செங்கடலில் எரியும் கப்பல் சிக்கிய இலங்கை இந்தியர்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

செங்கடலில் எரியும் கப்பல் சிக்கிய இலங்கை இந்தியர்கள்


செங்கடலில் எரியும் கப்பல் சிக்கிய இலங்கை இந்தியர்கள்|ஹவுதிகள் கடும் தாக்குதல்

செங்கடலில் பயணித்த எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் கப்பல் எரிகிறது ,செங்கடலில் பயணித்த இந்த கப்பலில் இலங்கை இந்தியர்கள் சிக்கியுள்ளனர் .

செங்கடலில் எரியும் இந்த கப்பலில் சிக்கிய இலங்கை இந்தியர்கள்
சிக்கியுள்ளனர் .

ஹவுதிகள் கடும் தாக்குதல் காரணமாக கப்பல் போக்குவரத்து பட்டுள்ளது .

வீடியோ

12 வருடங்களுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கிய பிரதான வீதி
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

12 வருடங்களுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கிய பிரதான வீதி

12 வருடங்களுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கிய பிரதான வீதி

கடந்த 12 வருடங்களுக்கு பிறகு காரைதீவு பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

சேனநாயக்கா சமுத்திரத்தின் வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டதால் இந்த வெள்ளம் பரவுகிறது. இதற்கு முன் 2010 ஆம் ஆண்டில் இத்தகையதொரு வெள்ளம் ஏற்பட்டிருந்தது..

இதனால் மக்கள் சிரமத்திற்கு மத்தியில் பயணிப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

காரைதீவு – அக்கரைப்பற்று வீதி காரைதீவு – அம்பாறை வீதிகளில் வெள்ளம் பாய்வதால் குறித்த வீதியில் போக்குவரத்துக்கு பொலிஸார் அனுமதிக்கவில்லை. காரைதீவு மாவடி பள்ளி வீதி முற்றாகவே அமிழ்ந்திருக்கின்றது.

இலங்கைக்கு வருகிறார் ஜப்பான் நிதியமைச்சர்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இலங்கைக்கு வருகிறார் ஜப்பான் நிதியமைச்சர்

இலங்கைக்கு வருகிறார் ஜப்பான் நிதியமைச்சர்

ஜப்பான் நிதியமைச்சர் ஷுனிச்சி சுசுகி, இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அடுத்தவாரம் வரவுள்ளார்.

ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் ரொட்னி எம்.பெரேரா மற்றும் ஜப்பான் நிதியமைச்சர் ஷுனிச்சி சுசுகி ஆகியோருக்கு இடையில் டோக்கியோவில் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் ஜப்பான் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

10 வருடங்களின் பின்னர் ஜப்பான் நிதியமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் அனுப்பிய பணம்

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் அனுப்பிய பணம்

2023 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களால் டிசம்பர் மாதம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் 569.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

2023 இல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மொத்த பணம் 5,969.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 57.5% அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன

வீடியோ

முகக் கவசம்‌ அணியுமாறு அறிவுறுத்தல்
Posted in இலங்கை செய்திகள்

முகக்கவசம் மீண்டும் கட்டாயம்

முகக்கவசம் மீண்டும் கட்டாயம்

அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகளில் கொவிட், சளி மற்றும் சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்க முகக்கவசங்களை அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

நியூயோர்க், கலிபோர்னியா, மாசசூசெட்ஸ் மற்றும் இல்லினோய்ஸ் ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் இந்த முடிவை எடுத்துள்ளன.

டிசம்பர் 17-23 வரையான வாரத்தில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29,000 கொவிட் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 16% அதிகரிப்பாகும் என வௌிநாட்டு ஊடங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

வீடியோ

இலங்கையரா நீங்கள்|இதை செய்ய தவறினால் சிறை தண்டம்|உடனே தெரிந்து கொள்ளுங்கள்
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

இலங்கையரா நீங்கள்|இதை செய்ய தவறினால் சிறை தண்டம்|உடனே தெரிந்து கொள்ளுங்கள்


இலங்கையரா நீங்கள்|இதை செய்ய தவறினால் சிறை தண்டம்|உடனே தெரிந்து கொள்ளுங்கள்

இலங்கை யாரா நீங்கள் உடனே இதனை செய்து கொள்ளுங்கள் ,
இதை தெரியாது இதை செய்தல் உங்களுக்கு ஆபத்து .


இலங்கை வரி விதிப்பு உடனே இதை தெரிந்து மேற்கொள்ளுங்கள் ,
சட்டத்தை மதிக்க தவறினால் சிறை ,தண்டம்

வீடியோ

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சி

லங்கையில் குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சி

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 60 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்களின் மாத வருமானம் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியின் தாக்கம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடும்ப கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கணக்கெடுப்பின் படி இலங்கையில் குடும்பங்களின் மாத வருமானம் 60.5 வீதத்தால் குறைந்துள்ளதுடன், குடும்பங்களின் மாதாந்த செலவுகள் 91 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

லங்கையில் குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சி

தற்போது 3.4 வீதமான குடும்பங்களின் வருமானம் மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், 36.6 வீதமான குடும்பங்களின் வருமானம் மாறாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருமானம் குறைந்த குடும்பங்கள் கடன் வாங்குதல், பொருட்களை அடமானம் வைப்பது, பிறரிடம் உணவு மற்றும் பணம் கேட்பது போன்ற உண்மைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் 22 வீதமான குடும்பங்கள் கடனினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது

வீடியோ

ஜீவன் தொண்டமானுக்கு இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பாராட்டு
Posted in இலங்கை செய்திகள்

ஜீவன் தொண்டமானுக்கு இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பாராட்டு

ஜீவன் தொண்டமானுக்கு இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பாராட்டு

சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக நீர்வழங்கல் துறையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையை இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் Paul Stephens பாராட்டியுள்ளார்.

அத்துடன், நீர்வழங்கல் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அமைச்சரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

ஜீவன் தொண்டமானுக்கு இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பாராட்டு

இதன்போது நீர்வழங்கல் துறையில் இடம்பெற்றுவரும் மறுசீரமைப்புகள் பற்றி தூதுவருக்கு அமைச்சர் விளக்கமளித்தார். அதற்கு அவுஸ்திரேலியாவின் உதவியும், அனுபவ பகிர்வும் அவசியம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும், அதற்கு அவுஸ்திரேலியாவும் பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொவிட் மரணம் பதிவு பீதியில் மக்கள்

இலங்கையில் கொவிட் மரணம் பதிவு பீதியில் மக்கள்

கண்டியில் உள்ள தேசிய மருத்துவமனையில் நேற்று (23) கொவிட்-19 என சந்தேகிக்கப்படும் மரணம் பதிவாகியுள்ளது.

கம்பளை அட்கல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் ஆரம்பத்தில் மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் நுரையீரல் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனை மற்றும் PCR பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கொவிட் மரணம் பதிவு பீதியில் மக்கள்

இதற்கிடையில், நோய்த்தடுப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர, இலங்கையில் இன்ஃப்ளூயன்ஸா

போன்ற நோய்கள் அதிகரித்து வருவதால், ஜே.என்.1 – ஒமிக்ரோன் வகை துணை வைரஸ் சமூகத்தில் காணப்படலாம் என்று சமீபத்தில் கூறினார்.

கொவிட்-19 தொற்றுநோய் முடிவுக்கு வந்ததில் இருந்து ஒரு அமைதியான காலகட்டம் நிலவி வந்த நிலையில் இந்தச் சம்பவமானது மக்கள் மத்தியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ

கடத்தப்பட்ட இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

கடத்தப்பட்ட இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

கடத்தப்பட்ட இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

மியான்மாரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இலங்கை பிரஜைகளை பாதுகாப்பாக திருப்பி பெறுவதற்கு தீவிரமாக செயற்பட்டு வருவதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக வௌிவிவகார அமைச்சகம் மற்றும் மியான்மாரில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியவை மியான்மார் அதிகாரிகளின் உதவி மற்றும் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

வீடியோ

வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை 50 குளங்கள் திறப்பு
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை 50 குளங்கள் திறப்பு

வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை 50 குளங்கள் திறப்பு

வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை 50 குளங்கள் வான் கதவுகள் திறப்பு .

பருவகால மலை காரணமாக குங்கள் நிரம்பி வழிவதால் தாழ் நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி மிதக்கின்றன .

இந்த வெள்ளம் காரணமாக பல்லாயிரம் மக்கள் அகதிகளாக பாடசலைகள் பொது இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .

பாதிக்க பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு உதவிகளை வழங்கி வருகிறது .

வீடியோ

நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 6 மாதங்களில் கடுமையாகும் சட்டம்

இலங்கையில் 6 மாதங்களில் கடுமையாகும் சட்டம்

இலங்கையில் சட்டம் ஒழுங்கை கடுமையாகப் பேணுவதற்கான விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 06 மாதங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

அதற்கு இடையூறு செய்யும் எந்த தரப்பினரிடமும் தானும் பொலிஸாரும் சரணடையப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

வீடியோ

உலக வங்கி
Posted in இலங்கை செய்திகள்

உலக வங்கியால் இலங்கைக்கு 34 மில்லியன் டொலர் உதவி

உலக வங்கியால் இலங்கைக்கு 34 மில்லியன் டொலர் உதவி

உலக வங்கியால் மேலும் 34 மில்லியன் அமெரிக்கா டொலர் இலங்கைக்கு கடன் உதவியாக வழங்க பட்டுள்ளது .

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மத்தியில் அதன் பொருளாதரத்தை உயர்த்தும் முகமாக இவ்விதமான உதவிகளை வழங்கி வருகிறது .

பெற்ற கடனை திருப்பி வழங்க வேண்டும் என்கின்ற நிலை உள்ளது ,அதனால் கவனத்தில் அதனை இலங்கை செயல்படுகிறதா என்பதே கேள்வியாக உள்ளது .

வீடியோ

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நானே
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நானே

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நானே

இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி தானே என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ரத்நாயக்க, அண்மையில் வர்த்தமானி மூலம் தனது வேட்புமனுவை உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக தெரிவித்தார்.

“இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் என்னிடம் உள்ளன. கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்,” என்றார்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நானே

அண்மையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடை தொடர்பில் கருத்து தெரிவித்த ரத்நாயக்க, அவ்வாறான மின்வெட்டை தடுப்பதற்கான பரிந்துரைகளுடன் 2022 ஆம் ஆண்டு PUCSL தலைவர் என்ற வகையில் தான், வர்த்தமானி வெளியிட்டதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அமைச்சர் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறியுள்ளதாகவும், இதன் காரணமாக

அண்மையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட 5 மணித்தியாலங்களுக்குள் கூட அரசாங்கத்தினால் மின்சாரத்தை மீளமைக்க முடியவில்லை எனவும் அவர் கூறினார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து அவருக்கு எதிராக பிரேரணை ஒன்று

சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து இந்த ஆண்டு பாராளுமன்ற வாக்கெடுப்பில் ஜனக்க ரத்நாயக்க PUCSL தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இலங்கை கடற்படை 1877 படை வீரர்களுக்கு பதவி உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கடற்படை 1877 படை வீரர்களுக்கு பதவி உயர்வு

இலங்கை கடற்படை 1877 படை வீரர்களுக்கு பதவி உயர்வு

இலங்கை கடற்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு தரங்களை சேர்ந்த 1877 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ப்ரியந்த பெரேராவின் பரிந்துரைக்கமைய, இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே, இலங்கை கடற்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவு நேற்று கொண்டாடப்பட்டது

கஞ்சா தேசமாகும் இலங்கை எதிரியாகும் போதை
Posted in இலங்கை செய்திகள்

கஞ்சா தேசமாகும் இலங்கை எதிரியாகும் போதை

கஞ்சா தேசமாகும் இலங்கை எதிரியாகும் போதை

கஞ்சா தேசமாகும் இலங்கை எதிரியாகும் போதை இலங்கை இன்று கஞ்சா தேசமாக மாற்றம் .

இலங்கை மக்களுக்கு எதிரியாகும் போதை பாவனை அதிகரிப்பும் அதனால் எழும் குற்ற செயல்களும் காணப்படுகின்றன

கைது எதிரொலி

இந்த வருடம் 123. 000 பேர் கைது எதிரொலி ,இலங்கை கஞ்சா தேசமாக மாற்றம் பெற்றுள்ளதை காண்பிக்கிறது .

இதே கஞ்சா பாவனையை அதிகரித்து ,எதிரியானவன் தமிழருக்க்குள் போராடும் திறனை மழுங்கடித்து ,புதிய கலாச்சாரத்தை உருவாக்கி அதன் ஊடாக ,திருட்டு சமூகமாக அல்லது குற்றவியல் சமுகமாக தமிழர் தேசத்தை மாற்றி செல்கிறது .

எதிரிகளின் சூழ்ச்சியில் தமிழர் தேசம்

எதிரிகளின் இந்த சூழ்ச்சியில் இருந்து தமிழர் தேசம் மீண்டெழுந்து சென்றிட என்ன வழி என்பதே கேள்வியாக உள்ளது .

எதிர் வரும் எதிரிகள் சூழ்ச்சிகளை இனம் கண்டு தமிழர்கள் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது .

தமிழருக்கு எதிரியாகும் இந்த கஞ்சா ,போதைவஸ்தை அடியோடு அழிக்க மீளவும் புலிகள் தேவை படுகின்றனர் என தமிழ் மக்கள் பேசி கொள்கின்றனர் .

இலங்கை நபர் தென்கொரியாவில் பலி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை நபர் தென்கொரியாவில் பலி

இலங்கை நபர் தென்கொரியாவில் பலி

தென்கொரியாவில் வேலைக்குச் சென்ற இலங்கையர் ஒருவர், அவருடன் இருந்த மற்றொரு இலங்கையரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் கடந்த 3 ஆம் திகதி அதிகாலை நடந்துள்ளது.

பமுனுகம பிரதேசத்தில் வசித்து வந்த பி.கே. ஷெனித் துலாஜ் சத்துரங்க என்ற 29 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த நபரின் 26 வயதான மனைவி மெலனி வாசனா சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கையில்,

”எனக்கும் சத்துரங்கவுக்கும் 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர் ஜப்பானில் இரண்டரை வருடங்கள் பணிபுரிந்தார்.

அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் ஜப்பானில் இருந்து இலங்கைக்கு வந்தார்.

அதனால் தான் இந்த ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி கொரியாவுக்கு வேலைக்குச் சென்றார். வேலை செய்து வந்தார். வெல்டராக இருந்தார்.

கொரியாவின் மோப்போ பகுதியில் உள்ள அவரது அறையில் அவருடன் மேலும் இருவர் உள்ளனர்.

இலங்கை நபர் தென்கொரியாவில் பலி

அடுத்த அறையில் மேலும் இருவர் இருந்தனர். அவர்களில் ஒருவர் எப்பொழுதும் குடித்துவிட்டு வந்து சத்துரங்காவிடம் சண்டையிடுவார் என்று அவர் என்னிடம் பலமுறை கூறியிருந்தார்.

அதை அங்கிருந்த ஏஜெண்டிடம் சொல்லியிருந்தார். தங்குவதற்கு பிரச்சனையாக இருக்கிறது, இடத்தை மாற்றி தருமாறு கோரியிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு என்னிடம் பேசும் போது, ​​அடுத்த அறையில் உள்ள அருணா என்ற நபரால் பிரச்சினையாக உள்ளது என கூறினார்.

அப்போது நான் ஏதும் பேசாதே அமைதியாக இரு என சொன்னேன். அதன் பிறகு சத்துரங்க தூங்க சென்றுவிட்டார்.

தூங்கிக் கொண்டிருந்த போது பக்கத்து அறையை சேர்ந்த நபர் வந்து கத்தியால் நெஞ்சில் சரமாரியாக குத்தியுள்ளார்.

அவருக்கு ஏன் இப்படி நடந்தது என்றால் எப்படி நம்ப முடியவில்லை. இப்போது என் குழந்தையின் உலகமே இருண்டுவிட்டது.

நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சென்றிருந்தோம். அப்போதுதான் அந்த நாட்டில் இருந்து சத்துரங்காவை கத்தியால் குத்திய நபர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது” என்றார்.

video

இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் வழங்கும் வங்கி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் வழங்கும் வங்கி

இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் வழங்கும் வங்கி

இலங்கை ஆசிய அபிவிருத்தி வங்கி 600 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியுற்றுள்ள இந்த கால பகுதியில் கடன் மேல் கடனை வாங்கி அதில் நாட்டை ஒட்டி செல்கிறது ஆளும் ரணில் அரசு .

இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் வழங்கும் வங்கி

இவ்வாறு பெறப்படும் நிதியில் பல மில்லியன் டொலர்கள் மோசடி செய்ய படும் என எதிர் பார்க்க படுகிறது.

இலங்கையை ஆளும் ஆட்சியாளர்கள் தமது குடும்பம் சுக போகமாக வாழ்ந்திட நாட்டை கொள்ளையடித்து ஏப்பம் இட்டு வருகின்றனர் .

அதன் தொடர்ச்சியாக இந்த கொள்ளையடிப்பும் ,அபிவிருத்தி என்கின்ற பெயரில் கடனை வாங்கி குவிப்பதும் இடம்பெற்று வருகிறது என்பது இங்கே குறிப்பிட தக்கது

வீடியோ

இலங்கையில் வெடித்த மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் வெடித்த மக்கள் போராட்டம்

இலங்கையில் வெடித்த மக்கள் போராட்டம்

இலங்கையில் வெடித்த மக்கள் போராட்டம் ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்று (05) முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

இதன் காரணமாக பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதி தற்போது முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

ஆளும் ரணில் ரஸுக்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டம் ,நெருக்கடியில் அரசு

வீடியோ

சிறுவன் அடித்து கொலை ரவுடி மயமாகும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

சிறுவன் அடித்து கொலை ரவுடி மயமாகும் இலங்கை

சிறுவன் அடித்து கொலை ரவுடி மயமாகும் இலங்கை

நன்னடத்தை பாடசாலை சிறுவன் மர்ம மரணம் – மேற்பார்வையாளரான பெண் கைது

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் பெண் மேற்பார்வையாளர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் கடந்த மாதம் 17ஆம் திகதி மணி ஒன்றை களவு செய்ததாக குற்றச்சாட்டின் பெயரில்

கொக்குவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு குறித்த சிறுவன், நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர் நீதிவானின் உத்தரவின் பிரகாரம் குறித்த காப்பகத்தில் பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுவன் அடித்து கொலை ரவுடி மயமாகும் இலங்கை

குறித்த சம்பவத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தவர் மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த நாராயண ஆனந்ததேவன் தர்சாத் எனும் 14 வயது மதிக்கத்தக்க சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சிறுவன் கடந்த புதன்கிழமை (29.112023)அதிகாலை 3.30 மணி அளவில் உயிரிழந்து உள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும் சிறுவனின் உடலில் காயத் தழும்புகள் இருப்பதனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்

தெரிவித்ததை அடுத்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் வைக்கப்பட்ட சிறுவனின் சடலம் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அங்கு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் உட்காயங்களினால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் குறித்த பாடசாலைக்கு சென்று தொடர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் குறித்த சிறுவனை அன்று தாக்கியதாக சந்தேகத்தின் பெயரில் 25 வயது மதிக்கத்தக்க அப்பாடசாலையில் கடமையாற்றும் மேற்பார்வையாளரான பெண் கைது செய்யப்பட்டார்.

குறித்த சிறுவன் தங்க வைக்கப்பட்டிருந்த காப்பகத்தில் சம்பவ தினமான இரவு உணவினை உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாகத்தில்

நின்றதாகவும் பின்னர் என்ன நடந்தது என தெரியவில்லை என முன்னுக்கு பின்னான வாக்குமூலங்கங்கள் வழங்கியதை தொடர்ந்தே சந்தேகத்தின் பேரில் பாடசாலை மேற்பார்வையாளரான அப்பெண் பொலிஸ் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்தார்.

சிறுவன் அடித்து கொலை ரவுடி மயமாகும் இலங்கை

பின்னர் சனிக்கிழமை(2) இரவு கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தனது மகனின் மரணத்தில் பலவிதமான பொய் குற்றச்சாட்டுகளையும் பாடசாலையின் நிர்வாகம் முன் வைப்பதாகவும் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழும் நாங்கள் எமது பிள்ளைக்கு நடந்த இதே போன்ற சம்பவங்கள்

யாருக்கும் இடம் பெறக் கூடாது என்றும் பிள்ளையின் மரணத்தில் ஒரு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் மரணம் அடைந்தவரின் தந்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.