Posted in இலங்கை செய்திகள்

மின்சார வேலியில் சிக்கி இருவர் மரணம் – கொதிப்பில் குடும்பம்

மின்சார வேலியில் சிக்கி இருவர் மரணம் – கொதிப்பில் குடும்பம்

இலங்கை நயினகாடு பகுதியில் சட்ட விரோத மின்சார வேலியில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர்


வீட்டில் இருந்து விறகு சேகரிக்க சென்றவேளை இந்த விபத்தில் சிக்கி மரணித்துள்ளனர்

மரணமான இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தஹ் 13 வயது சிறுவர்கள் என தெரிவிக்க

பட்டுள்ளது ,குறித்த சிறுவர்கள் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க
    Posted in Uncategorized

    கருணா அம்மான் வீட்டு காவலில் -கோட்டா போட்ட உத்தரவு

    கருணா அம்மான் வீட்டு காவலில் -கோட்டா போட்ட உத்தரவு

    இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்காக போராடிய தமிழர் தம் தேசிய விடுதலை

    அமைப்பான தமிழீழ விடுதலை புலிகளை காட்டி கொடுத்து அதன் அமைப்பை

    முற்றாக அழித்த கருணா அம்மான் சிங்கள மக்களினால் கொண்டாட பட்டார்

    அவ்விதமான இவர் தற்போது கோட்டாவின் உத்தரவின் பேரில் வீட்டு காவலில் வைக்க

    பட்டுள்ளதக உள்ளதாக கசிவு ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    மட்டக்களப்பில் தேர்தலை சந்தித்து மக்களினால் தோற்கடிக்க பட்டு விரட்டியடிக்க

    பட்ட நிலையில் ,கோட்டாவும் திடீரென பிறப்பிக்க பட்டுள்ள இந்த உத்தரவினால் இவர்

    மனம் உடைந்து உள்ளார் என அந்தப்புர தகவல் ஒன்று தடல் புடலாக பேச படுகிறது

    காட்டி கொடுத்த கருணா அம்மானுக்கு வந்த சோதனையை பாருங்க ,இது வதந்தியா இல்லை மெய்யா என்பதை அம்மான் தான் வெளிப்படுத்தனும்

      Posted in இலங்கை செய்திகள்

      18 லட்சம் மின்சார கட்டணத்தை செலுத்த மறுக்கும் சிங்கள எம்பி

      18 லட்சம் மின்சார கட்டணத்தை செலுத்த மறுக்கும் சிங்கள எம்பி

      இலங்கை ஆளும் ஆட்சியில் எம்பியாக விளங்கி வரும் SJB MP Harin Fernando தனது

      வீட்டுக்கு பாவித்து வந்த மின்சாரத்தின் கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

      இவை சுமார் 18 லட்சம் ரூபாய்களை செலுத்த வேண்டும் என்வும் இதுவரை அதனை

      இவர் செலுத்தவில்லை என தெரிவித்து அவரது மானத்தை வாங்கியுள்ளது

      மக்களினால் தெரிவு செய்ய பட்ட பாராளும்னற உறுப்பினரே இவ்விதம் எனின்,

      சாதாரண கூலி மக்கள் என்னதான் செய்வார்கள் என்பது இதில் இருந்து புலனாகிறது.

        Posted in இலங்கை செய்திகள்

        100 மில்லியன் டொலர் உதவியை இந்தியாவிடம் கோரியுள்ள இலங்கை

        100 மில்லியன் டொலர் உதவியை இந்தியாவிடம் கோரியுள்ள இலங்கை

        இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாத நெருக்கடியில் இருந்து நாட்டை மீள

        கட்டியெழுப்ப உலக நாடுகளிடம் இலங்கை அவசர நிதி உதவியினை கோரியுள்ளது

        இதற்கு அமைவாக தற்போது இந்தியாவிடம் ஒரு பில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக கேட்டுள்ளது

        உணவு ,எரிபொருள்,மருத்துவ பொருட்கள் என்பன இதில் கொள்வனவு செய்ய பட போகிறது

        ஓடி கடனை வாங்கி குவிக்கும் இலங்கை இதனை மீள செலுத்திட முடியா நிலையில் சிக்கும்
        காலம் விரைவில் ஏற்படலாம் என்பது பொருளாதாரா நிபுணர்கள் கருத்தாக உள்ளது

          Posted in Uncategorized

          3 பிள்ளைகளை தூக்கத்தில் அடித்துக்கொன்ற தந்தை -தற்கொலை – தப்பிய பிள்ளைகள்

          .3 பிள்ளைகளை தூக்கத்தில் அடித்துக்கொன்ற தந்தை -தற்கொலை – தப்பிய பிள்ளைகள்

          தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளின் தலையில் தந்தை ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

          இன்று (12) காலை கலேவெல மகுலுகஸ்வெவ 7ஆம் தூண் பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

          தாக்குதலுக்கு உள்ளான பிள்ளைகள் இறந்திருக்கலாம் என நினைத்து தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

          உயிரிழந்தவர் 36 வயதான மிஹிர நுவான் சாமிகர என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

          குறித்த பிள்ளைகளின் தாய் தனது கணவருடன் சண்டையிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வீட்டை விட்டு வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

          மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மிஹிர நேற்று இரவு பாடல் ஒன்றை பாடி தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

          பின்னர் அவர் தனது முகநூல் கணக்கில் வெள்ளைக் கொடியின் புகைப்படத்தை வெளியிட்டு இந்த குற்றத்தை செய்துள்ளார்.

          இன்று காலை கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த 13, 8 மற்றும் 5 வயதுடைய இரு மகன்கள் மற்றும் மகளின் தலையில் குறித்த நபர் இவ்வாறு தடியால் கொடூரமான முறையில் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

          பின்னர் மிஹிர வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

          உயிரிழந்தவர் இராணுவத்தில் இருந்து விலகி கூலி தொழிலில் ஈடுபட்டிருந்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

          மேலும் உயிரிழந்தவர் தனது மனைவி வீட்டில் இல்லாத நிலையில் தனது பிள்ளைகள் மற்றும் தாயாருடன் வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

          வீட்டின் வெளியே உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த மிஹிரவின் தாய், பிள்ளைகளின் சத்தம் கேட்டு கதவைத் திறந்து பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் பிள்ளைகள் இருந்துள்ளனர்.

          பின்னர் அவர் பிள்ளைகளை அயலவர்களுடன் துணையுடன் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

          தற்கொலை செய்து கொண்ட மிஹிர நேற்று மாலை இந்த சம்பவத்தை திட்டமிட்டுள்ளதாக அவரது முகநூல் கணக்கு மூலம் தெரியவந்துள்ளது.

          சுமார் 3 அடி தடி ஒன்று தயார் செய்து வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

          தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

          அதன்படி, இரண்டு சிறுவர்களும் சிறுமியும் தற்போது கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

          இதேவேளை, காயமடைந்த சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற அயலவர் ஒருவர் தெரிவிக்கையில்,

          தலை பகுதிக்கு தாக்கப்பட்டுள்ளது. மகள் பேசினாள். அவர் கூறுகிறார்.. என்ன நடந்தது என்று தெரியவில்லையாம். தந்தை அடிக்கவில்லை என கூறினார். தூங்கும் போது தாக்கியுள்ளார்

            Posted in Uncategorized

            முள்ளிவாய்களில் ஆயுதங்கள் மீட்பாம் – அடித்து விடும் சிங்கள இராணுவம்

            முள்ளிவாய்களில் ஆயுதங்கள் மீட்பாம் – அடித்து விடும் சிங்கள இராணுவம்

            இலங்கையில் உள்ளூர் யுத்தம் முடிவுக்கு வந்து 13ஆண்டுகள் கடந்த நிலையிலும்


            தற்போதும் முள்ளி வாய்களை பகுதியில் ஆயுதங்கள் மீட்க பட்டு வருவதாக ஆளும்

            அரச சிங்கள படைகள் தெரிவித்துள்ளன

            இவ்விதம் இரட்டை வாய்களை பகுதியில் வெடிபொருட்கள் மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

            புலிகள் பேரை உச்சரித்து சிங்கள மக்களை உசுப்பேற்றும் நகர்வின் நடவடிக்கை திட்டமிடல் இதுவாக நோக்க படுகிறது

              Posted in Uncategorized

              சிறந்த பொருளாதாரநிபுணர் என்ற பெருமை விருதை தட்டி சென்ற இலங்கை பெண்

              சிறந்த பொருளாதாரநிபுணர் என்ற பெருமை விருதை தட்டி சென்ற இலங்கை பெண்

              இலங்கையில் பிறந்து பிரிட்டனில் வசித்து வரும் Ermila Jayasuriya என்ற பெண்மணி

              நிறுவனம் ஒன்றின் முதன்மை நிறைவேற்று அதிகாரியாக திகழ்ந்து வருகிறார் ,இவரினால் அந்த நிறுவனம் அசுர வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது

              இதற்காக அவருக்கு பிரிட்டனின் சிறந்த பொருளாதார மேதை என்கின்ற பட்டம் வழங்க பட்டு கவுரவிக்க பட்டுளளார்

              சிங்களவராக இருந்தாலும் நமது இலங்கை பெண்மணி என்பதில் இலங்கையர்கள் மகிழ்ச்சி அடைவதாக தமிழர்கள் தெரிவிக்கின்றனர்

              சிங்கள மக்களுடன் தமிழர்களுக்கு மோதல் இல்லை என்பதும் ஆளும்


              ஆட்சியர்கள் இனவாத பரப்பாலே தமிழர்களுக்கு எதிரான ஒன்றாக விளங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு – தப்புமா நாடு ..?

                சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு – தப்புமா நாடு ..?

                இலங்கையில் வீழ்ச்சி அடைந்து செல்லும் பொருளாதார நிலை காரணமாக


                அதனை நிவாரத்தி செய்திடும் முகமாக சர்வதேச நாணய நித்தியதுடன் பேச்சுக்களில் ஈடுபட இலங்கை நிதியமைச்சர் குழுவினர் செல்லவுள்ளனர்

                இவர்களின் இந்த சந்திப்பின் பிரதான நோக்கம் கடன் தள்ளுபடி ,மேலும் உதவி திட்டங்கள் வழங்குதல் தொடர்பான ஒன்று என எதிர்வு கூற படுகிது

                ஆனால் இலங்கையோ அவ்விதம் இல்லை என குத்துகரணம் அடிக்கிறது

                  கொரானா
                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் கொரானாவுக்கு 7 பேர் மரணம்

                  இலங்கையில் கொரானாவுக்கு 7 பேர் மரணம்

                  இலங்கையில் கடந்த தினம் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஏழுபேர்

                  மரணமாகியுள்ளனர்

                  மேலும் இந்த நோயின் தொற்று குறைவடைந்து செல்வதாக தோற்ற பாட்டில் இலங்கை

                  சுகாதர அமைச்சு கருத்துரைத்துள்ளது

                    Posted in இலங்கை செய்திகள்

                    கிழக்கு மாகாண ஆசிரியர் முகாமைத்துவம் தொடர்பான தரவுக்கட்டமைப்பு அங்குரார்ப்பனம்!

                    கிழக்கு மாகாண ஆசிரியர் முகாமைத்துவம் தொடர்பான தரவுக்கட்டமைப்பு அங்குரார்ப்பனம்!

                    பைஷல் இஸ்மாயில் –

                    மாகாண வரலாற்றில் ஆசிரியர் முகாமைத்துவம் தொடர்பான விபரங்களடங்கிய தரவுத்தள கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்ட முதலாவது மாகாணமாக கிழக்கு மாகாணம் வரலாற்றில் பதிவாகியதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத் தெரிவித்தார்.

                    கிழக்கு மாகாண கல்வியமைச்சு ஏற்பாடு செய்த ஆசிரியர் முகாமைத்துவம் தொடர்பான தரவுக்கட்டமைப்பை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு திருகோணமலை கிழக்கு மாகாண கல்வியமைச்சில் (10) இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

                    அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தில் சேவையாற்றும் ஆசிரியர்களின் விபரங்கள், கடமையாற்றும் பாடசாலை, ஆசிரியர் வெற்றிடங்கள், மாணவர்களின் எண்ணிக்கை, வகுப்பறைகள் உட்பட பல விடயங்களை உடன் அறியக்கூடியதாக இது அமையும். அத்துடன் உரிய விபரங்களை மையமாக வைத்து ஆக்கபூர்வமான தீர்மானங்களை கல்விசார் விடயங்களில் எட்டுவதற்கு இத்தரவுத்தளம் ஏதுவாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

                    நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த பி வணிகசிங்க, ஆளுநரின் செயலாளர் எல். பி.மதநாயக்க, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச். ஈ. எம்.டபிள்யு. ஜி.திஸாநாயக்க, மாகாண கல்வி பணிப்பாளர், கல்வி அதிகாரிகள் வலயக்கல்விப் பணிப்பாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

                    Posted in சினிமா

                    ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவா

                    .ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவா

                    இந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குனரும் நடிகருமான பிரபு தேவா, ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

                    ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவா.. வைரலாகும் வீடியோ
                    பிரபு தேவா


                    ஐஸ்வர்யா-தனுஷ் திருமணம் உறவு முறிந்த பிறகு, ஐஸ்வர்யா தனது இயக்குனர் வேலையில் ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. அதன்படி ஐஸ்வர்யா தனது ‘பயணி’ மியூஸிக் ஆல்பம் வீடியோ வேலைகளை ஆரம்பித்துள்ளதாக

                    அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கான பணிகள் ஹைதராபாத்தில் அவர் தொடங்கியிருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில்

                    இப்பாடல் உருவாகியுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி என இசை கலைஞர்கள் பாடியுள்ளனர்.

                    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
                    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

                    இப்பாடல் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பாராட்டி வருகின்றனர்.


                    அந்த வகையில் நடன இயக்குனரும், நடிகருமான பிரபு தேவா ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வாழ்த்தி, நெகிழ்ந்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்
                    . இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      வீடு புகுந்த திருடன் – மடக்கிய போலிஸ்

                      கல்முனையில் வீடு புகுந்து திருட்டில் ஈடபட்ட நபர் 24 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளார்.

                      இந்த சம்பவத்திற்கு, கல்முனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

                      கல்முனை வைத்தியசாலை வீதியில் வசிக்கும் ஒலுவில் துறைமுகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தரின் வீட்டிலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

                      இதன்போது, குறித்த திருடன், மேசையில் இருந்த மணிபேர்ஸை திருடியுள்ளார்.

                      சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

                      சிசிடிவி கெமராவின் உதவியுடன்,குறித்த நபர் நற்பிட்டிமுனையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

                      கல்முனை தமிழ்ப் பிரதேசத்தில் 24 மணிநேரத்துள் திருடனைக் கண்டுபிடித்தமை இதுவே முதற்தடவையாகும்.

                      Posted in Uncategorized

                      பாண்,சாப்பாட்டு பொதி ,எரிபொருள் விலை திடீர் அதிகரிப்பு

                      பாண்,சாப்பாட்டு பொதி ,எரிபொருள் விலை திடீர் அதிகரிப்பு

                      .450 கிராம் நிறையைக் கொண்ட பாணின் விலை, 30 ரூபாவினாலும் பணிஸ் 10


                      ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

                      எரிபொருள்களின் விலை அதிகரிப்பை அடுத்து, சாப்பாட்டு ​​பொதியின் விலை 20 ரூபாவினாலும்,


                      கொத்துரொட்ட 10 ரூபாவினாலும், சிற்றுண்டி விலைகள் 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

                        Posted in இலங்கை செய்திகள்

                        விமானப் பயணச் சீட்டு விலை அதிகரிப்பு

                        .விமானப் பயணச் சீட்டு விலை அதிகரிப்பு

                        இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கையில் விநியோகிக்கப்படும் அனைத்து விமானப் பயணச் சீட்டுகளின் விலைகளும்; 27 சதவீதத்தால்

                        அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

                        அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக

                        சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

                        அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 203 ரூபாய் 60 சதமாக இருந்த நிலையில், இன்று அதன் பெறுமதி 259 ரூபாய் 99 சதமாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

                          Posted in இலங்கை செய்திகள்

                          மாலைதீவிலிருந்து இரத்மலானைக்கு நேரடி விமான சேவை

                          மாலைதீவிலிருந்து இரத்மலானைக்கு நேரடி விமான சேவை

                          ஐந்து தசாப்தங்களின் பின்னர் மாலைதீவிலிருந்து கொழும்பு இரத்மலானை விமான

                          நிலையத்திற்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                          எதிர்வரும் 27ம் திகதி தொடக்கம் இந்த விமான சேவை இடம்பெறும்.இன்று (10)

                          இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க இதனை தெரிவித்தார்.

                          அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக இரத்மலானை விமான நிலையம் இந்தியா மற்றும் மாலைதீவை கேந்திரமாகக் கொண்டு பிராந்திய சர்வதேச விமான நிலையமாக

                          அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.இரத்மலானை சர்வதேச விமான நிலையம் 1938 இல் அமைக்கப்பட்டது.

                          1968 இல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதால், பிராந்திய மற்றும் சர்வதேச விமானங்கள் செயல்படவில்லை

                          நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            பணம் இன்றி தவிக்கும் இலங்கை – மக்கள் தலையில் ஏற்ற பட்ட சுமைகள்

                            பணம் இன்றி தவிக்கும் இலங்கை – மக்கள் தலையில் ஏற்ற பட்ட சுமைகள்

                            அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம்

                            மாதாந்தம் சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர் சேமிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளது.

                            எவ்வாறாயினும், 600 க்கும் மேற்பட்ட பொருட்களின் வரிகளை அதிகரிக்க மத்திய வங்கி முன்மொழிந்திருந்தது.

                            ஆனால், நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதியை

                            கட்டுப்படுத்தும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருட்கள் மட்டுமே உரிமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

                            இறக்குமதிக் கட்டுப்பாட்டிற்காக மத்திய வங்கி முன்மொழிந்த பொருட்களின்

                            பட்டியலின்படி, ஒவ்வொரு மாதமும் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாடுகளுக்குச் செல்லும் என்று மதிப்பிடப்பட்டது.

                            இதை கட்டுப்படுத்தவே 600 க்கும் மேற்பட்ட பொருட்களின் வரிகளை அதிகரிக்க மத்திய வங்கி முன்மொழிந்திருந்தது

                              Posted in இலங்கை செய்திகள்

                              யாழில் இளம் பெண் கைது

                              யாழில் இளம் பெண் கைது

                              யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் தங்கியிருந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

                              குறித்த யுவதி யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட போலி அடையாள அட்டையை காண்பித்து திருநெல்வேலி பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்துள்ளார்.

                              அவரது நடவடிக்கைகளில் வீட்டு உரிமையாளர் சந்தேகம் கொண்டமையால் இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

                              இத்தகவலின் பிரகாரம் வீட்டுக்கு சென்ற பொலிஸார் வாடகை அறையில் தங்கியிருந்த யுவதியிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

                              அதன்போது யுவதி மருத்துவ பீட மாணவி அல்ல என்பதனையும் அது போலியான அடையாள அட்டை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

                              இதனையடுத்து யுவதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

                                Posted in Uncategorized

                                மாட்டு வண்டியில் பயணிக்கும் அரசியல்வாதிகள்

                                நாட்டில் அதிகரித்துள்ள விலைவாசி, பொருட்கள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட

                                பல்வேறு காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கரைதுறைப்பற்று பிரதேச

                                சபை உறுப்பினர்கள் இன்று மாட்டு வண்டியில் பிரதேச சபைக்கு சென்றுள்ளனர்.

                                நாட்டின் இந்த நிலைமைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் எனக் கோரி கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

                                முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மாட்டு வண்டியில்

                                கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர்,
                                உப தவிசாளர் உறுப்பினர்கள் பிரதேசசபையை நோக்கி இன்று நகர்ந்து செல்கின்றனர்

                                  Posted in Uncategorized

                                  பயத்தில் பாராளுமன்றுக்கு வராது தப்பி ஓடிய பசில்

                                  பயத்தில் பாராளுமன்றுக்கு வராது தப்பி ஓடிய பசில்

                                  நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச சபைக்கு வருவது இல்லை. அவர்தான் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், அவருக்குப் பதிலாக வேறு

                                  உறுப்பினர்கள் பதில் கூறி வருகின்றனர். நிதி அமைச்சரைச் சபைக்கு வரச் சொல்லுங்கள். இல்லையென்றால் சபாநாயகர் நிதி அமைச்சருக்குக் கட்டளை அனுப்புங்கள்.

                                  -இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார்.

                                  நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணியளவில் கூடியது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய லக்‌ஷ்மன் கிரியெல்ல எம்.பி.,

                                  நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கின்றது. டிசம்பர் 10ஆம் திகதியே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச சபையில் உரையாற்றினார். அதன்பின்னர் நாட்டின் நிதி

                                  நிலைவரம் தொடர்பில் கடந்த மூன்று மாதங்களாக நிதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்குத் தெளிவுபடுத்தவில்லை.

                                  எனவே, நாடாளுமன்றம் வந்து தெளிவுபடுத்துமாறு, நிதி அமைச்சருக்கு சபாநாயகர் உத்தரவிடவேண்டும் – என்றார்

                                    Posted in Uncategorized

                                    யாழில் பஸ் சாரதியின் மூக்கை வெட்டிய நபர்

                                    யாழில் பஸ் சாரதியின் மூக்கை வெட்டிய நபர்

                                    யாழில் தனியார் பேருந்தை இடைமறித்த நபரொருவர் சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.

                                    யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நேற்று (08) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                                    பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த தனியார் பேருந்தினை நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வீதியில் வழிமறித்த நபரொருவர், சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.

                                    அதனை அடுத்து அங்கு நின்றவர்கள் சாரதியை மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

                                    சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்