Tag: கைது
பிரிட்டனில் அகதிகள் முகாமை தீ வைத்து எரித்த ஐவர் கைது
பிரிட்டனில் அகதிகள் முகாமை தீ வைத்து எரித்த ஐவர் கைது
பிரிட்டன் கென்ட் பகுதியில் அகதி முகாம் ஒன்றை தீ வைத்து
எரியூட்டிய குற்ற சாட்டில் ஐவர் போலீசாரால் கைது செய்ய
பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்ய பட்ட அனைவரும் தீவிர விசாரணைகளுக்கு உள்ளாக்க
பட்டுள்ளனர்
இந்த முகமில்சுமார் 400 அகதிகள் இருந்துள்ளனர் ,எனவும்
தெரிவிக்க பட்டுள்ளது ,இது திட்டமிட பட்ட சதியா என்பது
தொடர்பில் தெரியவரவில்லை

30 பேர் காவல்துறையினரால் திடீர் கைது
30 பேர் காவல்துறையினரால் திடீர் கைது
இலங்கையில் பரவி வரும் நோயின் தாக்குதலை தடுக்கும் வகையில்
நிகழ்கால நிகழ்வுகளை மைய படுத்தி விடுக்க பட்ட விதிகளை மீறி செயல்
பட்ட முப்பது பேரை தாம் கைது செய்துள்ளதாக
காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்
கைதானவர்கள் அனைவருக்கும் தண்டம் அறவிட பட்டுள்ளதுடன்
சிலர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது
பொலிசார் வேட்டையில் 15 பேர் கைது
பொலிசார் வேட்டையில் 15 பேர் கைது
இலங்கையில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல் தடுப்பு விதிகளை
மீறி செயல்பட்ட சுமார் பதின் ஐந்து பேரை தாம் கைது செய்துள்ளதாக
இலங்கை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் ,கைதானவர்கள்
மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படும் எனவும் தெரிவிக்க படுகிறது
துப்பாக்கியால் சுட்டு கொன்றவர் கைது
துப்பாக்கியால் சுட்டு கொன்றவர் கைது
இலங்கை பண்டுற பகுதியில் நபர் ஒருவரை சுட்டு கொன்ற கொலை குற்ற
சாட்டில் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளதாக
காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்
தொடர்ந்து இது தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற
வண்ணம் உள்ளது
12 பேர் காவல்துறையினரால் திடீர் கைது
12 பேர் காவல்துறையினரால் திடீர் கைது
இலங்கையில் பரவி வரும் நோயின் தாக்குதலை அடுத்து விதிக்க பட்ட நிகழ்கால
விதிகளை மீறி செயல் பட்ட பண்ணிரெண்டு பேரினைதாம் கைது செய்துள்ளதக் காவல்துறையினர்
தெரி வித்துள்ளனர்
முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்களே
இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
பொலிஸ் திடீர் சோதனை -26 பேர் கைது
பொலிஸ் திடீர் சோதனை -26 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பேணாத
குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து இதுவரையில் 2361
பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டில் -மதுபோதையில் வாகனம் செலுத்திய 173 பேர் கைது
புத்தாண்டில் -மதுபோதையில் வாகனம் செலுத்திய 173 பேர் கைது
ன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை
நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 173 சாரதிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கடந்த 20ஆம் திகதியிலிருந்து இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட இந்த
சோதனை நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயிரத்து 571 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
நேற்று இடம்பெற்ற நான்கு வீதி விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்தார்கள். 31 பேர் காயமடைந்தார்கள். கடந்த டிசெம்பர்
20ஆம் திகதியிலிருந்து இதுவரையில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 53 பேர் உயிரிழந்தார்கள். 136 பேர் காயமடைந்தார்கள்.
இதேவேளை, இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில்
முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பேணாத 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..
ஊரடங்கு சட்டத்தை மீறிய 25 பேர் கைது
ஊரடங்கு சட்டத்தை மீறிய 25 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு
சட்டத்தை மீறிய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முகக்கவசம் அணியாமை, சமூக இடைவௌியை கடைபிடிக்கமை
தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்
ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2021 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூவரை சுட்டு கொன்றும் பலரை காயப்படுத்திய இராணுவ படை தளபதி கைது
மூவரை சுட்டு கொன்றும் பலரை காயப்படுத்திய இராணுவ படை தளபதி கைது
இராணுவத்தின் சார்யன் தரத்தில் பணிபுரிந்து வைத்த இராணுவ சிப்பாய்
ஒருவர் northern Illinois பகுதியில் தனது துப்பாக்கியை பயன் படுத்தி மூவரை
சுட்டு படுகொலை செய்ததுடன் ,மூவரை காயப்படுத்திய நிலையில் கைது
செய்யப்பட்டுள்ளார்
இவரது இந்த கொலை ஏன் இடம்பெற்றது என்பது தொடர்பில்
விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
54 பேர் காவல்துறையால் திடீர் கைது
54 பேர் காவல்துறையால் திடீர் கைது
தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில்
54 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை
உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமையாலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம்
இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 1,794 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுகாதார விதிகளை மீறிய 41 பேர் கைது
சுகாதார விதிகளை மீறிய 41 பேர் கைது
தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 41 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை
உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமையாலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான
காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 1,652 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ரிஷாட்டின் முக்கிய புள்ளி கைது
ரிஷாட்டின் முக்கிய புள்ளி கைது
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
அப்துல்லா மஹ்ரூப், இன்று (15) காலை 6.30 மணியளவில் காலை கிண்ணியாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதொச நிறுவனத்தின் வாகனம் ஒன்றினை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள
உள்ளதாகவும் இதனால் இவரை கொழும்புக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்படும் வேளையில் தனது வாகனத்தில் கொழும்பிற்கு வருவதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு
தெரியப்படுத்தியும் தங்களுடைய வாகனத்தில் அழைத்துச் செல்வதாக கூறப்பட்டுள்ளது எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் கைது
தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை
உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமையாலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம்
இதுவரையான காலப்பகுதியில் 1,390 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா மருத்துவமனை தீ விபத்து – 3 டாக்டர்கள் கைது
கொரோனா மருத்துவமனை தீ விபத்து – 3 டாக்டர்கள் கைது
குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்
மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக 3 டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.
குஜராத் கொரோனா மருத்துவமனை தீ விபத்து – 3 டாக்டர்கள் கைது
கைது செய்யப்பட்ட டாக்டர்கள்
:
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த 27-ம் தேதி இரவு அந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளும்படி முதல் மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டார்.
இந்நிலையில், குஜராத்தின் ராஜ்கோட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட
தீவிபத்து தொடர்பாக 3 டாக்டர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
மாவீரர்தினம் தொடர்பான கவிதையொன்றை பகிர்ந்த இளைஞர் கைது
மாவீரர்தினம் தொடர்பான கவிதையொன்றை பகிர்ந்த இளைஞர் கைது
மாவீரர் தினத்தில் பேஸ்புக்கில் மாவீரர்தினம் தொடர்பான
கவிதையொன்றை பகிர்ந்த இளைஞர் ஒருவர் சம்பூர் பொலிஸாரால் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பூர் 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மூதூர் நீதவான்
நீதிமன்றத்தில்இன்று (28) ஆஜர் படுத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
பெண் உத்தியோகத்தரை தாக்கிய முகாமையாளர் கைது
பெண் உத்தியோகத்தரை தாக்கிய முகாமையாளர் கைது
நிர்வாக உதவியாளர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய மேல்மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்
உடுகம்பொல அலுவலகத்தின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அலுவலகமொன்றில் பணிப்புரியும் பெண் மீது உயர் அதிகாரியொருவர்
தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
பெண்ணை தாக்கிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வீட்டில் சிக்கிய கஞ்சா – நடிகை கைது
வீட்டில் சிக்கிய கஞ்சா – நடிகை கைது
அந்தேரி வீட்டில் கஞ்சா சிக்கியதை தொடர்ந்து நகைச்சுவை நடிகை பாரதி சிங்கை போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடியாக கைது செய்தனர்.
வீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது – போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து மும்பையில் இந்தி திரையுலகினர் மற்றும் போதைப் பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு
பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்கரவர்த்தி தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.
இதுதவிர தீபிகா படுகோனே, ரகுல் பிரீத்சிங், ஷரத்தா கபூர், சாரா அலிகான் உள்ளிட்ட முன்னணி நடிகைகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சமீபத்தில் கூட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்
தயாரிப்பாளர் பிரோஸ் நாடிவாலாவின் வீட்டில் சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரது மனைவியை கைது
செய்தனர். இதேபோல பிரபல நடிகர் அர்ஜூன் ராம்பால் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று அந்தேரி லோகன்ட்வாலா பகுதியில் உள்ள பிரபல நகைச்சுவை நடிகை
பாரதி சிங்கின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து சிறிய அளவில் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பாரதி சிங் கிலாடி 786, சனம் ரே உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்துள்ளார். பல டி.வி. நிகழ்ச்சிகளிலும், நகைச்சுவை
நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார். சில டி.வி. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார்.
இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், போதைப் பொருள் வி்ற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினோம். அப்போது நடிகை பாரதி சிங்கின் பெயரும்
அடிபட்டது. இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்தி உள்ளோம். அவரது வீட்டில் இருந்து சிறிய அளவில் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
வீட்டில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து பாரதி சிங் விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு
வரவழைக்கப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின் பாரதி சிங்கை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய பிரபல நடிகர் கைது
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய பிரபல நடிகர் கைது
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொலிஸாரிற்கு இடையூறு
விளைவித்த பிரபல நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருலப்பனை பொலிஸாரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரிடம் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டு வருவதுடன் சம்பவம்
தொடர்பில் கிருலப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் இருவர் படுகொலை: 12 பேர் கைது
யாழில் இருவர் படுகொலை: 12 பேர் கைது
யாழ்ப்பாணத்தில், இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்ததில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சுழிபுரம் மத்தி குடாக்கனை பகுதியிலிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த சின்னவன்
செல்வம் (வயது-56) மற்றும் இராசன் தேவராசா (வயது-31) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இரு குடும்பங்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடு, கடந்த வௌ்ளிக்கிழமையும் ஏற்பட்டுள்ளது. மாலை
இரு குடும்பங்களுக்கும் இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டு , கைக்கலப்பாக மாறும் சூழ் காணப்பட்ட போது அயலவர்களால் இரு தரப்பினரும் சமாதானப்படுத்தப்பட்டனர்,
பின்னர் பின்னிரவு நேரம் ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்தவர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
அதில் சின்னவன் செல்வம் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார், மற்றையவரான இராசன் தேவராசா (வயது-31)
சிகிச்சைக்காக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பொலிஸார்,
சந்தேகத்தின் பேரில் 12 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
பிள்ளையானின் செயலாளர் கைது
பிள்ளையானின் செயலாளர் கைது
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான பிள்ளையான் என்றழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுறை
சந்திரகாந்தனின் செயலாளர் பூ.பிரசாந்தன், சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரயம்பதியிலுள்ள தனது வீட்டிலிருந்து மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள
காரியாலயத்துக்குச் சென்று கொண்டிருந்த போதே, இன்றுக்காலை 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது காரியாலயத்துக்கு இன்று (12) காலை சென்றுகொண்டிருந்த வேளையிலேயே, கொழும்பிலிருந்து வருகைதந்திருந்த
குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் இவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரயம்பதியில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.






