Tag: கொரனோ
அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனா
அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனா
அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக, சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில், தொற்று உறுதியாகியுள்ளது.
6 பொலிஸ் கொன்ஸ்டபிள், 2 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் 2 பொலிஸ் சார்ஜன்ட் உட்பட 10 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இவர்களில் சிலர், கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் தேவையற்று பொலிஸ் நிலையம் செல்வதைத் தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு
காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு
பொலிஸ் விசேட அதிரடிப்படையில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையில் பணியாற்றிய அவர், புத்தளம் – அநுராதபுரம் வீதியில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மினுவங்கொட பகுதியை சேர்ந்த 36 வயதுடைய குறித்த நபர் தன்னுயிரை மாய்த்துக்
கொண்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. புத்தளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எகிறும் படுகொலைகள் – மிதக்கும் சடலங்கள்
எகிறும் படுகொலைகள் – மிதக்கும் சடலங்கள்
மஹியங்கனை மொரகெட்டிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (12) நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதிலில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது,
மொரகெட்டிய வேவத்த பகுதியை சேர்ந்த 59 வயதுடைய நபர் இதன்போது உயிரிந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பலாங்கொடை மெதகந்தவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (12) இரவு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அயல்வீட்டினருடன் ஏற்பட்ட முரண்பாட்டில் குறித்த நபர் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
மெதகந்தவத்த பகுதியை சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த கொலை சம்பங்கள் தொடர்பில் அந்தந்த பிரசேதத்துக்கு பொறுப்பான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இராஜினாமா செய்த எம்.பி மீண்டும் எம்.பியாகிறார்
இராஜினாமா செய்த எம்.பி மீண்டும் எம்.பியாகிறார்
தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவர், மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.
தற்போதைய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்காக, தன்னுடைய தேசியப் பட்டியல் எம்.பி பதவியை, ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்தார்.
இந்நிலையில், மற்றுமொரு தேசியப் பட்டியல் எம்.பியான அஜிட் நிவாட் கப்ரால், தன்னுடைய பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன
. அவர், மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் பதவியேற்கவுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
அஜிட் நிவாட் கப்ராலின் வெற்றிடத்துக்கே, ஜயந்த கெட்டகொட மீண்டும் நியமிக்கப்படவுள்ளார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடீரென்று திருமணம் செய்து கொண்ட நடிகை
திடீரென்று திருமணம் செய்து கொண்ட நடிகை
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகை வித்யுலேகா திடீரென்று திருமணம் செய்துக் கொண்டார்.
திடீரென்று திருமணம் செய்து கொண்ட நடிகை வித்யுலேகா
கணவருடன் வித்யுலேகா
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
கெளதம் மேனன் இயக்கத்தில், ஜீவா – சமந்தா நடிப்பில் வெளியான ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தில் காமெடி நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா. கடந்த ஆண்டு லாக்டவுன் சமயத்தில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் உடன் வித்யுலேகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
வித்யுலேகா
குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அதில் கலந்து கொண்டனர். வருங்கால கணவர் சஞ்சய் உடன் வித்யூலேகா எடுத்துக் கொண்ட நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள
பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்துக்களை பெற்றார்.
இந்நிலையில், திடீரென்று வித்யுலேகாவும் சஞ்சய்யும் திருமணம் செய்துகொண்டனர். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
விளம்பரம் தேட வில்லை…. கனகா
விளம்பரம் தேட வில்லை…. கனகா
கரகாட்டக்காரன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை கனகா, தான் விளம்பரத்திற்காக எதுவும் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.
விளம்பரம் தேட வில்லை…. கனகா காட்டம்
கனகா
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
கங்கை அமரன் இயக்கத்தில் 1989-ல் வெளியான கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக
நடித்து பிரபலமான கனகா முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த், ராமராஜன், பிரபு, கார்த்திக் உள்ளிட்டோரின் படங்களில் நடித்து இருக்கிறார்.
1999-ல் வெளியான விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகிய அவர் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் தனக்கு மீண்டும் நடிக்க ஆசை உள்ளது
என்றும், இதற்காக சினிமாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கற்கப்போகிறேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
அந்த வீடியோவை பார்த்த சிலர் மீண்டும் சினிமா வாய்ப்பை பிடிக்க விளம்பரம் தேடும் முயற்சியாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார் என்று கனகாவை விமர்சித்தனர்.
கனகா
இதற்கு விளக்கம் அளித்து கனகா வெளியிட்டுள்ள இன்னொரு வீடியோவில், “நான் சினிமாவில் நடிக்க விளம்பரம் தேடி வீடியோ வெளியிடவில்லை. சினிமாவை பற்றி இதுவரை எதுவும்
கற்றுக்கொள்ளாமல் இருந்த நான் புதிதாக கற்கலாமா என்று யோசிப்பதாக தெரிவித்து இருந்தேன். உடனே பலரும் நான் விளம்பரத்துக்காகவும், சினிமா வாய்ப்புக்காகவும் வீடியோவை
வெளியிட்டு இருப்பதாக விமர்சிக்கிறார்கள். உங்களுடன் பேசவே வீடியோ வெளியிட்டேன்” என்று கூறி உள்ளார்.
ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்ற ஷங்கர் மகள்
ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்ற ஷங்கர் மகள்
விருமன்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமாகும் அதிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்ற ஷங்கர் மகள்
அதிதி ஷங்கர், ரஜினிகாந்த்
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் ‘விருமன்’. இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம்
மூலம் தயாரிக்கிறார். மருது, கொம்பன் போன்ற படங்களை இயக்கி பிரபலமான முத்தையா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிகை அதிதி, கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்தது. இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும்
அதிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த், அதிதியை நேரில் அழைத்து வாழ்த்தி உள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற நடிகை அதிதி,
அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கைக்கு விதிக்க பட்ட தடைகள் நீக்கம்
இலங்கைக்கு விதிக்க பட்ட தடைகள் நீக்கம்
இலங்கை அரசுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் விதித்த தடைகள் நீக்க பட்டுள்ளன ,
இந்த தடை நீக்கத்தை அடுத்து இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த பயணிகள்; குறித்த நாட்டுக்கு பயணிக்கலாம் என அறிவிக்க பட்டுள்ளது
யாழில் மருத்துவ பீட மாணவி சடலமாக மீட்பு
யாழில் மருத்துவ பீட மாணவி சடலமாக மீட்பு
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்..
மருத்துவ பீடத்தை சேர்ந்த சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவருடைய மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவரவில்லை.
சுன்னாகத்தினைச் சேர்ந்த குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார்.
குறித்த கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மருத்துவத் துறைக்குத் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர் என்றும் அண்மையில் வெளியாகிய பல்கலைக்கழக பரீட்சை
முடிவுகளிலும் நிறைவான புள்ளிகளைப் பெற்றிருந்தவர் என்றும் நெருக்கமான மருத்துவப்பீட மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்..
இலங்கையில் உணவு நெருக்கடிக்கு இடமில்லை
இலங்கையில் உணவு நெருக்கடிக்கு இடமில்லை
கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலினால் உலக நாடுகளைப் போன்று இலங்கையும் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.
இலங்கையும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும் இந்த வருட இறுதியில் 4 தசம் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்பார்ப்பதாக பிரதி நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
பிபிசி உலக சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இது பற்றி மேலும் தெரிவிக்கையில், போதிய அளவிலான அத்தியாவசியப் பொருட்கள்
களஞ்சியங்களில் காணப்படுகின்றன இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொருட்களை பதுக்கும்
நடவடிக்கைகளில் சில வர்த்தகர்கள் ஈடுபட்டார்கள். ஆனால் இவ்வாறான முயற்சிகளை தடுக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் ராஜாங்க அமைச்சர் கூறினார்.
அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக அரசாங்கத்திற்கு உத்தரவாதத்தை வழங்க முடியும் என்றும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்
மின்தகன மயானம் அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்
மின்தகன மயானம் அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதேச சபையில் நேற்று நடைபெற்றது!
நாளுக்கு நாள் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் நேற்று
பிற்பகல் வேளையில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது
குறித்த மயானத்தை அமைக்க 25 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தொகையில் ஒரு கோடி ரூபாவை (10 மில்லியன்) கிளிநொச்சியில் உள்ள வர்த்தகர் ஒருவர் வழங்க முன்வந்துள்ளார். புலம்பெயர் அமைப்பு ஒன்றும் உதவ முன்வந்துள்ளது.
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வைத்தியகலாநிதி மு. சிறீதர், அதிபர்கள் ஆசிரியர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர் .
மின்மையானம் அமைப்பதற்கான ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
தலைவராக கிளிநொச்சி மாவட்ட முன்னாள் வர்த்தக சங்கத்தின் தலைவர் நவரட்ணராஜா செயலாளராக ஆசிரியரும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினருமான சத்தியானந்தன்
பொருளாளராக அதிபர் விக்கினராஜா உபதலைவராக வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ஆனந்த வடிவேல் உபசெயலாளராக ரவி அவர்களும் உறுப்பினர்களாக வைத்தியகலாநிதி மு. சிறீதர்
கிளிநொச்சி சேவைச் சந்தையின் தலைவர் இரத்தினமணி மற்றும் ரவீந்திரன் ஆகியோரும் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.



கொரோனா மரண எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது
கொரோனா மரண எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 157 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (10) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,152 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 482,360 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 411,233 ஆக அதிகரித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவை மீறிய 669 பேர் கைது
ஊரடங்கு உத்தரவை மீறிய 669 பேர் கைது
இலங்கையில் பரவி வரும் கொரனோ நிகழ்வை அடுத்து பலத்த தடைகள் நடைமுறை படுத்த பட்டுள்ளன
அத தடைகளை மீறி செயல்பட்ட 669 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
தொடந்து தடைகள் விதிக்க பட்டுள்ளது
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்-2 நாள் சிசுவுக்கு கொரோனா
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்-2 நாள் சிசுவுக்கு கொரோனா
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் பராமரிக்கப்பட்டுவரும் சிசுவுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அச்சிசுவுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம்: உலக நாடுகளில் இலங்கை முன்னணியில்
தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம்: உலக நாடுகளில் இலங்கை முன்னணியில்
கொவிட் 19 வைரசு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தில் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை முன்னணியில் இருப்பதாக மூத்த சரவ்தேச ஆய்வாளர் விஜித்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது
பொதுமக்களின் கடமையாகும். கட்சி பேதமின்றி இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும் என்றும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் கைது
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் கைது
வீட்டில் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் (06) யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாயைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவரிடமிருந்து 2 லீற்றர் கசிப்பு, 5 லீற்றர் கோடா என்பன கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பறக்கும் படை வேட்டை – 375 பேர் கைது
பறக்கும் படை வேட்டை – 375 பேர் கைது
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியோர் தொடர்பிலான விபரங்களுடன் பொலிஸ் தலைமையகத்தின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளது.
அதில்,
தனிமைப்படுது்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ், இதுவரையிலும் 67,342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 மணிநேரத்தில்
செப்டெம்பர் 7 ஆம் திகதி காலை 6 மணிமுதல் செப்டெம்பர் 8 ஆம் திகதி காலை 6 மணிக்கு நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ்.
கைதானவர்களின் எண்ணிக்கை -675
கைப்பற்றப்பட்ட வாகனங்கள்- 42
சோதனைச் சாவடிகளில்
மேல் மாகாணத்தில் இருந்து வேறு மாகாணங்களுக்குள் நுழையும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 13 வீதிச் சோதனை சாவடிகளில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிபோது சோதனை செய்யப்பட்ட விவரம்
வாகனங்கள் -812
நபர்கள்- 1,206
மனைவி இறந்து 3 நாளில் இறந்த கணவன்
மனைவி இறந்து 3 நாளில் இறந்த கணவன்
கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்து மூன்று நாள்களின் பின் கணவனும் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நுணாவில் பகுதியில் பதிவாகி உள்ளது.
சாவகச்சேரி நுணாவிலைச் சேர்ந்த 96 வயது முதியவரே இவ்வாறு கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.
நுணாவில் கிழக்கைச் சேர்ந்த 90 வயதுடைய பெண் கடந்த 3 ஆம் திகதி கொவிட்-19 நோயினால் உயிரிழந்தார். அவரது சடலம் இன்னும் சுகாதார நடைமுறைகளின் கீழ் தகனம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் அவரது கணவர் தனது 96 வயதில் நேற்று உயிரிழந்துள்ளார். அவரும் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத் துறையினர் அறிக்கையிட்டுள்ளனர்.
கொரனோ தொற்றுக்கு இலக்காகி 180 மரணம்
கொரனோ தொற்றுக்கு இலக்காகி 180 மரணம்
இலங்கையில் அதிவேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் 180 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் பத்து ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
கடல்வழியாக இலங்கை நுழைய முயன்ற பெண் கைது
கடல்வழியாக இலங்கை நுழைய முயன்ற பெண் கைது
தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்ற, 19 வயது ஒருவர், இன்று (06) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த சிவனேசன் கஸ்தூரி (வயது19) என்ற யுவதியே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவது, இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இலங்கையில் இருந்து தப்பி, தமிழகத்தை சென்றடைந்து, அங்கு உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்தார்.
அங்கு நபரொருவருடன் ஏற்பட்ட காதலால், 2018ஆம் ஆண்டு விமானம் மூலம், சென்னைக்கு வந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
விசா முடிந்த பின்னர், இலங்கைக்கு திரும்பி செல்லாமல், சென்னை – வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில், அவர் சட்டவிரோதமாக தங்கி வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், முல்லைத்தீவு – முள்ளியவளை கிராமத்தில் வசித்து வரும் குறித்த பெண்ணின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால், இலங்கைக்கு திரும்பி செல்வதற்காக இன்று (6) அதிகாலை, தனுஷ்கோடியில் இருந்து நாட்டு படகு மூலம் சட்டவிரோதமாக முல்லைத்தீவுக்கு புறப்பட்டுள்ளார்.
அப்போது, தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டு பகுதியில் வைத்து, இந்திய கடலோர காவல்படையினரின் ரோந்து படகு வந்ததை அறிந்த படகோட்டி, குறித்த பெண்ணை, முதல் மணல் திட்டு பகுதியில், இறங்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், இராமேஸ்வரம் – மெரைன் பொலிஸார், படகில் சென்று குறித்த பெண்ணை கைது செய்து, தனுஷ்கோடி அழைத்து வந்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, இராமேஸ்வரம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில், அவரை ஒப்படைத்தனர்.
அத்துடன், அவரிடம் இருந்து கடவுச்சீட்டு, இலங்கை குடியுரிமை ஆவணங்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாக நாட்டு படகில், அப்பெண்ணை அழைத்துச் சென்ற முகவரை தேடப்பட்டு வருகின்றார்.
விசாரணைகளின் பின்னர், அவரை இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







