Tag: மகிந்த
மகிந்த கோட்டாவால் ஓரங்க கட்ட பட்டுள்ளார் – ரிச்சர்டு
மகிந்த கோட்டாவால் ஓரங்க கட்ட பட்டுள்ளார் – ரிச்சர்டு
இலங்கையில் தமிழர்களை இல்லா தொழித்து அதன் தீவிர வேட்டையில் ஈடுபட்டவர் முசுலிம்
ரிச்சார்டு ஆவர் ,இவர் ஒரு சண்டியர் ,அவரை சிறையில் கோட்டா அடைத்தார் ,அதனால்
சீற்றமுற்ற இவர் மகிந்த நல்லவர் எனவும் அவர் கொட்ட ஆட்சியில் ஓரணிக்கட்ட பட்டுள்ளார் என
கேள்வி எழுப்பியுள்ளார்
யாழ்ப்பாணம் வருகிறார் மகிந்த
யாழ்ப்பாணம் வருகிறார் மகிந்த
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி – பளை ஆகிய பகுதிகளில், 60,000 குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கும் இரண்டு முக்கிய நீர் திட்டங்களை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஒக்டோபர் 6ஆம் திகதி யன்று, யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
ஆரம்பிக்கப்படும் திட்டங்கள், SWRO உப்பு நீக்கும் ஆலைபிரிவு, இது தாழையடியில் கட்டப்படும் மற்றும் இது நயினாதீவில் முழுமையாக நிறைவு செய்யப்பட்ட நீர் வழங்கல் திட்டம் ஆகும். இந்தத் திட்டம் இப்போது 5,000 பயனாளிகளுக்கு பாதுகாப்பான நீரை வழங்கும்.
மேலும், யாழ்ப்பாண நகர நீர் விநியோகத் திட்டமும் விரைவில் தொடங்கப்படும். இதில் 1 இலட்சம் மக்கள் தொகையை உள்ளடக்கிய JKWSSP இன் ( Jaffna Kilinochchi Water Supply and Sanitation Project) கீழ் 284 கிலோ மீற்றர் நீளமுள்ள குழாய்களை அமைப்பதில் அடங்கும்.
யாழ்ப்பாண நகர நீர் விநியோகம் மற்றும் தாழையடி SWRO SWRO உப்பு நீக்கும் ஆலைபிரிவு, 2023க்குள் முடிக்கப்பட்டு 3 இலட்சம் பயனாளிகளுக்கு சுத்தமான நீர் வழங்கப்படும்.
சீனாவின் ஆதரவுடன் நாம் முன்னேற முடிந்தது – மகிந்த திமிர் பேச்சு – இந்தியா கொதிப்பு
சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி இயக்கத்தின் ஆதரவு காரணமாக ஒரு அணிசேரா
நாடாக சுதந்திர உலகில் முன்னேற முடிந்தது என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (15) பிற்பகல் அலரி மாளிகையில் தெரிவித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழாவில், காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழா கொண்டாடப்படும் இச்சந்தர்ப்பத்தில் எமது அன்பான வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறோம். அக்கட்சியின் நூறாவது ஆண்டு விழா
கொண்டாடப்படும் இவ்வருடம் ஆசியாவிலுள்ள நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானதாகும் என்பது எனது நம்பிக்கையாகும்.
சீனாவின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சி இடம்பெறும் என்பது எம் அனைவரதும் நம்பிக்கையாகும். அந்த வரலாற்று வெற்றியை சீனாவிற்கு
பெற்றுக் கொடுத்தது இத்தால் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1921ஆம் ஆண்டு பன்னிரெண்டு பேர் ஒன்றிணைந்து உருவாக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூலமாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அதனாலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆசியாவிற்கே மிகப்பெரியதும், முக்கியமானதுமான கட்சி என்று நான் கூறினேன்.
சீனா என்பது நாடு மட்டுமல்ல. சீனா என்பது மாபெரும் நாகரிகம். சீனா பல்வேறு நாடுகளால் படையெடுப்பிற்கு உட்படுத்தப்பட்ட தவிர சீனா ஒருபோதும் பிற நாடுகள் மீது
படையெடுக்கவில்லை. அத்துடன் உலகின் பெரும் தொகையான மக்கள் ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை நம்பியுள்ள நாடு இதுவாகும்.
அது மட்டுமல்லாமல், விவசாயத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதன் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட நாடாக சீனா பார்க்கப்படுகிறது. அதனால் தான் சீனாவை ஒரு சிறந்த நாகரிகம் என்று நான் கூறினேன்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி அந்த நாகரிகத்தின் அடையாளத்தை இனங்கண்டு பணியாற்றியமையாலேயே இன்று சீனாவை உலகின் சக்தியாக வளர்ச்சி பெறச்செய்ய முடிந்துள்ளது.
சீனாவிற்கும் எங்களுக்கும் இடையே வரலாற்று ஒற்றுமைகள் உள்ளன. சீனாவின் பெரிய சுவரை சீனா கட்டும் போது, நமது மன்னர் தேவநம்பியதிஸ்ஸ மன்னன் அனுராதபுர மஹமேவனா உயனவினை நிறுவுகிறார். எங்கள் வரலாற்று ஒற்றுமைகள் மற்றும் நட்பு மிகவும் சக்திவாய்ந்தவை.
ஒரு சக்திவாய்ந்த நாடாக சீனா நமது சுயாதீனத்தை பாதுகாக்க பெரிதும் உதவியது. இது பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய எங்களுக்கு உதவியது.
சீன அரிசி இரப்பர் ஒப்பந்தம் இலங்கையர்களுக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் இலங்கையின் சுதந்திரத்திற்காக சீனா செய்த சேவையை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.
எமது வரலாற்று ரீதியான நண்பர் என்றே நான் எப்போதும் சீனாவிற்கு கூறினேன். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிதான் சீன கம்யூனிஸ்ட் கட்சியை எங்களுக்கு மிக நெருக்கமாக்கியது.
கடந்த காலத்தில், பௌத்தமே சீனா மற்றும் இலங்கையை இணைத்தது. சுதந்திரத்திற்குப் பின்னர், எங்களிடையே உறவை முதலில் கட்டியெழுப்பியது கம்யூனிஸ்ட் கட்சிதான். சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் போலவே, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இலங்கை நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட பல விடயங்களை மதிக்கிறது.
தேசிய பொருளாதாரம், சுயாதீன நாடு, விவசாயம் உள்ளிட்ட உள்ளூர் தொழில்துறை முறையை நம்பியுள்ள ஒரு சுதந்திர நாடு.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மறைந்த எஸ்.ஏ.விக்ரமசிங்க விவசாயத்தின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் முன்வைத்த நில்வலா கங்கை திட்டம், இடதுசாரி தலைவர் ஒருவர் விவசாயம் குறித்து முன்வைத்த மிக முக்கியமான திட்டமாகும். இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி காரணமாக, சீனாவுடனான நமது கடந்தகால உறவை மேலும் வலுப்படுத்த முடிந்தது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்றிய திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் காலத்தில், சீனாவுடனான எங்கள் உறவுகள் மிகச் சிறந்தவை. சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எங்கள் இடதுசாரி இயக்கத்தின் ஆதரவே ஒரு அணிசேரா நாடாக உலகில் சுதந்திரமாக முன்னேற எங்களுக்கு உதவியது என்று நான் கூற வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றிய அரசாங்கத்தின் கீழ் பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நாங்கள் முடிவுக்கு கொண்டுவந்தோம். யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் நமது சுதந்திரத்திற்காக சீன அரசாங்கம் செய்த தியாகங்களை நாங்கள் எப்போதும் பாராட்டுகிறோம். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் ஆசிய நாடொன்றின் சுதந்திரத்திற்கு இது மாபெரும் பங்களிப்பாகும்.
இந்நேரத்தில், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எங்களுக்கும் இடையிலான பிணைப்பை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு இப்போது 78 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.
கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடித் தலைவர் டாக்டர் திரு. எஸ்.ஏ.விக்ரமசிங்க தெற்கிலிருந்து வந்தவர். டாக்டர் எஸ்.ஏ. விக்ரமசிங்கவுடன் எனது பெரிய தந்தை டி.எம்.ராஜபக்ஷ மற்றும் எனது தந்தை டி.ஏ.ராஜபக்ஷ ஆகியோர் மிக நெருக்கமான அரசியல் உறவை கொண்டிருந்தவர்களாவர். அதேபோன்று நானும் எனது பெரிய தந்தை, தந்தை போன்றே திரு.எஸ்.ஏ.விக்ரமசிங்கவின் அரசியல் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்ட ஒருவர் என்பதை இந்நேரத்தில் நான் கூற வேண்டும்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் திரு. விக்ரமசிங்க என் வாழ்க்கையில் ஒரு முன்மாதிரி என்றும் சொல்ல வேண்டும். பீட்டர் கேதமன், ராஜா கொள்ளுரே சரத் முத்தெட்டுவேகம, இன்று தலைமை வகிக்கும் வீரசிங்க அவர்கள் எமக்கு நெருக்கமான அரசியல் களத்தில் இருந்தவர்கள்.
உலகம் மாறியுள்ளது. எமது நாடும் மாறியுள்ளது. தொழில்துறை புரட்சி மற்றும் தொழில்நுட்ப புரட்சிக்குப் பின்னர், இன்று இணைய யுகத்தில் இளம் தலைமுறையினர் உள்ளனர்.
இன்று நம்மிடம் இருப்பது அப்போது இருந்த அரசியல் கருத்துக்கள் அல்ல. ஆனால் இன்று நாம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் வென்றெடுக்க, கடந்த கால முற்போக்கான அரசியல் சக்திகளின் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற இடதுசாரி இயக்கங்கள் கடுமையாக போராடின என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உலகம் எவ்வளவு மாறினாலும் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் சமத்துவத்திற்காக முன்னின்றது.
சமத்துவம் என்ற கருத்து இன்றும் உலகில் செல்லுபடியாகும்.அதற்காக மிகப்பெரிய தியாகம் செய்த சீன கம்யூனிஸ்ட் கட்சி உலக சமத்துவத்திற்காக எதிர்காலத்திலும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என நம்புகின்றேன் என கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதமர் ஊடக பிரிவு
பிள்ளைகளை விளையாட விடுங்கோ நல்லதாம் – மகிந்தா
வீட்டுக்கு வீடு வளரும் பிள்ளைகளை விளையாட விடுங்கோ என ஆளும் பிரதமர் மகிந்த ராஜபக்சே
கெஞ்சி கேட்டுள்ளார் இதை ஏன் சொன்னார் தெரியுமா ..?
இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பாடசாலை மாணவர்களை
கல்வி கற்கும் காலத்தில் விளையாடடுக்களில் ஈடுபடுத்தினால் அவர்கள்
சிறந்த நல்ல பெறு பேறுகளை பெறுவதுடன் இலங்கை உலகில் தலை சிறந்த
எதிர் விளையாடடு வீரர்களை தன்னகத்தே கொண்ட நாடாக விளங்கும் என அடித்து கூறியுள்ளார்
தமது குடும்பத்தில் மூன்று வீர புதல்வர்கள் விளையாடடு வீரர்களாக
உள்ளதை மனதில் வைத்தே மகிந்தா ராஜபக்சே இந்த விடயத்தை அவிழ்த்து விட்டுள்ளார்
மக்களின் அடைப்படை வாழ்வாதரம் ,பொருளாதாரத்தை மேம்படுத்துவதை
விடுத்தது இவ்விதம் முக்கியத்துவம் அல்லாத விடயங்களை பேசி தமது ஆளுமை
காலத்தை வீணடித்து மக்கள் வெறுப்பை சம்பாதிக்கும் பிரதமராக
இவர் வாழ்ந்து மடிவார் என்பது எதிர்வு கூறல்களின் எதிரி முன் பதிவாக வீழ்ந்து கிடக்கிறது
சகல இந்து அடியார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் – பிரதமர் மகிந்த
சகல இந்து அடியார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் – பிரதமர் மகிந்த
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சகல இந்து அடியார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி :
இருளை அகற்றி ஒளி ஏற்றும் இந்து மக்களின் உயர்ந்த சமயப் பண்டிகைத் தினமான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதிற் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இருட்டு வழியிற் தீபம் இருந்தால் அதுவே வழிக்குத் துணையாக அமையும். மனித வாழ்க்கைப் பாதைக்கு அருட்தீபம் துணை நின்றால் வாழ்வு சுபீட்சமாகும். அத்தகைய அருட் தீபமாகிய
ஆன்மீக ஞான ஒளியை இறைவழிபாடு மூலம் பெறும் சிறப்பு வாய்ந்த நன்னாளே தீபாவளித் திருநாள். தேசிய ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த நாளாகும். எல்லா மதங்களிலும் விளக்கு ஏற்றுவதன் காரணம் இருளையும் அறியாமையையும் அகற்றி ஒளியை
பரப்புவதற்கே. தீபாவளியும் அதன் எதிர்பார்ப்புகள் நிறைந்த தீப ஒளியும் சமூகங்களுக்கு மத்தியிற் சிறந்த புரிந்துணர்வுக்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. மிக நீண்டகாலமாக எமது
மக்களைப் பிரித்துவைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத் தீபாவளித் திருநாளைக்
கொண்டாடுவோம். இந்த ஒளியை நாம் அணைய விடாமல் பாதுகாத்து மறுபடியும் இருளுக்குள் மூழ்காமல் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
இன்று நம் தேசம் “நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு அமைவாக ஒளிநிறைந்த வளர்ச்சிப் பாதையிற் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது
. அனைத்துத் துறைகளிலும் நாம் முன்னேற்றம் காண முயல்கின்றோம். இன்று உலகையே அச்சுறுத்திவரும் கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாக்கும்
பணியினை அரசாங்கம் மக்கள் அனைவரதும் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக செயற்படுத்தி வருகின்றது. கொவிட்-19 நோய்த்தொற்றிருந்து இலங்கைத் திருநாடு விரைவில் மீள்வதற்கும்
எம் மக்களுக்கு எல்லா சுபீட்சங்களையும் தரும் நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக இத்தீபாவளித் திருநாள் அமையட்டும்.
இலங்கைவாழ் இந்து மக்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
யாழ். அராலி ஓடைக்கரைகுள தடுப்புச் சுவர் கட்டுமானம் – மகிந்த தலையீட்டுடன் தீர்வு
யாழ். அராலி ஓடைக்கரைகுள தடுப்புச் சுவர் கட்டுமானம் – பிரதமரின் தலையீட்டுடன் தீர்வு
அராலி ஓடைக்கரைகுளம் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க தேவையான நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில், யாழ்.வட்டுக்கோட்டை கமக்காரர் அமைப்பினர், பிரதமரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஓடைக்கரைகுளம் தடுப்புச் சுவர் கட்டுமானத்தை ஆரம்பிப்பதற்கு அனுமதியளிக்குமாறு கோரி, பிரதமருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை பரிசீலனை செய்த பிரதமர் அவர்கள், கட்டுமானப் பணிக்கான நிதியை விடுவிக்குமாறு, சமூக வலுவூட்டல் மற்றும்
தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பிரதமரின் கோரிக்கைக்கு அமைய அராலி ஓடைக்கரை குளத்திற்கு தடுப்பு சுவர் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட 6.705 மில்லியன் ரூபா ஒதுக்கீடு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பு சுவர் கட்டுமான பணிகள் 2020 ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரச ஊழியர்களின் எதிர்காலத்தை ஐ.தே.க.வால் உறுதிப்படுத்த முடியாது- மகிந்த
அரச ஊழியர்களின் எதிர்காலத்தை ஐ.தே.க.வால் உறுதிப்படுத்த முடியாது- மகிந்த
அரச ஊழியர்களின் உரிமைகளுக்காக முன்நிற்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பும் கடமையும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள் பழிவாங்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் யுகம் மீண்டும் உருவாக இடமளிக்க போலதில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மொறட்டுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், தமது ஆட்சி காலத்திலேயே அரச ஊழியர்கள் பாதுகாக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
அதன் காரணமாகவே கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த முடிந்தாகவும், அரச ஊழியர்களின் எதிர்காலத்தை ஐக்கிய தேசிய கட்சியால் உறுதிப்படுத்த முடியாது எனவும் கூறினார்.
யுத்தத்திற்கு பின்னர் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டதாக தெரிவித்த பிரதமர், கடந்த அரசாங்கம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தேவையற்ற அச்சுறுத்தல்களை முன்னெடுத்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு
2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு
இலங்கை மத்திய வங்கியின் 2019 ஆம் ஆண்டுக்கான அறிக்கை மத்திய வங்கி ஆளுநர் சுஜீவ ராஜபக்ஷவினால் பிரதமர் மஹிந்த
ராஜபக்ஷவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
பிரதமரின் விஜேராம இல்லத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. மத்திய வங்கியின்
பதில் பொது முகாமையாளர் பொனிபஸ் சில்வா,மற்றும் அஸாம் அஹமட் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை – மகிந்தவுடன் மோடி பேச்சு
கொரோனா தடுப்பு நடவடிக்கை – மகிந்தவுடன் மோடி பேச்சு
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை – மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு
சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது.
அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.
இந்தியாவிலும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் சிறப்பான
உரையாடல் நடந்தது. பாராளுமன்றத்தில் அவர் 50 ஆண்டுகளை கடந்து வந்ததற்கு வாழ்த்து தெரிவித்தேன். இலங்கையின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்துப் பேசினேன்.
மேலும், கொரோனாவை எதிர்த்துப் போராடி வரும் அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா எப்போதும் தனது ஆதரவை
அளிக்கும். தேவையான உதவிகளை அளிக்கும் என பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்ந்து பேசிவருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க தூதுவர் – பிரதமர் மகிந்தவுக்கு இடையில் சந்திப்பு
அமெரிக்க தூதுவர் – பிரதமர் மகிந்தவுக்கு இடையில் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மற்றும் பிரதமர்
மஹிந்த ராஜபக்ஷவுக்கிடையில் சற்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று (05) காலை கொழும்பு, விஜேராம மாவத்தையில்
அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கொவிட் -19 உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு குறிப்பாக பொருளாதார தாக்கங்கள் மற்றும் கூட்டு ஒத்துழைப்பு
தொடர்பில் பிரதமருக்கும், அமெரிக்கத் தூதுவருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

கொரோனா வைரஸ் – பின் போடப்பட்ட பாராளுமன்றத் தேர்தல்
கொரோனா வைரஸ் – பின் போடப்பட்ட பாராளுமன்றத் தேர்தல்
அமெரிக்கா, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் அண்மைக் காலத்தில் துரிதமான பொருளாதார வளர்ச்சியை அடைந்துக்
கொண்டு, பலமாக காணப்பட்ட நிலையிலேயே அந்த நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பாதிப்பு ஏற்பட்டது.
எனினும், இலங்கை கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் மத்தியிலேயே இந்த பேரிடருக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு
வரை இடம்பெற்ற மோசமான ஆட்சி காரணமாக எமது கடன் சுமை 71% இதனால் அதிகரித்தது. ரூபாயின் பெறுமதி 30% இதனால் வீழ்ச்சியடைந்தது. பொருளாதார வளர்ச்சி வேகம் 2.7% வரை
குறைவடைந்தது. 2019 நவம்பரில் நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அரசாங்கமொன்றை அமைத்த போதிலும்,
எமக்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமையினால், கடந்த அரசாங்கத்தின் மருந்து மற்றும் உர வழங்குனர்களுக்கு
நிலுவைப் பணத்தைச் செலுத்துவதற்கேனும் இடைக்கால கணக்கறிக்கையொன்ற நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையேற்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 150(3) ஆம் உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு கிடைக்கும் நிதி தொடர்பான ஏற்பாடுகள் மாத்திரமே ஆறுதலாக உள்ளது. இந்த அனைத்து பாதகமான
நிலைமைகளின் மத்தியிலேயே நாம் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. கடந்த மார்ச் 11 ஆந் திகதி முதலாவது கொரோனா நோயாளி அடையாளங்
காணப்பட்டவுடன், நாம் நோயினை முன்னரே இனங்காணுதல், நோயாளிகளை வேறுபடுத்தி சிகிச்சையளித்தல், அபாயத்தை எதிர்நோக்கிய நபர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தல்,
நோயாளிகளுடன் பழகிய நபர்களைக் கண்டறிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற கட்டுப்பாட்டு முறைமைகளை அறிமுகப்படுத்தினோம். எமது வாழ்க்கையில் இவ்வாறானதொரு
நடவடிக்கையை ஒருபோதும் கண்டதில்லை. நோய் பரவுவதைத் தடுப்பதற்காக பல வாரங்கள் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியேற்பட்டது.
நாடு முழுவதும் தமது வீடுகளிலிருந்து வெளியேற முடியாத மக்களுக்கு உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான முறைமையொன்றைத்
தயாரிக்க வேண்டியேற்பட்டது. குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு உதவி வழங்க வேண்டியேற்பட்டது. நாட்டின்
உற்பத்திச் செயற்பாட்டை நடாத்திச் செல்வதற்காக விவசாயிகள், மரக்கறி விவசாயிகள் மற்றும் மீனவர்களின உற்பத்திகளைக்
கொள்வனவு செய்ய வேண்டியேற்பட்டது. இந்த அனைத்தையும் ஒரே தடவையில் மிகவும் குறுகிய காலப்பகுதியில் ஒழுங்குபடுத்திக்
கொள்ள முடிந்தமை உண்மையில் முகாமைத்துவத்தின் பிரதிபலனாகும்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள வெற்றியை இன்று முழு உலகமும் ஏற்றுக்கொள்கிறது. ஜனாதிபதி அவர்கள் இது தொடர்பாக
தனித்துவமான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளார். எமது அரசாங்கத்தின் மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாட்தொகுதியினர் முழு உலகினதும் கவனத்தை
ஈர்த்துள்ளனர். நோயாளிகள் பழகிய நபர்களைக் கண்டறிவதில் எமது உளவுப் பிரிவு வெளிப்படுத்தியுள்ள திறமை, அர்ப்பணிப்பு
காரணமாகவும், தனிமைப்படுத்தல் செயற்பாட்டை மேற்கொண்டு செல்வதில் முப்படையினர் வெளிப்படுத்தியுள்ள வினைத்திறன் காரணமாகவும் நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிசார் உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலான அரச ஊழியர்களும் கொரோனா தடுப்பு வேலைத்திட்டத்தின்
வெற்றிக்குப் பங்களிப்பு வழங்கியுள்ளனர். இன்று கொரோனா வைரஸ் காரணமாக பாதுகாப்பற்றதாக மாறியுள்ள உலகில் எமது நாடு மிகவும் பாதுகாப்பான இடமாக மாறியுள்ளது. அழிக்கப்பட்ட
பொருளாதாரம், இயலுமான எல்லா சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்திற்கு இடையூறு விளைவிக்கின்ற, நாட்டின் மீது அன்பு
இல்லாத சந்தர்ப்பவாத எதிர்க்கட்சியொன்று இந்த நாட்டில் உள்ள நிலைமையிலேயே நாம் இவ்வாறான கட்டத்தை அடைந்துக் கொண்டோம்.
தனிமைப்படுத்தலுக்குச் செல்வதை நிராகரித்தவர்களை ஊக்குவித்தமை மூலம் எதிர்க்கட்சித்தலைவர் ஆரம்பத்திலிருந்தே கொரோனா தடுப்பு வேலைத்திட்டத்தினைச் சீர்குலைக்க
முயற்சித்தார். அதன் பின்பு, பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அரச நிதியை செலவிடுவதற்கு ஜனாதிபதிக்கு
அதிகாரம் இல்லை எனக் கூறி அவர்கள் சுகாதார சேவை உள்ளிட்ட அனைத்து அரச சேவைகளையும் சீர்குலைக்க முயற்சித்தனர்.
புதிய பாராளுமன்றம் ஜூன் இரண்டாம் திகதிக்கு முன்னர் கூட வேண்டும் எனவும், பாராளுமன்றத் தேர்தலை அதற்கு முன்னர்
நடாத்த முடியாது எனவும், அதனால் பாராளுமன்றத்தைக் கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்துச் செய்ய வேண்டும் எனவும் இன்று அவர்கள் கூறி வருகின்றனர்.
நல்லாட்சி அரசாங்கம் மூன்று வருடங்களுக்கு உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைத்தமையை நாம் அறிவோம். வழக்குகள் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களுக்கேனும் தேர்தலை
நடாத்துவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தமையினால் மாத்திரமே நீதிமன்றம் சென்று தேர்தலை குறிப்பான திகதியின்றி ஒத்திவைக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில்
முடிந்தது. 2017 ஆம் ஆண்டு மாகாண சபைகள் கலைக்கப்படுவதற்கு சில நாட்களே இருந்த சமயத்தில், மாகாண
சபைத் தேர்தல் நடாத்தப்படுவதைத் தடுப்பதற்காக நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல் முறைமையை மாற்றியமைத்தது.
அந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம் என சட்டமா அதிபர்
தெரிவித்தபோது, அவர்கள் பாராளுமன்றத்தின் நடைக்கூடத்தில் மேற்கொண்ட பேரம் மூலம் வாக்குகளுக்காக கொள்கைகளைக்
காட்டிக்கொடுத்து தேவையான பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டனர்.
அந்த இழிவான கொடுக்கல் வாங்கலின் பிரதிபலனாக 2017 ஆகஸ்ட் 25 ஆந் திகதி நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்
சட்டத்தில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ சதவீதம் 40% ஆக காணப்பட்டதுடன், அதன் ஒரு மாதத்தின் பின்பு நிறைவேற்றப்பட்ட
மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ சதவீதம் 50% ஆக காணப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் மனுச் சமர்ப்பித்து,
பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பாராளுமன்றத் தேர்தலை ரத்துச் செய்த அரசியல் கட்சிகள் உள்ள உலகின் ஒரே ஜனநாயக நாடு இலங்கையாகும். தற்போதைய பாராளுமன்றத் தேர்தலை
ஒத்திவைப்பதற்கு இன்று மேற்கொள்ளும் முயற்சி அந்த இழிவான வரலாற்றின் ஒரு நீட்சியாகும். நாட்டில் எந்த சந்தர்ப்பத்திலாவது
பொது சமூக வாழ்வு மீண்டும் ஆரம்பமாக வேண்டியுள்ளது. எமது 25 நிர்வாக மாவட்டங்களில், பதினொரு மாவட்டங்களில் கொரோனா
வைரஸ் தொற்றுள்ள ஒருவரேனும் இல்லை. மேலும் ஏழு மாவட்டங்களில் தொற்றுடைய ஒருவர் அல்லது இருவரே
அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு மாவட்டங்களில் ஐந்திற்கும் ஏழுக்குமிடையிலான எண்ணிக்கையைக் கொண்ட
நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். ஐந்து மாவட்டங்களில் மாத்திரமே குறிப்பிடத்தக்களவான நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் இரண்டாம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து, தேர்தல் நடாத்தப்படும் திகதி ஏப்ரல் 25 எனவும், புதிய
பாராளுமன்றம் முதலாவது கூடும் திகதி மே 14 எனவும் அறிவித்தார். அதன் பிறகு பத்து நாட்களின் பின்பு முதலாவது கொரோனா நோயாளி கண்டறியப்பட்ட சந்தர்ப்பத்தில் தேர்தல் நடாத்தப்படும்
திகதியை ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படவில்லை. 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 24(3) ஆம் பிரிவுக்கு ஏற்ப,
ஜனாதிபதி குறிப்பிட்ட திகதியில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்த முடியாவிடின், அதற்கு வேறொரு திகதியைக் குறிப்பதற்கான கடப்பாடு தேர்தல் ஆணைக்குழுவுக்கு காணப்படுகிறது.
திகதியொன்றைக் குறிப்பிடாது பாராளுமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடையாது. எதிர்காலத்தில் பல வாரங்களில் அல்லது பல
மாதங்களில் இடம்பெற முடியுமான அல்லது இடம்பெற முடியாத விடயங்கள் தொடர்பாக ஏற்படுத்திக்கொள்ளும் ஊகங்களின்
அடிப்படையில் கட்டாயமாகப் பின் பற்ற வேண்டிய சட்டரீதியான ஏற்பாடுகளை ஒதுக்கித்தள்ளி விட முடியாது.
தேர்தல் ஆணைக்குழு முதலில் 24(3) ஆம் பிரிவின் கீழ் அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைப்பொறுப்பினை சட்டத்திற்கு
ஏற்புடையவாறு நிறைவேற்றி விட்டு, அதன் பின்பு கலந்துரையாட வேண்டிய விடயம் ஏதாவது இருப்பின், அது தொடர்பாக கவனஞ் செலுத்த வேண்டும்.
பிரதம அமைச்சர்
மஹிந்த ராஜபக்ஷ
காராட்டியில் கறுப்பு பெலிட் பெற்ற மகிந்தா
காராட்டியில் கறுப்பு பெலிட் பெற்ற மகிந்தா
இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ்சா தற்காப்பு கலையில் கறுப்பு பெட்டியை பெற்றுள்ளார் .
தற்போது 64 வயதாகும் மகிந்தா தற்காப்பு கலையை கற்றுள்ளது ,தமிழர்களை காராட்டி மூலம் அடித்து விடுவார்
என நெட்டிசன்கள் ,குது கழித்து வருகின்றனர் ..
போர் முடிவடைந்த பின்னரும் தமிழர்கள் ,அவர் தம் வாழ்வாதாரம் சீர்குலைந்து காணப் படும் வேளையில் ,
அவர்கள் வாழ் வதாரத்தை மேம்படுத்த மறுத்து வரும் மகிந்தா சிந்தனை வாதம் தற்பொழுது தமது களியாட்ட
நிகழ்வில் பயணித்து தமிழர்களை புறம்தள்ளி வருகிறது என்பதனை இந்த நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன

தமிழர்கள் வந்தேறிகள்- சிங்கள அரசு
தமிழர்கள் வந்தேறிகள்- சிங்கள அரசு
இலங்கையின் பூர்வி குடிகளான தமிழர்கள் வந்தேறிகள் என வந்து குடியேறிய சிங்களவர்கள் பேசி வருகின்றமையும் ,
பிக்குகளை கொண்டு தமிழர்கள் மீது வன்முறையை தூவி வருவதையும் நடப் பாண்டு ஆட்சியில் மக்கள் அவதானிக்க முடிகிறது
நல்லிணக்கத்தை சிதைத்து ,ஒன்று பட்ட இலங்கையர்களாக மக்கள் ஒன்றித்து வாழ்வதை ஆளும் இனவாத அரசு விரும்பவில்லை .
தனி பெரும் பான்மை வாக்குகள் பெற்று எம்மை அதிகாரத்தில் சிங்களவர்களே வைத்தனர் .
அதனால் தமிழர் பகுதியில் அவர் தம் பிரச்சனைக்கு தீர்வு இல்லை ,என்பதையும் பேச்சளவில் மட்டும் அபிவிருத்தியை பேசி வருகிறது ஆளும் வர்க்கம் ,
நால்லாட்சி தத்துவம் பிடுங்கி ஏறிய பட்டு வன்மம் தேய்ந்த இனவாத ஆட்சி நாட்டில் பரவி கிடக்கிறது .
கொடூரமாக பழிவாங்க பட்டு வஞ்சிக்க பட்ட தமிழர் இனம் இதுவரை போர் வடுவை தாங்கியபடி நடை பயில்கிறது .
வீடு இன்றி ,உயிர் வாழ தகுந்த வீடின்றி ,இந்த குடும்பம் அல்லல் படுகிறது
குடும்ப உறவுகளை கொன்று வீசிய அதிகாரம் ,அதை மன்னித்து எமக்கு வாழ்வு கொடுங்கள் ,உங்கள் வாக்கை தாருங்கள் என்றால் வலி தாங்கிய சமூகம் என்ன செய்யும் ..?
ஒற்றை புரிதல் கூட இல்லாத இனவாத ஆளும் அரசு ,எதிர்காலத்தில் தமிழரால் எமக்கு ஒருபொழுதும் வாக்கு தாராமாட்டார்கள்
என்பதை உணர்ந்த நிலையில் ,அந்த தமிழ் பேசும் மக்களை பழிவாங்கும் அரசியல் வலையை விரிந்துள்ளது .
அதற்குள் சிக்கி தவிக்கும் அப்பாவி தமிழர்களை காப்பாற்ற யார் வருவார் என தமிழர் சமூகம் கண்ணீருடன் தவிக்கிறது .
தமிழ் தேசியம் பேசும் தமிழ் அரசியல் கட்சிகள் ,அவர் தம் தனி நலனை முன் நிறுத்தி ,தமது குடும்ப உறவுகளுக்கு
சொத்து சேர்க்கும் சுய அரசியல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
வெள்ளாதல் பாதிக்க பட்ட தமிழர் பகுதி புறக்கணிக்க பட்டதில் இருந்து நாம் இந்த விடயங்களை மிக துல்லியமாக அவதானிக்க முடிகிறது
வஞ்சிக்க பட்ட தமிழர் இனம் என்று எழுந்து நிமிரும் ..?இனவாத சிங்களத்தை என்று வேரோடு பிரட்டும் ..?
- வன்னி மைந்தன்-
14 ஆயிரம் வீடுகள் கட்டும் மகிந்த
இலங்கையில் ஆளும் மகிந்த அரசாட்சியில் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 14 ஆயிரம் வீடுகள் கட்டும் படி மகிந்த
வேண்டுகோள் விடுத்துளளார் .
அமைச்சரவையில் வைக்க பட்ட தீர்மானத்திற்கு அமைய ஒரு வீடு சுமார் ஆறு லடசம் ரூபா செலவில் இந்த வீடுகள் கட்ட படுகின்றன
சுனாமி வீட்டுத்திட்டத்தில் மோசடி செய்த மகிந்தா இதுவரை அந்த பாத்திக்க பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டி தரவில்லை .
இவ்வாறான நிலையில் மீளவும் வீட்டு திட்ட ,அபிவிருத்தியில் கையாடல் இடம்பெற கூடும் என்றே அடித்து கூற படுகிறது
வீட்டு திட்டங்களை என சர்வதேச நாடுகள் ஒதுக்கிய நிதியை மகிந்த ஆட்சியில் காணாமல் போனது ,
மீள சகோதரன் கோட்டா ஆட்சியில் இவையும் காணாமல் போகும் நிலை உருவாகும் என மக்கள் அச்சம் கொள்கின்றனர்
மக்களுக்கான வேலை திட்டம் ஒருவாரத்தில் ஆரம்பிக்க படும் – மகிந்தா முழக்கம்
மக்களுக்கான வேலை திட்டம் ஒருவாரத்தில் ஆரம்பிக்க படும் – மகிந்தா முழக்கம்
இலங்கையில் ஏழாவது எஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ஜனாதிபதியின் கொள்கை பிரகடத்தின் அறிவிப்பின் படி மக்களுக்கானா வேலைத்திட்டம் வரும் வாரத்தில் இருந்து ஆரம்பிக்க படும் என மகிந்தா முழங்கியுள்ளார்
74 வது பிறந்த நாளை கொண்டாடும் – தமிழின கொலையாளி மகிந்த
74 வாது பிறந்த நாளை கொண்டாடும் மகிந்த
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழ் இன கொலையாளியுமான மகிந்த ராஜபக்ச அதனது 74 வாது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் ,இவரது பிறந்த நாளில் சகோதரன் கோட்டபாய ஜனாதிபதியாக பிரமாணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது






