Tag: தேர்தல்
தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல்
தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல்
தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளரை முன்னிலைப்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தல் வந்தாலும் அதற்கு தயாராக இருக்கிறோம்.
இலங்கையில் எங்கு சென்று எமது முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் அழைக்கப்பட்டாலும் அனைத்து வேட்பாளர்களும் எமது கூட்டங்களில் இணைவதை நீங்கள் பார்க்கலாம்.
இதன் ஊடாக எமது கட்சி கிராமங்களிலும் தொடர்ந்து செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. ஜனாதிபதி, தேர்தலை வைப்பாரா? இல்லையா? என்பது எங்களுக்குத் தெரியாது.
வாக்குச் சீட்டில் மொட்டு சின்னம்
தேர்தல் வைத்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடும்.
அப்போது வாக்குச் சீட்டில் மொட்டு சின்னம் இருக்கும். வேட்பாளரை பற்றி உரிய நேரத்தில் வௌிப்படுத்துவோம். அதனை முன்கூட்டியே கூற வேண்டிய அவசியம் இல்லை.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு ஏனும் விண்ணப்பிக்க வேட்பாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்று நீங்கள் முன்பு என்னிடம் கேட்டீர்கள்.
தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுஜன பெரமுனவிடமிருந்து பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் மூலம், காலத்திற்கு ஏற்ற, சவால்களை சமாளிக்கக்கூடிய நபரை முன்வைப்போம்” என்றார்.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுப்பதற்கு அரசாங்கம்
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுப்பதற்கு அரசாங்கம் எத்தகைய தந்திரங்களை கையாண்டாலும் அவை வெற்றியடையாது என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் அபிவிருத்திக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் முறையான வேலைத்திட்டம் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் கட்சிகளுக்கு இடையில் பெரும் போட்டி நிலவுகிறது .
இவ்வாறான கால பகுதியில் மகிந்த ராஜபக்ச மகன் நாமல் ராஜபக்ச இவ்வாறு தனது கருத்தை பதிவு செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார் .
Featured
ஐ எம் எப் நிறைவடையும் வரை தேர்தல்கள் இல்லை
ஐ எம் எப் நிறைவடையும் வரை தேர்தல்கள் இல்லை
சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் மிகவும் முக்கியமானதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார், எனவே அந்த வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் ஜூலை இறுதி வரை அமுலில் உள்ளதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நிதியச் செயற்பாட்டின் பின்னர் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான நேரம் வருவதால் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதித் தேர்தல் தடையாக இருக்காது எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்கேற்ப தேர்தல் வரைபடத்தை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முதலில் தயாராகுமாறு அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படாது என்பதை இது தெளிவாகக் காட்டுவதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நேரலை துவங்கியது சீமான் தேர்தல் பரப்புரை! கன்னியாகுமரியில்! Seeman Today Election Campaign
நேரலை துவங்கியது சீமான் தேர்தல் பரப்புரை! கன்னியாகுமரியில்! Seeman Today Election Campaign
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

- தண்ணீர் மாநாடு – சீமான் உயிரின் உரை

- அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்

- நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்

- தீயாக பேசிய சீமான்

- அணில் ஏன் UNCLE என கத்துகிறது சீமான்

தேர்தல் ஒத்திவைக்கப்பட மாட்டாது
தேர்தல் ஒத்திவைக்கப்பட மாட்டாது
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லையென நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதுவரையில் முன்வைக்கப்பட்ட தேர்தல் திருத்தங்கள் மூலம் தேர்தலை ஒத்திவைக்கும் திட்டம் இருப்பதாக சமூகத்தில் சில பேச்சுக்கள் எழுந்துள்ளன. ஆனால் இந்தத் திருத்தங்கள் மூலம் தேர்தலை ஒத்திவைக்க எதிர்பார்க்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில் இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதன் போது எந்தவொரு வேட்பாளரும் இந்த தேர்தல் திருத்தம் குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்கலாம். பொதுமக்களுக்கும் இது தொடர்பாக தமது முடிவை எடுக்க முடியும் என்றார்.
தேர்தல் சட்ட ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு
தேர்தல் சட்ட ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு
தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம் இறுதி
அறிக்கையை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை அரசாங்கம் நீட்டித்துள்ளது.
அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன் அளிக்க வேண்டும் என்று முன்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் மேலும் இரண்டு
மாதங்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஜூன் 15ம் திகதி அறிக்கை கையளிக்கவேண்டும்.
தேர்தல் தாமதமாகும் அபாயம்
தேர்தல் தாமதமாகும் அபாயம்
தேர்தல் முறைமை திருத்த யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால், தேர்தல் தாமதமாகும் அபாயம் உள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் முறைமை திருத்தப்பட்டு எல்லை நிர்ணய பணிகள் துரித கதியில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
“தற்போது, தேர்தல் முறைமையில் திருத்தம் செய்வது தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையானது பாராளுமன்ற தேர்தல் முறையை கலப்பு விகிதாசார முறைக்கு கொண்டு செல்வது பற்றியதாகும்.
நாடாளுமன்றத் தேர்தல் முறைமையில் திருத்தம் செய்யப்படுவதாயின், அதில் ஒரு அங்கமாக வரும் எல்லை நிர்ணயத்தை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் இணக்கம் காணப்பட வேண்டும்.
ஏதோ ஒரு வகையில் எல்லை நிர்ணயம் முடிவுக்கு வரவில்லை என்றால், வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள், தேர்தல் முறையில் திருத்தம் செய்யப்பட்டாலும், தற்போதுள்ள தேர்தல் முறையிலேயே தேர்தல் நடத்தும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்கு வழங்கும் திருத்தத்தை இந்த வரைவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.
இல்லாவிட்டால், தேர்தல் முறை திருத்தப்பட்டு, சட்டம் இயற்றப்படும், எல்லை நிர்ணயம் முடிவடையாமல் போகலாம்” என்றார்.
இலங்கையில் தேர்தல் தொடர்பில் குழப்பநிலை
இலங்கையில் தேர்தல் தொடர்பில் குழப்பநிலை
தற்போதைய அரசியல் குழப்பத்தை கருத்தில் கொண்டு பல அமைச்சர்கள் அரசியல் கூட்டணிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.
தேர்தல் நடக்குமா, நடக்காதா, எந்தத் தேர்தலை முதலில் நடத்துவது என்ற உறுதியான சூழலுக்கு இதுவரை யாராலும் வரமுடியவில்லை.
தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடாததே இதற்கு காரணமாகும்.
இலங்கையில் தேர்தல் தொடர்பில் குழப்பநிலை
எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாகவும், அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் பொதுத் தேர்தலை நடத்துவதாகவும் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தார்.
இதனை ஜனாதிபதி நேற்று (24) மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.
எவ்வாறாயினும், தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு பல அமைச்சர்கள் சில பிரச்சினையான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, உருவாகும் அனைத்து அரசியல் கூட்டணிகளுடனும் அவர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.
எனினும் பேசும்படியான புதிய அரசியல் கூட்டணிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தல்
ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தல்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை தெரிவித்தார்.
ஒக்டோபர் 14ஆம் திகதிக்குள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக போட்டியிடுவார் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
ரணில் சஜித் மோதல் நாடகம்
ரணில் சஜித் மோதல் தேர்தல் நாடகம் ஆரம்பம்
ரணில் சஜித் மோதல் தேர்தல் நாடகம் ஆரம்பம் 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக பெறுமதி சேர் வரியை (வற்) அதிகரித்து நாட்டையே வங்குரோத்தாக்கிய ஜனாதிபதி சாடிய சஜித் .
எடுபிடிகள் மீண்டும் எழுச்சி பெற முயல்கின்றனர் என்றும்,7 மூளைகளை கொண்டவர்கள் என நாட்டையே வங்குரோத்தாக்கிய காக்கைகளுக்கு
மைனாக்களும் மீண்டும் எழுச்சி பெற கடும் பிரயத்தனம் எடுத்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.
ஆட்சிப் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்காமல் தற்போது ஜனாதிபதி கனவில் இருப்பதாக மாநாட்டின் போது நாட்டையே வங்குரோத்தாக்கிய
தலைவர் குறிப்பிட்டாலும்,நாட்டை வங்குரோத்தாக்கிய மொட்டுத் தரப்புடன் இணைந்து
கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பதாலேயே இந்த பொறுப்பை ஏற்க தாம் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும்,தான் தலைமையிலான
ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் ஆணையுடனேயே நாட்டைப் பொறுப்பேற்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
ரணில் சஜித் மோதல் தேர்தல் நாடகம் ஆரம்பம்
பியகம பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி,ஏனைய கட்சிகளைப் போல் ஊடகங்களில் வந்து கோப்புகளை காட்டி பொய்ப் படம் காட்டாது என்றும், நாட்டை
வங்குரோத்தடையச் செய்தவர்களை நடைமுறையில் சட்டத்தின் முன் எப்போதோ நிரூபித்து விட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வலியுறுத்தினார்.
நாட்டின் வங்குரோத்து நிலையால் வறுமை 30 இலட்சத்திலிருந்து 70 இலட்சமாக அதிகரித்திருக்கும் நேரத்தில், வறிய மக்களுக்கு நிவாரணம்
வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தேர்தலின் போது மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும், ஆட்சிக்கு வந்த பின் அரசியல்வாதிகளே தீர்மானங்களை எடுக்கின்றனர்
என்றும்,இந்நிலையை மாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும், கிராமத்திலும் நகரத்திலும் முடிவெடுக்கும் அதிகாரத்தை இளைஞர்களுக்கு
வழங்குவதே ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இலக்கு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் முடிவெடுக்கும் உரிமை வழங்கப்படும் அதிகாரம் அளிக்கப்படும் என்றும்,
நாட்டில் சிறுவயது முதலே கல்வியை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரபஞ்சம்,மூச்சுத் திட்டங்களை எதிர்க்கட்சி செயல்படுத்தியபோது அரசாங்கம் சேறுபூசும் செயற்பாடுகளை முன்னெடுத்தாலும்,ஐக்கிய மக்கள்
சக்திக்கு பெறப்பட்ட ஒவ்வொரு நிதியும் வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வி முறையை மேம்படுத்தவே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நான்கு மாநில தேர்தல் முடிவுகள் பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி
நான்கு மாநில தேர்தல் முடிவுகள் பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி
இந்தியாவில் தெலங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் உள்ளது.
இதே போன்று தெலுங்கானா, சத்தீஸ்கர் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
தெலங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு நவம்பர் 7ஆம் திகதி முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரை பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
நான்கு மாநில தேர்தல் முடிவுகள் பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (டிசம்பர் 4) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காலை 10 மணி நிலவரப்படி, மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளில் பாஜக 131 தொகுதிகளிலும், காங்கிரஸ் 94 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
ராஜஸ்தானில் உள்ள 199 இடங்களில் பாஜக 105 இடங்களிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும் பிற கட்சிகள் 7 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
இதேபோல சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
சத்தீஸ்கரில் உள்ள 90 தொகுதிகளில் 50 இடங்களில் காங்கிரஸும், 40 தொகுதிகளில் பாஜகவும் முன்னிலை பெற்றுள்ளது.
தெலங்கானாவில் உள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 65 தொகுதிகளிலும், 40 இடங்களில் பிஆர்எஸ் கட்சியும், 7 இடங்களில் பாஜகவும் முன்னிலை பெற்றுள்ளது.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன
- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி
- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா
- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்
- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது
- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்
- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்
- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 82 000 ஐத் தாண்டியது
- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்
- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்
எந்த தேர்தல் நடந்தாலும் வெற்றி நமக்கே மஹிந்த
எந்த தேர்தல் நடந்தாலும் வெற்றி நமக்கே மஹிந்த
எதிர்காலத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேர்தலுக்கு பொருத்தமான வேட்பாளர் தேவைப்படும் நேரத்தில் முன்நிறுத்தப்படுவார் என்றும் அவர் கூறினார்.
எந்த தேர்தல் நடந்தாலும் வெற்றி நமக்கே மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு கம்பஹா மாவட்ட செயலகத்தில் 420 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மதிய
உணவும், தேவையான சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பார்சல்களும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அந்த மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் உள்ள குறைந்த வருமானம் கொண்ட 420 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சுகாதாரப் பொருட்கள், 5000 ரூபாய் நிதியுதவி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன
- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி
- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா
- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்
- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது
- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்
- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்
- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 82 000 ஐத் தாண்டியது
5 கோடி ரூபா வழங்கப்படவில்லை வெடித்த சர்ச்சை
5 கோடி ரூபா வழங்கப்படவில்லை வெடித்த சர்ச்சை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்களை அச்சிடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அரசாங்க அச்சக ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதற்காக திறைசேரியிலிருந்து 5 கோடி ரூபாவுக்கும் அதிக பணம் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அச்சிடும் நடவடிக்கையில்ஈடுபட்டு வந்த 200 இற்கும் மேற்பட்ட அரசாங்க அச்சக ஊழியர்கள் உதவித்தொகை இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பில் அரசாங்க அச்சகர் திருமதி கங்கானி லியனகே கருத்து தெரிவிக்கையில், திறைசேரிக்கு நினைவூட்டல் ஒன்றை வழங்க உள்ளதாக குறிப்பிட்டார்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
அன்று காலை ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
இதில் அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் தை மாதம் இடம்பெறும் என அறிவிப்பு
தேர்தல் தை மாதம் இடம்பெறும் என அறிவிப்பு
இலங்கையில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தைமாதம் நடத்த திகதிகள் அறிவிக்க படும் என தேர்தல் மையம் அறிவித்துள்ளது .
இந்த தேர்தலை மையப்படுத்தியே தமிழர்களுடன் ,தீர்வு தொடர்பாக ரணில் பேசி இருந்தார் .
அவ்வாறான அரசியல் நாடக்கத்தை ,நடத்திமுடித்த சில வாரத்தில் இந்த தேர்தல் திகதி அறிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
பிரிட்டனில் ஆளும் கட்சி பலத்த தோல்வி
பிரிட்டனில் ஆளும் கட்சி பலத்த தோல்வி
பிரிட்டனில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் ஆளும்
கட்சியினர் நூறு ஆசனங்களை இழந்து பலத்த தோல்வியை சந்தித்துள்ளனர்
எதிர்வ்ரும் பாராளுமன்ற தேர்தலில் இவரக்ள மேலும் பலத்த சரிவை சந்திப்பார்கள் என எதிர் பார்க்க படுகிறது
பிரான்சில் இமானுவல் மேக்ரான் அமோக வெற்றி
பிரான்சில் இமானுவல் மேக்ரான் அமோக வெற்றி
பிரான்சில் ஆளும் இமானுவல் மேக்ரான் மீண்டும் அதிபராக தெரிவு செய்ய பட்டுள்ளார்
,இவர் 58 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார் ,அதேபோல குடியேற்ற
வாசிகளுக்கு எதிராக கடும் சட்டங்களை அமூல் படுத்தி அவர்களுக்கு எதிரான
பார்ப்புரை மேற்கொண்டு போட்டி போட்ட பெண் வேட்பாளர் பலத்த தோல்வியை சந்தித்துள்ளார்
ஆளும் அதிபர் மீளவும் அதிபராக தெரிவு செய்ய பட்ட நிலையில் உலக நாட்டு தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை
தெரிவித்த வண்ணம் உள்ளனர்
இலங்கையில் விரைவில் தேர்தல் – பாரளுமன்றம் கலையும்
இலங்கையில் விரைவில் தேர்தல் – பாரளுமன்றம் கலையும்
இலங்கையில் ஆளும் அடச்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய வண்னம் உள்ளனர்
இவ்வேளை பெரும்பாண்மை அரசுக்கு இல்லையென நிரூபித்தால் தாம்
தேர்தலை நடத்த தயராக உள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்
விரைவில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது .
இதில் அரசு தோற்கடிக்க பட்டதால் மட்டுமே தேர்தல் நடத்திட இயலும் என்பது குறிப்பிட தக்கது
அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்
அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்
அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
மாகாண சபைத் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதன்மூலம் மாகாணசபை தேர்தலை
நடத்துவதற்கு பொருத்தமான சூழல் உருவாக்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவதைப் போன்று வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்பட போவதில்லை என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மாகாண சபைத் தேர்தல் நடத்த முடியாது- அறிவிப்பு
மாகாண சபைத் தேர்தல் நடத்த முடியாது- அறிவிப்பு
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற நிலைமை, நாட்டில் இருக்கிறதென தனிப்பட்ட முறையில் தான் நம்பிக்கை கொள்ளவில்லை எனத் தெரிவித்த மாகாண சபைகள் மற்றும்
உள்ளூராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன், சகலரும் இணைந்து இதுதொடர்பில் தீர்மானம் எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் இன்று (05) கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, கேள்விகளைக் கேட்டிருந்த அனுராபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார, முதலில் மாகாண சபைத் தேர்தல்
நடத்தப்படுமா? அல்லது உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படுமா? அவ்வாறு நடத்தப்படுமாயின் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்படும் என்று வினவினார்.
அக்கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேர்தல் சட்டங்கள், தேர்தல் முறைமையில் மறுசீரமைப்பு
தேர்தல் சட்டங்கள், தேர்தல் முறைமையில் மறுசீரமைப்பு
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழுவுக்கு 115 முன்மொழிவுகள் மற்றும் யோசனைகள்
கிடைக்கப்பெற்றுள்ளதாக அக்குழுவின் தலைவர் சபை முதல்வரும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்தன 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அந்தக் குழுக் கூட்டத்தின் போது தெரிவித்தார்.
இலங்கை பாராளுமன்ற பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்றுக்கொள்ளப்பட்ட 07 அரசியல் கட்சிகளின் மூலம் யோசனைகள் முவைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அந்தக் கட்சிகளுக்கு யோசனைகளை சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த யோசனைகளை sec.pscelectionreforms2021@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது செயலாளர், பாராளுமன்ற விசேட குழு, இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே எனும் முகவரிக்கோ அனுப்பிவைக்க முடியும்.
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேகொள்வது தொடர்பில் 2021 ஜூன் 30 ஆம் திகதி வரை கிடைக்கப்பெற்ற பொதுமக்களின் யோசனைகளை சபைக்கு
சமர்ப்பித்தல் மற்றும் அந்த யோசனைகள் பற்றிய சாராம்சம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது.
உத்தேச மறுசீரமைப்புகள் தொடர்பில் நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குழுக் கூட்டத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற
உறுப்பினர்களான அனுரகுமார திசாநாயக்க, கபீர் ஹஷீம், ரஞ்சித் மத்தும பண்டார, எம். ஏ. சுமந்திரன், மதுர விதானகே மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.































