Tag: இலங்கை
62 மாணவர்களை விரட்டி குற்றிய குளவிகள்
62 மாணவர்களை விரட்டி குற்றிய குளவிகள்
இலங்கை மொனராகலை, எத்திமலை மகா வித்தியாலயத்தை சேர்ந்த அறுபத்தி
இரண்டு மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
ஒன்று கூடல் ஒன்றிற்காக ஒன்று கூடிய பொழுது அங்கிருந்த
குளவி கூடு வீழ்ந்து சிதறியதால் பரவிய குளவிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஆளுமையுள்ள பெண்களுக்கு பாராட்டும் கௌரவமும்
ஆளுமையுள்ள பெண்களுக்கு பாராட்டும் கௌரவமும்
நாடும் தேசமும் அவளே” எனும் தொனிப் பொருளில் மகளிர் தின நிகழ்வு ஹலோ
எப்.எம். தவிசாளர் எப்.எம்.சரீக் தலைமையில் நேற்று மாலை (13) திருகோணமலை குளக்கோட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபதி பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்
(திருமதி) ஜே.ஜே.முரளிதரன் கௌரவ அதிதியாகவும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர்
மற்றும் உப்புவெளி பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பொஸிஸ்
அதிகாரி ஏ.காயத்திரி ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது, ஆளுமையுள்ள பெண்களின் திறமைகளைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி ஞாபகச் சின்னங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மனைவியை அடித்து கொன்ற கணவர்
மனைவியை அடித்து கொன்ற கணவர்
ரம்புக்கனை, ஹெனெபொல பிரதேசத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்பத் தகராறே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
பத்தம்பிட்டிய, ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தம்பதியினருக்கு இடையில் சில காலமாக குடும்பத் தகராறு இருந்து வந்த நிலையில், அவர்களது மகள் தந்தையை கண்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச்
சென்றுள்ளதுடன், நீதிமன்ற விசாரணைக்காக வீடு திரும்பிய போதே சந்தேகநபர் இந்த கொலையை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலையுடன் தொடர்புடைய 65 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன
மக்கள் வீதியிறங்க வேண்டிய நேரம் – மைத்திரி
மக்கள் வீதியில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த இரண்டு வருடங்களில்
அரசாங்கத்தின் தீர்மானங்களில் நாங்கள் ஈடுபடவில்லை என்று தெரிவித்தார்.
பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று இந்த நாடு உணவு உட்பட பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்புடன் மக்கள் அரசியல்வாதிகளை நிராகரித்து வெகுஜன போராட்டங்களை நாடுகிறார்கள்.
13 கட்சிகள் இணைந்து இந்த அரசாங்கத்தை அமைத்த போது நானும் தலைவராக நியமிக்கப்பட்டேன், ஆனால் அதன் பின்னர் நான் எதிலும் ஈடுபடவில்லை.
சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தின் பின்னர் எனது அரசாங்கம் மாத்திரமே இந்த நாட்டுக்கு சரியான கொள்கையை கொண்டு வந்தது.
நான் நாட்டை ஜனநாயக ரீதியில் வழிநடத்தினேன். உலக நாடுகள் அனைத்தும் எனக்கு உதவியது.19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டினேன்.
ஆனால் ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்புவேன் என்று எதிர்பார்த்தபோதும் என்னால் அதைச் செய்ய முடியவில்லை“ என்றார்.
தள்ளாடும் இலங்கை – தரை மட்டமான பொருளாதரம்
தள்ளாடும் இலங்கை – தரை மட்டமான பொருளாதரம்
இலங்கையில் போரைவென்று தனி சிங்கள மக்களின் வாக்குக்கள் மூலம் நாட்டை
ஆட்சி புரிய அரியணையில் ஏறிய மகிந்த,குடும்பத்திற்கு தற்போது பெரும் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது
உல்லாச பயணிகளின் வருகையை மைய படுத்தி நாட்டை ஒட்டி சென்றவர்களுக்கு கொரோனா நோயின் காரணமாக அந்த மக்கள் வருகை வீழ்ச்சியடைந்தது
அதனை மையப்படுத்தி ஆரம்பிக்க்க பட்ட பல வேலைத்திட்டங்களும் கைவிட பட்டன ,
மிருகக்காட்சி சாலைகள் முதல் உணவகங்கள் ,கொட்டல்கள் என்பன மக்கள் இன்றி வெறித்து காணப்பட்டன
இதனால் நாடு பெரும் பின்னடவை சந்தித்தது ,பணத்தட்டுப்பாட்டை நிவர்தி செய்திட முடியாத நிலையில் இலங்கை திணறி வருகிறது
இவ்வேளை இதனை சீர் செய்திட விலைவாசிகள் அதிகரிக்க பட்டன ,அன்றாட கூலி மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை கதி கலங்கி போயுள்ளனர்
கோட்டாவுக்கு ஏன் வாக்கு போட்டோம் என்கின்ற நிலைக்கு மக்கள் தற்போது சிந்திக்க ஆரம்பித்து போராட்டங்களை நடத்த முனைகின்றனர்
இதுவே நாளடைவில் பெரும் ரணகளமாக ஆளும் ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்பு வலுக்கும் என அடித்து கூறலாம்
இலங்கையில் தலைகீழ் மாற்றம் ஒன்று விரைவில் ஏற்பட போகிறது
- வன்னி மைந்தன் –
அமெரிக்கா இராணுவ முகாம் மீது தாக்குதல்
அமெரிக்கா இராணுவ முகாம் மீது தாக்குதல்
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் எர்பில் இராணுவ முகாம் மீது ஆளில்லா
உளவு விமானம் ஒன்று தாக்குதலை நடத்தியுள்ளது
இந்த தாக்குதலில் சிக்கி அந்த முகம் பலத்த சேதமடைந்துள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன
தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வரும் குறித்த முகாமின் சேதங்களை அமெரிக்கா
படைகள் மறைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
கோட்டா அரசுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம் -கட்சி தாவும் பங்காளிகள்
கோட்டா அரசுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம் -கட்சி தாவும் பங்காளிகள்
ஆளும் கோட்டா ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்க தயாராகி வருகிறது ,நாள்
தோறும் ஏற்ற படும் விலைவாசி மற்றும் அதனால் ஏற்படும் மக்கள் பாதிப்புக்களை
கருத்தில் கொள்ளாது மகிந்தகுடும்ப ஆட்சி நாட்டை சுடுகாடாக்கி வருகிறது
நாட்டினை முறையாக வழிநடத்த முடியாதது திணறி வருகிறது ,இதனால் சீற்றம் முற்றுள்ள முன்னாள் பங்காளிகளான அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் ஒன்று திரண்டு
மாபெரும் போராட்டங்களை தொடராக நடத்தவும் ,தொழில் சங்கங்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபடவும் நடவடிகை மேற்கொள்ள பட்டு வருகிறது
விரைவில் ஆளும் கோட்டா ஆட்சி கவிழ்க்க பட்டு புதிய கூட்டணி ஆட்சி ஒன்று அரங்கேறும் களம் ஒன்று தயாராகி வருகிறது
தாம் விரித்த வலையில் தாமேசிக்கி கொண்ட நிலையில் மகிந்த ஆட்சி சிக்கி தவிக்கிறது
மாணவனை நான்கு வருடங்களாக கற்பழித்த டீச்சர்
மாணவனை நான்கு வருடங்களாக கற்பழித்த டீச்சர்
இலங்கை கொழும்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணியாற்றிய டீச்சர் ஒருவர்
16 வயது மாணவனை கடந்த நான்கு வருடங்களாக கற்பழித்து வந்துள்ளார்
குறித்த மாணவனுடன் அறுபதுக்கு மேற்பட்ட தடவை கொட்டல்கள்களில் தங்கி உல்லாசத்தை அனுபவித்து வந்துள்ளார்
மேலும் பாடசாலையின் கணனி அறையிலும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார்
மேற்படி சம்பவம் தற்போது அம்பலமான நிலையில் அவர் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்
பல நாள் திருட்டு ஒரு நாள் சிக்கும் என்பது இதைத்தான் போலும்
மின்சார வேலியில் சிக்கி இருவர் மரணம் – கொதிப்பில் குடும்பம்
மின்சார வேலியில் சிக்கி இருவர் மரணம் – கொதிப்பில் குடும்பம்
இலங்கை நயினகாடு பகுதியில் சட்ட விரோத மின்சார வேலியில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர்
வீட்டில் இருந்து விறகு சேகரிக்க சென்றவேளை இந்த விபத்தில் சிக்கி மரணித்துள்ளனர்
மரணமான இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தஹ் 13 வயது சிறுவர்கள் என தெரிவிக்க
பட்டுள்ளது ,குறித்த சிறுவர்கள் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
கருணா அம்மான் வீட்டு காவலில் -கோட்டா போட்ட உத்தரவு
கருணா அம்மான் வீட்டு காவலில் -கோட்டா போட்ட உத்தரவு
இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்காக போராடிய தமிழர் தம் தேசிய விடுதலை
அமைப்பான தமிழீழ விடுதலை புலிகளை காட்டி கொடுத்து அதன் அமைப்பை
முற்றாக அழித்த கருணா அம்மான் சிங்கள மக்களினால் கொண்டாட பட்டார்
அவ்விதமான இவர் தற்போது கோட்டாவின் உத்தரவின் பேரில் வீட்டு காவலில் வைக்க
பட்டுள்ளதக உள்ளதாக கசிவு ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மட்டக்களப்பில் தேர்தலை சந்தித்து மக்களினால் தோற்கடிக்க பட்டு விரட்டியடிக்க
பட்ட நிலையில் ,கோட்டாவும் திடீரென பிறப்பிக்க பட்டுள்ள இந்த உத்தரவினால் இவர்
மனம் உடைந்து உள்ளார் என அந்தப்புர தகவல் ஒன்று தடல் புடலாக பேச படுகிறது
காட்டி கொடுத்த கருணா அம்மானுக்கு வந்த சோதனையை பாருங்க ,இது வதந்தியா இல்லை மெய்யா என்பதை அம்மான் தான் வெளிப்படுத்தனும்
18 லட்சம் மின்சார கட்டணத்தை செலுத்த மறுக்கும் சிங்கள எம்பி
18 லட்சம் மின்சார கட்டணத்தை செலுத்த மறுக்கும் சிங்கள எம்பி
இலங்கை ஆளும் ஆட்சியில் எம்பியாக விளங்கி வரும் SJB MP Harin Fernando தனது
வீட்டுக்கு பாவித்து வந்த மின்சாரத்தின் கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது
இவை சுமார் 18 லட்சம் ரூபாய்களை செலுத்த வேண்டும் என்வும் இதுவரை அதனை
இவர் செலுத்தவில்லை என தெரிவித்து அவரது மானத்தை வாங்கியுள்ளது
மக்களினால் தெரிவு செய்ய பட்ட பாராளும்னற உறுப்பினரே இவ்விதம் எனின்,
சாதாரண கூலி மக்கள் என்னதான் செய்வார்கள் என்பது இதில் இருந்து புலனாகிறது.
100 மில்லியன் டொலர் உதவியை இந்தியாவிடம் கோரியுள்ள இலங்கை
100 மில்லியன் டொலர் உதவியை இந்தியாவிடம் கோரியுள்ள இலங்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாத நெருக்கடியில் இருந்து நாட்டை மீள
கட்டியெழுப்ப உலக நாடுகளிடம் இலங்கை அவசர நிதி உதவியினை கோரியுள்ளது
இதற்கு அமைவாக தற்போது இந்தியாவிடம் ஒரு பில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக கேட்டுள்ளது
உணவு ,எரிபொருள்,மருத்துவ பொருட்கள் என்பன இதில் கொள்வனவு செய்ய பட போகிறது
ஓடி கடனை வாங்கி குவிக்கும் இலங்கை இதனை மீள செலுத்திட முடியா நிலையில் சிக்கும்
காலம் விரைவில் ஏற்படலாம் என்பது பொருளாதாரா நிபுணர்கள் கருத்தாக உள்ளது
3 பிள்ளைகளை தூக்கத்தில் அடித்துக்கொன்ற தந்தை -தற்கொலை – தப்பிய பிள்ளைகள்
.3 பிள்ளைகளை தூக்கத்தில் அடித்துக்கொன்ற தந்தை -தற்கொலை – தப்பிய பிள்ளைகள்
தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளின் தலையில் தந்தை ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (12) காலை கலேவெல மகுலுகஸ்வெவ 7ஆம் தூண் பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான பிள்ளைகள் இறந்திருக்கலாம் என நினைத்து தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் 36 வயதான மிஹிர நுவான் சாமிகர என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிள்ளைகளின் தாய் தனது கணவருடன் சண்டையிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வீட்டை விட்டு வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மிஹிர நேற்று இரவு பாடல் ஒன்றை பாடி தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
பின்னர் அவர் தனது முகநூல் கணக்கில் வெள்ளைக் கொடியின் புகைப்படத்தை வெளியிட்டு இந்த குற்றத்தை செய்துள்ளார்.
இன்று காலை கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த 13, 8 மற்றும் 5 வயதுடைய இரு மகன்கள் மற்றும் மகளின் தலையில் குறித்த நபர் இவ்வாறு தடியால் கொடூரமான முறையில் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பின்னர் மிஹிர வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் இராணுவத்தில் இருந்து விலகி கூலி தொழிலில் ஈடுபட்டிருந்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் உயிரிழந்தவர் தனது மனைவி வீட்டில் இல்லாத நிலையில் தனது பிள்ளைகள் மற்றும் தாயாருடன் வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
வீட்டின் வெளியே உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த மிஹிரவின் தாய், பிள்ளைகளின் சத்தம் கேட்டு கதவைத் திறந்து பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் பிள்ளைகள் இருந்துள்ளனர்.
பின்னர் அவர் பிள்ளைகளை அயலவர்களுடன் துணையுடன் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட மிஹிர நேற்று மாலை இந்த சம்பவத்தை திட்டமிட்டுள்ளதாக அவரது முகநூல் கணக்கு மூலம் தெரியவந்துள்ளது.
சுமார் 3 அடி தடி ஒன்று தயார் செய்து வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி, இரண்டு சிறுவர்களும் சிறுமியும் தற்போது கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, காயமடைந்த சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற அயலவர் ஒருவர் தெரிவிக்கையில்,
தலை பகுதிக்கு தாக்கப்பட்டுள்ளது. மகள் பேசினாள். அவர் கூறுகிறார்.. என்ன நடந்தது என்று தெரியவில்லையாம். தந்தை அடிக்கவில்லை என கூறினார். தூங்கும் போது தாக்கியுள்ளார்
முள்ளிவாய்களில் ஆயுதங்கள் மீட்பாம் – அடித்து விடும் சிங்கள இராணுவம்
முள்ளிவாய்களில் ஆயுதங்கள் மீட்பாம் – அடித்து விடும் சிங்கள இராணுவம்
இலங்கையில் உள்ளூர் யுத்தம் முடிவுக்கு வந்து 13ஆண்டுகள் கடந்த நிலையிலும்
தற்போதும் முள்ளி வாய்களை பகுதியில் ஆயுதங்கள் மீட்க பட்டு வருவதாக ஆளும்
அரச சிங்கள படைகள் தெரிவித்துள்ளன
இவ்விதம் இரட்டை வாய்களை பகுதியில் வெடிபொருட்கள் மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
புலிகள் பேரை உச்சரித்து சிங்கள மக்களை உசுப்பேற்றும் நகர்வின் நடவடிக்கை திட்டமிடல் இதுவாக நோக்க படுகிறது
சிறந்த பொருளாதாரநிபுணர் என்ற பெருமை விருதை தட்டி சென்ற இலங்கை பெண்
சிறந்த பொருளாதாரநிபுணர் என்ற பெருமை விருதை தட்டி சென்ற இலங்கை பெண்
இலங்கையில் பிறந்து பிரிட்டனில் வசித்து வரும் Ermila Jayasuriya என்ற பெண்மணி
நிறுவனம் ஒன்றின் முதன்மை நிறைவேற்று அதிகாரியாக திகழ்ந்து வருகிறார் ,இவரினால் அந்த நிறுவனம் அசுர வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது
இதற்காக அவருக்கு பிரிட்டனின் சிறந்த பொருளாதார மேதை என்கின்ற பட்டம் வழங்க பட்டு கவுரவிக்க பட்டுளளார்
சிங்களவராக இருந்தாலும் நமது இலங்கை பெண்மணி என்பதில் இலங்கையர்கள் மகிழ்ச்சி அடைவதாக தமிழர்கள் தெரிவிக்கின்றனர்
சிங்கள மக்களுடன் தமிழர்களுக்கு மோதல் இல்லை என்பதும் ஆளும்
ஆட்சியர்கள் இனவாத பரப்பாலே தமிழர்களுக்கு எதிரான ஒன்றாக விளங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு – தப்புமா நாடு ..?
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு – தப்புமா நாடு ..?
இலங்கையில் வீழ்ச்சி அடைந்து செல்லும் பொருளாதார நிலை காரணமாக
அதனை நிவாரத்தி செய்திடும் முகமாக சர்வதேச நாணய நித்தியதுடன் பேச்சுக்களில் ஈடுபட இலங்கை நிதியமைச்சர் குழுவினர் செல்லவுள்ளனர்
இவர்களின் இந்த சந்திப்பின் பிரதான நோக்கம் கடன் தள்ளுபடி ,மேலும் உதவி திட்டங்கள் வழங்குதல் தொடர்பான ஒன்று என எதிர்வு கூற படுகிது
ஆனால் இலங்கையோ அவ்விதம் இல்லை என குத்துகரணம் அடிக்கிறது
இலங்கையில் கொரானாவுக்கு 7 பேர் மரணம்
இலங்கையில் கொரானாவுக்கு 7 பேர் மரணம்
இலங்கையில் கடந்த தினம் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஏழுபேர்
மரணமாகியுள்ளனர்
மேலும் இந்த நோயின் தொற்று குறைவடைந்து செல்வதாக தோற்ற பாட்டில் இலங்கை
சுகாதர அமைச்சு கருத்துரைத்துள்ளது
கிழக்கு மாகாண ஆசிரியர் முகாமைத்துவம் தொடர்பான தரவுக்கட்டமைப்பு அங்குரார்ப்பனம்!
கிழக்கு மாகாண ஆசிரியர் முகாமைத்துவம் தொடர்பான தரவுக்கட்டமைப்பு அங்குரார்ப்பனம்!
பைஷல் இஸ்மாயில் –
மாகாண வரலாற்றில் ஆசிரியர் முகாமைத்துவம் தொடர்பான விபரங்களடங்கிய தரவுத்தள கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்ட முதலாவது மாகாணமாக கிழக்கு மாகாணம் வரலாற்றில் பதிவாகியதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கல்வியமைச்சு ஏற்பாடு செய்த ஆசிரியர் முகாமைத்துவம் தொடர்பான தரவுக்கட்டமைப்பை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு திருகோணமலை கிழக்கு மாகாண கல்வியமைச்சில் (10) இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தில் சேவையாற்றும் ஆசிரியர்களின் விபரங்கள், கடமையாற்றும் பாடசாலை, ஆசிரியர் வெற்றிடங்கள், மாணவர்களின் எண்ணிக்கை, வகுப்பறைகள் உட்பட பல விடயங்களை உடன் அறியக்கூடியதாக இது அமையும். அத்துடன் உரிய விபரங்களை மையமாக வைத்து ஆக்கபூர்வமான தீர்மானங்களை கல்விசார் விடயங்களில் எட்டுவதற்கு இத்தரவுத்தளம் ஏதுவாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த பி வணிகசிங்க, ஆளுநரின் செயலாளர் எல். பி.மதநாயக்க, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச். ஈ. எம்.டபிள்யு. ஜி.திஸாநாயக்க, மாகாண கல்வி பணிப்பாளர், கல்வி அதிகாரிகள் வலயக்கல்விப் பணிப்பாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவா
.ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவா
இந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குனரும் நடிகருமான பிரபு தேவா, ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவா.. வைரலாகும் வீடியோ
பிரபு தேவா
ஐஸ்வர்யா-தனுஷ் திருமணம் உறவு முறிந்த பிறகு, ஐஸ்வர்யா தனது இயக்குனர் வேலையில் ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. அதன்படி ஐஸ்வர்யா தனது ‘பயணி’ மியூஸிக் ஆல்பம் வீடியோ வேலைகளை ஆரம்பித்துள்ளதாக
அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கான பணிகள் ஹைதராபாத்தில் அவர் தொடங்கியிருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில்
இப்பாடல் உருவாகியுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி என இசை கலைஞர்கள் பாடியுள்ளனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இப்பாடல் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நடன இயக்குனரும், நடிகருமான பிரபு தேவா ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வாழ்த்தி, நெகிழ்ந்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்
. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வீடு புகுந்த திருடன் – மடக்கிய போலிஸ்
கல்முனையில் வீடு புகுந்து திருட்டில் ஈடபட்ட நபர் 24 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு, கல்முனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கல்முனை வைத்தியசாலை வீதியில் வசிக்கும் ஒலுவில் துறைமுகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தரின் வீட்டிலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, குறித்த திருடன், மேசையில் இருந்த மணிபேர்ஸை திருடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
சிசிடிவி கெமராவின் உதவியுடன்,குறித்த நபர் நற்பிட்டிமுனையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை தமிழ்ப் பிரதேசத்தில் 24 மணிநேரத்துள் திருடனைக் கண்டுபிடித்தமை இதுவே முதற்தடவையாகும்.
- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்
- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்
- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி
- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61













