வீழ்ந்து நொறுங்கிய பாகிஸ்தான் உலங்கு வானூர்தி
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய பாகிஸ்தான் உலங்கு வானூர்தி

வீழ்ந்து நொறுங்கிய பாகிஸ்தான் உலங்கு வானூர்தி

பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு சொந்தமான ,இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று ,பலுசிஸ்தானின் குவாடாரில் வீழ்ந்து நொறுங்கியது .

கடல் சார் பயிற்சிகளில் ஈடுபட்டு கொண்ருந்த பொழுது விபத்தில் சிக்கியது ,இதன் பொழுது அதில் பயணித்த இரண்டு பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் ,மற்றும் ஒரு சிப்பாய் பலியாகியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது .

வீழ்ந்து நொறுங்கிய பாகிஸ்தான் உலங்கு வானூர்தி

இயந்திர கோளாறு காரணமாக வானூர்தி விபத்துக்குள்ளானது என,
செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இது திட்டமிடப்பட்ட சதியாக இருக்க கூடும் என்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

இம்ரான் கானை கைது செய்ய போலீஸ் வலைவீச்சு | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதித்தது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்

இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதித்தது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்


இம்ரான் கான் பிரதமராக இருந்த காலத்தில் ஊழல், மோசடியில் ஈடுபட்டதாக அவர்மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

மேலும் தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் தோஷகானா ஊழல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பாகிஸ்தான் சட்டத்தின்படி பதவிக்காலத்தில் பெறப்பட்ட பரிசுப்பொருட்களை மந்திரி சபையில் உள்ள தோஷகானா என்ற துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆனால் அந்த பொருட்களை விற்று இம்ரான்கான் தனது சொத்தாக மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதித்தது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்

இதுவே தோஷகானா வழக்கு என அழைக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இம்ரான் கான் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், பஞ்சாப் மாகாணம் அட்டோக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியை தழுவிய இம்ரான்கான் பிரதமர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜனாதிபதியுடன் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜனாதிபதியுடன் சந்திப்பு

பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜனாதிபதியுடன் சந்திப்பு

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா (Sahir Shamshad Mirza) நேற்று (10) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

நட்பு நாடுகள் என்ற வகையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலுள்ள நீண்டகால நெருங்கிய உறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா உள்ளிட்ட குழுவினருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

இச்சந்திப்பைக் குறிக்கும் வகையில் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பாகிஸ்தான் கடற்படையின் ரியர் அட்மிரல் அப்துல்
பாஸித் பட் (Rear Admiral Abdul Basit Butt) உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

Posted in Uncategorized

பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது

பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது

சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பாராளுமன்றம் கூடியபோது சபாநாயகர், துணை சபாநாயகர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது – பிரதமர் அலுவலக இல்லத்தை விட்டு வெளியேறினார் இம்ரான்கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு

நடைபெறவிருந்த நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று, அந்நாட்டு அதிபர் பாராளுமன்றத்தைக் கலைத்தார்.

பாராளுமன்றத்தைக் கலைத்த அதிபரின் உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிந்தது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு 9-ம் தேதி நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக பாராளுமன்றம் கூடியது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாராளுமன்றத்தின்

சபாநாயகர் ஆசாத் குவைசர், துணை சபாநாயகர் காசிம் சூரி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தின. இதில் இம்ரான்கான் தோல்வி அடைந்தார். இம்ரான்கானுக்கு

எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, பாராளுமன்ற வளாகத்தை விட்டு இம்ரான்கான் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர்.

இந்நிலையில், இம்ரான்கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது.
தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தின் இல்லத்தை விட்டு இம்ரான்கான் வெளியேறினார்.

    Posted in உலக செய்திகள்

    இம்ரான்கான் மனைவியின் தோழி துபாய்க்கு ஓட்டம்

    இம்ரான்கான் மனைவியின் தோழி துபாய்க்கு ஓட்டம்

    இம்ரான்கானுக்கு நெருக்கமான பலரும் பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இம்ரான்கான் மனைவியின் தோழி துபாய்க்கு ஓட்டம்

    பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் இம்ரான்கான் அரசுக்கான ஆதரவை கூட்டணி கட்சிகள் விலக்கி கொண்டது.

    இதையடுத்து அவரது அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் ரத்து செய்யப் பட்டது. இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று

    பாராளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்தார்.

    இடைக்கால பிரதமராக பதவியில் நீடிக்குமாறு இம்ரான்கானை அவர் கேட்டுக்கொண்டார்.

    இதனால் புதிய அரசு அமையும் வரை அவர் இடைக்கால பிரதமராக நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளதால் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது.

    இம்ரான்கானின் 3-வது மனைவி புஷ்ராபீவியின் நெருங்கிய தோழியாக விளங்கி வருபவர் பரக்கான். இவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி

    அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் உயர் பதவிகளில் பணி நியமனம்

    தொடர்பாக பலரிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக ஏற்கனவே எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தது.

    பாகிஸ்தான் முஸ்லீம் லீக் துணைதலைவர் மரியம் நவாஸ் இம்ரான்கான்

    மற்றும் அவரது 3-வது மனைவி உதவியுடன் பரக்கான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் இம்ரான் கான் தற்போது நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் புதிய அரசு அமைந்தால் தன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என

    பரக்கான் அச்சம் அடைந்தார். இதையடுத்து அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு துபாய்க்கு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இவரது கணவர் அஸ்கான் ஜமுல்குசார் ஏற்கனவே அமெரிக்காவுக்கு தப்பி சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில் இம்ரான்கானுக்கு நெருக்கமான பலரும் பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்து
    இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

      Posted in உளவு செய்திகள்

      அணுகுண்டு தயாரித்து 23 வருடம் கொண்டாடும் பாகிஸ்தான்

      அணுகுண்டு தயாரித்து 23 வருடம் கொண்டாடும் பாகிஸ்தான்

      பாகிஸ்தான் நாடு முதன் முதலாக தமது அணு குண்டு தயாரிப்பை 1998 ஆண்டு வெற்றிகரமாக தயாரித்து முடித்து வெற்றி கொண்டது

      இந்த ஆண்டு அதன் சோதனை வெற்றிகரமாக நடத்த பட்டது ,அதன் பின்னர் அணுகுண்டுகளை கொண்டுள்ள நாடாக உலகில் இடம்பிடித்தது

      அதன் 23 டாவது ஆண்டு விழா மிக பிரமாண்டமாக பாகிஸ்தான் கொண்டாடி மகிழ்கிறது ,இது

      போலவே தற்போது ஈரானும் தனது சோதனையை தொடங்கிட இருக்கும் நிலையில் அதன் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        இந்தியா பாகிஸ்தான் பேச்சுக்கள் ஆரம்பிக்க உத்தேசம் – பிரியுமா காஸ்மீர் ..?

        இந்தியா பாகிஸ்தான் பேச்சுக்கள் ஆரம்பிக்க உத்தேசம் – பிபிரியுமாரியா காஸ்மீர் ..?

        இந்தியா பாக்கிஸ்தானுக்கு இடையில் சர்சையில்சி க்கியுள்ள கஸ்மீர் தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட இரு நாடுகளுக்கும் இணக்கம் தெரிவித்துள்ளன

        உயர் மட்ட புலனாய்வு அதிகாரிகள் வட்டத்தில் இருந்து மேற்படி செய்தி கசிந்துள்ளது ,இவ்வாறு

        நாடுகளுக்கு இடையில் ஏற்படும் போர் பதட்டத்தை தனித்து இணக்கமான முறையில் செயல் பட இருநாடுகளும் முயன்று வருகின்றன

        ஆனால் இந்த பேச்சுக்கள் மூலம் குறித்த நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைக்கு தீர்வு கிட்டுமா என்பதே கேள்வியாக உள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          கோட்டாவுடன் பேசிய பின்னர் நாடு பறந்தார் பாகிஸ்தான் அதிபர்

          கோட்டாவுடன் பேசிய பின்னர் நாடு பறந்தார் பாகிஸ்தான் அதிபர்

          பாகிஸ்தான் நாட்டின் அதிபர் இம்ரான் கான் இலங்கைக்கு இரு நாள் அரசமுறை பயணத்தை மேற்கொண்டு வந்தார் ,

          இவரது பயணம் முடிவடைந்து தற்போது பாகிஸ்தானுக்கு புறப்பட்டு சென்றார்

          இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் ,பாதுகாப்பு மற்றும் ,அபிவிருத்தி தொடர்பில் பேச பட்டுள்ளது

          இவ்வேளை யுத்தத்தின் பொழுது பாகிஸ்தான் அரசு வழங்கிய உதவிக்கு நன்றியை தெரிவித்து கொண்டார் கோத்தபாயா

          Posted in உலக செய்திகள்

          பாகிஸ்தானில் 159 ஊடக நபர்களுக்கு கொரனோ – மூவர் பலி

          பாகிஸ்தானில் 159 ஊடக நபர்களுக்கு கொரனோ – மூவர் பலி

          பாகிஸ்தானில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்

          தாக்குதலில் சிக்கி 159 ஊடக நபர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

          இதில் மூவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்

          மேலும் இந்த நோயினை கட்டு படுத்த சுகாதாரா அமைப்பு பல்வேறு நடவடிக்கையை

          முன்னெடுத்து வருவதாக அந்த நாடு அறிவித்துள்ளது