Tag: பீதியில் மக்கள்
இலங்கையில் கொவிட் மரணம் பதிவு பீதியில் மக்கள்
இலங்கையில் கொவிட் மரணம் பதிவு பீதியில் மக்கள்
கண்டியில் உள்ள தேசிய மருத்துவமனையில் நேற்று (23) கொவிட்-19 என சந்தேகிக்கப்படும் மரணம் பதிவாகியுள்ளது.
கம்பளை அட்கல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் ஆரம்பத்தில் மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் நுரையீரல் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனை மற்றும் PCR பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கொவிட் மரணம் பதிவு பீதியில் மக்கள்
இதற்கிடையில், நோய்த்தடுப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர, இலங்கையில் இன்ஃப்ளூயன்ஸா
போன்ற நோய்கள் அதிகரித்து வருவதால், ஜே.என்.1 – ஒமிக்ரோன் வகை துணை வைரஸ் சமூகத்தில் காணப்படலாம் என்று சமீபத்தில் கூறினார்.
கொவிட்-19 தொற்றுநோய் முடிவுக்கு வந்ததில் இருந்து ஒரு அமைதியான காலகட்டம் நிலவி வந்த நிலையில் இந்தச் சம்பவமானது மக்கள் மத்தியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவப்பு நிறமாக மாறிய நதி பீதியில் மக்கள்
சிவப்பு நிறமாக மாறிய நதி பீதியில் மக்கள்
ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதி, திடீரென கருஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.
அங்குள்ள ஒரு மதுபான ஆலையில் உள்ள குளிரூட்டும் அமைப்பு ஒன்றில் இருந்து உணவில் நிறத்திற்காக சேர்க்கப்படும் சாயம் கசிந்ததால் நதியின் நிறம் மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் காலை 09:30 மணியளவில் கசிவு நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பீர் தயாரிப்பு ஆலையான ஓரியன் ப்ரூவரிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உணவுகளில் நிறத்திற்காக சேர்க்கப்படும் சாயம் ஆற்றில் கசிந்ததால் தண்ணீர் நிறம் மாறியதாகவும், இதனால் சுகாதார அபாயங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.
அதேசமயம், மிகப் பெரிய பிரச்சனை மற்றும் கவலையை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பும் கேட்கப்பட்டுள்ளது.
சிவப்பு நிறமாக மாறிய நதி பீதியில் மக்கள்
கசிவு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக நிறுவனத்தின் தலைவர் ஹஜிம் முரானோ தெரிவித்தார்.
இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். அழகு சாதன தொழில்களில் பெருமளவில் பயன்படுத்தப்படும் இந்த பொருள் பொதுவாக பாதுகாப்பானது என்று அமெரிக்க நச்சுப் பொருட்கள் மற்றும் நோய்ப் பதிவேடு முகமை தெரிவித்துள்ளது.
தொழிற்சாலைகளால் இந்த ரசாயனம் குளிர்விக்கும் செயல்பாட்டில் உணவு சேர்க்கையாக பயன்படுத்தப்படுகிறது
புத்தளத்தில் காகங்கள் திடீர் மரணம் பீதியில் மக்கள்
புத்தளத்தில் காகங்கள் திடீர் மரணம் பீதியில் மக்கள்
புத்தளம் பகுதியில் திடிரென ஐம்பதுக்கு மேற்பட்ட கங்கள் மரணமாகியுள்ளன .
இந்த மரணத்திற்குரிய காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை .
இறந்த காகங்கள் மீட்க பட்டு ,அதன் மாதிரிகள் சோதனைக்கு
உள்ளாக்க பட்டு வருகின்றன .
இந்த காகங்கள் இறப்பு சம்பாவம் அந்த மக்கள் மத்தியில் ,
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
வீடுகளுக்குள் நுழையும் சிறுத்தைகளால் பீதியில் மக்கள்
வீடுகளுக்குள் நுழையும் சிறுத்தைகளால் பீதியில் மக்கள்
தலவாக்கலை, அகரபத்தனை பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தமது கிராமங்களுக்குள் புகுந்து வீடுகளுக்குள் நுழையும் சிறுத்தைகளால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர்.
நாய்களை வேட்டையாடுவதற்காக அடிக்கடி வீடுகளுக்குள் இந்த புலிகள் நுழைவதாக மக்கள் தெரிவித்தனர் .
வீட்டு கதவுகளை திறந்து ,புலி வீடுகளுக்குள் நுழைவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் .
வீடொன்றில் பொருத்த பட்ட கமராவில் இந்த காட்சிகள் பதிவாகிய நிலையில்,அந்த கிராம மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர் .
பிரிட்டன் ஸ்கொட்லாந்து வானில் பறந்தது என்ன பீதியில் மக்கள்
பிரிட்டன் ஸ்கொட்லாந்து வானில் பறந்தது என்ன பீதியில் மக்கள்
பிரிட்டன் ஸ்கொட்லாந்து வானில் பறந்தது என்ன என்பது தொடர்பாக மக்கள் பலர் ,காணொளிகளை வெளியிட்டு பீதியில் உறைந்துள்ளனர்.
நீண்ட வால் போல உருவம் கொண்ட ,குண்டு போல் ஒன்று பாய்ந்து செல்கிறது . .
இந்த மின்னல் வேகத்தில் பயணிக்கும் பொருள், என்ன என்பதை கணடறிய மக்கள் பலர் ,தமது கமராக்களில் பதிவானவற்றை வெளியீடு செய்துள்ளனர் .
வீட்டில் பொருத்த பட்டுள்ள, கமராக்களில் பதிவானவையும் ,வெளியிட பட்டுள்ளன .
பிரிட்டன் ஸ்கொட்லாந்து வானில் பறந்தது என்ன பீதியில் மக்கள்
பிரிட்டன் ஸ்கொட்லாந்து வானில், பறந்தது என்ன என்பதை கணடறியும் நடவடிக்கையில் ,வானிலை ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் .
இதில் வேற்று கிரகவாசிகள் பயணித்தனரா என்பது தொடர்பிலும் மக்களினால் ,கருத்துக்கள் பதிவிட பட்டு வருகின்றன.
எனினு இதுவரை எவ்வித கருத்துக்களும் வானிலை ஆரய்ச்சியாளர்களினால் வெளியிட படவில்லை .
Did I legit just see a shooting star in Motherwell or is that something crashing out the sky? pic.twitter.com/DBQh8zXjnT
— Rhiannon Hayes (@RhiannonHayes12) September 14, 2022

























