பணம் இன்றி தவிக்கும் இலங்கை – மக்கள் தலையில் ஏற்ற பட்ட சுமைகள்
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம்
மாதாந்தம் சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர் சேமிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளது.
எவ்வாறாயினும், 600 க்கும் மேற்பட்ட பொருட்களின் வரிகளை அதிகரிக்க மத்திய வங்கி முன்மொழிந்திருந்தது.
ஆனால், நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதியை
கட்டுப்படுத்தும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருட்கள் மட்டுமே உரிமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இறக்குமதிக் கட்டுப்பாட்டிற்காக மத்திய வங்கி முன்மொழிந்த பொருட்களின்
பட்டியலின்படி, ஒவ்வொரு மாதமும் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாடுகளுக்குச் செல்லும் என்று மதிப்பிடப்பட்டது.
இதை கட்டுப்படுத்தவே 600 க்கும் மேற்பட்ட பொருட்களின் வரிகளை அதிகரிக்க மத்திய வங்கி முன்மொழிந்திருந்தது