வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

1182 பேர் சந்தேக நபர்கள் கைது

1182 பேர் சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (02) முதல் இன்று (03) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,182 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

44 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1182 பேர் சந்தேக நபர்கள் கைது

அத்துடன், 3 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், போதைக்கு அடிமையான 47 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 138 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட நடவடிக்கையின் போது பின்வரும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹெரோயின் 287 கிராம்
ஐஷ் 246 கிராம்
கஞ்சா 5 கிலோ 400 கிராம்
கஞ்சா செடிகள் 19,052
மாவா 104 கிராம்
ஏஷ் 95 கிராம்
போதை மாத்திரைகள் 119

இஸ்ரேல் விமானத்தை கைப்பற்றிய ஹமாஸ்|71 போர் வாகனங்கள் அழிப்பு|33 மொசாட் கைது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானத்தை கைப்பற்றிய ஹமாஸ்|71 போர் வாகனங்கள் அழிப்பு|33 மொசாட் கைது

இஸ்ரேல் விமானத்தை கைப்பற்றிய ஹமாஸ்|71 போர் வாகனங்கள் அழிப்பு|33 மொசாட் கைது

இஸ்ரேல் விமானத்தை கைப்பற்றிய ஹமாஸ் அமைப்பினர் ,
போர்க்களத்தில் நடந்த திடீர் திருப்பம் .

71 இஸ்ரேலிய போர் வாகனங்கள் அழிப்பு,
பெரும் தாக்குதல் நடத்த முற்பட்ட 33 மொசாட் கைது.

video

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

நாடளாவிய ரீதியில் யுக்திய பொலிஸ் நடவடிக்கை 822 பேர் கைது

நாடளாவிய ரீதியில் யுக்திய பொலிஸ் நடவடிக்கை 822 பேர் கைது

நாடளாவிய ரீதியில் ‘யுக்திய’ பொலிஸ் நடவடிக்கையின் கீழ் நேற்று (01) முதல் இன்று (02) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, ​​273 கிராம் ஹெரோயின், 111 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 426 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

முகநூல் ஊடாக மோசடி இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

முகநூல் ஊடாக மோசடி இருவர் கைது

முகநூல் ஊடாக மோசடி இருவர் கைது

முகநூலில் பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் யாழ்ப்பாணம் – நெல்லியடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கு நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் பெண் போல பழகி காதல் வலையில் வீழ்த்தி நெல்லியடிக்கு வரவழைத்துள்ளார்.

இதனை நம்பி நெல்லியடிக்கு வந்த திருகோணமலை வாசியை கத்தி முனையில் அச்சுறுத்தி பணம் உடைமைகள் என்பன இருவரால் கொள்ளையடிக்கப்பட்டது.

முகநூல் ஊடாக மோசடி இருவர் கைது

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தார்.

விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இருவரை கைது செய்ததுடன் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பணம் உடமைகளையும் மீட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்ற நிலையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சுற்றிவளைப்பில் இதுவரை 17 837 பேர் கைது

சுற்றிவளைப்பில் இதுவரை 17 837 பேர் கைது

கடந்த மாதம் 17 ஆம் திகதியிலிருந்து இன்று (29) அதிகாலை 12.30 வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ சுற்றிவளைப்பில் 17,837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 10 கிலோ 510 கிராம் ஹெரோயின், 06 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 288 கிலோகிராம் கஞ்சா, 118 கிலோ 50 கிராம் மாவா, 35 கிலோகிராம் ஏஷ் போதைப்பொருள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுற்றிவளைப்பில் இதுவரை 17 837 பேர் கைது

850 சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,மேலும் 186 சந்தேகநபர்களிடம் சட்டவிரோத சொத்துகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போதைக்கு அடிமையான 1187 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகம் பட்டியலிட்டுள்ள சந்தேகநபர்களின் பட்டியலில் 4,665 பேரில் 1,375 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்

வீடியோ

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது

யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது

வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கோப்பாய் கொட்டைக்காடு பகுதியில் கசிப்புடன் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தின் மூன்று திறந்த பிடியாணைகள் விடுவிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்தபோது குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் கோப்பாய் பொலிஸாரும் இணைந்து கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சந்தேக நபரிடம் இருந்து 15 லீற்றர் கசிப்பும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

வீடியோ

மூன்று பாடசாலைகளில் திருடிய மாணவர்கள் இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மூன்று பாடசாலைகளில் திருடிய மாணவர்கள் இருவர் கைது

மூன்று பாடசாலைகளில் திருடிய மாணவர்கள் இருவர் கைது

முந்தல் பகுதியில் உள்ள மூன்று பாடசாலைகளில் உபகரணங்களை சேதப்படுத்தி , சுமார் 8 இலட்சம் பெறுமதியான பணம் மற்றும் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டின் கீழ் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட மாணவர்களால் திருடப்பட்டதாக கூறப்படும் மடிக் கணினி, மைக், வைபை ரவுட்டர், புரஜெக்டர் (Projector) உள்ளிட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

முந்தல் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை உள்ளிட்ட இரண்டு ஆரம்ப பாடசாலைகளில் உபகரணங்களை சேதப்படுத்தி , உபகரணங்களையும் பணத்தையும் திருடியுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று பாடசாலைகளில் திருடிய மாணவர்கள் இருவர் கைது

மேற்படி பாடசாலைகளில் நிர்வாக காரியாலயத்தில் இருந்த உபகரணங்களை சேதப்படுத்தி மாணவர்கள், 30 ஆயிரத்திற்கும் அதிக பணத்தை திருடி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு இரண்டு தடவைகள் குறித்த பாடசாலைகளுக்குள் புகுந்து பணத்தை திருடிய மாணவர்கள், பணம் கிடைக்காத போது அந்த பாடசாலைகளில் இருந்த உபகரணங்களை திருடிச் சென்றுள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

14 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

14 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 14 இலங்கைப் பிரஜைகளை பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இவர்கள் UU 0050 என்ற விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் பேருவளை, சிலாபம் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், இவர்கள் 21 – 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸார் இணைந்து இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

14 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

இதற்கிடையில், ரீயூனியன் தீவிற்கு மக்கள் சட்டவிரோதமாக நுழைவதை பிரெஞ்சு அரசாங்கம் பார்த்துக்கொண்டு இருக்காது என்றும், அத்தகைய நபர்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கடல் வழியாக மனித கடத்தல்காரர்களால் திட்டமிடப்பட்ட சட்டவிரோத குடியேற்றங்களில் ஈடுபடுவதையோ அல்லது அதற்கு ஆதரவளிப்பதையோ தவிர்க்குமாறு இலங்கை கடற்படை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது

வீடியோ

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

போதைப்பொருளுடன் சிக்கிய கொலையாளி

போதைப்பொருளுடன் சிக்கிய கொலையாளி

தொலைபேசி தரவுகளை பகுப்பாய்வு செய்ததன் மூலம் நபரொருவரை கொலை செய்த சந்தேகநபரை பொலிசாரால் கைது செய்ய முடிந்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி வத்தளை எலகந்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நபரொருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

போதைப்பொருளுடன் சிக்கிய கொலையாளி

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வத்தளை பொலிஸார் சந்தேக நபரை நேற்று (23) பிற்பகல் கைது செய்துள்ளனர்.

தொலைபேசி தரவு பகுப்பாய்வு அறிக்கைகள் மூலம் சந்தேக நபர் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்திய பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு 15 பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதானவர் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சோதித்த போது, ​​அவரிடம் இருந்து 04 கிராம்
150 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வீடியோ

மீனவர்கள் லொறி வலைகளை பறித்த இராணுவம் தொடரும் இராணுவ அடாவடி
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பகுதியில் வைத்து இழுவைப் படகுடன் 14 இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் நேற்று மாலை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் பதில் நீதிவான் சரோஜினிதேவி இளங்கோவனின் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அவரின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், கைதான இந்திய மீனவர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

மக்களை கண்ணை கட்டி இழுத்து செல்லும் இஸ்ரேல் இராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

மக்களை கண்ணை கட்டி இழுத்து செல்லும் இஸ்ரேல் இராணுவம்

மக்களை கண்ணை கட்டி இழுத்து செல்லும் இஸ்ரேல் இராணுவம்

மக்களை கண்ணை கட்டி இழுத்து செல்லும் இஸ்ரேல் இராணுவம் ,

அப்பாவி பலஸ்தீன மக்களை கைது செய்து இஸ்ரேல் இராணுவம் அவர்கள் கண்களை கட்டி இழுத்து செல்கிறது .

இவ்வாறு கைது செய்ய பட்ட அப்பாவி மக்கள் மீது கண்மூடி தனமான தாக்குதலையும் நடத்தி வருகிறது .

மக்களை கண்ணை கட்டி இழுத்து செல்லும் இஸ்ரேல் இராணுவம்

கண்களை கட்டி ஒருவர் பின் ஒருவராக நடத்தி அழைத்து செல்கிறது .

அத்தனை பேரும் துப்பாக்கி முனையில் அழைத்து செல்ல படும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ

தீப்பிடித்த படகினை தேடும் கடற்படையினர்
Posted in இலங்கை செய்திகள்

காரைநகர் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் கைது

காரைநகர் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் நேற்று(14) மாலை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஆறுபேரை, எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது.

தமிழகத்தின் நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீரியல் வளத் திணைக்களத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது, நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

குழந்தை படத்தைக் காட்டி மோசடி செய்த இருவர் கைது

குழந்தை படத்தைக் காட்டி மோசடி செய்த இருவர் கைது

நுவரெலியாவில் சிறு குழந்தையொன்றின் படங்களையும் மருத்துவ அறிக்கையையும் காட்டி பொதுமக்களிடம் பணமோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தையின் தந்தையால் தம்பனை பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் குழந்தையின் படங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையை சட்டவிரோதமாக பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குழந்தை படத்தைக் காட்டி மோசடி செய்த இருவர் கைது

பண நன்கொடைக்கான தொடர்புத் தகவலாக அவர்கள் தங்கள் கையடக்கத் தொலைபேசி எண்களைப் பயன்படுத்தியதாக விசாரணையில் கண்டறியப்பட்டது.

நுவரெலியா பஸ் நிலையத்திற்கு அருகில் சந்தேகநபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 25 மற்றும் 34 வயதுடைய இவர்கள் மிதிகம மற்றும் அஹங்கம பிரதேசங்களில் வசிப்பவர்கள்.

மேலும் நன்கொடையாக சேகரிக்கப்பட்ட ரூ. 10,900 பணத்தையும் பொலிஸார் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றினர்.

வீடியோ

எதிரியை வெட்ட புத்தூர் சந்தியில் வாளுடன் நின்றவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

எதிரியை வெட்ட புத்தூர் சந்தியில் வாளுடன் நின்றவர் கைது

எதிரியை வெட்ட புத்தூர் சந்தியில் வாளுடன் நின்றவர் கைது

யாழ்ப்பாணம் புத்தூர் சந்தியில் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன், வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (12) காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் பொலிஸார் திருட்டுச் சம்பவமொன்று தொடர்பான தேடுதல்

நடவடிக்கைக்காக சென்றுகொண்டிருந்தவேளை குறித்த சந்தேகநபர் புத்தூர் சந்தியில் வாளுடன் நின்றுள்ளார். இதன்போது பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

எண்ணெய் கடத்தல் கப்பலை மடக்கி பிடித்த ஈரான்
Posted in இலங்கை செய்திகள்

பெரும் கடத்தல் முறியடிப்பு இலங்கையர்கள் கைது

பெரும் கடத்தல் முறியடிப்பு இலங்கையர்கள் கைது

பெரும் கடத்தல் நடவடிகை ஒன்று முறியடிப்பு ராமநாதபுரம் பகுதியில் இலங்கையர்கள் கைது .

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு நேற்று (12) கடத்த முயன்ற சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் இந்திய கடலோர காவல் படையினரால் நடுக்கடலில் சுற்றிவளைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இந்திய கடலோர காவல் படை வீரர்களை கண்டதும் படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து தப்பித்ததால் படகுடன் வலி நிவாரணி மாத்திரை களை பறிமுதல் செய்து இந்திய காவல் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரும் கடத்தல் முறியடிப்பு இலங்கையர்கள் கைது

பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் போதை மாத்திரைகளாக இலங்கையில் பயன்படுத்தப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் இதன் மொத்த இந்திய மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீடியோ

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பௌத்த மதத்திற்கு எதிரியான பிக்கு கைது

பௌத்த மதத்திற்கு எதிரியான பிக்கு கைது

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விஷ்வ புத்தா என்ற பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கலகெடிஹேன பிரதேசத்தில் வைத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிக்கு இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.

சந்தேகநபரான பிக்கு நாளை (13) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு .

வீடியோ வருகின்றனர்

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் சுற்றிவளைப்பு 123 000 பேர் கைது

பொலிஸ் சுற்றிவளைப்பு 123 000 பேர் கைது


இந்த வருடத்தில் இதுவரையில் போதைப்பொருள் குற்றங்களுக்காக கிட்டத்தட்ட 1 இலட்சத்து 23 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

இந்தக் கைதுகளின் போது 61 கிலோ ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷாக்ய நாணயக்கார தெரிவித்தார்.

போதைப்பொருள் தொடர்பில் இதுவரை 831 பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஷாக்ய நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் இராணுவத்தல் பலநூறு மக்கள்கைது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தல் பலநூறு மக்கள் கைது


இஸ்ரேல் இராணுவத்தல் பலநூறு மக்கள்
கைது

இஸ்ரேல் ராணுவத்தால் பலநூறு பலஸ்தீன மக்கள்
கைது ,தொடரும் சுற்றிவளைப்பு

இராணுவ தளபதியை ஓட விட்ட தரமான சம்பவம் .

சொல்வதெல்லாம் உண்மை கடுப்பை கிளப்பிய வருக்கு கடுப்பை கிளப்பி விரட்டிய சம்பவம் .

தோல்வியின் பரிதாப கேடு

full video

150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் New படம் உள்ளே

150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே

இஸ்ரேல் இராணுவத்தினரால் தமது விடுதலைக்காக போராடி வரும் 150 ஹமாஸ் போராட்ட காரர்கள் கைது செய்ய பட்டுள்ளதாக அறிவித்துள்ளது

அவ்வாறு கைது செய்யப்பட்ட 150 போராளிகள் நிர்வாணப்படுத்த பட்டு கண்கள் கட்ட பட்டு , புதை குழி ஒன்றின் முன்பாக முட்டு காலில் இருத்தி வைக்க பட்டுள்ளனர்.


இலங்கை இராணுவம் தமிழர்களை முள்ளி வாய்களில் கொன்றது போன்று இங்கே இஸ்ரேல் இராணுவம் படுகொலையை நடத்துகிறது.

150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே

தாம் நடத்தும் அந்த கொலையை அப்படியே படம் பிடித்து பயம் இன்றி உலகிற்கு காண்பித்து மிரளவைத்துள்ளது .


மனிதம் நேயம் பற்றி பேசும் நாடுகள் இந்த விடயத்தில் குறட்டை விடுகின்றன
அந்த காட்சி படம் இதோ

150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஆயுதத்துடன் வந்தவர் விமான நிலையத்தில் கைது

ஆயுதத்துடன் வந்தவர் விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த விமான பயணி ஒருவர், இன்று (07) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

துருக்கி செல்வதற்காக வந்திருந்த, மினுவாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதுடைய இவர் அதிகாலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சூட்கேஸில் மறைத்து வைத்து வந்தவரே இவ்வாறு விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கு விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவரது பயணப் பொதிகளை பரிசோதித்த போது துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

வீடியோ