ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு தொடர்பில் இருவர் கைது

துப்பாக்கிச் சூடு தொடர்பில் இருவர் கைது

நீர்கொழும்பு, பமுனுகம வீதியில் லெல்லம அருகில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்திற்கு உதவிய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லவும் மறைத்துவைக்கவும் உதவியதற்காக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் பதுவத்தை மற்றும் அம்பலயாய ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய குற்றவாளிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் நீர்கொழும்பு பிரதேச குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்

காவலரை கட்டிப்போட்டு இரும்பு திருட்டு யாழில் திருட்டு கும்பல் அட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள்

கடையை உடைத்த காதலன் கைது கவலையுடன் காதலி

கடையை உடைத்த காதலன் கைது கவலையுடன் காதலி

தனது காதலியுடன் விடுமுறையை கழிப்பதற்கு பதுளையில் இருந்து அம்பாறைக்கு வந்த இளைஞனொருவர் விடுதிக்கு செலுத்த பணம் இல்லாத காரணத்தினால் கடையொன்றில் 10,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை பஸ் நிலையத்தில் யுவதியை இருக்குமாறு தெரிவித்து நகரின் பிரபல மொத்த விற்பனை நிறுவனத்திற்குள் நுழைந்த குறித்த இளைஞன் பணத்தை திருடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடையை உடைத்த காதலன் கைது கவலையுடன் காதலி

அம்பாறை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இளைஞனுடன் சென்ற யுவதியை பெற்றோரிடம் ஒப்படைத்த பொலிஸார், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா கைத்தொலைபேசியை திருடிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது

வவுனியா கைத்தொலைபேசியை திருடிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது

வவுனியாவில் முதியவர் ஒருவரை தாக்கி விட்டு கைத்தொலைபேசியை திருடிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்று (24) தெரிவித்தனர்.

வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் முதியவர் ஒருவர் வீதியால் சென்ற போது அவரை தாக்கி விட்டு அவரிடம் இருந்த கைத்தொலைபேசியை இருவர் பறித்துச் சென்றுள்ளனர்.

வவுனியா கைத்தொலைபேசியை திருடிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட முதியவர் வவுனியா பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் 17 மற்றும் 38 வயதுடைய இருவர் பொலிஸாரால் கைது செய்யபட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த இருவரும் முதியவரிடம் இருந்து பறித்து சென்ற கைத்தொலைபேசியை வவுனியா நகரப் பகுதியில் உள்ள மதுபான நிலையம் ஒன்றில் கொடுத்து விட்டு மது அருந்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த கைத்தொலைபேசியை பெற்றுக் கொண்ட மதுபானசாலை ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து திருடப்பட்ட கைத்தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின் குறித்த மூவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

டுபாய் பொலிஸாரால் கொலையாளிகள் கைது

டுபாய் பொலிஸாரால் கொலையாளிகள் கைது

பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஆதரவளித்த சிலர் டுபாயில் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஊரகஹா மைக்கல், புஸ்ஸே ஹர்ஷ மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்நாட்டில் உள்ள ஒரு இரவு விடுதியில் நடந்த மோதலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாய் பொலிஸாரால் கொலையாளிகள் கைது

கைது செய்யப்பட்ட 13 பேரும் பெலியத்தவில் ஐந்து பேரின் கொலைக்கு தலைமை தாங்கியதாக சந்தேகிக்கப்படும் கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உதவியாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கொஸ்கொட சுஜீ குறித்த குழுவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

எனினும், இந்த கைது தொடர்பாக டுபாய் இராச்சியம் இதுவரை அதிகாரபூர்வமாக இலங்கை அரசுக்கு அறிவிக்கவில்லை.

சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இரு நாட்டு பாதுகாப்பு தரப்பினரும் கலந்துரையாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

சென்னையிலிருந்து யாழுக்கு வந்தவர் கைது

சென்னையிலிருந்து யாழுக்கு வந்தவர் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் தமிழகத்தில் தலைமறைவாகி இருந்து, மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய நிலையல் புதன்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ் திரும்புவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , விமான நிலைய வளாகத்தில் காத்திருந்த பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் , நீண்ட காலமாக தேடப்பட்ட சந்தேக நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேக நபரை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி வெளியாகியது .

அந்த காட்சிகள் உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்களை கல்முனை நீதிமன்ற கட்டளைக்கமைய சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வழக்கு கடந்த வியாழக்கிழமை (15) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட

குற்ற கொலை தடயம் அழிப்பு

நிலையில் மௌலவியின் வேண்டுகோளிற்கமைய சிசிடிவி காணொளிகளை அழித்தவர்களை இனங்கண்டு கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய நேற்று (20) சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டு வாக்குமூலம்

பெறப்பட்ட நிலையில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் ரவூப் தலைமையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவனின் மர்ம மரணம் 4 சந்தேக நபர்கள் கைது

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் 30, 26, 22, 23 வயது மதிக்கத்தக்கவர்கள் ஆவர்.

அத்துடன் கைதான 4 சந்தேக நபர்களையும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் இன்று (21) ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த நீதிமன்ற தவணையின் போது விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட குறித்த வழக்கில் பாதிக்கபட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான்

கொலை குற்ற தடயங்கள் மீட்க நடவடிக்கை

அழிக்கப்பட்ட காணொளிகளை மீள பெற்றுக்கொள்ள மொரட்டுவை கணனி பிரிவிற்கு வன்பொருளை அனுப்பி வைக்குமாறு கட்டளை

பிறப்பித்திருந்ததுடன் நீண்ட சமரப்பணத்தின் பின்னர் மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும்

பெப்ரவரி மாதம் 29 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அதிகரித்து செல்லும் இவ்வாறான கொலைகள் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

Error: View 9293b2au4w may not exist
ஈரான் வேட்டை இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் வேட்டை இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது


ஈரான் வேட்டை இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது

ஈரான் வேட்டை இஸ்ரேல் மொசாட் உளவாளிகள் கைது ,
தாக்குதல் முறியடிப்பு என ஈரான் அறிவிப்பு .


பாலஸ்தீனம் காசா போர் அரங்கில் இடம்பெற்ற திடீர் மாற்றம்

வீடியோ

பிரபல வர்த்தகரின் வீட்டை உடைத்து திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

தங்க ஆபரணங்களை திருடிய இளைஞர் கைது

தங்க ஆபரணங்களை திருடிய இளைஞர் கைது

வவுனியா நகர சபை மைதானத்தில் நடைப் பயிற்சிக்கு வருகை தந்தவரின் நகைகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் 32 வயது இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நடைப் பயிற்சிக்காகக் கடந்த சில நாட்களாக வவுனியா நகர சபை மைதானத்துக்கு வந்து சென்றுள்ளார். வழமை போன்று நேற்றுமுன்தினம் மாலையும் நகர சபைக்கு அவர் வந்துள்ளார்.

தங்க ஆபரணங்களை திருடிய இளைஞர் கைது

இதன்போது தான் அணிந்திருந்த சங்கிலி, காப்பு உள்ளிட்ட 4 பவுண் தங்க ஆபரணங்களை நகர சபை வளாகத்தில் உள்ள மோட்டடார் சைக்கிள் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட தனது மோட்டார் சைக்கிள் இருக்கைக்குள் வைத்து பூட்டி விட்டு நடைப் பயிற்சிக்குச் சென்றுள்ளார்.

நடைப் பயிற்சி முடிந்த பின்னர் தனது மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக அந்தப் பெண் வந்தபோது அவரது மோட்டார் சைக்கிள் இருக்கை உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

தப்பிச் சென்ற லொறி சாரதி கைது

தப்பிச் சென்ற லொறி சாரதி கைது

அரலகங்வில, அலுத்வெவ கெடேஹந்திய பிரதேசத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற லொறி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீதியில் நபரொருவர் விழுந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தலையில் பலத்த காயம் அடைந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பிச் சென்ற லொறி சாரதி கைது

உயிரிழந்தவர் அலுத்வெவ பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவராவார்.

குறித்த பகுதியில் நெல் கொள்வனவு செய்யும் நபர் இவ்விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரது லொறியை சோதனையிட்ட போது அதில் உயிரிழந்தவரின் தலைமுடி மற்றும் ஆடைகளின் பாகங்கள் காணப்பட்டுள்ளன.

கடந்த 14ஆம் திகதி இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கடந்த 15ஆம் திகதி மாலை தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடு சலிந்து சகா கைது
Posted in இலங்கை செய்திகள்

குடு சலிந்து சகா கைது

குடு சலிந்து சகா கைது


குடு சலிந்து சகா கைது ,பாதாள உலக தலைவர்களில் ஒருவரான ‘குடு சலிந்து’ எனப்படும் சலிந்து மல்ஷிகவின் பிரதான சகா ஒருவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குடு சலிந்துவின் பிரதான சகாவான பியும் ஹஸ்திக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவினால் இன்று (15) அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொது பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பான தகவலை வௌியிட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்த போதைவஸ்து பாவனை

இலங்கையில் அதிகரித்த போதைவஸ்து பாவனையால் ,நாடெங்கும் குற்ற செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

இந்த போதைவஸ்து பாவனையால் அதிகரிக்கும் குற்றங்கள் காரணமாகவே இலங்கையில் சட்டத்தில் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது .

நாள்தோறும் போதைக்கு அடிமையாகி ,அந்த போஹியில் இளைக்க படும் குற்றங்கள் காரணமாக மக்கள் சொல்லேன்னா துயரை சந்தித்து வருகின்றனர் .

இந்த குற்றங்களை தடுக்க வேண்டும் என்றால் இவ்வாறான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த பட வேண்டும் என மக்கள் மன்றம் வேடனை நிற்கிறது .

அதற்கு அமைவாக சட்டம் ஒழுங்கை கடைபிடித்து மக்களை காப்பாற்ற இவ்வாறன குற்றாவளிகளை போலீசார் கைது செய்திட ஆரம்பித்துள்ளனர் .

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஆட்டுப்பட்டி தெருவில் விஷபால் 7பேர் கைது

ஆட்டுப்பட்டி தெருவில் விஷபால் 7பேர் கைது

ஆட்டுப்பட்டி தெருவில் விஷபால் , கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலைய கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவருக்கு விஷம் கலந்த பால் கொடுத்த சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள், கலஹாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் குழுவினரே, கலஹா, தெல்தோட்டை கிரேட்வெளி தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து, ஏழு பேரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரில், ஐந்து ஆண்களும், பெண்கள் இருவரும் அடங்குகின்றனர்.

கொழும்பு, ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவருக்கு விஷம் கலந்த பால் கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆட்டுப்பட்டி தெருவில் விஷபால் 7பேர் கைது

பொலிஸ் நிலையத்தில் உள்ள கூண்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பால் பாக்கெட்டுகளில் சயனைட் விஷம் கலந்திருந்தமை கண்டறியப்பட்டது. அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர், பால் பாக்கெட்டுகளை​ கொள்வனவு செய்வது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சிக்கியுள்ளன.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, அடைத்து வைக்கப்பட்டிருந்த இருவரிடமும் பால் பாக்கெட்டை வழங்கியதையடுத்து, அவற்றை குடித்த இருவரும் மயங்கிவிட்டனர். ஆபத்தான நிலையில்,கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கலஹா கிரேட்வேலி தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர், மருதானையில் பணிபுரியும் போது, ​​பிரதான சந்தேகநபருக்கு தங்குமிடத்தை வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டது. அங்கு வைத்தே இந்த கொலையை திட்டமிட்டதாக கூறப்படுகின்றது. அந்த குழுவினர், கலஹா, கிரேட்வலி தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் பதுங்கியிருப்பதாகவும் ​பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஜிந்துபிட்டி பிரதேசத்தில் ஜனவரி 24 ஆம் திகதி துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற போது, அங்கு வந்திருந்த ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தக் கொலை சந்தேகநபர்களுக்கு, விஷம் கலந்த பால் பாக்கெட்டுகளை வழங்கியவர்களும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

இந்நிலையில்,கலஹா கிரேட்வேலி தோட்டத்திலுள்ள வீடொன்றில் புதிதாக வந்தவர்கள் குழுவொன்று தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் புலனாய்வுப் பிரிவினர் அவர்களை அடையாளம் கண்டுள்ளனர். அதனையடுத்து ஆட்டுபட்டிதெரு வீதி பொலிஸ் குழுவொன்று, கலஹாவுக்கு விரைந்து அங்கிருந்த ஏழுபேரையும் கைது செய்து, ஆட்டுபட்டிதெரு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் திருடிய சந்தேக நபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் திருடிய சந்தேக நபர் கைது

அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் திருடிய சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் பல பெறுமதியான பொருட்களை திருடிய சந்தேக நபர், விரைந்து செயல்பட்ட பொலிஸாரினால் ஒரு மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டார்.

அச்சுவேலிப் பகுதியை சேர்ந்த 25 வயதான நபரே பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் திருடிய சந்தேக நபர் கைது

அச்சுவேலி பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த நபரொருவரின் வீட்டில் இருந்து மடிக்கணினி, கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, வங்கி அட்டைகள், வங்கி புத்தகங்கள் என பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்ட நிலையில் நேற்று (13) அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

ஒரு மணி நேரத்தில் சந்தேக நபர் அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸாரால் களவாடப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

யுக்திய நடவடிக்கையின் கீழ் 625 சந்தேக நபர்கள் கைது

யுக்திய நடவடிக்கையின் கீழ் 625 சந்தேக நபர்கள் கைது

யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 625 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 545 சந்தேக நபர்களும், குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 80 சந்தேக நபர்களும் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

160 கிராம் ஹெரோயின், 152 கிராம் ஐஸ், 10 கிலோகிராம், 745 கிராம் கஞ்சா மற்றும் 683 போதை மாத்திரைகள் சந்தேகநபர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குற்றப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள 80 சந்தேக நபர்களில் 03 சந்தேகநபர்கள் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்பில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும், 74 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பாக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் சந்தேகநபர் கைது

சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் சந்தேகநபர் கைது

மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டேபொல பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய சென்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று (11) உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை காலை, மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்யச் சென்ற போது ஏற்பட்ட மோதல் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறிக்க முயற்சித்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர் சுடப்பட்டதாகவும், சந்தேக நபர் உத்தியோகபூர்வ துப்பாக்கியுடன் தப்பிச் சென்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் சந்தேகநபர் கைது

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளதாகவும் அவர் லுனுகம பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிங்கிரிய, பொலவத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் சார்ஜன்டிற்கு சொந்தமான துப்பாக்கி, ரவைகள் மற்றும் சந்தேக நபர் வந்த முச்சக்கரவண்டி என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சந்தேகநபரை மறைத்து வைப்பதற்கு உதவிய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் 42 வயதுடைய வதுரகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சந்தேகநபர் உடுபத்தாவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கம்பஹா மற்றும் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவர் கைது

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவர் கைது


சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் குறித்த சந்தேக நபர் சேறும் பூசம் வகையில் இந்த அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாணந்துறையில் இன்று (10) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் காலந்து கொண்டு உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் அந்த அரசியல்வாதியின் பெயரை வௌிப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவர் கைது

“சிஐடியினரால் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கையில் 400,000 ரூபா பணம் இருந்தது. சமூக வலைதளத்தை பயன்படுத்தி எங்களை அவதூறாக பேசுபவர். அரசியல்வாதி ஒருவர் தான் பணத்தை கொடுத்துள்ளார்.

அவர் காரில் கொழும்பு சென்று டொலர்களை ரூபாயாக மாற்றிய போதே கைது செய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் எங்களை, அரசாங்கத்தை, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அனைவர் தொடர்பிலும் அவதூறு

பரப்புகின்றனர். அதனால் தான் இந்த ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். அரசாங்கங்களை கவிழ்க்க வேண்டுமானாலும் இந்த

சமூக ஊடகங்கள் ஊடாக சேறு பூசுகின்றன. இந்த சட்டம், சமூக ஊடகங்களை தவறாக கையாளுபவர்கள் மட்டுமே பிரச்சினையாக அமையும்” என்றார்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

திருமணம் செய்த பெண் கைது

திருமணம் செய்த பெண் கைது

இலங்கையில் ஆண்ணொருவரை திருமணம் செய்து கொண்டு விசா இன்றி தந்தையுடன் தங்கியிருந்த எத்தியோப்பிய பெண், கண்டி சுற்றுலாத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இலங்கையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து அம்பிட்டிய பிரதேசத்தில் வசிப்பதாகவும், வெளிநாட்டு பெண், மீண்டும் வெளிநாட்டுக்குச் சென்றுவிடுவாரோ என அஞ்சிய இலங்கையை சேர்ந்த கணவர் பெண்ணின் கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களை மறைத்து வைத்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எத்தியோப்பிய பெண் தனது முந்தைய திருமணமான எத்தியோப்பியாவில் தனது இரண்டு குழந்தைகளுடன் இந்த நாட்டிற்கு வந்துள்ளார், மேலும் அவரது விசா ஜனவரி 17 ஆம் திகதி காலாவதியானது, சம்பவம் குறித்து கண்டி சுற்றுலாப் பொலிஸ் பிரிவு இந்தியாவிலுள்ள எத்தியோப்பிய தூதரகத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த பலர் கைது

பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த பலர் கைது

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுப்பவர்களை கண்டறியும் விசேட நடவடிக்கையில் நேற்று (07) மாத்திரம் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, பொது போக்குவரத்து சேவையில் பாலியல் தொல்லை கொடுத்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தவிர திருட்டு சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் சிவில் உடையில் பல பொலிஸ் குழுக்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

யுக்திய சுற்றிவளைப்பு 664 கைது

யுக்திய சுற்றிவளைப்பு 664 கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று (05) அதிகாலை நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 667 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளன

யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது
Posted in இலங்கை செய்திகள்

யுக்திய சுற்றிவளைப்பில் 660 பேர் கைது

யுக்திய சுற்றிவளைப்பில் 660 பேர் கைது

யுக்திய சுற்றிவளைப்பில் இன்று (04) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 660 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 552 சந்தேக நபர்களும் குற்றத் தடுப்பு பிரிவிற்கு அனுப்பப்பட்டிருந்த பட்டியலில் இருந்த 108 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது 152 கிராம் ஹெரோயின், 134 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 552 சந்தேக நபர்களில் போதைக்கு அடிமையான ஒருவர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

யுக்திய சுற்றிவளைப்பில் 660 பேர் கைது

இதன்போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 03 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றத் தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் கைது செய்யப்பட்ட 108 சந்தேக நபர்களில் 08 சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் 95 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலைமறைவாகியிருந்த 02 சந்தேக நபர்களும் குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த 03 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பில் 770 பேர் கைது

யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பில் 770 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலயங்கில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 567 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 203 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 770 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 132 கிராம் ஹெராயின், 121 கிராம் ஐஸ், 15 கிலோ 900 கிராம் கஞ்சா, 5,416 கஞ்சா செடிகள்,16 கிராம் ஹேஷ்,
209 கிராம் மாவா, 128 கிராம் மதனமோதகம் மற்றும் 45 கிராம் தூள் ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 567 சந்தேக நபர்களில் 06 சந்தேகநபர்கள் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதுடன் போதைக்கு அடிமையான 02 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 05 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பில் 770 பேர் கைது

மேலும், கைது செய்யப்பட்ட 203 சந்தேக நபர்களில், குற்றப் பிரிவினருக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளை பெற்ற 21 சந்தேக நபர்களும் மற்றும் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளை பெற்ற 160 பேரும் உள்ளனர்.

கைரேகை மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களும், பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 11 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.