளது. அவ்வாறான நிலைக்கு நாமும் செல்ல வேண்டியிருக்கும். 21ஆம் திகதி சிலிண்டருக்கு வாக்களித்தால் அந்த நிலைக்கு நகரலாம்.
கேள்வி:
குருநாகல், தம்பதெனிய, யாப்பஹுவ, படுவஸ்நுவர பிரதேசங்களை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்ய உத்தேசித்துள்ளீர்களா? மேலும், உலகிலேயே சிறந்த கிரபைட்டைக் கொண்ட குருநாகலில், அது சார்ந்த தொழில்துறையை மேம்படுத்தத் தீர்மானித்துள்ளீர்களா?
பதில்:
இலங்கையில் மிகப் பெரிய கிராபைட் சுரங்கம் கஹடகஹா பகுதியிலுள்ள சுரங்கமாகும். தற்போது கிராபைட் கையிருப்பு தொடர்பிலான பிரச்சினை எழுந்துள்ளது. நவீன அறிவியல் ஆய்வு அறிக்கை பெறப்பட உள்ளது.
ராகேதர பகுதியிலும் கிராபைட் சுரங்கம் ஒன்று உள்ளது. கஹடகஹா சுரங்க கிராபைட் உலகின் சிறந்த கிராபைட் வகைகளில் ஒன்றாகும். மேலும், நாடு முழுவதும் உள்ள கனிம வளங்களைக் கண்டறியும் திட்டத்தைத்
ஆரம்பிக்கவுள்ளோம். மேலும் குருநாகல், தம்பதெனிய, யாப்பஹுவ, படுவஸ்நுவர ஆகிய பிரதேசங்களை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்வது குறித்தும் கவனம் செலுத்துகிறோம். கட்டுநாயக்க விமான
நிலையத்திற்கு அருகாமையில் உள்ளதால், இந்தப் பகுதியில் புதிய ஹோட்டல்களை அமைக்கும் திட்டமும் உள்ளது. குறிப்பாக யாப்பஹுவ உலகப் புகழ் பெற்றதையடுத்து அதன் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கேள்வி:
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 65% விவசாயத்தில் தாக்கம் செலுத்தும். மேலும் நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கான சாத்தியங்களும் உள்ளன. அது குறித்து கவனம் செலுத்தியிருக்கிறீர்களா?
பதில்:
நவீன விவசாயத்திற்கு மாறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மேலும், வன்னி ஹத்பத்து பிரதேசத்தில் சூரிய சக்திக்கான திறன் காணப்படுகிறது. ஆனால் குருநாகல் மாவட்டத்தை டிஜிட்டல்
பொருளாதாரத்துடன் அபிவிருத்தி செய்வதே எமது நோக்கமாகவுள்ளது. குருநாகல் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதன் பின்னர் பாரிய டிஜிட்டல் பொருளாதார வலயமொன்று உருவாக்கப்படும்.
அதேவேளை கண்டியில் மற்றுமொரு டிஜிட்டல் பொருளாதார வலயம் உருவாக்கப்படும். இந்த இரண்டு வலயங்களும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையால் இணைக்கப்பட்டுள்ளன. அந்த நடவடிக்கைகள்
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும். மேலும், வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் கனிம வளங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் சீனாவுக்கு துரியான் ஏற்றுமதி செய்யும் புதிய திட்டம் மாவத்தகமவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கு பொருத்தமான பகுதிகளை அடையாளம் காண வேண்டும்.
குருநாகல், குளியாபிட்டிய, ஹலவத்தை ஆகிய 3 நகரங்களையும் ஒன்றிணைத்து கல்வித்துறை மேம்படுத்த வேண்டும்.
கேள்வி:
இந்நாட்டின் நிலையான சம்பளம் பெறாத கஷ்டங்களை எதிர்கொள்ளும் மக்களுக்காக ஏதாவது வேலைத்திட்டம் உங்களிடம் உள்ளதா?
பதில்:
இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் மாதச் சம்பளம் பெறுவதில்லை. விவசாயம், மீன்பிடித்தல், சுயதொழில் போன்ற சிறுதொழில்களை செய்பவர்களே உள்ளனர்.
இந்த முறைசாரா தொழில் துறைக்கென தனித் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தனியான நிதி மற்றும் ஓய்வூதியத் திட்டம் உள்ளது. அனைவரும் அதற்குள் இணைந்துகொள்ள விரும்பாவிட்டாலும் ஓரளவானவர்கள் இணைவர். மேலும், இலங்கையிலும் தனியார் முதலீட்டு ஓய்வூதிய நிதி திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும்.
அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெரும்பாலான மக்கள் இத்தகைய ஓய்வூதிய நிதியில் வாழ்கின்றனர். இப்போது இந்தியாவிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர்களான அசங்க நவரத்ன, மஞ்சுலா திசாநாயக்க, குருநாகல் கல்வியல் மற்றும் வர்த்தகர்கள் கலந்துரையாடலின் ஒருங்கிணைப்பாளர் எம்.பீ.திசாநாயக்க,கலாநிதி சமிந்த மலலசேகர,
பொல்கஹாவெல, ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் தம்மி ரத்நாயக்க, குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி தொகுதி அமைப்பாளர் நுவன் லியனகே உள்ளிட்டோரும் பிரதேச அரசியல் தலைவர்களும், தொழில் வல்லுனர்கள் உட்பட பெருமளவானர்களும் கலந்துகொண்டிருந்தன
திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில்
திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில்
திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (7) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , இரண்டு தேர்தல் பிரசாங்களில் பங்கேற்பதாக யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இல்லத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை மாவை சேனாதிராஜா, இந்து சமய முறைப்படி வரவேற்றார்.
மாவை சேனாதிராஜாவின் தனிப்பட்ட அழைப்பின் பிரகாரம் ஜனாதிபதி, அவரின் இல்லத்திற்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது விசேடமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று, வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என நம்புவதாக, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று
ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று
ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று ,2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் இன்று (07) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
‘March 12 Movement’ ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி இன்று (07) பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5 மணிவரை ‘அத தெரண’ மற்றும் ‘அத தெரண 24’ ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலமாக நேரலையாக ஒளிபரப்பப்படும். அத்தோடு, ‘அத தெரண’வின் சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பப்படும்.
இன்றைய விவாதத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, ‘சர்வஜன அதிகார’ ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பி. அரியநேத்திரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது

- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா

- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி

- மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749பேர் பலி

ஜனாதிபதி பிரதமருக்கு இடையில் மோதல்
ஜனாதிபதி பிரதமருக்கு இடையில் மோதல்
ஜனாதிபதி பிரதமருக்கு இடையில் மோதல் ,இலங்கையில் நடைமுறைக்கு ஏற்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்காவுக்கு இல்லையென இலங்கையில் ஆளும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நோக்கின் இலங்கையில் போலீஸ்மா அதிபர் பெற்ற இடம் பெற்றிடமாக இல்லை எனவும் அது நிரப்ப பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல் ஆணை குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,ரணில் விக்கிரமசிங்கா வேட்பாளராக போட்டியிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரணிலை ஜனாதிபதியாக ஏற்றுக் கொண்டும் பிரதமராக முன்னாள் வெளியுறவு அமைச்சராக விளங்கிய தினேஷ் குணவர்தன ,மஹிந்த ராஜபக்சாவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவ்வாறு நியமிக்கப்பட்ட பிரதமர் தினேஷ் குணாவர்த்தன தற்பொழுது தேர்தல் வருகின்ற நேரத்தை ஒத்திவைத்து ,ரணில் விக்கிரமசிங்கா மீது நேரடி தாக்குதலை ஆரம்பித்துள்ளார்.
மொட்டு கட்சியிலிருந்து 48 பேருடன் ரணில அரசு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ,
மொட்டுக்காட்சிக்கும் ரணில் விக்ரம் சிங்காவுக்கும் இடையில் பெரும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது .
அது தற்பொழுது தினேஷ் குணவர்தன ஊடாக பாராளுமன்றில் வெடித்துள்ளதை இதன் ஊடாக காண முடிகின்றது.
எதிர்வரும் தேர்தலில் தனது நரித் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்கா காட்டப் போகிறார் என்பதற்கான முதல் வெள்ளோட்டமாகவும் அதை சமாளிக்க முடியாது ,
மொட்டுக்காட்சி திணறிக்கொண்டு உள்ளதையும் தினேஷ் குணவர்தன ரணில் விக்ரமசிங்காவை பாராளுமன்றத்தில் தாக்கியதில் இருந்து காண முடிகின்றது.
- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது

- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி

- மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749பேர் பலி

- பல பகுதிகளில் 75 மி.மீ-க்கு மேல் மழை

- சிறைச்சாலை அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது

- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் ரணில்
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் ரணில்
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் ரணில் ,இலங்கையில் ஆளும் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்காக தனது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தனது கட்டுப்பணத்தை செலுத்துவதற்கு அவர் தயாராகி வருகின்றார் எனவும்,
அதன் பிரகாரம் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை இனங்காட்டி கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சுயாதீன வேட்பாளராக ரணில் விக்கிரமிசிங்காவினால் கட்டுப்பணம் செலுத்த பட்டுள்ளது .
ஜனாதிபதி வேட்பாளராக மேலும் பலர் போட்டியிட உள்ள நிலையில் இந்த விடயம் தற்பொழுது சூடு பிடித்துள்ளது.
சஜித் பிரேமதாசா ஜனாதிபதியாக வெல்லப்போகிறார் என்பதை அறிந்து கொண்டு அதனை தடுக்கும் நடவடிக்கையில் ரணில் , ஈடுபட்டு கோத்தபாயவை அன்றைய காலப் பகுதியில் ஜனாதிபதி ஆக்கினார்.
அவ்வாறான ஒரு சூழ்நிலையில் தற்பொழுது ஜனாதிபதியாக தானே போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் .
இவ்வாறான நிலையில் ரணிலிடம் நரி தந்திர நிலை திட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு எங்கும் தற்பொழுது சாவகச்சேரி ராமநாதன் அவர்கள் பல்வேறுபட்ட விடயங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அவை எதிரொலித்து வருகின்ற நிலையிலும் ,
தானே தற்போது ஜனாதிபதி வேட்பாளர் ரணில் அறிவித்துள்ளது நிலையில் ,பலத்த சந்தேகங்களையும் அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்கின்ற விடயமும் பேசுபொருளாக ஊடகங்களில் மாற்றம் பெற்றிருக்கின்றது.
- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது

- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி

- மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749பேர் பலி

- பல பகுதிகளில் 75 மி.மீ-க்கு மேல் மழை

- சிறைச்சாலை அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது

- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தல்
இலங்கையில் செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தல்
செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தல் ,இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர்21 அன்று ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தீர்மானித்துள்ளதாக, இலங்கை தேர்தல் ஆணைக்குழு வெளிப்படையாக அறிவித்துள்ளது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம் பெறுமா அல்லது இடம்பெறாதா என்பது தொடர்பாக இழுபறிநிலை காணப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து தற்பொழுது செப்டம்பர்21 அன்று , ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழு இவ்விதம் அறிவித்துள்ள நிலையில் தற்போது ஜனாதிபதி தேர்தல் இடம் பெறுவது உறுதியான நிலையில் ,தற்போது கட்சிகள் தமது வெற்றிகைளை தேடி கொள்ளும் முகமாக தேர்தலில் பல போட்டிகளை நடத்தி வருகின்றனர்.
இதன் ஊடாக மீளவும் ஒரு முறை இலங்கையில் மிகப் பெரும் போட்டா போட்டி இடம்பெற போவதை இவை காண்பிக்கின்றன.
நாடளாவிய ரீதியில் கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற பரபரப்பு போட்டி காரணமாக இப்பொழுது கட்சிகள் ஒன்றை ஒன்றை தாக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
அவ்வாறான கட்சி தாக்குதல் இடம்பெற்று வருகின்ற நிலையிலும் கட்சி தாவர இடம்பெற்று வருகின்ற நிலையில் தேர்தல் அதிகாரி இடம்பெருமான அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது, பல எம்பிக்கள் உடைய தலைகள் உருள போகின்றன.
பெட்டிகளுடன் குட்டிகளும் மாற்றப்பட போகுது என்பதற்கான ,திட்டவட்டமான அறிவிப்பாக இந்த தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது

- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி

- மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749பேர் பலி

- பல பகுதிகளில் 75 மி.மீ-க்கு மேல் மழை

- சிறைச்சாலை அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது

- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

ஜனாதிபதி வேட்பாளராக பொன்சேகா
ஜனாதிபதி வேட்பாளராக பொன்சேகா
ஜனாதிபதி வேட்பாளராக பொன்சேகா ,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிட போவதாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகோ அறிவித்துள்ளார்.
இறுதி யுத்தப் பகுதியில் தமிழர்களை அழித்து மிகப்பெரும் நயவஞ்சகத் தாக்குதலையும் மேற்கொண்ட ஒரு இனவாதியாகவும் இராணுவ தளபதியாகவும் சரத் பொன்சேகா விளங்குகின்றார் .
அவ்வாறான நிலையில் அவர் தற்பொழுது ஜனாதிபதியாக வேட்பாளராக போவதற்கான தேர்தல் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக தன்னை அறிமுகப்படுத்தியிருக்கும் இவர் மக்களுக்கான வாக்குகளை சிதைக்கின்ற ஒரு நடவடிக்கையில் ஈடுபட உள்ளாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது .
சஜித் அணியில் இணைந்து செயல்பட்ட இவர் அதிலிருந்து விலகி தற்போது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப் போகிறார் என்கின்ற விடயமே தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.
சஜித்துக்கு எதிராக பல்வேறுபட்ட கருத்துக்களை இவர் முன்வைத்து வந்தார்.
அவ்வாறான நிலையில் தற்போது இவரை அந்த கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கட்சியினுடைய ஸ்தாபித்து அதனுடன் பயணித்து வருகின்றார் அவ்வாறு ஜனாதிபதி தேர்தல் இவர் போட்டியிட்டால் இவருக்கு வேகமான வாக்குகள் கிடைக்கப்பெறுமா என்கின்ற தகவலை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தில் தமிழர்களையும் புலிகளையும் தானே அழித்தேன் என தேர்தல் பிரச்சாரங்களில் இவர் சிங்கள மக்கள் மத்தியில் பேசி வந்தார்.
அவ்வாறு இனவாதத்தை கக்கியும் தமிழின படுகொலை யை நியாயப்படுத்தியும் அவ்வாறு செய்தது சரிதான் என்பதை கூறிவந்த இவரை ,தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது தான் இன்றைய கேள்வியாகவும் இருக்கின்றது.
ஈரான் ஜனாதிபதிக்கு வடகொரியா வாழ்த்து
ஈரான் ஜனாதிபதிக்கு வடகொரியா வாழ்த்து
ஈரான் ஜனாதிபதிக்கு வடகொரியா வாழ்த்து, ஈரான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதிக்கு வடகொரியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் அந்த நாட்டின் அதிபர் கிங் ஜாங் உன் அவர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் .
வடகொரியா மற்றும் ஈரானுக்கு இடையில் புதிய ஆயுத உற்பத்தி ஒப்பந்தங்கள் மற்றும் வர்த்தக பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
அவ்வாறான காலப்பகுதியில் ஈரானுடன் மிக நெருக்கமாக தமது ராஜ்ய உறவை அமைத்து ,வகுத்து வருகிறது
ஆயுத உற்பத்தி நடவடிக்கை
அவ்வாறான காலப்பகுதியில் வடகொரியா தற்பொழுது புதிய ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளதிலிருந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ள அந்த வர்த்தக ஆயுத உற்பத்தி நடவடிக்கை தொடர்பாகவும் ,
இரண்டு நாடுகளின் கொள்கையில் மாற்றங்களை இவரது வருகை ஏற்படுத்தும் என்பதை இந்த விடயத்தின் ஊடாக அறிந்து கொள்ள முடிகின்றது.
இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற யுத்தத்தை அடுத்து , வடகொரியாவும் ஈரானும் மிகப்பெரிய புதிய ஒப்பந்தங்களுடன் கைச்சாத்திட்டு,
தனது வர்த்தக பொருளாதாரத்தை அபூர்த்தி செய்து வருகின்ற நிலையில் இந்த வாழ்த்து செய்தியானது மிக முக்கியமான ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது.
- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது

- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி

- மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749பேர் பலி

- பல பகுதிகளில் 75 மி.மீ-க்கு மேல் மழை

- சிறைச்சாலை அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது

- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

ஈரான் புதிய ஜனாதிபதி தெரிவு
ஈரான் ஜனாதிபதி தெரிவு
ஈரான் புதிய ஜனாதிபதி தெரிவு ,ஈரான் புதிய ஜனாதிபதி தெரிவு நாட்டின் புதிய ஜனாதிபதி அவர்கள் தற்போது சேவை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீர்திருத்தவாதியாக காணப்படும் இவரே தற்பொழுது ஜனாதிபதி யாக மக்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
இவரது வருகை யை அடுத்து ஈரானில் சட்டங்களில் இருக்கும் பல்வேறுபட்ட சீர்திருத்தங்களை அவர் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிணை அடுத்து அவர் இந்த சட்ட திருத்தத்தை மேற்கொண்டு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பல அடக்குமுறை சட்ட வடிவங்கள் விலக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்குரிய வழி வகைகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
பெண்கள் கட்டாயமாக புர்கா அணிய வேண்டும் என்ற தடைச் சட்டத்தில் இருந்து மேலும் பல்வேறுப்பட்ட நடவடிக்கையில் இருந்து அந்த அடிமைப்பு மாதா சட்டங்களிலிருந்து விடுதலை செய்து மக்களை காப்பாற்றுவார் என அவர்கள் தெரிவித்து இருந்தார் .
அதனை எடுத்து இவ்வாறு மேற்கொள்ளப்படும் சீர் சிறுத்தம் காரணமாக பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அது ஈரானிய மக்களுக்கு புதிய வரவேற்பையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் மக்களுக்கு குறித்த வாக்குறுதிணையை எடுத்து அந்த வாக்குறுதியை காப்பாற்றி அந்த மக்களை காப்பாற்றுவாரா என்பதே கேள்வியாக உள்ளது.
உலங்குவானூர்தி விபத்தில் முன்னாள் ஜனாதிபதி பலியாகியதை அடுத்து அவரது வெற்றிடத்திற்கு புதியவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
மக்களவையில் இடம்பெற்ற பல்வேறுபட்ட சுற்றுவ வாக்கெடுப்பு அடுத்து ஜனாதிபதியாக இவர் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றார்.
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம்
ஜனாதிபதி விமானம் மாயம்
ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம் ,துணை ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம் தேடும் இராணுவம்.
மாலாவின் துணைஜனாதிபதி பயணித்த விமானம் காணாமல் போய்விடதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது .
ஈரானுடைய ஜனாதிபதி மாயமானதை போன்று இந்த விமானமும் தற்பொழுது மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விமானத்தில் பயணித்த துணை ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர்கள் விமானம் விழுந்து நொறுங்கி அவர்கள் இறந்திருக்க கூடும் என்கின்ற தகவல்கள் வழியாக உள்ளது .
தொடராக இடம் பெற்று வருகின்ற இவ்வாறான மிக முக்கியமானவர்கள் பயணிக்கும் விமான விபத்துக்கள் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியுள்ளது .
ஈரானுடைய ஜனாதிபதியும் மிக முக்கிய சகாக்களும் அந்த விபத்தில் பலியானதை அடுத்து தற்பொழுது துணை ஜனாதிபதி ஒருவர் பயணித்த விமானமும் காணாமல் போயுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இது மிக முக்கியமான உளவுத்துறைகளின் திட்டமிடப்பட்ட நகர்வு ஒன்றாகவே கருதப்படுகிறது .
தமது கொள்கைக்கு அடங்க மறுக்கும் நாடுகளின் அதிபர்களை சத்தம் இல்லாமல் ஓசை என்று போட்டுத் தள்ளுகின்ற ஒரு விடயமாகவே இந்த விமான விபத்துக்கள் பார்க்கப்படுகிறது .
இந்த விமான விபத்தில் காணாமல் போனவர்கள் உயிருடன் உள்ளார்கள் இல்லையா என்பது தொடர்பாக இதுவரை தெரியவரவில்லை .
காணாமல் போன விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ,அந்த நாட்டு இராணுவ விமானங்கள் மீட்பு குழுக்கள் செயலாற்றி வருகின்றனர்.
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

மோடியின் பதவி ஏற்புவிழாவில் ஜனாதிபதி
மோடியின் பதவி ஏற்புவிழாவில் ஜனாதிபதி
மோடியின் பதவி ஏற்புவிழாவில் ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.
நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (05) பிற்பகல், நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தனது பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாகவும், அந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அரசாங்கத்தின்
இதேவேளை, தற்போதைய இந்திய அரசாங்கத்தின் கடைசி அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ரஷ்தபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக சனிக்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவும் பங்கேற்க உள்ளார்
ஜனாதிபதியின் வீட்டுக்குத் தீ
ஜனாதிபதியின் வீட்டுக்குத் தீ
ஜனாதிபதியின் வீட்டுக்குத் தீ ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது கொள்ளுப்பிட்டியில் அத்துமீறி நுழைந்து அவரது வீட்டில் இருந்த
சொத்துக்களை சேதப்படுத்தி வீட்டுக்குத் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நவுட்டுடுவ கிரந்திடிய பிரதேசத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (36) ஆசிரியர் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இப்போராட்டத்தின் போது, கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இரவு, கொள்ளுப்பிட்டியில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள்
பலவந்தமாக நுழைந்த போராட்டக்குழுவினர் அவரது சொத்துக்களைத் தாக்கி தீயிட்டு சேதப்படுத்தியுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்ட நபர்
இச்சம்பவம் தொடர்பாக 25க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலை அடுத்தே மேற்படி விடயங்களை தூசி தட்டப்பட்டு நடத்த பட்டு வருகிறது .
ஜனாதிபதியை சந்தித்தார் விக்னேஸ்வரன்
ஜனாதிபதியை சந்தித்தார் விக்னேஸ்வரன்
ஜனாதிபதியை சந்தித்தார் விக்னேஸ்வரன் ,தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசரான பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
யாழில் ஜனாதிபதி மக்களை சந்தித்தார்
யாழில் ஜனாதிபதி மக்களை சந்தித்தார்
யாழில் ஜனாதிபதி மக்களை சந்தித்தார் ,யாழில் ஜனாதிபதி இளைஇவ்வருடத்திற்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டு இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினைத் தீர்க்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
அதேபோல், மீண்டும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்கும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவேன் .
நவீன விவசாயத்தைக் கிராமத்திற்கு கொண்டுச் செல்வதற்கான வேலைத்திட்டம் அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கத்தில்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாழ். மாவட்ட மாநாட்டிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது யாழ்.மாவட்ட இளைஞர் யுவதிகளின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் நேரடியாக கூறுவதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“வட. மகாணத்தில் பயன்படுத்தப்படாத பல காணிகள் காணப்படுகின்றன. யாழில் மாத்திரமின்றி முழு நாட்டிலும் அவ்வாறான பல காணிகள் காணப்படுகின்றன.
அந்த இடங்கள் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் எமது நாட்டில் விவசாய ஏற்றுமதி காணப்பட்டது.
அநுராதபுர காலத்தில் இலங்கை நெல் ஏற்றுமதி செய்தது
அநுராதபுர காலத்தில் இலங்கை நெல் ஏற்றுமதி செய்தது. பின்னர், தேயிலை, கோபி, இறப்பர், கறுவா உள்ளிட்டவைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது அந்த ஏற்றுமதிச் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளன.
அதனால், விவசாயத்தை நவீனமயப்படுத்தி ஏற்றுமதி பொருளாதாரத்தை மீண்டும் உருவாக்க வேண்டும்.
இளைஞர் யுவதிகள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். அரச மற்றும் தனியார் துறையுடன் இணைந்து நவீன விவசாயத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம்.
அதனால் இலங்கை டொலர்களை ஈட்டிக்கொள்வதற்கான வாய்ப்பும் அதிகமாக கிடைக்கும்.
கடந்த வாரம் கேகாலைக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தேன்.
நவீன விவசாயச் செயற்பாடு
அங்கு நவீன விவசாயச் செயற்பாடுகளை முன்னெடுப்போரை காண முடிந்தது. தற்போது அவ்வாறானவர்களே எமக்குத் தேவைப்படுகின்றனர்.
நவீன விவசாயத்தில் 5000 சதுர அடியில் உயர் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
ஒரு ஹெக்டயாரில் 08 மெட்ரிக் டொன் நெல் விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியும். அதனால் ஏற்றுமதி மற்றும் வீழ்ச்சியடையாத பொருளாதாரத்தையும் கட்டமைக்க முடியும்.
அரசாங்கம் கவனம்
அதேபோல் சுற்றுலா வர்த்தகத்தை பலப்படுத்துவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
அதேபோல் வலுசக்தி குறித்தும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கிளிநொச்சி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் மூலமான மின்சார உற்பத்தியை செய்வதற்கான சாத்தியங்களும் உள்ளன.
அதனால் கிகாவோட் அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். குளங்கள் மீது சூரிய சக்தி படலத்தை அமைத்து அதனூடாக மின்சாரம் தயாரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்துகிறோம்.
இதற்காக பூநகரி மற்றும் இரணைமடு குளங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வடமாகாணமானது அதிகளவில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது.
ஆசியாவின் மிகப்பெரிய சூரிய சக்திப் படலம்
மேலும், இந்தப் பகுதியில் 700 மெகாவோட் திறன் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய சூரிய சக்திப் படலத்தை நிறுவும் பணியை மேற்கொள்ளவிருக்கிறோம்.
இதனை ஆரம்பமாகக் கொண்டு ஆசியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக வடக்கை மாற்ற முடியும்.
வலுசக்தி துறையின் முன்னேறிச் செல்ல அதிகளவில் மின் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
எனவே, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்திக்காக இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தை மையமாக கொண்டு முதலீட்டு வலயம் ஒன்று நிறுவப்பட உள்ளது.
மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயமொன்றை ஸ்தாபிப்பதற்கும் எதிர்பார்க்கிறோம். மீனவர்களுக்காக நமது கடற்பரப்பை பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு உள்ளது.
நவீன மீன்பிடி முறைகள் மூலம் மீன்பிடித் தொழில் துறையும் பலப்படுத்தப்படும்.
கடந்த நான்கு வருடங்களில் இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.
மக்கள் பெரும் அவதிப்பட்டனர். தற்போது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வருகிறது.
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்ட பிறகு
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்ட பிறகு, இளைஞர்களின் தொழில் இல்லாத பிரச்சினை நிவர்த்திக்கப்படும்.
பொருளாதார மாற்றச் சட்டமூலம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்க எதிர்பார்த்திருக்கிறோம்.
வியட்நாம், மலேசியா, தாய்லாந்து போன்ற ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் இலங்கையிலும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
மேலும், உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க இன்னும் இரண்டு மாதங்களில் தென்னிந்திய கலைஞர்களை கொண்டு யாழ்ப்பாணத்தில் மாபெரும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு
செய்யுமாறு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவருக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். வங்குரோத்து பொருளாதாரத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்கவும்,
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.ஞர்களுக்கு வழங்கிய உறுதி
இலங்கையில் துக்கதினம் பிரகடனம்
ஈரான் ஜனாதிபதிக்கு துக்கதினம் பிரகடனம்
இலங்கையில் துக்கதினம் பிரகடனம், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இன்று (21) இலங்கையில் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
ஈரானின் வடமேற்குப் பகுதியில்
ஈரானின் வடமேற்குப் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த ஈரான் வெளிவிவகார அமைச்சர், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உட்பட 8 பேரும் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதியின் மறைவை முன்னிட்டு
இந்நிலையில் ஈரான் ஜனாதிபதியின் மறைவை முன்னிட்டு ,இலங்கையில் துக்கதினம் பிரகடனம் 5 நாட்கள் துக்க தினத்தை அனுசரிக்க ஈரான் நாட்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, பல நாடுகளில் துக்க தினங்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு என் ஈரான் அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
ஈரானிய ஜனாதிபதியின் உலங்கு வானூர்தி விபத்து சம்பவத்தால் அதிர்ச்சியில் அரபு நாடுகள் உறைந்துள்ள .
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார வர்க்கத்தின் கரங்களும் ,அமெரிக்கா அரசிய இயைத்தின்றத்தின் ,அணுகுமுறையில் ஒளிந்திருக்கும் புலனாய்வு கட்டமைப்பும் இணைந்தே இந்த மரணத்தை ஏற்படுத்தி இருக்க கூடும் என குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன .
பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் போர்
பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் இடம்பெற்று வரும் தாக்குதலை அடுத்து தற்போது .உலங்குவானூர்தி விபத்தில் ஈரான் ஜேஜேனாதிபதி மற்றும் ,ஈரான் முக்கிய அதிகாரிகள் பலியாக காரணமாக மைய பெற்றுள்ளது என விடயம் சந்தேகமாக காணப்படுகின்றன .
உலங்குவானூர்தி விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி
இந்த உலங்குவானூர்தி விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி மற்றும் முக்கிய அதிகாரிகள் சடலங்கள் மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இதில் முழுமையாக அவர்களது சடலங்கள் மீட்கப்பட்ட முடியா நிலையில் ,சிதைந்த உடல்பாகங்களே மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் மேற்கு நாடுகள் சதி என அரேபிய மக்கள் குற்ற சாட்டு .
ஈரான் ஜனாதிபதிஉள்ளிட்ட 12 மரணம்
ஈரான் ஜனாதிபதிஉள்ளிட்ட 12 மரணம்
ஈரான் ஜனாதிபதிஉள்ளிட்ட 12 மரணம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன .
ஈரானிய ஜனாதிபதி மற்றும் முக்கிய பாதுகாப்புத்துறை ஊழியர்கள் ,பயணித்த உலங்கு வானூர்தி வீழ்ந்த்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
அமெரிக்கா தயாரிப்பு உலங்கு வானூர்தி
அமெரிக்கா தயாரிப்பு உலங்கு வானூர்தியை என்றான் ஜனாதிபதி பயன் படுத்தியது மிக தவறான செயல் என்ற வாதம் நிலை பெற்றுள்ளது .
இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்று வரும் இவ்வேளை இந்த அமெரிக்கா உலங்குவானூர்தி பயன் படுத்திய சம்பவம் பெரும் தவறாக பார்க்க படுகிறது .
மூன்று உலங்கு வானூர்தி
ஜனாதிபதியின் பாதுகாப்பைற்கு பயணித்த மூன்று உலங்கு வானூர்திகளில் இரண்டு திரும்பிய பொழுது ,இவர்கள் பயணித்த உலங்குவானூர்தி மட்டும் எவ்வாறு வீழ்ந்து நொறுங்கியது என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
இந்த விபத்தில் மிக பெரும் சதி உள்ளதை தெளிவாகவே காண முடிகிறது .
ஈரானிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளது .
ஈரானிய இராணுவத்திற்குள் அல்லது அரசியலுக்குள் முக்கியகறுப்பு ஆடு ஒன்று மிக பெரும் நாசகார வேலையில் ஈடுபட்டு வருவதை இந்த சம்பவம் காண்ப்பிக்கிறது .
ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்
ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்
ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்,இலங்கைக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கை வந்தார்.
இலங்கை மாத்தள விமான நிலையத்தி வந்தடைந்த ஈரான் கேனாதிபதி இப்ராஹிம் ரைசி.உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பர் என தெரிவிக்க பட்டுள்ளது .
அச்சுறுத்தல் நிலையில் இலங்கை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி
இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம் பெற்றுள்ள இக்கால பகுதியில் ,இலங்கை ,வந்தடைந்துள்ள ஈரான் ஜனாதிபதியின் வரவு துணிச்சல் நிறைந்த ஒன்றாக பார்க்க படுகிறது .
ஈரானுக்கும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதும் ,பதிலுக்கு ,இஸ்ரேலுக்கு ஈரான் அடித்த நிலையில் ,அமெரிக்கா ஐரோப்பா ,இஸ்ரேல் ,எதிர்ப்புக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தடைந்துள்ளார் .
மொசாட் குறியில் ஈரான் ஜனாதிபதி
மொஸாட் குறியில் என்றான் ஜனாதிபதி உள்ள பொழுதும் ,பாதுகாப்பு அச்சுறுத்தல் மத்தியில் பயணித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது .
இவர் இலங்கையில் மொசாட்டினால் கொலை செய்ய பட கூடிய ஆபத்துக்களு உள்ளதான அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது .
அவ்வாறு நிகழ்ந்தால் இலங்கை அமெரிக்கா ,இஸ்ரேலை தட்டி கேட்கவா முடியும் என்ற நிலையே காணப்படுகிறது .
ஈரான் இலங்கை உறவு
ஈரானுக்கும் சிலாகிக்கும் இடையில் நல்லுறவு காணப்படுகிறது .பொருளாதார ரீதியில் இலங்கை பெரும் நெருக்கடியை சந்தித்த பொழுது ஈரான் மிக பெரும் ஆதரவை வழங்கி இருந்தது .
விசேட எண்ணெய் கப்பல்களை அனுப்பி வைத்திருந்தது .மேலும் இலங்கை தேயிலையை மாதம் ஒன்றுக்கு ஐந்து மில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்கிறது .
இவ்வாறான பொருளாதார ஒப்பந்தங்களில் ஈரானுக்கும் இலக்கைக்கும் நல்லுறவு காணப்படுகிறது .
அவ்வாறான இவ்வேளையில் ,ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தடைந்துள்ளது ,மேலும் இருநாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பில் பலத்தை சேர்க்கும் என கருத படுகிறது .
ஜனாதிபதியின் இலக்கை வருகையுடன் இலங்கை மீதான மேற்குலக நாடுகளின் அழுத்தம் அதிகரிக்க கூடும் எனவும் ,ஐக்கிய நடுகல் மனித உரிமை அவையில் ,இலங்கை தமிழ் இனப்படுகொலை தொடர்பான விடயம் தீவிரம் பெறலாம் என படுகிறது .
தமது சொல்லை தட்டையா இலங்கைக்கு ,அவர்கள் புரிந்த தமிழ் இந கொலையை தூசி தட்டி எடுத்தாலும் வியப்பதற்கில்லை எனலாம் .
நான் மோசடி ஏதும் செய்யவில்லை மைத்திரிபால சிறிசேன
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக பதவியேற்ற நாளிலிருந்து எவ்வித மோசடியில் ஈடுபடவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் .
இலங்கை அரசியலில் தேர்தல் சூடுபிடிக்கவுள்ள நிலையில்,காட்சிகள் மாற்றமடைந்து வருகின்றன .
அவ்வாறன நிலையில் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார் .
இலங்கையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக அங்கம் வகிக்கும் பொழுதே நாட்டில் தொடர் குண்டுகள் வெடித்தன .
கொழும்பு தேவாலயங்கள் முதல் குண்டுகள் வெடித்தன .
அந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று மைத்திரிபால சிறிசேன பதவி விலகவில்லை .
மாறாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டத்தில் பங்கேற்று பேசும் பொழுதே மைத்திரிபால சிறிசேன நான் மோசடியில் ஈடுபடவில்லை என தெரிவித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் .

































