Tag: ஜோடி
கை வைத்த ஜோடி கைது
கை வைத்த ஜோடி கைது
கை வைத்த ஜோடி கைது ,கண்டியில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் நகை வாங்குவதாகக் கூறி உள்ளே நுழைந்து உண்மையான நகைகளைத்
திருடியதாகக் கூறப்படும் ஒரு இளம் திருமணமான தம்பதியினரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டியில் உள்ள ஒரு நகைக் கடையிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, கண்டி காவல் தலைமையகத்தின் குற்றப்பிரிவு உடனடியாக அந்த
அழைப்பை ஏற்று, அதிகாரிகள் நகைக் கடைக்குச் சென்று, திருடப்பட்ட நகைகளை மறைத்து வைத்திருந்தபோது சந்தேகத்திற்கிடமான தம்பதியினரைக் கைது செய்தனர்.
தலத்துஓயா எதுல்கம பகுதியைச் சேர்ந்த இந்த தம்பதியினர் 20-22 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, கண்டி பகுதியில் உள்ள முக்கிய வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த திருடப்பட்ட நகைகளின் ஒரு பங்கு
மீட்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஜோடி வேறு ஏதேனும் நகைக் கடைகளுக்கு சென்றுள்ளதா என்பதைக் கண்டறிய பொலிஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
புது ஜோடியைக் கொன்ற காதலன்
புது ஜோடியைக் கொன்ற காதலன்
2023 டிசெம்பர் மாதம் 23 ஆம் திகதி (நக்கல வத்த) கல்வெட்டுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த பெண்ணும், ஆணொருவரும் உயிரிழந்துள்ளதாக மொனராகலை தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவு நிலைய பொறுப்பதிகாரி ஜானக சிறிரத்ன தெரிவித்தார்.
மொனராகலை-பிபில வீதியில் இடம்பெற்றது விபத்தல்ல, அவரது முன்னாள் காதலனால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை என விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தம்பகல்ல, கொட்டகலை, மஹாலந்த கிவுல பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான திசாநாயக்க முதியன்செலாகே அமிதா ஜீவமாலி (37) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் ஆயுர்வேத துறையில் பணியாற்றி வருகிறார்.
தனது முதல் திருமணத்திலிருந்து பிரிந்த பின்னர், மொனராகலை பிபில வீதியின் சாரதி ஒருவருடன் சுமார் ஐந்து வருடங்களாக வாடகை வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். அவருடன் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, அவரை பிரிந்து மற்றுமொரு சாரதியுடன் காதலில் ஈடுபட்டுள்ளார்.
புது ஜோடியைக் கொன்ற காதலன்
அவ்வாறு இருக்கையில், முதலாவது காதலன், அப்பெண்ணுக்கும், அவருடைய தற்போதைய காதலனுக்கும் தொலைபேசியிலும், பல முறை மிரட்டல் விடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 23ஆம் திகதி காலை புதிய காதலனுடன் அப்பெண் மோட்டார் சைக்கிளில் பதுளை பகுதிக்கு செல்வதை அறிந்த பழைய காதலன் அவர்கள் மொனராகலை-பிபில வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண்ணின் புதிய காதலன் மற்றும் பெண், மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்தி வான், படல்கும்புர கரவிலபாறையில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் விடப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த வாகனத்தை செலுத்திச் சென்ற முன்னாள் காதலன், சட்டத்தரணி ஊடாக மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜனவரி ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் நீண்ட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த விபத்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை என கண்டறிந்தனர். இந்நிலையில், சந்தேகநபரை வியாழக்கிழமை (04) நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa













