இலங்கைக்கு வருகிறார் ஜப்பான் நிதியமைச்சர்
ஜப்பான் நிதியமைச்சர் ஷுனிச்சி சுசுகி, இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அடுத்தவாரம் வரவுள்ளார்.
ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் ரொட்னி எம்.பெரேரா மற்றும் ஜப்பான் நிதியமைச்சர் ஷுனிச்சி சுசுகி ஆகியோருக்கு இடையில் டோக்கியோவில் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் ஜப்பான் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
10 வருடங்களின் பின்னர் ஜப்பான் நிதியமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
- ஹொரானாவில் சடலம் மீட்பு
- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது
- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது












