Posted in இலங்கை செய்திகள்

போதையில் தாக்குதல் – நால்வர் கைது

போதையில் தாக்குதல் – நால்வர் கைது

மல்லாவி பகுதியில் போதை அருந்திவிட்டு வீட்டின் முன்பாக நின்ற குடும்பஸ்தர் மீது நால்வர்

அடங்கியா குழு தாக்குதல் நடத்தியுள்ளது


மேற்படி தாக்குதலை நடத்திய குழுவினர் கைது செய்ய பட்டுள்ளனர் .


போதைக்கு அடிமையாகி எமது சமுதாயம் சீரழிந்து செல்வதனை மேற்படி சம்பவங்கள் காண்பிக்கின்றன

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டனுக்குள் கடத்த பட்ட 2 4 மில்லியன் போதைவஸ்து முறியடிப்பு

    லண்டனுக்குள் கடத்த பட்ட 2 4 மில்லியன் போதைவஸ்து முறியடிப்பு

    லண்டன் டோவர் வழியூடாக வான் சாரதி ஒருவர் அந்த வானின் எரிபொருள் டாங்கிக்குள்

    மறைத்து எடுத்து வரப்பட்ட சுமார் 30 கிலோ எடையுள்ள கொக்கையின் போதைவஸ்து

    எல்லையோர காவல்படை சோதனையில் மடக்கி பிடிக்க பட்டுள்ளது

    லித்து வேனியா நாட்டை சேர்ந்த சாரதி ஒருவரே இந்த துணிகர கடத்தலை மேற்கொண்ட போது

    போலீசாரிடம் வசமாக மாட்டி கொண்டார்

    இது தொடர்பாக இடம்பெற்று வந்த நீதி விசாரணைகளில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட

    இவருக்கு ஒன்பது வருடம் ,ஒன்பது மாதம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      நடந்து சென்றவரை இடித்து கொன்ற வான் பிரிட்டனில் நடந்த பயங்கரம்

      நடந்து சென்றவரை இடித்து கொன்ற வான் பிரிட்டனில் நடந்த பயங்கரம்

      பிரிட்டன் Luton Road, Chatham பகுதியில் பாதைசாரி ஒருவரை வேகமாக வந்த வான் ஒன்று இடித்து

      கொன்றுள்ளது ,சாரதியின் வேகமான வண்டி ஓடுதலே இந்த உயிர் பலிக்கு காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது

      இந்த சம்பவத்திடன் தொடர்புடைய மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்

        Posted in இலங்கை செய்திகள்

        வெடி பொருட்களுடன் இருவர் கைது

        வெடி பொருட்களுடன் இருவர் கைது

        இந்தியாவில் இருந்து படகுமூலம் கடத்தி வரப்பட்டு வீடொன்றில் பதுக்கி வைக்க பட்டிருந்த

        பெருமளவான


        வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்

        கைதானவர்கள் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்

          Posted in Uncategorized

          நல்லூர் ஆலயத்தை இடித்து மலசல கூடம் கட்டுவேன் என்றவர் கைது

          நல்லூர் ஆலயத்தை இடித்து மலசல கூடம் கட்டுவேன் என்றவர் கைது

          இராணுவத்தின் எடுபிடி என அழைக்கப்படும் அருண் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

          நீதிமன்ற பிடியாணை மூலம் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று இவரை கைது செய்துள்ளனர்.

          பல குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட அருண் சித்தார்த்தன் ஊடகவியலாளர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.

          அதேவேளை, கைது செய்ய சென்ற யாழ்ப்பாணம் பொலிஸாருடன் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன்,

          பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றார்.

          இதன் போது தான் இராணுவத்தின் முக்கிய புள்ளி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

          இவர் நல்லூர் கோவிலை இடித்து ஆலய சூழலில் பொது மல சல கூடம் அமைப்பேன் என்றும் இந்து

          மதத்தை இழிவு படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

            Posted in Uncategorized

            லண்டனில் -மக்களை கொலை செய்ய கத்தி ,துப்பாக்கியுடன் உலவிய நபர் கைது

            லண்டனில் -மக்களை கொலை செய்ய கத்தி ,துப்பாக்கியுடன் உலவிய நபர் கைது

            லண்டன் Folkestone பகுதியில் கத்தி துப்பாக்கியுடன் உலவிய நபர் ஒருவரை காவல்துறையினர்

            கைது செய்துள்ளனர்

            இவர் வழிப்பறி கொலையில் ஈடுபடும் நோக்குடன் மக்களை மிரட்டி ,கொலை செய்யும்

            நடவடிக்கையில் ஈடுபடுபவர் என தெரிவிக்க பட்டுள்ளது

            கைதானவர் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார்

              Posted in இலங்கை செய்திகள்

              முசுலீம் தீவிரவாதி ஒருவர் கைது

              முசுலீம் தீவிரவாதி ஒருவர் கைது

              ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான முஹம்மட் சஹ்ரான் ஹாஷிமுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி வந்த நபரொருவர், பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால், நேற்றிரவு (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

              காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

              பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் உயித்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

              இந்நிலையிலேயே, காத்தான்குடி 4ஆம் பிரிவைச்சேர்ந்த 37 வயதுடைய கே.ஜி.பி. ஜவ்ராஸ் என்பவரை அடையாளம் கண்டுகொண்ட பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் அந்நபரை, சம்பவதினமான நேற்றிரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

              Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

              அமெரிக்கா இராணுவ வானூர்தி கண்காணிப்பு தீவிரம்

              அமெரிக்கா இராணுவ வானூர்தி கண்காணிப்பு தீவிரம்

              ஈராக் சிரியா எல்லை பகுதியில் அமெரிக்கா இராணுவத்தின் உலங்குவானூர்தி ரோந்து பணி

              அதிகரிக்க பட்டுள்ளது

              இந்த பகுதியில் அமெரிக்கா இராணுவத்தின் மீது தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று வரும்

              நிலையில் இந்த ரோந்து பணிகள் தீவிரமாக்க பட்டுள்ளன

              மேலும் அமெரிக்கா படைகள் பெரும் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வருவதான கசிவுகள்

              வெளியாகியுள்ளமை இங்கே கவனிக்க தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                காவல்துறை வேட்டை 86 பேர் கைது

                காவல்துறை வேட்டை 86 பேர் கைது

                இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறி செயல் பட்ட எண்பத்தி ஆறு பேர் கடந்த தினம்

                கைது செய்ய பட்டுள்ளனர்


                இதுவரை 82 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளதாக போலீசார்

                தெரிவித்துள்ளனர்

                  Posted in Uncategorized

                  வவுனியாவில் போதையில் தமிழ் வாலிபனை தாக்கிய இராணுவம் – வீடியோ

                  வவுனியாவில் போதையில் தமிழ் வாலிபனை தாக்கிய இராணுவம் – வீடியோ

                  சற்று முன்னர் வவுனியா பகுதியில் ஆட்டோவில் பயணித்து கொண்டிருந்த தமிழ் வாலிபன்

                  ஒருவரை வழிமறித்த இராணுவத்தினர் சரமாரியாக தகக்கியுள்ளனர்

                  அதி போதையில் இருந்த இராணுவ சிப்பாய்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்

                  சம்பவ ஐஇடத்திற்கு விரைந்து வந்த ஊடக நபர்கள் மேற்படி விடயத்தை அம்பல படுத்திய நிலையில் இவர்கள் சிக்கலில் உள்ளனர்

                  இதுவே தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

                  கோட்டா ஆடசியில் இராணுவ மயமாக்களின் ஒன்றாக இதனை பார்க்க முடிகிறது ,தமிழா என்று

                  விழிப்பாய் ..? கூட்டமைப்பு என்ன செய்கிறது இதுவே மக்கள் கேள்வியாக உள்ளது

                    Posted in இலங்கை செய்திகள்

                    விபத்தில் வண்டிகள் சிக்கினால் தண்டம் – புதிய சட்டம்

                    விபத்தில் வண்டிகள் சிக்கினால் தண்டம் – புதிய சட்டம்

                    இலங்கையில் இன்று புதிதாக வெளியான வரவு செலவு திட்ட அறிக்கையில்


                    தற்பொழுது வாகனங்கள் விபத்தில் சிக்கினால் அதற்கு மேலதிகமாக தண்ட பணம் அறவிட

                    உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                    இதன் மூலம் நான்கு மில்லியன் ரூபாய்களை மேலதிகமாக சம்பாதிக்கலாம் என்பது அரசின்

                    முடிவாக உள்ளது

                    வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ஏற்ப இந்த விடயங்கள் அறிமுக படுத்த படுகிறது என தெரிவிக்க பட்டுள்ளது

                      Posted in Uncategorized

                      மனைவியை அடித்து கொன்ற கணவன்

                      மனைவியை அடித்து கொன்ற கணவன்

                      இலங்கை மாத்தறை பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ள

                      து
                      இதனால் ஆத்திரமுற்ற கணவன் பொல்லு ஒன்றினால் மனைவியை தாக்கி படுகொலை

                      செய்துள்ளார்

                      தற்போது கொலை குற்ற சாட்டில் கணவன் கைது செய்ய பட்டுள்ளார்

                      இவ்வாறான குற்ற சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        அந்தமானில் சிக்கிய மீனவர்களை மீட்க நடவடிக்கை

                        அந்தமானில் சிக்கிய மீனவர்களை மீட்க நடவடிக்கை

                        அந்தமான் தீவுப் பகுதியில் தரித்து நிற்கின்ற வாழைச்சேனை மீனவர்கள் நால்வரும்


                        நாட்டிற்கு வந்து சேர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு
                        கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் கடற்றொழில் அமைச்சர்

                        டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

                        கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக கடற்றொழில் திணைக்கள
                        பணிப்பாளர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் நேற்று கலந்துரையாடிய


                        கடற்றொழில் அமைச்சர், இயந்திரக் கோளாறு காரணமாக திசைமாறிச்
                        சென்ற நிலையில் சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் இந்தியக் கடற்படையினரால்


                        கண்டுபிடிக்கப்பட்டு அந்தமான் தீவுப் பகுதியில் தரித்து நிற்கின்ற வாழைச்சேனை
                        கடற்றொழிலாளர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள்
                        தொடர்பாக கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறு தெரிவித்துள்ளார்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          பெண்ணை உலக்கையால் அடித்து கொன்று திருடிய தம்பதிகள் கைது

                          பெண்ணை உலக்கையால் அடித்து கொன்று திருடிய தம்பதிகள் கைது

                          இலங்கையில் குப்பை மேட்டு பகுதியில் இருந்து மீட்க பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக குற்ற

                          புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்

                          மேற்படி பெண் அணிதிருந்த தங்க நகைகளை திருடிய கும்பல் அவரை அடித்து கொன்று குப்பை

                          மேட்டு பகுதியில் வீசியது தெரிய வந்துள்ளது

                          உலக்கையால் அடித்து கொலை செய்து ,ஆட்டோ ஒன்றில் பெண்ணின் சடலம் எடுத்து வரப்பட்டு

                          குப்பை மேட்டு பகுதியில் வீச பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது


                          தம்பதிகளிடம் சந்தேகம் உற்ற காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் மேற்படி

                          விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது

                            Posted in Uncategorized

                            பிரான்சில் போலீசார் மீது கத்தி வெட்டு – அதிர்ச்சியில் மக்கள்

                            பிரான்சில் போலீசார் மீது கத்தி வெட்டு – அதிர்ச்சியில் மக்கள்

                            பிரான்ஸ் Cannes பகுதியில் போலீஸ் நிலையம் முன்பாக நின்று கொண்டிருந்த போலீசார் ஒருவர்

                            மீது மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டார்

                            ,அவரை அடுத்து மறு போலீசார் மீது வெட்டு தாக்குதலை மேற்கொள்ள முற்பட்ட பொழுது

                            மூன்றாவது காவல்துறை சிப்பாய் ,தீவிரவாதி மீது துப்பாக்கி சூட்டு தாக்குதலை மேற்கொண்டார்

                            இதில் பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் ,குறித்த நபர்

                            தொடர்பான விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை

                              Posted in இலங்கை செய்திகள்

                              கைதிகளை வாரத்தில் 2 நாள் பார்க்க அனுமதி

                              இலங்கை

                              கைதிகளை வாரத்தில் 2 நாள் பார்க்க அனுமதி

                              இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள கைதிகளை வாரத்தில் இரண்டு நாட்கள்

                              பார்வையிட விருந்தினர்களுக்கு அனுமதி வழங்க பட்டுள்ளது

                              இது கைதிகளுக்கு புது மகிழ்வை அளித்துள்ளது

                                Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                மகளை கர்ப்பமாக்கிய தந்தை – சிசுவை கொன்று வீசிய கொடூரம்

                                மகளை கர்ப்பமாக்கிய தந்தை – சிசுவை கொன்று வீசிய கொடூரம்


                                பிறந்து மூன்று நாள்களேயான சிசுவின் சடலம், கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (05) பொலிஸாரால் மீட்கப்பட்டது.

                                சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அம்பாறை மாவட்டத்தின் சொறிக் கல்முனை – சம்மாந்துறை பிரதான வீதியின் கிட்டங்கி ஆற்றில் இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.

                                இது தொடர்பாக, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னல் கிராமம் – 01 கிராம சேவையாளர் பிரிவில் வசித்துவரும் பக்கீர் தம்பி அஸ்பர் (வயது-41) என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

                                தனது 19 வயதுடைய மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டு பிறந்த சிசுவையே இவ்வாறு ஆற்றுக்குள் வீசியதாக கைதாகிய சந்தேகநபர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

                                சந்தேகநபருடன் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர், இராணுவத்தினர் ஒன்றிணைந்து வீசப்பட்ட சிசுவின் சடலத்தை மீட்டெடுத்தனர்.

                                சம்பவ இடத்துக்கு வருகை தந்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான், உயிரிழந்து சிசுவை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

                                இதனையடுத்து, அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு சிசுவின் சடலம் எடுத்துச்செல்லப்பட்டது.

                                நாளாந்த கூலி தொழிலாளியான சந்தேக நபர், இரண்டு திருமணம் செய்தவர் என்பதுடன், தற்போது மனைவிமார்களுடன் இல்லாத நிலையில், முதல் திருமணத்தில் பிறந்த 19 வயதுடைய தனது மகள் மற்றும் இரண்டாவது திருமணத்தில் பிறந்த 2 பிள்ளைகளுடனும் வாழ்ந்து வந்த நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

                                சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை, சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                                  Posted in Uncategorized

                                  காவல்துறை திடீர் சோதனை – 1,019 பேர் கைது

                                  காவல்துறை திடீர் சோதனை – 1,019 பேர் கைது

                                  இலங்கை மேல்மனத்தில் காவல்துறை அணியினர் நடத்திய திடீர் சோதனைநடவடிக்கையின்

                                  பொழுது


                                  சுமார் 1,019 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                  இவர்கள் நீதிம்னற பிடியாணை பிறப்பிக்க பட்டு தலைமறைவாக இருந்த நூற்றுக்கு

                                  மேற்பட்டவர்கள் கைதாகியுள்ளமை குறிப்பிட தக்கது

                                    Posted in Uncategorized

                                    யாழில் வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம்

                                    யாழில் வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம்

                                    யாழ்ப்ப்பாணம் கொக்குவில் – கேணியடிப் பகுதியில் ஊந்துருளியில் வருகை தந்த மூவர்
                                    திடீரென வாலிபர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை நடத்தினர்

                                    இதில் பலத்த காயமடைந்த வாலிபர் யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

                                    மகிந்த ஆட்சியில் உருவாக்க பட்ட வாள்வெட்டு குழுவினர் பெரும் அடாவடியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      காலநிலை சீர் கேட்டில் சிக்கி ஐவர் மரணம்

                                      காலநிலை சீர் கேட்டில் சிக்கி ஐவர் மரணம்

                                      இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை சீர்கேட்டில் சிக்கி இதுவரை ஐவர் பலியாகியுள்ளனர் ,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்

                                      வெள்ள பெருக்கில் சிக்கிய மக்கள் தற்காலிக தங்கும் இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்