Posted in சினிமா

பாலிவுட்டில் களம் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

.பாலிவுட்டில் களம் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3, வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக பாலிவுட்டில் களம் இறங்கியுள்ளார்.

பாலிவுட்டில் களம் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்


ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே 2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து

இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர். அதன் பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை.

ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் தனுசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன்பின் பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் ஒரு

திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஐஸ்வர்யா அவருடைய அடுத்த படம் குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ஹிந்தியில் புதிய படமொன்றை இயக்க ஒப்பந்தமாகிவுள்ளார். இவர் இயக்கவிருக்கும் முதல் ஹிந்தி திரைப்படம் இது. இந்த படத்திற்கு ’ ஓ சாதிசால்’ என்று

பெயரிடப்பட்டுள்ளது, இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு, இதன் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்

Posted in சினிமா

கதாநாயகனான புகழ்.. குவியும் வாழ்த்துக்கள்

கதாநாயகனான புகழ்.. குவியும் வாழ்த்துக்கள்


குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ், தற்போது கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.

கதாநாயகனான புகழ்.. குவியும் வாழ்த்துக்கள்
குக் வித் கோமாளி புகழ்


‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது பெரியத்திரையில் நடிக்க தொடங்கி

இருக்கிறார். சந்தானத்துடன் சபாபதி, அருண் விஜய்யின் யானை, உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்திலும், சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார்.

இவர் ஆரம்பத்தில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதாகவும், பின்பு தனியார் தொலைக்காட்சியில் கிடைத்த வாய்ப்பை

சரியாக பயன்படுத்தி கடின உழைப்பினால் முன்னேறியதாகவும் அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சினிமாவில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் தோன்றி அனைவரையும் கவர்ந்து வந்த புகழ், தற்போது கதாநாயகனாக களம் இறங்கியிருக்கிறார். மிஸ்டர் சூ கீப்பர் (Mr Zoo

Keeper) என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரை புகழ் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்

Posted in சினிமா

கவர்ச்சி உடையில் தமன்னா

கவர்ச்சி உடையில் தமன்னா

தங்கம் போன்று மின்னும் நிறம் கொண்ட அழகிகளில் ஒருவரான நடிகை தமன்னா வித்யாசமான கவர்ச்சி உடையில் வலம் வந்தார்.

வித்யாசமான கவர்ச்சிகாட்டும் உடையில் தமன்னா


தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மராத்தி மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் 5 படங்களிலும், இந்தியில் மூன்று படங்களிலும்

நடித்து கொண்டிருக்கிறார். சிம்ரனுக்கு அடுத்தபடியாக ‘இடுப்பழகி’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

ஹோலி பண்டிகையையொட்டி தமன்னாவுக்கு புதிய உடை அணிந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அழுக்கு படிந்த, கிழிந்த மற்றும் பாதங்களை முழுவதுமாக மூடக்கூடிய

வகையில் வித்தியாசமான ஒரு பேண்ட் மற்றும் கவர்ச்சிகரமான உடை அணிந்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

ஹோலி பண்டிகையை கொண்டாட வேறு நல்ல உடை இல்லையா?’, ‘இப்படியா கவர்ச்சியாக உடை அணிந்து வருவதா?’ என்று வசை பாடுகிறார்கள். ‘கண்ணாடி

போன்ற இந்த உடை உங்களுக்கு கச்சிதமாக இருக்கிறது’, என்று தமன்னாவுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து பதிவிடுகிறார்கள்

    Posted in சினிமா

    கார் விபத்தில் நடிகை மரணம்

    கார் விபத்தில் நடிகை மரணம்

    .தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக நடித்து மக்களிடம் பிரபலம் ஆனவர் காயத்ரி. படங்களில் நடிப்பதை தாண்டி வெப் சீரியஸ், தொலைக்காட்சி தொடர்கள் போன்றவற்றிலும் நடித்துள்ளார்.


    நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எல்லோரும் கொண்டாட காயத்ரியும் தனது நண்பர்களுடன் ஹோலி பண்டிகை

    கொண்டாடியுள்ளார். கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது படு பயங்கர கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார்.


    கார் மருத்துவமனை முன் வேலை செய்துகொண்டிருந்த பெண் மீது மோத அந்த பெண்ணும், நடிகை காயத்ரியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காரை

    ஓட்டிவந்த அவரது நண்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    மது போதையில் காயத்ரியின் நண்பர் கார் வேகமாக ஓட்டியதே விபத்தின் காரணம்

    என கூறப்படுகிறது. 26 வயதான நடிகையின் இந்த மரணம் தெலுங்கு சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

      Posted in சினிமா

      இணையத்தை கலக்கும் ஜாலியோ ஜிம்கானா

      இணையத்தை கலக்கும் ஜாலியோ ஜிம்கானா

      விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் இடம் பெற்றிருக்கும் 2வது சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

      இணையத்தை கலக்கும் ஜாலியோ ஜிம்கானா…. பீஸ்ட் 2வது சிங்கிள்
      பீஸ்ட் படத்தில் விஜய் – பூஜா ஹெக்டே


      ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே

      கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

      விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. தற்போது பின்னணி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல்

      மாதம் வெளியாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முதல் சிங்கிளான அரபிக் குத்து பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

      இந்நிலையில் 2வது சிங்கிளான ‘ஜாலியோ ஜிம்கானா…’ என்ற பாடலை படக்குழுவினர்

      இன்று வெளியிட்டனர். விஜய் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து இணையத்தை கலக்

        Posted in சினிமா

        அந்த நடிகையை திருமணம் செய்யும் இந்த நடிகர்

        அந்த நடிகையை திருமணம் செய்யும் இந்த நடிகர்

        டார்லிங், சார்லி சாப்ளின் படங்களில் நடித்த நிக்கி கல்ராணியை ஈரம் படம் அறிமுகமான நடிகர் ஆதி திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

        நிக்கி கல்ராணியை திருமணம் செய்யும் ஆதி
        ஆதி – நிக்கி கல்ராணி


        தமிழில் டார்லிங் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்

        . நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் யாகவா ராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயபட்டதாக கூறப்பட்டது. இதனை அவர்கள் மறுக்கவில்லை.

        ஆதி வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சிகளில் நிக்கி கல்ராணி பங்கேற்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி நெருக்கத்தை உறுதிப்படுத்தியது. மிருகம் படத்தில் ஆதி

        அறிமுகமாகி ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம், யு டர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

        ஆதி – நிக்கி கல்ராணி

        இந்த நிலையில் நிக்கி கல்ராணிக்கும், ஆதிக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும்

        கூறப்படுகிறது. ஆனாலும் இதனை இருவர் தரப்பிலும் உறுதிப்படுத்தவில்லை

          Posted in சினிமா

          ஏமாற்றம்தான்-நம்பிக்கையுடன் இருக்கிறேன் – ஹன்சிகா

          ஏமாற்றம்தான்-நம்பிக்கையுடன் இருக்கிறேன் – ஹன்சிகா

          தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா, தன்னுடைய படம் பற்றி சமீபத்தில் பேட்டியளித்து இருக்கிறார்.

          ஏமாற்றம்தான்… ஆனால் நம்பிக்கையுடன் இருக்கிறேன் – ஹன்சிகா
          ஹன்சிகா


          நடிகை ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மஹா’. இது அவருடைய 50வது திரைப்படம். இதில் நடிகர் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

          மேலும் ஶ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா, பேபி மானஸ்வி, மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

          மஹா படம் நீண்ட காலமாக உருவாகி வருகிறது. இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. உங்களின் 50வது படம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்பது

          உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதா? என்று ஹன்சிகாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஆமா, வருத்தமாக இருக்குது என்று நான் சொல்லமாட்டேன், ஆனால் அதற்கு இவ்வளவு காலம் எடுத்துக்கிட்டிருக்கிறது ஏமாற்றம் என்று சொல்லலாம்.

          ஆனால் இது எனது 50வது படம் என்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இன்று என்னுடைய 55வது படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். ஆனால் பரவாயில்லை!

          ஒவ்வொரு படத்திற்கும் விதி-ன்னு ஒன்று இருக்கிறது. அது மாதிரி மஹா படத்திற்கும் அதன் விதி இருக்கிறது. மஹா ரிலீசை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். விரைவில்

          எல்லாம் சீராகும். இந்த தாமதம் உள்பட எல்லாமே படத்திற்கு சாதகமாக அமையும் என்றும் நம்புகிறேன்’ என்றார்

            Posted in சினிமா

            மனைவி ஐஸ்வர்யாவை வாழ்த்திய தனுஷ்

            .மனைவி ஐஸ்வர்யாவை வாழ்த்திய தனுஷ்
            தனுஷ்-ஐஸ்வர்யா இருவரின் திருமண வாழ்க்கை பிரிவிற்கு பிறகு தனுஷ், ஐஸ்வர்யாவை வாழ்த்திய விதத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

            ஐஸ்வர்யாவை வாழ்த்திய தனுஷ்… ரசிகர்கள் அதிர்ச்சி
            தனுஷ் – ஐஸ்வர்யா


            நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தற்போது ‘பயணி’ என்ற இசை ஆல்பம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த இசை ஆல்பம் தமிழில் ‘பயணி’, தெலுங்கில் ‘சஞ்சாரி’, மலையாளத்தில் ‘யாத்ரக்காரன்’, இந்தியில் ‘முசாபிர்’ என்ற பெயரில் தயாராகி உள்ளது.

            இந்த ‘பயணி’ இசை ஆல்பத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் வரிகள் எழுதியுள்ளார். இந்த பாடலை நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த

            தனுஷ்- ஐஸ்வர்யா, கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை

            முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர்.

            இந்த நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பயணி இசை ஆல்பத்தை பகிர்ந்து, ஐஸ்வர்யாவை தோழி என குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்து

            தெரிவித்தார். இந்நிலையில், தனது இசை ஆல்பத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த தனுஷுக்கு,
            ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

              Posted in சினிமா

              இடுப்பழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த ஷெரின்

              இடுப்பழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த ஷெரின்

              சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்த நடிகை ஷெரின் இடுப்பழகை காட்டி எடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

              இடுப்பழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த ஷெரின்
              ஷெரின்


              செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஷெரின். தெலுங்கு, கன்னடம்,

              மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.

              பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது குண்டாக இருந்த ஷெரின் அதன்பின் 10 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார். அவ்வப்போது சமூக

              வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷெரின் தற்போது மஞ்சள் நிற சேலையில் இடுப்பழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

                Posted in சினிமா

                ரஜினியுடன் இணையும் பிரியங்கா மோகன்

                ரஜினியுடன் இணையும் பிரியங்கா மோகன்

                எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரியங்கா மோகன், அடுத்ததாக ரஜினியுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

                ரஜினியுடன் இணையும் பிரியங்கா மோகன்
                பிரியங்கா மோகன்


                சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் டாக்டர். நெல்சன் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகிய அறிமுகமான இவர் தன்

                நடிப்பால் முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்து, பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து பாராட்டை பெற்றார் பிரியங்கா மோகன்.

                இவர் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அறிமுக

                இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். டான் திரைப்படம் வருகிற மே மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

                இந்நிலையில், நடிகை பிரியங்கா மோகன் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 169 படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

                  Posted in சினிமா

                  அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை.. விஜய் தரப்பு விளக்கம்

                  அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை.. விஜய் தரப்பு விளக்கம்

                  முன்னணி நடிகராக இருக்கும் விஜய் பற்றி வெளியான தகவல்களுக்கு அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

                  அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை.. விஜய் தரப்பு விளக்கம்
                  விஜய்


                  விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இப்படத்திற்கு

                  இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து பாடல் அனைவரையும் கவர்ந்து பல சாதனைகளை முறியடித்தது.

                  சமீபத்தில் ஹைதராபாத் படப்பிடிப்பிலிருந்த நடிகர் விஜய்யை பிரஷாந்த் கிஷோர் சந்தித்தாகவும், ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்ததாகவும் செய்திகள்

                  வெளியானது. இந்த சந்திப்பில் தமிழக அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், விஜய் தரப்பில் இந்த சந்திப்பு நடைபெறவில்லை என்றும், சந்தித்ததாக வந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி என்று கூறப்பட்டுள்ளது

                    Posted in சினிமா

                    .திருட்டில் ஈடுபட்ட பிரபல நடிகை கைது

                    .திருட்டில் ஈடுபட்ட பிரபல நடிகை கைது

                    கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியில் திருட்டில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவரைப் பொலிஸார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                    மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் கடந்த 12 ஆம் திகதி சர்வதேச புத்தகக் கண்காட்சியொன்று நடைபெற்றது. இக் கண்காட்சியில் கலந்து கொண்ட பிரபல தொலைக்காட்சி நடிகையான ‘ரூபா தத்தா‘ குப்பைக் கூடை ஒன்றில் ஒரு பணப்பையை எறிவதைப் பொலிஸ் அதிகாரி ஒருவர் கண்டுள்ளார்.

                    இதனையடுத்து இது குறித்து ரூபா தத்தாவிடம் அவர் விசாரித்தபோது, அவர் தடுமாற்றமாய் பதிலளித்தார்.

                    இதனால் சந்தேகம் அடைந்த குறித்த பொலிஸ் அதிகாரி நடிகையின் பையை பரிசோதித்தபோது அதில் பல பணப்பைகளும், சுமார் 75 ,000 ரூபா பணமும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

                    விசாரணையில் பணப்பையைக் குப்பைக் கூடையில் போட்டு, அதை மற்றவர்களுடையதா என்று கேட்டு அவர்களின் கவனத்தைத் திசை திருப்பி அவர்களது பணப்பையைத் திருடுவதை நடிகை ரூபா தத்தா வழக்கமாக வைத்திருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

                    இந்நிலையில் அவரைக் கைது செய்த பொலிஸார் இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

                    Posted in இலங்கை செய்திகள்

                    கோட்டா அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

                    கோட்டா அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

                    இலங்கையில் ஆளும் கோட்டா அரசின் ஆட்சி காலத்தில் நாடு நாசமாக்க பட்டுள்ளது

                    ,இவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாப்பபோம் என கூறியவாறு எதிர்க்கட்சியினர் கொழும்பு பகுதியில் பெரும் பேரணி ஒன்றை நடத்துகின்றனர்

                    இலங்கையில் எதிர்க்கட்சி பலம் இழந்துள்ள நிலையிலேயே இவ்விதமான

                    செயல்பாடுகளை ஆளும் அரசு புரிந்து வருகிறது என்ற குற்ற சாட்டு முன்வைக்க

                    பட்டுள்ள நிலையில் இந்த போராட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிட தக்கது

                      Posted in சினிமா

                      விஜய் வழக்கு- தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதி

                      விஜய் வழக்கு- தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதி

                      சொகுசு கார் இறக்குமதி செய்த விவகாரத்தில் விஜய் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறார்.

                      விஜய் தொடர்ந்த வழக்கு… தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதி
                      விஜய்


                      நடிகர் விஜய் கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். இந்தக் காருக்கான நுழைவு வரியை அவர் செலுத்த தாமதப்படுத்தியதாக கூறி வணிக வரித்துறை அபராதம் விதித்தது.

                      இந்த நிலையில் விஜய் தரப்பில், ஏற்கனவே நுழைவு வரி செலுத்தப்பட்டுவிட்டது. அதிகப்படியான அபராதம் விதித்ததை எதிர்த்தே வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆகவே

                      அபராதம் விதிப்பது தொடர்பான நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்தார்.

                      விஜய்

                      இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது வணிகவரித்துறை சார்பில் நடிகர் விஜய்யின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று

                      கூறியது. இது குறித்து மேலும் சில விபரங்களைக் கேட்ட நீதிபதி, நடிகர் விஜய் வழக்கின் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்

                        Posted in சினிமா

                        கவர்ச்சியில் கலக்கும் நடிகை

                        கவர்ச்சியில் கலக்கும் நடிகை

                        இதய திருடன், மச்சக்காரன், ராஜாதி ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்த காம்னா, மீண்டும் தமிழ் படங்களில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

                        ரீ-என்ட்ரி கொடுக்கும் காம்னா ஜெத்மலானி
                        காம்னா


                        கடந்த 2005 ஆம் ஆண்டு, ஜெயம் ரவி நடித்த ‘இதயதிருடன்’ படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் மனதை தன்னுடைய கவர்ச்சியால், அழகாலும் கொள்ளை கொண்டவர்,

                        நடிகை காம்னா. இப்படத்திற்குப் பிறகு ஜீவனுடன் ‘மச்சக்காரன்’, லாரன்ஸுடன் ’ராஜாதி ராஜா’ ’காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

                        இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். கவர்ச்சியால் பல ரசிகர்களை தன் வசமாக்கிய காம்னா, தற்போது சிறிய

                        இடைவெளிக்குப் பிறகு அதே அழகுடன் ரசிகர்களை கவர மீண்டும் களமிறங்க இருக்கிறார்.

                        சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் காம்னா, சமீபத்தில் வெளியிட்டுள்ள

                        புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் பலர் இன்னும் அதே அழகுடன் இருப்பதாகவும் பதிவு செய்து வருகிறார்கள்.

                        காம்னா

                        இந்நிலையில், நடிகை காம்னா, தமிழில் நடிக்க ஆர்வமாக கதைகளை கேட்டு வருகிறார். கதைக்கு ஏற்றவாறு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க தயாராகி

                        இருக்கும் காம்னா, விரைவில் தான் நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்களை அறிவிக்க இருக்கிறார்.

                          Posted in சினிமா

                          நயன்தாரா ரகசிய திருமணம்

                          நயன்தாரா ரகசிய திருமணம்

                          நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக ரசிகர்கள் சில புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

                          நயன்தாரா ரகசிய திருமணம்?.. வைரலாகும் புகைப்படம்
                          விக்னேஷ் சிவன் – நயன்தாரா


                          நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்

                          இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6

                          ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

                          சமீபத்தில் நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை தம்புச்செட்டி தெருவில் உள்ள காளியம்மாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சென்னை மாநகராட்சியின் புதிய பெண் மேயர்

                          பிரியா ராஜனை சந்தித்து பேசி எடுத்துக் கொண்ட புகைப்படமும் வைரலானது. இந்நிலையில், அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படத்தில், நடிகை நயன்தாரா நெற்றியில்

                          குங்குமத்துடன் இருப்பதை போன்று தெரிகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ரகசிய


                          திருமணம் செய்துக்கொண்டதாக பதிவிட்டு, சமூக வலைத்தளங்கில் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            தந்தையை குற்றி கொன்ற மகன்

                            தந்தையை குற்றி கொன்ற மகன்

                            இலங்கை கொச்சிக்கடை பகுதியில் போதையில் வீடு வந்த தந்தை உணவு

                            கேட்டுளளார் ,அப்பொழுது அதனை தயாரிக்க மகளுக்கும் தந்தைக்கும் இடையில்

                            வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது ,இவ்வேளை தந்தைக்கும் சகோதரிக்கும் இடையில்

                            ஏற்பட்ட வாய்தகராறு முற்றிய நிலையில் சீற்றம் உற்ற மகன் ,சகோதரியை தந்தை தாக்க முற்பட்ட பொழுது கத்தியை எடுத்து குற்றியுள்ளார்

                            இதில் சம்பவ இடத்தில தந்தை பலியாகியுள்ளார் ,22 வயதுடைய மகன் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்

                            ஒரு உணவு தயரிப்பால் ஒரு உயிர் பறிபோனது ,இன்னொரு உயிர் சிறையில் வாட போகிறது ,இது யார் குற்றம் ..?

                              Posted in சினிமா

                              பட வாய்ப்பு இல்லாததால் திருமணம் செய்ய ஆசைப்படும் நடிகை

                              பட வாய்ப்பு இல்லாததால் திருமணம் செய்ய ஆசைப்படும் நடிகை

                              பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர், பட வாய்ப்பு இல்லாததால் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறாராம்.

                              திருமணம் செய்ய ஆசைப்படும் நடிகை

                              தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து வரும் நடிகைக்கு தற்போது சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறாராம். நடிகை நடித்த ஒரு

                              சில படங்கள் ரிலீசாகாமல், பிரச்சனைகளில் சிக்கி இருக்கிறதாம். இதனால் நடிகை திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறாராம்.

                              திருமணம் தற்போது வேண்டாம் என்று தவிர்த்து வந்த நடிகை, தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் தன் மனதை மாற்றி இருக்கிறாராம்.

                              இதற்காக பெற்றோர்கள் நடிகைக்காக வலைவீசி மாப்பிள்ளை தேடி வருகிறார்களாம்

                                Posted in சினிமா

                                நீச்சலுடையில் கலக்கும் காதல் இளவரசி ஓவியா

                                நீச்சலுடையில் கலக்கும் காதல் இளவரசி ஓவியா

                                பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஓவியா கடலில் குளிக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

                                நீச்சலுடையில் ஓவியா… வைரலாகும் புகைப்படங்கள்
                                ஓவியா


                                களவாணி படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது

                                ஓவியாவுக்கு தான். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார்.

                                ஓவியா

                                இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதோடு தத்துவங்களையும் பதிவு செய்வார்.

                                இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிகினி உடையில் கடலில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

                                ஓவியா

                                மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ’கவலைகளை கடலில் கரைத்து விடுங்கள்’

                                என்றும் அவர் பதிவு செய்துள்ளார். ஓவியாவின் இந்த கிளாமர் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்

                                  Posted in சினிமா

                                  தொழிலபதிபரை மணந்தார் பாடகி

                                  தொழிலபதிபரை மணந்தார் பாடகி

                                  தமிழ் சினிமாவில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வரும் ஸ்வாகதா தொழிலதிபரை திருமணம் செய்திருக்கிறார்.

                                  தொழிலபதிபரை மணந்தார் பாடகி ஸ்வாகதா
                                  கணவருடன் ஸ்வாகதா


                                  தமிழ் சினிமாவில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் ஸ்வாகதா. இவர் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் அக்‌ஷய் குமாரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். கங்கை நதிக்கரையில் இமயமலை அடிவாரத்தில் ரிஷிகேஷில்

                                  இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. மார்ச் 4 ஆம் தேதி நடந்த இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

                                  தனது திருமண விழாவின் படங்களை தற்போது பகிர்ந்து கொண்ட ஸ்வாகதா, “எங்கள் பெற்றோர்கள், எங்கள் குரு மற்றும் எங்களை ஒன்றிணைத்த அனைவரின் ஆசியுடன்,

                                  நான் மார்ச் 4, 2022 அன்று ரிஷிகேஷில் ஆற்றங்கரையில் நடந்த அழகான திருமண விழாவில் அக்ஷய் குமாரை மணந்தேன். கங்கா” என்று தெரிவித்துள்ளார்.

                                  ஸ்வாகதா

                                  ஸ்வாகதா தமிழில் சில பாடல்களையும், காயல் மற்றும் இன்ட்ரா ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது