Tag: தொழிலாளர்கள்
தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ,நோர்வூட் பிரதேச செயலகத்தால் நிர்வகிக்கப்படும் மஸ்கெலியா, பிரவுன்லோ கிராம அலுவலர் பிரிவுக்கு (320 N) புதிய கிராம அலுவலரை நியமிக்க கோரி, பிரவுன்லோ தேயிலைத்
தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் , செவ்வாய்க்கிழமை (25) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது, பிரவுன்லோ கிராம அலுவலர் பிரிவின் பதில் கிராம அலுவலராக பணிப்புரிவது மஸ்கெலியா பிரிவின் கிராம அலுவலர் என தெரிவிக்கப்படுகிறது.
மஸ்கெலியா கிராம அலுவலர் பிரிவில் சுமார் 5000 மக்கள் தொகையும், பிரவுன்லோ பிரிவில் சுமார் 7000 மக்கள் தொகையும் உள்ளதாகவும்,
இந்த இரண்டு பிரிவுகளிலும் உள்ள சுமார் 3400 குடும்பங்களுக்கு ஒரு கிராம அலுவலர் பணியமர்த்தப்படுவது நியாயமானதல்ல என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பதில் கிராம அலுவலர் , அலுவலகத்தில் பணிபுரிவதாக சுட்டிக்காட்டும் ஆர்பாட்டகாரர்கள் , சுமார் 3 வருடங்களாக நீடிக்கும் இந்தப் பிரச்சினை குறித்து நோர்வூட் பிரதேச செயலக
அதிகாரிகளுக்கு வாய்மொழியாக மற்றும் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும், இதுவரை பிரவுன்லோ பிரிவுக்கு நிரந்தர கிராம
அலுவலர் ஒருவரை வழங்காததால், தோட்டத் தொழிலாளர்கள் உட்பட ஏராளமானோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 100 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்
தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்
மலையக தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் ,மலையகத்தில் அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள 1700 நாளாந்த சம்பளத்தை தோட்டத்து தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்க கோரி ,
தற்போது மலை நிலத்தில் மக்கள் தமது போராட்டத்தை நடத்திய வண்ணம் உள்ளனர் .
தோட்டத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை தமது போராட்டத்தை ஆரம்பித்தனர் .
அரசு உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,
அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட நாளாந்தம் 1700 ரூபாய் சம்பளத்தை தமக்கு வழங்கும்படி கூறியே இந்த போராட்டதை மலையாக நிக்கோவியா தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
மலையை திட்ட தொழிலாளர்களுக்கு தற்பொழுது ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
அதனை 1700 ரூபாவாக அதிகரிக்கும்படி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொத்தடிமகளாக வைக்கப்பட்டு மக்கள் அங்கே பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்ற நிலையில்,
இதுவரை சம்பளம் உயர்வு வழங்கப்படாத நிலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற்னர் .
25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை உயர்ரத்த கோரி அரசை அதிகாரிகள் சேவை கழகங்கள் 200க்கும் மேற்பட்டவை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது .
அந்த காலப்பகுதியில் தற்பொழுது இந்த மக்கள் மலாயக்கத்தில் போராட்டத்தில் குறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது

- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்

- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்

- தலைமன்னார் ரயில் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுகிறது

- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி

- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது

- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது









