இலங்கை கடற்பரப்பில் தென் கொரிய போர்க்கப்பல்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் தென் கொரிய போர்க்கப்பல்

இலங்கை கடற்பரப்பில் தென் கொரிய போர்க்கப்பல்

இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு சக்திவாய்ந்த போர்க்கப்பல் நங்கூரமிட்டுள்ளது.

தென் கொரிய குடியரசுக்கு சொந்தமான கப்பலே நாட்டிற்கு வருகை தந்துள்ளது.

இந்த கப்பல் நேற்று முன்தினம் (26) காலை இலங்கையை வந்தடைந்தது. கப்பலில் 249 பணியாளர்கள் உள்ளனர்.

ஆறு வருடங்களின் பின்னர் தென் கொரிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு

மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு


மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலை காரணமாக அங்கு வாழும் இலங்கையர்களின் அவசர உதவிகளுக்காக தொலைப்பேசி வசதியொன்றை வௌிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, 0094711 757 536 அல்லது 0094711 466 585 என்ற இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

விசா இன்றி இலங்கைக்கு பயணிக்க அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

விசா இன்றி இலங்கைக்கு பயணிக்க அனுமதி

விசா இன்றி இலங்கைக்கு பயணிக்க அனுமதி

7 நாடுகளிலிருந்து பயணிகள் விசா இன்றி இலங்கைக்கு பயணிக்கக்கூடிய முன்னோடி வேலைத்திட்டமொன்றை அமைச்சரவை அனுமதித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் இந்த முன்னோடித் திட்டம் நடைமுறையிலிருக்குமென சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

விசா இன்றி இலங்கைக்கு பயணிக்க அனுமதி

இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து நாட்டு பயணிகள் விசா இன்றி பயணிக்க அமைச்ரவை அங்கீகரித்துள்ளதெனவும் இந்நடைமுறை உடனடியாக அமுல் படுத்தப்படுவதாகவும் அமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இலங்கைப் பெண்ணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைப் பெண்ணின் சடலம் மீட்பு

இலங்கைப் பெண்ணின் சடலம் மீட்பு

லெபனானில் கட்டட இடிபாடுகளில் உயிரிழந்த 65 வயதுடைய இலங்கைப் பெண்ணின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஐ. பிரேமலதா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

இலங்கைப் பெண்ணின் சடலம் மீட்பு

செவ்வாய்க்கிழமை, ஒக்டோபர் 17 ஆம் திகதி, பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம், லெபனானில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில்

இடிபாடுகளுக்குள் சிக்கிய பல நபர்களில் ஒரு இலங்கைப் பெண்ணும் இருப்பதாக உறுதிப்படுத்தியது.

லெபனானில் உள்ள மன்சூரியில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் ஒக்டோபர் 16 அன்று இடிந்து விழுந்தது, அதன் மூன்று தளங்கள் மட்டுமே நிற்கின்றன.

இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒரு வருடத்தில் 1,135 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டதாக தொழுநோய் பிரச்சாரம் அறிவிக்கிறது.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் 175 தொழுநோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதன் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

புதிய நோயாளர்களை அடையாளம் காண, அதிக நோயாளர்கள் பதிவாகும் பகுதிகளை வரை படமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக நுழைய முற்றபட்ட இலங்கை பெண்கள்

இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக நுழைய முற்றபட்ட இலங்கை பெண்கள்

ஜோர்தானில் எல்லை வழியாக இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக பிரவேசித்த போது கைது செய்யப்பட்ட 2 இலங்கை பெண்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு முன்னர் இலங்கையர்கள் என்று கூறப்படும் 2 பெண்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

50 வயதான ஜே.ஏ. ஷமிலா துஷாரி மற்றும் 44 வயதான கே.ஏ. ஸ்ரீயானி மஞ்சுளா குலதுங்க எனப்படும் பெண்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக நுழைய முற்றபட்ட இலங்கை பெண்கள்

இந்நிலையில், ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைந்த 2 பெண்களையும் ஜோர்தானுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்தப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்

காசாவிலுள்ள இலங்கையர்கள் குறித்த செய்தி வெளியானது
Posted in இலங்கை செய்திகள்

காசாவிலுள்ள இலங்கையர்கள் குறித்த செய்தி வெளியானது

காசாவிலுள்ள இலங்கையர்கள் குறித்த செய்தி வெளியானது

தெற்கு காசா பகுதியில் மூன்று இலங்கை குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் தற்போது
பாதுகாப்பாக இருப்பதாக பலஸ்தீனத்துக்கான இலங்கைப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

அவர்களை காஸா பகுதியில் இருந்து அகற்றுமாறு செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

இளைஞரில்லா இலங்கை
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

இளைஞரில்லா இலங்கை

இளைஞரில்லா இலங்கை

யுத்தமொன்று வந்ததனால்
மொத்த உறவும் பறந்தன.
முத்தமிட்ட அன்னை மண்ணைச்
சத்த மின்றிப் பிரிந்தன.

சொத்துப்பத்து ஈட்டவென்றும்
சொந்த நாட்டைத் துறந்தனர்.
நித்திரையை மறந்தங்கே
நித்தம் உழைப்பில் இறந்தனர்.

புத்திஜீவி கல்விமான்கள்
பிற நாடுதேடி ஓடினம்.
பத்தியெரியும் வயிற்றுடனே
பலர் குத்தியிங்கு முறியினம்.

கலைஞர் இளைஞர் கன்னிகளும்
கனடாக் கனவில் மிதக்கினம்.
அலைகள்போல அள்ளுப்பட்டு
அங்கே போக நினைக்கினம்.

இக்கரைக்கு அக்கரையென்று
இருந்ததெல்லாம் பறக்குதாம்.
சக்கரையில்லாப் பொங்கல்போல
சேர்ந்தபிறகு வெறுக்குதாம்.

செத்த வீட்டில் பங்குகொள்ளச்
சொந்தங்களும் இருக்காது.
சுத்தியுள்ள சாமி தூக்கப்
பக்தர்களும் கிடைக்காது.

பெத்தவர்க்குக் கொள்ளிவைக்கப்
பிள்ளை ஒன்றும் இருக்காது.
புத்தருக்கு விகாரைகட்ட – இனி
இங்கு போராட்டமும் நடக்காது.

-பிறேமா(எழில்)-

இலங்கையில் 7 குண்டுகள் வெடிக்க போகின்றன சஜித் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 7 குண்டுகள் வெடிக்க போகின்றன சஜித் எச்சரிக்கை

இலங்கையில் 7 குண்டுகள் வெடிக்க போகின்றன சஜித் எச்சரிக்கை

இலங்கையில் ஏழு குண்டுகள் தொடராக வெடிக்க போகின்றன என சஜித் பிரேமதாசா எச்சரிக்கை விடுத்துள்ளார் .

அரச பத்திரிகை ஒன்றில் இந்த தகவல் வெளியிட்டுள்ளதாகவும் ,அது தொடர்பான உண்மை தன்மையை எடுத்து விளக்கும் படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

இலங்கையில் 7 குண்டுகள் வெடிக்க போகின்றன சஜித் எச்சரிக்கை

மைத்திரி ஆட்சி கால பகுதியில் தொடராக தேவாலயங்களில் குண்டுகள் வெடித்தன . அது போன்ற தொடர் குண்டு தாக்குதல்களை நடத்த திட்டம் தீட்ட படுகின்றன .

சிறையில் உள்ள ஐ எஸ் தீவிரவாத குழுவினர் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார் .

வீடியோ

இலங்கையில் 2030 மின்சார வாகன பாவனை வாகன அமைச்சர் தடலடி அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 2030 மின்சார வாகன பாவனை வாகன அமைச்சர் தடலடி அறிவிப்பு

இலங்கையில் 2030 மின்சார வாகன பாவனை வாகன அமைச்சர் தடலடி அறிவிப்பு

இலங்கையில் எதிர்வரும் 2030 ஆண்டளவில் மின்சரான வாகன பாவனை அதிகரிக்க படும் என வாகன அமைச்சர் தடலடியாக அறிவித்துள்ளார் .

ஐரோப்பிய நாடுகள் மின்சார் பாவனையில் தீவிரம் காண்பித்து , 2040ஆண்டளவில் பிரிட்டனில் முற்றாக எரிபொருள் வாகனங்கள் நிறுத்த படுகின்றன .

இலங்கையில் 2030 மின்சார வாகன பாவனை வாகன அமைச்சர் தடலடி அறிவிப்பு

அதனை அடுத்து தற்போது இலங்கையில் அதனை நிலைநாட்ட தாம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இலங்கை அறிவித்துள்ளது .

எரிபொருள் இன்றி தள்ளாடி வரும் இலங்கையால் மின்சாராத்தை உருவாக்கி அதன் மூலம் வாகனங்களை செலுத்தி செல்ல முடியுமா என்ற கேள்வி எழுப்ப படுகிறது .

வீடியோ

உலகில் அதிக மின்சார கட்டணம் இலங்கை சாதனை
Posted in இலங்கை செய்திகள்

உலகில் அதிக மின்சார கட்டணம் இலங்கை சாதனை

உலகில் அதிக மின்சார கட்டணம் இலங்கை சாதனை

உலகில் அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை சாதனை படைத்துள்ளது .

இலங்கையில் ராஜபக்ச ஆட்சியில் ஏற்பட்ட லஞ்ச ஊழல் மோசடி ,கொள்ளையால் இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்தது .

இதனை அடுத்து தற்பொழுது அப்பாவி மக்கள் பொருளாதாரத்தில் பாதிக்க பட்டுள்ளனர் .அவ்வாறான நிலையில் தற்போது மின்சார கட்டணம் அதிகரிக்க பட்டுள்ளது .

உலகில் அதிக மின்சார கட்டணம் இலங்கை சாதனை

திடீர் மின்சார கட்டண உயர்வினால் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

உலகில் அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடாக ,தற்போது ரணில் அரசாங்கம் சாதனை படைத்துள்ளதாக, மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .

மக்கள் வலிகளை குறைக்க மறுக்கும் அரசு தமது கொள்ளையில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறது .

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை மிரட்டும் மர்ம கொலைகள் மிதக்கும் சடலங்கள்

இலங்கையை மிரட்டும் மர்ம கொலைகள் மிதக்கும் சடலங்கள்

இலங்கையில் தொடராக மர்ம கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

நாள் தோறும் இலங்கையில் இடம்பெறும் இவ்வாறான மர்ம கொலைகள் ,எவ்வாறு இடம் பெறுகிறது என்பது தொடர்பில் சந்தேகங்கள் வெளியிட பட்டுள்ளது .

பண்டாரவத்தை, பொக்குனுவிட்ட பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்த 23 வயதுடைய ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார்

இலங்கையை மிரட்டும் மர்ம கொலைகள் மிதக்கும் சடலங்கள்

இவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

நாள் தோறும் இலங்கையில் மிதக்கும் மனித சடலங்களினால் , மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது .

இலங்கையில் விமான பயணங்கள் பல இரத்து இலங்கை வந்த மக்கள் அவதி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் விமான பயணங்கள் பல இரத்து இலங்கை வந்த மக்கள் அவதி

இலங்கையில் விமான பயணங்கள் பல இரத்து இலங்கை வந்த மக்கள் அவதி

இலங்கையி பல விமானங்கள் இரத்து செய்ய பட்டுள்ளதால், இலங்கை வந்த பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் .

இலங்கை கட்டுநாயாக்க விமான நிலையத்தில் விமான கட்டு பாட்டு அறையில் ,ஏற்பட்ட சில கோளாறு காரணமாக, பல விமான பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ,விமான போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது .

இலங்கையில் விமான பயணங்கள் பல இரத்து இலங்கை வந்த மக்கள் அவதி

விரைவில் தொழில் நுட்ப கோளாறு சரி செய்ய பட்டு, விமான போக்குவரத்துக்கள் வழமைக்கு திரும்பும் என தெரிவிக்க பட்டுள்ளது .

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பயணிகள் விமானங்களை இயக்க முடியா நிலையில் ,இந்த விமானங்களை இலங்கை அரசு திட்டமிட்டு இரத்து செய்துள்ளதா என்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது .

வீடியோ

இலங்கையில் தூங்கா நகரங்கள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் தூங்கா நகரங்கள்

இலங்கையில் தூங்கா நகரங்கள்

இவ்வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கு அவசியமான ஊக்குவிப்புத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாக சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதெனவும், அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக டெக்ஸி சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் பதில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்த போதே பதில் சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் சுற்றுலா ஈர்ப்பு மிக்க நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க வேண்டும என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இன்று (27) சர்வதேச சுற்றுலாத் தினமாகும். சுற்றுலாத்துறை அமைச்சு அதனை சுற்றுலாத் தினத்தை எளிய முறையில் கொண்டாடியதாகவும், இந்நாட்டின் சிறந்த சமையல் கலை நிபுணரான பபிலிஸ் சில்வாவுக்கு “ஜய ஸ்ரீ லங்கா” என்ற பெயரிலான சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் தூங்கா நகரங்கள்

அது மிகச்சிறந்த விருதாகும். அவர் கீழ் மட்டத்திலிருந்து கல்கிசை ஹோட்டலொன்றில் பிரதான சமையல் கலை நிபுணர் என்ற அந்தஸ்த்து வரை தன்னை வளர்த்துக்கொண்டுள்ள கதை மிகவும் அற்புதமானது. சுற்றுலாத்துறையில் சமையல் கலை நிபுணர்களை மறந்துவிட முடியாது என்பதால் அவர்களுக்கான ஊக்குவிப்புத் திட்டமொன்றும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் ஆரம்ப பகுதியில் 10 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இவ்வருட இறுதிக்குள் 15 இலட்சம் பேரை வரவழைக்க முடியும் என எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்காக விசேட ஊக்குவிப்புத் திட்டமொன்றை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

வருடத்தின் இறுதி காலப்பகுதியிலேயே நாட்டுக்கு சுற்றுலாப் பிரயாணிகளில் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெருமளவான சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பிரயாணிகளை நாட்டிற்கு அழைத்து வர எதிர்பார்த்திருக்கும் நிலையில், அடுத்த மாதத்தின் இடைப்பகுதியிலிருந்து அவர்களை வரவழைப்பதற்கான ஊக்குவிப்புத் திட்டங்கள் பலவும் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக எல்ல, நுவரெலியா, காலி மற்றும் கொழும்பு உள்ளிட்ட சுற்றுலாப் பிரயாணிகள் அதிகளவில் நடமாடும் பகுதிகளில் இரவு நேரங்களில் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அவசியமான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

நாட்டில் சுற்றுலா ஈர்ப்பு மிக்க நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க வேண்டும் என்றும், சில சட்டத்திட்டங்களை தளர்த்த வேண்டும் என்பதோடு, சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டில் செலவுகளை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்க தவறும் பட்சத்தில் நாட்டிற்கு வருமானம் கிட்டாது என்றும் வலியுறுத்தினார்.

அதேபோல், நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மை சார்ந்துள்ளதெனவும், சிலர் செய்யும் தவறான செயற்பாடுகளினால் முழு நாட்டுக்கும் அவப்பெயர் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் தூங்கா நகரங்கள்

அதனால் சுற்றுலாப் பயணிகளிடத்தில் அதிக தொகையை அறவிடும் உள்நாட்டு வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதோடு, அவர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்கும் வகையில் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

சுற்றுலாப் பயணிகளில் பிரயாண வசதிக்காக டெக்ஸி சேவைகளை ஆரம்பிக்க வேண்டுமெனவும், அது தொடர்பிலான சட்டவிரோத செயற்பாடுகளை முறியடிப்பதற்கு அமைச்சு விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டின் டொலர் வருமானத்தை அதிகரிப்பதற்கு உள்நாட்டு கஞ்சா உற்பத்திக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்திருப்பதாகவும், இரு வாரங்களுக்குள் அதற்கு அமைவான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமெனவும் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டம் ரூபாய்களை ஈட்டுவதாக அன்றி டொலர்களை ஈட்டிக்கொள்வதற்கானதாக அமைய வேண்டும் என்றும் அதற்கான அதிகார சபையொன்றின் கீழ் ஏற்றுமதி வலயத்திற்கு உற்பத்திச் செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அலி சப்ரி ஏன் இலங்கையை இழுத்து விடுகிறார்
Posted in இலங்கை செய்திகள்

அலி சப்ரி ஏன் இலங்கையை இழுத்து விடுகிறார்

அலி சப்ரி ஏன் இலங்கையை இழுத்து விடுகிறார்

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஏன் இலங்கையை இந்திய கனடா மோதலிற்குள் இழுக்கின்றார் என எமது சகோதர ஊடகமான டெய்லிமிரர் கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து டெய்லிமிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை அரசியல்வாதிகள் ஆச்சரியமளிப்பவர்கள். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நாடு அரசியல்நெருக்கடியில் சிக்குண்டிருந்த வேளை நாடு பணம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்ட போது இலங்கையின் அரச தலைவர்கள், சர்வதேச சமூகம் உதவவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

நல்லெண்ண நடவடிக்கையாக பல நாடுகள் உதவ முன் வந்தன-சில நாடுகள் தங்கள் சொந்த நலன் அடிப்படையில் உதவ முன்வந்தன- சில நாடுகள் நட்புறவின் அடிப்படையில் உதவ முன்வந்தன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை பேண விரும்புவதாகவும் பக்கம் சாய விரும்பவில்லை எனவும்

தெரிவித்துவரும் அதேவேளை , எதிர்பாராத நடவடிக்கையாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு தொடர்பற்ற இந்திய – கனடா முறுகல் நிலை குறித்து சர்வதேச ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளமை ஆச்சரியமளித்துள்ளது.

அலி சப்ரி ஏன் இலங்கையை இழுத்து விடுகிறார்

இலங்கையின் நிலைப்பாடு என்பதை விட கோபத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்து போலதோன்றும் அந்த கருத்தில் அலிசப்ரி இந்தியாவிற்கு எதிரான கனடா பிரதமரின் கருத்திற்காக கனடா பிரதமருக்கு எதிராக கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்- இது இலங்கைக்கு தொடர்பற்ற விடயம்.

சில பயங்கரவாதிகள் கனடாவில் புகலிடம் பெற்றுள்ளனர்

கனடா-இந்திய இராஜதந்திர முறுகல் நிலை குறித்து அலிசப்ரி கருத்து தெரிவிக்கையில் , உறுதியான ஆதாரங்கள் இன்றி இந்தியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தமைக்காக கனடா பிரதமரை கடுமையாக சாடியுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆதாரமற்ற பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர் என்பதால் அவரது கருத்துக்கள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

சில பயங்கரவாதிகள் கனடாவில் அடைக்கலம் பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளதுடன் ஆதாரங்களற்ற கடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சுபாவம் கனடா பிரதமருக்குள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்திலும் கனடா பிரதமர் அவ்வாறு நடந்துகொண்டார். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக பெரும் பொய்யை சொன்னார். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரங்களில் அலி சப்ரி கனடா பிரதமருக்கு எதிராக போர்கொடி தூக்குவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்திய- கனடா விவகாரங்களில் இந்த தருணத்தில் தலையிடுவது அர்த்தமற்றது போல தோன்றுகின்றது.

மேலும் இலங்கைக்கு தொடர்பற்ற விடயத்தில் தலையிட்டு உறவுகளை மேலும் சீர்குலைப்பது போலவும் தோன்றுகின்றது.

இலங்கை அரசாங்கத்துடன் சம்பந்ததமற்ற மோதல் குறித்து அலிசப்ரி வெளியிட்டுள்ள கருத்துகளை, இலங்கை ஜனாதிபதியும் ஏற்றுக்கொள்கின்றாரா அல்லது இலங்கை நாடானது இந்தியாவின் பக்கமோ அல்லது கனடாவின் பக்கமோ சாயாது என தெரிவிக்கும் படி அலிசப்ரியை கேட்டுக்கொள்கின்றாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இலங்கை தான் தீர்வுகாண வேண்டிய சொந்த மோதல்கள் பல உள்ளன. தனக்கு தேவையற்ற சம்பந்தமில்லாத மோதலில்களில் தலையிடாமல் இலங்கை அதனை செய்யலாம் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

பழிவாங்கிய இராணுவம் சுற்றிவளைத்து தாக்குதல்|ரஷ்யா உக்ரைன் போர்|இலங்கை இறுதி போர்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

பழிவாங்கிய இராணுவம் சுற்றிவளைத்து தாக்குதல்|ரஷ்யா உக்ரைன் போர்|இலங்கை இறுதி போர்

பழிவாங்கிய இராணுவம் சுற்றிவளைத்து தாக்குதல்|ரஷ்யா உக்ரைன் போர்|இலங்கை இறுதி போர்

பழிவாங்கிய இராணுவம் சுற்றிவளைத்து தாக்குதல் அடித்து நொறுக்க பட்ட மின்சார வாரியம் , குளிரில் தவிக்கும் மக்கள் ,வெடித்த கடும் மோதல் ,இலங்கை இறுதி யுத்தம் தீர்வை தடுக்கும் இந்தியா

இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு

இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு

சுமார் 20 இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் வௌியிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பாவனையில் இருந்து நீக்கிய சில ரயில் இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இணக்கம் வௌியிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு

அந்த ரயில் இயந்திரங்கள் இந்த நாட்டிற்கு பொருத்தமானதா என்பதை கண்டறியும் வகையில் தொழில்நுட்ப குழுவை எதிர்காலத்தில் இந்தியாவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பின்னரே அந்த இயந்திரங்களை இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை

மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை

மலேசியாவின் செந்தூல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இரண்டு இலங்கையர்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கோலாலம்பூர் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

செந்தூல் பகுதியில் உள்ள இலங்கை தம்பதியருக்கு சொந்தமான வீடொன்றில் நேற்று (22) இரவு இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த தம்பதியின் 20 வயதுடைய மகனும் மேலும் இரண்டு இலங்கையர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

குறித்த வீட்டிற்கு சுமார் 02 நாட்களுக்கு முன்னர் மேலும் இரு இலங்கையர்கள் வந்திருந்த நிலையில் அவர்கள் இந்தக் கொலைகளை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மலேசிய பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை

அயலவர்களால் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வீட்டுக்குச் சென்ற பொலிஸார், தலையை மூடி கை கால்கள் கட்டப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் மூவரின் சடலங்களையும் மீட்டுள்ளனர்.

அவர்களில் இரண்டு இலங்கையர்களின் புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தனர்.

இது தொடர்பில் ‘அத தெரண’, வெளிவிவகார அமைச்சிடம் வினவிய போது, சம்பவம் தொடர்பில் மலேசிய பொலிஸார் அந்நாட்டிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டது.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், கொல்லப்பட்ட இலங்கையர்கள் மற்றும் கொலையை செய்தவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

பிரிட்டனில் வட்டி வீதத்தை குறைக்க நடடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

பங்களாதேஷிடம் பெற்ற முழு கடனையும் செலுத்திய இலங்கை

பங்களாதேஷிடம் பெற்ற முழு கடனையும் செலுத்திய இலங்கை

பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகை முழுவதையும் நிதி பரிமாற்ற வசதிக்கு அமைய இலங்கை செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கடந்த வியாழக்கிழமை (21) அந்நாட்டுக்கு வழங்கப்படவிருந்த எஞ்சிய கடன் தொகையான 50 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இலங்கை மொத்தமாக பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலர்களை கடனாக பெற்றிருந்தது.

அத்துடன் அந்த கடனுக்கான வட்டியாக 4.5 மில்லியன் டொலர்களும் செலுத்தப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சரணடைந்தவர்களை கொலை செய்து புதைத்திருக்கிறார்கள்
Posted in இலங்கை செய்திகள்

சரணடைந்தவர்களை கொலை செய்து புதைத்திருக்கிறார்கள்

சரணடைந்தவர்களை கொலை செய்து புதைத்திருக்கிறார்கள்

சரணடைந்தவர்களை படுமோசமாக கொலை செய்துவிட்டு குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில் காணக்கூடியதாக இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனித மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்று (21) சர்வதேச சமாதான தினம் இந்த தினத்தில் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியான விசாரணை வேண்டும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியானது சர்வதேச நியமங்களின் பிரகாரம் அகழப்பட வேண்டும்.

போர்க்குற்றவாளிகள் இனம் காணப்பட்டு அவர்கள் சர்வதேச பொறிமுறையின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் நாட்டில் சமாதானம் அமைதி என்பது எட்டாத கிட்டதா ஒன்றாக இருக்கின்றது இங்கே ஆட்சி செய்கின்றவர்களுக்கு சமாதானம் என்பது தேவையில்லாத விடயமாக இருக்கின்றது.

ஆட்சிபீடம் ஏறுகின்றவர்கள் இனவாத கருத்துக்களை முன்னிறுத்தி பௌத்த மேலதிக்க சிந்தனையுடன் பெரும்பான்மை பேரினவாத சக்திகளின் ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறதுடித்து கொண்டிருக்கின்றார்கள்.

சரணடைந்தவர்களை கொலை செய்து புதைத்திருக்கிறார்கள்

சிறுபான்மை மக்களுக்கு தமிழ்மக்களுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வினை இனப்பிரச்சினைக்கான தீர்ப்பதற்கான எந்த வழிமுறையினையும், பொறிமுறையினையும் தேடாமல் குறிப்பாக தொடர்ச்சியாக அரசியல் செய்வதற்காக நாட்டை ஆழுவதற்காகத்தான் சமாதான முயற்சிகளில் அக்கறையற்றவர்களாக இருக்கின்றார்கள்.

இறுதி போரில் அனைவரும் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்தார்கள் சரணடைந்தவர்களுக்கு பாதுகாப்பு தருகின்றோம் உங்களுக்கு நல்ல வாழ்கைக்கு கொண்டு செல்கின்றோம்.

நீங்கள் எங்களிடம் சரணடையுங்கள் என்று ஒலிபெருக்கி மூலம் இறுதி போர்க்கால பகுதியில் அறிவித்துவிட்டு சரணடைந்தவர்களை படுமோசமாக கொலை செய்துவிட்டு குழி தோண்டி புதைத்தவர்களைத்தான் நாங்கள் இந்த கொக்குத்தொடுவாயில் காணக்கூடியதாக இருக்கின்றது.

கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி என்பதை விட அது ஒரு போராளிகளின் புதைகுழியாகத்தான் காணக்கூடியதாக இருக்கின்றது.

இதற்கு சர்வதேச நிபுணர்குழுவினை கொண்டுவந்து அவர்களுக்கு முன்னால்தான் இந்த புதைகுழியினை தோண்ட வேண்டும் இங்குள்ளவர்களை கொண்டு பரிசோதிக்கின்ற பட்சத்தில் முடிவினை காணமுடியாது இந்த அரசாங்கத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லாத தன்மை கடந்த காலங்களில் இருந்து வருகின்றது

இனிவரும் காலங்களிலும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் எல்லா விடயங்களிலும் சர்வதேச விசாரணையினை ஏற்படுத்தினால்தான் எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் நம்புகின்றோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர்களின் கண் திறக்கப்பட வேண்டும் வீதிகளில் புலம்புகின்ற மக்களின் குரல் அவர்களின் காதுகளுக்கு செல்ல வேண்டும் என மேலும் தெரிவித்தார்.