Posted in இலங்கை செய்திகள்

ரம்புகளை துப்பாக்கி சூடு – 3 போலீஸ் அதிகாரிகள் கைது

ரம்புகளை துப்பாக்கி சூடு – 3 போலீஸ் அதிகாரிகள் கைது

இலங்கை ரம்புகளை பகுதியில் நடந்த அசம்பாவங்களுக்கு காரணமாக

விளங்கினார்கள் என்ற சாட்டில் மூன்று உயர் போலீஸ் அதிகாரிகள் கைது செய்ய பட்டுள்ளனர்

அங்கு இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளம்பியுள்ள நிலையில் இந்த கைது
இடம் பெற்றுள்ளது

இது ஒரு கண்துடைப்பு நாடகம் என தெரிவிக்க படுகிறது

    Posted in Uncategorized

    26 லட்சம் ரூபா நகை திருடனை மடக்கி பிடித்த பொலிஸ்

    26 லட்சம் ரூபா நகை திருடனை மடக்கி பிடித்த பொலிஸ்

    இலங்கை அநுராதபுரம், தலாவையில் உள்ள நகை கடை ஒன்றில் இருபத்தி ஆறு லட்சம்

    ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையடித்து சென்ற திருடனை
    போலீசார் மடக்கி பிடித்தனர்

    அவரிடம் கொள்ளையடித்த நகைகளை விற்க இரகசிய முகவர் ஒன்றை பயன் படுத்தி

    அதன் ஊடாக இந்த திருடனை கைதுசெய்துள்ளனர்

    கைதானவர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

      Posted in இலங்கை செய்திகள்

      கஞ்சா விற்ற பெண்கள் கைது

      கஞ்சா விற்ற பெண்கள் கைது

      இலங்கை மட்டக்களப்பு பகுதியில் கஞ்சா மற்றும் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட

      இரு பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

      கைதானவர்கள தொடர்ந்து விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளனர்

      மகிந்த ஆடசியின் பின்னர் இலங்கையில் போதைவஸ்து பாவனை அதிகரித்து

      சென்றமை குறிப்பிட தக்கது

        Posted in உலக செய்திகள்

        போதையில் உளறிய கொலை – மடக்கிய பொலிஸ்

        போதையில் உளறிய கொலை – மடக்கிய பொலிஸ்

        கல்லூரி மாணவன் கொலையில் 4 ஆண்டுக்கு பின் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

        மாணவனை கொன்று 2 இடங்களில் பிணத்தை மாற்றி வைத்த நண்பர்கள்- 4 ஆண்டுக்கு பின் போதையில் உளறியதால் சிக்கினர்
        கைது
        திருப்பதி:

        ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், ஷாகல்லு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவர்ஷா (வயது17). இவர் வெளியூரில் தங்கி தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

        கடந்த 2018 -ம் ஆண்டு தீபாவளி விடுமுறைக்காக சொந்த கிராமத்திற்கு வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சேக் ரஷீத், ஆதித்யா, முனேந்திரா மற்றும் நண்பர்களுடன் ஸ்ரீ வர்ஷா அங்குள்ள கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினர்.

        அப்போது ஸ்ரீவர்ஷாவுக்கும் அவரது எதிர்த்தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே கிரிக்கெட் விளையாட்டின் போது தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.

        அன்று இரவு ஷேக் ரஷீத், ஆதித்யா, முனேந்திரா ஆகியோர் ஸ்ரீ வர்ஷாவை மறைவான பகுதிக்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீ வர்ஷா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

        பிணத்தை அங்குள்ள செப்டிக் டேங்கில் வீசிவிட்டு 3 பேரும் ஒன்றும் தெரியாததுபோல் இருந்தனர்.

        வெளியே சென்ற மகன் வராததால் அவரது தந்தை ரத்தினகுமார் போலீசில் புகார் செய்தார்.

        போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீ வர்ஷாவை தேடி வந்தனர். ஸ்ரீ வர்ஷா கிடைக்காததால் மாயமானதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

        இந்த நிலையில் 1 ஆண்டு கழித்து ஸ்ரீவர்ஷாவின் உடலை வீசி சென்ற இடத்திற்கு வந்த ஷேக் ரஷீத் உள்பட 3 பேரும் செப்டிக் டேங்கில் கிடந்த ஸ்ரீவார்ஷாவின் எலும்புகளை எடுத்துச்சென்று ரெயில்வே கேட் அருகே உள்ள கால்வாயில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

        இந்த நிலையில் நேற்று முன்தினம் ஷேக் ரஷீத் மற்றும் அவரது நண்பர்கள் மது அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது போதை தலைக்கேறியதால் ஸ்ரீவர்ஷாவை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்ததை போலீசாரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை எனஷேக் ரஷீத் தனது நண்பர்களிடம் உளறியுள்ளார்.

        இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

        இதையடுத்து போலீசார் ஷேக் ரஷீத்தை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆதித்யா, முனேந்திரா ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        யாழில் திருடனிடம் இருந்து லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

        யாழில் திருடனிடம் இருந்து லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

        யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போலீஸ்

        அதிகாரி ஒருவர் அதே பகுதியில் வீடுடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட

        திருடனிடம் இருந்து முப்பது ஆயிரம் ரூபாய் லஞ்ச பெற முற்பட்ட பொழுது


        லஞ்ச ஊழல் பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளார்

        இப்படியும் இலங்கை பொலிஸ்

          Posted in இலங்கை செய்திகள்

          கோட்டாவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

          கோட்டாவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

          மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு

          செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி, இன்று(23) பிற்பகல் 3 மணிக்கு நுகேகொடை நகரில் இடம்பெறவுள்ளது.

          கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த எதிர்ப்புப் பேரணி ஆரம்பமாகவுள்ளது.

          தெல்கந்த முதல் நுகேகொட வரை ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          லொறி பஸ் நேருக்கு நேர் மோதல்

          லொறி பஸ் நேருக்கு நேர் மோதல்

          திருகோணமலை – கொழும்பு பிரதான வீதியில் தனியார் அதிசொகுசு பஸ் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

          இவ்விபத்துச் சம்பவம் இன்று (26) அதிகாலை 2.30 மணியளவில் கலேவெலவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

          காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

          கொழும்பிலிருந்து திருகோணமலையை நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

          சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

            Posted in இலங்கை செய்திகள்

            சிறுவனை கற்பழித்த பிக்கு கைது

            சிறுவனை கற்பழித்த பிக்கு கைது

            வட்டவளை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரிந்து வந்த பிக்கு ஒருவர் 13 வயது

            சிறுவன் ஒருவரை பாலியல் உறவு புரிந்துள்ளார்


            மேற்படி சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணைகள் ஆரம்பிக்க பட்ட நிலையில் பிக்கு கைது செய்ய பட்டுள்ளார்

              Posted in இலங்கை செய்திகள்

              துப்பாக்கியுடன் ஒருவர் கைது

              துப்பாக்கியுடன் ஒருவர் கைது

              மாத்தளை, இரத்தோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகிரிஎல்ல பிரதேசத்தில்

              ஓட்டோ ஒன்றில் வெளிநாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு சென்ற நபர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

              இரத்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

              பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

              இதன்போது வெளிநாட்டுத் துப்பாக்கி ஒன்றும், 12 தோட்டக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட

              ஓட்டோவும் இரத்தோட்டைப் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

              இது தொடர்பில் இரத்தோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

                Posted in இலங்கை செய்திகள்

                30 கோடி ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் 8 பேர் கைது

                30 கோடி ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் 8 பேர் கைது


                இந்தியாவின் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை தமிழக க்யூ பிரிவு பொலிசார் பறிமுதல் செய்தனர்.

                தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரையில் தூத்துக்குடி க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர்

                விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி வேல்ராஜ், வேலாயுதம், சுரேஷ்குமார் மற்றும் பொலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

                அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகில் இருந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றிவளைத்து பொலிசார் சோதனை செய்ததில் அவர்களிடம் 2 கிலோ வீதம் 5 பாக்கெட்டுகளில் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்னும் ஐஸ் போதைப் பொருளை வைத்திருப்பது தெரியவந்தது.

                மேலும் அதனை அவர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

                இது தொடர்பாக கீழவைப்பார் பரலோக மாதா கோவில் தெருவைச் சேர்ந்த இருதய வாஸ் , கிங் பேன், சிலுவை,அஸ்வின், வினிஸ்டன், சுபாஷ், கபிலன், சைமோன், ஆகிய 8 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

                மேலும் அவர்களிடம் இருந்த ரூ.30கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                  Posted in இலங்கை செய்திகள்

                  சிறுவனின் வாயில் சுட்டவர் கைது

                  சிறுவனின் வாயில் சுட்டவர் கைது

                  கொஸ்லாந்த – கெனிபனாவல பிரதேசத்தில் 12 வயதான சிறுவனின் வாயில் வெடி

                  மருந்துகளைக் கொட்டி, துப்பாக்கியால் சுட்டமையால் கடும் காயங்களுக்கு உள்ளான சிறுவன், மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

                  கொஸ்லாந்த கெனிபனாவல பிரதேசத்தில் வீட்டு தோட்டத்தில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

                  இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் 21 வயதான இளைஞன், கைது செய்யப்பட்டுள்ளார்

                    Posted in இலங்கை செய்திகள்

                    கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட கொள்ளையன்

                    கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட கொள்ளையன்

                    காத்தான்குடியில் பல வீடுகளை உடைத்து கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த கொள்ளையன் ஒருவனை கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டவனை முன்று

                    தினங்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று (05) அனுமதி வழங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

                    காத்தான்குடி பிரதேசத்தில் அண்மைகாலங்களில் பல வீடுகள் உடைத்து அங்கிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிடப்பட்டுவந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது

                    இதனை தொடர்ந்து பொலிசார் மேற்கொண்டுவந்த விசாரணையில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை (04) காத்தான்குடி கர்ப்லா பிரதேசத்தில் வைத்து கொள்ளையன் ஒருவரை கைக்குண்டுடன் கைது செய்தனர்.

                    இதில் கைது செய்யப்பட்டவர் காளிகோவில் வீதி செல்வநகரைச் சேர்ந்த நிப்பிறாhஸ் என்பவர் எனவும் இவர் கடந்த வருடம் காத்தான்குடியில் இடம்பெற்ற பல கொள்ளைச்

                    சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் இதில் காத்தான்குடி அன்னூர் பாடசாலை வீதியில் வீடு ஒன்றில் கொள்ளையிட்ட 4 அரைப்பவுண் தங்க ஆபரணங்களை

                    கொள்ளையன் ஒந்தாச்சிமடம் பகுதியிலுள்ள தங்க ஆபரண கடை ஒன்றில் ஈடுவைத்த நிலையில் அதனை மீட்டுள்ளதுடன்

                    இந்த கொள்ளையனை தொடர்ந்து பொலிஸ் தடுப்பு காவலில்வைத்து விசாரணை செய்ய நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.

                    றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தபபட்டபோது அவரை 3 தினங்களான 7 ம்திகதிவரை பொலிஸ்தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      சீமெந்து அதிக விலைக்கு விற்றவ கைது

                      சீமெந்து அதிக விலைக்கு விற்றவ கைது

                      இலங்கை கட்டுவதை பகுதியில் சீமெந்தினை அதிக விலைக்கு விற்ற முதியவர் ஒருவர் கைது செய்ய பட்டுளளார்
                      போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது

                        Posted in இலங்கை செய்திகள்

                        வெடி குண்டுடன் நபர் கைது

                        வெடி குண்டுடன் நபர் கைது

                        இலங்கை சுதர்சன மாவத்தை பகுதியில் வெடி குண்டுடன் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்

                        கைதானவர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                        Posted in இலங்கை செய்திகள்

                        இரு வெளிநாட்டவர் கைது

                        இரு வெளிநாட்டவர் கைது

                        இலங்கையில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்து இரு நையீரிய நாட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

                        கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

                        கைது
                        Posted in Uncategorized உலக செய்திகள்

                        லண்டன் Chatham. பகுதியில் ஆயுதங்களுடன் 5 பேர் கைது

                        லண்டன் Chatham. பகுதியில் ஆயுதங்களுடன் 5 பேர் கைது

                        லண்டன் Chatham. பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் முற்றுகையின் பொழுது ஐந்து பேர் கைது செய்ய பட்டனர்


                        கைதானவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதைவஸ்து என்பன மீட்க பட்டுள்ளது

                        கைதானவர்க்ளிடம் உரிய முறையில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                        ,பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது

                          Posted in இலங்கை செய்திகள்

                          கஞ்சாவுடன் பிக்கு கைது

                          கஞ்சாவுடன் பிக்கு கைது

                          இலங்கையில் மொட்டை பிக்குகளின் அடாவடி அதிகரித்து செல்கிறது ,இவ்விதம் சம்பவங்கள்

                          இடம்பெற்று கொண்டிருக்க போதையில் போலீசாருடன் தர்க்கம் புரிந்த பிக்கு ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்ய பட்டுள்ளார்

                          மத விதிகளை மீறி இவர் இவ்விதம் போதையில் உலவியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

                            Posted in இலங்கை செய்திகள்

                            முல்லையில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

                            முல்லையில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

                            இலங்கை முல்லைத்தீவில் இருந்து கொழும்புக்கு வாகனம் ஒன்றில் கஞ்சா கடத்தி சென்ற


                            வாலிபர்கள் இருவரை இராணுவத்தினர் கைது செய்தனர்

                            இவர்களினால் கடத்தி செல்ல பட்ட 22 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்ய பட்டுள்ளது

                              Posted in இலங்கை செய்திகள்

                              14 வயது சிறுமியை விபச்சாரத்திற்கு விற்ற பெண் கைது

                              14 வயது சிறுமியை விபச்சாரத்திற்கு விற்ற பெண் கைது

                              14 வயதான சிறுமியை நீண்ட நாட்களாக, விபசாரத்துக்காக விற்பனைச் செய்து, அதில் கிடைக்கும் பணத்தில் சுகபோகமான வாழ்க்கையை நடத்திவந்த, அச்சிறுமியின் உறவுக்கார பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

                              மருதானை பொலிஸாருக்கு கிடைத்த மிக இரகசியமான தகவலை அடுத்தே, உறவுக்காரப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                              சிறுமியின் பெற்றோரை ஏமாற்றி, தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்த உறவுக்கார பெண், அச்சிறுமியை பலருக்கும் பணத்துக்கு விற்றுள்ளார்.

                              கிராண்பாஸ் பகுதியில் வசிக்கும் சந்தேகநபரான அப்பெண், மருதானை பிரதேசத்திலுள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்று, தான் தனியாக இருப்பதால், துணைக்கு சிறுமியை அழைத்துச் செல்வதாகக் கூறி, சிறுமியை கிராண்பாஸ் பகுதிக்கு அழைத்துச் சென்று இவ்வாறு விபசாரத்துக்கு விற்றுள்ளார்.

                              இரண்டு, மூன்று நாட்கள் தன்னுடைய வீட்டில் தங்க வைத்துக்கொள்வதாக, அச்சிறுமியின் பெற்றோரிடம் கூறிவிட்டு அழைத்துவரும் சந்தேகநபரான அப்பெண், பல்வேறான

                              வர்த்தகர்களுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்று வந்துள்ளமை விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

                              12 வயதில் இருந்தே, அச்சிறுமியை இவ்வாறு இரண்டு வருடங்களாக, விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

                              சிறுமியினால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், பலரும் கைது

                              செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபரான அப்பெண்ணுக்கு 32 வயதாகும். இறுதியாக சிறுமியுடன் மீட்கப்பட்ட சந்தேநபருக்கு 38 வயதாகும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                போதை பொருளுடன் 12 பேர் கைது

                                போதை பொருளுடன் 12 பேர் கைது

                                இலங்கை சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற மக்களில் 12 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                இவர்கள் அங்கு போதை பொருள் எடுத்து சென்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு தடுத்த வைக்க பட்டுள்ளனர்