Tag: கைது
பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் 803 பேர் கைது
பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் 803 பேர் கைது
பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தியதில் 803 பேர் கைது செய்யப்பட்டனர் .விசேட பொலிஸ் நடவடிக்கையின் பொழுதே மேற்படி கைது நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது .
யுக்திய நடவடிக்கையின் தொடர்ச்சியே இந்த கைது நடவடிக்கை என பொலிசார் தெரிவித்துள்ளனர் .கைதானவர்கள் பலர் தேட படும் குற்றவாளிகளாக காணப்பட்டனர் .
யாவரும் நீதிமன்றில் பரப்படுத்த சிறை தணடனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
போதைவஸ்து ஒழிப்பு சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர் .
கோடி மோசடி பணம் திருடிய 500 கோடி தம்பதிகள் கைது
கோடி மோசடி பணம் திருடிய 500 கோடி தம்பதிகள் கைது
கோடி மோசடி பணம் திருட்டு அம்பலம் ,500 கோடி கொள்ளையடித்த தம்பதிகள் கைதுசெய்ய பட்டுள்ளனர் .
பிரமிட் திட்டத்தின் கீழ் இந்த மோசடியில் தம்பதிகள் ஈடுபட்டனர் என குற்றம் சாட்ட பட்டுள்ளது .
மோசடி பணம் கொள்ளையில் ஈடுபட்ட தம்பதிகள் மறைந்திருந்த நிலையில் இவர் கைது செய்ய பட்டுள்ளனர் .
இந்த மோசடி தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்ட நிலையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது .
பொலிசார் நடத்திய யுக்திய நடவடிக்கையில் 814 பேர் கைது
பொலிசார் நடத்திய யுக்திய நடவடிக்கையில் 814 பேர் கைது
பொலிசார் நடத்திய யுக்திய நடவடிக்கையில் 814 பேர் கைது செய்யப்பட்டனர் ,கடந்த 24மணித்தியாலத்தில் யுக்திய நடவடிக்கையில் பொலிசாரால் இந்த கைது இடம்பெற்றுள்ளது .
இந்த யுக்திய நடவடிக்கை பொலீசாருடன் சிக்கிய நபர்கள் பல்வேறு பேட் குற்ற செயல்களுடன் தொடர்பு பட்டவர்களாக காண படுகின்றனர் .
அதிக அளவான நபர்கள் போதைவஸ்துடன் கைது செய்ய பட்டுள்ளதாக யுக்தியை நடவடிக்கை பொலிசார் தெரிவித்துள்ளனர் .
Grid
இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை
இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை
இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடும்பெற்ற யுக்திய நடவடிக்கையில் பொலிசாரால் 955 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ,தொடரும் பொலிஸ் வேட்டையால் குற்றவாளிகள் பீதியில் உறைந்துள்ளனர் .
போதைவஸ்து குழுவினர் மற்றும் நீதிமன்றினால் தேட படும் குற்றவாளிகளை கைது செய்து வருவதாக யுக்திய நடவடிக்கை தலமை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார் .
பொலிசாரால் கைது செய்ய பட்ட குற்றவாளிகள் யாவரும் நீதிமன்றின் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் .
இலங்கையில் பெருகி வரும் போதைவஸ்து வர்த்தகத்தை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .
இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது
இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது
இந்தியா மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் ,நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்ளையே தாம் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது .
இந்தியா மீனவர்கள் இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி நாள்தோறும் மீன்பிடியில் ஈடு படுவதாகவும் ,இதனால் இலங்கை மீனவர்கள் கடல்தொழில் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக இலங்கை மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .
தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் ,இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது .
இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட ஆறு மீனவர்கள் மற்றும் இரண்டு படகுகள் யாவும் நீதிமன்றில் ஒப்படைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மீனவர்கள் பிடித்த மீன்கள் யாவும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது குறிப்பிட தக்கது .
ஈரானை சிக்க வைக்க டிரம்ப் சதுரங்க ஆட்டம்
ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு
பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்
வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை
மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது
மாணவியைக் காப்பாற்ற முயன்றபோது ஆசிரியர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது
யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 987 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 663 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகளிடம் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்து 324 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 638 சந்தேக நபர்களில் 12 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், போதைக்கு அடிமையான 14 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது
இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் தேடப்படும் பட்டியலில் இருந்த 14 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் கைது செய்யப்பட்ட 324 சந்தேக நபர்களில் 90 பேர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக திறந்த பிடியாணை நிலுவையில் உள்ளவர்கள் மற்றும் 222 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பாக திறந்த பிடியாணை நிலுவையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானை சிக்க வைக்க டிரம்ப் சதுரங்க ஆட்டம்
ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு
பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்
வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை
மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது
மாணவியைக் காப்பாற்ற முயன்றபோது ஆசிரியர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
விஸ்வ புத்த துறவி மீண்டும் கைது
விஸ்வ புத்த துறவி மீண்டும் கைது
தன்னை ‘விஸ்வ புத்தர்’ என்று அழைத்துக் கொண்ட காவி அங்கி அணிந்த துறவி, பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டதற்காக மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலகெடிஹேன பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் முதலில் டிசம்பர் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டார், அதன் பின் அவருக்கு கொழும்பு பிரதான நீதவான் ஜனவரி 8 ஆம் திகதி பிணை வழங்கியிருந்தார்.
விஸ்வ புத்த துறவி மீண்டும் கைது
விடுதலையின் பின், அவர் பல ஒன்லைன் பேச்சு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இதேவேளை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன் அவர் அடுத்த வாரம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் சமரவிக்கிரம நடத்திய நிகழ்ச்சி ஒன்றின் பொருட்டே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
வவுனியாவில் யுவதி ஒருவர் தாக்குதல் இரு சகோதரிகள் கைது
வவுனியாவில் யுவதி ஒருவர் தாக்குதல் இரு சகோதரிகள் கைது
வவுனியாவில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் இருவர், சனிக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிப்படைந்த யுவதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கழிவு நீர்மற்றும் வெள்ள நீர் என்பன வீதியில் உள்ள வாய்கால் ஊடாக செல்வது தொடர்பில் அப் பகுதியில் உள்ள இரு வீட்டாரிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.
குறித்த பகுதி வடிகாலமைப்பு சீரற்ற நிலையில் காணப்படுவதாலும், அனுமதியற்ற கட்டிடங்களின் காரணமாகவும் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு, குறித்த வீட்டாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதும் பிரதேச சபையால் அவை தீர்த்து வைக்கப்படவில்லை.
வவுனியாவில் யுவதி ஒருவர் தாக்குதல் இரு சகோதரிகள் கைது
இந்நிலையில், குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கழிவு நீர் வீதி வாய்கால் ஊடாக இன்னுமொரு வீட்டை அண்மித்து சென்றுள்ளது.
கழிவு நீரை வீதிக்கு விட்ட வீட்டாருடன் அயல் வீட்டில் வசிக்கும் யுவதி ஒருவர் முரண்பட்டுள்ளார். இதன்போது இரு வீட்டாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அது கைகலப்பாக மாறவே, குறித்த யுவதி மீது இரு பெண்கள் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் காயமடைந்த 22 வயதான யுவதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தாக்குதல் மேற்கொண்டதாக 30 மற்றும் 25 வயதுடைய சகோதரிகளான இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வவுனியாவில் அரச திணைக்களம் ஒன்றில் உத்தியோகத்தராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள பல வீதிகளில் வடிகாலமைப்பு சீர்செய்யப்படாத நிலை காணப்படுவதுடன், மழை காரணமாக பல வீடுகள் வெள்ளத்தினால் பாதிப்படைந்த போதும் வவுனியா
தெற்கு பிரதேச சபை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்காது அசமந்த போக்குடன் செயற்பட்டு வருகின்றமையே இவ்வாறான சச்கரவுகள் ஏற்பட வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாமாவை கடத்தி மிரட்டிய மன்மதன் கைது
மாமாவை கடத்தி மிரட்டிய மன்மதன் கைது
கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் கர்ப்பமான தங்கையை கவனித்துக்கொள்ள தங்கையின் வீட்டுக்கு அக்காள் சென்றுள்ளார் அப்போது தங்கையின் கணவனுக்கும் அக்காவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் இனிமை கண்டனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
சென்னை கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல் (வயது 55). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு சோனியா (23), சொர்ணா (23) என 2 மகள்கள் உள்ளனர். சோனியா, 4 வருடங்களுக்கு முன்பு காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆழ்வான் (35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 1 வருடங்களுக்கு முன்பு சோனியா கர்ப்பமானார். அவரை கவனித்து கொள்ள சொர்ணா, தனது அக்காள் வீட்டுக்கு சென்றார்.
அப்போது அவருக்கும், ஆழ்வானுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மனைவிக்கு தெரியாமல் சொர்ணாவை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
மாமாவை கடத்தி மிரட்டிய மன்மதன் கைது
இந்த உண்மை சோனியாவுக்கு தெரிந்த பிறகு இருவரையும் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில் தனித்தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார்.
ஆழ்வானுக்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் நடத்த முடியாமல் குடிப்பழக்கத்துக்கு ஆளானார். அக்காள்-தங்கை இருவரையும் அடித்து உதைத்து சித்திரவதை செய்தார் இதனால் இருவரும் கொடுங்கையூரில் உள்ள தங்கள் தாய் வீட்டுக்கு வந்துவிட்டனர்.
தனது 2 மனைவிகளையும் அழைத்துச்செல்ல மாமனார் வீட்டுக்கு கடந்த 12-ந்திகதி ஆழ்வான், வந்தார். அப்போது அவருக்கும், மாமனார் சாமுவேலுக்கும் தகராறு ஏற்பட்டது. மறுநாள் சமாதானமாக பேசுவதுபோல் மாமனார் சாமுவேலை அழைத்துச்சென்ற ஆழ்வான், மாமனாருக்கு மதுபானம் வாங்கி கொடுத்தார். போதை தலைக்கேறியதும் அவரை கொடுங்கையூரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்தார்.
பின்னர் தனது மனைவிகளுக்கு போன் செய்து, “உங்கள் தந்தையை கடத்தி விட்டேன். என்னுடன் குடும்பம் நடத்த இருவரும் வராவிட்டால் உங்கள் தந்தையை கொன்றுவிடுவேன்” என மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்காள்-தங்கை இருவரும் கொடுங்கையூர் பொலிசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் பொலிஸார் செல்போன் சிக்னலை வைத்து மாதவரம் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் அடைத்து வைத்திருந்த சாமுவேலை மீட்டனர். மேலும் ஆழ்வானையும் கைது செய்து விசாரித்தனர்.
அதில் மதுபோதைக்கு அடிமையான சாமுவேல், மகள்களின் வாழ்க்கையை பற்றி நினைக்காமல் மருமகனுடன் சேர்ந்து கடத்தல் நாடகமாடியது தெரிந்தது.
அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பிய பொலிஸார், மருமகன் ஆழ்வானை கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் அவர் ஏற்கெனவே தனக்கு 2 திருமணம் ஆனதை மறைத்து தற்போது அக்காள்-தங்கை இருவரையும் திருமணம் செய்ததும் தெரியவந்தது. கைதான ஆழ்வான் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
877 சந்தேக நபர்கள் கைது
877 சந்தேக நபர்கள் கைது
நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையான ‘யுக்திய’ தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நேற்ற (15) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் 877 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் போது 475 கிராம் ஹெரோயின், 501 கிராம் ஐஸ் மற்றும் 126 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
பிரிட்டனில் பங்கு சந்தையை குழப்பி சரிவை ஏற்படுத்த முனைந்த 6 பலஸ்தீனியர் கைது
பிரிட்டனில் பங்கு சந்தையை குழப்பி சரிவை ஏற்படுத்த முனைந்த 6 பலஸ்தீனியர் கைது
பிரிட்டனில் பங்கு சந்தை வர்த்தகத்துக்கு இடையூறு விளைவித்து மிக பெரும் இழப்பை ஏற்படுத்த முனைந்த பலஸ்தீனத்தை சேர்ந்த ஆறு பேரை தாம் கைது செய்துள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது
இவ்வாறு கைதானவர்களில் மூன்று பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் என தெரிவிக்க பட்டுள்ளது .
திங்கட்கிழமை பங்கு வர்த்தகத்தை குழப்பும் நோக்குடன் இவர்கள் செயல்பட திட்டமிட்ட நிலையில், லீவர்போல் ,கிழக்கு லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்கிறது காவல்துறை .
24 மணித்தியாலங்களில் யுக்திய சுற்றிவளைப்புகளில் 771 கைது
24 மணித்தியாலங்களில் யுக்திய சுற்றிவளைப்புகளில் 771 கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய சுற்றிவளைப்புகளில் 771 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
192 கிராம் ஹெரோயின், 101 கிராம் ஐஸ் மற்றும் 10,611 போதை மாத்திரைகளும்
இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
12 இந்திய மீனவர்கள் கைது
12 இந்திய மீனவர்கள் கைது
நாட்டின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் வடக்கடலில் நேற்று (13) பிற்பகல் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 03 மீன்பிடி படகுகளில் இருந்த இந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
12 இந்திய மீனவர்கள் கைது
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் படகுகள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் பலவற்றை அவதானித்த
வடக்கு கடற்படையினர், அந்த மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
42 248 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை
42 248 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 42,248 பேரின் பெயர் பட்டியல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி யுக்திய நடவடிக்கையின் கீழ் அவர்களை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
அந்த சந்தேக நபர்களில், 35,505 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் , இதுவரை கைது செய்யப்படாத 4,258 சந்தேக நபர்களும், குற்றங்களுக்காக தேடப்படும் 807 (2022 இல்) மற்றும் 1,678 (2023 இல்) சந்தேக நபர்களாக 2,485 பேர் அடங்கியுள்ளனர்.
42 248 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை
நாளை (14) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் யுக்திய நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டுமென பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.
மேற்கண்ட 3 பட்டியலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடுத்த ஒரு மாத காலத்திற்குள் தமது காவல்துறையை உள்ளடக்கிய நடவடிக்கைகளை
மேற்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளையும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது
யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது
யுக்திய விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் இன்று (12) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால நடவடிக்கைகளில் 863 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனைகளின் போது 303 கிராம் ஹெரோயின், 141 கிராம் ஐஸ் மற்றும் 1250 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

நடிகை ஒருவருக்கு தொல்லை கொடுத்த பொலிஸ் பரிசோதகர் கைது
நடிகை ஒருவருக்கு தொல்லை கொடுத்த பொலிஸ் பரிசோதகர் கைது
சிங்கள நடிகை ஒருவருக்கு பாலியல் தொல்லை செய்ததாக சந்தேகத்தின் பேரில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான பொலிஸ் பரிசோதகர் 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நடிகை நேற்றிரவு சந்தேகத்திற்குரிய பொலிஸ் பரிசோதகர் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டியில் பயணம் செய்துள்ளார்.
சந்தேகநபர் பிலியந்தலை ஜாலியாகொட பிரதேசத்தில் முச்சக்கரவண்டியை நிறுத்தி நடிகையிடம் தவறாக நடந்துக் கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் குறித்த நடிகை பிலியந்தலை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகத்திற்குரிய பொலிஸ் பரிசோதகர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
300 கிலோ கிராம் லீக்ஸ் திருட்டு இருவர் கைது
300 கிலோ கிராம் லீக்ஸ் திருட்டு இருவர் கைது
விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த இலீக்சில், சுமார் 300 கிலோ கிராம் இலீக்சை திருடிச்சென்று விற்பனைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை ஹோல்டன் தோட்டத்தில் சனிக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.
300 கிலோ கிராம் லீக்ஸ் திருட்டு இருவர் கைது
விவசாய தோட்டத்தின் உரிமையாள செய்த முறைப்பாட்டை அடுத்து களவாடிய இலீக்சை நோர்வூட் நகரில் விற்பனை செய்தனர் என்றக்
குற்றச்சாட்டின் கீழ் இருவரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும், ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் விநாயகமூர்த்தி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 10 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது
24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது
இன்று (05) அதிகாலை முடிவடைந்த 24 மணிநேரத்தில் பொலிஸாரின் “யுக்திய” விசேட நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்சாட்டுகளில் 1184 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 337 கிராம் 758 மில்லிகிராம் ஹெரோயின், 242 கிராம் 372 மில்லிகிராம் ஐஸ், 06 கிலோகிராம் கஞ்சா, 7,772 கஞ்சா செடிகள், 03 கிலோகிராம் 694 கிராம் மாவா, 55 கிராம் ஹஷிஸ், 1,221 மாத்திரைகள் மற்றும் 1 கிலோ 226 கிராம் குஷ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கைது செய்யப்பட்ட 1184 சந்தேக நபர்களில் 59 சந்தேகநபர்களிடம் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது
அத்துடன், 23 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், போதைக்கு அடிமையான 49 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேநேரம், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 93 சந்தேக நபர்கள் இதன் போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
யாழில் பாதுகாப்பு உச்சம் மூவர் கைது
யாழில் பாதுகாப்பு உச்சம் மூவர் கைது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
யாழில் பாதுகாப்பு உச்சம் மூவர் கைது
யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் கொண்டுவரப்பட்டு முழுமையாக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு இன்று (04) வருகைதரும் ஜனாதிபதி, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் மாலை 3 மணி முதல் 5.30 வரை நடைபெறும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
அலைபேசிகள் இறக்குமதி இருவர் கைது
அலைபேசிகள் இறக்குமதி இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வரி செலுத்தாமல் வெளியே கொண்டு செல்லப்பட்ட 323 அலைபேசிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்றைய தினம் (03) கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் குறித்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அலைபேசிகளை ஏற்றிச் சென்ற வான் ஒன்றும் கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை புதிய 246 பயன்படுத்தப்படாத அலைபேசிககளும், வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் 77 அலைபேசிககளும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அலைபேசிகள் இறக்குமதி இருவர் கைது
கைது செய்யப்பட்டவர்களில் கொழும்பு-12 பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரும், வத்தளை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு இந்தக் அலைபேசிககளை எடுத்துச்
செல்லும் போது, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது,
கைப்பற்றப்பட்ட அலைபேசிகள், சட்டவிரோதமான முறையில் எடுத்துச் சென்ற இருவர் மற்றும் அவற்றை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய வேன் என்பன மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொட தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி





























