நல்லூர் ஆலயத்தை இடித்து மலசல கூடம் கட்டுவேன் என்றவர் கைது

Spread the love

நல்லூர் ஆலயத்தை இடித்து மலசல கூடம் கட்டுவேன் என்றவர் கைது

இராணுவத்தின் எடுபிடி என அழைக்கப்படும் அருண் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற பிடியாணை மூலம் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று இவரை கைது செய்துள்ளனர்.

பல குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட அருண் சித்தார்த்தன் ஊடகவியலாளர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.

அதேவேளை, கைது செய்ய சென்ற யாழ்ப்பாணம் பொலிஸாருடன் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன்,

பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றார்.

இதன் போது தான் இராணுவத்தின் முக்கிய புள்ளி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

இவர் நல்லூர் கோவிலை இடித்து ஆலய சூழலில் பொது மல சல கூடம் அமைப்பேன் என்றும் இந்து

மதத்தை இழிவு படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

    Leave a Reply