Tag: கொரனோ
பிக்கு மரணம் -கும்பிட்ட கோட்டா
பிக்கு மரணம் -கும்பிட்ட கோட்டா
காலஞ்சென்ற களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் கொழும்பு மற்றும் சிலாபம் மாவட்ட நீதிமன்றங்களின் சங்கசபைத் தலைவரும், பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின்
தலைவரும், அக்கமஹா பண்டிதர் கலாநிதி அதி. வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தேரரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவுக்கு இன்று (29) பிற்பகல் சென்ற ஜனாதிபதி அவர்கள், பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன்,
விஹாரையில் கல்வி பயிலும் தேரர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட நிர்வாக சபையினருக்கு, தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.
அதி. வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகளை, பூரண அரச அனுசரணையுடன் நடத்துமாறு, ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கியிருந்தார்.
ஜனாதிபதி அவர்கள், அந்த ஏற்பாடுகள் தொடர்பாகக் கேட்டறிந்ததுடன், இறுதிக் கிரியை ஏற்பாட்டுக்கு குழுத் தேரர்களுடன் கலந்துரையாடினார்.
கிளிநொச்சியில் கவிழ்ந்த லொறி – போக்குவரத்து பாதிப்பு
கிளிநொச்சியில் கவிழ்ந்த லொறி – போக்குவரத்து பாதிப்பு
கிளிநொச்சி டிப்போ சந்தியில் வேகமாக பயணித்த கனரக வாகனம் ஒன்று திடீரென கவிழ்ந்தது
இதனால் அவ்வழி போக்குவரத்து பாதிக்க பட்டுள்ளது
மேலும் வண்டி பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது
மாணவர்களுக்கு கொரனோ ஊசி செலுத்துதல் ஆரம்பம்
மாணவர்களுக்கு கொரனோ ஊசி செலுத்துதல் ஆரம்பம்
இலங்கையில் உயர்தர மாணவர்களுக்கு கொரனோ தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு ஆரம்பிக்க பட்டுள்ளது
அனைத்து மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு இந்த ஊசி செல்யுதும் நிகழ்வு தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
கொரனோவில் சிக்கி உயிருக்கு போராடும் 2 வயது சிறுவன்
கொரனோவில் சிக்கி உயிருக்கு போராடும் 2 வயது சிறுவன்
அமெரிக்காவில் இரண்டு வயது சிறுவன் ஒருவன் கொரனோ நோயினால் பாதிக்க பட்டு உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளார்
தற்போது செயற்கை சுவாசம் பொருத்த பட்டுள்ள நிலையில் சிறுவன் தொடர்ந்து கண்காணிக்க பட்டு வருகிறார்
மேற்படி சம்பவம் உலக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
பொது வாக்கெடுப்பு நடத்து- முழங்கிய சிவாஜிலிங்கம்
பொது வாக்கெடுப்பு நடத்து- முழங்கிய சிவாஜிலிங்கம்
இலங்கையில் ஐநாவின் கீழ் பொதுஜென வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முன்னாள் பாராளும்னற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்
இலங்கையில் இரு தேசிய இனங்கள் உள்ளன ,அவை பெரும் பாண்மை இனத்தவர்களினால் அடக்க பட்டு ,அழிக்க பட்டு அவர்கள் உரிமைகள் பறிக்க பட்டு நிர்கதியாக உள்ளனர்
இவ்வேளையில் இந்த கொலைக்கு தீர்வு காண மறுக்கும் ஐநா அதனை செய்திட வேண்டும் என்பதே இவரதும் ,தமிழர்களின் ஏகோபித்த கருத்து என்பது குறிப்பிட தக்கது
இலங்கையில் கொரோனாவுக்கு 23 பேர் மரணம்
இலங்கையில் கொரோனாவுக்கு 23 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் இருபத்தி மூன்று பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் பலர் பாதிக்க பட்டுள்ளனர்
நோயினை கட்டு படுத்த பல்வேறு பட்ட நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் இந்த மரணங்களை தடுக்க முடியாது சிங்கள அரசு தினறி வருகிறது
முல்லைத்தீவு – முள்ளியவளை, புதறிகுடா கிராமத்தில் இராணுவத்தினரால் வீடு கையளிப்பு
முல்லைத்தீவு – முள்ளியவளை, புதறிகுடா கிராமத்தில் இராணுவத்தினரால் கையளிப்பு
முல்லைத்தீவு – முள்ளியவளை, புதறிகுடா கிராமத்தில் நான்கு பிள்ளைகளை கொண்ட குடும்பமொன்றுக்கு புதிதாக வீடொன்று அமைக்கப்பட்டு, நேற்று (10) இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளர் றாயன் அவர்களின் நிதி உதவியில், இராணுவத்தினருடைய கட்டுமான பங்களிப்புடன், இந்த வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட இரணுவத்தின் 59ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுரியபண்டார மற்றும் சமூக செயற்பாட்டாளர் றாஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் போது வருகை தந்த கிராமத்தவர்களுக்கு பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
விதிமுறைகளை மீறிய 85 பேர் கைது
விதிமுறைகளை மீறிய 85 பேர் கைது
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,560 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சகோதரி ஊழலை வெளியிட்ட பத்திரிகை தொடர்பாக விசாரிக்க கோட்டா உத்தரவு
சகோதரி ஊழலை வெளியிட்ட பத்திரிகை தொடர்பாக விசாரிக்க கோட்டா உத்தரவு
பென்டோரா பேப்பர்ஸ் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இன்று (06) காலை இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் டளஸ் அழகபெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் அமைச்சர் கூறினார்.
கொவிட் நோயிலிருந்து குணமடைந்த பெண்களுக்கு நீண்டகால நோய் அறிகுறிகள்
கொவிட் நோயிலிருந்து குணமடைந்த பெண்களுக்கு நீண்டகால நோய் அறிகுறிகள்
கொவிட் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண்களுக்கு, மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் சில பாதிப்புகளைக் கொண்ட நீண்டகால நோய் அறிகுறிகள் அடையாளம்
காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் : மரபணு உயிரியல் மருத்துவப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
இந்த நோய் அறிகுறிகள் ஆண்களுக்கும் ஏற்படலாம்.
இந்த நோய் அறிகுறிகளில், மன அழுத்தம் சுமார் 15 வீதம் உயர்வாக காணப்படும்.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுபோன்ற ஒன்பது அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
- இயல்பற்ற சுவாசம் 8%
- வயிறு சம்பந்தப்பட்ட நோய் அறிகுறிகள் 8%
- மன அழுத்தம் 15%
- மார்பு மற்றும் தொண்டை வலி 6%
- அறிவாற்றல் பிரச்சினைகள் 4%
- சோர்வு 5%
- தலைவலி 5%
- தசை தொடர்பான வலி 5%
- மற்றும் பிற உபாதைகள் 7%
ஆகியன அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த நாள்பட்ட கொவிட் நோய் அறிகுறிகள் நவீன மருத்துவத்திற்கு ஒரு சவாலாக இருக்கலாம் என்று விசேட வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர ட்விட்டர் செய்தியொன்றில் தெரிவித்துள்ளார்..
கொரனோவுக்கு அமெரிக்காவில் 7 லட்சம் பேர் மரணம்
கொரனோவுக்கு அமெரிக்காவில் 7 லட்சம் பேர் மரணம்
உலக நாடுகளை உலுப்பி வந்த கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி அமெரிக்காவில் மட்டும்
இதுவரை சுமார் ஏழு லட்சம் பேர் மரணமாகியுள்ளனர் என சுகாதர அமைச்சு திடுக்கிடும் புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது
இழப்பு இதைவிட இருமடங்கு அதிகமாக இருக்கலாம் என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிட தக்கது
ஜந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
ஜந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
பலத்த மழையின் காரணமாக ஜந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி , களுத்துறை , கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு மாலை 06 மணிவரை ஏற்புடையது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் புதிய நடைமுறை – மகிழ்ச்சியில் மக்கள்
இலங்கையில் புதிய நடைமுறை – மகிழ்ச்சியில் மக்கள்
- மாகாணங்களுக்குள் பஸ்கள் ஓடும்
- அமர்ந்திருக்கு மட்டுமே பயணிக்க முடியும்
- பதிவு திருமணங்களுக்கு அனுமதி: ஐவர் பங்கேற்கலாம்
- பொதுக்கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்பு இல்லை
- சாப்பாட்டு விடுதிக்கு அனுமதி இல்லை
6.மரண வீட்டில் ஒரே தடவையில் 10 பேர் பங்கேற்கலாம்
7..உடற்பயிற்சிக் கூடங்களுக்கு அனுமதி ஐவர் பங்கேற்கலாம்.
பெங்களூருவில் 60 மாணவர்களுக்கு கொரோனா
பெங்களூருவில் 60 மாணவர்களுக்கு கொரோனா
ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், வருகிற 20-ந்தேதி வரை பள்ளியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பெங்களூருவில் 60 மாணவர்களுக்கு கொரோனா: அக். 20-ந்தேதி வரை பள்ளி மூடல்
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள், ஆசிரியர்கள், ஸ்டாஃப்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளியில் 500 மாணவர்கள் படித்து வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 60 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. 60 மாணவர்களில் இரண்டு பேருக்கு அறிகுறி இருந்தது. இதனால்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் – கோட்டா அறிவிப்பு
காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் – கோட்டா அறிவிப்பு
காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொடுப்பார் என்றால், அவர்களை படுகொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்குவார் என தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய (22) பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், சரணடைந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டுமென ஐ.நா. சாசனத்தில் கூறப்பட்டுள்ளது. ஐ.நா.வுக்கு சென்றுள்ள
கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் கொடுக்கப் போவதாக கூறுகின்றார்.
அப்படி என்றால் கண் கண்ட சாட்சிகளுடன் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் எல்லாம் கொல்லப்பட்டார்கள் என்றே ஜனாதிபதி கூறுகிறார் எனவும் அவர் தெரிவித்தார்,
கொல்லப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ்கள் என்றால், கொன்றவர்களுக்கு என்ன தண்டனையை கொடுப்பீர்கள் என்றும் வினவினார்.
பறக்கும் படை வேட்டை -491 பேர் கைது
பறக்கும் படை வேட்டை -491 பேர் கைது
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 491 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 55 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 636 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்தில் நுழைய முற்பட்ட 739 வாகனங்கள் மற்றும் 1072 பேர் மற்றும் வெளியேற முற்பட்ட 1195 பேர் மற்றும் 742 வானங்கள் நேற்று சோதனையிடப்பட்டுள்ளன.
காவல்துறை வேட்டை -509 பேர் கைது
காவல்துறை வேட்டை -509 பேர் கைது
நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 509 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று(21) காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த முந்தைய 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 76,145 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மேல் மாகாணத்தில் உள்ள 13 வீதித் தடைகளில் 2179 பேர் மற்றும் 730 வாகனங்கள் நேற்று(20) சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
வீட்டிலிருந்து வேலைசெய்யும் அரச ஊழியர்களுக்கு எவ்வாறு சம்பளம் வழங்க முடியும் -அரசு கேள்வி
வீட்டிலிருந்து வேலைசெய்யும் அரச ஊழியர்களுக்கு எவ்வாறு சம்பளம் வழங்க முடியும் -அரசு கேள்வி
அரசாங்கத்திடம் பணம் இருக்கிறது பணமில்லாவிட்டால் வீட்டிலிருந்து வேலைசெய்யும் அரச ஊழியர்களுக்கு எவ்வாறு சம்பளம் வழங்க முடியும் – ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ
ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தொடர்பான சம்பவம் குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் நடக்கும் போது நான் அங்கு இருக்கவில்லை. எனவே அப்படி ஒரு
சம்பவம் அங்கு நடந்ததா இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது. விசாரணை அறிக்கை வருவதற்கு முன்பதாக நான் கருத்துத் தெரிவித்தால் அது தவறு …
ஊரடங்கு உத்தரவை நீட்டிக்காதிருப்பது குறித்து அறிக்கை வெளியிட நான் ஒன்றும் மருத்துவர் கிடையாது. மருத்துவர்கள் மற்றும் பல்வேறு துறைசார் நிபுணர்கள் சொல்வதைக் கேட்டு ஜனாதிபதி சரியான முடிவுகளை எடுக்கிறார் …
அரசாங்கத்திடம் பணம் இருக்கிறது பணமில்லாவிட்டால் வீட்டிலிருந்து வேலைசெய்யும் அரச ஊழியர்களுக்கு எவ்வாறு சம்பளம் வழங்க முடியும்.
- ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ
ஜனாதிபதியின் சௌபாக்கிய நோக்கு கொள்கை பிரகடனத்தின் படி வீதிகளின் இருபுறமும் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நடுவதற்கு முதலில் முடிவு செய்திருந்தோம். ஆனால் நாங்கள் இப்போது அதை இரண்டு மில்லியனாக அதிகரித்துள்ளோம். ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் வீதியின் இருபுறமும் மரம் நடும் பசுமை கருத்திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மர நடுகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாமன்கடை வீதியின் இருபுறமும் மரங்களை நடும் பணி இன்று ஆரம்பித்துள்ளோம். சிலர் இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்க விரும்புவதில்லை. கண்டும் காணாதது போன்று இருப்பர். இதுதான் நம் நாட்டில் உள்ள எதிக்கட்சியாகும்.
லங்காகம வீதி அமைக்கப்படும்போது சிங்கராஜாவில் உள்ள அனைத்து மரங்களும் வெட்டப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காடழிப்பு இடம்பெறுகிறதா என்று காண ஜனாதிபதி லங்காகமவுக்கு நேரில் சென்றார். இன்று அந்த வீதியின் வேலை முடிந்துவிட்டது. இப்பகுதியில் வசிக்கும் மக்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த முடிவையும் எங்கள் அரசு எடுக்காது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு பயனளிக்கும் வகையில் இந்த அபிவிருத்திப் பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதனால் இன்று எதிர்க்கட்சிகள் கூறியவை அனைத்தும் முற்றிலும் பொய்யாகிவிட்டன. அவ்வப்போது ஏதாவது கருத்தை உருவாக்குவது தான் எதிர்க்கட்சிகளின் முக்கிய பங்காக இருக்கிறது.
தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த கோரிக்கை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.தேர்தல் ஒன்ற நடந்தால் எதிர்க்கட்சித் தலைவரின் நிலையை நன்றாக அறிந்து கொள்ள முடியும். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டாம், பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று சவால் விடுத்த தலைவர் தான் இந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் வரை, அது எங்கள் அரசுக்கு நல்லது. எனவே,சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராகவும் தற்போதைய அரசாங்கம் ஆட்சியிலும் இருக்கும் வரை நம் நாட்டு மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எனவே, . சஜித் பிரேமதாச சொல்பவை வெறும் அரசியல் வார்த்தைகள் மாத்திரமே. அந்த வார்த்தைகளின் அர்த்தத்தில் எந்த உள்ளடக்கமும் இல்லை.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தூக்கு மேடைக்கு விஜயம் செய்த சம்பவம் மற்றும் அவரது ராஜினாமா குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
சிறைத்துறை அமைச்சர் என்ற வகையில் தூக்கு மேடையைப் பார்க்கச் செல்ல அவருக்கு உரிமை உள்ளது என்று நினைக்கிறேன். ஒரு அமைச்சர், இவ்வாறு இராஜினாமா செய்வது இதுவே முதல் முறை என்பதே மிகவும் சரியானது. உலகின் பல்வேறு நாடுகளில் இவ்வாறு நடந்துள்ளது. தவறு நடந்தால் மற்ற நாடுகளில் உள்ளவர்கள் ராஜினாமா செய்வார்கள்.இங்குள்ளவர்கள் இராஜினாமா செய்ய மாட்டார்கள் என்று அப்போது கூறப்பட்டது . இப்போது அவர் இராஜினாமா செய்யும்போது சட்டத்தை இன்னும் கடுமையாகச் செயல்படுத்த வேண்டுமாம். அமைச்சர் லொஹான் ரத்வத்தை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். அவர் தவறு செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதனால், அவர் இராஜினாமா செய்தார். இது மிகவும் நல்ல விஷயம். அன்று மத்திய வங்கியை கொள்ளையடித்தவர்கள் இராஜினாமா செய்யவில்லை. சஜித் பிரேமதாச பல பில்லியன்களை திருடியதற்காக அவர் இராஜினாமா செய்தாரா? அவரது அமைச்சு ஊழியர்கள் அவரின் மனைவியின் சிகைஅலங்கார நிலையத்தில் வேலை செய்ததற்காக குறைந்தபட்சம் அவர் மன்னிப்பு கேட்டாரா? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் இது போன்ற ஒன்று நடந்தது நல்ல விஷயம். இது கட்டுக்கோப்பான அரசாகும்.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தொடர்ந்து இரத்தினக்கல் மற்று ஆபரண கைத்தொழில் அமைச்சராக தொடந்து இருக்கிறார். அவர் குற்றவியல் குற்றச்சாட்டு உள்ளதே என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். முதலில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக முழுமையான விசாரணை தேவை. அது தொடர்பாக ஒரேயடியாக கூற முடியாது. அவர் இராஜினாமா செய்யாமல் ஜனாதிபதியும் இராஜினாமா செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தால் இன்று என்ன நடந்திருக்கும்? தற்போது இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்தி வருகிறது, அந்த விசாரணை அறிக்கை வரும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டும். விசாரணை அறிக்கைக்கு முன் நான் ஒரு கருத்தை தெரிவித்தால் அது தவறு. நான் அங்கு இருக்கவில்லை. எனவே அப்படி ஒரு சம்பவம் அங்கு நடந்ததா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் இராஜினாமா செய்துள்ளார், இது ஒரு நல்ல விஷயம். இந்தப் போக்கு நல்லது என்று தான் நான் கருதுகிறேன்.
நமது நாட்டிற்கு எதிராக மனித உரிமை தொடர்பான பிரச்சனையொன்று இருக்கும் சமயத்தில் லொஹான் ரத்வத்தையின் இந்த செயற்பாடு எப்படி எமது நாட்டை பாதிக்கும் என ஒரு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
மனித உரிமைகள் பிரச்சினைகள் இன்று நேற்று வந்ததல்ல. இந்த நாட்டில் எப்போதும் இருந்து வரும் விடயம் அது. பிரபாகரன் படுகொலை
செய்யப்பட்ட நாளிலிருந்து இந்த மனித உரிமை பிரச்சினைகளுக்கு எமது அரசாங்கம் முகங்கொடுத்து வருகிறது. அது ஒன்றும் புதிதல்ல. இப்போது இந்தப் பிரச்சினையும் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. நாங்கள் இந்த பிரச்சினையை எதிர்கொள்வோம்.
கடந்த தேர்தலில் வெற்றிபெற ஈஸ்டர் தாக்குதல் உங்களுக்கு உதவியாக அமைந்ததாக கூறப்படுகிறது. . இதேபோன்ற தாக்குதல் மீண்டும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதல்லவா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்,
அது அப்பட்டமான பொய்யாகும். எங்கள் அரசு தேசிய பாதுகாப்பை எதற்காகவும் விட்டுக் கொடுக்காது. . ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. யார் என்ன செய்ய திட்டம் தீட்டினாலும் முயற்சித்தாலும் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது, எங்களை விட முன்னேற்றமடைந்த நாடான நியூசிலாந்தில் என்ன நடந்தது. இலங்கையிலிருந்து சென்ற ஒருவர் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தைப் போல், நமது அரசும் தேசிய பாதுகாப்பை பலிக்கடாவாக்க ஒரு போதும் தயாராக இல்லை. தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் எதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நான் அதை மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன்.
உங்கள் அரசாங்கம் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தாலும் இன்னும் மக்களுக்கு ஏன் நிவாரணம் வழங்கப்படவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
இந்த ஒன்றரை ஆண்டுகளில், முழு உலகமும் கோவிட் பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளது. பிரச்சினை வந்த போது, நாங்கள் மக்களுக்கு நிதி உதவி வழங்கினோம். நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. சமுர்த்தி பெறுபவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து
நிவாரணம் வழங்கி வருகிறோம். இந்த அரசாங்கம் மக்களையும் பாதுகாத்து இந்தளவிலாவது பொருளாதாரத்தைம் பாதுகாப்பது பற்றி நாட்டு மக்களாகிய நாம் சிந்திக்க வேண்டும், இன்று நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் இந்த நாடு ஒரு கல்லறையாக மாறியிருக்கும். அபிவிருத்தி அடைந்திருந்த நாட்டின் பொருளாதாரத்தை அழித்த , மக்களை வீணாக இறக்க அனுமதித்த அரசாங்கமொன்றே கடந்த காலத்தில் இருந்தது. எதிர்க்கட்சி பல்வேறு விடயங்களை கூறுகின்றது. ஆனால் எங்கள் அரசாங்கம் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் . இந்தப் பேரழிவில் இருந்து தப்பிக்க தேவையான திட்டங்களை நாங்கள் ஏற்கனவே செய்துள்ளோம். தடுப்பூசியின் ஏற்றுவதில் உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாக எமது நாடு மாறியுள்ளது.எங்களிடம் குறைபாடுகள் இருந்திருக்கலாம். இத்தகைய பேரழிவு எமது நாட்டிற்கு புதியது. அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே, எமது நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் வளர்ச்சியடையும் என்பதை நாம் நாட்டு மக்களிடம் கூறுகிறோம்.எத்தகைய பிரச்சினைகள் இருந்தாலும், எங்களிடம் அவற்றுக்கு தீர்வு உள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவர்ட் கப்ரால் மீண்டும் நியமிக்கப்பட்டது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
அஜித் நிவார்ட் கப்ரால் திறமைசாலி. அவர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அதற்காகஅவர் பாராளுமன்றத்திற்கு பொருத்தமானவர் அல்ல என்று அர்த்தமாகாது. அவர் பாராளுமன்றத்திற்கும் மத்திய வங்கிக்கும் பொருத்தமானவர். அதாவது இந்த நேரத்தில் அஜித் நிவார்ட் கப்ரால் போன்ற ஒருவர் மத்திய வங்கியின் ஆளுநராக இருப்பதே உகந்தது.அதனால் தான் சஜித் பிரேமதாஸாவும் ஹர்ஷாவும் இணைந்து அவரைத் தாக்குகிறார்கள். இதுதான் யதார்த்தம்.அவர்களுக்கு எதிராகவும் குற்றச் சாட்டுகள் உள்ளன. யார் மீது தான் குற்றச்சாட்டு இல்லை.என் மீது பதினொரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டுவதும் சேறு பூசுவதும் எளிது. யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும். தகுதியற்றவர்கள் தான் மத்திய வங்கியின் ஆளுநராக யார் வர வேண்டும் என்று கருத்துக் கூறுகிறார்கள்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இலங்கையின் குடியுரிமையை கூட இல்லாத ஓருவரே மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர்கள் தான் இன்று மத்திய வங்கியின் ஆளுநராக யார் நியமிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். இது நகைப்புக்குறிய விடயமாகும். எமது நாடு இந்த சவால்களை வெல்லும் என்பதை நாங்கள் தெளிவாகக் கூறுகிறோம். ஜனாதிபதி கோட்டாபய மிகச்சிறந்த ஆட்சியாளர். முதிர்ந்த பிரதமரான மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்த சவால்கள் அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொள்கண்டு வருகிறோம்.
துறைமுகம் போன்ற தேசிய வளங்களை மறுவிற்பனை செய்வதாக அரசு மீது குற்றம் சாட்டப்படுவது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எந்த தேசிய வளமும் விற்கப்படவில்லை. அது அப்பட்டமான பொய். நான் துறைமுக அமைச்சராகவும் இருந்தேன். அது ஒரு முதலீடு மாத்திரமே. முதலீட்டாளர்கள் இந்த நாட்டிற்கு வர வேண்டும். அவ்வாறின்றி ஒரு நாட்டை எப்படி முன்னேற்ற முடியும். முதலீட்டாளர்கள் இங்கு வந்து முதலீடு செய்யும் போது அவர்களுக்கு நாட்டின் வளங்களை விற்பனை செய்வதாக கூறுகிறார்கள். எதையாவது சொல்லத்தான் பார்க்கிறார்கள். அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். கோவிட் பிரச்சனை இருப்பதால் அவர்கள் கொஞ்சம் ஆட்டம் போடுகிறார்கள். கோவிட் பிரச்சினை தீர்ந்த பின்னர் அவர்களின் அரசியல் அழிந்து விடும்.
ஊரடங்குச் சட்டத்தை நீடிக்க வேண்டும் என்று மருத்துவ சங்கங்கள் கூறுவது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், நானொன்றும் மருத்துவர் கிடையாது. ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பில் நான் கருத்துச் சொல்வதில் பயணில்லை. மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் நிபுணர்களின் கருத்துக்களை பெற்று ஜனாதிபதி சரியான முடிவுகளை எடுப்பார். சரியான முடிவுகளை எடுப்பதற்காகத்தான் அறுபத்தொன்பது இலட்சம் மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.
அரசாங்கத்திற்கு தற்பொழுது பணப் பிரச்சினை இருக்கிறதா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்.
அரசிடம் பணம் இருக்கிறது. பணமில்லாவிட்டால் வீட்டில் இருந்து வேலை செய்யும் அரசாங்க ஊழியரின் சம்பளத்தை எப்படி கொடுக்க முடியும். கடந்த அரசாங்கத்திடம் பணம் இருக்கவில்லை. நாங்கள் வங்குரோத்தடையவில்லை.
நாங்கள் இன்னும் அரச ஊழியர்களுக்கு உரிய திகதியில் சம்பளம் வழங்கி வருகிறோம் .எங்களிடம் வீணடிக்க பணம் இல்லை. எமது வருமானம் குறைந்த மட்டத்தில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.ஆனால், அரசாங்கம் வங்குரோத்தடையவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
டபிள்யு.ஏ. சில்வா மாவத்தை முதல் பாமன்கடை பாலம் வரையான வீதியின் இருபுறமும் மரம் நடும் நிகழ்வில் அமைச்சர் மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்தார்.
நெடுஞ்சாலை அமைச்சின் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் இருக்கும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை இணைப்புத் திட்டத்தின் ஊடாக மரம் நடும் திட்டம் 2021-09-17 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டபிள்யூ.ஏ சில்வா மாவத்தையில் இருந்து பாமன்கடை பாலம் வரை வீதியின் இருபுறமும் மரங்கள் நடப்பட்டன.
இந்த நிகழ்வில் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர். பிரேமசிறி, வீதி அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் சமிந்த அதாலுவகே, திட்டப்பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பிள்ளையார் கோவில் சுவரில் புத்தர் – வெடித்த சர்ச்சை
பிள்ளையார் கோவில் சுவரில் புத்தர் – வெடித்த சர்ச்சை
யாழ். பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான பிள்ளையார் குளத்தைச் சுற்றி, பௌத்த கொடிகளில் காணப்படும் வர்ணங்களை ஒத்தவகையில் நிறம் தீட்டும் செயற்பாடு இடம்பெற்று வருகிறது.
உலக வங்கியின் நிதி அனுசரணையுடன், மீளப் புனரமைக்கப்பட்டு வருகின்ற பிள்ளையார் குளத்தின் சுற்று கம்பங்களுக்கே, இவ்வாறு பௌத்த கொடிகளில் உள்ள நிறங்களை பொறிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
1996ஆம் ஆண்டு 1.51(0.6063) ஏக்கராக இருந்த இந்தக் குளத்தின் பரப்பளவு 2013ஆம் ஆண்டு மீள அளக்கப்பட்ட போது, 1.26(0.5078) ஏக்கராக குறைவடைந்துள்ளமை தெரியவந்தது.
இவ்வாறான நிலையில், குறித்த குளம் தற்போது புனரமைக்கப்பட்டு வரும் நிலையில், குளத்திலிருந்து தூர்வாரப்பட்டு மண்ணை மீண்டும் குளத்தின் சுற்றுப்புறங்களில் கொட்டியதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.
இவ்வாறான நிலையில், அவர் பார்வையிட்டு சென்ற நிலையில், இவ்வாறு இடம்பெறுவது பலருக்கும் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.
சூரி இல்ல திருமண விழாவில் கொள்ளை
சூரி இல்ல திருமண விழாவில் கொள்ளை
முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் சூரியின் இல்ல திருமண விழாவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சூரி இல்ல திருமண விழாவில் கொள்ளை – போலீசில் புகார்
சூரி
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது.
இவரது அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகள் திருமண விழா கடந்த 9ம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
சூரி முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்திற்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கருணாஸ், சீமான் உள்ளிட்ட பலர் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
சூரி
இந்நிலையில், அந்த திருமணத்தில் 10 சவரன் மதிப்பிலான நகை கொள்ளை போனதாக
கீரைத்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






