காப்பாற்றுவோம் மக்களை நாமல்
Posted in இலங்கை செய்திகள்

காப்பாற்றுவோம் மக்களை நாமல்

மக்களை காப்பாற்றுவோம் நாமல் கூவல்

காப்பாற்றுவோம் மக்களை நாமல் ,மட்டக்களப்பு மூத்தோர் பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாம் ராஜபக்ச மக்களை காப்பாற்றுவோம் என தெரிவித்துள்ளார் .

நாம் மக்களுக்காக வாழ்கின்றோம் அதலால் மக்களை நங்கள் காப்பாற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் .

இலங்கை திரு நாடு இன்று இவ்விதமான பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைய காரணமாக அமைந்தது மகிந்தக்குடும்பத்தின் கொள்ளை காரணம் என்பதை மறந்து தேர்தலில் தாங்கள் வென்றுவிடுவோம் என்கின்ற நினைப்பில் இவ்வாறு வீர பேச்சை ஐயாநாமல் ராஜபக்ஸா பேசியுள்ள்ளார் .

நேரடி விவாதத்தில் பங்கேற்க ரெடி நாமல்
Posted in இலங்கை செய்திகள்

நேரடி விவாதத்தில் பங்கேற்க ரெடி நாமல்

நேரடி விவாதத்தில் பங்கேற்க ரெடி நாமல்

நேரடி விவாதத்தில் பங்கேற்க ரெடி நாமல் ,மக்கள் முன்பாக தொலைக்காட்சி வாயிலாக நேரடியாக உரையாடலை மேற்கொள்வதற்கும் திறந்த வெளி விவாதத்துக்கு வருவதற்கு தாங்கள் தயார் என மஹிந்தாவின் மகன் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை என்று பாடும் மோசமான நிலையில் செல்வதற்கு காரணமாக இருந்தது ராஜபக்ச குடும்பம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

நாட்டை கொள்ளை அடித்து ஏப்பம் விட்டு மக்களை பட்டினி போட்டு மக்களை கொல்கின்ற அதே ராஜபக்ச குடும்பம் மூலமும் அதே மக்களை ஆண்டு கொள்ளவும் துடிக்கிறது.

அவ்வாறான காலப்பகுதியிலேயே தற்பொழுது திறந்த வெளி விவாதத்துக்கு தான் வருவதற்கு தயாராக உள்ளதாக மஹிந்தாவின் மகனான நாமல் ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

ஊழல்களையும் கொள்கைகளையும் அடித்து ஊதி பெருத்து இருக்கும் இவர்கள் தாங்கள் நல்லவர்களாக இன்னும் நமது சமுதாயத்தில் காண்பிக்க முனைவதும் இதனூடாக காண்பிக்கப்படுகின்றன .

சம்பவங்கள் ஒவ்வொன்றையும் மறந்து விட்டு கடந்து செல்வதால் தான் மக்களுக்கு மறதி அதிகமாக இருப்பதால் தான்,

இவ்வாறான அரசியல்வாதிகள் எங்களது மண்ணில் நிலைத்து நிற்க காரணமாக உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மஹிந்த மற்றும் நாமல் அனுராதபுரத்தில்
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்த மற்றும் நாமல் அனுராதபுரத்தில்

மஹிந்த மற்றும் நாமல் அனுராதபுரத்தில்

மஹிந்த மற்றும் நாமல் அனுராதபுரத்தில் ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று (16) அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியில் ஆசிர்வாதம் பெற்றனர்.

பின்னர், மகா சங்கரத்தினருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாமல் ராஜபக்ஷ ராஜினாமா
Posted in இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷ ராஜினாமா

நாமல் ராஜபக்ஷ ராஜினாமா

நாமல் ராஜபக்ஷ ராஜினாமா ,ஸ்ரீலங்கா பெருமனவின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ச சர்வதேச தொடர்புகள் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் கட்சிகளில் பல மாற்றங்களும் போட்டிகளும் இடம் பெற்று வருகின்றன.

அவ்வாறான மிக முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியில் இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என அறிவித்துள்ளது சரசரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் இடம் பெறுவதற்கு இன்னும் 50 நாட்கள் காணப்படுகின்ற இந்த வேளையில், இவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்திருக்கின்றார்.

சர்வதேச தொடர்புகள் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இவர் சர்வதேச ரீதியில் என்னதான் செய்தார் என்கின்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.

புலம்பெயர்ந்து வாழும் சர்வதேச மக்கள் மத்தியிலும் அதனுடைய மக்களுடைய என்ன கருத்துக்களும் இவர் சரியாக உள்வாங்கு இருந்தால் ,இன்று இவர்களது கட்சி உரிய முறையில் வழிநடத்தப்பட்டு தங்களது இலக்கு நோக்கி பயணத்திற்கு முடியும்.

தமிழர்களுக்கான உரிமை மறுக்கப்பட்டு அங்கு அடக்குமுறை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே மேற்படி விடயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேர்தலை எதிர் நோக்கியும் அதனை வென்றுவிட பல கட்சிகள் பல்வேறுப்பட்ட சூழ்ச்சிகளை செய்து வருகின்ற நிலையிலும் அதில் ஒரு சூழ்ச்சியின் தன்மையாகவே நாமல் ராஜபக்சவின் பதவி விலகல் காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

நாமல் இப்படி சொல்கிறார்
Posted in இலங்கை செய்திகள்

நாமல் இப்படி சொல்கிறார்

நாமல் இப்படி சொல்கிறார்

நாமல் இப்படி சொல்கிறார் ,தேர்தலை ஒத்திவைப்பது நமது நோக்கமழையின இலங்கையின் மகிந்த ராஜபக்சவின் புதல்வன் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையில் இடம் பெற உள்ள தேர்தலை ஒத்திவைப்பது நமது நோக்கம் அல்ல எனவும் அதன் ஒத்திவைக்கின்ற காரணத்தினால் நாம் தோற்றுவிடுவோம் என பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

இது தவறான ஒரு பரப்புரை எனவும் அது வதந்தி என அவர் தெரிவித்தார்.

காலி முகத்திடல் போராட்டம் காரணமாக ராஜபக்ச குடும்பம் மக்களினால் விரட்டி அடிக்கப்பட்ட நிலையில் எதிர்கொள்ளும் இந்த தேர்தலில் அவர்கள் பலமான பாதிப்பையும் சந்திப்பார்கள் என மக்கள் கருதுகின்றனர்,

அவ்வாறான நிலையில் மக்கள் முன்னால் சென்றால் மக்கள் அவர்களை துரத்தி தாக்குவார்கள் என்கின்ற நிலையிலும் அதுவே தமக்கு பெறும் இடர்களையும் இன்னல்களையும் தெரிவிக்கும் என்கிற காரணத்தினால்,

இந்த தேர்தலை எப்படியாவது ஒத்திவைக்கும் நடவடிக்கையில் மொட்டு கட்சி பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலுக்கு தம்மை தயார் படுத்தி களமிறங்கி இருக்கும் காட்சிகளின் இந்த நடவடிக்கையும் இவர்கள் இவ்வாறு செய்யக்கூடும் என்ற அச்சமும் அந்த கட்சிகளை தூக்கி பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகாலம் அரியணையில் அசைக்க முடியாத கட்சியாக அவர் வருக என கற்பனை செய்த உலக நாடுகளும் இதே சிங்கள பௌத்த தேசமும் இந்து ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சியை ,

13 ஆண்டுகளுக்கு உள்ளாகவே விரட்டியடித்து இலங்கையின் புதிய வரலாற்றை எழுதி சாகசம் படைத்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

தேர்தல் தொடர்பில் மனம் திறந்த நாமல்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல்

தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல்

தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளரை முன்னிலைப்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தல் வந்தாலும் அதற்கு தயாராக இருக்கிறோம்.

இலங்கையில் எங்கு சென்று எமது முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் அழைக்கப்பட்டாலும் அனைத்து வேட்பாளர்களும் எமது கூட்டங்களில் இணைவதை நீங்கள் பார்க்கலாம்.

இதன் ஊடாக எமது கட்சி கிராமங்களிலும் தொடர்ந்து செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. ஜனாதிபதி, தேர்தலை வைப்பாரா? இல்லையா? என்பது எங்களுக்குத் தெரியாது.

வாக்குச் சீட்டில் மொட்டு சின்னம்

தேர்தல் ​வைத்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடும்.

அப்போது வாக்குச் சீட்டில் மொட்டு சின்னம் இருக்கும். வேட்பாளரை பற்றி உரிய நேரத்தில் வௌிப்படுத்துவோம். அதனை முன்கூட்டியே கூற வேண்டிய அவசியம் இல்லை.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு ஏனும் விண்ணப்பிக்க வேட்பாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்று நீங்கள் முன்பு என்னிடம் கேட்டீர்கள்.

தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுஜன பெரமுனவிடமிருந்து பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் மூலம், காலத்திற்கு ஏற்ற, சவால்களை சமாளிக்கக்கூடிய நபரை முன்வைப்போம்” என்றார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுப்பதற்கு அரசாங்கம்

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுப்பதற்கு அரசாங்கம் எத்தகைய தந்திரங்களை கையாண்டாலும் அவை வெற்றியடையாது என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் அபிவிருத்திக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் முறையான வேலைத்திட்டம் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் கட்சிகளுக்கு இடையில் பெரும் போட்டி நிலவுகிறது .

இவ்வாறான கால பகுதியில் மகிந்த ராஜபக்ச மகன் நாமல் ராஜபக்ச இவ்வாறு தனது கருத்தை பதிவு செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார் .

நாமல் ஜனாதிபதியாக இன்னும் காலவகாசம் தேவை
Posted in இலங்கை செய்திகள்

நாமல் ஜனாதிபதியாக இன்னும் காலவகாசம் தேவை

நாமல் ஜனாதிபதியாக இன்னும் காலவகாசம் தேவை

தனது மகன் நாமல் ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ராஜபக்ச, தனது மகன் இன்னும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இல்லை என்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட தனது மகனுக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக தான் கருதுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஒரு வேட்பாளரை முன்னிறுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானிக்கவில்லை என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, இது தொடர்பில் கட்சி சரியான நேரத்தில் கலந்துரையாடும் எனவும் தெரிவித்தார்.

அயோத்தி ராமர் கோவிலில் மகிந்த மகன் நாமல் கும்பிடு
Posted in இலங்கை செய்திகள்

அயோத்தி ராமர் கோவிலில் மகிந்த மகன் நாமல் கும்பிடு

அயோத்தி ராமர் கோவிலில் மகிந்த மகன் நாமல் கும்பிடு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்வதற்காக இரண்டு நாட்கள் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு உத்தரப்பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் தங்கியிருந்த அவர், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் பிரிகேஷ் பதேக் ஆகியோரை சந்தித்தார்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உத்தரபிரதேசத்தில் தாம் வழங்கிய அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்தார்

Posted in இலங்கை செய்திகள்

நீதிமன்றில் மகிந்த மகன் நாமல்-70 மில்லியன் ரூபாய் முறைகேடு-

நீதிமன்றில் மகிந்த மகன் நாமல்-70 மில்லியன் ரூபாய் முறைகேடு-

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட

முறைப்பாட்டினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேக நபரான நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது, இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி முறைப்பாட்டினை அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரக்பி விளையாட்டின் ஊக்குவிப்புக்காக என குறிப்பிட்டு ´கிரிஷ்´ என்ற நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக குறிப்பிட்டு

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது

    Posted in இலங்கை செய்திகள்

    நாங்கள் நாட்டை விட்டு ஓடமாட்டோம் நாமல் இறுமாப்பு

    நாங்கள் நாட்டை விட்டு ஓடமாட்டோம் நாமல் இறுமாப்பு

    இலங்கையில் ராஜபக்ஸ்சா குடும்பம் நாட்டை விட்டு ஓடவேண்டும் என கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

    இவ்வாறான சந்தர்ப்பத்தில் தம நாட்டை விட்டு ஒருபோதும் ஓடமாட்டடோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்

      Posted in இலங்கை செய்திகள்

      மகிந்த மகன் நாமலுக்கு எதிராக வழக்கு

      முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம்

      14 ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

      இந்த வழக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

      இதன்போது நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

      வழக்கின் மேலதிக சாட்சியங்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளார்.

      கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாடாளுமன்ற
      உறுப்பினராக இருந்த போது நாமல் ராஜபக்ஷ


      உட்பட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக 30 மில்லியன் ரூபாவை
      கவர்ஸ் கூட்டுத்தாபனத்தில் முதலீடு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

        Posted in Uncategorized

        மகிந்தா கொள்ளையர்கள் ஒன்றா கூடி இரகசிய பேச்சு

        மகிந்தா கொள்ளையர்கள் ஒன்றா கூடி இரகசிய பேச்சு

        இலங்கையில் ஆளும் மகிந்த குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாகா கூடி முக்கிய

        பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்

        அலரி மாளிகையில் இந்த பேச்சு இடம்பெற்றுள்ளது

        இதன் பொழுது பிரதமர் மகிந்தா,பசில்,நாமல் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்

        Posted in இலங்கை செய்திகள்

        பசில் ,நாமல், உள்பட 26 அமைச்சர்கள் பதவி விலகல்

        பசில் ,நாமல், உள்பட 26 அமைச்சர்கள் பதவி விலகல்

        இலங்கையில் ஆளும் கோட்டா அரசுக்குக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராடி வரும் நிலையில்


        மகிந்த மகன் நாமல் ,மற்றும் நிதியமைச்சர் பசில் ,சாமல் உள்ளிட்ட இருபத்தி ஆறு அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர்

        இதன் பின்னர் புதியவர்களாக நியமிக்க முடிவு செய்ய பட்டுள்ளதாம்

        அவ்விதம் தெரிவு செய்ய பட்டு நாட்டை சிறந்த முறையில் கொண்டு நடத்த உள்ளதான

        கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்ற கோட்டா மகிந்த முயன்று வருகின்றனர்


        ஆனால் அது மகிந்த கோபத்தின் முன் நிலை பெறுமா என்பதே கேள்வியாக உள்ளது

        Posted in Uncategorized இலங்கை செய்திகள்

        வடக்கு கிழக்கிற்கு விசேட கொவிட் தடுப்பூசி திட்டம்: அமைச்சர் நாமல்

        வடக்கு கிழக்கிற்கு விசேட கொவிட் தடுப்பூசி திட்டம்: அமைச்சர் நாமல்

        வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட

        நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கௌரவ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

        வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை விரைவுபடுத்துவது தொடர்பில் கௌரவ

        அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி இவ்விசேட திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

        அதற்கமைய வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்

        எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

          Posted in இலங்கை செய்திகள்

          சர்வதேச தொழிற்சந்தையை இலக்காகக் கொண்டு புதிய வேலைத்திட்டங்கள்- நாமல் அறிவிப்பு

          சர்வதேச தொழிற்சந்தையை இலக்காகக் கொண்டு புதிய வேலைத்திட்டங்கள்- நாமல் அறிவிப்பு

          சர்வதேச தொழிற்சந்தையை இலக்காகக் கொண்டு புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

          எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவது இலக்காகும்.

          நாட்டில் தெரிவு செய்யப்பட்ட 59 விளையாட்டு வீரர்கள் தொழில் ரீதியில் ஒப்பந்தங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

          பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

          மஹேல ஜெயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டு பேரவையின் மூலம் தேசிய விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான திட்டம் சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

          முதல் முறையாக தொழில் ரீதியில் விளையாட்டு வீரர்களுக்கான உடன்படிக்கையை மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

            Posted in இலங்கை செய்திகள்

            வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வருவதில் முறைக்கேடுகள் நடந்தால் அதற்கெதிராக நடவடிக்கை

            வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வருவதில் முறைக்கேடுகள் நடந்தால் அதற்கெதிராக நடவடிக்கை

            வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் விமான சேவைகளின் எண்ணிக்கையை அடுத்த வாரத்தில் இருந்து

            அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

            வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வருவதில் எந்தவகையான முறைக்கேடுகள் நடைப்பெற்றாலும்

            அதற்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

            கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை

            ஒத்திவைப்பு வேளையில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.

            ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தை நடத்தி அடுத்த வாரம் முதல் இவர்களை அழைத்து வருவதற்கான விமான சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளது.

            Pay தனிமைப்படுத்தல் அதாவது பணம் செலுத்தி தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்படவில்லை. 45,000 க்கும்

            மேற்பட்டோர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு இலவசமாக தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டது.

            வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு வரவழைத்து இலவசமாக தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்படும்.

            இந்த நடவடிக்கைகள் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக முன்னெடுக்கப்படுகின்றன.

            கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் பொது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக

            பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டியபோதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.